Jump to content

கருணாநிதியின் சந்தர்ப்பவாதக் கூச்சல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளை விரட்டியே தீருவேன் என்று முழக்கிய வீராங்கனை அல்லவா ஜெயலலிதா?: கருணாநிதி கிண்டல்

[செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2006, 06:52 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி தமிழக அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளை என்றும் ஆதரிப்பேன் என்று கூறியதால் இந்திய அரசாங்கம் கொண்டு வந்த பொடா சட்டத்தினால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யபட்டார்.

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதை பிரதான கட்சிகளான கருணாநிதியின் தி.மு.க.வும் ஜெயலலிதாவின் அண்ணா தி.மு.க.வும் தங்களது பேச்சுக்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளை ஆதரித்தமைக்காக வைகோவை பொடா சட்டத்தில் சிறையிலடைத்த அண்ணா தி.மு.க.வின் சார்பில் இப்போது பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை முன்னிறுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

செஞ்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பாக பேசியதாவது:

கர்நாடக மாநில புதிய முதல்வர் சொல்கிறார்..தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழிற்சாலை ஆந்திராவிற்குப் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். அந்தத் தொழிற்சாலை ஆந்திராவிற்கும் வேண்டாம். தமிழ்நாட்டிற்கும் வேண்டாம். ஏனென்றால் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். ஆந்திராவில் நக்சலைட்கள் இருக்கிறார்கள், ஆகவே அந்தத் தொழிற்சாலையை கர்நாடகத்திற்குத் தாருங்கள். இங்கே அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார் என்றால், இதைப் பற்றி தமிழ்நாட்டு முதலமைச்சர் வாய் திறந்திருக்கிறாரா?

இங்கே விடுதலைப் புலிகள் எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்க வேண்டாமா?

விடுதலைப் புலிகள் எப்போதே இருந்தார்கள், இப்போது இல்லை என்று சொல்ல வேண்டாமா முதலமைச்சர். அதிகாரபூர்வமாக பதிலளிக்க வேண்டாமா?

சொன்னவர் சாதாரணமானவர் அல்லவே!

பக்கத்து மாநில முதலமைச்சர் அல்லவா? புதிய முதலமைச்சர் தமிழ்நாட்டிலே விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். ஆகவே, அந்தத் தொழிற்சாலையை எங்கள் மாநிலத்திற்குத் தாருங்கள் என்று கேட்கிறார்.

அதை மறுத்துப் பேச தமிழக முதல்வருக்கு முடியவில்லை.

ஏன் விடுதலைப் புலிகள் என்றால் உங்களுக்குப் பயமா?. இந்த அம்மையாருக்குத்தான் பயமே கிடையாதே!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் விடுதலைப் புலிகளையெல்லாம் விரட்டியே தீருவேன். விடுதலைப் புலிகள் துரோகிகள், அவர்களுக்குத் தமிழ்நாட்டில் எள்ளளவு இடமும் தரமாட்டேன் என்று நீட்டி முழக்கிய இந்த வீராங்கனை ஏன் இப்போது கர்நாடக முதல்வரின் கூற்றுக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார். அப்படி ஒன்றும் விடுதலைப் புலிகள் இங்கேயில்லை, அவர்களால் தொழில் வளருவது ஒன்றும் கெடாது என்று சொல்லியிருக்க வேண்டாமா? என்றார் கருணாநிதி.

Link to comment
Share on other sites

அப்படி என்ன புத்தியை அந்த செய்தி சொல்லீட்டுது....??? ஓ கருணாநிதி சொன்ன புத்தியா...??? அவரை யார் மதிக்கிறார்கள்.....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா கருணாநிதியே!

நீங்கள், குடும்பத்திற்காக ஆடிவரும் அரசியல் நாடகத்திற்கு எம் வாழ்விற்கான போராட்டம்தான் கிடைத்ததா?? பல வருடங்களின் பின் தமிழகத்தில் ஏற்பட்டுவரும் வரும் சூழ்நிலைகளை மீண்டும் சிதைப்பதற்காகவா உந்த ஊளைகள்??

