Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

yarlhouse.jpg

யாழ் களத்தில் கள விதிக்கு உட்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் கீழ் ஒரு களமாளுமன்றை யாழ் கள உறுப்பினர்களின் மத்தியில் இருந்து கட்சி அடிப்படையில் அமைக்கலாம் என்று தீர்மானிச்சு.. இதனை இங்கு கொண்டு வருகிறேன்.

இப்போ.. இளையோர் பாராளுமன்றம் போல.. இது யாழ் களத்திற்கு. இந்த மன்றம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு பதவிக் காலத்தைக் கொண்டிருக்கும்.

இதில்..

கள நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும்.. ஆளும் கட்சி சார்ந்த பிரதமர் மற்றும் இரண்டு அமைச்சுக்கள் மட்டுமே அமைய முடியும். எந்தப் பதவியும் சுழற்சி முறைக்கமைய அதே பதவிக் காலத்தில் ஆளும் கட்சியினர் எல்லோருக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.

ஆளும் கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற.. தனது கட்சியில் இருந்து குறைந்தது 60% ஆதரவையும்.. எதிர்கட்சியிடம் இருந்து குறைந்தது 50% ஆதரவையும் பெற்றாக வேண்டும். இன்றேல் அந்த தீர்மானம் நிறைவேறியதாகக் கொள்ள முடியாது.

இதுபோன்ற பல மறுசீரமைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டுக்கான ஜனநாயகம் என்ற தொனிப்பொருளோடு.. இந்த மன்றத்தை அமைக்கலாம்.

மேலும்.. ஆளும் கட்சிக்கான விதிமுறைகள்.. எதிர்க் கட்சிகளுக்கான விதிமுறைகள்.. களமாளுமன்ற விதிமுறைகள்.. களமாளுமன்ற கலைப்பு.. இவை அனைத்தும் களவிதிக்கு உட்பட்டவை. இந்த விதிமுறைகள் இத்தலைப்பு கள உறுப்பினர்களின் அங்கீகாரம் பெறப்பட்ட பின் தீர்மானிக்கப்படும்.

இது ஒரு சிநேகித பூர்வ முயற்சியே அன்றி.. பகைமை பாராட்டலுக்கானதல்ல..! அந்த வகையில்..

உங்களிடம் இருந்து.. கூடியது 5 கட்சிகளை பிரேரிக்க கேட்பதோடு.. (ஊரில் உள்ள கட்சிகள் போன்றதல்ல. நியாயமான.. மறுசீரமைப்பை வெளிக் கொணரக் கூடிய கட்சிப் பெயர்கள்) அந்தக் கட்சிகளில் அங்கத்துவம் வகிக்க விரும்புவர்கள் தங்களின் பெயர்களை (களப் பெயர் மட்டும்) இணைக்கலாம். அந்தக் கட்சிகளுக்கு உறுப்பினர்களையும் சேரக் கேட்கலாம்.

அதுமட்டுமன்றி இத்திட்டத்தை மேற்கொண்டு செல்ல.. குறைந்தது 10 பச்சைப் புள்ளிகள் இந்தத் தலைப்பிற்கு அவசியம். கள்ள வாக்குகள் செல்லுபடியாகா. கள நிர்வாகம் இதனை சரி பார்த்துச் சொன்னால் நன்று. அதாவது கள்ள வாக்கு போட்டிருக்கா இல்லையா என்று சொன்னால் மட்டும் போதும். கள்ள வாக்குப் போட்டிருந்தால்.. அதன் தொகையை குறிப்பிட்டால்.. அது மொத்த வாக்கில் இருந்து கழித்து நோக்கப்படும்.

