Jump to content

வாக்குமூலம்-இளகிய மனமுடையோர் + குழந்தைகள் பார்க்க கூடாத படம்!


Recommended Posts

வாக்கு மூலம் விமர்சனம்: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்!

போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக - மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக் கூடங்கள் இன்றும் இலங்கையில் இருந்து வருகின்றன.

Army+Troture+In+Lanka.jpg

ஈழத்தில் இறுதிப் போர் இடம் பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவும், குள்ள நரித்தனதில் சிறந்த முன்னாள் ஐநா செயலாளர் நம்பியார் ஊடாகவும், மற்றும் சில உலகத் தலைவர்கள் ஊடாகவும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பி இராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகளையும், இறுதி யுத்தத்தில் எஞ்சிய விடுதலைப் புலிகளையும் இனங் கண்டு வவுனியாவில் உள்ள புன(ண)ர் வாழ்வு முகாமிலிருந்து வேறு பிரித்தனர் இராணுவத்தினர். புலிகளின் மூத்த தளபதிகள், மற்றும் புலிகள் அமைப்பினை பற்றிய பல விடயங்களையும் அறிந்த முதல் நிலைப் போராளிகளைத் தனித் தனிச் சிறைக் கூடங்களிற்கு இராணுவத்தினர் மாற்றினார்கள். இந்தச் சிறைக் கூடங்களின் ஒரே நோக்கம் சித்திரவதை செய்து உண்மைகளைப் பெற்றுக் கொள்வதாகும்.

கதிர்காமர் முகாம், இராமநாதன் முகாம், ஆனந்தக் குமாரசுவாமி முகாம், அருணாச்சலம் முகாம் என பிரிக்கப்பட்ட முகாம்களில் இராணுவத்தினர் வவுனியா மெனிக்பாம் நலன் புரி நிலையம் என வெளித் தோற்றத்திற்கு ஓர் பெயரினை வைத்து தமது சித்திரவதை கூடங்களுக்கான ஆட்களைத் தெரிவு செய்து கொண்டிருந்தார்கள். இம் முகாம்களில் மக்கள் புனர்வாழ்வு நோக்கத்திற்காகத் தான் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் பொய்யினை அரசு உலகிற்கு கூறி, புலிகளைப் பிரித்தெடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருந்தது. இம் முகாம்களில் வசித்த அனுபவங்கள் என்பது நரக வேதனைக்கு ஒப்பானது. வார்த்தைகள் கொண்டு ஆற்ற முடியாதது. "ஏன் இங்கே வந்தோம் என எண்ணிய உறவுகளை விட, அட முள்ளி வாய்க்காலில் மாண்டு போயிருக்கலாமே" என எண்ணியோர் தான் அதிகம்.

இம் முகாம்களிலிருந்து வேறு பிரித்தெடுக்கப்படும் புலிகள், மற்றும் சந்தேக நபர்களில் பலர் தென் இலங்கையில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட சித்திரவதைக் கூடாரங்களுக்கும், மற்றும் இனந் தெரியாத காட்டுப் பகுதி முகாம்களுக்கும் மாற்றப்படுவார்கள். இவற்றினை யாருமே முகாம்கள் என்று சொல்லமாட்டார்கள். மனிதர்களை மிருகங்களை விடக் கேவலமாக வெட்டிக் கொலை செய்து, சித்திரவதைக்கு உட்படுத்தி துன்புறுத்துவதால் இறைச்சிக் கடை அல்லது கசாப்புக் கடை என்றே அழைப்பார்கள். இலங்கையின் போரியல் வரலாற்றில் சூரிய கந்த, வெலிக் கடை, ஊரெழு, செம்மணி, அச்செழு, ஊர்காவற்துறை, யாழ்பாண நகரில் உள்ள சிங்கள மகாவித்தியாலத்தை அண்மித்த முகாம், மற்றும் வடமராட்சியில் வல்லைப் பாலத்திற்கு சமீபமாக உள்ள இராணுவ முகாம், வவுனியாவில் ஜோசேப் முகாம், நாலாம் மாடி, வெலிக் கடை, கூசா தடுப்பு முகாம் ஆகியவை சித்திரவதைகளுக்குப் பேர் போன முகாம்களாகும். இவையும் இறைச்சிக் கடை என்றே சிறப்பிக்கப்படும்.