மக்கள் மத்தியில் அஞ்ஞாதாவசத்திலிருக்கும் உங்கள் மகனை முதல்வராக்குவதற்கு என்ன என்ன நாடகமெல்லாம் ஆடவேண்டியிருக்கிறது!! வெட்கக்கேடு!! உங்களுக்கு, வைகோவை தூக்கியெறியும் போது புரியவில்லையா உனக்கு, அவரின் பலம்??

தயவுசெய்து ஈழத்தமிழரின் உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை, உங்கள் மூன்றாம்தர குடும்ப அரசிலுக்கு பலியாக்காதீர்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் மகள் கனிமொழியும், ப.சிதம்பரம் மகன் கார்த்திக்கும் இணைந்து நடத்தும் கருத்து என்ற இணைய தளம் சமீபத்தில் தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக வருவார்கள் என்று கருத்துக் கணிப்பு நடத்தியது.

இதில் வைகோவுக்குத்தான் அடுத்த முதலமைச்சர் என்ற முறையில் 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

மு.க.ஸ்டாலினுக்கு 10 விழுக்காடுதான் கிடைத்துள்ளது.

http://www.eelampage.com/?cn=24201

Link to comment
Share on other sites

140220060040090gk.jpg ஒரு குடும்பமே தொகுதியை பங்கிட்டுக்கொள்ளுது பகல் கொள்ளை அடிக்கிறதுக்கு.........
Link to comment
Share on other sites

இந்திய உளவுத்துறை செய்யும் கொலைப்பட்டிலையும் போட்டீர்கள் என்றால் இன்னும் கண்ணீர் வரும்

மூக்குடைபட்டும் திருந்தவில்லை இந்த இந்திய பத்திரிகைகளும் இந்நிய உளவுத்துறையும் திரும்பவும் திரும்பவும் மூக்குடை பட நிக்கிறது இவர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வோண்டும்

Link to comment
Share on other sites

யாரை ஆண்டவன் காப்பாற்ற வேண்டும்? ஏற்கனவே சிலரை நிர்க்கதியாய் விட்டு வைத்திருக்கிறார்.......

யாரை உங்களைப் போன்றவர்களையா

பாவம் செய்தவர்களை கண்டு கெள்வதில்லை

Link to comment
Share on other sites

நாங்களா நாடில்லாமல், வீடில்லாமல் திரிந்து கொண்டிருக்கிறோம்.... வாய் மட்டும் அடங்காதே உங்களுக்கெல்லாம்......

Link to comment
Share on other sites

எதுக்கும் ஒருக்கால் யாழ்ப்பாணம் அல்லது வன்னிக்கு சென்று பாருங்கள் அதன் பின்பு கருத்தை வையுங்கள் (செல்வது கடினமாக இருந்தால் இலங்கைக்கு வாருங்கள் அங்கிருந்து நான் கூட்டிச் செல்கின்றேன்)

Link to comment
Share on other sites

நாங்களா நாடில்லாமல், வீடில்லாமல் திரிந்து கொண்டிருக்கிறோம்.... வாய் மட்டும் அடங்காதே உங்களுக்கெல்லாம்......

அப்படி எல்லாம் இருக்கு எண்டா எதுக்காக வேறு நாடுகளில போய் plate கழுவுறீங்க :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த்க் கருணாநிதிக்கு, தேர்தல் வருவதென்றால் மட்டும் வைகோ கண்ணில் தெரியும்!! மற்றும்படி அவருடைய குடும்ப அரசியல்வாதிகளுக்கும், குடும்ப ஊடகங்களுக்கும் வைகோவை தெரியவே தெரியாது!

இன்று மீண்டும் அதிமுக வின் செல்வாக்கு அதிகரித்துள்ள போதுதான், வைகோவை விட்டால் கதை கந்தல் என்று நினைத்து விட்டார் போல!!

இன்று வைகோவை வைத்திருப்பதற்காக எப்படி எப்படியெல்லாம் ஊளையிடலாமோ, அப்படியெல்லாம் ஊளையிட தொடங்கி விட்டார்! அதன் ஒரு வெளிப்பாடே இதெல்லாம்!!!

Link to comment
Share on other sites

வைகோவுக்கே 13 வருடங்களாக தமிழ் மக்கள் ஆப்படித்து வருகிறார்கள்....

