Jump to content

முல்லைப் பெரியாறின் உண்மை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mullai1.jpg

முல்லைப் பெரியார் அணை பற்றிய விவரணையை தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறையைச் சார்ந்த மூத்த பொறியாளர்கள் குழுமம் ஒளிப்படமாக வெளியிட்டுள்ளனர்..முள்ளியை வேதனையுடன் கண்ட நாம் முல்லையையும் காண்போமே..அதே மனநிலையில்...

(தலைப்பில் இருந்த சிறிய எழுத்து பிழை திருத்தப்பட்டது: நிழலி)

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

220px-John_Pennycuick.jpg

இந்திய வரலாற்றில் இரக்கமற்ற படுகொலைக்கு பெயர் போன ஜாலியன் வாலாபாக் படுகொலையை அரங்கேற்றிய "ஜெனரல் டயர்" என்ற ஆங்கிலேயனை அனைவருக்கும் தெரியும்...ஆனால் தன் சொத்துக்களை விற்று ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கர்னல் பென்னிகுக் பெயர்.. இந்தியாவில் யாருக்கும் தெரியாது...முக்கியமாக தமிழகத்தில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை...

இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன் முதலில் 1700களில் வேலூரில் தோன்றிய முதல் புரட்சி வரலாற்று பக்கங்களில் மறைக்கபட்டது.. காரணம் அது தமிழ் நாட்டில் நடந்தது என்ற ஒரே காரணம்தான்..அதுவே பஞ்சாப்பில் நடந்து இருந்தால் அது இந்திய வரலாற்றில் முதல் பக்கத்தில் இடம் பிடித்து இருக்கும்.. இன்று போல அன்று தொலைத் தொடர்பு இல்லை என்பதால், அந்த 17ம் நூற்றாண்டில் ஆங்கில அரசுக்கு எதிரான வேலூரில் நடந்த புரட்சி, நீருபூத்த நெருப்பாக இருந்து 1858ல் சிப்பாய் கலகமாக மாறியது என்பதே வரலாறு....

முல்லை பெரியாறு அணை காரணமாக பாசனவசதி பெரும் ஐந்து மாவட்டங்களான

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் இன்றும் பென்னிகுக்கை கொண்டாடி வருகின்றார்கள்..வீட்டில் அப்பா அம்மா இறந்து போனால் அந்த படத்தை எப்படி வைத்து பூஜிப்போமே, அது போல அப்பகுதிமக்கள் பென்னிகுக்கிற்கு மரியாதை செய்கின்றார்கள்..அவர் பெயரில் உணவு விடுதிகள் இருக்கின்றன..கடவுள் சிலைபோல அவரையும் வழிபடுகின்றார்கள்..இது இந்தியாவில் ஆட்சி புரிந்த எந்த வெள்ளைக்காரனுக்கும் கிடைக்காத பேறு....

அவர் மேல் உள்ள அளப்பறியா அன்பு காரணமாக தங்கள் பிள்ளைகளுக்கு அவரின் பெயரையும் லோகன்துரை பெயரையும் வைத்து நன்றி விசுவாசத்தை இன்னமும் செலுத்திவருகின்றார்கள்..

penn.jpg

ஆனால் மதுரைக்கு இந்த பக்கம் வட தமிழ் நாட்டில் அவரை பற்றி யாருக்காவது தெரியுமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்...இவ்வளவு ஏன்..தமிழ்நாட்டில் எத்தனையோ என்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன.. அங்கு படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு முல்லைப் பெரியாறு அணை எப்படி கட்டினார்கள்..? அதன் அகலம், நீளம் என்ன..? எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள்..? இப்போது அந்த அணையை எப்படி பலப்படுத்தினார்கள்..? அது என்ன மாதிரி தொழில்நுட்பம் என்பதை எதாவது ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மாணவனை கேட்டு பாருங்கள்.. எவனுக்கும் தெரியாது என்பதுதான் நிதர்சன உண்மை.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விளையும், அரிசியும், காய் கனிகளும் ஐந்து மாவட்ட மக்கள் மட்டுமா, உண்டு பசி தீர்க்கின்றார்கள்.. ? சென்னை கோயம்பேடு மார்க்கெட் மண்டி வரை அந்த ஐந்து மாவட்டத்தில் விளைந்த விளைபொருட்களை நாமும்தான் உண்ணுகின்றோம்...இவ்வளவு ஏன் அணையை உடைப்போம் என்று சொல்லும் கேரள சேட்டன்களுக்கும் நாம் விளைவிக்கும் உணவு பொருட்களை பெறுகின்றாகள்..

பென்னிகுக் நினைத்து இருந்தால் நாள் முழுவதும் குடித்து விட்டு சீட்டாடி இருந்து இருக்கலாம்.. நல்ல அழகான தமிழ் பெண்களை அனுபவித்து இருக்கலாம். கோடை விடுமுறையில் ஊட்டியில் பொழுதை கழித்து இருக்கலாம். அவர் செய்யவில்லை... அன்று 18ஆம் நுற்றாண்டில் படுத்தி எடுத்த பஞ்சமும் அதன் பால் பாதிக்கபட்ட மக்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிந்தார்கள்..

1800 களில் இருந்தே பெரியாற்றின் குறுக்கே அணை கட்டி அதனை தமிழக பக்கம் திருப்பி விட பலர் முற்சித்து தோல்வியில் போய் முடிந்தாலும்,அன்றைய தமிழ் நாட்டின் பஞ்சத்தை போக்க இது மட்டுமே சிறந்த வழி, நிரந்தர வழி என்று முடிவு எடுத்த பென்னிகுக், ஆங்கிலேய அரசிடம் அனுமதி வாங்குகின்றார்...

18ம் நூற்றாண்டின் இறுதியில் முல்லை ஆறு, பெரியாறு இரண்டும் சேரும் மலைக் காட்டுப்பகுதியில் ஒரு அணை கட்டுவது என்பது சாதாரணகாரியமா..? சற்றே உங்கள் கற்பனையில் எண்ணிப்பாருங்கள்..இங்கிலாந்தில் இருந்து அப்போதைய நவீன இயந்திரங்களை இறக்கி அதனை மலை மேல் ஏற்றி 18 டன் சுண்ணாம்பு மற்றும் கற்களோடு இந்த அணை கட்டி முடிக்கபட்டாலும் பென்னிகுக் சந்தித்த பிரச்சனைகள் சொல்லி மாளாது...

அணைகட்டிக்கொண்டு இருக்கும் போதே காட்டாற்று வெள்ளம் அணையை அடித்துக்கொண்டு சென்று விட.. மேற்க்கொண்டு பணம் கொடுக்க முடியாது என்று ஆங்கிலேய அரசு கைவிரிக்க, பென்னி இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையும், மனைவி சொத்துக்களை எல்லாம் விற்று, ஒரு லட்ச ரூபாய் பணம் கொண்டு வந்து ,காட்டு மிருகங்களின் தாக்குதல்,காலரா,வயிற்றுப்போக்கு, விஷக்காய்சல் என அணை கட்டும் போது நடந்த விபத்துகள் என்று உயிர் விட்டவர்கள் ...ஒருவர் அல்ல இரண்டு பேர் அல்ல.. 422 பேர் உயிரை கொடுத்து கட்டிய அணை அது...பலரது உடல்கள் மலையில் இருந்து கீழே எடுத்து வரமுடியாத காரணத்தால் மலையிலேயே புதைத்து விட்டார்கள்...அந்த சமாதிகள் இன்றும் வழக்கம் போல கவனிப்பாரற்று கிடைக்கின்றன...

mullai-periyaru.jpg

தென் மாவட்டத்தின் பஞ்சம் போக்கிய வள்ளல் அவன்... அதனால்தான் அவன் மொழி இனம் கடந்து இன்றும் சிலைகளாகவும் பெயர்களாகவும், பேருந்தின் பின்புறம் பெரிய பெரிய உருவங்களாகவும் இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்..