இத்திட்டம் முற்றிலும் களவிதிக்கு உட்பட்டது. (எனவே இத்திட்டம் எதிர்பார்ப்பை மீறிச் சென்றால் கள நிர்வாகத்தால் தடை செய்யப்படலாம்). ஜனநாயக பண்புகளையும் எதிரிடை கருத்துக்கள் மத்தியிலும்.. சிநேகித பூர்வ.. கூட்டுச் செயற்பாடுகளுடனான கருத்தொருமிப்பு திட்டம் வகுத்து 21ம் நூற்றாண்டுக்கான மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தில் வழியில்.. செயற்படுத்தல்.. என்பதையும் இலக்காகக் கொண்டு இது வரையப்பட்டுள்ளது.

இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன்.

இத்திட்டதிற்கு இரண்டு வாரங்களுக்குள் 10 பச்சைப் புள்ளியும்.. 5 கட்சிப் பெயர்களும்.. கட்சிகளுக்கு தலா குறைந்தது.. இருவர் என்ற வகையில் அங்கத்துவமும் இன்றேல்.. இத்திட்டம் முற்றாகக் கைவிடப்படும்.

நன்றி... உங்கள் ஆதரவிற்கு. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கரே இருக்கிற பச்சைப்புள்ளிகளை பறிக்கிற பிளானோ? :icon_mrgreen:

ஆமா...

களமாளுமன்றத்தின் ஆளுனர் (அவரையா சாபாநாயகர் என்று சொல்வது?) யார்?

பிரதமர் யார்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கரே இருக்கிற பச்சைப்புள்ளிகளை பறிக்கிற பிளானோ? :icon_mrgreen:

ஆமா...

களமாளுமன்றத்தின் ஆளுனர் (அவரையா சாபாநாயகர் என்று சொல்வது?) யார்?

பிரதமர் யார்? :icon_mrgreen:

முதலில் கட்சிகளைப் பிரேரியுங்கோ.. அங்கத்துவர்களை உள்வாங்குங்கோ.. மறுசீரமைக்கப்பட்ட அதி கூடிய ஜனநாயக பண்புகளை உட்புகுத்திய ஒரு தேர்தல் மூலம்.. களமாளுமன்றம் அமைக்க விதிகளை சமர்ப்பிக்கிறேன். அவ்விதிகளும் உங்களால் பச்சைகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பின் தேர்தல் நடக்கும்..! தேர்தலின் பின் ஆட்சி அமையும்.

ஆளும் கட்சி.. எதிர்க்கட்சி என்ற நிலைக்கு அப்பால்.. கொள்கை செயற்படுத்து கட்சியாக ஆளும் கட்சியும்.. கொள்கை பரிந்துரை.. கண்காணிப்பு கட்சிகளாக.. எதிர்கட்சிகளும் இருக்க.. விதிகளில் வகை செய்யப்படும்..!

மாற்றுக் கருத்து என்ற சொல்லாடலுக்கு இடமில்லை. எவரும் தம்முள் உள்ள கொள்கையை பரிந்துரைக்கலாம்.. அதனை மற்றவர்களின் உணர்வுக்கு அமைய ஏற்கச் செய்யவும் நிராகரிக்கச் செய்யவும் அவரவருக்குள் உள்ள கருத்துக்களை களமாளுமன்றில் சமர்ப்பித்து.. பொதுத் தீர்மானங்களை எட்டலாம். அத்தீர்மானங்கள் எட்டப்பட ஆளும் தரப்பு குறைந்தது அதன் மொத்த உறுப்பினர்களின் 60% வாக்குகளையும் எதிர்த்தரப்பின் 50% வாக்குகளையும் அதற்கு பெற வேண்டும். ஆக எதிர்த்தரப்பின் ஆதரவைப் பெறாது எதனையும் மக்கள் மீது திணிக்க முடியாது. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

உங்களின் கட்சியின் பெயர் கொள்கையை சிறிய குறிப்பாக வரைஞ்சு எழுதுங்கோ. அதில் ஈர்க்கப்படுபவர்கள்.. உங்கள் கட்சியில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள்.

இப்போ உதாரணத்திற்கு.. எக்காரணம் கொண்டும்.. இத்திட்டத்தை முன்மொழிந்த நான் கட்சி அமைக்கவோ.. ஆட்பிடிக்கவோ முடியாது. களமாளுமன்ற விதிக்குள் அதுவும் அடங்கும். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்கையா?

