Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமகால சமூகமாற்றங்கள் நடவடிக்கைகளை தாங்கிய வாறு இந்த தொடர் வருகிறது. முற்று முழுதாக நகைச்சுவையை கருத்திக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிரிக்கும் வேளை சிந்திக்கவும் தூண்டினால் மகிழ்ச்சியே. முடிந்தவரை பல பாத்திரங்களை உருவாக்கியுள்ளேன்.. இன்னும் பல பாத்திரங்கள் உள்வாங்கப்படும். உறுப்பினர்கள் சம்மதத்துடன் பெயர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இணைய விருப்புவோர் தாராளமாய் இணையலாம். யாரையும் புன்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. முடிந்தவரை சிரிக்கவும் ரசிக்கவும் செய்வதற்கே இந்த முயற்சி.. ஆதரவுக்கு நன்றிகள். முடிந்தவரை ஒரு வாரத்தில் ஒரு நாள் அரசசபை கூடும். வாசித்து கருத்தை வைத்து மகிழுங்கள். பாத்திரங்கள் சித்திகரிக்கப்பட்ட முறையில் உடன்பாடு இல்லையெனின் உறுப்பினர்கள் தெரியப்படுத்தலாம் உரிய திருத்தம் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கின்றேன். இந்த தொடருக்கு ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றிகள். தொடருக்கு முன்னால் பின்னால் என்று காரணமாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

அறிமுகம்

மன்னர் ஹரியின் ஆட்சி ஏறியதில் இருந்து கதை ஆரம்பமாகிறது. அதுற்கு முதலானவை தவிர்க்கப்படுகின்றன. (இந்தப்பாகம் கதையில் வரும் பாத்திரங்களை அறிமுகம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது)

பாகம் 1

மன்னர் சபைக்கு வருகிறார் இது தான் மன்னர் ஹரி முடி சூட்டிய பின்னர் நடைபெறும் முதலாவது அசர ஒன்று கூடல். எல்லோரும் எழுந்து நிக்கிறார்கள். மன்னரிற்கு வாழ்த்து கூறுகிறார் அவையில் இருந்த ஒரு சேவகன்.

சேவகன்1 : மன்னாதி மன்னர்.. இன்னும் புறமுதுகு காட்டாதா.. தோல்வியைக்கண்டிராத.. ஏன் போர்க்களத்தை அறிந்திராத யாழ்களத்தின் மன்னர் ஹரி அவர்கள் வருக வருக.. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க!!!!!

மன்னர் ஹரி அவையோரிற்கு வணக்கம் கூறி அனைவரையும் அமரச்சொல்கிறார். எல்லோரும் அமர்கிறார்கள். தானும் அமர்ந்து அருகில் இருந்த மந்திரியின் காதலி எதையோ குசுகுசுக்கிறார்.

மன்னர்: மந்தி மந்திரிரி

மந்திரி: மன்னா என்ன பதறுகிறீர்கள்.

மன்னர்: யாரப்பா அந்த சேவகன் றொம்ப நல்லாவே பாராட்டிறார். புதிசாய் ஆட்சியேறிய மன்னர் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை.. கேட்பவர்கள் என்னை தப்பாய் நினைக்கப்போகிறார்கள். :)

மந்திரி: கவலை வேண்டாம் மன்னா அவை உறுப்பினர்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு இருக்கிறது அதில் நானே கூறிவிடுகிறேன்.

மன்னர்: அப்பாடா கவலை தீர்ந்திச்சு.. :lol:

இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று குடிமக்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு சந்தேகம் வர.. நாங்களும் இங்கால இருக்கிறம் என்று கத்துகிறார். அந்த குடிமகன் யார் என்பதை பின்னால் பாருங்கள். இப்போது சுதாரித்த மன்னரும் மந்திரியும் அசடு வழிகிறார்கள்.

மந்திரி: (கையில் ஒரு ஏட்டை எடுத்து.) மன்னருக்கு அவை பிரமுகர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடக்கப்போகிறது. நான் பெயர் கூறி அழைக்க ஒவ்வொருவரும் எழுந்து அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மன்னர்: யோவ் மந்திரி மன்னர் இருக்கட்டும்.. புதிய மன்னர் என்று கூறும் ஐயா.. (இந்த மந்திரி சேவகனோட சேந்திட்டார் போல)

மந்திரி: மன்னா கவலைவிடுங்கள் இதோ பல்டி அடிக்கிறேன்.

