Jump to content

படித்ததும் பகிர்ந்ததும் - வீணா


Recommended Posts

இந்த பகுதியில் நான் படிச்ச எனக்கு மிகவும் பிடிச்ச தத்துவம்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நான் இங்கு பகிர்ந்து கொள்ளபவை நான் புத்தகம்களில் படித்தவையும் நண்பர்கள் மற்றும் நான் TWEETER FACEBOOK , GOOGLE + போன்றவற்றில் பகிர்ந்து கொண்டவையும் சிலதுகள் நான் எனது DIARY யில் எழுதியவையும் ஆகும் இதில் காதல் சோகம் தத்துவம் எல்லாமே கலந்து இருக்கும். சில நல்ல BLOGS இல் நான் படித்த எனக்கு பிடித்த சில கட்டுரைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் YARL நிர்வாகம் அனுமதி அளிக்குமா எண்டு தெரியல?

இது பொருத்தமான பகுதி இல்லை

எனில் பொருத்தமான பகுதிக்கு நகர்த்தி விடுங்கள்

* " நீ செய்வது சரியென்றால்,கோபப்பட அவசியமில்லை; தவறென்றால் உனக்குக் கோபப்பட உரிமையில்லை"

* எதிரியே இல்லாமல் இறப்பவனும், நண்பனே இல்லாமல் வாழ்பவனும், பரிதாபத்திற்குரியவர்கள்!

* ஒரு புரட்சிக்காரனின் தேவைகள் என்ன?எளிய சுமை.வலிய கால்கள் பிச்சைக்காரனின் வயிறு- சேகுவேரா

* நீ செய்யும் ஒவ்வொரு சிறு தவறும் உன் எதிரியை புனிதனாக்கும்

* எதிரியைவிட நாக்கையே அதிகம் அடக்கவேண்டும்

* சந்தர்ப்பங்களை பயன்படுத்துபவனை...விட,சந்தர்ப்பங்களை உண்டாக்குபவனே அறிவாளி!

* "You are not responsible for what people think about you. But you are responsible for what you give them to think about you"

* never force yourself to have a space in any one's life because if they really know your worth ,they'll surely create one for you

எனது முக புத்தகத்திலுள்ள கள உறவுகள் என்னை திட்ட வேண்டாம் முகபுதகத்தில் தத்துவம் சொல்லி முடிஞ்சு இங்க

அலுப்படிக்க வந்தாச்சுதோ எண்டு :D

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

நேற்று இதை கவிதை தனது முகபுத்தகத்தில் பகிர்ந்து இருந்தார் படிச்சவுடன் ரொம்ப சோகமாக போய்டுச்சு

ஒரு தேவதை மீளாத் துயில் கொள்கிறாள்

எனக்கு மிகவும் பிடித்த பண்டிகைகளில் ஒன்று பொங்கல்,பொங்கல் நாளை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாமல் மனது கிடந்தது தவிக்கிறது,பச்சுலர் லைபில் என்ன இழவுப் பொங்கல் என நீங்கள் கேட்டாலும் நான் பொங்கலை ஏதாவது வகையில் கொண்டாடி விடுவேன்,பொங்கல் என்று சொல்லப் படும் பண்டிகையை தெலுங்கர்கள் சங்கராந்தி என வேறு விதமாக வேறு கொள்கையில் கொண்டாடுவார்கள்,எனக்கு பெங்களூரில் இருக்கும் நண்பர்களில் பெரும் பாலானவர்கள் தெலுங்கர்கள்,தெலுங்கு நண்பர்களுடன் ஒன்றாக ரூமில் சிறிது காலம் தங்கிய அனுபவமும் உண்டு,பொங்கலில் கலந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு தமிழ் நண்பர்கள் பெங்களூரில் குறைவு,ஆனால் சங்கராந்தியில் கலந்து கொள்ளும் அளவுக்கு போதும் போதும் என்கிற அளவிற்கு எனக்கு தெலுங்கு நண்பர்கள் பெங்களூரில் உண்டு,இன்று அவர்கள் வீட்டுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில் தான் எதேட்சையாக நண்பர் ஒருவர் முகப் புத்தகத்தில் ஷேயார் பண்ணி இருந்த செய்தி ஒன்றைப் படித்த போது எனக்கு விசராக்கி விட்டது,ஆம் அது ஒரு இழவுச் செய்தி,பொங்கல் அதுவுமாய் இழவு செய்தி சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை ஆனால் கண்டிப்பாக சொல்லித்தான் ஆகணும்,ஏன் என்றால் நாம்,மனித குலம் இழந்தது ஒரு தேவதையை,ஒரு எதிர்கால நம்பிக்கையை,ஒரு எதிர்காலப் பெண்களின் பிரதிநிதித்துவத்தை.

ஆம் நண்பர்களே நாங்கள் அனைவரும் பொங்கல் ஆயத்தங்களில் மகிழ்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேற்று [ஜனவரி 14,2012],அர்பா கரீம் என்கிற சின்னம் சிறு ஏஞ்சல் இறந்து விட்டாள்...............

arfa+karim.jpg Arfa Karim

உங்களில் பெரும் பாலானவர்களுக்கு அர்பா கரீமைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை,ஆனால் எனக்கு அர்பா கரீமை சுமார் இரண்டு வருடங்களாக தெரியும்,பெண்கள் கல்வியால்,பொருளாதாரத்தால் அடையும் முன்னேற்றமும் தன்னிறைவும் தான் இந்த உலகத்தில் நிலையான மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடைய காஷ்மீரி முஸ்லிம் நண்பன் ஒருவனுடன் உரையாடிய போது அவன் எனக்கு அறிமுகப் படுத்திய பெயர் தான் அர்பா கரீம்,காஷ்மீரி களுக்கு பொதுவாக பாகிஸ்தான் மீதும் அதன் எதிர் காலம் மீதும் அக்கறை உண்டு,அந்தக் காஷ்மீரி நண்பன் பாகிஸ்தான் பெண்களின் எதிர்கால அம்பாசிடர் என எனக்கு அறிமுகப் படுத்திய பெயர் தான் அர்பா கரீம்.

arfa+karim5.jpg

யாரிந்த அர்பா கரீம்?,அதற்கு முதல்...................

amma+3.jpg

எனக்கு மனதுக்கு பிடித்த பெண்கள் என்பது மிகவும் குறைவு,எனக்கு பெண் சகோதரங்கள் என்று யாருமே இல்லை,லக்கியோ அன் லக்கியோ எனக்கு உறவினர்களில் கூட பெண்கள் என்று யாரும் இல்லை.தனியே ஆண்கள் நிறைந்த சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு பெண்கள் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது ,எனது வாழ்வில் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்திய பெண்கள் என்று என்னால் இரண்டு பேர்களைத்தான் என்னால் சொல்ல முடியும் ஒன்று எனது அம்மா,இரண்டாவது சிறு வயதில் இருந்து இன்று வரை என்னுடன் இருக்கும் எனது தோழி,இருவர் மீதும் நான் மிகப் பெரிய மரியாதையும் பக்தியும் காதலும் வைத்துள்ளேன்,இவர்களை விட எனது வாழ்வில் சம்பந்தப் படாத ஆனால் எனக்கு மனதுக்கு பிடித்த,என்னால் எனது இன்ஸ் பிரேசன் என்று தயங்காமல் சொல்லக் கூடிய பெண்கள் சிலர் உள்ளனர்,

அன்பின் வீரியத்தை உலகுக்கு அறிமுகப் படுத்திய மதர் தெரேசா,

teresa2.jpg Mother Teresa

உண்ணா விரதத்தை ஆயுதமாக எடுத்து மிகப் பெரிய இந்திய அரசாங்த்துக்கே சவாலாக உள்ள இரோம் ஷர்மிலா

irom+sharmila.jpg Irom Sharmila

காடழிப்பை தடுப்பதற்காக தனது வாழ்வையே அர்பணித்த வங்கரி மாதாய்

vankari+mathai.jpg Vangari Mathai

என எனது இன்ஸ்பிரேசன் லிஸ்டில் உள்ள ஒரு சின்னம் சிறு தேவதை தான் அர்பா கரீம்.1988 கடைசியில் பிறந்த எனக்கு 1995 ஜனவரியில் பிறந்த அர்பா கரீம் இன்ஸ்பிரேசன் ஆக இருந்து இருக்கிறாள்,அதாவது என்னை விட ஏறத்தாள ஏழு வயது குறைந்த பெண் எனக்கு இன்ஸ்பிரேசன் ஆக இருந்து இருக்கிறாள் என்றால் அவள் சாதித்தது அதிகம்.அவள் என்னால் மாத்திரம் மதிக்கப்படவில்லை ஒட்டு மொத்த பாகிஸ்தான் தேசத்தாலும் மாற்றத்தை விரும்பிய உலக மக்களாலும் தமது ஓன் சைல்ட் என மதிக்கப் பட்டாள்,

arfa+karim+3.jpg

யாரிந்தக் அர்பா................?

அவள் அப்படி சாதித்தது என்ன................................?

அதற்கு முன்

arfa+karim6.jpg

அர்பாவின் உடல் நிலை சம்பந்தமான தகவல்களை வைத்திய சாலை நிர்வாகம் தர மறுக்கிறது,அர்பாவிற்கு என்ன நடந்தது பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு அர்பாவின் உடல் நிலையைக் கவனிப்பதை விட வேறு என்ன புடுங்கல் வேலை இருக்கிறது என பாகிஸ்தான் மக்கள் தெருவுக்கு வந்து போராட பயந்து போன பிரதமர் தனது சிறிய மகள் பிசாவுடன் லாகூர் வைத்திய சாலைக்கு சென்று அர்பாவைப் பார்த்து விட்டு ,அர்பாவின் உயிரைக் காக்க பாகிஸ்தான் அரசாங்கம் தன்னால் ஆன அனைத்தையும் செய்யும் சற்றுப் பொறுங்கள் மக்களே என மக்களை சமாதானப் படுத்திய பின்புதான் சிறிது அடங்கி போனார்கள் பாகிஸ்தான் மக்கள்.ராணுவ ஆட்சி ஏற்பட்டு விடுமோ என பயந்தோ என்னவோ இதயம் கோளாறாக்கி துபாயிற்கு சிகிச்சைக்கு சென்றிருந்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி துபாயில் இருந்து கொண்டு பாகிஸ்தான் மக்களுக்கு விடுத்த செய்தியில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஏற்படாது என்பதுடன் மறக்காமல் அர்பாவின் உடல் நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் மிகுந்த கவனம் எடுக்கிறது என்பதையும் குறிப்பிடிருந்தார்,மைக்ரோ சொப்டின் நிர்வாகி பில் கேட்ஸ் அர்பாவின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு தனது பிரத்தியேக மருத்துவர்களை அர்பாவின் மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ளச் செய்து அர்பாவின் உடல் நிலை சம்பந்தமான தகவல்களை உடனுக்குடன் தனக்கு அனுப்ப சொன்னதுடன்,அர்பாவின் சிகிச்சைக்காகும் முழுப் பணத்தையும் தான் வழங்குவதாகவும் உறுதி அளித்தார் .இப்படியாக பாகிஸ்தான் மக்களின் மனதை மாத்திரம் அன்றி உலக மக்களின் மனதையும் குத்தகைக்கு எடுத்திருந்த அர்பா அப்படி சாதித்தது என்ன....?

கம்ப்யூட்டர் புலிகள் என்று சொல்லக் கூடியவர்கள் எல்லாம் தலையால் தண்ணி குடிக்கும் Microsoft Certified Professionals (MCPs) ஆக அர்பா வரும் போது அவளுக்கு வெறும் ஒன்பது வயது,அவளை உலகமே ஒரு முறை ஷாக் ஆகி திரும்பிப் பார்த்தது,மைக்ரோ சொப்டின் உயர் அதிகாரிகளில் ஒருவரான பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழர் சோமசேகர் [the Senior Vice President of the Developer Division at Microsoft Corporation] அர்பாவைப் பற்றி புகழ்ந்து தனது ப்ளோகில் பின்வருமாறு எழுதுகிறார்.

"I got a chance to meet with this wonder kid – Arfa Karim Randhawa earlier this week. She is a 5th grader who visited us at Microsoft for a few days along with her father. I had a lot of fun in meeting Arfa and getting a chance to understand what motivated her to strive for such an accomplishment at such a young age. She definitely has some clear ideas about the kinds of scenarios she envisions technology can enable in the future.

My hats off to Arfa’s parents for nurturing her passion and talent and providing her with opportunities to learn and excel. I wish Arfa all the very best in her life and hope that her passion for learning and more importantly “dreaming big” enables her to do great things in her life."

தனது வாழ்க்கை காலத்தில் பெரிய விடயங்களை சாதிக்கக் கூடியவள் என சோமசேகரால் பாராட்டப்பட்ட அர்பா இறக்கும் போது அவளுக்கு வெறும் பதின் ஆறு வயது,[ (1995 – January 14, 2012)] ,Cardiac arrest ஆகி ஏறத்தாள இருபத்தி நன்கு நாட்கள் மரணப் படுக்கையில் இருந்து வெறும் பதின் ஆறு வயதில் இறந்தாலும் அவள் சாதித்தது மிக மிக அதிகம்,சாதாரண மனிதர்கள் தமது முழு வாழ்க்கைக் காலத்தில் சாதிக்க முடியாததை அவள் வெறும் பதினாறு வயதுக்குள் சாதித்து விட்டாள்.

பாகிஸ்தானின் அதி உயர் சிவில் விருதைப் பெற்றுக்கொண்ட போது அவளுக்கு வயது வெறும் ஒன்பது இன்று வரை அந்த விருதைப் பெற்றுக் கொண்ட மிக இளம் வயது நபர் அர்பாதான்.பாகிஸ்தானின் தந்தை என அழைக்கப் படும் Muhammad Ali Jinnahவின் சகோதரி பாத்திமா ஜின்னாவின் பெயரால் வழங்கப் படும் தொழில் நுட்பத்துக்கான பாகிஸ்தானின் அதி உயர் விருதை பெற்ற போதும் அவளுக்கு வயது வெறும் ஒன்பது.பாகிஸ்தானின் சலாம் யூத் விருதை அவள் அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி முஸாரப் கைகளால் பெற்ற போது அவளுக்கு பத்து வயது கூட முழுமையாக நிரம்பவில்லை,மைக்ரோ சொப்டின் உலகளாவிய மாநாடுக்கு சிறப்பு அழைப்பாளராக அவள் அழைக்கப் பட்ட போது அவளுக்கு வெறும் ஒன்பது வயது,அந்த மகாநாட்டில் ஒன்பது வயது தொழில் நுட்பப் புலியைப் பார்த்து காம்பியூட்டரில் பழமும் தின்று கொட்டையும் போட்டவர்கள் எல்லாம் திகில் ஆகி விட்டனர்.

துபாயில் நடை பெற்ற தகவல் தொழில் நுட்ப நிபுணர்களுக்கான மகா நாட்டுக்கு அவள் அழைக்கப் பட்ட போது அவளுக்கு வயது வெறும் ஒன்பது,மாற்றத்தை விரும்பிய உலகம் மேற்படி விருதுகளை எல்லாம் தனியே வெறும் விருதுகள் எனப் பார்க்கவில்லைஅர்பாவை உலகம் வெறும் சுட்டிப் பெண் ஆக மூளை சாலியாக மாத்திரம் பார்க்கவில்லை மாறாக பாகிஸ்தான் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகப் பார்த்தன,பாகிஸ்தான் பெண்களுக்கு சம உரிமை கிடைக்க அர்பாவை தமக்கு கிடைத்த ஒரு துருப்பு சீட்டாகப் பார்த்தன.

ஆம் பாகிஸ்தானில் பெண்களின் நிலை வார்த்தைகளால் நான் விளங்கப் படுத்த முடியாத அளவுக்கு கேவலம்.பாகிஸ்தானில் எங்கும் அடிப்படைவாதம் தலை தூக்கி ஆடுகிறது.பாகிஸ்தான் பெண்களுக்கு கணவன் விரும்பும் போது கணவனுடன் உறவு கொள்ளல்,பிறக்கும் குழந்தைகளை பராமரித்தல் தவிர வேறு செயல்கள் பெரிதாக செய்யக் கூடாது,அதிலும் படிப்பு மசிர் மட்டை எனக் கதைக்கவே கூடாது,பெண் ஏன் படிக்கக் கூடாது..............?

ஒரு பெண் படித்தால் அவளுக்கு பகுத்தறிவு வரும் பகுத்தறிவு வந்தால் ஏன் நான் அடிமையாக இருக்கிறேன் என சந்தேகங்கள் வரும்,சமுதாயத்தைப் பார்த்து சம உரிமை என குழந்தைப் பிள்ளைத் தனமாக கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவாள்,ஏன் இந்த இழவு எல்லாம்?,பெண்களின் படிப்பை தடை செய்யுங்கள் இதுதான் பெரும் பாலான பாகிஸ்தான் ஆண்களின் மன ஓட்டம்,பெண்களும் வேறு வழி இல்லாமல் அதை மன விருப்புடன் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் பெண் அடிமைத்தனத்தில் ஊறிய பாகிஸ்தானில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரு சாதனைப் பெண் ஆகத்தான் அர்பாவை உலகம் பார்த்தது,அதற்கு வலு சேர்க்கும் முகமாக சி என் என் னுக்கு கொடுத்த பேட்டியில் அர்பா பின்வருமாறு சொன்னாள்

"பாகிஸ்தான் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தான் எனது முழுக் கனவாக இருக்கும்"

-சொல்லும் போது அவளுக்கு வயது வெறும் பத்து.

இப்போது அர்பா எங்களிடம் இல்லை,உலகம் மீண்டும் ஒரு நம்பிக்கையை பாகிஸ்தானில் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்

தனது அறிவால் மாத்திரம் அல்லாது தனது கவிதைத் திறனாலும் பாகிஸ்தான் மக்களின் நெஞ்சில் அர்பா நீங்கா இடம் பிடித்து விட்டாள்,அர்பாவின் சில கவிதைகளைப் படிக்க கீழ் உள்ள லிங்கை சொடுக்குங்கள்

http://www.pakblog.net/2011/12/list-of-poems-written-by-arfa-karim.ஹ்த்ம்ல்

அர்பாவின் மறைவை ஒட்டி பாகிஸ்தானின் ஜனாதிபதி,பிரதமர்,அமைச்சர்கள் செனட்டர்கள் எல்லாம் விடுத்த இரங்கல் செய்தியில் அரபாவின் மறைவை வெறும் பாகிஸ்தானுக்கு மாத்திரம் நேர்ந்த இழப்பாக குறிப்பிடாமல் உலகத்துக்கு நேர்ந்த இழப்பாகத்தான் குறிப்பிட்டிருந்தனர்

ஆம் நாம் ஒரு எதிர்கால நம்பிகையை இழந்து விட்டோம்

பாகிஸ்தானில் உள்ள கடுப்பினாலோ என்னவோ அர்பாவின் சாதனைகளை இந்திய ஊடகங்கள் இன்னும் சரியாக பதியவில்லை,அர்பா கரீம் பற்றி தமிழில் வெளிவந்த பதிவு பெரும் பாலும் இது ஆகத் தான் இருக்கும் என நம்புகிறேன்,அர்பாவின் ஜனாஸா நல் அடக்கத்தில் பங்கு பற்றிய அனைவரும் அர்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்தித்தனர்,அர்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்க எனக்கு மனம் இல்லை,எந்த இறைவனும் பதின் ஆறு வயது இளம் குருத்தின் உயிரை எடுக்க விரும்ப மாட்டார்,ஜேசு,அல்லா,புத்தா,சிவன் எல்லாருக்கும் இது பொருந்தும்,ஆகவே அவளுடைய ஆத்மா சாந்தியடைய நாம் எமக்குள் பிராத்திப்போம்.

http://aruliniyan.bl...og-post_15.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறமைசாலிகளை ஆண்டவன் நீண்ட காலத்திற்கு உயிரோடு விட்டு வைக்க மாட்டான்...அருமையான இணைப்பு...நன்றி வீணா

Link to comment
Share on other sites

நன்றி ரதி அக்கா உண்மைல நான் இதை எழுத தொடங்கினதுக்கு உங்களின் எனது கலண்டர் பொன்மொழிகள்

என்ற திரியே காரணம் நான் முகநூலிலும் twitter லும் பகிரும் போது எனது நண்பர்கள் வட்டத்துக்குள்ளேயே சென்று சேர்க்கிறது.yarl இல பகிரும் போது இன்னும் கொஞ்சம் அதிகமானோரிடம் சென்று சேரலாம்.

இதில எவ்வளவு பிரயோசனம் இருக்குதோ இல்லையோ எனக்கு தெரியா

நான் படிக்கிறதை இங்கும் பகிரவேண்டும் என்று ஆரம்பித்துள்ளேன்.. ஒவ்வொரு சனிகிழம...ை அல்லது

வெள்ளிகிழமைகளில் மட்டும் எழுதலாம் எண்டு முடிவெடுத்துள்ளேன்..

சில ஆக்கம்களை yarl இல இணைக்கும் போது எங்கே இணைப்பது எண்டே தெரியாமல் இருக்கும் இறுதியில் சமூக சாளரத்தில்

இணைத்து விடுவேன் இது பொதுவான பகுதி என்பதால் இங்கு அவற்றையும் பகிரலாம் என நினைக்கிறன் .

இந்த காணொளி அண்மையில் முகநூலில் அதிகமானோர் பகிர்ந்திருந்தார்கள் நடிகர் நாசர் தைபொங்கல் வாழ்த்து

தெரிவிக்க மறுத்த காணொளி பதிவு அவரின் குமுறல் உண்மையானது தான் எங்கள் நாட்டுக்கும் இனி வரும் காலம்களில்

பொருந்தும்..

.

எனக்கு மிகபிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாத்தா அவர் எழுதிய எல்லா புத்தகம்களுமாவது படிச்சு முடிக்கணும் என்று விருப்பம் பார்க்கலாம் எப்போது நிறைவேறுகிறது என்று இந்த மதம் சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் (முடிந்த?) புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையானது கடந்த வருடம்களை போலவே சுஜாதாவின்

புத்தகம்கள் தானாம்

அவரை பற்றிய சிறு குறிப்புகள் தெரியதவர்களுக்காக..(நன்றி விகடன் )

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...

* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

...

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

* சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

* உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடு முயற்சி செய்தவர்!

* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

**************************************************************************************************************

அப்பாவைப் பற்றி வயது ஏற ஏறப் பிள்ளைகளின் மதிப்பீடு:

4 வயதில் :என் அப்பாவால் எதையும் செய்ய முடியும்.

7 வயதில் ;என் அப்பாவுக்கு எல்லாம் தெரியும்.முழுக்கத்தெரியும்.