ரஜினி,கமல்,விஜய்,சூர்யா போன்ற நடிகர்களை கொண்டாடும் அளவுக்கு கூட இங்கு பென்னிகுக்கை நாம் கொண்டாடுவது இல்லை..அவனுக்கு என்ன தலையெழுத்து அவன் சொத்தை விற்று இங்கு அணை கட்டவேண்டும் என்று கட்டாயம் என்ன?,

அன்றைய மதிப்பீட்டில் ஒரு லட்ச ரூபாய் இன்று அதே சொத்தின் மதிப்பு ஆயிரம் கோடி...அதை தமிழக மக்களுக்கு தாரைவார்த்த வள்ளல் அவன்..

வரலாற்று பக்கங்களில் டல்ஹௌசி பிரபு,டயர்,மவுண்ட்பேட்டன், வாரன்ஹோஸ்ட்டிங் என்று பல பிரபுக்களை படித்து இருக்கின்றோம்..ஆனால் உண்மையான பிரபு பென்னிகுக் பற்றி இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த யாரும் வரலாற்றில் பதிக்கவேயில்லை...வளரும் தலைமுறை யாருக்கும் வட மாவட்டத்தில் இருக்கும் எந்த பிள்ளைகளுக்கும் அவரை பற்றி தெரியாது அவர் தியாகம் தெரியாது.. மதுரையிலும் தேனியிலும் சிலை வைத்து விட்டால் போதும் என்ற நினைத்து விட்டர்கள் போலும்..

இவ்வளவு ஏன்..? "எ பிலிம் பை பாராதிராஜா" என்று பேசும் பாராதிராஜா கூட அவரின் எந்த படத்திலும் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக கூட பென்னிகுக் பெயரை பதிவு செய்யவில்லை...அவர் நினைத்து இருந்தால் பென்னிகுக் பாத்திரத்தை இன்னும் சிறப்பாக தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்க முடியும்..."நாடோடித் தென்றல்" படத்தில் பென்னிகுக் பற்றி சொல்லி இருக்கலாம்.. சொல்லாதது தப்பு இல்லை..ஆனால் பென்னிகுக் தியாகத்தினால் பலன் பெற்ற மாவட்டத்துக்காரர்.. அதனால் அந்த எதிர்பார்ப்பு......

வெகுநாட்களுக்கு பின் நேற்று ஒரு சினிமா விளம்பரத்தில் வள்ளல் பென்னிகுக் ஆசியுடன் ஒண்டிப்புலி என்று ஒரு திரைப்படத்தின் தொடக்க விழா அறிவிப்பு என் கவனத்தை கவர்ந்தது..டெக்னிஷீயன்கள் பெயரை பார்த்தால் அதில் நண்பர் விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா மேனாக பணிபுரிகின்றார்.. அவருக்கு எனது வாழ்த்தை தெரிவித்தேன்...முதல் முறையாக தமிழ்சினிமா ஊடகத்தில் பென்னிகுக் பெயர் இடம் பெற்று இருக்கின்றது..அதுவே பெரிய சந்தோஷம்..பென்னிகுக்கால் பலன் பெற்ற தேனி மாவட்டத்துக்காரர் இயக்குனர் இமயம் பாரதிராஜா செய்யாத விஷயத்தை செய்த திரைப்படகுழுவுக்கு எனது நன்றிகள்...

பென்னிகுக் பற்றி நிறைய தேடி தேடி படிக்கின்றேன்..அவரை பற்றி இன்னும் சிலாகித்து சொல்ல வேண்டும் என்றால் அவர் அணைக் கட்ட தேர்ந்து எடுத்த இடத்தை இன்றளவும் பொறியாளர்கள் புகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்...என்னால் அவரை பற்றி சினிமா எடுக்க முடியாவிட்டாலும், பென்னிகுக் பற்றிய ஒரு ஆவணப்படம் இயக்கி அது தமிழக மக்கள் அனைவருக்கும் அந்த தியாக செம்மலின் வரலாற்றை வளரும் இளைய சமுதாயத்திடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது..உடல் உழைப்பை தர நான் தயார்..பொருளுதவி கிடைத்தால் வெகுவிரைவில் இந்த ஆவணபட வேலைகளை ஆரம்பிக்க இருக்கின்றேன்...

benny+quik.jpg

பென்னிகுக் யார் என்று கேட்டால் அவரை பற்றி நெகிழ்ச்சியாக பேசவேண்டும்...அவரின் உழைப்பையும் தியாகத்தையும் தமிழகத்தில் இருக்கும் அனைவரும் போற்றவேண்டும்..அவரால் நேரடியாக பயன்பெறும் மாவட்டத்தினரும் மறைமுகமாக பயன்பெறும் மாவட்ட மக்களும் அவர் தியாகத்தை போற்ற வேண்டும்...

"உபயம் கனகராஜ்" என்று கோவில் டியூப்லைட்டில் வெளிச்சம் வராவண்ணம் பெயர் பொறித்துக்கொள்ளும் நம்மவர்கள் மத்தியில், தன் சொத்துகளை விற்று தமிழகத்தின் பஞ்சம் போக்கிய ஒரு வெள்ளக்காரனை தமிழகத்தில் இருக்கும் அநேகம் பேருக்கு தெரியில்லை எனும் போது மனது வலிக்கின்றது...

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மக்க்ள் மட்டுமே பென்னிகுக்கை கொணடாடி வருகின்றனர்..ஆனால் தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும்..அதுவே என் ஆசை..

இனியாவது வளரும் சமுதாயம் அவர் பற்றி தெரிந்துக் கொள்ள பாடபுத்தகங்களில் பென்னிகுக் வாழ்க்கையையும் அவர் தமிழ் நாட்டுக்கு செய்த நன்மைகளையும், உழைப்பையும் ,பொருள் உதவியையும் பாடபுத்தகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்.....

நான் நிறைய முறை சொன்னதுதான்... நல்லவனாக இருப்பது என்பது இந்தியாவை பொருத்தவரை முக்கியமாக தமிழகத்தை பொருத்தவரை தகுதிஇழப்பு... ஜெனரல் டயர் போல பென்னிகுக் இந்திய வரலாற்றில் இடம் பிடித்து இருக்கலாம்..ஆனால் பென்னி நல்லது செய்து விட்டார்... என்ன செய்வது...? இதுதான் உலகம்..

கேரளாவில் 40க்கு மேற்பட்ட ஆறுகள் வீணாக கடலில கலக்கின்றன...ஆனால் நாம் பயன்படுத்துவது ஒரே ஒரு ஆற்று நீரைதான்...அதுதான் சேட்டன்களின் கண்களை உறுத்துகின்றது..பாரத் மாதா கீ ஜே.............!

கண் எதிரில் அணையை உடைத்தே தீருவோம் என்று சூளுரைக்கும் சேட்டன்களை புத்தியை நினைத்து பார்த்து இருந்தால் இவ்வளவு உழைப்பையும் 422 பேர் உயிரையும் கொடுத்து, பென்னிகுக் அணையை அந்த இடத்தில் கட்டி இருக்கமாட்டார்....

உங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது காக்கா, நரி கதைகளோடு பென்னிகுக் போன்ற தியாக கதைகளையும் சேர்த்து சொல்லுங்கள்..

பயன் துக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது...

(பயனை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய அன்புடைமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலினும் மிகப் பெரியதாகும்...)

தேனி, கம்பம், மக்கள் கர்னல் பென்னிகுக் படத்தை வைத்து இருக்கின்றார்கள் அந்த படத்தின் கீழே இருக்கும் வாசகம் என்றும் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும்.... அந்த வாசகம் கீழே...

"நீர் இருக்கும் வரை, நீர் இருப்பீர்"

கார்னல் ஜான்பென்னிகுக்கின் தியாகம் கடலைவிட மிகப் பெரியது..

