Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

yarlhouse.jpg

யாழ் களத்தில் கள விதிக்கு உட்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் கீழ் ஒரு களமாளுமன்றை யாழ் கள உறுப்பினர்களின் மத்தியில் இருந்து கட்சி அடிப்படையில் அமைக்கலாம் என்று தீர்மானிச்சு.. இதனை இங்கு கொண்டு வருகிறேன்.

இப்போ.. இளையோர் பாராளுமன்றம் போல.. இது யாழ் களத்திற்கு. இந்த மன்றம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு பதவிக் காலத்தைக் கொண்டிருக்கும்.

இதில்..

கள நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும்.. ஆளும் கட்சி சார்ந்த பிரதமர் மற்றும் இரண்டு அமைச்சுக்கள் மட்டுமே அமைய முடியும். எந்தப் பதவியும் சுழற்சி முறைக்கமைய அதே பதவிக் காலத்தில் ஆளும் கட்சியினர் எல்லோருக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.

ஆளும் கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற.. தனது கட்சியில் இருந்து குறைந்தது 60% ஆதரவையும்.. எதிர்கட்சியிடம் இருந்து குறைந்தது 50% ஆதரவையும் பெற்றாக வேண்டும். இன்றேல் அந்த தீர்மானம் நிறைவேறியதாகக் கொள்ள முடியாது.

இதுபோன்ற பல மறுசீரமைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டுக்கான ஜனநாயகம் என்ற தொனிப்பொருளோடு.. இந்த மன்றத்தை அமைக்கலாம்.

மேலும்.. ஆளும் கட்சிக்கான விதிமுறைகள்.. எதிர்க் கட்சிகளுக்கான விதிமுறைகள்.. களமாளுமன்ற விதிமுறைகள்.. களமாளுமன்ற கலைப்பு.. இவை அனைத்தும் களவிதிக்கு உட்பட்டவை. இந்த விதிமுறைகள் இத்தலைப்பு கள உறுப்பினர்களின் அங்கீகாரம் பெறப்பட்ட பின் தீர்மானிக்கப்படும்.

இது ஒரு சிநேகித பூர்வ முயற்சியே அன்றி.. பகைமை பாராட்டலுக்கானதல்ல..! அந்த வகையில்..

உங்களிடம் இருந்து.. கூடியது 5 கட்சிகளை பிரேரிக்க கேட்பதோடு.. (ஊரில் உள்ள கட்சிகள் போன்றதல்ல. நியாயமான.. மறுசீரமைப்பை வெளிக் கொணரக் கூடிய கட்சிப் பெயர்கள்) அந்தக் கட்சிகளில் அங்கத்துவம் வகிக்க விரும்புவர்கள் தங்களின் பெயர்களை (களப் பெயர் மட்டும்) இணைக்கலாம். அந்தக் கட்சிகளுக்கு உறுப்பினர்களையும் சேரக் கேட்கலாம்.

அதுமட்டுமன்றி இத்திட்டத்தை மேற்கொண்டு செல்ல.. குறைந்தது 10 பச்சைப் புள்ளிகள் இந்தத் தலைப்பிற்கு அவசியம். கள்ள வாக்குகள் செல்லுபடியாகா. கள நிர்வாகம் இதனை சரி பார்த்துச் சொன்னால் நன்று. அதாவது கள்ள வாக்கு போட்டிருக்கா இல்லையா என்று சொன்னால் மட்டும் போதும். கள்ள வாக்குப் போட்டிருந்தால்.. அதன் தொகையை குறிப்பிட்டால்.. அது மொத்த வாக்கில் இருந்து கழித்து நோக்கப்படும்.

