Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

yarlhouse.jpg

யாழ் களத்தில் கள விதிக்கு உட்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் கீழ் ஒரு களமாளுமன்றை யாழ் கள உறுப்பினர்களின் மத்தியில் இருந்து கட்சி அடிப்படையில் அமைக்கலாம் என்று தீர்மானிச்சு.. இதனை இங்கு கொண்டு வருகிறேன்.

இப்போ.. இளையோர் பாராளுமன்றம் போல.. இது யாழ் களத்திற்கு. இந்த மன்றம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு பதவிக் காலத்தைக் கொண்டிருக்கும்.

இதில்..

கள நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும்.. ஆளும் கட்சி சார்ந்த பிரதமர் மற்றும் இரண்டு அமைச்சுக்கள் மட்டுமே அமைய முடியும். எந்தப் பதவியும் சுழற்சி முறைக்கமைய அதே பதவிக் காலத்தில் ஆளும் கட்சியினர் எல்லோருக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.

ஆளும் கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற.. தனது கட்சியில் இருந்து குறைந்தது 60% ஆதரவையும்.. எதிர்கட்சியிடம் இருந்து குறைந்தது 50% ஆதரவையும் பெற்றாக வேண்டும். இன்றேல் அந்த தீர்மானம் நிறைவேறியதாகக் கொள்ள முடியாது.

இதுபோன்ற பல மறுசீரமைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டுக்கான ஜனநாயகம் என்ற தொனிப்பொருளோடு.. இந்த மன்றத்தை அமைக்கலாம்.

மேலும்.. ஆளும் கட்சிக்கான விதிமுறைகள்.. எதிர்க் கட்சிகளுக்கான விதிமுறைகள்.. களமாளுமன்ற விதிமுறைகள்.. களமாளுமன்ற கலைப்பு.. இவை அனைத்தும் களவிதிக்கு உட்பட்டவை. இந்த விதிமுறைகள் இத்தலைப்பு கள உறுப்பினர்களின் அங்கீகாரம் பெறப்பட்ட பின் தீர்மானிக்கப்படும்.

இது ஒரு சிநேகித பூர்வ முயற்சியே அன்றி.. பகைமை பாராட்டலுக்கானதல்ல..! அந்த வகையில்..

உங்களிடம் இருந்து.. கூடியது 5 கட்சிகளை பிரேரிக்க கேட்பதோடு.. (ஊரில் உள்ள கட்சிகள் போன்றதல்ல. நியாயமான.. மறுசீரமைப்பை வெளிக் கொணரக் கூடிய கட்சிப் பெயர்கள்) அந்தக் கட்சிகளில் அங்கத்துவம் வகிக்க விரும்புவர்கள் தங்களின் பெயர்களை (களப் பெயர் மட்டும்) இணைக்கலாம். அந்தக் கட்சிகளுக்கு உறுப்பினர்களையும் சேரக் கேட்கலாம்.

அதுமட்டுமன்றி இத்திட்டத்தை மேற்கொண்டு செல்ல.. குறைந்தது 10 பச்சைப் புள்ளிகள் இந்தத் தலைப்பிற்கு அவசியம். கள்ள வாக்குகள் செல்லுபடியாகா. கள நிர்வாகம் இதனை சரி பார்த்துச் சொன்னால் நன்று. அதாவது கள்ள வாக்கு போட்டிருக்கா இல்லையா என்று சொன்னால் மட்டும் போதும். கள்ள வாக்குப் போட்டிருந்தால்.. அதன் தொகையை குறிப்பிட்டால்.. அது மொத்த வாக்கில் இருந்து கழித்து நோக்கப்படும்.