...

8 வயதில் :என்னப்பாவுக்கு எல்லாமே முழுமையாக தெரிந்திருக்காது.

12 வயதில் :எல்லாவற்றையும் என் அப்பா தெரிந்திருக்க

அவசியமில்லை.

14 வயதில் ;அப்பாவா!அவர் பத்தாம் பசலி.

21 வயதில் :அந்த ஆள் இந்தக் காலத்துக்கு ஏற்றவர்அல்ல.அவரிடமிருந்த

என்ன எதிர் பார்க்க முடியும்?

25 வயதில் ;அவருக்கு ஏதோகொஞ்சம் தெரியும்.அதிகமாக ஒன்றுமில்லை.

30 வயத்ல் :அப்பா இது பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்க்க வேண்டும்

35 வயதில் :அப்பாவின் கருத்தை அறிய கொஞ்சம் பொறுமை காட்ட

வேண்டும்.

50 வயதில் :அப்பா இது பற்றி என்ன எண்ணியிருப்பார்?

60 வயதில் :உண்மையிலே அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது.

65 வயதில் :அப்பா இப்போது இருந்தால் அவரிடம் இது பற்றி ஒரு யோசனை கேட்கலாம்.

*************************************************************************************

தொலைகாட்சி நிகழ்சிகளில் நான் விரும்பி பார்ப்பது vijai t .v யில் வரும் நீயா நானா கடந்த தைபொங்கல் அன்று இடம்பெற்ற நிகழ்சியினை பார்த்ததும் இப்பிடியும் எதிர் பார்ப்புகள் இருக்குமா ஆண்களுக்கு?

இப்பிடியானவர்களும்

இன்னும் இருக்கிறார்களே என்ற நினைவு தான் வந்தது தவிர்க்க முடியாமல் yarl களத்தில் கருத்து எழுதும் ஒரு சிலர் நினைவுக்கு வந்தார்கள்

அந்த நிகழ்ச்சியை இந்த லிங்க் (http://tamilbase.com...aana&Itemid=127) ல போய் பார்க்கலாம் பார்க்க விரும்புவர்கள்

*******************************************************************************

பொங்கல் அன்று சன் t .v இல் ரஜினியின் enthiran (robot ) திரையிடபட்டது இதற்க்கு sponcer மட்டுமே சுமார் 3 கோடிகள்

இதனுடன் சேர்த்து enthiranin வசூல் மொத்தமாக 365 ++ கோடிகளாம்

******************************

தத்துவம்

1 APPLE குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பது நமக்கு தெரிந்திருக்கலாம்.1 விதைக்குள் எத்தனை APPLE இருக்கின்றன என்பது இறைவனுக்கே வெளிச்சம்

நமக்கு வார மனைவி வெள்ளைய இருக்கனும்கிறது முக்கியமில்லை .அவ நமக்கு தொல்லையா இருக்காளா இல்லையான்கிறதுதான் முக்கியம்

Being Honest May Not Get You A Lot of Friends But It 'll Always Get You The Right Ones.

303029_245700872161423_100001645372917_721961_278202652_n.jpg

380085_241870485877795_100001645372917_710616_1935590806_n.jpg

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் எம் நெஞ்சில் உறங்கும் எம்.ஜி.ஆர்

M-G-Ramachandran.jpg

1987 ஆண்டு அது. அண்ணா தொழிலகம் என்ற உள்ளூர் உற்பத்தி நிறுவனத்தின் பற்பொடி தயாரிக்கும் களஞ்சியத்தின் தூசு பரவிய அறைக்குள் இருநூறு பேருக்கு மேல் அடைந்து கிடைக்கிறோம். அதுதான் எமக்கு அப்போது வாய்த்த தற்காலிக அகதி முகாம். பலர் கோயில்களுக்குச் சென்று அடைக்கலமாகி விட்டாலும், இந்த அண்ணா தொழிலகத்தின் நான்கு அடுக்கு மாடிக்கட்டடத்தின் கீழ் அறையில் ஒளிந்திருந்த எமக்கு இருந்த ஒரே அற்ப நம்பிக்கை தூரத்தில் இருந்து வரும் எம பாணம் எம்மைத் தாக்காது என்பது தான்.

தூரத்தில் இருந்து பாய்ந்து வரும் ஷெல் கணைகள் எங்கோ ஒரு மூலையில் குத்தி வெடிக்கும் ஓசை தொடந்து ஒலிக்கிறது. மாரிகாலம் தொடக்கி வைத்த பெருமழைச் சத்ததுக்கு மேலாக ஷெல் மழை ஓசை எல்லாப் பக்கமும் கேட்கிறது. அது வேறென்றுமில்லை காங்கேசன் துறை வீதிப்பக்கமாக நகர்ந்து வரும் இந்திய அமைதிப்படையினரின் முன்னெடுப்பின் கட்டியம் தான். அவர்கள் காங்கேசன் துறையில் இருந்து ஒரு அணியாகவும், பலாலிப்பக்கம் இருந்து இன்னொரு அணியாகவும் பிரிந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதல் தேவை முன்னே எதிர்ப்படும் எல்லாம் நாசமாகிப் போக வேண்டும். அதற்கு மேலால் தான் செயின் புளாக்குகள் எனப்படும் சுடுகலன்கள் பொருத்திய இராணுவ வண்டிகள் பாய்ந்து வரும். எல்லாப் பக்கமும் தன் கழுத்தைத் திருப்பி அந்த செயின் புளாக்குள் எறிகணைகளை ஏவிக் கொண்டே இன்னும் முன்னே முன்னே நகர்கின்றன.

அந்தப் படையணிக்கும் சரி, பாய்ந்து வரும் ஏவுகணைகளுக்கும் சரி கிளியர் ஆக வேண்டிய முன்னால் எதிர்ப்படும் கிராமங்கள் எல்லாமே புலிகள் தான். அதுக்கு ஆறு மாசக் குழந்தையும் சரி அறுபது வயது கிழவனும் சரி எல்லாம் ஒன்று தான்.

"என்ரை பிள்ளையார்க் கிழவா! என்னைக் காப்பாற்று", பக்கத்து வீட்டுக்கார அன்ரி பெரும் குரலெடுத்து அழுகிறா. எனக்கு இரண்டு வயசு மூத்த பாலகுமார் முன்னால் மாட்டியிருக்கும் அம்மனின் படத்தையும், சாயிபாபா படத்தையும் மாறி மாறி நடுங்கிக் கொண்டே தொட்டுத் தொட்டு "தாயே....தாயே" என்று புலம்புகிறான்.

எல்லாரையும் பார்க்கையில் எனக்கு பயம் இன்னும் இரண்டு மடங்கு, மூன்று மடங்காக எகிறுகிறது. அம்மாவின் நைலெக்ஸ் சீலையில் என்னுடைய கண்ணீர்த் துளிகள் தொப்பு தொப்பாக விழ அவரின் கையைப் பிடித்துக் கொள்கிறேன் பயத்தோடு. அம்மாவின் வாயில் எல்லாத் தேவாரங்களும் ஒழுங்கில்லாமல் அவசரகதியில் புலம்பலாக வருகின்றன.

ஒன்று இரண்டாக ஆரம்பித்த அழுகுரல்கள் இப்போது ஒட்டுமொத்தமாக அந்தப் பற்பொடி அறையையே ஆக்கிரமிக்கிறது. ஏனென்றால், கிட்ட கிட்ட ஏவுகணை ஒலி கேட்குதே.

தொப்புள் கொடி உறவாக, கண்ணுக்குத் தெரியாத உறவுப்பாலத்தைப் போட்டு வைத்து ஒரு தாய் மக்கள் போல் பழகி அது நாள் வரை இருந்த இந்திய -ஈழ உறவை சிங்கள அரசியல் சாணக்கியம் விழுங்கி ஏப்பம் விட்டதன் அறுவடையின் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தோம். ஒபரேஷன் பூமாலை மூலம் சாப்பாட்டுப் பொதி போட்டு சில மாதங்களில் வாய்க்கரிசியும் அவர்களாலேயே போடப்படுகிறது.

மெல்ல மெல்ல அந்த ஏவுகணை மழை ஓய ஆரம்பிக்க, இருட்டுக் கட்டுகிறது வானம். அந்த இடைவெளியில் நாங்கள் இருந்த அகதி முகாமின் முற்றத்துக்குப் போய் இரவுக்குத் தேவையான கஞ்சியைத் தயார்படுத்த ஒரு கூட்டம் தயாராகிறது. இன்னொரு கூட்டம் றேடியோவில் பற்றறி போட்டு "ஆகாசவாணி" கேட்கத் தயாராகிறது. வானொலியைச் சுற்றி நின்ற பெரியவர்கள் எல்லோரதும் அப்போதைய ஒரே நம்பிக்கை

"எம்.ஜி.ஆர் விடமாட்டார், ஏதாவது செய்வார்".

00000000000000000000000000000000000000000000000000000000

prab.JPG

ஈழ விடுதலைப் போராட்டத்தின் தார்ப்பரியத்தை உணர்ந்து அதற்கு ஆதரவளித்த நாள் முதல் தான் இறக்கும் வரை இதய சுத்தியோடு செயற்பட்ட ஒரே தமிழினத் தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்பதை 22 வருஷங்கள் கழித்தும் இன்றும் நிரூபிக்கக் கூடியதாக இருக்கிறது இன்றைய அரசியல் களமும், தமிழீனத் தலைவர்கள் சொல்லும் காலத்துக்குக் காலம் உதிக்கும் வேதாந்தங்களும்.

தமிழக டி.ஜி.பி ஆக இருந்த கே.மோகன்தாஸ் எழுதிய "எம்.ஜி.ஆர் நிஜமும் நிழலும்" நூலை வெகு காலம் முன்னர் படித்திருந்தேன். அதில் போலீஸ்துறையில் தான் பணியாற்றிய காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவாக்கியிருந்தார். குறிப்பாக எண்பதுகளில் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த போராளி இயக்கங்களின் நடவடிக்கைகளும், அதனை எம்.ஜி.ஆர் அரசு நோக்கிய விதத்தையும் பல பக்கங்களில் சொல்லிக் கொண்டே போகிறார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தேசியத்தலைவர் பிரபாகரன் மீது எம்.ஜி.ஆர் கொண்ட நம்பிக்கை என்பனவெல்லாம் குறித்த சம்பவங்களோடு விரிகின்றன.

அது ஆங்கிலத்திலும் MGR, the man and the myth ஆக வந்திருந்தது.

0000000000000000000000000000000000000000000000000000

ஈழத்தில் எழுச்சிப் பாடல்கள் என்ற வடிவம் முளை விடுவதற்கு முன்னும் சரி, பின்னும் சரி எம்.ஜி.ஆரின் "தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை" போன்ற தத்துவப்பாடல்கள் போருக்கு அழைக்கும் பரணிப் பாடல்களாக அமைந்திருக்கின்றன.

வடமாகாணத்தின் மினிபஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருந்த பொன்.மதிமுகராசா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கழகத்தை ஆரம்பித்து அந்தக் கழகத்தின் 1991 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நினைவு நாளினை எங்கள் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடத்திய அன்று தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தினை அழைத்துச் சிறப்புரை ஆற்றச் செய்திருந்தார். அப்போது கூட்டத்தோடு கூட்டமாக இருந்து நிகழ்வைப் பார்த்த எமக்கு, எம்.ஜி.ஆர் தலைவர் பிரபாகரனோடு நட்புப் பாராட்டிய காலங்கள், ஆரம்ப கால உதவிகளைச் சொல்லிக் கொண்டு போக அப்போது எமக்கெல்லாம் விழிகளை விரித்த வியப்பு வந்தது.

0000000000000000000000000000000000000000000000000

இந்திரா காந்தி இறந்த அந்த நாள் எங்களூரில் அப்பிக் கொண்ட சோகத்தைச் சிறுவனாகப் பார்த்த எனக்கு எம்ஜிஆரின் பிரிவைக் கேட்ட போது துடிதுடித்த எங்களவர் இன்னும் கண்ணுக்குள் நிக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் ஒபரேஷன் பவான் என்ற தொடர் அவலம் நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றி நிரந்தரமாகப் பிரிந்தது எமது இனத்துக்கு இன்னும் சாபக்கேடு ஓயவில்லை என்று சொல்லாமல் சொல்லியது. இன்றும் எம்ஜிஆரைப் பெரு மதிப்போடு நெஞ்சில் வைத்துப் போற்றக் காரணம், அவர் அரசியலைக் கடந்து இதயசுத்தியோடு எமது போராட்டத்தைப் பார்த்தது மட்டும் தான். அதை இன்றைய அரசியல் விபச்சாரிகளிடம்/சந்தர்ப்பவாதிகளிடம் எதிர்பார்ப்பவன் முட்டாள் என்று சொல்லித் தெரிவதில்லை.

எம்ஜிஆர் என்ற தமிழகத் தலைவனோடு ஈழத்தமிழினத்துக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் தொலைந்து போனாலும் உங்களை மறவோம்.

http://kanapraba.blogspot.com/2009/12/blog-post_24.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுகளைத் தொடருங்கள், வீணா!

நன்றாக இருக்கின்றது!

உங்கள் நூறாவது பச்சை, என்னது! :D

Link to comment
Share on other sites

இருக்கிறது இருபது விஷயம்

{விகடனில் வெளியான சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் (january 27,2002)}

பீகாரின் ஒரு சிறிய நகரத்தில் வசித்தபடி விகடன் இதழை சந்தாவில் வரவழைத்துப் படிக்கும் கனரா வங்கி அதிகாரி எனக்கு எழுதிய கடிதத்தில் ‘‘ ‘பிரிவோம் சந்திப்போம்’ போல ஒரு அருமையான தொடர் எழுதுங்களேன்’’ என்று கேட்டுவிட்டு ‘‘நீங்கள் எழுதும் அதே விகடனில் பாருங்கள்... சுவாமி மித்ரானந்தா எவ்வளவு சுவாரஸ்யமாக எழுதுகிறார்!’’ என்று சொல்லியிருக்கிறார்.

அதைப் போல் எழுதுங்கள் என்று யோசனை சொல்கிறாரா, அல்லது மற்றொரு ‘பிரிவோம் சந்திப்போம்’ கேட்கிறாரா தெரியவில்லை. குறிப்பிட்ட மித்ரானந்தா போல என்னால் நிச்சயமாக எழுத முடியாது. மற்றொரு ‘பிரிவோம் சந்திப்போம்’ எழுதினால் எப்போதும் பழசுடன் ஒப்பிட்டு அதைப் போல இல்லை என்பார்கள்.

பல வருஷங்களாக எழுதும் எழுத்தாளர்களிடம் இவ்வாறு முரண்பட்ட கோரிக்கைகள் வருவதன் காரணம் வாசகர்களுக்கும் வயசாகிவிடுவதே!

பீகார் அன்பர் ‘பிரிவோம் சந்திப்போம்’ படித்த காலத்துக்கு ஏங்குகிறார். ஆனால், நடு வயது வந்து மித்ரானந்தா போன்ற விஷயங்கள் அவரை வசீகரிக்கத் துவங்கிவிட்டன. ‘நான் மாறிவிட்டேன்.. ஏன் சுஜாதாவும் என்னைப் போல் மாறவில்லை’ என்பதே இவர் விருப்பத்தின் அடிப்படை. பி.ஜி. உட்ஹவுஸ் தொண்ணூறு வயதிலும் பெர்ட்டி வூஸ்டர், ஜீவ்ஸ் கதைகள்தான் எழுதினார். வாசகனின் மாற்றமும் எழுத்தாளனின் மாற்றமும் ஒத்துப்போவது கொஞ்சம் கஷ்டம். என் படிப்பு, என் புத்தகங்கள் எல்லாமே வேறு. என் எழுத்தை விரும்பிப் படிக்க ஒவ்வொரு தலைமுறையிலும் புது வாசகர்கள் இருக்கும்வரை என்னால் தொடர்ந்து எழுத முடிகிறது. அப்படி இல்லையெனில் நா&ன நிறுத்திக்கொள்வேன்.

‘‘நீங்க ஏன் சார் முன்னைப் போல எழுதறதில்லை?’’ என்று புகார் செய்யும் ஒரு சிறுபான்மையினர் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களிடம் ‘நான் அப்படியேதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள்தான் மாறிவிட்டீர்கள்’ என்று சொன்னால் கோபம் வருகிறது. அதனால் சிரித்து மழுப்பி விடுகிறேன்.

விகடன் 13.1.02 இதழில் நான் கொடுத்திருந்த ‘சிறந்த’ பட்டியல் பல பேரால் பாராட்டப்பட்டது. பலர் தொலைபேசி நன்றி தெரிவித்தார்கள். மலர்க் கொத்தும் இனிப்புகளும் கடிதங்களும் அனுப்பினார்கள். ‘எப்படி உங்களுக்கு இத்தனை விஷயங்களில் ஞானம் இருக்கிறது?’ என்று வியந்தார்கள். இது ஞானம் இல்லை.. ஞாபகம்.

நாம் எல்லோரும் விதிவிலக்கில்லாமல் அந்தப் பட்டியலில் கொடுத்த அத்தனை விஷயங்களையும் கவனிக்கிறோம். அதைத் தக்க சமயத்தில் நினைவிலிருந்து கொண்டு வருவதில்லை. எழுதும்போது எனக்கு சட்டென்று ஞாபகம் வந்துவிடுகிறது. அவ்வளவுதான். குறிப்பெடுத்துக்கொள்வதெல்லாம் மனசில்தான். உதாரணமாக, அண்மையில் ‘அரிகிரி அசெம்பிளி’யில் குரு வி.கிருஷ்ண மூர்த்தியின் பேட்டி மிகுந்த கலகலப்பும் நகைச்சுவையும் கொண்டிருந்தது. அது எனக்கு மறக்காது. அதுபோல் கேரளா சென்றிருந்தபோது ஒரு மாறுதலுக்காக ஏசியாநெட் குளோபல் மலையாளத் தொலைக்காட்சி சேனலைப் பார்த்தேன். அந்த டாகுமெண்டரி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்துடன் விளையாடும் இரண்டு பிரிவினரையும் விரிவாகப் பேட்டி கண்டுவிட்டு இறுதியில் கல்லூரியிலிருந்து வெளியே நடந்து வரும் இளம் மாணவமாணவிகளின் விஷ§வலின் மேல் ‘யார் பக்கம் நியாயமிருந்தாலும் உண்மையில் கஷ்டப்படப் போவது இவர்கள்தான்’ என்று முடித்திருந்தார்கள்.

மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத் தின் டைரக்டராக ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் பணி புரிந்ததில் ஐந்து படங்கள் எடுப்பதில் பங்கு கொண்ட எனக்குக் கிடைத்த அனுபவங்களின் சாரம் இந்த இருபது விஷயங்கள் தமிழ் சினிமா உலகுக்குப் பயன்படும் என்று நம்புகிறேன்.

1. குறித்த நேரத்தில் பட்ஜெட் போட்டு அதற்குள் முடிக்கப்படும் படங்கள் தோல்வியடைவதில்லை பெரும்பாலும்.

2. ‘ஸ்டார் சிஸ்டம்’ இருந்தும் கறுப்புப் பணத்தின் பாதிப்பைக் கணிசமாகக் குறைக்க முடியும். ஆனால், முழுவதும் குறைக்க முடியாது.

3. ஒரு நல்ல நடிகர் இருந்தால் படம் பூஜையின்போதே வியாபாரமாகிறது. அதாவது உத்தரவாதங்கள் தரப்படுகின்றன. ஆனால், பாதி பட்ஜெட் ஸ்டாருக்குப் போய்விடுகிறது.

4. சில வங்கிகளும் வென்ச்சர் நிறுவனங்களும் சினிமாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த உதவி சுலபமாகக் கிடைக்கும்.

5. பட விநியோகம் படம் எடுப்பதைவிட பத்திரமானது. அதுபோல் டி.வி. சீரியலிலும் எடுப்பதைவிட விற்பது ரிஸ்க் குறைவானது.

6. டி.ஆர்.பி. ரேட்டிங் என்பது உட்டாலக்கடி.

7. நல்ல டைரக்டர், நடிகர்கள், இசையமைப்பாளர் இருந்தாலும் நல்ல கதையிருந்தால்தான் படம் வெற்றி பெறுகிறது. சிக்கல் என்னவென்றால், நல்ல கதை எது என்பதை லேசில் சொல்ல முடிவதில்லை. சில சமயம் அற்ப காரணங்களுக்காக நன்றாக எடுக்கப்பட்ட படம் நிராகரிக்கப்படுகிறது. சில சமயம் ஒரு பாட்டுக்காகப் படம் ஓடுகிறது.

8. தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பலவீனம் கதையும் முப்பத்தாறு சதவிகித வட்டியும்தான்.

9. தொலைக்காட்சியை சினிமாவின் சோகைக்குக் காரணம் கூறுவதில் அர்த்தமில்லை.

10. அமெரிக்காவில் இருப்பது போல் விடுமுறைகளில் அதிக ரேட்டும் சாதாரண தினங்களில் கம்மி ரேட்டும் வசூலிக்க தியேட்டர்களுக்கு அனுமதித்தால் அரசுக்கு வருமானம் அதிகமாகும்.

11. இப்படிச் செய்தால்தான் ‘டாப்டென் மூவீஸ்’ பற்றிய உண்மை வெளிப்படும். இல்லையேல் தியேட்டரை விட்டு எப்போதோ ஓடிப்போன படங்களெல்லாம் டாப் டென் பட்டியலில் வெத்தாக வீற்றிருக்கும். காரணம் அவர்கள் அந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியிருப்பார்கள்.

12. முதல் வருடத்துக்கு டிரெய்லர் மட்டும்தான் காட்ட வேண்டும். ‘பீட்டா’வைக் கொடுத்து விடுவதால் கொஞ்சம் கொஞ்சமாக முழு சினிமாவையே தவணை முறையில் காட்டிவிடுகிறார்கள். இது சினிமாவை மிகவும் பாதிக்கிறது. இதை அறியாமல் சாட்டிலைட் உரிமைக்காகப் படத்தை தாரை வார்த்துவிடுகிறார்கள்.

13. ஸ்லைடிங் ரேட்ஸ் சிஸ்டம் வந்தால் ஒரு படத்தின் தினப்படி வசூலை துல்லியமாகக் கணிக்க முடியும். ஹாலிவுட் படங்கள் போல இதற்கென்று யாராவது பாரபட்சமற்ற வலைமனை துவங்கலாம்.

14. சினிமாவில் திறமையுள்ள கலைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு சம்பளம் போதாது. தயாரிப்பாளர்களுக்கு மா&னஜ் மெண்ட் பயிற்சி போதாது. ஒவ்வொரு தயாரிப்பு கம்பெனியிலும் எம்.பி.ஏ. படித்த ஆசாமி ஒருத்தர் அவசியம் வேண்டும்.

