Jump to content

அவன் அழைத்த இளையோரே!!! எங்கே நீங்கள்???


Recommended Posts

முகம் தெரியாத தியாகங்களின் முகவரிகளை,

முகமூடிகள் மட்டுமே தேடும் நிர்ப்பந்தம்!

காலத்தின் கண்ணாடிகளில் விம்பங்களாய் விழுந்த

கோலங்கள் .... எம் காலடிகளில் மிதிபடும் பரிதாபம்!!

மாறுவேடம் பூண்டுதான்... மாவீரரையும் பூசிப்போமா? - இல்லை

மாறிமாறி நின்றுதான்... அவர்களை நிந்திப்போமா?

காறியுமிழ்ந்த எச்சங்களில்... அந்தக் கல்லறைகளின் மிச்சங்கள்!

தேறிநிற்கும் தமிழர்க்கு... அவர்கள் தேவையில்லைப் போல??

நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் தமிழர்களே!?

பிச்சைக்காரர்கள்தான் நாங்கள்.... புரிகின்றதா?

பித்துப் பிடித்தா.... தம்மேனி பிய்த்தெறிந்தார்கள்??

யாருக்காக? எதற்காக? .... தெரியாதா உங்களுக்கு???

இரவல் வீரத்தில்... இழக்காரம் கதைக்கும் உங்கள் நாவில்,

அவர்கள் கழுத்து நஞ்சைவிட கொடிய விஷம்!!!

எமக்காக மாண்டவர்களை மீண்டும் மீண்டும் சாகடித்தபடி,

மார்தட்டும்... வீரப் பரம்பரை நாம் மட்டுந்தான்!!!

மனச்சாட்சி என்றொன்றின்... அவசியத் தேவை எமக்குத்தான்!

சாட்சிகளாய் நிற்கும் அவலங்கள்.... புலமேறிவந்து,

நிரந்தர வதிவிட , குடியென நிமிர்ந்து நிற்கப் பண்ணின்,

அது போதும் எங்களுக்கு...!!! மனச்சாட்சியெல்லாம் எமக்கெதற்கு???

அப்படித்தானே????????

இங்கு நாம் சுவாசிக்கும் குளிர்காற்றுக்கூட,

எங்களைச் சுட்டெரிக்கிறதாய் உணரும் உள்ளங்களில்...

எரியும் நெருப்புக்களை அணையவிடாதீர்கள்! - ஏனெனில்,

எம் மாவீரர்க்கு ஏற்றும் உண்மையான அகல்விளக்கு அதுவாய்த்தான் இருக்கும்!!!

உள்ளெரியும் நெருப்பின் சுவாலைகள்தான்... பகை விரட்டி,

கலங்கரை விளக்கின் வெளிச்சமாய் நின்றெரிந்து...

விடிகின்ற எம் தேசமதில்... நாளை நம்மைக் கரை சேர்க்கும்! - அதுவரை

அந்தக் கல்லறைகள் ... எமக்காகக் காத்திருக்கும்!!!

எங்களை நம்பித்தான் இறுதிவரை ஈடேறின தியாகங்கள்!

மற்றவர்களின் தியாகங்களில் குளிர்காய வேண்டாமே!!

எங்களுக்காய் களமாடி நெடுந்துயிலும் கல்லறை வீரரை,

பிரியாது நின்றேனும்.... உணர்வோடு நினைப்போமே!!!

மண்டபங்கள் எடுத்து... மடப்பள்ளி வைத்து,

வீண் வாதம் செய்ய வேண்டாம்- உங்கள் மனந்தன்னுள்,

மனமார நினைத்து .. .கையில் ஒரு தீவர்த்தி போதுமே!

அவன் அழைத்த இளையோரே!!! எங்கே நீங்கள்???

அவன் அழைத்த இளையோரே!!! எங்கே நீங்கள்???

**********************************************************

இன்றுவரை, தமிழீழ விடுதலைக்கென தங்களின் உயிர்களை அர்ப்பணித்த அத்தனை மாவீரர்கள் மற்றும் அனைத்து உறவுகளையும் நினைவில் நிறுத்தி..... அவர்களின் தியாகங்களை, அர்ப்பணிப்புக்களைக் கருத்தில் கொண்டு .... அவர்களின் இலட்சியங்களை ஈடேற்ற ஒற்றுமையுடன் பயணிப்போம்...... இறுதிவரை!!!

http://www.youtube.com/watch?v=UakxpJNJz38&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ப உணர வைக்கும் பதிவு.............நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாம் சுவாசிக்கும் குளிர்காற்றுக்கூட,

எங்களைச் சுட்டெரிக்கிறதாய் உணரும் உள்ளங்களில்...