இத்திட்டம் முற்றிலும் களவிதிக்கு உட்பட்டது. (எனவே இத்திட்டம் எதிர்பார்ப்பை மீறிச் சென்றால் கள நிர்வாகத்தால் தடை செய்யப்படலாம்). ஜனநாயக பண்புகளையும் எதிரிடை கருத்துக்கள் மத்தியிலும்.. சிநேகித பூர்வ.. கூட்டுச் செயற்பாடுகளுடனான கருத்தொருமிப்பு திட்டம் வகுத்து 21ம் நூற்றாண்டுக்கான மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தில் வழியில்.. செயற்படுத்தல்.. என்பதையும் இலக்காகக் கொண்டு இது வரையப்பட்டுள்ளது.

இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன்.

இத்திட்டதிற்கு இரண்டு வாரங்களுக்குள் 10 பச்சைப் புள்ளியும்.. 5 கட்சிப் பெயர்களும்.. கட்சிகளுக்கு தலா குறைந்தது.. இருவர் என்ற வகையில் அங்கத்துவமும் இன்றேல்.. இத்திட்டம் முற்றாகக் கைவிடப்படும்.

நன்றி... உங்கள் ஆதரவிற்கு. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கரே இருக்கிற பச்சைப்புள்ளிகளை பறிக்கிற பிளானோ? :icon_mrgreen:

ஆமா...

களமாளுமன்றத்தின் ஆளுனர் (அவரையா சாபாநாயகர் என்று சொல்வது?) யார்?

பிரதமர் யார்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கரே இருக்கிற பச்சைப்புள்ளிகளை பறிக்கிற பிளானோ? :icon_mrgreen:

ஆமா...

களமாளுமன்றத்தின் ஆளுனர் (அவரையா சாபாநாயகர் என்று சொல்வது?) யார்?

பிரதமர் யார்? :icon_mrgreen:

முதலில் கட்சிகளைப் பிரேரியுங்கோ.. அங்கத்துவர்களை உள்வாங்குங்கோ.. மறுசீரமைக்கப்பட்ட அதி கூடிய ஜனநாயக பண்புகளை உட்புகுத்திய ஒரு தேர்தல் மூலம்.. களமாளுமன்றம் அமைக்க விதிகளை சமர்ப்பிக்கிறேன். அவ்விதிகளும் உங்களால் பச்சைகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பின் தேர்தல் நடக்கும்..! தேர்தலின் பின் ஆட்சி அமையும்.

ஆளும் கட்சி.. எதிர்க்கட்சி என்ற நிலைக்கு அப்பால்.. கொள்கை செயற்படுத்து கட்சியாக ஆளும் கட்சியும்.. கொள்கை பரிந்துரை.. கண்காணிப்பு கட்சிகளாக.. எதிர்கட்சிகளும் இருக்க.. விதிகளில் வகை செய்யப்படும்..!

மாற்றுக் கருத்து என்ற சொல்லாடலுக்கு இடமில்லை. எவரும் தம்முள் உள்ள கொள்கையை பரிந்துரைக்கலாம்.. அதனை மற்றவர்களின் உணர்வுக்கு அமைய ஏற்கச் செய்யவும் நிராகரிக்கச் செய்யவும் அவரவருக்குள் உள்ள கருத்துக்களை களமாளுமன்றில் சமர்ப்பித்து.. பொதுத் தீர்மானங்களை எட்டலாம். அத்தீர்மானங்கள் எட்டப்பட ஆளும் தரப்பு குறைந்தது அதன் மொத்த உறுப்பினர்களின் 60% வாக்குகளையும் எதிர்த்தரப்பின் 50% வாக்குகளையும் அதற்கு பெற வேண்டும். ஆக எதிர்த்தரப்பின் ஆதரவைப் பெறாது எதனையும் மக்கள் மீது திணிக்க முடியாது. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

உங்களின் கட்சியின் பெயர் கொள்கையை சிறிய குறிப்பாக வரைஞ்சு எழுதுங்கோ. அதில் ஈர்க்கப்படுபவர்கள்.. உங்கள் கட்சியில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள்.

இப்போ உதாரணத்திற்கு.. எக்காரணம் கொண்டும்.. இத்திட்டத்தை முன்மொழிந்த நான் கட்சி அமைக்கவோ.. ஆட்பிடிக்கவோ முடியாது. களமாளுமன்ற விதிக்குள் அதுவும் அடங்கும். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்கையா?