மந்திரி: முதலில் நமது புதிய மன்னருக்கு என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன்.

எனது பெயர் கவிதன் அந்த அரசசபையின் ஒரே ஒரு அறிவுள்ள திறமையுள்ள ஆற்றல் உள்ள அற்பணிப்புள்ள பட்டியல் நீள..

குடிமக்கள் பிரதிநிதி: ஓய் கவிதன் இதை எல்லாம் பின்னாடி வாற குடிமக்கள் பிரதிநிதிக்கு சொல்றதுக்கு இப்ப எதுக்கு சொல்றீர்

மந்திரி: சரி சரி நான் தான் கவிதன் இந்த நாட்டின் மந்திரி. :lol: (பொறாமை பிடிச்சவங்க என்ர அருமை பெருமையை இப்படி எடுத்துவிட்டாத்தான் உண்டு)

மன்னர்: ஓய் மந்திரி உம்மட வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் தெரியும் அடுத்தாளை கூப்பிடும் எத்தனை நேரமாய் இதையே ஓதுவீர்.

மந்திரி: உங்கள் சித்தம் என் பாக்கியம் மன்னரே. அடுத்ததாக எங்கள் தளபதி தல அவர்களை அறிமுகப்படுத்திறன்.

தல: வணக்கம் மன்னா.. நான் தான் இந்நாட்டு தளபதி இந்நாட்டில நடக்கிற வீரதீர செயல்களிற்கு சொந்தக்காரன். நானே நானே தானே.... (மந்திரி தளபதியைப்பார்த்து ஒரு வாறு முறைக்க தளபதி அமருகிறார்)

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பர். புலநாய்களின் நண்பர். புலனாய்வாளர் டண் அவர்கள். இவரது புலனாய்வானது... உலக புலனாய்வு இயந்திரங்களுடன் போட்டி போடுது. எங்கள் நாட்டில் இப்படி ஒரு புலனாய்வாளர் இருப்பது மகிழ்ச்சி. (கொஞ்சம் கனக்கவே ஐஸ் வைப்பம் பிறகு பிரியோசனப்படும் என்று மனதுக்குள் எண்ணுகிறார்.)

டன்: வணக்கம் மன்னா... நன்றி கவிதன். (ரொம்ப ஓவராய் ஐஸ் வைக்கிறீர் எதுக்கென்று தெரியல) மன்னா எனது புலனாய் அறிக்கையின் படி உங்கள் அரண்மனையில் வெகுவிரைவில் கெட்டிமேளம் கொட்ட இருப்பதாய் அறிந்தேன்.............. (இழுக்கிறார்..)

எல்லாரும் முனுமுனுக்கிறார்கள்.

மன்னர் : ஓய் மந்திரி உவரைக்கொஞ்சம் சும்மா அடக்கி வாசிக்கச்சொல்லும் இப்பான் அடிமடியிலையே கையை வைக்கிது..

மந்திரி எழுகிறார் டன் அமர்கிறார்.

மந்திரி: மன்னா அடுத்து வருபவர் சிறுவர் பிரதிநிதி வெண்ணிலா.. எங்கள் நாட்டு சிறுவர்கள் பற்றி இந்த சுட்டியிடம் அறிந்து கொள்ளலாம். குறுக்காக கேள்விகேட்பார்.. குறுக்கெழுத்துப்போட்டி வைப்பார். மூளைக்கு வேலை வைப்பர். பார்த்து பிறகு அவஸ்த்தைப்பட வேண்டி வரும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மன்னர்: என்ன மந்திரி மானத்தை வாங்கிறீர்.

வெண்ணிலா: வணக்கம் மன்னா நான் தான் சுட்டி வெண்ணிலா.. சுட்டித்தனம் பண்ணும் சுட்டிகளின் சார்பில் அவை வந்திருக்கிறேன். நன்றி வணக்கம்.

மந்திரி: அடுத்ததாக நான் அறிமுகப்படுத்த இருப்பவர்.... எங்கள் அரசசபையின் சட்டத்தரணி.. நித்திலா அவர்கள்...