15. படம் எடுப்பது சுலபம் போல இருக்கும் மிக மிகக் கடினமான வேலை.

16. ஒரு படம் தோற்பதற்கு எனக்குத் தெரிந்தவரை 132 காரணங்கள் உள்ளன. ஜெயிக்க நான்கே காரணம்தான்.

17. ஒரு டைரக்டருக்கு ஒரு நல்ல படம் செய்த பிறகு அடுத்து ஒரு மோசமான படம் வரை திரையுலகு மன்னிக்கிறது. அதன்பின் அவர் மறுபடி க்யூவில் கடைசியிலிருந்து வரவேண்டும்.

18. திரைப்படக் கல்லூரிகளில் தரும் பயிற்சி போதாது. குறிப்பாக திரைக் கதை அமைப்பதில் பயிற்சி. திரைப்படத் தயாரிப்பில் தனிப்பட்ட டிப்ளமா படிப்பு துவக்கவேண்டும்.

19. டிஜிட்டல் சினிமா டி.வி. மூவிஸ் மூலம் இருபது, முப்பது லட்சத்துக்குள் படம் எடுக்க முடியும்.

20. இந்த ஆண்டு இந்தத் துறை ஒற்றுமை காட்டவில்லை என்றால் பல தியேட்டர்கள் மூடப்பட்டு ஸ்னோபோலிங், கோகார்ட், இன்டர்நெட் கபே, மசாஜ் பார்லர் மற்றும் கல்யாண மண்டபங்களாக மாறும் அபாயம் உள்ளது. நெருப்புக் கோழியை மண்ணிலிருந்து தலையை எடுக்க வைக்கவேண்டும்.

ஸ்ரீரங்கத்தில் இரண்டு நாள் ‘பெருமாள் சேவிக்கப்’ போயிருந்தேன். பழைய நண்பர்கள் என்.எஸ்.கிருஷ்ண மாச்சாரி, திருமஞ்சனம் சுந்தரராஜன், கேவி போன்றோர்களுடனும் என் சகோதரன் ராஜகோபாலனுடனும் கம்ப ராமாயணத்தை அரங்கேற்றிய மண்டபத்தின் அருகில் எல்லாம் உட்கார்ந்துகொண்டு பல விஷயங்களை அளவளாவிக்கொண்டு ஒரு nostalgia பயணம்.

இந்த முறை குறிப்பாக இரண்டு விஷயங்கள் கவனித்தேன். திருகொட்டாரத்தில் கோசாலையின் ஒரு வாசற்படியில் அழிந்தும் அழியாததுமாக இருக்கும் மிகப் பழமையான கல்வெட்டு முதலாம் பராந்தகனின் காலத்தது (கி.பி. 907). அவ்வரசன் திருவரங்கர் கோயிலுக்கு ஒரு வெள்ளிக் குத்துவிளக்கும் அதற்குக் கற்பூரம், பருத்தித் திரிநூல் வாங்குவது உட்பட அதைப் போற்றிப் பாதுகாப்பதற்கு 51 பொற்காசுகள் வழங்கியதை அறிவிக்கும் கல்வெட்டு. மாட்டுக் கொட்டகையில் சரித்திரம்!

சேஷராயர் மண்டபத்தில் இதுநாள் வரை நான் கவனிக்காமல் விட்ட தசாவதாரச் சிற்பங்கள் சிற்பக்கலையின் அற்புத உதாரணங்கள்.

பழையரங்கம் என்கிற பெயர் மாற்றத்திலிருந்து நல்லவேளை தப்பிவிட்ட திருவரங்கத்தில் மாறாத பகுதிகளும் மாறிவிட்ட பகுதிகளும் உடன் வாழ்கின்றன. ஏ.டி.எம்., இன்டர்நெட், டி.வி.டி. (DVD), மினரல் வாட்டர் போன்றவற்றின் நவீனத்தைக் கடந்து ஐம்பதடி உள்ளே போனால் ஹொய்சாலர் காலத்து சிற்பங்கள் (கி.பி. 1234-1262) அமைந்த கிருஷ்ணன் சந்நிதி. வெள்ளை கோபுரத்தை நிஜமாகவே வெள்ளையடித்து ஒரு அல்பைனோ போல் பண்ணிவிட்டார்கள். மற்ற கோபுரங்களுக்கு பல வண்ணங்கள் கொடுத்து சிற்பக்குமரிகள் சர்க்கஸ் குமரிகள்போல ஜொலிக்கிறார்கள். பொதுவாகவே சம்ரோக்ஷணத்துக்குப் பிறகு கோயில் சற்று சுத்தமாகியிருக்கிறது என்னவோ நிஜம்.

மாலை சமயபுரத்துக்குச் சென் றிருந்தேன். சின்ன வயசில் சைக்கிளில் போனது. ஐம்பத்தைந்து வருடங்களுக்குப் பின் இந்தக் கோயிலின் அளவும் கேள்வி கேட்காத பக்தியும் திகைக்க வைக்கிறது. சமயபுரம் raw faith ன் வடிவம். ஒருபுறம் ‘ஊன்வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலனைந்தும் தாம்வாட வாடத் தவம் செய்ய வேண்டாம்’ என்னும் ஆழ்வார்களின் பக்திநிலை திருவரங்கத்தில். மறுபுறம் இதற்கு நேர் எதிரான அங்கப்பிரதட்சண உருளல் களும் முழங்கால் கண் போன்றவற்றின் வெள்ளி வடிவக் காணிக்கைகளும் தீச்சட்டிகளும் வேப்பிலையடியும் சமயபுரத்தில். இந்து மதத்தின் இரண்டு விளிம்புகளும் இருபது கிலோ மீட்டரில்!

நன்றி விகடன்.....

..

பகிர்வுகளைத் தொடருங்கள், வீணா!

நன்றாக இருக்கின்றது!

உங்கள் நூறாவது பச்சை, என்னது! :D

நன்றி புங்கையூரான் அண்ணா உங்களின் கருத்துக்கும் பச்சைக்கும்

Link to comment
Share on other sites

காவல் கோட்டம் நாவலுக்கு அண்மையில் சாகித்திய அக்கடமி விருது கிடைச்சு இருக்கிறது...இதை எழுதியவர்

சு.வெங்கடேசன் இது இவர் எழுதிய முதலாவது நூல் ஆகும் சாகித்ய அகடமி விருதை இளம் வயதில் வாங்கி சாதனை படைத்திருக்கிறார் சு.வெங்கடேசன்! இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது, தமிழ் மொழிக்காக இவருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைத் தொகுத்து, 'காவல் கோட்டம்’ என்ற தலைப்பில் எழுதி இருந்த, தன்னுடைய முதல் புதினத்துக்கே சாகித்ய அகடமி விருது பெற்றுள்ள வெங்கடேசன், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும் செயல் பட்டு வருபவர்.

இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கும் வெங்க டேசன் இதுவரை, 'ஓட்டை இல்லாத புல்லாங்குழல்’, 'திசையெல்லாம் சூரியன்’, 'பாசி வெளிச்சத்தில்’, 'ஆதி புதிர்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் 'கலாசாரத்தின் அரசியல்’, 'ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை’, 'கருப்பு கேட்கிறான் கெடா எங்கே?’ போன்ற சில ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். 'காவல் கோட்டம்’ புதினத்தில், மதுரையை ஆட்சி செய்த நாய்க்க மன்னர்களின் வரலாறு மற்றும் மதுரையில் காவல் பணி புரிந்த கள்ளர் இனத்தவர்களின் வரலாறு ஆகிய இரண்டையும் எளிய நடையில் கூறி இருக்கிறார்

இயக்குனர் வசந்த பாலன் இந்த கதையிலிருந்து ஒரு பகுதியை வைச்சு தான் தனது அரவான் படம் எடுக்கிறார் என்று எங்கேயோ படிச்சதில இருந்து தான் இப்பிடி ஒரு வரலாற்று நாவல் இருக்குது எண்டே எனக்கு தெரிய வந்தது ஆயிரத்துக்கு அதிகமான பக்கம்களை கொண்ட தடித்தமான புத்தகம் எண்டு சொன்னார்கள் பொன்னியின்

செல்வன் கூட தான் நிறைய பக்கம்கள் அதை படிக்க முடிஞ்சால் இதும் படிக்கலாம் தானே என்று நினைச்சன் ஆனால்

கதை அவ்வளவு விறு விறுப்பானது இல்லை என்கிறார்கள் எனக்கு பொன்னியின் செல்வன் படித்த பிறகு எந்த வரலாற்று நாவலும் அது தந்த அளவு விறுவிறுப்பை தரவில்லை எப்போதுமே எனது மிக விருப்பத்துக்குரிய

வரலாற்று நாவலாக அது தான் இருக்கும் போல அதன் தொடர்ச்சியாக காவிரி மைந்தன் என்று ஒரு புத்தகம் வந்திருகிறதாக எங்கேயோ படிச்சேன் எப்பிடி என்று தெரியவில்லை ..

.

{(( நன்றி - கேபிள் சங்கர் )) }சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், சாகித்ய அகாடமியின் பரிசுக்கு பிறகு ஆயிரத்தி ஐந்நூறு பிரதிகள் விற்றிருப்பதாய் சொன்னார்கள். புத்தகக் கண்காட்சியிலேயே 450 பிரதிகளுக்கு மேல் விற்றிருப்பதாய் சொன்னார்கள். போகிற போக்கில் பத்தாயிரம் காப்பி விற்பனையாவதற்கான அறிகுறிகள் இருப்பதாய் பதிப்பாளர் சொன்னார். வாழ்க சாகித்ய அகாடமி

காவல் கோட்டம் பற்றி ஜெயமோகன் எழுதிய விமர்சனம் படிக்க இந்த இணைப்பில் செல்லுங்க (http://www.jeyamohan.in/?p=4612)(www.jeyamohan.in/?p=4633)

எஸ் .ரா வின் காவல் கோட்டம் பற்றிய விமர்சனம் படிக்க(http://www.sramakrishnan.com/?p=505)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறமைசாலிகளை ஆண்டவன் நீண்ட காலத்திற்கு உயிரோடு விட்டு வைக்க மாட்டான்...அருமையான இணைப்பு...நன்றி வீணா

எங்களில் ஏதாவது கோபம் என்றால் நேரடியாக திட்டுவதுதானே?

இப்படி மறைமுகமாகவா குத்திகாட்டவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களில் ஏதாவது கோபம் என்றால் நேரடியாக திட்டுவதுதானே?

இப்படி மறைமுகமாகவா குத்திகாட்டவேண்டும்?

நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்குமாம் என எமது பெரியவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள் :D ...தொடர்ந்து எழுதுங்கள் வீணா படிக்க நான் காத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

இப்போதெல்லாம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மிக குறைந்து விட்டது .

புத்தகம் வாசித்து நிறைய நாட்கள் ஆகி விட்டது . நேரம் இல்லை என்று இல்லை .அதற்கான நேரம்களை சோசியல் நெட் வொர்க் குகள் பறித்து விட்டன .

இணையமானது வாசிப்பதற்கு எத்தனையோ அறிமுகபடுத்தி விட்டு அதற்கான நேரத்தை எம்மிடமிருந்து தன்வசம் பிடுங்கி விட்டது .

சில புத்தகங்களுக்கான விமர்சனம்களை இணையத்தில்

படிக்கும் போது அப்புத்தகத்தை வாங்கி படிக்கணும் என்று நினைத்து டைரி இல் அதன் பெயர்களை எழுதி வைத்திருப்பேன் .

இந்தியா போகும் போது வாங்கலாம் என நினைத்து இன்னமும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை .

அண்மையில் நான் படிச்ச ஒரு புத்தகத்தின் விமர்சனம் இப்புத்தகத்தினை கட்டாயம் வாங்கி படிக்கணும் எண்டு ஆர்வத்தை தூண்டி உள்ளது ஈழ தமிழர்களினை பொதுவாக யூதர்களுடன் ஒப்பிடுவார்கள் இதில் எவ்வளவு உண்மை இருக்கோ இல்லையோ எனக்கு தெரியா ஆனால் அவர்களின் உளவு அமைப்பான மொஸாட் பற்றி எல்லாருமே கொஞ்சமாவது கேள்வி பட்டிருக்கிறோம் அந்த உளவு அமைப்பை பற்றி என் சொக்கன் எழுதிய புத்தகத்தின் விமர்சனம் தான் அப்புத்தகத்தை வாங்கி படிக்கணும் எண்டு ஆவலை தூண்டி இருக்குது அந்த விமர்சனத்துக்கு முதல் என் சொக்கனை பற்றி கொஞ்சம்

((நன்றி தமிழ் விக்கி பீடியா))

என். சொக்கன் (பிறப்பு: ஜனவரி 17, 1977) என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.

தொண்ணூறுகளில் எழுதத் துவங்கிய என். சொக்கன் இதுவரை சுமார் நூறு சிறுகதைகளும் இரு நாவல்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நூல்கள் வடிவில் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார். இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கில, ஹிந்தி, மலையாள, குஜராத்தி மொழிபெயர்ப்பிலும் வெளி வந்துள்ளன

வாழ்க்கை வரலாறுகள்

ஏ. ஆர். ரஹ்மான்: ஜெய் ஹோ!

அம்பானி ஒரு வெற்றிக்கதை

முகேஷ் அம்பானி

அனில் அம்பானி

பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி: ரூபாய் பத்தாயிரம், பத்தாயிரம் கோடி ஆன கதை

அஸிம் ப்ரேம்ஜி: கம்ப்யூட்டர்ஜி

லஷ்மி மிட்டல்: இரும்புக்கை மாயாவி

ரத்தன் டாடா

அம்பானிகள் பிரிந்த கதை

ஏர்டெல் (சுனில் பார்தி) மிட்டல்: பேசு!

சுபாஷ் சந்திரா: ஜீரோவிலிருந்து ஜீ டிவிவரை

ரிச்சர்ட் ப்ரான்ஸன்: 'டோண்ட் கேர்'

மாஸ்டர்சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதைதிராவிட்:

இந்திய பெருஞ்சுவர்ஷேக்ஸ்பியர்:நாடகமல்ல, வாழ்க்கை

நெப்போலியன்: போர்க்களப் புயல்

சல்மான் ரஷ்டி: ஃபத்வா முதல் பத்மாவரை

குஷ்வந்த் சிங்: வாழ்வெல்லாம் புன்னகை

அண்ணா(ந்து பார்!)

வீரப்பன்: வாழ்வும் வதமும்

வாத்து எலி வால்ட் டிஸ்னிசார்லி சாப்ளின் கதை

நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்

அரசியல்

  • அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
  • அயோத்தி: நேற்றுவரை
  • மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே (நேபாளத்தின் அரசியல் வரலாறு)
  • கேஜிபி: அடி அல்லது அழி
  • CIA: அடாவடிக் கோட்டை
  • மொஸாட்: இஸ்ரேலிய உளவுத்துறை
  • ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி

குழந்தைகளுக்கான படைப்புகள்

  • ஹாய் கம்ப்யூட்டர்
  • விண்வெளிப் பயணம்
  • டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?
  • கேமரா எப்படி இயங்குகிறது?
  • மொபைல் ஃபோன் எப்படி இயங்குகிறது?
  • ரேடியோ எப்படி இயங்குகிறது?
  • மேஜிக் தோணி (தேர்வு பயம் விரட்ட)
  • Learn To Make Decisions (Introduction To Decision Making)
  • அப்துல் கலாம்
  • இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி
  • பில் கேட்ஸ்
  • அறிஞர் அண்ணா
  • நெப்போலியன்
  • சார்லி சாப்ளின்

பிற

  • மணிமேகலை (ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ நூலின் நாவல் வடிவம்)
  • முத்தொள்ளாயிரம் (புரியும் வடிவில்)
  • கம்ப்யூட்டர் கையேடு (விண்டோஸ் எக்ஸ்பி)
  • விண்டோஸ் 7 கையேடு
  • தேடு: கூகுளின் வெற்றிக்கதை
  • நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா
  • கோக்: ஜில்லென்று ஒரு ஜிவ் வரலாறு
  • பெப்ஸி நிறுவன வரலாறு
  • அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை
  • ட்விட்டர் வெற்றிக்கதை
  • ஃபேஸ்புக் வெற்றிக்கதை
  • எனக்கு வேலை கிடைக்குமா?
  • வல்லினம் மெல்லினம் இடையினம் (மென்பொருள் துறைபற்றிய பன்முகப் பதிவுகள்)
  • நலம் தரும் வைட்டமின்கள்

வலைப்பக்கம் http://nchokkan.wordpress.com/

@nchokkan இல் இவரை twitter இல்பின்தொடரலாம்

என்.சொக்கனின் ‘மொஸாட்’ – விமரிசனம்

யார்றா, நீங்க எல்லாம்?

எங்கே இருந்து வர்றீங்க?

எதுக்கு வர்றீங்க?

உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி

அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க!

mozaat-197x300.jpg

இப்படி இஸ்ரேலிய உளவுத் துறையான மொஸாட்டைப் பற்றி ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பெரும்பாலான பதில்களைத் தரும் புத்தகம் தான் என்.சொக்கன் எழுதியிருக்கும் மொஸாட் புத்தகம்.

மியூனிக் நகர ஒலிம்பிக்ஸின் பிளாக் செப்டம்பருக்கு மொஸாட் பலி(ழி) வாங்கிய கதையில் ஆரம்பிக்கிறது புத்தகம்.மொஸாட்டின் முந்தைய வரலாறு, ஆரம்ப வரலாறு, அமெரிக்க குருவை மிஞ்சிய சிஷ்யனாக வளர்ந்தது என மொஸாட்டின் பரிணாம வளர்ச்சியையும் அதன் அனைத்து முகங்களையும் தெளிவாக விளக்குகிறது.

விமானத்தை கடத்துவது ஆகட்டும் ஆளை கடத்துவது ஆகட்டும் அல்லது அணுகுண்டு தயாரிக்க பொருட்களை கடத்துவது ஆகட்டும். சதாமின் அணு உலைகளை அடித்து வாயில் போடுவது ஆகட்டும் அந்த அத்தியாயங்கள் எல்லாம் ஹாலிவுட் படக் கதைகள். மொஸாட் காரியத்தில் இறங்குவது போல் தான் எடுத்தால் முடிக்காமல் வைக்க முடியாது. அந்தளவு விறுவிறுப்பு வேகம். இது எல்லாம் இல்லாவிட்டால் அப்புறம் என்ன சொக்கரின் புத்தகம்!

டாப் கியரில் செல்வது சட்டென்று முடிந்து விடுவது போலவும் ஒரு பிரமை.மொஸாட் தவறுகள் செய்யாது என்னுமளவு பிம்பம் வராமல் மொஸாட்டின் தவறுகளையும் சற்று தாராளமாக சொல்லியிருக்கலாம் எனத் தோன்றியது. அதே போல் மொஸாட்டின் ஏஜண்ட்டுகள்( வெளியில் தெரிந்தவரை சொல்லி இருக்கலாம்). மொஸாட்டின் வெற்றிக்கு உளவு மீது இருக்கும் ஈர்ப்பில் வரும் இளைஞர்கள் தான் காரணம் என்ற பிம்பத்தை காட்டியது போல் எனக்குத் தோன்றியது. என்னைப் பொறுத்தவரை மொஸாட்டின் வெற்றிக்கும் செயல்களுக்கும் முயற்சிகளுக்கும் காரணம் அவர்களின் புத்திசாலித்தனம் பயிற்சி போன்ற அனைத்தையும் தாண்டியது இஸ்ரேல் மீது யூதர்களுக்கு இருக்கும் Emotional Attachment! இதைச் சொல்ல கொஞ்சம் யூத வரலாறு, இஸ்ரேல் வரலாறு , அவற்றின் பிண்ணனி பற்றி சொல்லி இருக்கலாம்.

mozaat1.jpg

சமீப காலத்தில்(2010) அல் மாபொ என்ற ஹமாஸ் ஆசாமியை துபாயில் போட்டுத் தள்ளியது மொஸாட். ஆனால் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை பயன்படுத்தியது வீடியோவில் சிக்கியது என்று எப்படி ஒரு மொஸாட் ஆபரேஷன் இருக்கக் கூடாது என்று இலக்கணம் வகுத்த அட்டாக். ஆனால் அல் மாபொ என்ற திமிங்கிலத்தை தூக்க இது போன்ற திட்டுகளைத் தாராளமாக வாங்கலாம் எனத் தெரிந்தே தான் மொஸாட் இதை செய்தது என்று சொல்பவர்களும் உண்டு. இந்த ஆபரேஷன் புத்தகத்தில் அப்பீட் ஆகி விட்டது.

ஆறு நாள் போரில் மொஸாட்டின் பங்கை விவரித்தது போல் ’ஆபரேஷன் எண்டப்பி’ (Opearation Entebbe) பற்றியும் எழுதியிருக்கலாம். யுகாண்டாவிற்கு பிரான்ஸ் விமானம் ஒன்றை கடத்தி இருந்தார்கள். இஸ்ரேலியர்களைத் தவிர மற்றவர்களை விட்டு விட்டனர். விடுதலை அடைந்தவர்களை பேட்டி கண்டு, வான் வழியே 2500 மைல்களுக்கு 100 கமோண்டோக்களை அனுப்பி 102 பிணைக் கைதிகளை 90 நிமிடத்தில் மீட்டனர். கொசுறாக உகாண்டா விமானங்களையும் சில மிக் போர் விமானங்களையும் மண்ணாக்கினார்கள்.1976-ல் இதற்கு ஒரே வாரத்தில் இதற்கு ஸ்கெட்ச் ரெடி செய்தது மொஸாட். சுவாரஸ்யமான இந்த சமாச்சாரத்தை சாய்ஸில் விட்டிருக்கலாமோ?

படிக்கும் போதும் படித்த பின்பும் விடாமல் தோன்றியது. “கசாப்பையும் அவனை அனுப்பியவர்களை கைமா செய்யாமல் வெட்கம் மானம் இன்றி அவனுக்கு பிரியாணி போட்டுக் கொண்டு இருக்கிறோமே. நாட்டின் பாதுகாப்பு முக்கியம.நாடு என்று ஒன்று இருந்தால தானே அதை முன்னேற்றவும் ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்றவும் உண்ணாவிரதம் இருக்க முடியும். அதனால் நாம் போராட வேண்டியது லோக்பாலுக்கு அல்ல நிச்சயமாய் மொஸாட்டில் பாதி அளவுக்காவது திறமை இருக்கும் உளவு நிறுவனத்திற்காக!”.