இவரை நம்பி ஜெயாவும், கருணாநிதியும் இருக்கிறார்கள் என்றால் நகைச்சுவையாக இருக்கிறது....

சுப்பிரமணிய சாமியை விட வைகோவுக்கு கொஞ்சம் ஆதரவு உண்டு... அவ்வளவு தான்... இல்லாவிட்டால் சென்ற தேர்தலில் 200 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருப்பாரா என்ன?

Link to comment
Share on other sites

வைகோவை எங்கே ஜெயலலிதா தன்பக்கம் இழுத்துவிடுவார் என்கிற அச்சத்தினால், பழைய சம்பவங்களை கருணாநிதி தனதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணாநிதி, வைகோவுக்கு எப்படியும் அதிகளவு ஆசனங்களை கொடுக்கப் போவதில்லை. அதேவேளை வைகோவை ஜெயலலிதா பக்கம் செல்ல விடாமல் தனது வார்த்தை ஜாலங்கள், நினைவாற்றல் சக்தி(!?) ஆகியவற்றினூடாக தடுக்க முனைகிறார்.

கருணாநிதி அரசியலில் சாதித்தது எனில், அவருடைய குடும்பத்தையும், சொத்தையும் சேகரித்ததுதான். கட்சிக்காக உழைத்தவர்களை கருணாநிதி தூக்கி வைத்ததில்லை. மாறாக தூக்கியெறிந்திருக்கிறார். இதில் வைகோ உட்பட பலர் அடங்குகிறார்கள்.

இதற்கு ஒரு உதாரணம். தமிழ்நாட்டில் அண்மையில் ஜெயலலிதா கேபிள் டிவி உரிமையை அரசு உடமையாக்க போவதாக அறிவித்தார்.

வெள்ள நிவாரணத்துக்கு நிதி கொடுக்க செல்லாத கருணாநிதி, தனது குடும்ப தொலைக்காட்சியான சண் டிவிக்கு ஆபத்துவந்துவிட்டதனை அறிந்து ஆளுநரிடம் மனு கொடுக்க சென்றிருக்கிறார்.

இதிலிருந்தே நீங்கள் எல்லோரும் கருணாநிதியை புரிந்துகொள்ளுங்கள்.

முன்னர் இதே கருத்துக்களம் பகுதியில் கூறியதனை இங்கே மீண்டும் வலியுறுத்துகிறேன். நான் ஜெயலலிதாவுக்கு வக்காளத்து வாங்க இங்கே வரவில்லை.

புலிகளை எதிர்க்கிறேன் அல்லது ஆதரிக்கிறேன் என்று ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியும், கூறிவருகிறார். ஆனால் இந்த கருணாநிதி தன்னையும் குழப்பி மக்களையும் குழப்பி அறிக்கை விடுகிறார்.

இவருடைய அறிக்கை வேண்டுமெனில், தமிழ்நாட்டுத் தமிழர்களை ஏமாற்றலாம். ஆனால் ஈழத் தமிழர்களை ஏமாற்ற முடியாது. இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

வைகோ, ஜெயலலிதா கட்சியிலிருந்தாலும் சரி, இந்திரா காங்கிரசிலிருந்தாலும் சரி தனது நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காதவர். ஆகவே அவர் தமிழ்நாட்டில் தனது இருப்பை உறுதிப்படுத்த ஜெயலலிதாவின் அழைப்பையேற்று அவருடன் இணைந்து தேர்தலில் நின்றால் அவரது கெளரவம் காப்பாற்றப்படும். இல்லையேல் கருணாநிதி மீண்டுமொரு தடவை வைகோவை புதைகுழிக்கே அனுப்புவார். அல்லது அழித்துவிடுவார்.

இதில் இன்னொரு விடயம் குறிப்பிட்டாக வேண்டும்.

நீண்டகாலத்துக்குப்பின்னர் ஈழப்பிரச்சனை தமிழக தேர்தல் களங்களில் சூடுபிடித்திருப்பதுதான். ஆக, விடுதலைப் புலிகள் விவகாரம் தமிழ்நாட்டிலும் அரசியலாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூலிகள்/அடிமைகளுக்கு உலகிற்கு வரவிலக்கணமானவர்கள் நீங்களே!! உங்களுக்கெங்கே புரியப் போகிரது அகதி என்ரால் என்னவென்று??