நித்திலா: வணக்கம் மன்னா... நான் நித்தி என்று அழைக்கப்படும் நித்திலா.. எங்கள் அரசசபை சட்டத்துறையை பொறுப்பெடுத்துள்ளேன். வாழ்த்துக்கள் மன்னா என அமர்கிறார்.

மந்திரி: நன்றி நித்திலா.. அடுத்து அறிமுகமாக இருப்பவர்.. தூயா.. தூயா பபா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் தான் எங்கள் கதாசிரியர் பல கதைகளை எழுதி எம்மக்களிடம் பாராட்டுப்பெற்றவர்.

தூயா: வணக்கம் மன்னா. நான் தூயா.. இப்பொழுது.. புலத்துப்புலம்பல்கள் என்ற தொடரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.. பல்வேறுபட்ட அனுபவங்களையும் கதையாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். நன்றி வணக்கம்.

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பவர்.. எங்க ஊருப்பாட்டுக்காரன். பந்தும் கையுமாய்திரிந்தாலும். இளையராஞா தேவா ஏர் ரகுமான் தரதத்தில் பாடல்களை எடுத்துவிடுவார்.

மன்னர்: நிஜமாகவா..??

மந்திரி: சொல்ல மறந்திட்டன் அவர்களின் பாடல்களை வாரி வழங்குவார் என்று சொல்லவந்தன்.

விஸ்ணு: கவிதன் அண்ணா காலை வாருறியளே.... வணக்கம் மன்னா நான் தான் உங்க ஊருப்பாட்டுக்காரன் விஸ்ணு உங்களுக்கு போரடிக்காமல் இருக்க.. சுட்ட பாடல்களை பகிர்ந்து கொள்ள முடியும் தேவைப்பட்டால் கூறுங்கள்.

மன்னர்: நன்றி விஸ்ணு

மந்திரி: மன்னா அடுத்து அறிமுகமாக இருப்பவர் பிரச்சார பிரதிநிதி தூயவன்.

மன்னர்: ஓய் மந்திரி இப்படி எல்லாம் எங்க நாட்டில இருக்கா என்ன..??

மந்திரி: மன்னா உங்களுக்குத்தெரியாது இவரிடம் வாய் கொடுத்தால் தப்பவே முடியாது பிரச்சாரம் பண்ணியே கலைச்சிடுவாங்க.. ஆக்கள.. நாட்டப்பற்றி யாராவது கதைச்சா கதை கந்தல் தான்.

மன்னர்: அப்ப நான்கொஞ்சம் கவனமாய் இருக்கணும் என்றீர்.

தூயவன்: வணக்கம் வந்தனம் மன்னா. சதிகள் நடக்கும் அடுத்த கணம் தடுத்து நிறுத்துவேன். ஓடி ஒழியேன் ஒதுங்கிப்போகேன்.. போர் போர் போர்.. சொற்போர்..

மன்னர்: பாத்து பாத்து உங்கட சொற்போர்.. அப்பாவி மக்களை விட்டு வைக்கட்டும். எதிரிகளோட தொடரட்டும்.

(உங்கட சொற்போர்ல சிக்கியிருப்பவர்கள் அப்பாவிகள் என்று அறிஞ்சன்)

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பவர் வினித். சினிமாத்துறையின் சிங்கம்.. சினிமாத்துறையை குத்தகைக்கே எடுத்து விட்டார் அப்பப்ப பிரச்சாரத்துறையிலும் களம் இறங்குவார்.

மன்னர்: அரண்மனைக்க எப்படி சினிமா போஸ்டர் வந்தது என்று இப்பான் புரிஞ்சிச்சு.. யாரு அந்த பொண்ணு..??

மந்திரி: மன்னா அது வந்து வந்து.. அழகுராணி அசின்.

வினித்: வணக்கம் மன்னா வணக்கம். எஙகள் மக்களிற்கு பொழுது போக்கும் வேணும் அல்லவா அது தான் சினிமா.. அது தான் வீணாய்ப்போன நான் வினித்தாக மாறி சேவை செய்கிறேன். மன்னர்ளிற்கெல்லாம் சினிமா இல்லை.. அந்த பொண்ணு பற்றிய விசாரணை காணும்.

