Jump to content

தம்பி


Recommended Posts

நல்ல ஐடியா அனி தூயவன் எங்க போயிட்டீங்க அப்படியே லண்டனிலயும் (தியேட்டர் கட்ட வேண்டாம்அது ஏற்கனவே இருக்கு) புது படங்களை இலவசமா போடுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அதுக்கென்ன போடுங்க, 4  பேர் என்ன 400 பேரையும் சேர்த்து கூட்டிக் கொண்டு தியட்டருக்கு வாரன்..... அப்படியே டிக்கட் எடுக்க தேவையில்லை இலவசம் எண்டு போட்டு விடுங்க  :lol:   :wink:  :lol:  :(

ரெம்பத்தான் அதிகமாக வாயைக் கொடுத்துவிட்டேனோ???

:roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஐடியா அனி தூயவன் எங்க போயிட்டீங்க அப்படியே லண்டனிலயும் (தியேட்டர் கட்ட வேண்டாம்அது ஏற்கனவே இருக்கு)  புது படங்களை இலவசமா போடுங்க

தியட்டரில் இருந்து படம் பார்ததல் கண் பழுதாகி விடுமாம். உண்மையோ??? :wink: :P

Link to comment
Share on other sites

தியட்டரில் இருந்து படம் பார்ததல் கண் பழுதாகி விடுமாம். உண்மையோ??? :wink: :P

இதெல்லாம் வதந்தி தூயவன் நம்பாதீங்க நீங்க புது படத்தை போடுங்க பாத்திட்டு கண்பழுதாகுதா இல்லையா எண்டு நானும் அனியும் சொல்லுறம் ரெடியா அனி :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் அக்காவும், தங்கையும் ஒழுங்காகக் கவனிக்க வேண்டும் அல்லவா!! அந்தப் பொறுப்புணர்ச்சி ரெம்பவே உண்டு எனக்கு!!! :evil: :wink:

Link to comment
Share on other sites

யார் என்ன சொன்னாலும் அக்காவும், தங்கையும் ஒழுங்காகக் கவனிக்க வேண்டும் அல்லவா!! அந்தப் பொறுப்புணர்ச்சி ரெம்பவே உண்டு எனக்கு!!! :evil: :wink:

ஆஹா இப்படி ஒரு அண்ணா கிடைக்க குடுத்து வைக்கணும்...... :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா இப்படி ஒரு அண்ணா கிடைக்க குடுத்து வைக்கணும்...... :wink: :lol::lol:

ஆமா!! ஆமா!!! :idea:

( அப்பாடா தியட்டர் கட்டித் தருகின்ற வாக்குறுதியில் இருந்து தப்பித்தேன் :wink: ))

Link to comment
Share on other sites

தம்பி - திரைக்காவியத்துக்கு தமிழ்போராளி சுப. வீரபாண்டியன் (பிரபல இயக்குனர் எஸ்.பி. முத்துராமனின் தம்பி) எழுதிய விமர்சனம் சிறப்பாக இருக்கிறது படியுங்களேன் :-

தம்பி பட விமர்சனம் (விமர்சகர் சுப.வீ.)

சமூகத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறவன் துறவி. சமூகத்திற்காகத் தன்னை எரித்துக்கொள்கிறவன் புரட்சியாளன். தம்பி இரண்டாவது வகை.

தம்பி பொழைச்சிட்டான் என்று முடிகிறது படம். தம்பி ஜெயிச்சிட்டான் என்று நினைக்கிறது மனம்.

முரட்டுத்தனத்திற்கு வீரம் என்று முடிசூட்டி இருக்கும் தேசத்தில், எது உண்மையான வீரம் என்பதை இப்படம் விளக்குகிறது. 'இன்னொருத்தன் உயிரை எடுக்கிறதில்லே வீரம். மத்தவங்களைக் காப்பாத்துறதுக்காகத் தன் உயிரையும் கொடுக்கிறதுதான் வீரம்.'

பட்டாசு கொளுத்திப் போட்டதைப் போல, படம் முழுவதும் உரையாடல் வெடி, ஆனால் தம்பி ஏற்படுத்தும் உணர்வோ ஒரு தாயின் மடி. இம்முரண் தரும் அழகில்தான், இப்படம் இணையற்ற வெற்றியைப் பெற்றுள்ளது.

கொள்கைப் படங்கள் என்றாலே வறட்டுத்தனமாய்த்தான் இருக்கும் என்ற வசை இப்படத்தினால் ஒழிந்தது. பாதி இருட்டில் படம் எடுப்பதும், வாய்க்குள்ளேயே வசனம் பேச வைப்பதும்தான் தேர்ந்த இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு என்னும் மாயையும் இப்படத்தினால் நொறுங்கியது. வெளிச்சமாகவும், இரைச்சலாகவும்தான் இருக்கிறது படம்.

இந்த வெளிச்சம் இருட்டில் வாழும் மக்களுக்குத் தேவையான வெளிச்சம்.