உலகில் முதல் அகதியான யூதனே, இன்று உலகையையே ஆட்டிப்படைக்கும் சக்தியாக வந்துள்ளான்!! நாளை ஈழத்தமிழனும் .... உலகையையே ஆழ்வோம்!!

Link to comment
Share on other sites

எங்களுடைய தலைமையைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாம் உறுதியாகவே இன்று வரை இருக்கிறோம்.

தமிழ்நாட்டுத் தலைவர்களைப் போன்று மக்களை உறிஞ்சுபவர்கள் அல்ல எமது தலைவர்கள்.

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை போன்று உள்ளது.

இதே கருத்துச் சுதந்திரத்தை தமிழ்நாட்டில் நீங்கள் பாவியுங்கள் பார்ப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடன் பல வட இந்தியர்கள் வேலை செய்கின்றார்கள்! அவர்களுடைய கருத்துக்களின்படி தென் இந்திய மக்கள் மூன்றாம் தர இந்தியப் பிரஜைகள்!! அதிலும் தமிழ்நாடென்றால் கேட்கவே தேவையில்லையென்கிறார்கள்!!

ஆனால் நாங்களோ? "இந்தியன் என்று சொல்லடா, இமயமாக நில்லடா" ... அரோகரா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு,

எம் சிறுவர்கள் ஆயுதமும் பிடிக்கட்டும், அது எங்களுக்குத் தெரியும் அவர்கள் உயிர் வாழுவதற்காகவே!!

கழுதைக்கு புரியுமா கற்பூர வாசனை! ...

கருணாநிதி குடும்பம், நேரு குடும்பம், ... போன்ற இந்திய தலைவர்களின் பிள்ளைகள்தானே பாகிஸ்தானே ஏனைய எல்லைப் புறங்களில் நாட்டைக்காக்க ஆயுதத்துடன் நிற்கிறார்கள்?? யாரோ சாப்பிட வழியற்ற ஏழை இந்தியர்களின் இரத்தத்தில் குளிர் காயும் நீங்களெல்லாம் கதைக்கிரீர்கள்!! என்ன இமயமாக நிற்கிறீர்களோ??????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைகோவுக்கே 13 வருடங்களாக தமிழ் மக்கள் ஆப்படித்து வருகிறார்கள்....

இவரை நம்பி ஜெயாவும், கருணாநிதியும் இருக்கிறார்கள் என்றால் நகைச்சுவையாக இருக்கிறது....

சுப்பிரமணிய சாமியை விட வைகோவுக்கு கொஞ்சம் ஆதரவு உண்டு... அவ்வளவு தான்... இல்லாவிட்டால் சென்ற தேர்தலில் 200 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருப்பாரா என்ன?

எட எட, இப்படி ஆதரவற்ற வைகோவை தம்பக்கம் இழுக்கவா அதிமுக என்னவெல்லாம் செய்கிறது??

இல்லை...

ஆதரவற்ற வைகோவை தன் கூட்டணியில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக போடாத நாடகங்களெல்லாம் போடுகிறார் கருணாநிதி??

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :shock:

Link to comment
Share on other sites

ஓ (O) குரூப் இரத்தமே மௌனமாக இருக்கும்போது இந்தக்களநரிகள் ஏன் ஊளையிடுகின்றன????????

:?:

இந்த்க் கருணாநிதிக்கு, தேர்தல் வருவதென்றால் மட்டும் வைகோ கண்ணில் தெரியும்!! மற்றும்படி அவருடைய குடும்ப அரசியல்வாதிகளுக்கும், குடும்ப ஊடகங்களுக்கும் வைகோவை தெரியவே தெரியாது!

இன்று மீண்டும் அதிமுக வின் செல்வாக்கு அதிகரித்துள்ள போதுதான், வைகோவை விட்டால் கதை கந்தல் என்று நினைத்து விட்டார் போல!!

இன்று வைகோவை வைத்திருப்பதற்காக எப்படி எப்படியெல்லாம் ஊளையிடலாமோ, அப்படியெல்லாம் ஊளையிட தொடங்கி விட்டார்! அதன் ஒரு வெளிப்பாடே இதெல்லாம்!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.