இத்திட்டம் முற்றிலும் களவிதிக்கு உட்பட்டது. (எனவே இத்திட்டம் எதிர்பார்ப்பை மீறிச் சென்றால் கள நிர்வாகத்தால் தடை செய்யப்படலாம்). ஜனநாயக பண்புகளையும் எதிரிடை கருத்துக்கள் மத்தியிலும்.. சிநேகித பூர்வ.. கூட்டுச் செயற்பாடுகளுடனான கருத்தொருமிப்பு திட்டம் வகுத்து 21ம் நூற்றாண்டுக்கான மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தில் வழியில்.. செயற்படுத்தல்.. என்பதையும் இலக்காகக் கொண்டு இது வரையப்பட்டுள்ளது.

இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன்.

இத்திட்டதிற்கு இரண்டு வாரங்களுக்குள் 10 பச்சைப் புள்ளியும்.. 5 கட்சிப் பெயர்களும்.. கட்சிகளுக்கு தலா குறைந்தது.. இருவர் என்ற வகையில் அங்கத்துவமும் இன்றேல்.. இத்திட்டம் முற்றாகக் கைவிடப்படும்.

நன்றி... உங்கள் ஆதரவிற்கு. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கரே இருக்கிற பச்சைப்புள்ளிகளை பறிக்கிற பிளானோ? :icon_mrgreen:

ஆமா...

களமாளுமன்றத்தின் ஆளுனர் (அவரையா சாபாநாயகர் என்று சொல்வது?) யார்?

பிரதமர் யார்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கரே இருக்கிற பச்சைப்புள்ளிகளை பறிக்கிற பிளானோ? :icon_mrgreen:

ஆமா...

களமாளுமன்றத்தின் ஆளுனர் (அவரையா சாபாநாயகர் என்று சொல்வது?) யார்?

பிரதமர் யார்? :icon_mrgreen:

முதலில் கட்சிகளைப் பிரேரியுங்கோ.. அங்கத்துவர்களை உள்வாங்குங்கோ.. மறுசீரமைக்கப்பட்ட அதி கூடிய ஜனநாயக பண்புகளை உட்புகுத்திய ஒரு தேர்தல் மூலம்.. களமாளுமன்றம் அமைக்க விதிகளை சமர்ப்பிக்கிறேன். அவ்விதிகளும் உங்களால் பச்சைகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பின் தேர்தல் நடக்கும்..! தேர்தலின் பின் ஆட்சி அமையும்.

ஆளும் கட்சி.. எதிர்க்கட்சி என்ற நிலைக்கு அப்பால்.. கொள்கை செயற்படுத்து கட்சியாக ஆளும் கட்சியும்.. கொள்கை பரிந்துரை.. கண்காணிப்பு கட்சிகளாக.. எதிர்கட்சிகளும் இருக்க.. விதிகளில் வகை செய்யப்படும்..!

மாற்றுக் கருத்து என்ற சொல்லாடலுக்கு இடமில்லை. எவரும் தம்முள் உள்ள கொள்கையை பரிந்துரைக்கலாம்.. அதனை மற்றவர்களின் உணர்வுக்கு அமைய ஏற்கச் செய்யவும் நிராகரிக்கச் செய்யவும் அவரவருக்குள் உள்ள கருத்துக்களை களமாளுமன்றில் சமர்ப்பித்து.. பொதுத் தீர்மானங்களை எட்டலாம். அத்தீர்மானங்கள் எட்டப்பட ஆளும் தரப்பு குறைந்தது அதன் மொத்த உறுப்பினர்களின் 60% வாக்குகளையும் எதிர்த்தரப்பின் 50% வாக்குகளையும் அதற்கு பெற வேண்டும். ஆக எதிர்த்தரப்பின் ஆதரவைப் பெறாது எதனையும் மக்கள் மீது திணிக்க முடியாது. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

உங்களின் கட்சியின் பெயர் கொள்கையை சிறிய குறிப்பாக வரைஞ்சு எழுதுங்கோ. அதில் ஈர்க்கப்படுபவர்கள்.. உங்கள் கட்சியில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள்.