மன்னர்: மந்திரியின் காதில்.. என்னையா இவரு நமக்கே கட்டளை இடுறார் :) .

மந்திரி: அசினின் தீவிர ரசிகராம் நீங்க அவாவைப்பத்தி விசாரிக்க கோவம் வந்திட்டு.. கீழாழ விட்டிடுங்க..

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பவர் எங்கள் அருவி.. தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கிறார்.

மன்னர்: தகவல் தொழில் நுட்பமா ??? எதுக்கையா நமக்கு அது

மந்திரி: இன்னும் புறாவிலையும் கழுகிலையும் நில்லுங்கோ.. இவர் புதிய தொழில்நுட்பங்களை நம்மட நாட்டிற்கு அறிமுகப்படுத்துவார்.

மன்னர்: பொறுத்திருந்து பார்ப்பமே

அருவி: வணக்கம் மன்னா நன் அருவி.. உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அருவி பேசிக்கொண்டு அமர்கிறார்.

தொடரும்..!

அடுத்த பகுதியும் அறிமுகமே

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவையில் எல்லோரும் ஏதோ முனுமுனுக்கிறார்கள்.

மன்னர்: அங்கே என்ன கூச்சல் அமைதி!! அமைதி!!

"குடி"மக்கள் பிரதிநிதி ஒருவர் தள்ளாடி தள்ளாடி வருகிறார். அவையில் இருந்த ஒரு பெண் பிரதிநிதி முறைக்கிறார்.

மன்னர்: மந்திரி யாரது அவை மரியாதை தெரியாத அந்த நபர் யார்? ஏன் தாமதமாய் வந்திருக்கிறார்.

மந்திரி: (ரகசியமாய் அவை மரியாதையா அப்படி என்றால் என்ன புதுசு புதுசா சொல்றாங்கப்பா) மன்னா இவர் சபையில் ஒரு முக்கியமான நபர் இவர் குடிமக்கள் பிரதிநிதிகளில் ஒருவர். இவர் பொய் முகத்தார்.

மன்னர்: "குடி" மக்கள் பிரதிநிதியில் ஒருவரா..?? பார்க்கவே தெரிகிறது. முகத்தாரே சபைக்கு ஏன் தாமதம்..??

முகம்ஸ்: வணக்கம் மன்னா.. நான் தான் "தீ கிறேரட் முகத்தார்". நமது யாழ்தேவி சே எனது கழுதை காலைவாரி கல்லுக்கொட்டிலுக்குள் தள்ளிவிட்டது அதுதான் லேட் . உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மன்னாதி மன்னர் புறூஸ்லி சுந்தரர் எங்கள் மன்னர் ஹரி வாழ்க வாழ்க வாழ்க!!

மன்னர்: வாழ்த்துக்கள் இருக்கட்டும் நீர் குடிமக்கள் பிரதிநிதி என்பதால் சபைக்கு குடித்துவிட்டு வரவேண்டும் என்பது அர்த்தமில்லை அடுத்த முறை பார்த்துக்கொள்கிறேன்.

முகம்ஸ்: சோ வாழ்த்துக்கள் என்ற பெயரில பொய் பொய்யா அள்ளிவிட்டும் அந்த மனிசன் குளிரேல்ல.. ம் ம் பாத்திக்கிறன்.

மந்திரி: அடுத்ததாக நாங்கள் அறிமுகப்படுத்த இருப்பது.. "ஒரு யென்டில் அப்பு" அவர் ஒரு குடிமகன் அதைவிட குடிமக்கள் பிரதிநிதி அவர் தான்.. சீ சீ சீ சீ சின்னப்பு..

மன்னர்: இந்த மந்திரிக்கு வேறை வேலையில்லை.. அர்ஜீன் கோவிக்கப்போறர். (மனசுக்குள்)

சின்னப்பு : ஓய் கவி நன்றி மேன். வணக்கம் மன்னா... நான் நான் நான் நான்.. தான் சின்னப்பு குடி குடியைக்கெடுக்கும் என்ற பழமொழியை பொய்யாக்க வந்த குடிமக்கள் பிரதிநிதி. என்னைப்பத்தி நானே சொல்லக்கூடாது பிறர் சொல்வார் கேட்டு அறிந்து கொள்ளும். மன்னர் வாழ்க குடி வாழ்க குடிமக்கள் வாழ்க.!!