இந்த இரைச்சல் ஊமைச் சனங்கள் இனியேனும் ஓங்கி ஒலிக்க வேண்டிய இரைச்சல்.

ஓர் உணவகத்தில், கல்லூரி மாணவி களிடம் கயவர்கள் சிலர் கண்ணியமற்று நடந்து கொள்ள, அகிம்சையைப் போதிக்கும் அந்தக் கதாநாயகியின் முன்னால் போய் நின்று, இப்ப நான் என்ன செய்ய, இப்ப நான் என்ன செய்ய? என்று தம்பி இரைச்சலிட, 'அடி, அவனுங்கள அடி' என்று படம் பார்க்கும் மக்கள் திருப்பி இரைகின்றனரே, அங்கே இருக்கிறது படத்தின் வெற்றி.

கதாநாயகனின் காப்பகத்தில் தையல் வேலை செய்யும் பெண் ஒருத்தியிடம், உங்க அப்பா என்ன செய்யிறார்? என்று கதாநாயகி கேட்க, ஜெயில்ல இருக்காரு என்கிறாள் அவள். அடுத்த பெண்ணிடம் அதே கேள்வியைக் கேட்க, எங்க அப்பாவைக் கொன்னுட்டுதான், அவ அப்பா ஜெயில்ல இருக்கிறார் என்று விடை வருகிறது.

கொல்லப்பட்டவனின் குடும்பம் மட்டுமன்று, கொலை செய்கிறவனின் குடும்ப¬ம் நாதியற்று நடுத்தெருவில் நிற்க வேண்டிவரும் என்பதை உணர்த்தும் இக்காட்சியைக் கொண்டே, இன்னொரு படத்திற்குத் திரைக்கதை எழுதலாம் போல் உள்ளது.

இரண்டு குடும்பங்களையும் காப்பாற்றும் தம்பி, மனித நேயத்தின் மற்றோர் உருவமாய் உயர்ந்து நிற்கிறான்.

பழிக்குப் பழி வாங்குவதைத்தான் நம் படங்கள் இதுவரை சொல்லி வந்துள்ளன. பழிக்குப் பழி வாங்குவதே வேலையா இருந்தா, பாதி உலகம் சுடுகாடாப் போயிடுமே என்னும் கவலையை இப்படம்தான் வெளிப்படுத்தியுள்ளது.

'எங்கப்பாவை நீ கொன்னுட்டே இன்னிக்கு நான் ஒன்னை வெட்டுவேன். நாளைக்கு ஒன் புள்ளை, கத்தியோட என்னைத் தேடி அலைவான். அப்புறம் என் மவன் அவனைத் துப்பாக்கியோட துரத்துவான். வேணாம்.... இந்த வேலையே வேணாம். யாராவது ஒருத்தர் எங்கயாவது நிறுத்தனும். இங்க... இப்போ... நான் நிறுத்திக்குறேன்' என்று வசனம் பேசிய கதாநாயகனை இதுவரை நாம் தமிழ்ப் படத்தில் பார்த்ததில்லை. இப்போதும் பார்க்காதவர்கள், தம்பியைப் போய்ப் பாருங்கள்.

சீமான் என்றொரு சிந்தனையாளனும், மாதவன் என்றொரு மாபெரும் நடிகனும், இப்படத்தைச் செதுக்கியுள்ள சிற்பிகளான உள்ளனர்.

ஒளிப்பதிவாளருக்கும் ஒரு பெரும் பங்கு உள்ளது. பாடல் வரிகளைத் தந்த முத்துக்குமார் விரல்களுக்கு மோதிரம் சூட்டலாம்.

சே குவேரா, பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் படங்கள் தம்பியின் வீட்டில்.

காரல்மார்க்ஸ், ஜென்னி, பகத்சிங் பற்றிய உரையாடல்கள் தம்பியின் பேச்சில்.

இப்படியொரு துணிச்சல், மார்க்சின் மாணவன், பெரியாரின் பேரன், தம்பியின் தம்பி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இயக்குனர் சீமானுக்குத்தான் வரும்.

அந்தத் துணிச்சலின் இன்னொரு வெளிப்பாடுதான், பெரியாருக்கும், பிரபாகரனுக்கும் இப்படத்தை அர்ப்பணிக்கிறேன் என்று, ஒரு வார இதழுக்கு அவர் வழங்கியிருக்கும் நேர்காணல்!

Link to comment
Share on other sites

வணக்கம் லக்கி லுக்,

பயனுள்ள ஆழமான விமர்சனமொன்றினை இங்கே இணைத்தமைக்கு நன்றிகள். :lol:

Link to comment
Share on other sites

நன்றி மதுரன்....

நான் குழந்தை மாதிரி இங்கே வந்திருக்கிறேன்... நீங்கள் என்னிடம் எப்படி பழகுகிறீர்களோ, அது மாதிரியே நானும் உங்களுடன் பழகுவேன்....