அது...வந்து... யோசித்து சொல்கிறேன்.. :icon_mrgreen:

கொள்கையே தெரியாமல் யார் கட்சிக்குள் சேரத்தயார்? :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்..

இதைமாதிரி ஒன்றை நானும் நினைச்சு வச்சிருந்தன்.. நீங்கள் முந்திட்டீங்கள்..! :wub: இந்தத் திரி நல்லபடியாகப் போக வாழ்த்துக்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு anarchist. எந்த அமைப்பும் ஆட்சி என்ற பெயரில் களத்தைக் கட்டுப் படுத்த முனைவதை எதிர்க்கிறேன். களம் எந்த அமைப்பியலுக்குள்ளும் வராமல் காட்டாறு போல இயங்க வேண்டும் என நினைக்கிறேன். இக்கருத்துக்கு ஆதரவு தருவோர் பச்சை குத்தலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது களத்தைக் கட்டுப்படுத்துவதற்கானதல்ல. அதை நீங்கள் விரும்பினாலோ.. விரும்பாவிட்டாலோ.. நிர்வாகம் என்ற கட்டமைப்பு செய்தே தீரும். இது...

ஜனநாயக பண்புகளையும் எதிரிடை கருத்துக்கள் மத்தியிலும்.. சிநேகித பூர்வ.. கூட்டுச் செயற்பாடுகளுடனான கருத்தொருமிப்பு திட்டம் வகுத்து 21ம் நூற்றாண்டுக்கான மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் வழியில்.. செயற்படுத்தல்.. என்பதையும் இலக்காகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. (இது களச் செயற்பாட்டாளர்களின் கருத்தொருமிப்பு கொண்ட பயனுள்ள பரிந்துரைகள் சமூகத்தளத்தை அடைய என்று உருவாக்கப்படலாம்.). மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகப் பண்புகளை மதிக்கும்.. தன்மைகளை அதிகம் உருவாக்கலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே மாவீரர்நினைவுகள் தடுமாற்றத்தில் இருக்கும் போது......இங்கேயும் பல பிளவுகளை ஏற்படுத்தமுயற்சிகளா??? அனைவரையும் ஒருங்கிணைக்க யாழ்களம் ஒரு பாலமாக இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புவது...

இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன்.

எதற்கு எடுத்தாலும்.. மாவீரர்களை வைச்சு.. பிழைப்புவாதங்களையும்.. அரசியல்வாதங்களையும்.. ஏன் அன்றாட வாழ்வியல் செயற்பாடுகளையும் வகுப்பதென்பது.. மாவீரர்களின் உன்னத இலட்சியத்தை பலவீனமான ஒரு காரணியாக இனங்காட்டுவது போன்றே அமைகிறது.

யாழ் களம் 1998 இல் இருந்து செயற்படுகின்ற ஒரு களம். அதன் தமிழ் தேசியப் பங்களிப்பு.. இணைப்புப் பாலப் பங்களிப்பு எதுவுமே இன்றைய நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம்.. நடப்பவை எல்லாம் யாழ் களத்திற்கு வெளியிலேயே தீர்மானமாகி அங்கேயே நடந்தும் கொண்டிருக்கின்றன. பிரதிபலிப்புக்களை மட்டும் யாழும் பிம்பமாக்க வேண்டிய காலச் சூழல். அதற்கும்.. இதற்கும் முடிச்சுப் போடுவது.. ஒரு விசமத்தனத்தின் வெளிப்பாடு என்று கூட சொல்லலாம். ஆனால் அது அல்ல இத்தலைப்பின் நோக்கம். :):icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்குக்கும் ஒரு பச்சை

ஜஸ்ரினுக்கும் ஒரு பச்சை

கு.சா வுக்கும் ஒரு பச்சை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

வல்வையின் கட்சியில் இணைந்து, அடிமட்ட தொண்டனாக பணியாற்ற நான் வருகின்றேன்.