மேலே சொன்ன விமான மீட்பை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். காந்தகாரில் என்ன நடந்தது என்று யோசியுங்கள். மொஸாட் இஸ்ரேலுக்காக செய்த சாகசங்களைப் படித்துப் பாருங்கள். பின்பு சொல்லுங்கள் நமக்கும் ஒரு மொஸாட் வேண்டுமா, வேண்டாமா என!

(புத்தகத்தின் விமர்சனம் மட்டும் இங்கு இருந்து எடுக்கபட்டது http://www.katturai.com/?p=438)

மொஸாட்-இஸ்ரேலிய உளவுத் துறை

வெளியீடு: மதி நிலையம்

பக்கம்-186

விலை- ரூ. 100

Link to comment
Share on other sites

இந்த வாரம் (jan 23 )சீனர்கள் தங்கள் புத்தாண்டினை கொண்டாடுகிறார்கள் வருடம் முழுக்க ஓய்வில்லாமல்

உழைக்கும் சீனர்கள் இந்த ஒரு வாரம் மட்டும் ஓய்வாக உறவினர்களுடன் புத்தாண்டினை கொண்டாடி மகிழ்வார்கள்

சீனபுத்தாண்டு எப்பிடி உருவாகியது (நன்றி விகடன்)

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்... அது, வசந்த காலம். ஆனால், சீன மக்களுக்கோ கசந்த காலம். 'நியான்' என்ற ஒரு காட்டு விலங்கு சீனாவில் ஒரு கிராமத்தின் மக்களை தினமும் இரவு நேரத்தில் தாக்கியது என்பது பழைய மரபுக்கதை. ஆடு, மாடு போன்ற விலங்குகள் மற்றும் தானியங்களையும் தின்று தீர்த்த அந்த விலங்கு, சின்னஞ்சிறு குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஊர் மக்கள், இரவு என்றாலே பயம் கொள்ள ஆரம்பித்தனர்.

இந்தக் கொடுமையில் இருந்து தப்ப, ஒரு வாய்ப்பை தேடிக்கொண்டு இருந்தனர். ஒரு நாள், சிறு குழந்தை அணிந்திருந்த சிவப்பு உடையையும், எங்கோ எரிந்துகொண்டிருந்த நெருப்பையும் கண்டு, நியான் பயந்து ஓடியதை மக்கள் பார்த்தனர்.

நியானின் கொடுமைகளில் இருந்து தப்ப, சிவப்பு நிற உடைகளையும், நெருப்பையும் காட்டி அதை விரட்டினர்!

பின்னர், ஒவ்வொரு ஆண்டின் வசந்த கால தொடக்கத்திலும், சீன மக்கள் தங்கள் வீடுகளின் முன், சிவப்பு நிற கூண்டு விளக்குகளை வைத்து, சிவப்பு உடைகளையும் அணிய தொடங்கினர்.

china1.jpg

இந்த கலாசாரம் தான், இன்றும் வசந்த கால பண்டிகையாகவும், வருட பிறப்பாகவும், கொண்டாடப்படுகிறது!

சீன புத்தாண்டு... ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இப்படி 12 விலங்குகளின் பெயரில் ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டின் பெயர் 'டிராகன்'.

சீன வருட பிறப்பை, இந்த ஆண்டு இன்று (ஜனவரி 23) தொடங்கி ஜனவரி 25 வரை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வீதி எங்கும் சிவப்பு வண்ண கூண்டு விளக்குகளின் அணிவரிசை, தோரணங்களின் அலங்காரம்!

சிவப்பு மலர்களையும், சிவப்பு வண்ணங்களில் நல்லதைக் குறிக்கும் வாசகங்களையும் கொண்டு, வீடு, தெரு, மற்றும் கடைகளை அலங்கரித்துள்ளனர்.

சிவப்பு வண்ணம் நெருப்பை குறிக்கும். ஆதலால், குழந்தைகளுக்கு பரிசுகள் கூட சிவப்பு நிற உறையில் வைத்து கொடுக்கப்படுகிறது. இந்த விழாவில், பாரம்பரிய நடனமான டிராகன் நடனம் மற்றும் வண்ண வானவெடி வேடிக்கையும் முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்தப் பண்டிகையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அமெரிக்காவில் கொண்டாடப்படும் நன்றி நவிலும் நாள், தமிழகத்தின் காணும் பொங்கல் பண்டிகையைப் போல இது குடும்பங்கள் ஒன்று சேரும் திருநாள் என்பதே.

வருடம் முழுதும் எங்கெங்கோ இருந்தாலும், சீன வருடப் பிறப்பின்போது குடும்பங்கள் ஒன்று சேர்ந்து விருந்துண்டு மகிழ்வது வழக்கம். இந்தத் திருநாளன்று எட்டு அல்லது ஒன்பது உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. எட்டு என்ற எண் - செல்வ செழிப்பையும், ஒன்பது என்ற எண் - நீண்ட ஆயுளையும் குறிக்கிறது.

china3%281%29.jpg

நகரத்தில் வேலை பார்க்கும் மக்கள், சீன புத்தாண்டின்போது தம் சொந்த ஊருக்கு சென்றுவிடுவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் வர்த்தகம் மற்றும் வணிக பரிமாற்றமும் பாதிக்கபடுகிறது.

இந்த விழா நேரத்தில், இந்தியாவின் தீபாவளியைப் போல், நாடே ஸ்தம்பித்து போகிறது. அரசாங்கமும் தனது விடுமுறை நாட்களை இந்த விழாவுக்கு ஏற்றார்போல் அறிவிக்கிறது.

சீனா மிக அதிகமாக ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்வதால், மற்ற நாடுகள் இதற்கேற்றார்போல் தம் வர்தக பரிமாற்றங்களை அனுசரித்துகொள்கின்றன.

இன்று உலகளவில் நாம் பிரமிக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. இந்நாட்டு மக்களின் உழைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசார ஒற்றுமைதான் நம் பிரமிப்புக்கு காரணம். சீனப் புத்தாண்டு, இந்த பழமையையும் கலாசார ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.

அனைவருக்கும் ஷின் நியான் குவாய்ல... அதாவது, சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

***********************************************************************************************************************

நேற்று இரவு மௌனகுரு படம் பார்த்தேன் கடந்த வருட இறுதியில் வந்த படம் அறிமுக இயக்குனர் சாந்த குமார் இயக்கியிருக்கிறார் த்ரில்லர் கதை தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் (police) செய்யும் குற்றம்களால் சாமானியன் பாதிக்கபடுவது அதிலிருந்து எப்பிடி அவன் வெளில வந்தான் என்னும்

வழமையான ஹீரோயிச கதை தான்.. எடுத்திருக்கும் விதம் வழமைக்கு மாறானது .. விறு விறுப்பாக நகரும்

திரைகதை சின்ன சின்ன திருப்பம்கள் நேர்த்தியான கதாபாத்திரம்கள் என பார்க்க கூடிய நல்ல படம் dvd quality யில்

down load பண்ணகூடியதாய் இருக்குது

**********************************************************************************************************************

வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தை புக் மார்க் பண்ணி வைச்சு கொள்ளுங்க நிறைய புத்தகம்கள் தொடர்ந்து

பதிவேற்றி கொண்டு இருக்கிறார்கள்..http://www.openreadingroom.com

*******************************************************************************************************************

பாடகர் மனோ

1986ஆம் ஆண்டு வெளிவந்த 'பூவிழி வாசலிலே' படத்தில் இடம் பெற்ற 'அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே' என்ற இளையராஜாவின் இசையில் உருவான பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான மனோ, இதுவரை 16 மொழிகளில் 22000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி வருகிறார்.

இவருடைய குரலில் ஒலித்த சின்ன தம்பி படத்தில் இடம்பெற்ற 'அட உச்சஞ்தலை உச்சியிலே', 'தூளியிலே ஆடவந்த', நாயகன் படத்தில் இடம்பெற்ற 'நீ ஒரு காதல் சங்கீதம்', முத்து படத்தில் இடம்பெற்ற தில்லானா தில்லானா', படையப்பா படத்தில் இடம்பெற்ற 'கிக்கு ஏறுதே', காதலன் படத்தில் இடம்பெற்ற 'முக்காலா முக்காபுலா', உள்ளத்தை அள்ளித்தா படத்தில் உள்ள அனைத்துப் பாடல்களும், சமீபத்தில் வெளியான மங்காத்தா படத்தில் இடம்பெற்ற 'மச்சி ஓப்பன் தி பாட்டில்' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பாடல்களாகும்.

ஒரு பாடகராக மட்டும் இன்றி ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் மனோ. கமல்ஹாசனுடன் இணைந்து 'சிங்கார வேலன்' படத்தில் நடித்த மனோ, 250 நாடகங்களிலும், 3000 இசை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

****************************************************************************************************************************

குழந்தைகளுக்கான பல நூறு புத்தகங்கள் இலவசமாகப் பார்க்கவும், டவுன்லோட் செய்யவும்

http://www.childrensbooksonline.org

***********************************************************************************************************************

தத்துவம்கள்.. :D

பணத்தால் வாங்க முடியாத மனிதர்களைக்கூட பாராட்டுகளால் வாங்கி விட முடியும்,

கஷ்டம் வர்ற காலம் இருக்கே அது எப்பவுமே விலை உயர்ந்தது காரணம் அப்போது தான் உண்மையான நண்பர்கள் அடையாளம் தெரிவாங்க

ஒரு நண்பன் தவறு செய்யும் போது அவனை ஆதரியுங்கள். உங்க நண்பனை மட்டும், அவனுடய தவறையல்ல

நல்ல எதிர்காலம் உள்ள ஒரு ஆணும், கடந்த கால கஷ்ட, நஷ்டங்களை அறிந்த பெண்ணும் இணைந்தால் அவர்களே சிறந்த தம்பதியினர்

தோல்வி" என்னும் பயிர்களை கண்ணீரால் நிரப்பாதே, அருகில் தோன்றும் "வாய்ப்பு" என்னும் பயிர் கூட உப்பு(க்) கண்ணீரில் அழிந்து போகும்

நுனி முதல் அடி வரை இனிப்பதில்லை வாழ்க்கையும் கரும்பை போலவே

அன்பு எல்லா நேரங்களிலும் வெற்றியை தருவதில்லை. தகுதியில்லாத நபர்கள் மீது வைக்கப்படும் அன்பு எப்போதும் துயரையே தரும்

உதவிக்கு நீளும் கைகள் உதாசீனங்களை பரிசாக பெறுகிறது பல நேரங்களில்

அருமையான தகவல்கள் வீணா. தொடர்ந்து பகிருங்கள். நுகரக் காத்திருக்கின்றோம்!

நன்றிகள் அறிவன்

Link to comment
Share on other sites

சூரிய புயல் பூமியை தாக்கும் அபாயம்...Strongest Solar Storm Danger.....

ஆம் சூரிய புயல் அதாவது எரிமலை கொந்தளிப்பு மாதிரி இதுவும் ஒரு பெரிய விஷயம். இது முதன் முதலில் கடந்த ஆஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணிக்கு (அமெரிக்கன் ஈஸ்டெர்ன் டைம்)தான் நடந்தது. இதன் பெரிய சூரிய கதிர்வீச்சு ஆபத்து வரும் நாட்களில் இருக்கும். இதன் பாதிப்பு அதிகமாக பொலார் நோக்கி செல்லும் பயனிகள் விமானம், சாட்டிலைட்ஸ் - தொலைகாட்ச்சி பிளாக் அவுட் ஆகலாம், வான்வெளி ஆராய்ச்சி கூடம் கூட பாதிக்கலாம், மற்றூம் வான் பருவ ஆராய்ச்சி பாதிப்பு. இது வரை சூரிய கதிர்வீச்சு வருவது சகஜம் ஆனால் இது தான் உலகத்திலே மிகவும் சக்தி வாய்ந்த புயல்(கதிர்வீச்சு). இந்த கதிர்வீச்சு எப்படி இருக்கும் என்றால் சூரியனில் இருந்து புரோட்டான் சுமார் 14.3 கோடி கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வரும். ஏற்கனவே இந்த மாதிரி ஒரு சூரிய புயலால் கனடா நாட்டின் கியுபெக் மானிலத்தில் உள்ள எல்லா பவர் கிரிடும் ட்ரிப் ஆகி இருளில் முழ்கின. இது மிகவும் அபூர்வமும் ஆச்சர்யமான விஷயம்.

via fb...

2012 இல் உலகம் அழியும் தொடர்பான ஒரு தொடர் கட்டுரை உயிர்மையில் படிச்சேன் அதன் 14 part இங்கு

இணைக்கிறேன் முழு கட்டுரையையும் படிக்க விரும்புபவர்கள் உயிர்மையின் வலை தளத்தில்

http://uyirmmai.com/...s.aspx?cid=5206 போய் படிக்கலாம்

தொடர் 14

"அறிவியல், அறிவியல் என்று இதுவரை காலமும் எமக்குப் படம் காட்டிவிட்டு, திடீரென உலகம் அழியத்தான் போகிறது என்பது போலப் பயம் காட்டுகிறாரே இந்த ஆள்" என்று நீங்கள் என்னைப்பற்றி, கடந்த பதிவை வாசித்ததிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கலாம். "பேய் இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேயை நினைத்தால் பயமாக இருக்கிறது" என்று எழுத்தாளர் புதுமைப்பித்தன் சொன்னது போலத்தான், உலக அழிவு பற்றி நானும் சொல்ல வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து, மாபெரும் மர்மமான உலக மகா பயங்கரம் ஒன்று தன் வாயை '' எனத் திறந்து எம்மை விழுங்கக் காத்திருக்கிறது. பல இக்கட்டுகளைத் தாண்டி இன்று அவற்றைப் பற்றி முழுமையாக உங்களுக்கு நான் சொல்லியே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு வந்திருக்கிறேன்.

ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய ஆய்வுகளின்படி, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் அழிவதாயின் எந்த எந்த வகையில் அழியலாம் என்பதை மிக நுணுக்கமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி....,

1. சூரியன், பால்வெளி மண்டலத்தில் உள்ள கருப்புப் பள்ளத்தினாலோ (Dark Rift) அல்லது கருந்துளையினாலோ (Black Hole) ஈர்க்கப்பட்டு அழியலாம்.

2. பூமியின் வட, தென் துருவங்களுக்கு ஊடாகச் செல்லும் அச்சு இடம் மாறி (Pole Shift), பூமியின் காலநிலை மாற்றங்களினால் அழியலாம்.

3. விண்ணில் சுற்றித் திரியும் மிகப் பெரிய விண்கற்களில் (Asteroid) ஏதாவது ஒன்று தாக்கி பூமியில் அழிவுகள் ஏற்படலாம்.

4. பிளானெட் எக்ஸ் (Planet X) அல்லது நிபிரு (Nibiru) என்று சொல்லப்படும் கோள் தாக்குவதால் பூமி அழியலாம்.

5. சூரியனில் ஏற்படும் அதியுயர் மிகைவெப்பப் பாய்ச்சலால் உருவாகும் மின்காந்தக் கதிர்களின் தாக்கத்தால் பூமி அழியலாம்.

இப்படிப் பல விதங்களில் பூமி அழியும் என்று அவர்கள் சொன்னாலும், அவற்றில் சில உண்மையாகவே நடப்பதற்குச் சாத்தியங்கள் இருப்பதாக விஞ்ஞானிகளில் பலர் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, அந்த அழிவுகளில் மிக முக்கியமாக சொல்லப்படுவது சூரியனின் மின்காந்தக் கதிர்த் தாக்குதலைத்தான்.

இவற்றில் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை உண்டு, எந்த அளவுக்குப் பொய் உண்டு என்பதைச் சாதாரணமான மக்களுடன் பகிர்ந்து கொள்ள, எந்த நாட்டு அரசுகளும் முன்வரவில்லை. நாட்டின் நலன்களும், நாட்டு மக்களின் நலன்களும்தானே அரசுகளுக்கு முக்கியம். அப்படி இருக்க ஏன் அரசுகள் இவற்றைச் சொல்லத் தயங்குகின்றன? உண்டு, இல்லை என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியதுதானே! ஏன் இன்றுவரை எந்த அரசும் இது பற்றி தன் வாயைத் திறக்கவே இல்லை? மக்கள் இவற்றை அறியக் கூடாது என இந்த அரசுகளைத் தடுப்பது யார்?

இவற்றைக் கூர்மையாகப் பார்த்தால், உலக மக்களைச் சுற்றி, அவர்களை அறியாமலேயே ஒரு மிகப் பெரிய சதிவலை பின்னப்பட்டு வருகிறதோ எனச் சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. அத்துடன் இந்தச் சதிக்குக் காரணமாக இருப்பவர்கள் உலகின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் மிகப் பெரிய சக்திகளே என்னும் சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. எனது தனிப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையை மட்டும் வைத்து, இந்தச் சதிகள் பற்றிச் சாதாரணமாக உங்களுக்கு நான் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொல்லும் அளவுக்கு நான் பாதுகாப்பு நிறைந்தவனோ, பெரியவனோ கிடையாது. இவற்றை வெளி உலகுக்கு வெளியிடத் துணிச்சலும், பாதுகாப்பும் மிக அவசியமாகின்றது. காரணம், இங்கு குற்றம் சாட்டப்படும் சக்திகளின் வீரியம் மிகப் பெரியது.

நான் சொல்லப் போகும் சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே பலர் கருத்து வெளியிட்டிருந்தாலும், அதில் முக்கியமானவர் என்று கருதப்படும் ஒருவரைக் குறிப்பிட்டு உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர் பெயர் ஜெஸ்ஸி வென்டூரா (Jesse Ventura). அமெரிக்க மல்யுத்தம் (American Wrestling) என்னும் மிகப் பயங்கமாக மோதும் மல்யுத்தப் போட்டிகளை, நீங்கள் நிச்சயம் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அந்த மல்யுத்தத்தில் ஒரு பிரபலமான வீரராக இருந்தவர்தான் இந்த ஜெஸ்ஸி வென்டூரா. இவரை நாம் ஒரு மல்யுத்த வீரர் என்னும் சிறிய கூட்டுக்குள் வைத்து அடைத்துவிட முடியாது. அதையும் தாண்டி இவர் பன்முகத் தன்மை கொண்டவர். பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னொல்ட் ஸ்வார்ட்ஸநெகர் (Arnolt Schwarzenegger) போல, ஜெஸ்ஸி வென்டூராவும் அமெரிக்காவின் மினஸொட்டா (Minnesota) மாநிலத்தின் கவர்னராக இருந்திருக்கிறார். அத்துடன் இவர் ஒரு சினிமா நட்சத்திரமும் கூட. பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். இதில் விசேசம் என்னவென்றால் இவரும் ஸ்வார்ட்ஸநெகரும் சேர்ந்து 'பிரெடேட்டர்' (Predator) என்னும் வெற்றிப் படத்தில் நடித்துள்ளனர்.

Photo%203.jpg

தற்போது இந்த ஜெஸ்ஸி வென்டூரா, உலகில் நடக்கும் சதிகளைத் தொலைக்காட்சி மூலம், வெட்ட வெளிச்சத்துக்குத் துணிச்சலாக கொண்டுவருகிறார். நான் இனி தரும் விபரங்கள் இவரும், வேறு பலரும் வெளிக்கொண்டு வந்தவையாக இருக்கும். ஆனாலும் ஆதாரத்துக்காக, ஒருவரையாவது உங்களுக்கு நான் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற நிலையில் இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

இனி நான் தரும் எல்லாமே அதிர்ச்சி தரும் தகவல்களாகவே இருக்கும். எனது தொடரின் உச்சக்கட்டமாக அமைவதும் இவைகளாகத்தான் இருக்கும். இவற்றை நீங்கள் வாசிக்கும்போது, உங்களால் நம்பவே முடியாமல் போகும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. எனவே தயங்காமல், நான் தரும் தகவல்களையும், பெயர்களையும் கொண்டு கூகிள் (Google) மூலமாகவும், யூட்யூப் (Youtube) மூலமாகவும், வேறு இணையத் தளங்கள் மூலமாகவும் தேடினீர்களென்றால், தகவல்கள் அருவி போல கொட்டும்.

இதற்கு மேலும் இது பற்றி விளக்கிக் கொண்டிருக்காமல் விசயத்துக்குப் போகலாம் வாருங்கள்.......!

உலக மக்கள் அனைவரையும் உண்மையை அறிய விடாமல் தடுக்கும் இந்த சக்திகள் யார்? ஏன் இவர்கள் தடுக்கிறார்கள்? என்பன மில்லியன் டாலர் கேள்விகள். இந்த மில்லியன் டாலர் கேள்விகளுக்குப் பதில், பல இடங்களிலிருந்து எமக்குக் கிடைக்கிறது. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம். முதலில் நாம் அமெரிக்காவில் உள்ள 'கொலராடோ' (Colorado) மாநிலத்தில் அமைந்த 'டென்வெர் விமான நிலையத்தில்' (Denver Airport) இருந்து எமது தேடலை ஆரம்பிக்கலாம். நீங்களும் ஒருதரம் ஆசுவாசமாக மூச்சை விட்டுக் கொண்டு வாசிப்பதற்குத் தயாராகுங்கள்........!

சாதாரணமாகப் பார்த்தால் பயணிகள் சுறுசுறுப்பாகப் பயணத்தில் ஈடுபடும் ஒரு விமான நிலையம்தான் இது. ஆனால், அந்தப் பயணிகள் எவருக்கும் தெரியாமல் அங்கே அமைதியாக ஒரு விசயம் நடந்து கொண்டிருக்கிறது. பின்னர் எப்படியோ, இப்படி ஒன்று நடப்பது மெது மெதுவாக கசியத் தொடங்கியதும்தான் மீடியாக்களும் மக்களும் பயத்தில் விழித்துக் கொண்டனர். ஐக்கிய அமெரிக்கப் (USA) பெரு நிலத்தில், நட்ட நடுவே அமைந்தது இந்த டென்வெர் விமான நிலையம். விமான நிலையத்துக்குக் கீழே, மிக ஆழத்தில் பலர் தங்கியிருக்கக் கூடிய கட்டடங்கள், அமெரிக்க அரசினாலேயே அமைக்கப்படுகின்றன. அப்படி அமைக்கப்படும் சுரங்க கட்டடத்தின் நீள அகலம் எட்டுச் சதுரக் கிலோ மீட்டருக்கும் அதிகம். இவ்வளவு மிகப்பெரிய பிரமாண்டமான நிலக் கீழ் கட்டடங்கள், மிக ஆழத்தில் அதுவும் ஒரு விமான நிலையத்திற்கும் கீழே கட்டப்படுவதன் காரணம் என்ன?