இலங்கைத் தமிழ் நாளிதழ்களில் முதன் முறையாக இறைச்சிக் கடைகளில் நிகழும் மனிதத் துன்புறுத்தல்களை வெலிக் கடைச் சிறைச் சாலையினையும், நாலாம் மாடியினையும் ஆதாரமாக வைத்து செய்தி வெளியிட்ட பெருமை சரிநிகர் எனும் பத்திரிகைக்கே உரியது. பின்னர் அப் பத்திரிகையின் வாயினையும் அடைத்து விட்டார்கள். இந்த வதை முகாம்களில் பல ரகசியங்களை அறியும் நோக்கில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சித்திரவதையினை மேற்கொள்ளும் நபர்கள் சிங்களக் காடையர்களாக ஒரு காலத்தில் இருந்தார்கள். ஆனால் இறுதி யுத்தத்தின் பின்னர் பல தமிழர்களும் இவர்களோடு சேர்ந்து சித்திரவதைகளில் ஈடுபடுகின்றார்கள். இங்கே மேற் கொள்ளப்படும் சித்திரவதைகள் தொடர்பில் நான் ஏலவே "பெண் உறுப்பினுள் மிளகாய்த் தூள் தூவுதல்!" எனும் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். இங்கே கிளிக் பண்ணினால் படிக்கலாம்.

Army+Torture+In+Srilanka.jpg

இம் முகாம்களில் ஆண்களாயின் பின்வரும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

*ஆசன வாசலினுள் (குண்டியினுள்) உண்மைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் கூரிய ஆயுதத்தால் விட்டுக் குத்துதல்

*தலை கீழாக கட்டித் தொங்க விட்ட பின்னர் PVC குழாய் போன்ற தடித்த குழாயினுள் மண்ணை நிரப்பி விட்டு அடித்தல்

*ஆண் குறியினைக் குறட்டால் இழுத்து கேள்வி கேட்டல்.

*இடுப்புப் பட்டியால் (Belt) அடித்தல், இரும்பு ஆயுதத்தால் அடித்தல்.

*கை - கால் நகங்களினை ஒவ்வோர் கேள்விகளாக கேட்டு உண்மையான பதிலினை அறியும் வரை குறட்டினால் பிடுங்குதல்.

*குடிபானப் போத்தலினை உடைத்து அதன் பிசுங்கானால் உடலில் குத்தி வலியில் துடிப்பதைப் பார்த்து ரசித்தவாறு விசாரணை செய்தல்.

*கூரிய ஆயுதங்களால் உடலில் குத்துதல்.

*இறுதியில் பதில் சொல்லாது விடின் கொலை செய்தல்.

இம் முகாம்களில் பெண்களாயின் பின்வரும் சித்திரவதைகள் நிகழ்த்தப்படுகின்றன.

*அழகிய பெண்களாயினும் சரி, சுமாரனா தோற்றமுள்ள பெண்களாயினும் சரி இம் முகாமிற்கு வந்தால் இராணுவத்தின் காமப் பசியினைப் போக்கும் நோக்கில் முதல் வேலை வன் புணர்வு.

*பின்னர் உண்மைகளை அறியும் நோக்கில் ஆசன வாசலினுள் கூரிய ஆயுதங்களால் குத்துதல்.

*பெண் உறுப்பினுள் காரமான பொருளைத் தூவுதல். துப்பாக்கிப் பிடியினைச் சொருகுதல்.

*மார்பின் முலைக் காம்புகளை குறட்டினால் இழுத்து உண்மைகளை அறிதல்.

*கூரான ஆயுதங்களால் பெண் போராளிகள், குற்றவாளிகள் என இராணுவம் கருதும் நபர்கள் தகவல்களை வழங்கும் வரை தாக்குதல்.

*இறுதியில் கொலை செய்தல்.

இம் முகாம்களில் இருந்து மன நோயாளியானோர் மாத்திரம் தான் தப்பியுள்ளார்கள். அவர்களில் பலர் இன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மனநோயாளர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.போராளிகளை வைத்து புலிகளுக்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும்,போராளிகளிடமிருந்து பல தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் இந்த முகாம்கள் இயங்குகின்றன. ஒவ்வோர் நாளும் தமது விசாரணையின் போது போதிய தகவல்களை வழங்காதோரைக் கொலை செய்வது தான் இம் முகாம் அதிகாரிகளின் பொறுப்பாக உள்ளது. இந்த முகாமிலிருந்து சித்திர வதைக்கு ஆளான போராளி ஒருவரினால் தமிழகத்தின் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் உள்ள விடயங்களை மூலக் கதையாகக் கொண்டு சதாபிரணவன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் வாக்கு மூலம்.