எரியும் நெருப்புக்களை அணையவிடாதீர்கள்! - ஏனெனில்,

எம் மாவீரர்க்கு ஏற்றும்  உண்மையான அகல்விளக்கு அதுவாய்த்தான் இருக்கும்

கவிதை தந்த வரிகள் நிச்சயம் அவர்களின் மனச்சாட்சியை கேள்வி கேட்கும் நன்றி கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை அண்ணா, நீங்கள் எதை எழுதினாலும் கவிதையாக பாய்கிறது. ஒரு பச்சை அண்ணா.

பல இளையோரை நமது மூத்த தமிழீழ ஆர்வலர்கள் கையாள தெரியாமல் அவர்கள் ஓடிய காலம் உண்டு.

நானும் எங்கே என்று தேடியபோது யாழில் அது கிடைத்தது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=94544

Link to comment
Share on other sites

காலத்துக்கேற்ப உணர வைக்கும் பதிவு.............நன்றி

நன்றி நிலாமதி அக்கா! காலத்துக்கு ஏற்ப நிலைமைகளைப் புரிந்து நடக்க வேண்டிய நிலைமைகளில் நாங்கள் இப்போது இருக்கின்றோம்!

எமக்காக தமது வாழ்வினை அர்ப்பணித்தவர்களின் நினைவுகளை சுமப்பது கூட எங்களுக்கு பெரும் சுமையாகத் தெரிகின்றதே........... மனதினை உறுத்துகின்றது நிதமும்!

Link to comment
Share on other sites

கவிதை தந்த வரிகள் நிச்சயம் அவர்களின் மனச்சாட்சியை கேள்வி கேட்கும் நன்றி கவிதை

மனச்சாட்சிகளின் கதவுகளை தட்டித் திறந்தால் அது நன்றே!

நன்றி வாத்தியார்! :)

Link to comment
Share on other sites

கவிதை அண்ணா, நீங்கள் எதை எழுதினாலும் கவிதையாக பாய்கிறது. ஒரு பச்சை அண்ணா.

பல இளையோரை நமது மூத்த தமிழீழ ஆர்வலர்கள் கையாள தெரியாமல் அவர்கள் ஓடிய காலம் உண்டு.

நானும் எங்கே என்று தேடியபோது யாழில் அது கிடைத்தது.

http://www.yarl.com/...showtopic=94544

இளையோர்களின் ஆதரவினையும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் ... புலம்பெயர் தேசங்களில் பெற்றுக்கொள்வதை தவறவிட்டுவிட்டோம்! இனிமேலும் அவ்வாறான தவறுகளை விடாமல்... அவர்களின் கைகளில் நெறிமுறையான செயற்பாடுகள் ஒப்படைக்கப்படவேண்டும்!

அதற்குத் தயாரான நிலையில் தாங்கள் இருக்கின்றார்கள் என.....கடந்த சில வருடங்களாக, இளையோர் தமது செயற்பாடுகளின் மூலம் நிரூபித்துள்ளார்கள்!

நன்றி சகோதரா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் கண்ணாடிகளில் விம்பங்களாய் விழுந்த

கோலங்கள் .... எம் காலடிகளில் மிதிபடும் பரிதாபம்!!

நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் தமிழர்களே!?

பிச்சைக்காரர்கள்தான் நாங்கள்.... புரிகின்றதா?

எமக்காக மாண்டவர்களை மீண்டும் மீண்டும் சாகடித்தபடி,

மார்தட்டும்... வீரப் பரம்பரை நாம் மட்டுந்தான்!!!

மண்டபங்கள் எடுத்து... மடப்பள்ளி வைத்து,

வீண் வாதம் செய்ய வேண்டாம்- உங்கள் மனந்தன்னுள்,

மனமார நினைத்து .. .கையில் ஒரு தீவர்த்தி போதுமே!

கவிதையல்ல, இது!

காலத்தின் ஒளித் தெறிப்பு!

ஆதங்கங்களை, ஏக்கங்களை அழகாக வடித்திருக்கிண்றீர்கள், கவிதை!

ஒரே ஒரு பச்சை தான் மிச்சம் இருந்தது! அதுவே உங்களுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரை, தமிழீழ விடுதலைக்கென தங்களின் உயிர்களை அர்ப்பணித்த அத்தனை மாவீரர்கள் மற்றும் அனைத்து உறவுகளையும் நினைவில் நிறுத்தி..... அவர்களின் தியாகங்களை, அர்ப்பணிப்புக்களைக் கருத்தில் கொண்டு .... அவர்களின் இலட்சியங்களை ஈடேற்ற ஒற்றுமையுடன் பயணிப்போம்...... இறுதிவரை!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவன் அழைத்த இளையோர் இங்கே. இவர்கள் வெளிநாட்டில் பரிந்து வளர்ந்த வெள்ளை தமிழர்கள்.

இவர்களுக்கு நாம் உதவத்தேவையில்லை. பட்டு துணி போர்க்க தேவை இல்லை. குட் ஜாப் என்ற ஊக்க வார்த்தைகளே அவர்களுக்கு போதும்.

ஸ்ரீ லங்காவின் கிழடு கட்டை வாய் வெடியங்களை போட்டு தாக்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.