Jump to content

நீல நிறக் குழந்தை


Recommended Posts

நீல நிறக் குழந்தை பிறப்பது எதனால்?

குழந்தைகளுக்கு வரும் பிறவி இருதய நோய்களில் மிகவும் சிக்கலானது குழந்தை நீல நிறமாக மாறும் புளூ பேபி சிண்ட்ரோம். பிறந்தது முதல் ஒரு மாதம் வரை உள்ள பச்சிளங் குழந்தைகளுக்கு இந்த நோய் வரும்.

நோய்க்கான அறிகுறிகள்: இருதய உறுப்புக்களான வால்வுகள், தடுப்பு சுவர்களில் நோய் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப அறிகுறிகள் தெரியும். சில குழுந்தைகள் பிறக்கும்போதே நீல நிறமாக பிறக்கும். உடலில் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு இருந்தால் இதுபோல பிரச்னை வரும்.

கார்பன்டை ஆக்சைடு அதிகமாகும்போது, ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகமாகும். சுவாச மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் மூளை நரம்புகள் வேகமாகச் செயல்பட்டு சாதாரணமாக மூச்சு விடும் நிலை அதிகமாகி ஒரு நிமிடத்திற்கு 18, 20 முறை இதயத் துடிப்பும் அதிகமாகி மூச்சிரைப்பு ஏற்படும். இதுபோன்ற குழந்தைகளுக்கு <உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை இறக்கும் நிலையும் ஏற்படலாம்.

குழந்தைக்கு செயற்கை பிராண வாயு கொடுத்து, "இன்டெரால்" என்ற மருந்தை கொடுக்க வேண்டும். ரத்தத்தில் இருக்கும் அமிலத்தன்மையை குறைக்க "பைகார்பனேட்' மருந்தை கொடுக்க வேண்டும். சுவாச மண்டலத்தின் அதிகப்படியான இயக் கத்தை கட்டுப்படுத்த "மார்பியா" தேவைப் படும். மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப் படாமல் அடிக் கடி மூச்சிரைப்பு, அதிகப்படியான இருதய துடிப்பு ஏற் பட்டால் அறுவை சிகிச்சை செய் வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் ஒரு வயதிற்கு முன் அறுவை சிகிச்சை செய்தால், இரண்டு சதவீம்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி குழந் தைகள் பிறக்கின்றனர். இவர்களில் ஆயிரம் குழந்தைகள் "புளூ பேபி" யாக பிறக்கின்றனர். இதில் 50 சதவீத குழந்தைகள் மட் டுமே முறையான சிகிச்சை கிடைத்து உயிர் வாழ்கின்றனர்.

நீல நிற இருதய நோயிலும் பல வகைகள் உள் ளன. 85 சதவீத குழந்தைகளுக்கு வருவது "டெட்டாலஜி பேலோஸ்" என்ற வகை. அடுத்து, பல்மனரி அட்ரீசியா. இதில் இருதயத்தின் வலது கீழறையில் இருந்து அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பல்மனரி வால்வு சுருங்கி, தமனியோடு ஒட்டிக் கொள்ளும். இது பிறவியிலேயே உருவாகும் குறை. இதனால் வலது கீழறையில் இருக்கும் அசுத்த ரத்தம் இரண்டு கீழறைக்கும் இடையில் இருக்கும் தடுப்பு சுவரில் ஏற்படும் ஓட்டை வழியாக இடது கீழறைக்கு வந்து விடும்.

மூன்றாவது வகை "டிரைகஸ் அட்ரீசியா." வலது மேலறைக்கும், கீழறைக்கும் இடையில் இருக்கும் வால்வுக்கு பெயர் டிரைகஸ் பி. இந்த வால்வு முழுமையாக உருவாகாமல் இருக்கும். இதனால் வலது மேலறையில் உள்ள அசுத்த ரத்தம் கீழறைக்கு வராது.

இதனால் வலது மேலறைக்கும் இடது மேலறைக்கும் இடையில் உள்ள தடுப்பு சுவரில் பெரிய ஓட்டை உண்டாகி, இந்த ஓட்டை மூலம் வலது மேலறை அசுத்த ரத்தம் இடது மேலறைக்கு வந்து அங்கிருந்து சுத்த ரத்தம் இருக்கும் இடது கீழறைக்கு வந்து (இதில் சுத்த ரத்த மட்டுமே இருக்க வேண்டும்) சுத்த ரத்தத்துடன் கலந்து, உடல் முழுவதும் பரவி ஊதா நிற தோற்றத்தை தருகிறது.

இதுதவிர, மிக சிக்கலான பிறவி இருதய நோய்களான டிரான்ஸ்பொசிஷன் டீ மற்றும் எல் ஆகிய பிறவி நீலநிற இருதய நோய்கள் உண்டாகின்றன. இதில் இருதய உறுப்புகளான தமனி, இருதய அறைகள் போன்றவை இயற்கையாக இருக்கும் இடத்திலிருந்து மாறி, வேறு இடங் களில் இருக்கும்.

சமயங்களில் இடது புறம் இருக்க வேண்டிய இருதயம் வலது புறமாக இருப்பதும் உண்டு.

இடது கீழறை இல்லாமல் இருப்பது, மகாதமனி சிறுத்துப்போவது, மகாதமனியே இல்லாமல் இருப்பது போன்ற குறைகளும் ஏற்படும். ஈ.சி.ஜி.,எக்ஸ்ரே, எக்கோ கார்டியோகிராம் என்ற நவீன ஒலி அலை வரைபடம் போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த குறைபாடுகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த பரிசோதனைகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு பிறவியிலேயே வால்வுகளில் ஏற்படும் கோளாறுகளால் நீலநிறமற்ற இருதய நோய்களான மேலறை தடுப்பு: சுவரில் ஓட்டை ஏற்படுனது, அதேபோல கீழறை சுவர் களில் ஓட்டை ஏற்படுவது உட் பட பல பிறவி இருதய நோய் கள் குழந்தைகளுக்கு வருகிறது. ஒரு வயதில் இருந்து 12 வயதிற்குள் நோய் தாக்கிய 80 சதவீதம் குழந்தைகளின் குறைபாடுகளை கண்டுபிடித்துவிட முடியும். சிலருக்கு 30, 40 வயது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து அதன்பிறகு தெரியும். பச்சிளங் குழந்தைகள் பால் சரியாக குடிக்காமல் போனால் அல்லது பால் குடிக்கும்போது அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக புரை ஏறினால், மூக்கில் வழிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். இது பிறவி இருதய நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். கவனிக்காமல் விட்டால் நுரையீர<லுக்குள் பால் சென்று நிமோனியா போன்ற வியாதிகளை உண்டாக்கும்.

வால்வில் ஏதாவது பிரச்னை இருந்தால், படபடப்பு, மயக்கம் அடிக்கடி சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தெரியும்.

எதுவாக இருந்தாலும் குழந்தையின் உடல் மாற்றங்களை கவனத்துடன் பார்த்து, சந்தேகம் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் காட்டி ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.

-பேராசிரியர் அர்த்தநாரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.