தமிழகத்தில் ஆனந்த விகடன் சஞ்சிகையில் சி.மகேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட வீழ்வேன் என்று நினைத்தாயோ தொடரில் வெளியான சித்திரவதை முகாமிலிருந்து எழுதப்பட்ட போராளியின் உணர்வலைகள் தான் இந்தப் படத்திற்கு வலுச் சேர்த்திருக்கிறது. சித்திரவதை முகாமில் நிகழும் விடயங்களாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முற்று முழுதாக உண்மையானவை. ஆனால் பலத்த பாதுகாப்பின் மத்தியில் இருக்கும் இறைச்சிக் கடையிலிருந்து எப்படி ஓர் கடிதம் வெளியே போகும்? அவ்வாறு நிகழச் சாத்தியமா என்பது சந்தேகமே! 18.04.2010 அன்று எழுதப்பட்ட கடித்ததில் குறிப்பிடப்பட்டவாறு இராணுவத்தினர் சித்திர வதைக் கூடாரங்களில் போராளிகளை எவ்வாறு கொடூரமாக தண்டிக்கின்றார்கள்? போராளிகளை ஏன் தண்டிக்கின்றார்கள் எனும் விபரங்களை உள்ளடக்கி இக் குறும்படத்தினைத் தயாரித்திருகிறார்கள்.

ஒரு உண்மைச் சம்பவத்தினை உயிர்ப்பூட்டும் காவியமாக இந்த வாக்குமூலம் குறும்படம் தாங்கி வந்திருப்பதால்; படத்தின் கதை மற்றும் ஏனைய அம்சங்கள் பற்றி நான் இங்கே அலசப் போவதில்லை.இது நாம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய குறும் படம். நீங்கள் அனைவரும் இப் படத்தினைப் பார்க்கையில் அக் குறும்படத்தினூடாக காட்டப்படும் ஈழத்தின் வெளித் தெரியாத இன்னோர் பக்கத்தினை அறிந்து கொள்வீர்கள். சித்திரவதை கூடாரத்தினுள் உள்ள ஓர் போராளியிடம் "நாங்க கமெரா ஆன் பண்றது, நீ கதைக்கிறது(பேசுறது). இல்லே உன்னோட குஞ்சை நசுக்கிடுவோம்" எனச் சொல்லி இராணுவம் பேட்டி கொடுக்க வற்புறுத்துவதும், பின்னர் போராளி மறுத்திடவே கொலை செய்யும் காட்சியும் மகா கொடூரம். இராணுவத்தினரின் கடுமையான தண்டனைகள் காரணமாக ஓர் போராளி மன நோயாளியாக மாறி விட்டார் என்பதனைக் கூட அறியாது இராணுவம் தண்டனை வழங்கும் செயல் இருக்கிறதே. அது இன்னும் குரூரம்.

Koduram.jpg

"எங்கட கொமாண்டர்களில் யார் யார் உங்கட எல்டீடீ ஆளுங்க கூட தொடர்பு வைச்சிருக்காங்க" என்று இராணுவம் விசாரணை செய்கையில் மன நிலை பாதிக்கப்பட்ட போராளி "மகிந்த ராஜபக்ஸ, கோத்தபாயா ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, கருணா ராஜபக்ஸ, சிராந்தி ராஜபக்ஸ" எனச் சொல்லும் காட்சிகள் கண்களில் நீர் வரவைக்கின்றது. இறுதிப் போரின் பின்னர் காணாமற் போன போராளிகளின் நிலையினையும், இலங்கையில் உள்ள சித்திரவதை முகாம்களில் நிகழும் சொற்களால் வடிக்க முடியாத கொடூரங்களையும் காட்சிப்படுத்தி நிற்கிறது வாக்கு மூலம் குறும்படம். நாம் அனைவரும் கண்டிப்பாகப் பார்த்து இப்படியும் ஓர் சந்ததி அழிவுற்றிருக்கிறதே என்பதனை உணர்ந்து தெளிவதற்கான படம் இது.குழந்தைகள் மற்றும் இளகிய மனமுடையோர் பார்ப்பதற்கு உகந்த படம் அல்ல.

இப் பதிவிற்கான படங்கள் யாவும் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டவை! இப் படங்கள் அனைத்தும் இலங்கை இராணுவத்தினரால் இறுதி யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட போர்க் குற்ற நடவடிக்கைக்கு ஆதாரமாக ஐநாவிற்கு உலகத் தமிழர் பேரவையால் கையளிக்கப்பட்டவையாகும்.

http://www.thamilnat...og-post_07.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.