வல்வையை பிரதமாக்கும் வரை..... எனது கட்சித் தலைமைப் பீடம் இட்ட கட்டளையை நிறைவேற்ற என்னாலான சாம,பேத, தான, தண்ட வேலைகளை செவ்வனே மேற்கொள்வேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

வருங்கால முதல்வர் வல்வை வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு வினையாகக்கூடாது என்பதற்காகவே எனது கருத்தை சொன்னேன். :icon_idea:

அடுத்தது எதெற்கெடுத்தாலும்............என்பதற்கு????அடையாளம் காண்பதற்க்காகவது இக்களம் இருக்கட்டும்.

யாழ்களம் எப்படி இருக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள பாராளுமன்றத்துக்கு கட்சி அமைக்க...

விசுகு

சாத்திரி

நெல்லையன்

நாரதர்

நெடுக்காலபோவான்

அர்ஜூன்

ரதி

மருதங்கேணி

அறிவிலி

ஆகியோரை அழைக்கின்றேன்.

கட்சித் தலைவர்களின் பெயர்கள் தொடரும்.....

Link to comment
Share on other sites

:icon_mrgreen:

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஏக்கமுள்ளோர் கட்சி" அந்தக்காலத்து ஏக்கம் இந்தக்காலத்து ஏக்கம் அனைத்தும் இருக்கும் அனைவரையும் இக்கட்சி அன்புடன் உறுப்பினராக வரவேற்கிறது. வாருங்கோ வந்து பழகிப்பாருருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள பாராளுமன்றத்துக்கு கட்சி அமைக்க...

விசுகு

சாத்திரி

நெல்லையன்

நாரதர்

நெடுக்காலபோவான்

அர்ஜூன்

ரதி

மருதங்கேணி

அறிவிலி

ஆகியோரை அழைக்கின்றேன்.

கட்சித் தலைவர்களின் பெயர்கள் தொடரும்.....

நல்ல முயற்சி சிறியண்ணா. தொடருங்கள்... உங்கள் பிரேரணைகள் வரவேற்கப்பட்டால்.. அது இத்தலைப்பிற்கு சிறப்பாக இருக்கும்.

என்ன இத்திட்டத்தை முன்மொழித்தவர் என்ற வகையில் நான் கட்சி அமைக்க முடியாது. இதில் கூடிய அளவு மக்கள் மயப்படுத்தல் அவசியம் என்று நினைக்கிறன். இதன் மூலம்.. தனியாள் செல்வாக்கை நீக்குவது.. கூட்டுச் செயற்பாடு.. கருத்தொருமிப்பு.. போன்ற அம்சங்களையும் நாங்கள் இந்தத் தலைப்பில் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும் என்றே நம்புகிறேன்.

இந்த களமாளுமன்றில்.. நாங்கள் சீரியஸான விசயங்கள் மட்டும் பேசப் போறதில்ல. மனதிற்கு இதமான விடயங்களையும் பேசலாம். யாழ் களத்தின் விருத்திக்கு அவசியமான விசயங்களையும் பேசலாம்.. அறிவியல் பேசலாம்.. நடப்பு உலக நிலைப்பாடுகள் குறித்துப் பேசலாம்.. எது அந்த காலத்திற்கு பேசப்பட வேண்டும் என்று அன்றைய தேவை.. உணர்த்துவதற்கு அமைய பேசலாம்.. குறிப்பாக தாயக உறவுகளுக்கான உதவிகள் செல்ல வேண்டிய பாதைகள் குறித்தும்.. இப்படிப் பலவும் பேசலாம். பேசப்படும் விடயங்கள் அதனை நோக்கி உறுப்பினர்களைக் கவர்ந்திருப்பது ஆளும் கட்சியின் திறமைகளைப் பறைசாற்றுவதாகக் கொள்ளலாம்.