இந்த நிலக் கீழ் கட்டடங்கள் எந்த ஒரு அழிவுகளினாலும் பாதிக்கப்பட முடியாதவாறு மிகமிகப் பலம் வாய்ந்த முறையில், நவீனமாக அமைக்கப்படுகின்றன. இந்தக் கட்டடங்கள் அமைக்கப்படுவது பற்றி எந்த தகவலும் வெளியே தெரியாமல் மிக இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. பாதுகாப்பென்றால், எப்படிப்பட்ட பாதுகாப்பென்று நினைக்கிறீர்கள்? அமெரிக்க இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு இதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டடம் அமைப்பவர்களிடம் இது பற்றிக் கேட்டால் கிடைக்கும் பதில் மௌனம் மட்டும்தான்.

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இதை ஆராய்ந்து பார்த்தால், பலமான பாதுகாப்புகளுடன் கட்டப்படும் இந்தக் கட்டடங்கள் உலகம் அழியும்போது, பலர் பாதுகாப்பாக வாழும்படி அமைக்கப்படுகிறது எனத் தெரிய வருகிறது. அதாவது ஒரு நட்சத்திர விடுதியின் வசதிகளுடன் கூடிய பல அறைகளுடன் இது அமைக்கப்படுகிறது. இதை யார் அமைக்கிறார்கள்? எதற்கு அமைக்கிறார்கள் என்ற எந்தக் கேள்விக்கும் அங்கு யாரும் பதில் சொல்லத் தயாரில்லை. எல்லாமே மர்மங்களாக இருக்கின்றன.

கட்டடம் கட்டப்படும் இடத்தில், 'New World Airport Commission' என்னும் ஸ்தாபனத்தால் கட்டடம் கட்டப்படுகிறது என்று எழுதப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஸ்தாபனம் பற்றி ஆராய்ந்தால், அப்படி ஒரு ஸ்தாபனம் அமெரிக்காவில் சட்டரீதியாக, எங்குமே பதிவு செய்யப்படவில்லை. அந்தக் கல்வெட்டில் உள்ள சின்னமும், 'நியூ வேர்ல்ட் ஆர்டர்' (New World Order) என்னும் பெயரும் எமக்கு முன்னரே பரீட்சயமானதால், பல உண்மைகளையும், பயங்கரங்களையும் அவை சொல்லாமல் சொல்ல ஆரம்பித்திருக்கின்றன.

Photo%209.jpg

"அட! அவர்களா நீங்கள்?" என்ற ஆச்சரியத்துடன் இதை ஆய்வுக்குட்படுத்தியபோது, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்த விமான நிலையம் ஒன்றும் மிக முக்கியமான விமான நிலையமோ அல்லது கொலராடோ ஒரு முக்கிய மாநிலமோ கிடையாது. ஆனால் இந்த விமான நிலையத்துக்கு மிக அருகில், சமீபமாகப் பலர் வீடுகளை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்று பார்த்தால் ஒட்டு மொத்த தலையே சுற்றும் போல் உள்ளது. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் என்று நீங்கள் யார் யாரை நினைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் அங்கே வீடுகளை வாங்கியிருக்கின்றனர். யார் யார் வாங்கியுள்ளனர் என்ற பெயர்கள் கூட எனக்குத் தெரிந்திருந்தாலும், நான் அவற்றை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவில்லை. உலகின் பணக்காரர்கள் எல்லோரும், ஒரு பிரபலமே இல்லாத சாதாரண இடத்தில் வீடுகள் வாங்கியிருக்கிறார்கள். யாருக்கும் தெரியாமல், மிகமிக இரகசியமாக.

சொல்லி வைத்தது போல எல்லாப் பணக்காரர்களும் ஏன் டென்வெர் விமான நிலையத்துக்கு அருகில் வீடுகள் வாங்குகிறார்கள்? ஏன் விமான நிலையத்துக்குக் கீழே, நிலக் கீழ் சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன? உலகம் அழியும் நிலை தோன்றினால் அதிலிருந்து காப்பாற்றப்பட ஒரு சிலர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுவார்களா? அந்த ஒரு சிலரில் நானோ, நீங்களோ இல்லாமல் அதிகாரத்தில் உள்ளவர்களும், உலகக் கோடீஸ்வரர்களும் மட்டும்தான் காப்பாற்றப்படுவார்களா?

இந்தக் கேள்விகளின் அடிப்படையிலேயே, சமீபத்தில் வெளிவந்த '2012' என்னும் ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தை ஒரு 'ஆக்ஷன் த்ரில்லர்' என்னும் வகையிலேயே நாம் பார்த்தோம். ஆனால், ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகள் பற்றி விரிவாகப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டோம். அந்தப் படம் எடுக்கப்பட்டதே, உலகம் அழியுமானால், அரசியலில் உள்ள முக்கிய தலைவர்களும், கோடீஸ்வரர்களும், அதியுயர் அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் மட்டுமே அந்த அழிவில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதை மையமாக வைத்துத்தான். முடிந்தால் அந்தப் படத்தை ஒரு முறை மீண்டும் பாருங்கள்.

Photo%2010.jpg

உலக அழிவு பற்றிய பயத்தினால், நாம் இப்படி எல்லாம் அவர்களைப் பற்றி அபாண்டமாகச் சந்தேகப்படுகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். அது அப்படி இல்லை என்று பதில் சொல்வதற்கு நான், டென்வெர் விமான நிலையத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களைக் காட்ட மீண்டும் உங்களை அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

மனிதனால் செய்யப்படும் தொலைதூரப் பயணங்களில் ஆபத்தானது என்று கருதப்படுவது விமானப் பயணம்தான். பிரயாணிகள் பயணம் செல்லும் விமான நிலையங்கள் உலகெங்குமே அழகானவையாகவும், மனதுக்கு உகந்தவையாகவுமே கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த டென்வெர் விமான நிலையம் எப்படிக் காட்சியளிக்கிறது தெரியுமா? விமான நிலையச் சுவர்களில் விசித்திரமாக, மிகப் பிரமாண்டமாக சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அந்தச் சித்திரங்கள் அனைத்தும் சொல்வது வேறெதைப் பற்றியுமல்ல, உலக அழிவைப் பற்றித்தான்.

விமான நிலையத்துக்குக் கீழே உலக அழிவில் இருந்து தப்பிக் கொள்ளப் பாதுகாப்பான இடம். மேலே உலக அழிவைச் சொல்லும் சித்திரங்கள். கீழே கட்டப்படுவது வெளியே தெரியவராது என்ற நினைப்பில், குறியீடாக இந்த உலக அழிவு அங்கு சித்திரமாக வையப்பட்டிருக்கின்றது. எந்த ஒரு விமான நிலையத்திலாவது இறந்த உடல்கள், சவப்பெட்டிகள் மனித அவலங்கள் எனச் சித்திரங்கள்வரைவார்களாஆனால் டென்வெர் விமான நிலையத்தில் வரைந்திருக்கிறார்கள் அந்தச் சித்திரங்களில் சிலவற்றை நீங்களே பாருங்கள்

அதிகம் எதற்கு எந்த விமான நிலையத்திலாவது பயணப் பெட்டியினுள் இருந்து சாத்தான் வெளிப்படுவது போல சிலை செய்து வைத்திருப்பர்களாஅதுவும்இருக்கிறது அங்கே

எல்லாம் சரிஉலகம் அழிவது என்றால் மாயன் இல்லாமல் ஒரு உலகஅழிவா. ]அதுவும் அங்கே காணப்படுகிறது மாயன் இனத்துச் சிறுமி ஒருத்தி மாயன்களின் சுவர் ஓவியத்தின் பகுதியொன்றைத் தன் கைகளில் ஏந்தியபடி இருப்பதும் அந்தச் சித்திரங்களில் காணப்படுகிறது இது மேலதிக பயத்தை எமக்குஏற்படுத்துகிறது

இங்குமா மாயன் என்று ஆச்சரியம் வரவில்லையா

இந்தச் சித்திரங்கள் பற்றி நிறையவே விமர்சித்துக் கொண்டு போகலாம் அவ்வளவு உலக அழிவு பற்றிய விபரங்கள் அடங்கிய சித்திரங்கள் அங்கு வரையப்பட்டிருக்கின்றன ஒரு விமான நிலையத்தில் அப்படிச் சித்திரங்கள்வரையப்பட்டிருப்பது அசாதாரணமானவை ஆனால் ஏன்?

இந்த டென்வெர் விமான நிலையத்தின் நிலத்துக்குக் கீழே அமைக்கப்பட்ட சுரங்க நகரைப் போல அமெரிக்காவில் மட்டும் மொத்தமாக பதினெட்டு இடங்களில் நிலக் கீழ்ச் சுரங்கங்கள் இராணுவப் பாதுகாப்புகளுடன் இரகசியமாக அமைக்கப்பட்டு வருகின்றனஅத்துடன் உலகெங்கும் பல இடங்களிலும் மிக இரகசியமாக பல கட்டடங்கள் இப்படி அமைக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக ஆப்ரிக்காவில் மிகப்பெரிய நிலக் கீழ் நகரம் அமைக்கப்பட்டு வருகிறது இவையெல்லாம் எதற்குஇவ்வளவு பணச் செலவுகளுடன் காரணமில்லாமல் யாரும் இவற்றைஅமைப்பார்களா

Photo%2019.jpg

Photo%2020.jpg

மேலே படங்களில் உள்ளவை அமெரிக்காவின் பல இடங்களில் அமைக்கப்படும் நிலக் கீழ் நகரங்கள். வெளியே எதுவுமே தெரியாத அளவுக்கு அமைதியாகக் காணப்படும் இவை உள்ளே மிகப் பிரமாண்டமானவை

அமெரிக்கா என்னும் நாட்டில் அநேக இரகசியங்கள் மீடியாக்களினால்வெகு சுலபமாக வெளிவந்து விடுகின்றனஆனால் அமெரிக்கா தவிர்த்து சீனா ரஷ்யா போன்ற பிற நாடுகளில் அப்படி அல்லஅங்கு என்ன என்ன கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன என்பது யாருக்குமே தெரியாத இரகசியங்கள் இதனாலேயே நான் முன்னர்சொன்னஎன்னும் ஆங்கிலப் படத்தின் இறுதியில் கூடஉலக உயர் சக்திகள்சீனாவில் இணைவதாகக் காட்டியிருந்தார்கள்

இவை மட்டுமல்ல எம்மை ஆச்சரியப்படுத்துபவைஇதைவிட இன்னுமொன்றும் உண்டுஅதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் இதுவும் தெரிந்து விட்டால்உலகம் அழியுமா என்னும் சந்தேகம் வருவதற்குப் பதில் அழியும்என்னும் நம்பிக்கையே உங்களுக்கு ஏற்பட்டுவிடும் இதைத் தெரிந்து கொள்ள ஐரோப்பா ஸ்காண்டினேவியா நோக்கி எம் பார்வையைத் திருப்ப வேண்டும்

நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக வட துருவத்தில் ஸ்வால்பார்ட் எனும் தீவு ஒன்று உண்டு எங்கு பார்த்தாலும் மலைகளும்அவற்றில் நிறைந்திருக்கும் பனிகளுமாகவே அந்த இடம் எப்போதுமே காட்சியளிக்கும் இந்த இடமும் டென்வெர் விமான நிலையத்தைப் போல மிக முக்கிய இடமாக இப்போது இருக்கிறதுஅது என்ன தெரியுமா..

சொல்கிறேன்

உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள் செடிகள்கொடிகள்ஆகியவற்றின் விதைகளும் கிழங்குகளும்தண்டுகளும் கோடிக்கணக்கில் டன் டன்னாக அங்கு பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது ஒன்பது மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு மலைகளைக் குடைந்து நிலத்தடிச்சுரங்கமாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் இந்த விதைகள் பாதுகாக்கப்படுகின்றனஉலகம் அழிந்தாலும்இவற்றிற்கு எந்தப் பாதிப்பும் வரமுடியாத அமைப்பில்.கட்டடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றனமாதம் ஒன்றுக்கு ஒன்றரை இலட்சம் செலவு செய்து குளிர்பதனப்படுத்தப்பட்டு இவை பாதுகாக்கப்படுகின்றன

]

Photo%2022.jpg

உலகத்தில் அழிவு ஏற்படும் பட்சத்தில்அதன் பின்னர் உருவாகும் மாற்று உலகத்தில் அழிவிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மீண்டும் மரம் செடிகளை உற்பத்தி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது உண்ண உணவின்றிப் பல நாடுகளில் மக்கள் உயிர்களை விட்டுக் கொண்டிருக்கும்போது இல்லாத அழிவுஒன்றை எதிர்பார்த்து இவ்வளவு செலவில் இப்படி ஒரு பாதுகாப்பு வைப்பகம்எதற்காக

Photo%2023.jpg

Photo%2024.jpg

இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏன் வட துருவத்தில் செய்யப்பட வேண்டும்பூமியின் வடதென் துருவத்திற்கான அச்சு தனது தடத்திலிருந்து இடம் மாறினால்தற்சமயம் வெப்ப வலயப் பிரதேசமாக இருக்கும் இடங்கள் குளிர்ப் பிரதேசங்களாகவும்குளிர்ப் பிரதேசங்கள் வெப்ப வலயப் பிரதேசங்களாகவும் மாறும் ஆபத்து உண்டு என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஏனோ ஞாபகத்திற்கு]வரவில்லையா

Photo%2025%20.jpg

Photo%2026.jpg

உலகம் அழியும் ஒரு நிலை ஏற்படுமாயின் மரங்களைப் பாதுகாக்கும் இடம் வெப்ப வலயப் பிரதேசமாக மாறி அங்கு மரங்களை உற்பத்தி செய்யக் கூடியதாக மாறலாம் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் சில மனிதர்களால் வெப்ப வலயமாக மாறியிருக்கும் இந்த நோர்வே பகுதியில் மீண்டும் ஒரு மனித நாகரீகத்தை உருவாக்கும் திட்டம் யாராலும் உருவாக்கப்பட்டதா

மனிதர்கள் அங்கே மரங்கள் இங்கே என்ற இந்த புத்திசாலித்தனமான செயல்களை எல்லாம் இவர்களுக்குச் செய்வதற்கு கட்டளையிட்டவர்கள் யார் இவையெல்லாவற்றையும் யார் அமைக்கிறார்கள் உலகப் பணக்காரர்களையும் அரசியல்வாதிகளையும்பெரும் சக்தி வாய்ந்தவர்களையும் எந்த சக்தி ஒன்றிணைக்கிறது நிச்சயமாக இதை ஒரு பலமான சக்தி இருந்து கொண்டுதான் இணைக்க வேண்டும் அல்லவா

அவர்கள் யார்என்பதையும் அவர்களால் இன்னும் என்ன என்ன சதிவலைகள் பின்னப்படுகின்றன என்பதையும் அடுத்ததொடரில் பார்ப்போமா

http://uyirmmai.com/...s.aspx?cid=5206

Link to comment
Share on other sites

செய்யது பீடியும் இந்தியன் ஆமியும்

bunker.jpg

அது 1988 ஆம் ஆண்டின் ஒரு சனிக்கிழமை

"இண்டைக்குப் பள்ளிக்கூடமில்லை, சுண்ணாகம் லைபிறறிக்குப் போனால் தினத்தந்தியில் இருந்து பொம்மை, குமுதம் எல்லாம் வாசிக்கலாம்" என் உள்மனது துரத்த, அப்பா தன் மதிய உணவை உண்ட களைப்பில் கட்டிலில் மதிய நேரத்துக் கோழித்தூக்கம் போடும் நேரம் பார்த்து அவரின் பி.எஸ்.ஏ சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்தம் கேட்காதவாறு மிதிக்கிறேன். அம்மா முத்துலிங்க மாமா வீட்டுப் பக்கம் போயிருப்பா அவ இருந்தால் சுண்ணாகம் பக்கம் எல்லாம் போக விடமாட்டார் என்ற அவநம்பிக்கை வேறு. அம்மா பயப்பிடுவதில் காரணம் இல்லாமல் இல்லை.

1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமிக்கும் புலிகளுக்கும் சண்டை மூண்ட பிறகு ஒவ்வொரு நாளும் கே.கே.எஸ் றோட்டுப் பக்கம் போறதே பெருங்காரியம் தான். எப்ப என்ன நடக்குமெண்டு தெரியாது. திடீரெண்டு சுத்தி வளைப்பு இருக்கும், றோட்டை மறிச்சு எல்லாரையும் நிக்க வச்சு விசாரணை நடக்கும், அதில் எத்தனை பேர் வீட்டுப் பக்கம் திரும்பி வருவினம் எண்டும் சொல்ல ஏலாது. அரைக்காற்சட்டை போட்ட என் வயசுக்க்காரருக்கு அப்படி ஒன்றும் இதுவரை பெரிய சிக்கல் இல்லை என்றாலும் அம்மாவுக்கு நான் வளந்த பெடியன்.

போன கிழமை இப்பிடித்தான் வழக்கம்போல சித்தப்பாவும், சிவலிங்கமாமா ஆட்களும் கடையைத் திறக்க யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போகேக்கை தாவடிச்சந்தியில் இருக்கிற சென்றி பொயின்ற் (காவலரண்) இல் வச்சி எல்லாரும் சப்பல் அடியாம். நோவெண்ணைச் சுப்பையாவுக்குத் தான் மவுசு, அவர் கொடுத்த நோவு எண்ணையை உடம்பு முழுக்கத் தடவி வைத்தியம் நடக்குது. எல்லாரும் இன்னும் கடைப்பக்கம் போகேல்லை. திடீரெண்டு எங்காவது ஆமிக்கு பெடியள் கிரனேட் எறிஞ்சு அசம்பாவிதம் நடந்தால் அகப்படுகிற சனத்துக்குத் தான் சங்கு ஊதுப்படும். இந்த விஷயத்தில ஆண், பெண், வயது வேறுபாடில்லை.

இப்பிடி ஒருக்கால் இணுவில் வெங்காயச் சங்கத்தடியில் பாண் பெட்டிக்குள் குண்டை வச்சு ஆமியின் காவலரணுக்குப் பக்கத்தில் வச்சுட்டுப் போய் அது வெடிச்சு ஆமிக்காரர் செத்தாப்பிறகு அந்தப் பக்கம் சரமாரியான துப்பாக்கிச் சூடு. எல்லாம் ஆருக்கு? போறவாற சனத்துக்குத் தான்.

அதிலும் குர்க்காக்காரர் பொல்லாதவை. குள்ளமான ஆமிக்காரர். இந்தியவையும் சீனாவையும் பிரிக்கிற எல்லைப்பிரதேசத்துக்காரர் இவை எண்டு அப்பா சொன்னவர். சீக்கிய ஆமிக்காரரைக் கண்டாலும் எனக்குச் சீவன் போகாத குறை தான். பள்ளிக்கூடம் போகும் போது எதிரில் ஏதாவது சென்றிப்பொயின்ற் இருந்தால் அந்தப் பக்கமே பார்க்காமல் நிலத்தைப் பார்த்துக் கொண்டு கிறுகிறுவெண்டு கடந்து போயிடுவேன். மாலை ஆறுமணிக்குள்ளேயே ஊரே அடங்கிப்போய்விடும்.

சரி, சைக்கிளை எடுத்தாச்சு இனிக் கோண்டாவிலில் இருந்து சுண்ணாகம் காண பி.எஸ்.ஏ வாகனத்தில் என் சவாரி. புத்தகம் படிக்கிற உருசியில் பயம் தெளிஞ்சுட்டுது. ஆனாலும் அஞ்சு மணிக்குள்ள திரும்பி வரவேணும் எண்டு மனம் எச்சரிக்கை மணியைப் போட்டது. மருதனார் மடத்தடியில் இராமநாதன் கொலிஜ் இற்குப் பக்கமா பெரிய ஒரு காவலரண் இருக்கு, அந்தச் சனியனைக் கடந்து போனால் நிம்மதி. ஆகா, அதையும் கடந்தாச்சு, சுண்ணாகம் லைபிரரிக்கு வந்தாச்சு. இரண்டு மணித்தியாலம் எப்பிடிப்போனதெண்டே தெரியேல்லை. புதுசா வந்த புத்தகங்களில் தேவையானதை மட்டும் படிச்சுட்டு லைபிரரி மணிக்கூட்டைப் பார்க்கிறேன், நாலரை காட்டுது. மீண்டும் சைக்கிளை மிதிக்கிறேன்.

யாழ்ப்பாணத்துச் சோழகக் காற்று பி.எஸ்.ஏ.சைக்கிளை ஆட்டிப் பார்த்தது. அப்பா 1950 களில் வாங்கின சைக்கிளாம். இன்னும் அது தன் ஒறிஜினல் ஸ்டீல் என்ற தற்பெருமையோடு முப்பது வருஷத்துக்கு மேல் உழைக்குது. இப்ப வாற சைக்கிளெல்லாம் அமலா போல மெலிஞ்சு போயிருக்க, அப்பாவின் சைக்கிளோ கந்தசுவாமி கோயில் கிடா வாகனம் மாதிரி பெரிய சைஸ்.

வாசிச்ச புத்தகங்களை இரைமீட்டுக் கொண்டு வருகிறேன், திரும்பவும் மருதனார்மடச் சந்தி, திரும்பவும் இந்தக் காவலரணைக் கடந்து போகோணும் எண்ட துடிப்பு. அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காதே என்று மனம் ஏவல் விட றோட்டின் நேர்ப்பக்கம் பார்த்துக் கண்கள் நோக்க,

"ஏய்" என்றொரு குரல் காவலரண் பக்கமாக வருகிறது. இண்டைக்கு நான் துலைஞ்சன், கை காலெல்லாம் கறண்ட் ஏத்தினமாதிரி நடுங்க, பி.எஸ்.ஏ சைக்கிளின் பிறேக் கட்டை அழுத்தப்படுகிறது. காவலரணில் இருந்து ஒரு சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஆமிக்காரன். ஆளைப்பார்த்தால் ரண்டு பனை உயரம். தலைக்குத் தொப்பி, தொப்பிக்குள்ள கத்தி எல்லாம் இருக்குமாம். சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு பவ்யமாக

"யெஸ் சேர்" என்று சொல்கிறேன்.

உள்ளுக்குள் இரத்த நாளங்கள் எல்லாம் என்னைச் சோதித்துப் பார்க்குது.