Link to comment
Share on other sites

எனக்கென்று கருத்து உண்டு.... நான் அதைச் சொல்லும்போது மாற்றுக் கருத்து இருந்தால் நீங்கள் அமைதியான முறையில் சொன்னான் அதை நான் அமைதியான முறையில் எதிர்கொள்வேன் என்று சொன்னேன்....

Link to comment
Share on other sites

பாதி இருட்டில் படம் எடுப்பதும், வாய்க்குள்ளேயே வசனம் பேச வைப்பதும்தான் தேர்ந்த இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு என்னும் மாயையும் இப்படத்தினால் நொறுங்கியது. வெளிச்சமாகவும், இரைச்சலாகவும்தான் இருக்கிறது படம்.

நல்லதொரு திரைப்படத்துக்கு, எழுதப்பட்ட சிறப்பானதோர் விமர்சனத்தில், இது போன்ற பிற படைப்பாளிகளை இலக்கு வைத்துதாக்குவது போன்ற கருத்துக்களைத்தவிர்த்திருக

Link to comment
Share on other sites

பாதி இருட்டில் படம் எடுப்பதும்' date=' வாய்க்குள்ளேயே வசனம் பேச வைப்பதும்தான் தேர்ந்த இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு என்னும் மாயையும் இப்படத்தினால் நொறுங்கியது. வெளிச்சமாகவும், இரைச்சலாகவும்தான் இருக்கிறது படம்[/color'].

நல்லதொரு திரைப்படத்துக்கு, எழுதப்பட்ட சிறப்பானதோர் விமர்சனத்தில், இது போன்ற பிற படைப்பாளிகளை இலக்கு வைத்துதாக்குவது போன்ற கருத்துக்களைத்தவிர்த்திருக

Link to comment
Share on other sites

இப்படி சொன்னால் எப்படி?? அப்படி என்றால் அரச்ச மாவையே அரைக்க சொல்கின்றீர்களா?

நான் அப்படிச்சொல்லவில்லை மதூரன், தமிழ் சினிமாவின் அபத்தமான போக்கைப்பார்த்து மனம் வெதும்பும் ரசிகர்கள் வரிசையில் நானும் ஒருவன். தம்பி சற்று வித்தியாசமானமுயற்சி. அதன் இயக்குனர், மற்றும் சம்பத்தப்பட்ட கலைஞர்கள், நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள். இந்தடத்தில் இன்னொரு படைப்பளியின் பாணியை தரம் தாழ்த்தி ஒப்பிடுவதுமுறை அல்லவே. மேலும் தமிழ்ச்சினிமாவை பிறர் திரும்பிப்பார்க்கவைத்த ஒரு சிறந்த இயக்குனரை இப்படி பாமரத்தனமாக விமர்சிப்பதென்பது தமிழ்ச்சினிமாவின் .

Link to comment
Share on other sites

ம்ம் உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கின்றதுதான். ஆனாலும் எனது சிந்தனைக்கு எதிர்மாறனதாக இருக்கின்றதென்பதை நீங்கள் மறைமுகமாக சொல்வதைப் போலவே விமர்சகரும் தனது கருத்தினை வைத்துள்ளார் எனலாமா? அடுத்து இன்னொன்று ஒளி பற்றி பேசும்பொழுது இருளின் தன்மைகளை விளக்குவது எவ்வாறு தவிர்க்க முடியாதோ. ஒளியை விரும்புகின்றோம் என்றால் இருளை வெறுக்கின்றோம் என நிஐங்கள் அர்த்தம் கொள்வது உங்கள் கருத்தியலின் சுதந்திரம். அதற்காக உங்கள் விமர்சனத்தின் மீதான விமர்சனம் தவறு என்று நான் அர்த்தப்படுத்தலாமா? :lol:

Link to comment
Share on other sites

அதற்காக உங்கள் விமர்சனத்தின் மீதான விமர்சனம் தவறு என்று நான் அர்த்தப்படுத்தலாமா

இது, என்னுடைய கருத்துப்பற்றிய மிகத்தவறான புரிதலின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டிருக்கும் எதிர்க்கருதாகவே நான் கொள்கிறேன்.எனது ஆதங்கத்தை உங்களுடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்..,ஒளியை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். அதற்காக, இருளைப்பற்றியும் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். அதற்கு, உண்மையான இருளையும், ஒளியையும் பற்றிய துல்லியமான தெளிவு அதைப்பற்றிப்பேசுபவருக்கு இருக்க வேண்டாமா? தவிரவும்..,''விமர்சனம்'' என்ற வரையறைக்குள் மேற்சொன்னவிடயம் வரவில்லையே. விமர்சனம் என்பது குறித்த விடயத்தின், நிறைகளைப்போலவே, குறைகளையும் நேர்மையான பார்வையுடன் முன்வைப்பதாக இருக்கவேண்டும்.ஒரு விமர்சகன் என்பவன்,படைப்பாளி தன்னைப்பர்த்து சுயவிமர்சனம் செய்து கொள்ளக்கூடிய கண்ணாடியாக இருக்க வேண்டுமே தவிர, மாயக்கண்ணாடியாக அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.