இவை எனது பக்க முன்மொழிவுகள் மட்டுமே. எவையும் இறுதி வடிவமாக இங்கு முன்வைக்கப்பட்டு.. கள உறவுகளின் கருத்தும் அங்கீகாரமும் கோரப்பட்ட பின் தான் செயலுரு வடிவுக்கு மாற்றப்பட முடியும். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேரிக்கப்பட்டுள்ள முதற்கட்சி: "ஏக்கமுள்ளோர் கட்சி."

கட்சியின் அடிப்படை நோக்கு: "அந்தக்காலத்து ஏக்கம் இந்தக்காலத்து ஏக்கம் அனைத்தும் இருக்கும் அனைவரையும் இக்கட்சி அன்புடன் உறுப்பினராக வரவேற்கிறது. வாருங்கோ வந்து பழகிப்பாருருங்கோ."

கட்சி பிரேரிப்பு: எழுஞாயிறு.

கட்சித் தலைவர்: அறிவிக்கப்படவில்லை

(கட்டாயம் கட்சித் தலைவர் அறிவிக்கப்பட வேண்டும் என்றில்லை. கட்சியின் தலைமைத்துவத்தை.. எல்லா உறுப்பினர்களிடையேயும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில்.. பொதுத் தலைமையின் கீழ் கட்சியை கொண்டு நடத்தலாம். எல்லோருக்கும் எல்லா உரிமையும்.. அங்கு அளிக்கப்படலாம். இவை கட்சிகள் சார்ந்த தனிப்பட்ட முடிவுகள் சார்ந்தவை. திணித்தல் இருக்கக் கூடாது. களமாளுமன்றத்துக்கு வெளியில் கட்சிகள் பாராட்டக் கூடாது. அங்கு எல்லோரும் சக சம மதிப்புள்ள கள உறவுகள் என்பதை எல்லாக் கட்சிகளும் உள்வாங்கிக் கொள்வது அவசியம். ) :)

கட்சி உறுப்பினர்கள்: எழுஞாயிறு,

கட்சியின் சின்னம்/படம்: தரப்படவில்லை.

( கட்சி பற்றிய விபரங்கள்.. இது போன்ற மாதிரி வடிவில் இடம்பெற்றால் கள உறவுகளுக்கு கட்சிகள் பற்றிய அறிமுகமும்.. நோக்கமும்.. அறிந்துகொண்டு.. அங்கத்துவத்தை தெரிவிக்க உதவியாக இருக்கும். மாதிரி வடிவம்.. இதே அடிப்படைகளைக் கொண்டதாக.. உங்களால் வரையப்பட்டதாகக் கூட அமையலாம். இது உங்களின் செயற்பாட்டுக்குரியது. இதனை ஒரு உதாரணத்திற்கு பதிகிறேன். அவ்வளவே.) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்சி விஷயம் எல்லாம் நமக்கு சரிவராது

அப்படி இருக்க முடியாது கறுப்பி. இந்த உலகில் சனநாயகம் என்பதன் பெயரால்.. எம்மை ஆள எம்மைக் கொண்டே ஒருவனை தெரிவு செய்ய வைச்சு.. அவனைக் கொண்டே எம்மை அடக்கவும் செய்கின்றனர். அந்த நிலையில் இருந்து நாங்க விடுபட்டு.. எங்கள் எண்ணங்களோடு.. நாங்களும்.. அவன் எண்ணங்களோடு அவனும் சம மதிப்புடன்.. சம உரிமையுடன் வாழனுன்னா.. நாங்கள் கட்சி அமைக்கனும்.. எங்க எண்ணங்களை மக்கள் மயப்படுத்தனும்.. அதை மக்கள் உணரச் செய்து.. மாற்றங்களை வரப்பண்ண வேண்டும்.