தன் கையில் இருந்த ஒரு பீடிச்சரையைக் காட்டி ஒரு பீடிக்கட்டு வாங்கி வருமாறு சைகை மொழியில் சொல்கிறான் கொஞ்சம் ஹிந்தியும் வேறு. எனக்கு "ஏக் துஜே கேலியே"ஐ விட ஹிந்தி மொழி தெரியாதே. ஆனாலும் அவனுடைய சைகை மொழியை வைத்துக் கொண்டு

"ஒகே சேர்" என்று சொல்லிச் சைக்கிளை உழக்க,

திரும்பவும் "ஏய்"

இதென்னடா கோதாரி என்று திரும்பவும் அசட்டுச் சிரிப்போடு அவனைப் பார்க்க, பத்து ரூபா நோட்டை நீட்டுகிறான். வாங்கிக் கொண்டு மருதனார் மடப்பக்கம் உள்ள தேத்தண்ணிக் கடைக்குப் போய்

"அண்ணை ஒரு பீடிக்கட்டு தாங்கோ"

கடைக்காரர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்துக் கொண்டே பத்து ரூபாத்தாளை வாங்கிக் கொண்டு சில்லறையைப் பொறுக்குகிறார். இந்த வயசில தறுதலை பீடியெல்லாம் பிடிக்குதோ என்ற மாதிரியான ஒரு பார்வை அது. ஆர்.பி.ஜி பீடிக்கட்டு என் கையில். ஆர்.பி.ஜி பீடிகள் உள்ளூர்த்தயாரிப்பு, வீரகேசரியில் விளம்பரம் எல்லாம் பார்த்ததோட சரி, இப்பதான் அதைத் தடவிப்பார்க்க ஒரு வாய்ப்பு. அம்மா, இதையெல்லாம் கண்டால் கிணத்தில விழுந்துடும் மனுசி. தவமணி ரீச்சர்ர மேன் பீடிக்கட்டோட இருக்கிறது பெருமையா என்ன? எனக்கோ இந்த நூற்றாண்டில் கிட்டிய அவமானம் போன்றதொரு நிலை.

காவலரணுக்கு வந்து காத்திருந்த சீக்கியனிடம் கொடுக்கிறேன். ஆர்.பி.ஜி பீடிக் கட்டைச் சுழற்றிச் சுழற்றிப் பார்க்கிறான். சரி என் வேலை முடிந்தது என்ற நினைப்பில் சைக்கிளில் ஏற

"ஏய்" மீண்டும் அவன் தான்.

"யெஸ் சேர்"

beedi.jpg

அந்த பீடிக்கட்டை வேண்டாம் என்ற தோரணையில் தலையை ஆட்டிவிட்டு மீண்டும் தன் கையில் இருந்த பீடிக்கட்டுச் சரையைக் காட்டுகிறான். அதில் தொப்பியோடு ஒரு முஸ்லீமின் படம் போட்டு "செய்யது பீடி" என்று போட்டிருக்கு. இப்ப விளங்கீட்டுது இவன் செய்யது பீடி வாங்கித் தரச் சொல்லிக் கேட்கிறான் என்று புரிந்து கொண்டு,

"ஒகே சேர்"

ஆர்.பி.ஜி பீடிக்கட்டு இப்போது மீண்டும் என் கையில். பழையபடி மருதனார் மடச் சந்தித் தேத்தண்ணிக் கடை. கடைக்காரர் என்னைக் கண்டு திகைத்திருக்கக் கூடும். படுபாவி அதுக்குள்ள ஒரு கட்டு பீடியைக் குடிச்சு முடிச்சிட்டானோ என்று.

"அண்ணை, இது எனக்கில்லை, பக்கத்து சென்றி பொயின்ற் ஆமிக்கு, செய்யது பீடி வேணுமாம், இருக்கோ அண்ணை"

இது நான்.

"உதைத் தாரும் தம்பி, நாங்கள் செய்யது பீடி விக்கிறேல்ல, சுண்ணாகம் போய்ப் பெரிய கடையளில் விசாரிச்சுப் பாரும்" என்றவாறே பீடிக்காசைத் தந்து பீடிக்கட்டை வாங்குகிறார்.

சைக்கிளைத் திருப்புகிறேன். பேசாமல் உடுவில் பக்கமாகக் கள்ளப்பாதையால் வீடு போய்ச் சேர்வமோ,ஆனால் அந்தச் சீக்கியன் எங்காவது அடையாளம் கண்டானென்றால் துலைச்சுப் போடுவானே, அவன்ர காசு வேற கையில். வேறு வழியில்லை என்று மனதைச் சமாதானப்படுத்தி,சுன்ணாகம் பக்கம் போய் நியூமார்க்கற்றில் இருந்த கடையொன்றில் செய்யது பீடியைக் கண்டு வாங்கிக் கொண்டு, மீண்டும் சோளகக் காத்தோடு போட்டி போட்டு மருதனார்மடம் காவலரண் பக்கம் வந்து அந்தச் சீக்கியன் ஆமியிடம் கொடுக்கிறேன்.

"கோ (go)" என்று சைகை செய்கிறான். (உதவி செய்தால் தங்க் யூ சொல்லவேணும் இந்த நேரம் பார்த்து அம்மா சொன்னது வளையம் வளையமாக நினைப்பில்)

ஒருமாதிரி வீடு வந்து சேர்ந்தால் அப்பா வீட்டுக்குப் பின்புறம் ஆட்டுக்குக் குழை வெட்டிக் கொண்டிருந்தார். சத்தமில்லாமல் கிணற்றடியில் முகம் கழுவி,சாமி கும்பிட்டுட்டுப் பாடப்புத்தகத்தை விரிக்கிறேன்,ஊரடங்கிய இரவில்

00000000000000000000000000000000000000000000000000000000

அதே 1988 ஆம் ஆண்டு இன்னொரு நாள் ஆனால் இது பாடசாலை நாளின் காலை நேரம்

பள்ளிக்கூடத்துக்கு வெள்ளனவே வந்தாச்சு, கோண்டாவிலில் இருந்து கொக்குவில் காண நடந்து வரவேணும். சண்டை நேரம் என்பதால் காலையில் நேரத்துக்கே ஆரம்பிச்சு இரண்டு மணிக்கெல்லாம் முடிந்துவிடும் பள்ளி.

எங்கட கொக்குவில் இந்துவிலும் இன்னமும் ஆமிக்காறர் காவலரண் வச்சிருக்கினம். பள்ளிக்கூடம் பக்கம் இயங்கும், ஆமிக்காரர் தங்கடபாட்டிலை காவலில் இருப்பினம். ஆனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எல்லாரும் துலைஞ்சம் எண்டு கணக்கு சேர் ஒருக்கால் சன்னமாகச் சொன்னவர்.

இன்னமும் பள்ளிக்கூட பிறேயர் நடக்கேல்லை, மாணவர்களும் வரவில்லை. என்னைப்போல ஒன்றிரண்டு பேர் தான். இணுவிலில் இருந்து சுதாவும் வந்து விட்டான். முதலாம் மாடியில் இருந்து மூண்டாம் மாடிவரை படிக்கட்டில் ஏறி ஓடி விளையாடிப்பார்ப்போம் என்ற அல்ப ஆசை தொற்றிக் கொள்ள நானும் சுதாவும் மேல் மாடி காண ஓடுகிறோம் படிக்காட்டுக்களால். வளைந்து நெளிந்த படிக்கட்டுப் பாதையால் ஓடுவது பெரிய சவால். கொஞ்சம் வழுக்கினாலேயே முப்பத்திரண்டு பல்லுக்கும் உத்தரவாதமில்லை. ஆனாலும் வயசு விடாதே. என்னைத் தாண்டி ஓடுகிறான் சுதா.

இரடா வாறன் என்று சொல்லிக் கொண்டே நானும் அவனை முந்துவதற்கு ஓடி மூன்றாம் மாடியை எட்டியாச்சு மேல் தளத்தில் அவன் ஓட நான் முந்த மொளார் என்று சறுக்கி விழுகிறேன். அம்மா என்று சத்தம் போட்டுக் கொண்டே குந்தி இருந்து முழங்காலைத் தடவுகிறேன். சீமெந்துப் பூச்சில் மறைந்த முழங்கால் தோலை மீறி இரத்தம் கொப்பளிக்கிறது. சுண்ணாம்போடு தடவிப்போட வெத்திலையைக் குதப்பிய அம்மம்மாவின் சொண்டு மாதிரிப் பீறுடுகிறது இரத்தம். மேல் தளத்தில் காவலில் நின்ற இந்தியன் ஆமிக்காறர் ஒருத்தர் வாறார். இப்போது காலில் ஏற்பட்ட காயத்தை விட ஆமிக்காறர் வந்து என் கன்னத்தைப் பதம்பார்க்கப் போறாரோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது. ஆள் நல்ல கறுவலான நெட்டை உருவம், ஹிந்திக்காறனா இருக்காது.

கிட்டவந்த அந்த ஆமிக்காறன் என் காலைத் தன் கையால் திருப்பிப்போட்டுப் பார்த்து விட்டு தன் யூனிபோர்ம் பொக்கற்றில் இருந்து ஒரு நாலைந்து கிழிசலான துண்டுகளை எடுக்கிறார். தன் நாக்கில் தடவி விட்டு ஒவ்வொன்றாகப் புண் இருக்கும் பகுதியில் ஒட்டுகிறார். அந்தத்துண்டுகள் அதே முஸ்லீம்காரர் உருவம் பொதிந்த "செய்யது பீடி"கட்டின் பேப்பர் என்று தெரிகிறது.

செய்யது பீடிக் கட்டின் பேப்பரைத் தன் நாக்கித் தடவி எச்சில் ஆக்கியபின் அதைச் சிராய்ப்புக்காயத்துக்கு ஒட்டிக் கொண்டே

"வாட் இஸ் யுவர் நேம்"

"பிரபாகர் சேர்"

எனக்கும் அவரின் பெயரைக் கேட்க ஆசை,பயம் தெளிந்துவிட்டது

"வட் இஸ் யுவர் நேம் சேர்"

"சரவணன்"

யாவும் உண்மையே

http://kanapraba.blo...og-post_24.html

Link to comment
Share on other sites

இதுதான் மனிதம்

அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்க முடியாத பேச்சாக அமைந்தது..

அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார் “இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்று எப்படிச் சொல்ல முடியும்? சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்த எத்தனையோ வேலைகள் என் மகன் ஷாயாவால் முடிவதில்லை.

அவனால் சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவை தான் அதிகம். செய்ய முடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்ய முடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன் படைப்பில் நிறைவு உள்ளது என்பதை எப்படி நம்மால் கூற முடியும்?” அவர் உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார்.

அத்தனை பேரிடமும் அதற்கு பதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்த மனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாக இருந்தார்கள். அந்தத் தந்தை சொன்னார். “நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப் படைக்கும் இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும் மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறான்.

இது என் மகன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....” அவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார். ”ஒரு நாள் மதிய வேளையில் நானும் என் மகன் ஷாயாவும் ஒரு விளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்த மைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball) விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து என்னிடம் கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா?” எனக்கு என் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாட முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. அந்த சிறுவர்களோ மிகத் தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் கேட்கவே தயக்கமாக இருந்தாலும் அவர்களிடம் கேட்டுவைப்பதில் தவறில்லை என்று எண்ணினேன். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம் கேட்டேன். “என் மகனும் ஆட ஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக் கொள்வீர்களா?” அந்த சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்த சிறுவன் புரிந்து கொண்டான்.

தன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாக என்னிடம் சொன்னான். “நாங்கள் இப்போது எட்டாவது இன்னிங்க்ஸில் இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில் இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்” அதைக் கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த எனக்கு மனம் நிறைந்தது.

ஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையை மாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால் அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவை சேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத் தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. ஆனால் சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள்.

ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனை ஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப் பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும் ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின் அணிச் சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக் கொண்டான்.

பந்தெறிபவன் அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவே வீசினான். ஷாயாவும், அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தை அடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடு பந்தெறிபவன் காலடியில் வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால் ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும். ஆனால் அந்தப் பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச; ஷாயாவின் அணியினர் கத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...” ஷாயா இப்படியொரு நிலையை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம் திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான்.

முதல் தளத்தை அவன் அடைந்த போது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான். முதலில் பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது. ஒரு ரன் எடுத்து முடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப் பார்த்தவன் அந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடி வீசினான். மைதானத்தில் “ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடு” என்ற சத்தம் பலமாக எழுந்தது. ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலை தெறிக்க ஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள் எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது.. நான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட எனது கண்களில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது. இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும் போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர்.“அன்றைய தினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள்

. என் மகன் அது வரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகி விட்டது.” என்று கண்ணீர் மல்க,விம்மிய குரலில் சொல்லி முடித்தார் அந்தத் தந்தை அந்த சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள்.

அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம் காட்டிய அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனை வெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல. இது போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்த விளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச் செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்து அந்த அன்பு பிறந்தது தான் வியப்பு.

அது தான் மனிதம். இது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பான சிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும்.

அதுவே மனிதம். இந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால், வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம் முயற்சிப்போம்?

via fb

******************************************************************************************************************************************************************

5: வயதில் சிறகடித்து பறக்க நினைத்தேன் அம்மா சொன்னால் நீ பெண் பிள்ளை என்று .......

10: வயதில் சிறகடித்து பறக்க நினைத்தேன் அப்பா தடுத்தார் கூடாது என்று .......

15: வயதில் சிறகடித்து பறக்க நினைத்தேன் அண்ணன் தடுத்தான் வேண்டாம் என்று.........

20: வயதில் சிறகடித்து பறக்க நினைத்தேன் உறவுகள் தடுத்தது தப்பு என்று ........

25:வயதில் சிறகடித்து பறக்க நினைத்தேன் கணவன் கட்டின தாலி தடுத்தது ............

30:வயதில் சிறகடித்து பறக்க நினைத்தேன் பிள்ளையின் பாசம் தடுத்தது ............................

45:வயதில் சிறகடித்து பறக்க நினைத்தேன் வயது சொன்னது உன்னால் முடியாது என்று ............

சிறகிருந்தும் பறக்க முடியாமல் இன்று சிறகிழந்த பறவையாய் நான்

*****************************************************************************************************************

கவிஞர் வைரமுத்து TWITTER இல் தனது FOLLOWERS இன் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார் அதன் தொகுப்பு

1) மூன்றாம்உலகப்போரில்பிரச்சனைகள்மட்டும்சொல்லப்படுமாஅல்லதுதீர்வும்வருமா ?

வைரமுத்து: இந்த இதழ் முதல் தீர்வுகள் ஆரம்பிக்கின்றன

2) நீங்கள் மிகவும் ரசித்த ரஜினி அவர்களின் திரைப்படம் எது?

வைரமுத்து: அண்ணாமலை

3) தாங்கள்திரைத்துறையில்சாதிக்கஇனிஎதுவும்இருப்பவதாய்தெரியவில்லை.முழுநேரதமிழ்,

சமூகம்சார்ந்தபணிகளில்ஈடுபடும்எண்ணம்உள்ளதா?

வைரமுத்து: இலக்கியமும்தமிழ்ச்சமூகம்சார்ந்தபணிதான்; செயல்படவும்வருவேன்

:4) இப்போதையதமிழ்சினிமாவின்பாடல்கள்ரசிப்புத்திறனைமேம்படுத்தும்வண்ணம்

உள்ளதுஎனநினைக்கிறீர்களா?

வைரமுத்து: இன்னும்சிறப்பாகஇருக்கலாம்என்றுநினைக்கிறேன்

5)விஸ்வரூபம் மற்றும் கோச்சடையன் பாடல்கள் பற்றி?

வைரமுத்து: விஸ்வரூபம்நெருப்புப்பாடல்கள் , கோச்சடையான்மழைப்பாடல்கள்

:6)மதன்கார்க்கிஎழுதியதிரைப்பாடல்களில்உங்களுக்குப்பிடித்தவரிகள்?

வைரமுத்து: வைரஸ்இல்லாகணினி

7)ரகுமானின்குணநலன்களில், உங்களைகவர்ந்தஒன்றைபற்றிசொல்லுங்களேன்!

வைரமுத்து: கர்வம்இல்லாதபணிவு

8)உங்களின் படைப்புகளில் (திரையிசை தவிர்த்து) உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?

வைரமுத்து: கள்ளிக்காட்டு இதிகாசம்

:9) தாங்கள் விஸ்வரூபத்தில் எத்தனை பாடல்கள் எழுதி இருக்கிறீர்கள்?

வைரமுத்து : இதுவரை நான்கு பாடல்கள்

:10) திருக்குறளை குழந்தைகளுக்கு புரியும் விதத்தில் கதை வடிவத்தில் எழுதும்

யோசனை ஏதாவது இருக்கிறதா?

வைரமுத்து: கலைஞரின் குறளோவியம் படித்துக்காட்டுங்கள்

11)நீங்கள் உங்கள் முன்மாதிரியாக யாரை நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

வைரமுத்து: என்னைவிட வெற்றிபெற்றவர்களை

12)ஐயா! உங்களுக்குப் பிடித்த உங்களின் பாடல்?

வைரமுத்து: முதல் பாட்டு

13) நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களுக்கு பிடித்தது எது?

வைரமுத்து: பெய்யென்ப் பெய்யும் மழையில் 'சிறகாயணம்'

14) அய்யா தங்களுக்கு பிடித்த பொழுது போக்கு என்ன?

வைரமுத்து: வான் பார்ப்பது.

15) பாரதிராஜா+இளையராஜா+வைரமுத்து என்ற அற்புத இசைக்கூட்டணி போல் தற்போது?

வைரமுத்து: மணிரத்னம் - .ஆர். ரகுமான் - வைரமுத்து

16) 3ஆம் உலகப் போருக்காக நீங்கள் செய்த ஆய்வுகளை விடியோவாக பகிர்வீர்களா ?

வைரமுத்து: இதுவரை பதிவு செய்யவில்லை இனி பதிவு செய்யலாம் என்று ஆசை வருகிறது

17) ஐயா நான் திரைப் பாடல் ஆசிரியன். சில பாடல்களும் எழுதியுள்ளேன். என் போன்றவர்க்கு

சரியான திசைக் காட்ட ஏதாவது திட்டம் இருக்கிறதா?

வைரமுத்து: பாட்டுப்பட்டறை ஒன்று நிகழவிருக்கிறது. வந்தால் அறிவீர்கள்;

18) எங்கள் தலைவர் ரஜினி எப்படி உள்ளார்? கொச்சடையனுக்கு பாடல்கள் எழுதி விட்டர்களா?

வைரமுத்து: பழைய ரஜினியில் 90 விழுக்காடு வந்துவிட்டார். கோச்சடையானுக்கு 3 பாடல்கள்

முடிந்துவிட்டன.

19)எப்படி இருக்கிறீங்க ஐயா? பொண்மணி அம்மா நலமா?

: மிக நலம்

20)மீனவர் படுகொலை பற்றி ஒரு வெண்பா இரண்டே அடிகளில்?

வைரமுத்து: "தண்ணீரில் வாழ்கிறவன் சந்ததிகள் எந்நாளும் கண்ணீரில் சாகாமற் கா"

"21) முகில் இனங்கள் அலைகிறதேபாடல் வரிகளின் inspiration அல்லது behind the scenes

அனுபவங்கள்?

வைரமுத்து: சின்ன வயதில் பெளர்ணமியில் வெட்ட வெளியில் வான்பார்த்துப்படுத்திருந்த

நாட்களில் தோன்றியது அந்தக் கற்பனை

22) சமூகத்தை நல்வழிப் படுத்த ஏற்ற களம் கவிதையா? பாடலா?

வைரமுத்து: கவிதை சுமந்த பாடல்தான் நல்ல களம்

23) தங்களின் முதல் பாடலான “இது ஒரு பொன்மாலைப் பொழுது” வெளிவந்த

போது தங்களின் மனம் எப்படி உணர்ந்தது?

வைரமுத்து: 12 வருடக்கனவு பலித்தது என்ற பரவசம் இருந்தது

மிகுதி தொடரும்.......

Link to comment
Share on other sites

24) சிறந்தபாடலாசிரியரானநீங்கள்ஏன்இன்னும்திரைப்படங்களில்வசனகர்த்தாஆகவில்லை ..!

வைரமுத்து: நட்பு - துளசி -அன்றுபெய்தமழையில் - வண்ணக்கனவுகள் - என்வசனத்தில்வந்தபடங்களே. இப்போதுகாலம்இல்லைவசனத்திற்கும் - எனக்கும்

25) ஐயா!நீங்கள் எழுதிய பழைய பாடல்களில் உங்களுக்கு நினைவில் வரும் முதல் பாடல்?

வைரமுத்து: ஆயிரம்தாமரைமொட்டுக்களே

26) திரையிசைக்கவிஞர்கடந்துவசனகர்த்தாவாகவும்நட்புஉள்ளிட்டபடங்களுக்குப்பணியாற்றியுள்ளீர்கள்அவைமனநிறைவைஅளித்தஅனுபவங்களா?

வைரமுத்து: நட்பும்வண்ணக்கனவுகள்இரண்டுபடங்களும்ஓரளவுநிறைவுதந்தன

27)உங்கள்எழுத்தில்வட்டாரமொழிவழக்குசிறப்பாகஉள்ளது. நகரமயமாக்கலில்வட்டாரமொழிவழக்குசிதைந்துவருவதைதடுக்கஎன்னசெய்யலாம்

வைரமுத்து: வட்டாரவழக்குப்படைப்புகள்நிறையவெளிவரவேண்டும்; மாவட்டச்சொல்லகராதிகள்தொகுக்கப்படவேண்டும்

28) உங்கள்சமீபபடைப்புகள்கள்ளிகாட்டுஇதிகாசம்முதல்மூன்றாம்உலகப்போர்வரைஉரைநடையில்,தண்ணீர்தேசம்போல்ஒரு படைப்புமீண்டும்எப்பொழுது?

வைரமுத்து: மூன்றாம்உலகப்போர்முடியட்டும்

29)உங்கள்பாடல்களுக்குதிரையில்மென்மேலும்மெறுகேற்றகூடியவர்யார்???

வைரமுத்து: இயக்குநர்கள்நடிகர்கள்மற்றும்ஒளிப்பதிவாளர்கள்

30) நாம்தமிழன்என்றுபெருமைப்படும்படியாகஎந்தவிசயத்தைகூறுவீர்கள்?

வைரமுத்து: நம்தாய்மொழியானதமிழ்மொழியைஅதில்விளைந்ததிருக்குறளை

31) தற்போதுவெளிவரும்பாடல்கள்இசைக்குமடுமேமுக்கியத்துவம்கொடுக்கின்றனகவிவரிகளுக்குஇல்லைஇதைப்பற்றியஉங்கள்கருத்து ???

வைரமுத்து: நானும்கவலைப்படுகிறகருத்து; விரைவில்தீர்க்கப்படவேண்டியகவலை

32)படிக்கும்காலத்தில்மாணவர்கள்புத்தகம்வெளியிடுவதுபற்றிவிமர்சனம்எழுகின்றன,தங்கள்கருத்து?!