அது...வந்து... யோசித்து சொல்கிறேன்.. :icon_mrgreen:

கொள்கையே தெரியாமல் யார் கட்சிக்குள் சேரத்தயார்? :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்..

இதைமாதிரி ஒன்றை நானும் நினைச்சு வச்சிருந்தன்.. நீங்கள் முந்திட்டீங்கள்..! :wub: இந்தத் திரி நல்லபடியாகப் போக வாழ்த்துக்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு anarchist. எந்த அமைப்பும் ஆட்சி என்ற பெயரில் களத்தைக் கட்டுப் படுத்த முனைவதை எதிர்க்கிறேன். களம் எந்த அமைப்பியலுக்குள்ளும் வராமல் காட்டாறு போல இயங்க வேண்டும் என நினைக்கிறேன். இக்கருத்துக்கு ஆதரவு தருவோர் பச்சை குத்தலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது களத்தைக் கட்டுப்படுத்துவதற்கானதல்ல. அதை நீங்கள் விரும்பினாலோ.. விரும்பாவிட்டாலோ.. நிர்வாகம் என்ற கட்டமைப்பு செய்தே தீரும். இது...

ஜனநாயக பண்புகளையும் எதிரிடை கருத்துக்கள் மத்தியிலும்.. சிநேகித பூர்வ.. கூட்டுச் செயற்பாடுகளுடனான கருத்தொருமிப்பு திட்டம் வகுத்து 21ம் நூற்றாண்டுக்கான மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் வழியில்.. செயற்படுத்தல்.. என்பதையும் இலக்காகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. (இது களச் செயற்பாட்டாளர்களின் கருத்தொருமிப்பு கொண்ட பயனுள்ள பரிந்துரைகள் சமூகத்தளத்தை அடைய என்று உருவாக்கப்படலாம்.). மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகப் பண்புகளை மதிக்கும்.. தன்மைகளை அதிகம் உருவாக்கலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே மாவீரர்நினைவுகள் தடுமாற்றத்தில் இருக்கும் போது......இங்கேயும் பல பிளவுகளை ஏற்படுத்தமுயற்சிகளா??? அனைவரையும் ஒருங்கிணைக்க யாழ்களம் ஒரு பாலமாக இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புவது...

இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன்.

எதற்கு எடுத்தாலும்.. மாவீரர்களை வைச்சு.. பிழைப்புவாதங்களையும்.. அரசியல்வாதங்களையும்.. ஏன் அன்றாட வாழ்வியல் செயற்பாடுகளையும் வகுப்பதென்பது.. மாவீரர்களின் உன்னத இலட்சியத்தை பலவீனமான ஒரு காரணியாக இனங்காட்டுவது போன்றே அமைகிறது.

யாழ் களம் 1998 இல் இருந்து செயற்படுகின்ற ஒரு களம். அதன் தமிழ் தேசியப் பங்களிப்பு.. இணைப்புப் பாலப் பங்களிப்பு எதுவுமே இன்றைய நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம்.. நடப்பவை எல்லாம் யாழ் களத்திற்கு வெளியிலேயே தீர்மானமாகி அங்கேயே நடந்தும் கொண்டிருக்கின்றன. பிரதிபலிப்புக்களை மட்டும் யாழும் பிம்பமாக்க வேண்டிய காலச் சூழல். அதற்கும்.. இதற்கும் முடிச்சுப் போடுவது.. ஒரு விசமத்தனத்தின் வெளிப்பாடு என்று கூட சொல்லலாம். ஆனால் அது அல்ல இத்தலைப்பின் நோக்கம். :):icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்குக்கும் ஒரு பச்சை

ஜஸ்ரினுக்கும் ஒரு பச்சை

கு.சா வுக்கும் ஒரு பச்சை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

வல்வையின் கட்சியில் இணைந்து, அடிமட்ட தொண்டனாக பணியாற்ற நான் வருகின்றேன்.