இன்னும் எத்தனை காலம் தான்.. அவன் வாறான்.. இவன் வாறான்.. என்று எங்கள் ஏக்கங்கள் மனசுக்க குவிஞ்சு கிடக்க.. அதைக் கிடப்பில் போட்டிட்டு... அங்கலாய்ப்பது. இந்த யாழ் கள களமாளுமன்றம்.. எங்களிலும் ஒருவருக்கு இந்த கட்சி ஜனநாயக ஆளுமையை அளித்து அவர் நாளை நிஜமாகவே ஒரு தேர்தலில் நின்று உறுப்பினரானால்.. அவருக்கு மக்களின் எண்ணங்கள் என்ன என்பதை இலகுவாக கண்டுணர்ந்து செயற்பட வழி இருக்குமா இல்லையா. எம்மில் இருந்து நல்ல ஒரு அரசியல் தலைமைத்துவத்துடன் கூடிய ஒருவர்.. நிஜ அரசியல் களத்தை அடைய இது வழிகாட்டலாம்.. இல்லையா..??!

எல்லாத்தையும் அறியுறம்.. ஆனால் எங்கள் வாக்குகளைப் பெற்று எங்களை ஆளப் போறவனைப் பற்றி.. ஏன் நாங்க அக்கறை செய்வதில்லை.

ஏன் நாங்க.. எங்கள் விருப்பங்களை இழந்து மற்றவரின் விருப்பத்தோடு மட்டும்.. பயணிக்க வேண்டும் என்ற விதிப்பு. இது தற்போதைய ஜனநாயகத்தின் பலவீனமான பக்கமும் கூட. இதைக் களையனும் என்றால்.. மக்கள் மயப்படுத்திய ஜனநாயக மாற்றங்கள் அவசியம். மக்கள்.. கூடிய பங்களிப்புச் செய்யும்.. அவர்களின் விருப்பை வெளிப்படுத்தும்.. அடைந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கனும். அந்த வகையில்.. இது ஒரு நல்ல அடிப்படை அறிவூட்டலை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எமக்கு இருக்க வேண்டும்.

ஜோக்ஸ் என்று சொல்லி ஆரம்பித்த பல விடயங்களே பின்னாளில்.. பல மாற்றங்களுக்கு வித்திட்டும் உள்ளன. மக்களின் பங்களிப்பு இல்லாமல்.. அவர்களை அதில் ஈடுபட வைக்காமல்.. அதை அவர்களுக்கு உணர்த்துவது கடினம்..! மக்கள் ஒதுங்கி இருப்பது.. மக்களில் தீயவர்களின் வளர்ச்சிக்கு அதிகம் உதவுகிறது.. இது அரசியலுக்கும் பொருந்தும்.. சமூகத்திற்கும் பொருந்தும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்திட்டதிற்கு இரண்டு வாரங்களுக்குள் 10 பச்சைப் புள்ளியும்.. 5 கட்சிப் பெயர்களும்.. கட்சிகளுக்கு தலா குறைந்தது.. இருவர் என்ற வகையில் அங்கத்துவமும் இன்றேல்.. இத்திட்டம் முற்றாகக் கைவிடப்படும்.

நன்றி... உங்கள் ஆதரவிற்கு. :):icon_idea:

10வது பச்சைப் புள்ளி என்னுடையது .

நல்ல முயற்சி. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்சி.

"ஏக்கமுள்ளோர் கட்சி" அந்தக்காலத்து ஏக்கம் இந்தக்காலத்து ஏக்கம் அனைத்தும் இருக்கும் அனைவரையும் இக்கட்சி அன்புடன் உறுப்பினராக வரவேற்கிறது. வாருங்கோ வந்து பழகிப்பாருருங்கோ.

"ஏக்கமுள்ளோர் கட்சி" யின் அடிமட்ட உறுப்பினராக என்னைப் பதிவு செய்து கொள்கிறேன்.

நேற்று நடக்காததை நினைத்து ஏக்கம். இன்று விரும்பியது கிடைக்குதில்லையே என்ற ஏக்கம். நாளை நினைப்பது நடக்குமா என்ற ஏக்கம்.

'ஏக்கம்தானே வாழ்க்கை'

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 
    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.