அமர்கிறார் குடிமகன். பெண்கள் பகுதியில் இருந்து ஒருவர் மகிழ்ச்சி பொங்க சின்னப்புவை வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார

Link to comment
Share on other sites

ஜோரா இருக்கு...சிந்திக்க மட்டுமில்ல சிரிக்கவும் வைப்பீங்க...ம்ம்..தொடர்ந்து எழுதுங்கோ...! வாழ்த்துக்கள்..! :P

Link to comment
Share on other sites

அடி சக்கை எண்டானாம் தமிழும் தூள் கிளப்பப்போறா போல கிடக்கு ...........அறிமுக அரச சபையே நல்லா இருக்கும் தொடர் நல்லா இருக்கும் என நினைக்கிறன் ( சா முகத்தார் வீட்டுக்கு வேலை இல்லாமல் போட்டுது பரவாயில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம்ஸ் நக்கல் தானே வேணாங்கிறது.. முகத்தார் வீட்டிற்கு கிட்டவும் வராது நம்ம அரசசபை.. நக்கல் பண்ணாமல் முகத்தார் வீட்டை தொடருங்கோ.. எல்லாம் நீங்கள் கொடுத்த தைரியம் தான்.. :wink: :P

Link to comment
Share on other sites

ஆரம்பமே அசத்தலாயிருக்கு தமிழ் அக்கா :P

எங்க மன்ரின் தங்கையையும் மகள் மழலையையும் சபைக்கு அறிமுகப்படுத்தேல்ல அடுத்த பகுதியில வருவார்களா :P :P

தொடருங்கள் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறம் (மன்னரின் தங1;கை காசி போன காட்சிக்காக பலர் காத்துக் கொண்டிருக்கினம் 8) :) )

என்ன இருந்தாலும் மன்னர் ஆரம்பத்திலேயே மந்திரியை மந்தி மந்திரி எண்டு உண்மையான பெயரை சொல்லியிருக்காரே தைரியம் தான் :):lol:

Link to comment
Share on other sites

ஆகா... தமிழினி அக்கா,அறிமுகமே அமர்களமாயிருக்கு..."அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..." தலைப்பும் வித்தியாசமாய் இருக்கு.... சிரிப்புடன் சிந்திக்கவும் வைப்பீங்க ,,,, தொடருங்கள்... வாத்துக்கள்....! :P :P

Link to comment
Share on other sites

ஆகா தமிழினியும் தொடர் எழுத ஆரம்பித்து விட்டாரா.

முகத்தார் தொடர் போல் இந்த தொடரும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் தமிழினி

Link to comment
Share on other sites

ஆகா தொடர், அதுகும் அரச குடும்பம், நல்லா இருக்கே அக்கா தொடருங்க.

மன்னர தான் களத்திலை காணக்கிடைக்குதில்லை, உங்கட சபையிலையாவது வாறரே :P

Link to comment
Share on other sites

அக்கா அசத்திட்டீங்கள் தொடர்ந்து எழுத வாழத்துக்கள்

அப்புறம் மன்னரின் தங்கையான நீங்களே இப்படியெல்லாம் மன்னரைப் பற்றி சொல்லலாமா? :?: :?: :?: :roll: :roll:

பாவம் மன்னர் :):lol::):lol:

Link to comment
Share on other sites

ஆகா அரச குடும்பத்தின் தாண்டவளங்கள் எல்லாத்தையும் தமிழினி தரப்போகின்றா. எல்லோரும் கேட்பதற்கு தயராகுங்கள்.

தமிழினி தொடக்கமே நகைச்சுவையாக இருக்கின்றது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க மன்ரின் தங்கையையும் மகள் மழலையையும் சபைக்கு அறிமுகப்படுத்தேல்ல அடுத்த பகுதியில வருவார்களா

வருவாங்க வருவாங்க பின்னாடி வருவாங்க :P

ஆகா... தமிழினி அக்கா,அறிமுகமே அமர்களமாயிருக்கு..."அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..." தலைப்பும் வித்தியாசமாய் இருக்கு.... சிரிப்புடன் சிந்திக்கவும் வைப்பீங்க ,,,, தொடருங்கள்... வாத்துக்கள்....!