வல்வையை பிரதமாக்கும் வரை..... எனது கட்சித் தலைமைப் பீடம் இட்ட கட்டளையை நிறைவேற்ற என்னாலான சாம,பேத, தான, தண்ட வேலைகளை செவ்வனே மேற்கொள்வேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

வருங்கால முதல்வர் வல்வை வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு வினையாகக்கூடாது என்பதற்காகவே எனது கருத்தை சொன்னேன். :icon_idea:

அடுத்தது எதெற்கெடுத்தாலும்............என்பதற்கு????அடையாளம் காண்பதற்க்காகவது இக்களம் இருக்கட்டும்.

யாழ்களம் எப்படி இருக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள பாராளுமன்றத்துக்கு கட்சி அமைக்க...

விசுகு

சாத்திரி

நெல்லையன்

நாரதர்

நெடுக்காலபோவான்

அர்ஜூன்

ரதி

மருதங்கேணி

அறிவிலி

ஆகியோரை அழைக்கின்றேன்.

கட்சித் தலைவர்களின் பெயர்கள் தொடரும்.....

Link to comment
Share on other sites

:icon_mrgreen:

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஏக்கமுள்ளோர் கட்சி" அந்தக்காலத்து ஏக்கம் இந்தக்காலத்து ஏக்கம் அனைத்தும் இருக்கும் அனைவரையும் இக்கட்சி அன்புடன் உறுப்பினராக வரவேற்கிறது. வாருங்கோ வந்து பழகிப்பாருருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள பாராளுமன்றத்துக்கு கட்சி அமைக்க...

விசுகு

சாத்திரி

நெல்லையன்

நாரதர்

நெடுக்காலபோவான்

அர்ஜூன்

ரதி

மருதங்கேணி

அறிவிலி

ஆகியோரை அழைக்கின்றேன்.

கட்சித் தலைவர்களின் பெயர்கள் தொடரும்.....

நல்ல முயற்சி சிறியண்ணா. தொடருங்கள்... உங்கள் பிரேரணைகள் வரவேற்கப்பட்டால்.. அது இத்தலைப்பிற்கு சிறப்பாக இருக்கும்.

என்ன இத்திட்டத்தை முன்மொழித்தவர் என்ற வகையில் நான் கட்சி அமைக்க முடியாது. இதில் கூடிய அளவு மக்கள் மயப்படுத்தல் அவசியம் என்று நினைக்கிறன். இதன் மூலம்.. தனியாள் செல்வாக்கை நீக்குவது.. கூட்டுச் செயற்பாடு.. கருத்தொருமிப்பு.. போன்ற அம்சங்களையும் நாங்கள் இந்தத் தலைப்பில் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும் என்றே நம்புகிறேன்.

இந்த களமாளுமன்றில்.. நாங்கள் சீரியஸான விசயங்கள் மட்டும் பேசப் போறதில்ல. மனதிற்கு இதமான விடயங்களையும் பேசலாம். யாழ் களத்தின் விருத்திக்கு அவசியமான விசயங்களையும் பேசலாம்.. அறிவியல் பேசலாம்.. நடப்பு உலக நிலைப்பாடுகள் குறித்துப் பேசலாம்.. எது அந்த காலத்திற்கு பேசப்பட வேண்டும் என்று அன்றைய தேவை.. உணர்த்துவதற்கு அமைய பேசலாம்.. குறிப்பாக தாயக உறவுகளுக்கான உதவிகள் செல்ல வேண்டிய பாதைகள் குறித்தும்.. இப்படிப் பலவும் பேசலாம். பேசப்படும் விடயங்கள் அதனை நோக்கி உறுப்பினர்களைக் கவர்ந்திருப்பது ஆளும் கட்சியின் திறமைகளைப் பறைசாற்றுவதாகக் கொள்ளலாம்.