இப்போ உதாரணத்திற்கு.. எக்காரணம் கொண்டும்.. இத்திட்டத்தை முன்மொழிந்த நான் கட்சி அமைக்கவோ.. ஆட்பிடிக்கவோ முடியாது. களமாளுமன்ற விதிக்குள் அதுவும் அடங்கும். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்கையா?

அது...வந்து... யோசித்து சொல்கிறேன்.. :icon_mrgreen:

கொள்கையே தெரியாமல் யார் கட்சிக்குள் சேரத்தயார்? :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்..

இதைமாதிரி ஒன்றை நானும் நினைச்சு வச்சிருந்தன்.. நீங்கள் முந்திட்டீங்கள்..! :wub: இந்தத் திரி நல்லபடியாகப் போக வாழ்த்துக்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு anarchist. எந்த அமைப்பும் ஆட்சி என்ற பெயரில் களத்தைக் கட்டுப் படுத்த முனைவதை எதிர்க்கிறேன். களம் எந்த அமைப்பியலுக்குள்ளும் வராமல் காட்டாறு போல இயங்க வேண்டும் என நினைக்கிறேன். இக்கருத்துக்கு ஆதரவு தருவோர் பச்சை குத்தலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது களத்தைக் கட்டுப்படுத்துவதற்கானதல்ல. அதை நீங்கள் விரும்பினாலோ.. விரும்பாவிட்டாலோ.. நிர்வாகம் என்ற கட்டமைப்பு செய்தே தீரும். இது...

ஜனநாயக பண்புகளையும் எதிரிடை கருத்துக்கள் மத்தியிலும்.. சிநேகித பூர்வ.. கூட்டுச் செயற்பாடுகளுடனான கருத்தொருமிப்பு திட்டம் வகுத்து 21ம் நூற்றாண்டுக்கான மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் வழியில்.. செயற்படுத்தல்.. என்பதையும் இலக்காகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. (இது களச் செயற்பாட்டாளர்களின் கருத்தொருமிப்பு கொண்ட பயனுள்ள பரிந்துரைகள் சமூகத்தளத்தை அடைய என்று உருவாக்கப்படலாம்.). மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகப் பண்புகளை மதிக்கும்.. தன்மைகளை அதிகம் உருவாக்கலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே மாவீரர்நினைவுகள் தடுமாற்றத்தில் இருக்கும் போது......இங்கேயும் பல பிளவுகளை ஏற்படுத்தமுயற்சிகளா??? அனைவரையும் ஒருங்கிணைக்க யாழ்களம் ஒரு பாலமாக இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புவது...

இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன்.

எதற்கு எடுத்தாலும்.. மாவீரர்களை வைச்சு.. பிழைப்புவாதங்களையும்.. அரசியல்வாதங்களையும்.. ஏன் அன்றாட வாழ்வியல் செயற்பாடுகளையும் வகுப்பதென்பது.. மாவீரர்களின் உன்னத இலட்சியத்தை பலவீனமான ஒரு காரணியாக இனங்காட்டுவது போன்றே அமைகிறது.

யாழ் களம் 1998 இல் இருந்து செயற்படுகின்ற ஒரு களம். அதன் தமிழ் தேசியப் பங்களிப்பு.. இணைப்புப் பாலப் பங்களிப்பு எதுவுமே இன்றைய நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம்.. நடப்பவை எல்லாம் யாழ் களத்திற்கு வெளியிலேயே தீர்மானமாகி அங்கேயே நடந்தும் கொண்டிருக்கின்றன. பிரதிபலிப்புக்களை மட்டும் யாழும் பிம்பமாக்க வேண்டிய காலச் சூழல். அதற்கும்.. இதற்கும் முடிச்சுப் போடுவது.. ஒரு விசமத்தனத்தின் வெளிப்பாடு என்று கூட சொல்லலாம். ஆனால் அது அல்ல இத்தலைப்பின் நோக்கம். :):icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்குக்கும் ஒரு பச்சை

ஜஸ்ரினுக்கும் ஒரு பச்சை

கு.சா வுக்கும் ஒரு பச்சை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

வல்வையின் கட்சியில் இணைந்து, அடிமட்ட தொண்டனாக பணியாற்ற நான் வருகின்றேன்.