நன்றி அனி.. எழுதிப்போட்டுப்பாத்தன் இதை பொறுமையா வாசிக்க முடியுமா என்று.. நினைத்தேன். :D

ஆகா தமிழினியும் தொடர் எழுத ஆரம்பித்து விட்டாரா.

முகத்தார் தொடர் போல் இந்த தொடரும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் தமிழினி

முகத்தார் தொடர்போல அற்புதமாய் வராது.. ஏதோ சிரிக்க பழைய நினைவுகளை மீட்ட ஒரு தொடர்.. நன்றி மதன். :P

உங்கள் நகைச்சுவை தொடர் நன்றாக உள்ளது தொடர்ந்து தாருங்கள்

நன்றி ரசிகை.. :P

அது சரி எப்ப இளவரசி அரன்மனைக்கு வருவா

நானே இப்பான் தேடிறன் அவா எங்கை என்று வருவா வருவா.. :wink: :P

மன்னர தான் களத்திலை காணக்கிடைக்குதில்லை, உங்கட சபையிலையாவது வாறரே

நன்றி குளம்.. இதைப்படிக்கவாவது வரணும்ல.. :wink: :P

அப்புறம் மன்னரின் தங்கையான நீங்களே இப்படியெல்லாம் மன்னரைப் பற்றி சொல்லலாமா?

அட நீங்க வேறை அண்ணாவைப்பத்தி தங்கை எடுத்தி விட்டா ஒரு மகிழ்ச்சி தானே..??

:wink: :P

ஆகா அரச குடும்பத்தின் தாண்டவளங்கள் எல்லாத்தையும் தமிழினி தரப்போகின்றா. எல்லோரும் கேட்பதற்கு தயராகுங்கள்.

தமிழினி தொடக்கமே நகைச்சுவையாக இருக்கின்றது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

நன்றி றமா.. :P

þо¡ý ¦º¡øÖÈÐ ±ó¾ôÒò¾¢ø ±ó¾ôÀ¡õÒ þÕ츢ñÎ ¦¾Ã¢Â¡..Â째¡ õ........

என்ன விது திட்டிறியளா..?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

þÇÅú¢Â¢ý ÍÂõÅÃò¾¢üÌ ¾Â× Ü÷óÐ µ¨Ä «ÛôÀ×õ. þÐ측¸ Å£ðÄ ¿õÀ ¾¡ò¾¡ ¦Ã¡õÀ ¿¡Ç¡ ¸¡òÐì ¸¢¼ì¸¢È¡Õ! Å¢øÖ ´Ê츢Ⱦ Å¢ðÊðÎ, ÒØ즸¡ÊÂø ´Ê츢ÈÁ¡¾¢Ã¢ ²¾¡ÅÐ §À¡ðÊ Åí¸ñ½¡ ¿õÀ ¾¡ò¾¡ ±ôÀÊÔõ ¦ƒÂ¢îº¢ÎÅ¡÷! ¡÷ «í§¸? «¨ÆòÐ Å¡Õí¸û þÇÅú¢¨Â!

Link to comment
Share on other sites

þÇÅú¢Â¢ý ÍÂõÅÃò¾¢üÌ ¾Â× Ü÷óÐ µ¨Ä «ÛôÀ×õ. þÐ측¸ Å£ðÄ ¿õÀ ¾¡ò¾¡ ¦Ã¡õÀ ¿¡Ç¡ ¸¡òÐì ¸¢¼ì¸¢È¡Õ! Å¢øÖ ´Ê츢Ⱦ Å¢ðÊðÎ' date=' ÒØ즸¡ÊÂø ´Ê츢ÈÁ¡¾¢Ã¢ ²¾¡ÅÐ §À¡ðÊ Åí¸ñ½¡ ¿õÀ ¾¡ò¾¡ ±ôÀÊÔõ ¦ƒÂ¢îº¢ÎÅ¡÷! ¡÷ «í§¸? «¨ÆòÐ Å¡Õí¸û þÇÅú¢¨Â![/color']

:lol::D:lol:

நல்லா இருக்கு அக்கா....அடுத்தது எப்பொ வரும்..? :lol:

Link to comment
Share on other sites

அக்கி, அருமை அருமை ;) தொடருங்கள். பாரட்டுக்கள் & வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

அக்கா அறிமுகப்படலம் சூப்பர்.

