Jump to content

கவிதைக் காவியம்


Recommended Posts

காதலித்ததற்கு பிறகு

காத்திராமல் கால் வலிக்கும்--

கதைத்திராமல் கண்கள் பேசும்--

தூக்கம் தூரத்திலிருக்கும்--

நினைவுகள் மலர்ந்திருக்கும்--

தேங்கித் தேங்கி அன்பு ஊற்றெடுக்கும்--

வானம் வெளித்திருக்கும் பூமி நனைந்திருக்கும்--

தினம் தோறும் ஆவாரம் பூ மலரும்--

காணும் முகமெல்லாம் காதலனைப் போலிருக்கும்--

பொல பொல வென்று பாசம் பெருக்கெடுக்கும்--

தூங்காமல் கனவு வரும்--

ஆக மொத்தத்தில் பைத்தியம் பிடித்து விடும்--.

நன்றி :):lol: :P

Link to comment
Share on other sites

நிசமாலும் உண்மை தானுங்க.

ஒரு மனநோய் வைத்தியசாலையில் இரண்டு நோயாளிகள் ஒரே பெண்ணின் பெயரைச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்களாம். அங்கு வந்தவரொருவர் ஏன் இருவரும் ஒரே பெண்ணின் பெயரைச் சொல்லி புலம்புகின்றார்கள் என்று வைத்தியரிடம் கேட்டார். அதற்கு அந்த வைத்தியர் சொன்னாராம் இருவரும் ஒரே பெண்ணைத்தான் விரும்பினார்கள். ஒருவனுக்கு அவள் கிடைக்காததால் பைத்தியமானான். மற்றவனுக்கு அவள் கிடைத்து பின் பைத்தியமாகிவிட்டான் என்று. :roll: :roll:

Link to comment
Share on other sites

கவிதை நன்று தாரணி பாராட்டுக்கள் அதுசரிஅந்த இருவரில் நீங்கள் எந்த பைத்தியம் வசம்பு :P :P :wink:

Link to comment
Share on other sites

மெளனமாய் எழும் மனதின் உணர்வுகளை சொல்லும் குட்டிக்கவிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்..! :P

Link to comment
Share on other sites

காணும் முகமெல்லாம் காதலனைப் போலிருக்கும்--

பொல பொல வென்று பாசம் பெருக்கெடுக்கும்--

ஆகா..அழகான ஒரு குட்டி கவிதை தாரணி தொடருங்கள்.. :)

Link to comment
Share on other sites

தாரணி கவிதை நன்றாய் இருக்கின்றது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

கற்பனையில்லை உண்மையை அப்பிடியே எழுதியிருக்கிறீயள் அனுபவம் போலவும் சாதுவாத் தெரியுது........

ஆகா..அழகான ஒரு குட்டி கவிதை தாரணி தொடருங்கள்.. :lol:

பாருங்கோ ஒருஆளுக்கு பிடிச்ச வரிகளை..........

ஊரிலை எண்டாலும் மந்திகை இருந்திச்சு உங்கை எதுவோ????

Link to comment
Share on other sites

வசம்பரும் சாத்திரியோடை ஆஸ்பத்திரியிலை இருந்த விசயம் எனக்குத் தெரியாமப் போட்டுதே........சா...........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.