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

Thanks... source: http://www.jackiesek...2.html?spref=fb

"ENGINEERS MAKE THE WORLD" :icon_idea:

.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், வன்னியன்!

உண்மையில், கேர்னல் பென்னிகுக்கைப் பற்றி இன்று தான் அறிந்தேன்!

ஆங்கிலேயர், இலங்கைக்கு வந்திருக்கா விட்டால், இலங்கையின் மத்திய மலைநாடுகளுக்கு இன்னும் தண்டவாளம் போடப்பட்டிருக்காது, என்பதே கசப்பான உண்மையாகும்!

வேலூரில் தொடங்கிய 'சுதந்திரப் புரட்சி' பற்றியும் இன்றுதான் தெரிந்தது!

ஆனால், அறுபத்து மூன்று நாயன்மார்கள், பற்றியும் ஆறாம் வகுப்பிலேயே முற்றாக அறிந்திருந்தேன்!

இனியாவது, தமிழனுக்குக் கட்டாயம் ஒரு அடையாளம் தேவை!

இணைவோம், தமிழனுக்கு எதிரான சதிகளை, வெளிக்கொண்டு வருவதற்காக!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை பெரியாறு யாருக்கு சொந்தம்?

முந்தைய பாண்டிய நாடு அல்லது மதுரை நாடு, என்பது இப்போதைய தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, மற்றும் தென் திருவிதாங்கூர் பகுதியும் அடங்கும். தென் தென் திருவிதாங்கூர் பகுதியை தனியாக ஆட்சி செலுத்திய மன்னர்கள் பாண்டிய மன்னருக்கு திறை(வரி) செலுத்தி வந்தனர்.

1529-1564 விஸ்வநாத நாயக்கர் ஆட்சியிலும், 1564-1572 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர், 1572-1595 வீரப்ப நாயக்கர் ஆட்சிகாலத்திலும் 1595-1601 இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்திலும் 1601-1623 முத்துவீரப்ப நாயக்கர் 1623-1659 திருமலை நாயக்கரும் ஆட்சி செய்தனர்.

அப்போதெல்லாம் முறையாக வரி செலுத்திவந்த திருவிதாங்கூர் மன்னர்கள், கடைசியாக இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் வரியை செலுத்த மறுத்தனர். பின்னர் ரராணி மங்கம்மாள் படையெடுத்து சென்று திருவிதாங்கூர் மன்னரை வெற்றி கொண்டு தனக்கு வரவேண்டிய வரியை வசூல் செய்துகொண்டு வந்தார் என்பது வரலாறு.அப்போதெல்லாம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது கேரளாவின் தென்பகுதி.

பின்னர் கிழக்கிந்திய கம்பெனியினர் நாட்டை கைப்பற்றி தங்களது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த போது, 1790-ம் வருடம் மார்ச் 6-ல் மதுரை மாவட்டம் உதயமானது.

அதே வருடம், ஏப்.5ல், "ஏ.மிக்லட்" என்ற ஆங்கிலேயர் முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 1798-ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி அவர்கள், சிவகிரி மலையில் உற்பத்தியாகி வடக்கு நோக்கி வரும் முல்லை ஆற்றையும், சதுரகிரி மலையில் உற்பத்தியாகி தெற்கு நோக்கி வரும் பெரியாறு ஆகிய இரண்டு நதிகளையும் ஒரே இடத்தில் சேர்த்து ஒரு அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.

நதிகள் அமைப்பு எப்படியுள்ளது? அணை கட்டமுடியுமா..? எந்த இடத்தில் அணை கட்டலாம்? என்பதை ஆராய, முத்து இருளப்பபிள்ளை என்பவரின் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழுவினர் காடுகளிலும் மலைகளிலும் ஏறி இறங்கி நடந்து காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தையும், அணை கட்ட தேவைப்பட்டும் செலவின் தொகையும் மதிப்பீடு தயார் செய்தனர்.

ஆனால், மன்னர் சேதுபதியும் அவரது நாடும் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட காரணத்தால் போதிய நிதி வசதியின்றி பண நெருக்கடியில் திணறிய மன்னரால் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

1807-ல் மதுரை மாவட்ட ஆட்சியராக வந்த “ஜார்ஜ் பேரிஸ்” என்பவர் மன்னர் சேதுபதியின் திட்டத்துக்கு உயிர் கொடுத்தார். மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் "ஜேம்ஸ் கார்டுவெல்"லுக்கு உத்தரவிட்டார். அதன்படி மலைப்பகுதிகளில் ஆய்வு செய்த கார்டுவெல், 1808-ல் இது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தந்தார்.

பின்னர் 1837-ல் “கேர்ணல் பேபர்சின்ன" என்பவர் முல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, மலைப்பகுதியில் தங்கி வேலை செய்த வேலையாட்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதாலும், அவர்கள் கூலி அதிகம் கேட்டதாலும் கையில் இருந்த பணமெல்லாம் செலவாகி விட்டபடியால் வேலையை நிறுத்திவிட்டு திரும்பி விட்டார்.

1867-ல் இராணுவ மேஜரரான “ரைவ்ஸ்” என்பவர் மலைப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை கிழக்கே பக்கமாக திருப்புவது தான் இந்த இடத்தில் அணை கட்டுவதன் முக்கிய நோக்கம் என்றும், இதற்க்கு தோராயமாக 17.50 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்று அறிக்கை ஒன்றை சென்னை மாகான ஆளுநரிடம் சமர்பித்துள்ளார்.

இதன் பின்னர், மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது.

பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை “சுமித்” என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த “வாக்கர்” என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணை கட்டும் திட்டம் மேலும் தள்ளிவைக்கப்பட்டது.

“சுமித்” அவர்களுக்கு பிறகு அந்த இடத்துக்கு வந்த “கேர்ணல் பென்னிகுக்" அவர்கள். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை தயார் செய்து ஆங்கிலேய அரசின் பார்வைக்கு அனுப்பி அதற்கு அனுமதியும் பெற்றார்.

ஆங்கிலேய அரசின் ஆணைப்படி கேர்ணல் ஜான் பென்னிகுக் அவர்கள் மதுரையிலிருந்து ஆற்றின் வழியே நடந்து சென்று முல்லையாரும், பெரியாரும் சந்திக்கும் இந்த இடத்தில் அணை கட்டலாம் என்று ஒரு திட்டத்தை 1882-ல் தயாரித்தார்.

இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இப்படி செய்தால், அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வெளியே வரும் தண்ணீரை “வைரவன்” ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கொண்டுவந்து கலந்து மீண்டும் வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

பென்னி குயிக் அவர்களின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது, 75 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில்1886-ம் ஆண்டு, சென்னை மாகன ஆளுநர் ஹாமில்டன் என்பவர் முன்னிலையில் அணை கட்ட திருவாங்கூர் மன்னருடன் 999 ஆண்டுகளுக்கு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு 1887 செப்டம்பர் மாதம் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது.

இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான “பென்னிகுக்” அவர்கள் கட்டிட பணிக்கு நவீன இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்தார், இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் இங்கிலாந்திலிருந்து கொண்டுவந்தார்.

இந்த இயந்திரங்களை சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப் பகுதியிலிருந்து திருவிதாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள தேக்கடி என்ற இடம் வரையிலும், அங்கிருந்து அணை கட்டும் காட்டுப்பகுதிவரையும் கம்பிவடப் பாதைகளை (வின்ச்) அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது என்று தெரிகிறது.

ஆங்கிலேயப் பொறியாளர் கேர்ணல் பென்னிகுக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டபோது. அடர்ந்த காடு, விசப்பூச்சிகள், காட்டு யானைகள், புலி, காட்டெருமை போன்ற காட்டு மிருகங்கள், அவப்போது திடீரென கொட்டும் கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளம் போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான பெரிய வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.

அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு கூடுதல் பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கேர்ணல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தையும், இங்கிலாந்திலுள்ள தனது நண்பர்கள் மூலம் கிடைத்த பணத்தையும் கொண்டு வந்து தனது செலவிலேயே சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.

இந்த முல்லை பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும் அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.

இந்த அணையை கட்டி முடிந்த போது நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலேயர்கள் உட்பட 422 மனித உயிர்கள் பலியாகியிருப்பதாக இங்கிலாந்து நாட்டில் உள்ள காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ள “பிரிடிஷ் ஆட்சியில் இந்தியா” என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள “ஆவணங்கள்” சொல்லுகின்றது.

இங்கிலாந்து நாட்டில் பிறந்து இந்தியாவில் வேலை செய்ய வந்த இடத்தில் அணைகட்டும் பணிக்கு சென்று அங்கு ஏற்பட்ட விசக்காய்ச்சலுக்கு பலியாக்கி பினத்தைக்கூட கீழே கொண்டு வரமுடியாமல் பல ஆங்கிலேயர்களின் உடல்கள் மலை மேலேயே புதைக்கபட்டுள்ளதாகவும் அந்த ஆவணங்கள் கூறுகிறது.

அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் அதனுடன் இடம் மற்றும் இலாபப்பங்கீடு போன்றவைகளுக்கான பேச்சு வார்த்தை நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு 6.10.1886-ல் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இதன்படி திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு (தற்போதைய கேரள மாநிலத்திற்கு) தமிழகம் அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும் பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக 100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு வருடா வருடம் குத்தகைப் பணம் செலுத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது.

கேரளாவிற்கு, தமிழகம் குத்தகைத் தொகையாக 1896-லிருந்து 1970-வரை ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் பணம் கொடுத்து வந்தது. கேரளாவின் வேண்டுகோளின்படி 1970-ம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி, ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத் தொகையை 30 ரூபாய் என்று உயர்த்தப்பட்டது.

அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம் குட்டை போன்ற நீர் நிலைகளிலும் வளரும் மீன்களை பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து கேரள எழுதி வாங்கிக் கொண்டது.

இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடி உயரத்துக்கு மேல் தேங்கி நிற்கும் தண்ணீர் குகை மூலமாக வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது.

தமிழகத்தின் பாதி மாவட்ட மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் ஆதாரமாக இருந்து, பத்துக்கும் அதிகமான மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கொடுத்து கொண்டிருக்கும் இந்த அணையை, நம்மோடு கலை, பண்பாடு, இனம், மொழி, நாடு என்று எந்த சொந்தமும் இல்லாத ஒரு ஆங்கிலேயானான பென்னிகுக் என்கிற ஒரு வெள்ளையன் தன்னுடைய சொந்த பணம் போட்டு கட்டி கொடுத்துள்ளான்.

ஆனால், நான் இந்தியன், நான் இந்திய நாட்டுக்கு என் உயிரையும், உடலையும் கொடுப்பேன் என்று போலி வசனம் பேசும் கேரள அரசியல்வாதிகள் இழிவாக நடந்து கொள்கிறார்கள்.

இந்த கட்டுரையை இன்னுமொரு முறை படித்துவிட்டு சொல்லுங்கள் தமிழருக்கு நண்பன் யாரென்று...

தன்னுடைய சொத்தை விற்று அணை கட்டிய பெருமகன் பென்னிகுக் அவர்களுக்கு தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னிகுக் அவர்களின் நினைவை போற்றும் வகையில் முழு உருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பல விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுக் படம் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு “பென்னிகுக்” என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் பென்னிகுக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்துத் தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் கூட உள்ளது.

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=150

Link to comment
Share on other sites

அணை உறுதியானதா இல்லையா என்பதை ஏதாவது ஒரு பொறியியல் நிபுணர்குழு ஆராய்ந்துள்ளதா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணை உறுதியானதா இல்லையா என்பதை ஏதாவது ஒரு பொறியியல் நிபுணர்குழு ஆராய்ந்துள்ளதா? :unsure:

பொறியாளர் டங்கு,

மேலேயுள்ள தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை பொறியாளர்களின் ஒளிப்படம் பாகம் இரண்டின் ஆரம்பதிலேயே குறிப்பிடபட்டுள்ளதே..

இந்திய மத்திய நீர்வள ஆணையத்தால்(CWC) (அணையின் பலத்தைக் கூட்ட கட்டி முடிக்கப்பட்ட இறுதி நிலையை) ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஆய்வு செய்து அலசி ஆராய்ந்து 2000 ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைபடியே இந்திய உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை 2006ல் தமிழ்நாட்டுக்கு சாதகமாக வழங்கியது..

அதாவது, அணை உறுதியாக இருப்பதால், நீர்மட்டதை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாமெனவும், பாதியில் கேரளத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட பராமரிப்பு வேலைகளை தமிழக அரசு முடித்து அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக மேலும் உயர்த்திக்கொள்ள கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென முகத்தில் அடித்தாற்போல் தீர்ப்பு கூறியுள்ளது...

ஆனால் இந்த ஆய்வறிக்கையையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் கேரள அரசு மதிக்காமல் தான்தோன்றிதனமாக நடந்துகொள்வதால்தான் பிரச்சனையே...

அன்பர்களே, தமிழில் வழங்கப்பட்டுள்ள இக்காணொளிகளை, தவறாது முழுமையாக இரண்டு பகுதிகளையும் பார்க்கவும்.

நன்றி.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் இணைப்பு மூலம் முல்லைப்பெரியார் அணை பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன், இந்த அணையின் பொறுப்பை....

அப்துல்கலாம் கூறிய மாதிரி, இந்திய ராணுவத்திடம் கொடுத்தால்... பிரச்சினை தீருமா?

அல்லது அவர்களும் தமிழர்களுக்கு விரோதமாக நடப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன், இந்த அணையின் பொறுப்பை....

அப்துல்கலாம் கூறிய மாதிரி, இந்திய ராணுவத்திடம் கொடுத்தால்... பிரச்சினை தீருமா?

அல்லது அவர்களும் தமிழர்களுக்கு விரோதமாக நடப்பார்களா?

இந்த அணையை சுற்றிய அனைத்துப் பகுதிகளும் தமிழ்நாடு அரசு பராமரிப்பில்தான் இருந்தது-எம்ஜியார் காலத்திற்கு முன்புவரை... ! அணைக்குச் செல்லும் சாலைகள், அணையில் மீன் பிடிப்பது, படகு சவாரி, அணையைக் காக்கும் காவல் அதிகாரிகள் முதற்கொண்டு...

ஆனால் திட்டமிட்டு, வஞ்சகமாக ஒவ்வொரு திருத்த உடன்படிக்கைகளிலும் அனைத்து சரத்துகளையும் தன் வசமாக்கிகொண்டது கேரள அரசு...முன்பெல்லாம் தமிழக பொறியாளர்கள் அணையின் பராமரிப்பு வேலைக்கு செல்ல எந்த அனுமதியும் தேவை இல்லை..ஆனால் இப்பொழுது அங்கே செல்ல கேரள அரசு அனுமதி பெற்றே செல்ல இயலும்

இன்றும் அங்கே அணை பாதுகாவல் கடமையில் தமிழகத்திற்கு எதிராக செயல்படும் மலையாள போலீஸ்களுக்கு தமிழ்நாடு அரசுதான் சம்பளம் கொடுக்கிறது..

இதைத்தவிர அணையின் தண்ணீர் வரத்தினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கும் வருடாந்திர ராயல்டியாக தமிழ் நாடு அரசு கேரளத்திற்கு பெருந்தொகை கொடுக்கிறது...