வைரமுத்து: படைப்பாற்றலுக்குவயதில்லை . இளமையில்தொடங்குகிறவன்விரைவில்வெற்றிபெறுகிறான்

33) என்பெயரேஎனக்குமறந்துபோனவனாந்தரத்திலே :) இந்தஇனியகவிதையின்ஒலிவடிவத்தைத்தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களிடம்கிடைக்குமா?

வைரமுத்து: விரைவில்எனதுஇணையத்தளத்தில்வெளியிடுவேன்

34) கலாம்ஜனாதிபதியாகஇருந்தபோதுஅவர்கையால்புத்தகம்வெளியிட்டீர்கள்.அதைஏன்பொதுஇடத்தில்நடத்தமுடியவில்லை?உங்கள்பெருமைக்காகவா?

வைரமுத்து: பாதுகாப்புக்காரணங்களுக்காக

35) thaangalukkum bharathi raja avarkalukkum idayeyaana natpu kurithu?

வைரமுத்து: மண்ணின்மைந்தர்கள்நாங்கள்; மண்ணுக்கும்வேருக்குமானநட்புஎங்களுடையது

36) ஷங்கரின்ஜென்டில்மேன்படத்தில்உசிலம்பட்டிபெண்குட்டிமுத்துப்பேச்சிஎன்றுநீங்கள்பாட்டுஎழுதிஅவருக்குஉதவியிருப்பீர்கள்.

வைரமுத்து: பெருமைப்படுத்துவதேநோக்கம். கிண்டல்அல்ல

37) வணக்கம். நானொருஈழமகள்.இன்றுஉறவுகளைசொந்தமண்ணில்இழந்துவிட்டு, மலேசியாவில்அகதியாய்.எம்வலிஆறுமா? அடிமைவாழ்வுதீருமா???

வைரமுத்து: ஈழச்சகோதரிகயே! உன்வலிதான்என்வலியும். நீநாட்டைஇழந்தவள்;நான்ஊரைஇழந்தவன். எந்தமண்ணில்விதைக்கப்பட்டாலும்வீரியவிதைமுளைத்தேதீரும்.யாதும் ஊரே யாவரும் கேளிர் வாழப் பழகு

38) அடிமுடியாய் ஆண்ட மண்ணில் இன்னும் அடிமைகளாய் வாழும் எம் இரத்த உறவுகளின் நிலையை மாற்றியமைக்க இன்றைய இலக்கிய சினிமா உலகம் உதவுமா?

வைரமுத்து: இன்னும் உதவ வேண்டும் இது போதாது....

நன்றி TWITTER நண்பர்கள்

Link to comment
Share on other sites

39) Sir,when ur coming to Malaysia?

வைரமுத்து: மேமாதம்வருவதற்குவாய்ப்புஉண்டு

40) கலைஞருடன் உங்கள் நெருக்கத்துக்கான காரணம்? அவர் தமிழையை மதிப்பது போல எனக்குத் தோன்றவில்லை!தாங்கள் இந்த கேள்விக்கு விடையளிக்க மாட்டீர்கள் எனத் தெரிந்தும் கேட்கிறேன்! :-)

வைரமுத்து:தமிழைமதிக்கும்கலைஞர்தமிழ்க்கவிஞர்களையும்பெரிதும்மதிக்கிறார்; நேசிக்கிறார். நட்போடுஅரசியலைக்கலக்காதீர்கள். என்றும்எங்கள்நட்புதொடரும்.

41) மூன்றாம் உலகப் போர் விவசாயத்தை காப்பாற்றுமா? எனக்கு இந்த உலகம் வெகு சீக்கிரத்தில் அழிவைக் காணப் போகிறது என்று தோன்றுகிறது!

வைரமுத்து: விவசாயத்தைக்காப்பாற்றத்தான்மூன்றாம்உலகப்போர்! உலகம்வாழும்; நம்பிக்கையைவாழவிடுங்கள்.

42) பணம்புகழ்தேடிசெல்பவர்களுக்குநீங்கள்சொல்வதுஎன்ன?

வைரமுத்து:தொடக்கத்தில்பணம்புகழைநீங்கள்தேடிச்செல்லவேண்டும்; பின்புபணமும்புகழும்உங்களைத்தேடிவரவேண்டும்

: 43) உங்கள்வாழ்நாள்லட்சியம்...???

வைரமுத்து: தமிழுக்குஉலகஅங்கீகாரம்

: 44) உங்கள்படைப்பில்உங்களையேநெகிழவைத்தவைஎதுவென்றுசொல்லமுடியுமா

வைரமுத்து: படைத்துக்கொண்டிருக்கும்மூன்றாம்உலகப்போர்; அதன்இறுதிஅத்தியாயத்தில்கதறிஅழுதுவிட்டேன்.

45) உங்களுக்குபிடித்ததமிழ்பெயர்?

வைரமுத்து: வண்டார்குழலி

46) கம்பனும்,வள்ளுவனும்மனப்பாடச்செய்யுளைவிட்டுவெளியேறி,மனதிலும்வாழ்க்கையிலும்கலப்பதுநிகழுமா?

வைரமுத்து: கல்விவார்த்தையாகாமல்வாழ்க்கையானால்நிகழும்

47) ஆங்கிலம்கலக்காதமிழைஅனைவரும்பேசஎன்னநடைமுறைமாற்றம்செய்யவேண்டும்?

வைரமுத்து: ஆங்கிலம்கலவாமல்பேசுவதுமதிப்புகுரியதுஎன்றுகருதப்படவேண்டும்

48) உங்களுடையமுதல்படைப்புஎந்தஇதழில்வந்தன ? எந்தவயதில் ??

வைரமுத்து: தேன்மழைபத்திரிகையில் 16; வயதில்

49) Hello sir,i am your great fan,Like to wish you for your quality lyrics with great thoughts,like to hear more & more from u :-))

வைரமுத்து: வாழ்த்துக்குநன்றி

50) உண்மைகாதல்என்றால்என்ன ?

வைரமுத்து: உடலைத்தாண்டிஉயிர்சேருவது.

51) என்னைப்பற்றிஎழுதிநீங்கள்அதிகபிரபலம்ஆனீர்கள்.உண்மைதானே... - காதல்

வைரமுத்து: நான்எழுதிநீங்களும்பிரபலமானதுஉண்மைதானே.

52) கவியரசுகண்ணதாசன்பற்றிஒருகவிதை ????

வைரமுத்து: இன்னொருதேசியகீதம்படித்துப்பாருங்கள்கவியரசர்பற்றி 2 தனிக்கவிதைகள்உண்டு

53) சொந்தஊரின்மீதானஉங்கள்காதலின்வெளிப்பாடுதான்,கருவாச்சிகாவியம்,மூன்றாம்உலகப்போர் " களம்தேனிமாவட்டம்..நான்சரியா???

வைரமுத்து: என்னைப்புரிந்துகொண்டீர்கள்; மிகச்சரி

54) கவிஞரேவணக்கம்,தண்ணீர்தேசத்தைதிரைப்படுத்தஎண்ணம்இருக்கிறதா ?

வைரமுத்து: சிலஇயக்குநர்களுக்குஅந்தஎண்ணம்இருக்கிறது.

55) மணிரத்னம் சாரின் படம் வெளியீடு எப்போது ஐயா?

வைரமுத்து: படப்பிடிப்பு தொடங்கப்போகிறது; ஜுன் மாதம் வெளிவரலாம்.

56) 6 லட்சம் தமிழ் வார்தைகளில் உங்கள் உயிரில் கலந்த 5 தமிழ் வார்த்தைகளை வரிசை படுத்தி தர முடியுமா இப்போது?

வைரமுத்து: 1. எழுத்து 2. சொல் 3. பொருள் 4. யாப்பு 5. அணி

57) ஐயா! கள்ளிகாட்டு இதிகாசம் , கருவாச்சி காவியம் போன்று மீண்டும் ஒரு உயிர் மிக்க படைப்பை எப்போது தருவீர்கள்?

வைரமுத்து :உலகப்போர் படிக்கவில்லையா

58) உங்களுக்கு மிகவும் பிடித்த திருக்குறள் காரணம் ?

வைரமுத்து :"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பதிழுக்கு

59) தமிழை விட சமஸ்கிருதம் தான் சிறந்தது என்ற சிலரின் கூற்று குறித்து உங்கள் கருத்து

வைரமுத்து :தமிழும் சமஸ்கிருதமும் இந்திய நாகரிகத்தின் இரு கண்கள் கண்களில் எது சிறந்தது எது தாழ்ந்தது

60) பணியில் மன உளைச்சல் ஏற்படும்போது அதிலிருந்து வெளி வர என்ன செய்ய வேண்டும?

கண்கள் மூடுங்கள் உங்கள் எண்ணங்களை நெற்றிப் பொட்டில் நிறுத்துங்கள் உங்கள் உடல் பெயர் தொழில் மறந்துவிடுங்கள் அமைதி அமைதி என்று உச்சரியுங்கள்

முடிந்தது........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணா .........நல்லதொரு வாசகி (கன் ).. :D .........பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

Sunday, January 20, 2002

கற்றதும் பெற்றதும் சுஜாதா

எட்டாவது படியில் சந்திர மண்டலம்!

அத்தனை பேரும் கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், சிறுபத்திரிகை வாசகர்கள் அதில் தீவிரமான விஷயங்களைப் பற்றிக் கடிதம் எழுதுபவர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் என்று தற்காலத் தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதிகளாக புக்பாயிண்ட் அரங்கத்தை நிரப்பியிருந்தார்கள்.

காலச்சுவடு பதிப்பகத்தின் பத்து புத்தகங்கள் வெளியிடப்பட்ட நிகழ்ச்சி. அதில் மனுஷ்யபுத்திரனின் ‘நீராலானது’ கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். அதற்குமுன் ப்ரேவுரா டெக்னாலஜிஸ் நிறுவனத்தினர் பாரதியாரின் புதிய ஆத்திசூடியை அடர்தகடு வடிவத்தில் (சிடி) வெளியிட்டார்கள். பாரதியின் 105 ஆத்திசூடிகளும் இதில் வாசிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றையும் க்ளிக்கினால் ஒரு நீதிக் கதைக்கு ஹைப்பர்லிங்க் கிடைத்துப் படித்துக் காட்டப்படுகிறது. ‘புதியன விரும்பு’ என்று சொன்ன பாரதி, சொர்க்கத்தில் சந்தோஷப்பட்டிருப் பார்.

ஈ-புக்ஸ் என்கிற புதிய முறையில் மின் புத்தகங்கள் இணையத்திலும் தகட்டிலும் மௌ¢ள மௌ¢ளக் கிடைக்கத் துவங்கி யுள்ளன. எந்த அளவுக்குத் தமிழ்மக்கள் கணித்திரையில் புத்தகம் படிக்க விரும்புவார்கள் என்பது டாக்டர் பிரகாஷ் போன்றோரின் கவனக் கலைப்பின் மத்தியில் கேள்விக்குறியே. அவர்களைச் சம்பிரதாய புத்தகங்களை வாங்க வைப்பதும் பெரிய காரியமாக இருக்கிறது. ஒரு பதிப்பு விற்றுத் தீர சராசரி ஐந்து வருஷமாகிறது. கவிதைத் தொகுப்புகள் பரவாயில்லை என்று சொல்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையிலும் ‘புதிய எழுத்து’, ‘புனைகளம்’ போன்ற பத்திரிகைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. வில்லுப்பாட்டுக் கலைஞர் முத்துசாமிப் புலவரிலிருந்து பெல்ஜியம் நாட்டு ஜூலியோ கொர்த்தஸார் வரை உரையாடல்களைப் பதிப்பிக்கிறார்கள். ஒரு நோயாளி நாலரை மணி நேரம் சொன்ன வெளிப்பாடுகளை அப்படியே கொடுக்கிறார் கோபிகிருஷ்ணன். இது தனி உலகம்.

மனுஷ்யபுத்திரனின் ‘நீராலானது’ தொகுப்பின் அறிமுகத்தில் கவிதை பற்றிய என் பொதுவான வரையறை நல்ல கவிதைகளை அடையாளம் கண்டுகொள்ள உதவுவதைச் சொன்&னன் >

‘‘கவிதை என்பது ஒரு மொழியின் ஓசைகளையும் சொற்களையும் படிமங்களையும் பயன்படுத்தி ஓர் உணர்ச்சியை வெளிப்படுத்தும் இலக்கிய வடிவம். அதில் சில சமயம் சந்தமும் அளவும் இருக்கலாம்.’’

ஒரு முத்தத்தை இட்டு முடிப்பதற்குள்

ஒரு கரம்பற்றுதலின் வெம்மையை உணர்வதற்குள்

ஒரு சரியான பிரிவுச் சொல்லைத்

தேர்ந்தெடுப்பதற்குள் நேரமாகிவிடுகிறது

போன்ற மென்மையான கவிதைகள் நூறுக்கு மேல் இருக்கும் இந்தத் தொகுப்பு 2002'ல் தமிழ்க் கவிதைக்கு நல்ல காலத்தை அறிவிக்கிறது.

டிம் ராபின்சன் எழுதிய The Fineness of Things என்கிற கட்டுரையை இந்த வாரம் ரசித்துப் படித்தேன். மிகப் பெரியதிலிருந்து மிகச் சிறியது வரை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது ஒரு பாக்டீரியா, வைரஸ் ஏன்.. ஒரு எலெக்ட்ரான் க்வார்க் அதைவிட சிறிதான ப்ளாங்க் தூரம் (Planck distance) வரை சிறிதாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. மறுபக்கத்தில் பிரபஞ்சத்தையும் பல்லாயிரம் கோடி ஒளி வருஷ துரத்தின் பிரமாண்டத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த வீச்சின் இடையில் நாம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ராபின்சன் ஓர் எளிய வழிமுறை சொல்கிறார்.

பத்து மடங்கு... பத்துப் பத்து மடங்காக பெரிசையோ சிறிசையோ எண்ணிப் பார்த்தால் சிருஷ்டி அனைத்தும் முப்பத்திரண்டு தப்படியில் மனசுக்குள் அடங்கிவிடும் என்கிறார். படிப்படியாக யோசிக்கலாம்.

நாம் நடுவில் இருக்கிறோம்... படிகளில் மேலே ஏறலாம், இறங்கலாம். ஒவ்வொரு படியும் முந்தின படியைவிட பத்து மடங்கு பெரிசு அல்லது சிறிசைக் குறிக்கும். ஒரு படி மேலே போனால் ஒரு பெரிய வீட்டின் உயரம், அடுத்தபடி குன்று. அதைவிடப் பத்து மடங்கு மலை. இது மூன்றாவது படி. நான்காவதில் ஒரு நகரத்தின் அகலம். ஆறாவது ஒரு தேசம்.. ஏழு பூமி.

மாறாக படிகளில் இறங்கிப் பார்த்தால் முதலில் வருவது எலி. இரண்டாவது விட்டில்பூச்சி. மூன்றாவது அதன் முட்டை. நான்காவது அதன் சிறகின் ஒரு தீற்றல். ஐந்தாவது ஒரு ஒற்றை செல்.

இதற்குமேல் பெரிசாகவோ சிறிசாகவோ பார்ப்பதற்கு நமக்குக் கருவிகள் தேவைப்படும். ஒரு மைக்ராஸ்கோப் வழியாக ஒரு குளத்தின் தண்ணீரைப் பார்த்தால் நீச்சலடிக்கும், உருளும், புரளும், மோதும் ஜந்துக்களின் ஒரு மைக்ரோ உலகமே தெரியும்.

மேல் பக்கம் எட்டாவது படியில் நாம் சந்திரமண்டலத்தின் பாதிவழி வரை போய்விடுவோம். பதினொன்றாவதில் நம் கிரகங்களின் சுழற்சி தூரங்கள். அதன் பின் மனிதனைக் காட்டிலும் இருபத்தோராவது படியில் நம் பால்வீதி கேலக்ஸி > முப்பது கோடி ஒளி வருஷ அகலம். இருபத்திரண்டில் ஆயிரத்து ஐந்நூறு கோடி ஒளிவருஷம் நம்மால் பார்க்க முடியும். பிரபஞ்சத்தில் அதற்கு மேல் ஏதாவது இருந்தால் அது நம்மை வந்துசேர பிரபஞ்சத்தின் வயசை விட அதிக சமயம் ஆகுமாம். எனவே, சிருஷ்டி முழுவதும் பற்றிச் சிந்திக்க முப்பத்திரண்டு படிகள் ஏறி இறங்கினால் போதும்.

கலைமகள் ஜனவரி இதழில் புதுமைப்பித்தன் எழுதிய ‘நானும் என் எழுத்தும்’ என்கிற பழைய கட்டுரையை மறுபிரசுரம் செய்திருக்கிறார்கள். சிற்பியின் நரகம் (நகம் அல்ல) போன்ற அவருடைய சிறந்த சிறுகதைகள் பத்திரிகை அவசரத்தில் எழுதியவை. ‘ ‘ப்ளாக்’ இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் ஒரு கதை எழுதிக் கொடு’ என்று கேட்டு எழுதியவை சில. டைட்டில் கொடுத்து கெடு முடிந்து ஆசிரியர் ஆளை அனுப்பிக் காத்திருந்த நேரத்தில் எழுதியவை சில.

‘‘இப்போது அவற்றைப் படித்துப் பார்த்தால் நன்றாகத் தான் இருக்கின்றன’’ என்று மிதப்பலில்லாமல் யதார்த்தமாக அந்தப் புத்தகத்தில் சொல்கிறார் புதுமைப்பித்தன். ஹ்யூகோ பால்ஸாக், தூமா, சார்லஸ் டிக்கென்ஸ் போன்றவர்களுக்கு இதே அனுபவம் ஏற்பட்டிருக்கிறது ‘பாஸ்’ என்பவர் வரைந்த ஏதோ ஒரு படத்துக்குக் கதை எழுதச் சொல்லி ஆரம்பித்தது தான் ‘பிக்விக் பேப்பர்ஸ்’ என்னும் ஆங்கில இலக்கியத்தின் மகத்தான நகைச்சுவை நாவல். கல்கி, தேவன் போன்றோரும் இந்த வகையில் எழுதியிருக்கிறார்கள். ஒரு கால கட்டத்தில் ஒரே சமயம் மூன்று தொடர்கதைகள் எழுதிக் கொண்டிருந்தபோது எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. தீபாவளி மலர் கெடு முடிந்து, இனிமேல் காத்திருக்க முடியாது என்று போன் வந்தபின் எழுதின கதைகள் பல (உதாரணம்:- குதிரை, அரங்கேற்றம், தேனிலவு). இவற்றையெல்லாம் இப்போது படித்துப்பார்க்கையில் சரியாகத்தான் தெரிகின்றன. ‘குதிரை’ பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. எந்தப் படைப்புக்கும் அவசரமும் காலக்கெடுவும் தேவையோ என்று தோன்றுகிறது. நான் கெடுவில்லாமல் எழுதிய புத்தகம் 1990-ல் ‘ஹைக்கூ ஓர் புதிய அறிமுகம்’, தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’.

நெட்டில் கிடைத்த ஹைக்கூ (அகுதகாவா ரையுனோஸ§கெ 1892-1927)

பச்சைத் தவளையே

உன் உடம்பும்

புதிதாக வண்ணம் பூசியதோ

மோசமான ஹைக்கூ பற்றி அடிக்கடி புலம்புவதற்கு பதில் சில வாரங்களுக்கு நல்ல ஹைக்கூவுக்கு உதாரணங்கள் கொடுக்கத் தீர்மானித்துவிட்டேன். மேலே குறிப்பிட்டதில் உடம்பும் என்பதில் உள்ள ‘உம்’ விகுதிதான் விசேஷம்.

சென்ற இதழில் வந்த சிறந்த பட்டியலைப் பற்றி நிறைய தொலைபேசிகள் வந்தன. குறிப்பாக, ‘பாண்டவர் பூமி’யையும் அதில் ‘அவரவர் வாழ்க்கையில்...’ என்ற பாடலையும் ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டிருந்தார்கள். அதற்கு முக்கியமான காரணம், அந்தப் படத்தைத் தயாரித்ததில் என் பங்கும் இருந்ததால் அவையடக்கம் காரணமாக குறிப்பிடாமல் விட்டேன். சேரனுக்கும் பரத்வாஜ்க்கும் என்னுடைய தனிப்பட்ட பாராட்டுகள்.

நன்றி விகடன்

Link to comment
Share on other sites

ஒட்டுக்கேட்டவன் குறிப்புகள்

entrepreneur

நேற்று இரவு அலுவல் நிமித்தம் ஓர் ஆஸ்திரேலியரைச் சந்தித்தோம். இந்திய வம்சாவளிக் குடும்பம்தான். ஆனால், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறிவிட்டார்கள். இப்போது தொழில்முறைப் பயணமாக இங்கே வந்திருக்கிறார்.

அவர் தங்கியிருந்தது பெங்களூரின் மிகப் பழமையான நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்று. அங்கே எங்களுக்குப் பிரமாண்டமான விருந்து அளித்தார். ஒரு ப்ளேட் வெஜிடபிள் பிரியாணி: ரூ 1500/- தொட்டுக்கொள்ளத் தயிர்ப் பச்சடி ரூ 350/- என்று மெனுவைப் பார்த்தாலே எனக்குப் பசி தீர்ந்துவிட்டது.