ஆமா அக்கா இனி காசி யாத்திரை படலம் , இளவரசி இளவரசனை தேடிய சுயம்வர காண்டம் எல்லாம் எப்ப அக்கா? அக்கா நல்லாக சிரிக்க வைத்து பழையனவற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி. பழைய இனிய நினைவுகள் தாலாட்டை விட சுகமாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள் :P

ஆமா அவைக்கு ஏன் குருவியண்ணா தாமதமாக வந்தவராம்? மலர் அண்ணி விடல்லையாமோ? :roll:

Link to comment
Share on other sites

அக்கா அறிமுகப்படலம் சூப்பர்.

ஆமா அக்கா இனி காசி யாத்திரை படலம் , இளவரசி இளவரசனை தேடிய சுயம்வர காண்டம் எல்லாம் எப்ப அக்கா? அக்கா நல்லாக சிரிக்க வைத்து பழையனவற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி. பழைய இனிய நினைவுகள் தாலாட்டை விட சுகமாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள் :P

ஆமா அவைக்கு ஏன் குருவியண்ணா தாமதமாக வந்தவராம்? மலர் அண்ணி விடல்லையாமோ? :roll:

மன்னரின் அழைப்பு தாமதமா வைத்திச்சுதா...அதுதான் தங்கையே..! பாவம் மலரண்ணி அவா அச்சா..! :wink: :P

Link to comment
Share on other sites

மன்னரின் அழைப்பு தாமதானா வைத்திச்சுதா...அதுதான் தங்கையே..! பாவம் மலரண்ணி அவா அச்சா..! :wink: :P

ஓஹோ. எதுவானாலும் மலரண்ணியை விட்டுக்கொடுக்க மாட்டிங்களே. :lol:

ஐயோ அண்ணா அக்கா வந்தால் திட்ட போறா. அரச சபைக்குள் மலரண்ணியும் மாந்தோப்பும் பற்றி கதைக்கிறதுக்கு. :cry: :wink:

அண்ணா அக்காட்டை சொல்லி "மலரண்ணியும் மாந்தோப்பும்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத சொல்லுவமா? :roll: :wink: :?: :arrow: :idea:

Link to comment
Share on other sites

அடடே...! அரசவை களைகட்டீட்டுதுபோல கிடக்கு.... மன்னர்பாடுதான் பாவம்........ எங்களை எல்லாம் கட்டி மேய்க்கிற பொறுப்பாளர் எல்லே....

மன்னரின் மானத்தை வாங்கினால் இளவரசி எண்டு கூட பாக்காமல் த..ள(ல)பதி நடவடிக்கை எடுக்கவேண்டிவரும்..... இது மன்னர் கட்டளை....... :evil: :evil: :evil: ((((( மன்னா சம்பளத்தை இப்பவாவது தாங்கோ))))))

தமிழ் சூப்பர் மிச்சம் எப்பவரும்.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

þÇÅú¢Â¢ý ÍÂõÅÃò¾¢üÌ ¾Â× Ü÷óÐ µ¨Ä «ÛôÀ×õ. þÐ측¸ Å£ðÄ ¿õÀ ¾¡ò¾¡ ¦Ã¡õÀ ¿¡Ç¡ ¸¡òÐì ¸¢¼ì¸¢È¡Õ! Å¢øÖ ´Ê츢Ⱦ Å¢ðÊðÎ, ÒØ즸¡ÊÂø ´Ê츢ÈÁ¡¾¢Ã¢ ²¾¡ÅÐ §À¡ðÊ Åí¸ñ½¡ ¿õÀ ¾¡ò¾¡ ±ôÀÊÔõ ¦ƒÂ¢îº¢ÎÅ¡÷! ¡÷ «í§¸? «¨ÆòÐ Å¡Õí¸û þÇÅú¢¨Â!

_________________

சாணக்கியன்.. பாவம் உங்க தாத்தா.. நம்ம அரச குடும்பத்தில சீதனச்சந்தையும் இல்லை சுயம்வரச்சந்தையும் இல்லை.. ஆதலால் உங்கள் தாத்தாவிற்கு பொருத்தமாய் ஒரு பாட்டியைத்தேடுங்க.. :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.