சென்ற வாரம் அணையின் மதகுகளையும், சுவர்களையும் சேட்டன்கள் தமிழக சம்பளத்தில் காவல் இருக்கும் மலையாள போலீஸ் கண்ணெதிரேயே தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்...

ராணுவத்திடம் இப்பொழுது அணையின் பாதுகாப்பை ஒப்படைத்தால் நடுநிலமையோடு அது செயல்பட முடியாது. ஏனெனில் மத்திய இராணுவ பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கேரளத்துக்காரர். இவர் சிலவருடங்களுக்கு முன்பு, தன் துறைக்கு எள்ளளவும் சம்பந்தேமே இல்லாத முல்லைப் பெரியார் அணைக்கு, தன் கட்டுப்பாட்டிலிருக்கும் மெரைன் டைவர்ஸ்(Marine divers) ஐ அனுப்பி அணையின் ஆழத்தில் கட்டிடத்தை பரிசோதிக்க ரகசியமாக அனுப்பிய புண்ணியவான்.

மல்லுகளின் ஆதிக்க பலம் தில்லியில் கோலோச்சும் வரை தமிழருக்கு உரிய நீதி கிட்டுவதில் தாமதம் இருக்கவே செய்யும்...

ஒரே வழி.. இழந்த தமிழர் நிலமான இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்தோடு இணைப்பதே வரும் தலைமுறைக்கும் பாதுகாப்பான நிரந்தர வழி-தீர்வு..

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு, தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.

மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள்..பலமாகக் கேட்கிறார்கள் !

“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ?

தங்கள் இடத்திலேயே, தங்கள் செலவிலேயே,

புதிய அணையைக் கட்டி,தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக

கேரளா சொல்கிறதே, ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே.

இதை ஏற்றுக் கொள்ள தமிழ்நாடு ஏன் மறுக்கிறது ?

இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள்.. இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை..ஏன் தமிழ் நாட்டிலேயே, சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

"புதிய அணை கட்டுவதில் என்ன தவறு... ? அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே..?" என்று தமிழர்களே கேட்கிறார்கள். தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும், தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.

இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல். அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது) எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ்நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் கொள்ளளவு 152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால், இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர் மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டி.எம்.சி தான்.அதிலும் சுமார் 10 டி.எம்.சியை தான் பயன்படுத்த முடியும். (104 அடி வரை Dead Storage.)

ஆனால் இடுக்கிஅணை இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடா வருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி அணை நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான், பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் - கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

"புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும். சரி...நிரம்பட்டுமே. நல்லது தானே ! அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே..?" என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.

அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை, புரிகிறது. ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை..எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே ..? பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே.. ?

அயோக்கியத்தனம்...வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக -

பெரியாறு அணை உடைந்தால்,தண்ணீர் மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து, நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டி.எம்.சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும், வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் ! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக -

1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள்ளே செலுத்தப்பட்டது. 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்.

516px-mullapperiyaar_cross_section-svg-copy.jpg?w=500&h=581

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு, 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா கேரள சகோதரர்கள் ? மீண்டும் சதி.

ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கிவிட்டார்கள். வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.

மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில், மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து, புதிய அணை கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்... பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்... உண்ணாவிரதம் இருக்கிறார்கள்... பந்த் நடத்துகிறார்கள்... இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது....வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்...

தமிழ் நாடு ஏமாந்தது போதும். ..உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல்... தமிழகம் முழுவதும் சேர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும்.... ஒரே குரலில் பேச வேண்டும்... உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும். ..அகில இந்தியாவிற்கும் தெரியும்படி சொல்ல வேண்டும்.

நம் தரப்பு நியாயம் அனைவருக்கும் புரியும்படி, சுப்ரீம் கோர்ட்டுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் ! நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

கேரளாவிற்கு எங்கே அடித்தால் வலிக்குமோ..அங்கே அடிக்க வேண்டும்... எப்படிச் சொன்னால் புரியுமோ..அப்படிச் சொல்ல வேண்டும்... நாடகமாடினால் இனியும் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்..என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். :icon_idea:

Source:http://vimarisanam.wordpress.com

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

35 லட்சம் தமிழ் மக்களுக்காக.... பிஸ்டலுடன் புறப்பட்ட வீரன் பிரபாகரன்.

அங்கு, எட்டுக் கோடி தமிழர்கள், இருந்தும்.... பிரபாகரன்கள் உருவாக மாட்டார்கள் என்று.... மத்திய அரசு தப்புக்கணக்குப் போடுகின்றதா?

அல்லது, தமிழருக்கே... சொந்தமான... காட்டிக்கொடுப்பு, குழிபறித்தல், ஒட்டுக்குழு, ஓணான்குழு... என்று வளர்த்து வேடிக்கை பார்த்து... உலகத் தமிழினத்தின் சனத்தொகையை குறைக்கப் போகின்றதா? முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில்.. ஒரு தமிழகத் தமிழன் செத்தால்... பத்தாயிரம் கேரளத்தவன் கைலாயம் போக வழி செய்ய... வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன்.

Link to comment
Share on other sites

பெரியாறு உருவாவது தமிழ்நாட்டில் என்றால் இப்போது உள்ள அணைக்கு மேலே நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏதேனும் அணை கட்டும் சாத்தியம் உள்ளதா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாறு உருவாவது தமிழ்நாட்டில் என்றால் இப்போது உள்ள அணைக்கு மேலே நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏதேனும் அணை கட்டும் சாத்தியம் உள்ளதா? :rolleyes:

ஏற்கனவே.... டபுள் அணையோடை தான்.. அது இருக்கு. :D

Link to comment
Share on other sites

ஏற்கனவே.... டபுள் அணையோடை தான்.. அது இருக்கு. :D

இல்லை.. அப்பிடிக் கட்டக்கூடியதா இருந்தால் இடுக்கி அணைக்கு தண்ணீரே போகாமல் செய்யலாம் அல்லோ..! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே.... டபுள் அணையோடை தான்.. அது இருக்கு. :D

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரள அரசே தூண்டிய போராட்டம் : முல்லை பெரியாறு சில உண்மைகள்.

பெரியாறு அணை பிரச்சனை 1956 இல் தான் உதயமானது. அப்போதுதான் மொழிவாரி மாநிலங்கள் உதயமாயின. அந்த சமயத்தில் தான் தமிழக, கேரள எல்லை பிரச்னையும் உருவானது. பீர்மேடு, தேவி குளம் தாலுகாக்களில் 90 சதவீத தமிழர்கள் வசித்தனர். பெரியாறு அணையும் இந்த இரண்டு தாலுகாக்களில் அமைந்திருந்தது. அப்போதைய மாநில பிரிப்பு விதிப்படி எந்த மொழி பேசும் மக்கள் ஒரு பகுதியில் அதிகம் வசிக்கிறார்களோ அந்த பகுதியை சம்பந்தப்பட்ட மொழி அடிப்படையில் அமைந்த மாநிலத்துடன் இணைக்க வேண்டும். ஆனால் பெரியாறு அணையினை கருத்தில் கொண்டு கேரள அரசு பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களையும், கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதிகளையும் கேரளத்துடன் இணைக்க வேண்டும் என்று போராடியது. பீர்மேடு. தேவிகுளம் தாலுகாக்கள் இல்லாத கேரளா தலையில்லாத உடல் போன்றது என்று அப்போதைய பிரதமர் நேரு தமிழக முதல்வராக இருந்த காமராசரை சமாதானம் செய்து இந்த பகுதியை கேரளாவுடன் இணைத்து விட்டார். இதற்கிடையில் பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை சமன் செய்ய கேரள முதல்வர் பட்டம் தாணுபிள்ளை 119 சிறைகளில் இருந்த கைதிகளை விடுதலை செய்து பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களில் குடி வைத்தனர். இந்த பகுதியில் குடி வந்தவர்களுக்கு 5 ஏக்கர் நிலமும், 5000 ரூபாயையும் கேரள அரசு வழங்கியது. இப்படியாக தமிழக பகுதியில் மலையாளிகள் குடியேறினாலும் தற்போது வரை இப்பகுதியில் 60 சதவீதம் தமிழர்களே வசித்து வருகின்றனர். இப்படியாக பெரியாறு அணையின் இருப்பிடம் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தாலும் அணையின் முழு உரிமையும் தமிழகத்திடமே இருந்தது.