இவை எனது பக்க முன்மொழிவுகள் மட்டுமே. எவையும் இறுதி வடிவமாக இங்கு முன்வைக்கப்பட்டு.. கள உறவுகளின் கருத்தும் அங்கீகாரமும் கோரப்பட்ட பின் தான் செயலுரு வடிவுக்கு மாற்றப்பட முடியும். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேரிக்கப்பட்டுள்ள முதற்கட்சி: "ஏக்கமுள்ளோர் கட்சி."

கட்சியின் அடிப்படை நோக்கு: "அந்தக்காலத்து ஏக்கம் இந்தக்காலத்து ஏக்கம் அனைத்தும் இருக்கும் அனைவரையும் இக்கட்சி அன்புடன் உறுப்பினராக வரவேற்கிறது. வாருங்கோ வந்து பழகிப்பாருருங்கோ."

கட்சி பிரேரிப்பு: எழுஞாயிறு.

கட்சித் தலைவர்: அறிவிக்கப்படவில்லை

(கட்டாயம் கட்சித் தலைவர் அறிவிக்கப்பட வேண்டும் என்றில்லை. கட்சியின் தலைமைத்துவத்தை.. எல்லா உறுப்பினர்களிடையேயும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில்.. பொதுத் தலைமையின் கீழ் கட்சியை கொண்டு நடத்தலாம். எல்லோருக்கும் எல்லா உரிமையும்.. அங்கு அளிக்கப்படலாம். இவை கட்சிகள் சார்ந்த தனிப்பட்ட முடிவுகள் சார்ந்தவை. திணித்தல் இருக்கக் கூடாது. களமாளுமன்றத்துக்கு வெளியில் கட்சிகள் பாராட்டக் கூடாது. அங்கு எல்லோரும் சக சம மதிப்புள்ள கள உறவுகள் என்பதை எல்லாக் கட்சிகளும் உள்வாங்கிக் கொள்வது அவசியம். ) :)

கட்சி உறுப்பினர்கள்: எழுஞாயிறு,

கட்சியின் சின்னம்/படம்: தரப்படவில்லை.

( கட்சி பற்றிய விபரங்கள்.. இது போன்ற மாதிரி வடிவில் இடம்பெற்றால் கள உறவுகளுக்கு கட்சிகள் பற்றிய அறிமுகமும்.. நோக்கமும்.. அறிந்துகொண்டு.. அங்கத்துவத்தை தெரிவிக்க உதவியாக இருக்கும். மாதிரி வடிவம்.. இதே அடிப்படைகளைக் கொண்டதாக.. உங்களால் வரையப்பட்டதாகக் கூட அமையலாம். இது உங்களின் செயற்பாட்டுக்குரியது. இதனை ஒரு உதாரணத்திற்கு பதிகிறேன். அவ்வளவே.) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்சி விஷயம் எல்லாம் நமக்கு சரிவராது

அப்படி இருக்க முடியாது கறுப்பி. இந்த உலகில் சனநாயகம் என்பதன் பெயரால்.. எம்மை ஆள எம்மைக் கொண்டே ஒருவனை தெரிவு செய்ய வைச்சு.. அவனைக் கொண்டே எம்மை அடக்கவும் செய்கின்றனர். அந்த நிலையில் இருந்து நாங்க விடுபட்டு.. எங்கள் எண்ணங்களோடு.. நாங்களும்.. அவன் எண்ணங்களோடு அவனும் சம மதிப்புடன்.. சம உரிமையுடன் வாழனுன்னா.. நாங்கள் கட்சி அமைக்கனும்.. எங்க எண்ணங்களை மக்கள் மயப்படுத்தனும்.. அதை மக்கள் உணரச் செய்து.. மாற்றங்களை வரப்பண்ண வேண்டும்.