வல்வையை பிரதமாக்கும் வரை..... எனது கட்சித் தலைமைப் பீடம் இட்ட கட்டளையை நிறைவேற்ற என்னாலான சாம,பேத, தான, தண்ட வேலைகளை செவ்வனே மேற்கொள்வேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

வருங்கால முதல்வர் வல்வை வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு வினையாகக்கூடாது என்பதற்காகவே எனது கருத்தை சொன்னேன். :icon_idea:

அடுத்தது எதெற்கெடுத்தாலும்............என்பதற்கு????அடையாளம் காண்பதற்க்காகவது இக்களம் இருக்கட்டும்.

யாழ்களம் எப்படி இருக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள பாராளுமன்றத்துக்கு கட்சி அமைக்க...

விசுகு

சாத்திரி

நெல்லையன்

நாரதர்

நெடுக்காலபோவான்

அர்ஜூன்

ரதி

மருதங்கேணி

அறிவிலி

ஆகியோரை அழைக்கின்றேன்.

கட்சித் தலைவர்களின் பெயர்கள் தொடரும்.....

Link to comment
Share on other sites

:icon_mrgreen:

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஏக்கமுள்ளோர் கட்சி" அந்தக்காலத்து ஏக்கம் இந்தக்காலத்து ஏக்கம் அனைத்தும் இருக்கும் அனைவரையும் இக்கட்சி அன்புடன் உறுப்பினராக வரவேற்கிறது. வாருங்கோ வந்து பழகிப்பாருருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள பாராளுமன்றத்துக்கு கட்சி அமைக்க...

விசுகு

சாத்திரி

நெல்லையன்

நாரதர்

நெடுக்காலபோவான்

அர்ஜூன்

ரதி

மருதங்கேணி

அறிவிலி

ஆகியோரை அழைக்கின்றேன்.

கட்சித் தலைவர்களின் பெயர்கள் தொடரும்.....

நல்ல முயற்சி சிறியண்ணா. தொடருங்கள்... உங்கள் பிரேரணைகள் வரவேற்கப்பட்டால்.. அது இத்தலைப்பிற்கு சிறப்பாக இருக்கும்.

என்ன இத்திட்டத்தை முன்மொழித்தவர் என்ற வகையில் நான் கட்சி அமைக்க முடியாது. இதில் கூடிய அளவு மக்கள் மயப்படுத்தல் அவசியம் என்று நினைக்கிறன். இதன் மூலம்.. தனியாள் செல்வாக்கை நீக்குவது.. கூட்டுச் செயற்பாடு.. கருத்தொருமிப்பு.. போன்ற அம்சங்களையும் நாங்கள் இந்தத் தலைப்பில் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும் என்றே நம்புகிறேன்.

இந்த களமாளுமன்றில்.. நாங்கள் சீரியஸான விசயங்கள் மட்டும் பேசப் போறதில்ல. மனதிற்கு இதமான விடயங்களையும் பேசலாம். யாழ் களத்தின் விருத்திக்கு அவசியமான விசயங்களையும் பேசலாம்.. அறிவியல் பேசலாம்.. நடப்பு உலக நிலைப்பாடுகள் குறித்துப் பேசலாம்.. எது அந்த காலத்திற்கு பேசப்பட வேண்டும் என்று அன்றைய தேவை.. உணர்த்துவதற்கு அமைய பேசலாம்.. குறிப்பாக தாயக உறவுகளுக்கான உதவிகள் செல்ல வேண்டிய பாதைகள் குறித்தும்.. இப்படிப் பலவும் பேசலாம். பேசப்படும் விடயங்கள் அதனை நோக்கி உறுப்பினர்களைக் கவர்ந்திருப்பது ஆளும் கட்சியின் திறமைகளைப் பறைசாற்றுவதாகக் கொள்ளலாம்.