மின் உற்பத்தி துவக்கம் :

அணையின் முழு உரிமையும் தமிழகத்திடம் இருந்ததால் 1954 ஆம் ஆண்டு தமிழக அரசு பெரியாறு நீர் மின் நிலையத்தை கட்டியது. மின் நிலையத்தில் முதலில் 35 மெகாவாட் திறன் கொண்ட மூன்று இயந்திரங்கள் மேற்கு ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்டு மின் உற்பத்தி துவங்கியது. 1965 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இயந்திரம் வாங்கி பொருத்தப்பட்டது. மின் உற்பத்தி எந்திரங்களை இயக்கத்தேவையான நீர் முகப்பு அணையில் இருந்து குழாய் வழியாக கொண்டு வரப்பட்டது. இந்த குழாயில் 400 கன அடி தண்ணீர் வீதம் 4 குழாய்களிலும் 1600 கன அடி தண்ணீர் கொண்டு வரப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டது. 3500 அடி தூரம் பெரியாறு அணையிலிருந்து 375 மீட்டர் சரிவில் தண்ணீர் வருவதால் 1600 கன அடி நீரே 4 இஞ்சின்களையும் இயக்கப்போதுமானதாக இருந்தது. ஆனால் அணையின் சுரங்கப்பாதை வழியாக 2100 கன அடி நீர் வருவதால் மீதம் உள்ள 500 கன அடி நீர் போர் பெ ( fore bay ) அணையில் இறைச்சல் பாலம் வழியாக வைரவன் ஆற்றில் விடப்பட்டது. இப்படியாக அணையிலிருந்து எடுக்கப்படும் 2100 கன அடி தண்ணீரில் மின் உற்பத்தியும், விவசாயமும் நடந்து வருகிறது.

கேரள அரசு கட்டிய இடுக்கி அணை :

1976 ஆம் ஆண்டு கேரள அரசு மிகப்பெரிய அளவில் இடுக்கி அணையினை கட்டியது. இடுக்கி அணையின் உயரம் 555 அடி ( பெரியாறு அணை 152 அடி ). இடுக்கியின் நீர்தேக்கப்பரப்பளவு 16000 ஏக்கர். பெரியாறு அணையை விட 7 மடங்கு பெரியதாக இடுக்கி அணையினை கட்டிய கேரள அரசு 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உள்ள ( பெரியாறு மின் நிலையம் 140 மெகாவாட் ) பெரிய நீர் மின் நிலையத்தையும் அங்கு கட்டியது. இடுக்கி அணை 71 . 865 டி. எம். சி நீர் கொள்ளும். பெரியாறு அணை 15 . 565 71 . 865 டி. எம். சி பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தென்மேற்குப் பருவக்காற்று வீசும் ( ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ) காலங்களிலும் , வடமேற்குப் பருவக்காற்று வீசும் ( அக்டோபர், நவம்பர், டிசம்பர் ) காலங்களிலும் பலத்த மழை பெய்யும். பெரியாறு அணை பகுதியில் ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருந்தது. ஆனால் இடுக்கி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தென் மேற்குப் பருவகாற்று காலங்களில் மட்டுமே மழை பெய்தது. இதனால் பெரிய அணையான இடுக்கி அணைக்கு நீர் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. மூன்று ஆண்டுகளாக அணை நிரம்பவில்லை.

மின் உற்பத்தி செய்ய தவிப்பு :

இதனால் மின் உற்பத்தியும் ஸ்தம்பித்தது. 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உள்ள மின் நிலையத்தில் போதிய அளவு மின் உற்பத்தி செய்ய முடியாமல் கேரள அரசு தவித்தது. இதற்கிடையில் 1976 ஆம் ஆண்டு கேரள மின்வாரிய தலைமை பொறியாளர் பரமேஸ்வரன் நாயர் பெரியாறு அணையில் நீர்மட்ட அளவினை 136 அடியாக குறைத்து 16 அடி பெரியாறு நீரை இடுக்கி அணைக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இடுக்கி அணையின் தண்ணீர் தேவை குறையும் என்பதுடன் முக்கியமான மின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று பரிந்துரை செய்தார்

கேரள அரசு தூண்டிய போராட்டம் :

ஆனால் ஒப்பந்தப்படி அணையின் முழு உரிமை தமிழகத்திற்கு இருப்பதால் கேரள அரசு யோசித்தது. இருப்பினும் மின் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியத்தால் அணை பற்றிய பிரச்சனையை முதன் முறையாக கிளப்பியது. 1979 ஆம் ஆண்டு பீர்மேடு எம். எல். ஏ வான கே.கே.தாமஸ் என்பவர் மூலம் பெரியாறு அணை பலவீனமடைந்து விட்டது. அதனை பலப்படுத்த வேண்டும் என்று பெரும் போராட்டத்தினை கிளப்பி விட்டது கேரள அரசு. அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டு விட்டது. உடையும் அபாயம் உள்ளது. எனவே அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று போராட்டம் நீடித்தது.

ஏற்கனவே 1945 ஆம் ஆண்டு ஒருமுறை அணையின் மையப்பகுதியில் சிமென்ட் கிரவுட் செய்து அணையை சென்னை அரசு பலப்படுத்தியது. பின் 1960 ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை சிமென்ட் கிரவுட் செய்து பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அணையில் நீர்க்கசிவு இல்லை. இருப்பினும், அணை நீர் கேரளாவில் உள்ள வல்ல கடவு, வண்டி பெரியார், மஞ்சுமலை, மிளாமலை, தேங்கக்கல், கருங்குளம் , கருந்தருவி,சப்பாத்து, உப்புத்துறை, மேரிகுளம், ஆலடி, இடுக்கி போன்ற பகுதிகள் வழியாக இடுக்கி அணைக்கு மலை வழியாகவே செல்லும் . ஆனால் 3 மாவட்டங்கள் பாதிக்கும் என போராட்டக்குழு அலறியது. ஆனால் பெரியாறு அணையின் கடல்மட்ட உயரம் 2869 அடி . அணை உடைந்தால் பாதிக்கப்படும் என்று கூறப்படும் இடங்கள் 3500 அடி முதல் 4750 அடி உயரம் கொண்டவை. இதனால் அணை உடைந்தாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக அரசு கேரள அரசின் புகாரை மறுத்து விட்டது. மேலும் பெரியாறு அணையின் பலம் 100 சதவீதம் திடமாக உள்ளது, அணை இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு உடைய வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு தெளிவாக கூறியது.