இன்னும் எத்தனை காலம் தான்.. அவன் வாறான்.. இவன் வாறான்.. என்று எங்கள் ஏக்கங்கள் மனசுக்க குவிஞ்சு கிடக்க.. அதைக் கிடப்பில் போட்டிட்டு... அங்கலாய்ப்பது. இந்த யாழ் கள களமாளுமன்றம்.. எங்களிலும் ஒருவருக்கு இந்த கட்சி ஜனநாயக ஆளுமையை அளித்து அவர் நாளை நிஜமாகவே ஒரு தேர்தலில் நின்று உறுப்பினரானால்.. அவருக்கு மக்களின் எண்ணங்கள் என்ன என்பதை இலகுவாக கண்டுணர்ந்து செயற்பட வழி இருக்குமா இல்லையா. எம்மில் இருந்து நல்ல ஒரு அரசியல் தலைமைத்துவத்துடன் கூடிய ஒருவர்.. நிஜ அரசியல் களத்தை அடைய இது வழிகாட்டலாம்.. இல்லையா..??!

எல்லாத்தையும் அறியுறம்.. ஆனால் எங்கள் வாக்குகளைப் பெற்று எங்களை ஆளப் போறவனைப் பற்றி.. ஏன் நாங்க அக்கறை செய்வதில்லை.

ஏன் நாங்க.. எங்கள் விருப்பங்களை இழந்து மற்றவரின் விருப்பத்தோடு மட்டும்.. பயணிக்க வேண்டும் என்ற விதிப்பு. இது தற்போதைய ஜனநாயகத்தின் பலவீனமான பக்கமும் கூட. இதைக் களையனும் என்றால்.. மக்கள் மயப்படுத்திய ஜனநாயக மாற்றங்கள் அவசியம். மக்கள்.. கூடிய பங்களிப்புச் செய்யும்.. அவர்களின் விருப்பை வெளிப்படுத்தும்.. அடைந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கனும். அந்த வகையில்.. இது ஒரு நல்ல அடிப்படை அறிவூட்டலை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எமக்கு இருக்க வேண்டும்.

ஜோக்ஸ் என்று சொல்லி ஆரம்பித்த பல விடயங்களே பின்னாளில்.. பல மாற்றங்களுக்கு வித்திட்டும் உள்ளன. மக்களின் பங்களிப்பு இல்லாமல்.. அவர்களை அதில் ஈடுபட வைக்காமல்.. அதை அவர்களுக்கு உணர்த்துவது கடினம்..! மக்கள் ஒதுங்கி இருப்பது.. மக்களில் தீயவர்களின் வளர்ச்சிக்கு அதிகம் உதவுகிறது.. இது அரசியலுக்கும் பொருந்தும்.. சமூகத்திற்கும் பொருந்தும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்திட்டதிற்கு இரண்டு வாரங்களுக்குள் 10 பச்சைப் புள்ளியும்.. 5 கட்சிப் பெயர்களும்.. கட்சிகளுக்கு தலா குறைந்தது.. இருவர் என்ற வகையில் அங்கத்துவமும் இன்றேல்.. இத்திட்டம் முற்றாகக் கைவிடப்படும்.

நன்றி... உங்கள் ஆதரவிற்கு. :):icon_idea:

10வது பச்சைப் புள்ளி என்னுடையது .

நல்ல முயற்சி. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்சி.

"ஏக்கமுள்ளோர் கட்சி" அந்தக்காலத்து ஏக்கம் இந்தக்காலத்து ஏக்கம் அனைத்தும் இருக்கும் அனைவரையும் இக்கட்சி அன்புடன் உறுப்பினராக வரவேற்கிறது. வாருங்கோ வந்து பழகிப்பாருருங்கோ.

"ஏக்கமுள்ளோர் கட்சி" யின் அடிமட்ட உறுப்பினராக என்னைப் பதிவு செய்து கொள்கிறேன்.

நேற்று நடக்காததை நினைத்து ஏக்கம். இன்று விரும்பியது கிடைக்குதில்லையே என்ற ஏக்கம். நாளை நினைப்பது நடக்குமா என்ற ஏக்கம்.

'ஏக்கம்தானே வாழ்க்கை'

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.