ஆனால், அவருக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருக்கமுடியாது. போன வருடம்தான் அவர் தனது சொந்த நிறுவனத்தை இன்னொரு மிகப் பெரிய நிறுவனத்திடம் விற்று ஐநூற்றுச் சொச்ச கோடிகளை அள்ளியிருந்தார். இப்போது அந்தப் பெரிய நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

ஆஃபீஸ் விஷயம் என்பதால், இந்த ஐநூறு கோடீஸ்வரருடைய பெயரையோ வேறு விவரங்களையோ தெரிவிக்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் பிரச்னையில்லை, அவர் சொன்ன விஷயங்கள்தான் முக்கியம். சும்மா அவருடைய பெயர் மிஸ்டர் கோயிஞ்சாமி என்று வைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

உண்மையில் எனக்கு இதுபோன்ற பெரும்புள்ளிகளுடன் ஒப்பந்தம் பேசிப் பழக்கமும் இல்லை, அதற்கான நெளிவுசுளிவுகளும் எனக்குத் தெரியாது. என்னுடைய boss அதில் பெரிய விற்பன்னர். எதற்காகவோ இந்தமுறை என்னையும் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டு போயிருந்தார். நானும் ஆயிரத்தைநூறு ரூபாய் பிரியாணியில் என்ன விசேஷம் என்று பரிசோதித்தபடி அவர்கள் இருவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் அலுவலக விஷயங்களைப் பேசியவர்கள் ஒருகட்டத்தில் (ஒயின் தாக்கத்தில்?) பர்ஸனல் சமாசாரங்களுக்கு நகர்ந்தார்கள். குறிப்பாக, மிஸ்டர் கோயிஞ்சாமி தன்னுடைய தனிப்பட்ட தொழில்முனைவோர் (Entrepreneur) அனுபவங்களை மிகச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

அதாகப்பட்டது, நீங்கள் ஒரு தொழில் தொடங்கி நடத்துகிறீர்கள், அடிமட்டத்திலிருந்து அதனை வளர்த்து ஆளாக்கி ஒரு பெரிய நிறுவனத்துக்கு விற்க நினைக்கிறீர்கள், அதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும்? மிஸ்டர் கோயிஞ்சாமி கொடுத்த டிப்ஸ் இவை:

முன்குறிப்புகள்:

1. ஓர் ஒழுங்கில் இல்லாமல் என் நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன் (Unstructured Notesபோல) தவறுகளோ, அபத்தங்களோ இருந்தால் நானே முழுப் பொறுப்பு

2. இந்த சீரியஸான மேட்டரை இப்படி dilute செய்து விளையாட்டாக எழுதியிருக்கிறானே என்று நினைக்கவேண்டாம், நான் சொந்தத் தொழில் தொடங்கியவன் அல்லன், அப்படி ஒரு யோசனையும் இல்லை, ஆகவே எனக்கு இது சும்மா ஜாலியாகக் கவனித்த விஷயம்தான், இப்படிதான் என்னால் எழுதமுடியும்

3. இவை முழுமையான குறிப்புகள் அல்ல, அவர் சொன்னதில் என் நினைவில் தங்கியவைமட்டுமே, அவர் சொல்ல மறந்தவை இன்னும் நிறைய இருக்கலாம்

4. இந்த பலவீனங்களையெல்லாம் தாண்டி, இந்தக் குறிப்புகள் யாருக்காவது பயன்படும் என்று நம்புகிறேன்

  • தொழில் நடத்துவதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒரு பொருளை (அல்லது சேவையை) தயாரிப்பது, அதனை விற்பது. Production, Sales எனப்படும் இந்த இரண்டு பகுதிகளில் நீங்கள் எதில் கில்லாடி?
  • பெரும்பாலான புதிய தொழில்முனைவோர் தங்களுடைய துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் பெரிய ஆள்களாக இருப்பார்கள். அதை அடிப்படையாக வைத்து ஒரு பிரமாதமான தயாரிப்பை உருவாக்கிவிடுவார்கள், அப்புறம் அதை எப்படி விற்பது, எப்படிச் சந்தைப்படுத்துவது (மார்க்கெட்டிங்) என்று தெரியாமல் விழி பிதுங்குவார்கள்
  • நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மேற்சொன்ன இரண்டையுமே நீங்கள் செய்யவேண்டியிருக்கும், பழகிக்கொள்ளுங்கள், அல்லது, உங்களுக்கு எதில் திறமை போதாதோ அந்த விஷயத்தில் கில்லாடியான ஒரு நபரைப் பார்த்துப் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ளுங்கள்
  • A : ஓரளவு நல்ல Product, அருமையான Sales Team
  • B : அற்புதமான Product, சுமாரான Sales Team
  • மேற்சொன்ன இரண்டில் Aதான் பெரும்பாலும் ஜெயிக்கும். Its unfair, ஆனால் அதுதான் எதார்த்தம்
  • உங்களுடைய பொருளை (உதாரணமாக: சாஃப்ட்வேர் அல்லது சலவை சோப்பு) விற்பது ஒரு கலை என்றால், உங்களுடைய கம்பெனியை விற்பது வேறுவிதமான கலை, அதற்கு நீங்கள் தனியே பல நுட்பங்களைப் பழகவேண்டும்
  • பெரிய கம்பெனிகள் உங்களுடைய கம்பெனியை எதற்காக வாங்கவேண்டும்? உங்களிடம் என்ன ஸ்பெஷல்?
  • பெரும்பாலான பெரிய கம்பெனிகள் சேவை சார்ந்த நிறுவனங்களை (Service Based Companies) சீண்டுவதே இல்லை, Product Based Companies, அதிலும் குறிப்பாக IP எனப்படும் Intellectual property, அதாவது நீங்களே உருவாக்கிய தனித்துவமான தயாரிப்புகள் இருந்தால் எக்ஸ்ட்ரா மரியாதை
  • ஒருவேளை நீங்கள் Service Based Company என்றாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை / உழைப்பை ஒதுக்கி உங்களுக்கான IP ஐடியாக்களைத் தேடுங்கள், அவற்றுக்கு ஒழுங்காகக் காப்புரிமை (Patent) வாங்கிவைத்துக்கொள்ளுங்கள், உங்கள் நாட்டில்மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா என்று எங்கெல்லாம் இந்தத் தயாரிப்பு காப்பியடிக்கப்படக்கூடுமோ அங்கெல்லாம் பேடன்ட் வாங்கிவிடுங்கள்
  • பேடன்ட் வாங்குவது வேறு, பொருளை உண்மையில் தயாரிப்பது வேறு, முதல் விஷயம்(ஐடியா)தான் ரொம்ப முக்கியம், அதை வைத்தே பெரிய ஆளானவர்கள் இங்கே உண்டு
  • சாஃப்ட்வேர் துறையைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் எப்படிச் சிறிய நிறுவனங்களை ‘வாங்கு’ கின்றன?
  • இதில் இரண்டு வகைகள் உண்டு: Horizontal Acquisitions, Vertical Acquisitions
  • Horizontal என்றால், ஒரே சாஃப்ட்வேர் (அல்லது அடிப்படைக் கட்டமைப்பு) எல்லாத் துறைகளிலும் (உதாரணமாக: வங்கிகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், மீடியா, விமான சேவை நிறுவனங்கள் etc.,) பயன்படும், நீங்கள் அதுமாதிரி சாஃப்ட்வேர்களை எழுதி, ஓரளவு பிரபலமாகியிருந்தால் போதும், பெரிய நிறுவனங்கள் உங்களை வாங்குவதற்காகக் காசுக் கணக்கே பார்க்காமல் அள்ளித் தரத் தயாராக இருப்பார்கள். ஆனால் இதுமாதிரி Acquisitions மிகக் குறைவு, மிக அபூர்வம்
  • ஆகவே, Vertical Acquistionsதான் நமக்கு வசதி. ஏதாவது ஒரு துறையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் துறைக்கு என்று இருக்கும் பிரச்னைகளைக் கவனியுங்கள், புரிந்துகொள்ளுங்கள், அதில் அனுபவம் மிக்க நபர்களை உங்கள் குழுவில் இணைத்துக்கொள்ளுங்கள், உங்களது வாடிக்கையாளர்களுடன் பேசுங்கள், அந்தத் துறையில் உள்ள எல்லாருக்கும் பயன்படக்கூடியவிதமாக ஒரு சாஃப்ட்வேரை எழுதுங்கள். அதை ஒன்று, ஐந்து, பத்து, இருபது நிறுவனங்களில் செயல்படுத்திப் பரீட்சித்துப் பாருங்கள்
  • இப்படி நீங்கள் எழுதும் ‘அபூர்வ’ சாஃப்ட்வேரை, மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் சீண்டக்கூட மாட்டார்கள். பரவாயில்லை, அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல் என்று தீர்மானித்திருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் வேலையைத் தொடருங்கள், அந்தத் துறை சார்ந்த புதுப்புது விஷயங்களைக் கவனித்துச் சேர்த்துக்கொண்டே இருங்கள்
  • இதனால், ஒருகட்டத்தில் அந்தக் குறிப்பிட்ட துறையில் பெரிய நிறுவனங்களைவிட உங்களுடைய தயாரிப்பு ஒரு படி மேலே போய்விடும், ஆனால் இப்போதும், அவர்கள் உங்களை அலட்சியமாகதான் பார்ப்பார்கள். ‘நேத்து வந்த பொடிப்பய, இவனால என்னை என்ன செய்யமுடியும்?’
  • அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். அடுத்தடுத்து பல இடங்களில் அவர்களுடைய சாஃப்ட்வேரை வாங்கப்போகிற கஸ்டமர்கள் உங்களைப் பற்றிப் பேசி ஒப்பிட ஆரம்பித்தால், அப்போது அவர்களுக்குப் புரியும், ‘இந்தப் பயலுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்’ என்று உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவார்கள்
  • இப்போது, அந்தப் பெரிய நிறுவனம் தன்னுடைய பெருந்தலைகளைக் கூப்பிட்டு விவாதிக்கும் ‘எது பெட்டர்? நம்ம சாஃப்ட்வேரை இன்னும் சிறப்பாக்கறதா? அல்லது அந்தக் கம்பெனியை மொத்தமா வாங்கிப் போடறதா?’
  • நீங்கள்தான் ஏற்கெனவே அந்த Verticalலில் பிஸ்தாவாச்சே, உங்கள் சாஃட்வேரை (அதாவது கம்பெனியை) வாங்கிவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்று அவர்களே முடிவு செய்வார்கள். இதற்காக நீங்கள் செய்யவேண்டியது எதுவுமே இல்லை (உங்களது Productஐத் தொடர்ந்து Improve செய்துகொண்டிருப்பதைத்தவிர)
  • அடுத்த விஷயம், என்னதான் நீங்கள் உங்கள் கம்பெனியைப் பெரிய நிறுவனம் ஒன்றிடம் விற்க விரும்பினாலும், நீங்களே அவர்களிடம் சென்று பேசாதீர்கள், விலை பாதியாகக் குறைந்துவிடும், அவர்களே வரும்வரை காத்திருங்கள்
  • வந்தார்களா? வாழ்த்துகள், பாதி வேலை முடிந்தது, மிச்சத்தைக் கவனியுங்கள்
  • ஏற்கெனவே சொன்னதுபோல், உங்கள் சாஃப்ட்வேரை விற்பது வேறு, உங்கள் கம்பெனியை விற்பது வேறு, அதற்கு நீங்கள் உங்களுடைய கம்பெனியைப் பலவிதமாகப் பொட்டலம் கட்டிக் காட்டவேண்டியிருக்கும் (IP, Employees’ Skills, Balance Sheet, Profit, Market Potential என்று வரிசையாக ஏதேதோ சொன்னார், எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, இங்கே உங்களுக்குத் தெரிந்தபடி மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டுக்கொள்ளவும்)
  • பெரிய கம்பெனிகளுடன் பேரம் பேசும்போது, ஆரம்பத்தில் அவர்கள் அதிரடியாகதான் இறங்குவார்கள், ‘நீயெல்லாம் ஒரு கம்பெனியா? உன்னைக் காசு கொடுத்து வாங்கணும்ன்னு எனக்குத் தலையெழுத்தா? உன்னைவிட பக்கத்து கம்பெனிக்காரன் பலமடங்கு பெட்டர், தெரியுமா?’
  • இப்படி யாராவது பேசினால் சளைக்காதீர்கள். ‘ஆமா சார், நீங்க அவன்கிட்டயே பேசிக்கோங்க, குட் பை’ என்று எழுந்து வந்துவிடுங்கள் (கத்தரிக்காய் பேரம் பேசும் அதே டெக்னிக்?)
  • அப்புறம், அந்தப் பேரம்பேசிகள் தங்களது பெருந்தலைகளோடு உரையாடுவார்கள், உங்களது ‘வொர்த்து’ தெரிந்து அவர்கள் இறங்கிவருவார்கள், ‘சரி, என்ன விலை எதிர்பார்க்கறீங்க?’ என்று கேட்பார்கள்
  • உடனடியாக, உங்கள் வாயை ஃபெவிகால் போட்டு மூடிக்கொண்டுவிடுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைச் சொல்லாதீர்கள், அவர்கள் முதலில் பேசட்டும்
  • அவர்கள் பேசியதும் ‘This is too low’ என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக்கொள்ளுங்கள். எந்தப் பெரிய கம்பெனியும் உங்களிடம் ஆரம்பத்தில் சொல்லும் விலையைப்போல் இரண்டு முதல் மூன்று மடங்குவரை தரத் தயாராக இருப்பார்கள்
  • அப்புறம், பேரங்கள் தொடங்கும், முடிந்தவரை இந்த விஷயத்தில் அனுபவம் உள்ள ஒருவரை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள், பெரும்பாலான Entrepreneurs அடி வாங்குவது இந்த இடத்தில்தான், இந்த அனுபவம் கிடைத்தபிறகு, நீங்கள் இன்னொரு பிஸினஸ் நடத்தினால் அதைச் சரியான விலைக்கு விற்பீர்கள்
  • நமக்கு அந்த Trial and Error எல்லாம் சரிப்படாது. அனுபவம் உள்ள ஒருவர் உங்களுடன் இருந்தால் அடிமாட்டு விலையைத் தவிர்க்கலாம்
  • உங்கள் கம்பெனியை விற்றபின்னர், நீங்களும் அந்தப் பெரிய நிறுவனத்தில் (சில மாதங்களாவது) வேலை செய்யவேண்டியிருக்கும். அப்போது ஒரு பெரிய மாற்றத்துக்குத் தயாராக இருங்கள், சொந்தமாகத் தொழில் நடத்துவதன் சவால்கள் வேறு, பெரிய கம்பெனியில் வேலை செய்வதன் சவால்கள் வேறு, அப்புறம் வருத்தப்படாதீர்கள்
  • நிறைவாக ஒன்று, என்னதான் கை நிறையக் காசு வாங்கிக்கொண்டு பெரிய கம்பெனியில் பிரமாதமான சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், அநேகமாக நீங்க அதை ரசிக்கமாட்டீர்கள், சொந்தமாக ஒரு விஷயத்தை உருவாக்குகிற த்ரில் உங்களைச் சும்மா விடாது, விரைவில் அடுத்த Entrepreneurial முயற்சியில் இறங்கிவிடுவீர்கள், இது நிச்சயம் wlemoticon-winkingsmile.png?w=480

http://nchokkan.wordpress.com

Link to comment
Share on other sites

பேப்பர் கப் பயங்கரம்!!!

பேப்பர் கப் என ஒன்று சர்வ சாதாரணமாக தேநீர் விடுதிகளிலும்,பழரச நிலையங்களிலும்,நம் இல்ல விழாக்களிலும்,ரயில்களிலும், அலுவலகங்களிலும் புழங்குகிறது, நம் அனுதின வாழ்வில் அதற்கு ஈடான மாற்றே இல்லை எனவும் ஆகிவிட்டது, இப்போது ஒரு படி மேலே போய் பேப்பர் இலைகளும் புழங்க ஆரம்பித்து விட்டன, நல்ல பேப்பர் கப்புகளுடன் ஈசி மனி செய்ய வேண்டி சில கயவர்களால் மட்டமான தரம் கொண்ட சீன தயாரிப்பு பேப்பர் கப்புகளும் தாராளமாய் கிடைக்கின்றன, விலை குறைவு என கருதி அதையே பெரும்பாலான வியாபாரிகள் வாங்கி உபயோகிப்பர் என்பது விதி.

paper+cup.jpg

paper+leaf.jpg

சுகாதாரம் பேணுவதற்கு நாம் விரும்பி கேட்டு உபயோகிக்கும் பேப்பர் கப்பில் ஈரம் உரியாமல் இருப்பதற்காக கப்பின் உள்ளேயும் வெளியேயும் மெழுகு[Cetyl palmitate] கோட்டிங் தடவப்படுவதை காணலாம்,அதனால் நம் உடம்புக்கு தீங்கு நிச்சயம் ஏற்படும் என்பது கண்கூடு.இனி அலுவலகங்களில் தேநீர் குடிப்போர் தங்களுக்கென ஒரு பீங்கான் கோப்பையை வைத்துக்கொள்ளுவது நல்லது, வெளியிடங்களில் பேப்பர் கப்பை தவிர்ப்பதும் நிச்சயம் பலனளிக்கும்.கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வேண்டாமே

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.

இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

http://geethappriyan.blogspot.com

Link to comment
Share on other sites

இசைஞானி இளையராஜாவைப் பற்றி டிரம்ஸ் கலைஞர் சிவமணி எழுதுகிறார் :

அவரைப் பற்றி எழுத நான் யார்?

இந்தக் கேள்வியை எனக்குள் நானே இரண்டு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு இசைக்கலைஞன். அவரோ இசைக்கே அரசர். அவரைப் பற்றிக் கட்டுரை எழுதக் கலைஞன் என்ற தகுதி மட்டுமே போதுமா? ராஜா அண்ணனைக் குறித்து யோசிக்கும்போதே பல்வேறு அனுபவங்களும், நிகழ்வுகளுமாக, என் இதயம் புயல் அலையில் ஆடும் ஓடம் போலத் தத்தளிக்கிறது

அவருக்கும் எனக்குமான உறவு என்பது இசையோ, தொழிலோ மட்டுமல்ல என்பதை அழுத்தமாக உணர்கிறேன். அவர் என்னுடைய குரு. என்னை ஆன்மீக வழியில் செலுத்திய சித்தர். கோடி சாமிகள் என்கிற மாபெரும் மகானை நான் அடையக் காரணமாக இருந்தவர். என் வாழ்வின் பாக்கியம் ராஜாவால் வந்தது. அவர் எனக்கு குருநாதர் மட்டுமல்ல. அண்ணனும் கூட.

இளையராஜாவுக்கு அப்போதெல்லாம் டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தவர் நோயல். அவரது வேலை ராஜாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். நோயலின் மறைவுக்குப் பிறகே நான் ராஜாவோடு பணியாற்ற ஆரம்பித்தேன். நோயலின் இழப்பை ஈடு செய்யும் வகையில், அவர் பாணியிலேயே நானும் வாசிப்பேன். எனவே, ராஜாவுக்கு என்னுடைய இசையும் பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை. "பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தைத் தேவர்கள் உண்டார்கள்" என்று படித்திருக்கிறோம். இளையராஜாவோடு பணியாற்றும் போது எனக்கும் அமிர்தம் உண்ட உணர்வு ஏற்படும்.

அவர் ரெக்கார்டிங் செய்யும் அழகைக் காண எத்தனையோ கோடிக் கண்கள் இருந்தாலும் போதாது. அவர் வயலின் அரேஞ் செய்த பிறகு பொழியும் இசையைக் கேட்கும்போது, என் கண்களில் கண்ணீர் கொட்டுவதை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது. ஏன், இளையராஜாவின் இசை ஜீவனுள்ள இசை என்று சர்வதேச அளவில் இசைமேதைகள் பேசுகிறார்கள் என்பதை அப்போதுதான் உணர முடியும். பணக்காரன் படத்திற்கு அவர் அமைத்த பின்னணி இசையை எத்தனை முறை கேட்டுப் பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

இசையில் மட்டுமல்ல. நட்புகளை, உறவுகளைப் பேணுவதில் அவர் ராஜாதான். சிவா என்றுதான் என்னை அன்பாக அழைப்பார். வேலை பார்க்கும்போது எவ்வளவுக்கு எவ்வளவு சீரியஸாக வேலை வாங்குகிறாரோ, அதே சீரியஸ்னஸ்சை மற்ற நேரங்களில் அன்பைப் பொழியும்போதும் காட்டுவார்

’47 நாட்கள்’ என்றொரு படத்திற்கு இசையமைப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வர அன்று ஏதோ காரணத்தால் தாமதமாகி விட்டது. மதிய நேரம், எனக்கோ பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது. ஸ்டுடியோவில் இருந்த ராஜாவின் கம்போசிங் ரூமில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. டேபிளில் வாழை இலை விரிக்கப்பட்டு இருந்தது. 'உட்காரு சிவா! சாப்பிடு!' என்றார். எப்படித்தான் என் பசி அவருக்குத் தெரிந்ததோ? இதனால் தான் அவரை சித்தர் என்கிறேன். ஞானி என்கிறேன். ‘இல்லண்ணே..! எஸ்.பி.பி. வந்துட்டாருன்னா ரெக்கார்டிங் ஸ்டார்ட் ஆயிடும்' என்று தயங்கினேன். நான் தயங்கியபடியே எஸ்.பி.பி.யும் வந்து விட்டார்.

உடனே ரெக்கார்டிங் ரூமில் இருந்த இஞ்சினியர்கள் இருவரையும் ஃபோன் செய்து அழைத்தார் ராஜா. அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். நான் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசிக்கொண்டே இருந்தார்.

“பசியோட வேலை பார்க்கக் கூடாது. இப்போ உன்னாலே ரெக்கார்டிங் லேட்டுன்னு யாரும் சொல்லிட முடியாது. ஏன்னா ரெக்கார்டிங் பண்ண வேண்டிய இஞ்சினியர்கள் கூட நான் பேசிகிட்டு இருந்தேன். அதனால், என்னாலேதான் லேட்டு." என்றார். மனித நேயம் அருகிக் கொண்டிருக்கும் உலகில், ராஜாவுக்குள் இருக்கும் இந்த ஈரம்தான் அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது. சக மனிதர்கள் மீதான இந்தப் பண்பும், அன்பும் அரிதிலும் அரிதானது.

கலைஞர்களே பிரமிக்கும் கலைஞர் அவர். ரீ-ரெக்கார்டிங்கின்போது சில நொடிகளே வரும் அருமையான பிட் ஒன்றினைக் கொடுப்பார். அப்படியே அள்ளிக்கொண்டு போகும். அந்த சில நொடி பிட்டுகளையே நான் ஐந்து பத்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக வாசித்துப் பழகுவேன். இதுபோலச் செய்வது ஒரு தியானத்துக்கு ஒப்பானது. இசைக்கு இதைப் போன்ற ஆன்மீகப் பலம் நிறைய உண்டு.

இளையராஜா பேசுவது, சிலருக்கு சில நேரங்களில் புரியாது. அவரது பேச்சில் நேரடி அர்த்தத்தை எதிர் பார்த்தால் அப்படித்தான். அவர் ஒரு யோகி. உன்னிப்பாக கவனித்தோமேயானால், அவரது பேச்சில் பன்முக அர்த்தங்கள் பொதிந்திருக்கும். வாழ்வுக்கு உபயோகமான கருத்துகள் அடங்கியிருக்கும். இவரைப் போன்ற ஜாம்பவான்களோடு பணியாற்றும், பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பது என் பெற்றோர் செய்த புண்ணியமாகத் தான் இருக்கும்.

ஒரு முறை வாழ்த்து அட்டை ஒன்றில் இவ்வாறாக எழுதி எனக்குக் கொடுத்தார். "உன்னை இன்னொருவனால் உருவாக்க முடியாது. நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்."

அண்ணன் என்ன சொன்னாரோ, அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.

சந்திப்பு : யுவகிருஷ்ணா

(நன்றி : புதிய தலைமுறை)

http://www.luckylookonline.com/2012/01/blog-post_8655.html

Link to comment
Share on other sites

நன்று :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.