30 முறை பூகம்பம் :

1886 முதல் 1980 வரை அணை பகுதியில் 30 முறை பூமி அதிர்வுகள் ஏற்பட்டன. கூடுதல் அதிர்வான 3 .7 ரிக்டர் அளவு பூமி அதிர்வு ஏற்பட்டபோது கூட அணைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

அணை உடைந்தாலும் கூட அணையில் இருந்து வெறும் 15 டி. எம்.சி தண்ணீர்தான் வெளியேற முடியும். அணையின் அமைப்பே அப்படி உள்ளது. இந்த நீரும் 48 கிலோ மீட்டர் தூரம் காட்டுப்பாதை வழியே இடுக்கி அணைக்கு சென்று விடும். 71 டி. எம்.சி கொள்ளளவு கொண்ட பெரிய இடுக்கி அணைக்கு இந்த நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று தமிழக அரசு கூறியது. மேலும் அதுவரை அணையில் 152 அடி நீர் தேக்கம் இருந்ததால் குமுளி பகுதி மூழ்கி விடும் என்கிற வாதத்தை கேரள அரசு சொல்லவில்லை. தற்போதுதான் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேங்கினால் குமுளி மூழ்கி விடும் என்று சொல்கிறது. குமுளி பெரியாறு அணைக்கு எதிர் திசையில் கடல் மட்டத்தில் இருந்து 3120 அடி உயரத்தில் உள்ளது. நீர் எதிர் திசையில் எப்போதும் பாயாது. மேலும் உயரத்தில் உள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. இப்படி தமிழக அரசு, கேரள அரசின் போராட்டத்தை அப்போது மறுத்தாலும் சாதகமான சூழ்நிலையை கேரள அரசு பயன் படுத்திக்கொண்டது. போராட்டம் பெரிதானதால் 1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வளக்கமிசன் இப்பிரச்சனையில் தலையிட்டது. மத்திய நீர்வளக்கமிஷன் தலைவர் கே.சி.தாமஸ் அணையை பார்வையிட்டார். பின்பு திருவனந்தபுரத்தில் தமிழக , கேரள அரசுகள் 25 .11 . 1979 இல் பேச்சுவார்த்தை நடத்தின.

கேரளாவிற்கு சாதகமான அதிகாரிகள் :

மத்திய நீர்வள கமிஷன் தலைவர் கே.சி. தாமஸ் மலையாளி. மேலும் அப்போது தமிழகம் சார்பில் தமிழகம் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர் எம்.ஜி.ஆர்., தலைமை பொறியாளர் ஜார்ஜ் மேத்யு, பொதுப்பணித் துறை பொறியாளர் உன்னிகிருஸ்ணன், பொதுப்பணித் துறை செயலாளர் பத்மநாபன், மதுரை கலெக்டர் சிரியாக், மக்கரா முகமது உட்பட அனைவருமே மலையாளிகள். அப்போது தமிழகம் சார்பில் கலந்து கொண்ட பொதுப்பணித் துறை அமைச்சர் ராஜா முகமது மட்டுமே தமிழர். இவர் பேச்சுவார்த்தையை எதிர்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டார்.

தமிழக அமைச்சர் கையொப்பமிடாத ஒரு ஒப்பந்தம் தமிழகத்திற்கு எதிராக செயல்பாட்டுக்கு வந்தது. மத்திய நீர்வளக் கமிஷன் ரூபாய் 21 கோடியே 51 லட்சம் செலவில் பெரியாறு அணையை தமிழக அரசு பலப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது. பலப்படுத்தும் பணிகள் முடியும் வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்க ஆலோசனை கூறியது. அணை பலப்படுத்தும் பணி முடிந்தபின் 152 அடியாக நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று ஒப்பந்தம் கூறியது. ஒப்பந்தப்படி 25 .11 . 1979 இல் அணை நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் பாதிப்பு :

அணையில் நீர் மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டதால் திருப்புவனம், திருப்பத்தூர் பகுதிகளில் 38000 ஏக்கர் நிலங்கள் தரிசு நிலங்களாயின. 86000 ஏக்கர் நிலங்கள் ஒரு போக சாகுபடியாக மாறின. 53000 ஏக்கர் நிலங்கள் நீர் வசதியின்றி ஆழ்குழாய் கிணறு சாகுபடிக்கு மாறியது.பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதியாக குறைந்தது மட்டுமன்றி ஆண்டுக்கு மூன்றுமாதம் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.பெரியார் நீர் ஆயக்கட்டு பகுதியில் உள்ள கம்பம், தேனி, ஆண்டிபட்டி மற்றும் உசிலம்பட்டி, மதுரை கிழக்கு, மேற்கு, மத்திய தொகுதி, மேலூர், நத்தம், சோழவந்தான், திருமங்கலம், சமயநல்லூர், திருப்பரங்குன்றம், திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், நிலக்கோட்டை, மானாமதுரை, திண்டுக்கல், பரமக்குடி, சேடப்பட்டி ஆகிய சட்டசபை தொகுதியில் உள்ள 21 எம் எல் ஏக்கள் ; பெரியகுளம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 5 லோக்சபா தொகுதி எம்பிக்கள், விவசாயிகள்,அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் உட்பட யாரும் அப்போது இப்பிரச்சனையை கண்டுகொள்ளாததால் தமிழக அரசும் கேரள அரசின் தந்திர பிடிக்குள் சிக்கிக்கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கம்பம் பள்ளத்தாக்கில் கடை அடைப்பு, ஊர்வலம் நடந்தது.

உற்பத்தி இழப்பு :

அணையின் நீர் மட்டம் 152 அடியாக இருந்தால்தான் அணையிலிருந்து 10 . 574 மில்லியன் கன அடி நீர் பயன்படுத்த முடியும். 136 அடியாக நீர்மட்டம் குறைக்கப்பட்டதால் 5580 மில்லியன் கன அடி நீர் வீணாக போகிறது. இதனால் தமிழகத்திற்கு 55 கோடியே 80 லட்ச ரூபாய் விவசாய உற்பத்தி இழப்பு ஆண்டுதோறும் ஏற்பட்டு வருகிறது. தவிர முன் உற்பத்தி குறைவினால் ஏற்படும் இழப்பு அதிகமாகும். பெரியாறு மின் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு இயந்திரமும், ஒரு நாளைக்கு 840000 ருபாய் மின் உற்பத்தி திறன் உள்ளவை . 4 இயந்திரமும் இயங்கினால் 3360000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.ஆனால் நீர்மட்ட குறைவினால் மின் நிலையத்தில் மூன்று மாதம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததால் 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஆண்டு முழுவதும் முழு அளவு மின் உற்பத்தி இல்லாததால் அதில் ரூபாய் 45 கோடி இழப்பு ; பெரியாறு அணையில் மட்டும் 75 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. விவசாய பொருள் உற்பத்தி ரூபாய் 55 கோடியே 80 லட்சம் . ஆக மொத்தம் ஆண்டு ஒன்றுக்கு தமிழக அரசுக்கு 130 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இழப்பு பற்றிய விபரத்தை ஒத்துக்கொள்ளும் தமிழக அரசு, நீர்மட்ட உயர்வை பற்றி கவலைப்பட வில்லை. 1980 லிருந்து 27 ஆண்டுகளாக அணையில் 136 அடிக்கு மேல் மதகுகள் மூடப்படாததால் ஆண்டுக்கு சராசரியாக 6400 மில்லியன் கன அடி நீர் உபரியாக இடுக்கி அணை வழியாக வீணாக கடலில் கலக்கிறது. பெரியாறு அணையில் பலப்படுத்தும் பணி முடிவடைவதற்காக தமிழகத்தில் தற்போது 18 ஆம் கால்வாய் திட்டம், ஆண்டிப்பட்டி குடிநீர் திட்டம், 58 கிராம கால்வாய் திட்டம், திருப்பரங்குன்றம், நிலையூர் கண்மாய் திட்டம், திருப்பத்தூர் கால்வாய் விரிவாக்கம் உட்பட பல பாசன திட்டங்கள் 19 ஆண்டுகளாக காத்துக்கிடக்கின்றன . அப்படியிருந்தும் தமிழக அரசோ , தமிழக மக்களோ பெரியாறு ஆயக்கட்டு பாசன பகுதி மக்களோ எவ்வித எதிர்ப்பும் காட்டாததால் கேரள அரசு அணை பிரச்சனையில் தனது திருவிளையாடலை தொடருகின்றது.

.

Source: Facebook.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைப் பெரியார் அணைக்காக பரப்புரைகளிலும், இணையதளங்களிலும் போட்டி...

390088_2308089470179_1487604611_31848408_1316692038_n.jpg........................373247_243504442375776_2136878740_n.jpg

.

Link to comment
Share on other sites

தமிழகத்தைத் தமிழன் ஆள வேண்டும். தமிழ்நாட்டிவ் வாக்களிப்பவர்கள்தான் தமிழர்கள். அரசியல் கட்சியைச் சோந்த தலைவர்கள் அனைவரும் வந்தேறு குடிகளாக இருந்தாலும் பறுவாயில்லை. தான் வாழும் நாட்டுக்கு விசுவாசமாக இருந்தார்களா, அதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

எங்களுக்கு இவ்வளவு விரிவாக முல்லைப் பெரியார் அணையின் பிரச்சனை பற்றி எடுத்து விளக்கிய உங்களுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப்போகின்றோம் ???? அரசியல் சாக்கடைகளைத் தவிர்த்துப் பார்தால் , நாங்களும் நீங்களும் வேறு இல்லை . உங்களுக்கான இருப்பைத் தக்கவைக்க இதுவே சரியான தருணம் என்று நினைக்கின்றேன் . ஆனால் தமிழகத்து இளைய சமுதாயம் சினிமா என்ற வைரசினால் பாதிக்கப்பட்டிருபதால் , எமக்கு இருந்தது போன்ற போராட்டப் பின்புலம் குறைவாகவே காணப்படுகின்றது . இதை அதிகார வர்க்கங்கள் கனகச்சிதமாகவே தமிழகத்தில் செய்து வைத்திருக்கின்றன . இந்த வைரசால் இளையசமூகம் மீளும்பொழுது தனித்தமிழ்நாடும் சாத்தியமே!!!!! ஏனேனில் , பல சமஸ்தானங்களே பின்பு வெள்ளையரின் கீழ் சுலபமான நிர்வாக அமைப்பிற்காக இந்தியா என்ற கேள்விக்குறியுடன் உருவாகியது வரலாறு . அது அப்படித்தான் இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லையே ????

மிக்க நன்றிகள் ராஜவன்னியன் :):) :) .

Link to comment
Share on other sites

இங்கும் கடைசியில் கேரளத்தவ்ர்களே வென்றுவிடுவார்கள் போலிருக்கு.தமிழர் நியாயம் தம் பக்கம் இருக்கின்றதென்றும் , சுப்பிரிம்கோடுகளின் தீர்ப்பும் தமக்கு சாதகமாக இருக்கின்றபடியாலும் 67 இல் தூபமிடப்பட்ட இந்த பிரச்சனையை பெரிதுபடுத்தவில்லை .ஆனால் தொடர்ந்து வந்த கேரள அரசுகள் தமது மக்கள் மத்தியில் முல்லைபெரியார் அணை உடைந்தால் தாம் அழிந்துவிடுவோம் என்ற பரப்புரையை மிக நேர்த்தியாக செய்ததால் இப்போ கேரளத்தில் அவர்தம் உயிர்பிரச்சனையாக உருவெடுத்துவிட்டது.சிறு வயது முதல் பாடசாலைகளிலும் இதைப்பற்றி போதித்தும் வந்துள்ளார்கள்.இப்போ கேரளா முழு சினிமா உலகமும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றது.இப்போ வந்த டாம்999 படம் மக்களை பயமுறுத்தவே எடுக்கப்பட்டிருக்கு

.

இதையோன்றும் அந்த அந்த நேரமே உணராத தமிழனும்,அரசுகளும் தலைக்கு மேல் வெள்ளம வந்ததும் வெட்டுவன்,புடுங்குவன் என்றுவிட்டு போய் படுத்துவிடுவார்கள்.அவர்களுக்கு தண்ணி வராவிட்டாலும் அசினும் நயனதாராவும் வேண்டும் .

எவ்வளவு காலமாக எமது போராட்டம் நடக்கின்றது ,மீனவர் படுகொலை நடக்கின்றது அறிக்கையையும் ,ஊர்வலத்தையும் ,பகஸ்கரிப்பையும்,கொடிஎரிப்பையும் தவிர அவர்களால் எதுவும் செய்த முடிந்ததா என்றால், இல்லை என்பதே பதில்.அவர்களை ஆயுதம் தூக்க சொல்லவில்லை ஒரு பதவியை இராஜினாமா செய்வது ,தொடர்மறியல் செய்வது,மத்தியஅரசுடன் கூட்டு வைக்காமல் விடுவது இப்படி எத்தனையோ விதத்தில் எதிர்ப்பை காட்டலாம் .ஒரு வருடமாக புலம் பெயர் தமிழன் உலகமெங்கும் வீதியில் நின்றான்.தமிழ் நாட்டில் தமிழனால் ஆளப்படும் நாட்டில் அவர்களால் என்ன செய்ய முடிந்தது.

அவர்கள் குடிப்பது ---------- பால். உணர்சி எங்கேயிருந்து வரும்

Link to comment
Share on other sites

இங்கும் கடைசியில் கேரளத்தவ்ர்களே வென்றுவிடுவார்கள் போலிருக்கு.தமிழர் நியாயம் தம் பக்கம் இருக்கின்றதென்றும் , சுப்பிரிம்கோடுகளின் தீர்ப்பும் தமக்கு சாதகமாக இருக்கின்றபடியாலும் 67 இல் தூபமிடப்பட்ட இந்த பிரச்சனையை பெரிதுபடுத்தவில்லை .ஆனால் தொடர்ந்து வந்த கேரள அரசுகள் தமது மக்கள் மத்தியில் முல்லைபெரியார் அணை உடைந்தால் தாம் அழிந்துவிடுவோம் என்ற பரப்புரையை மிக நேர்த்தியாக செய்ததால் இப்போ கேரளத்தில் அவர்தம் உயிர்பிரச்சனையாக உருவெடுத்துவிட்டது.சிறு வயது முதல் பாடசாலைகளிலும் இதைப்பற்றி போதித்தும் வந்துள்ளார்கள்.இப்போ கேரளா முழு சினிமா உலகமும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றது.இப்போ வந்த டாம்999 படம் மக்களை பயமுறுத்தவே எடுக்கப்பட்டிருக்கு

.

இதையோன்றும் அந்த அந்த நேரமே உணராத தமிழனும்,அரசுகளும் தலைக்கு மேல் வெள்ளம வந்ததும் வெட்டுவன்,புடுங்குவன் என்றுவிட்டு போய் படுத்துவிடுவார்கள்.அவர்களுக்கு தண்ணி வராவிட்டாலும் அசினும் நயனதாராவும் வேண்டும் .

எவ்வளவு காலமாக எமது போராட்டம் நடக்கின்றது ,மீனவர் படுகொலை நடக்கின்றது அறிக்கையையும் ,ஊர்வலத்தையும் ,பகஸ்கரிப்பையும்,கொடிஎரிப்பையும் தவிர அவர்களால் எதுவும் செய்த முடிந்ததா என்றால், இல்லை என்பதே பதில்.அவர்களை ஆயுதம் தூக்க சொல்லவில்லை ஒரு பதவியை இராஜினாமா செய்வது ,தொடர்மறியல் செய்வது,மத்தியஅரசுடன் கூட்டு வைக்காமல் விடுவது இப்படி எத்தனையோ விதத்தில் எதிர்ப்பை காட்டலாம் .ஒரு வருடமாக புலம் பெயர் தமிழன் உலகமெங்கும் வீதியில் நின்றான்.தமிழ் நாட்டில் தமிழனால் ஆளப்படும் நாட்டில் அவர்களால் என்ன செய்ய முடிந்தது.

அவர்கள் குடிப்பது ---------- பால். உணர்சி எங்கேயிருந்து வரும்

அருமையான கருத்து அர்ஜூன் . உங்களுக்கு ஒரு பச்சை :):) :) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.