இவை எனது பக்க முன்மொழிவுகள் மட்டுமே. எவையும் இறுதி வடிவமாக இங்கு முன்வைக்கப்பட்டு.. கள உறவுகளின் கருத்தும் அங்கீகாரமும் கோரப்பட்ட பின் தான் செயலுரு வடிவுக்கு மாற்றப்பட முடியும். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேரிக்கப்பட்டுள்ள முதற்கட்சி: "ஏக்கமுள்ளோர் கட்சி."

கட்சியின் அடிப்படை நோக்கு: "அந்தக்காலத்து ஏக்கம் இந்தக்காலத்து ஏக்கம் அனைத்தும் இருக்கும் அனைவரையும் இக்கட்சி அன்புடன் உறுப்பினராக வரவேற்கிறது. வாருங்கோ வந்து பழகிப்பாருருங்கோ."

கட்சி பிரேரிப்பு: எழுஞாயிறு.

கட்சித் தலைவர்: அறிவிக்கப்படவில்லை

(கட்டாயம் கட்சித் தலைவர் அறிவிக்கப்பட வேண்டும் என்றில்லை. கட்சியின் தலைமைத்துவத்தை.. எல்லா உறுப்பினர்களிடையேயும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில்.. பொதுத் தலைமையின் கீழ் கட்சியை கொண்டு நடத்தலாம். எல்லோருக்கும் எல்லா உரிமையும்.. அங்கு அளிக்கப்படலாம். இவை கட்சிகள் சார்ந்த தனிப்பட்ட முடிவுகள் சார்ந்தவை. திணித்தல் இருக்கக் கூடாது. களமாளுமன்றத்துக்கு வெளியில் கட்சிகள் பாராட்டக் கூடாது. அங்கு எல்லோரும் சக சம மதிப்புள்ள கள உறவுகள் என்பதை எல்லாக் கட்சிகளும் உள்வாங்கிக் கொள்வது அவசியம். ) :)

கட்சி உறுப்பினர்கள்: எழுஞாயிறு,

கட்சியின் சின்னம்/படம்: தரப்படவில்லை.

( கட்சி பற்றிய விபரங்கள்.. இது போன்ற மாதிரி வடிவில் இடம்பெற்றால் கள உறவுகளுக்கு கட்சிகள் பற்றிய அறிமுகமும்.. நோக்கமும்.. அறிந்துகொண்டு.. அங்கத்துவத்தை தெரிவிக்க உதவியாக இருக்கும். மாதிரி வடிவம்.. இதே அடிப்படைகளைக் கொண்டதாக.. உங்களால் வரையப்பட்டதாகக் கூட அமையலாம். இது உங்களின் செயற்பாட்டுக்குரியது. இதனை ஒரு உதாரணத்திற்கு பதிகிறேன். அவ்வளவே.) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்சி விஷயம் எல்லாம் நமக்கு சரிவராது

அப்படி இருக்க முடியாது கறுப்பி. இந்த உலகில் சனநாயகம் என்பதன் பெயரால்.. எம்மை ஆள எம்மைக் கொண்டே ஒருவனை தெரிவு செய்ய வைச்சு.. அவனைக் கொண்டே எம்மை அடக்கவும் செய்கின்றனர். அந்த நிலையில் இருந்து நாங்க விடுபட்டு.. எங்கள் எண்ணங்களோடு.. நாங்களும்.. அவன் எண்ணங்களோடு அவனும் சம மதிப்புடன்.. சம உரிமையுடன் வாழனுன்னா.. நாங்கள் கட்சி அமைக்கனும்.. எங்க எண்ணங்களை மக்கள் மயப்படுத்தனும்.. அதை மக்கள் உணரச் செய்து.. மாற்றங்களை வரப்பண்ண வேண்டும்.

இன்னும் எத்தனை காலம் தான்.. அவன் வாறான்.. இவன் வாறான்.. என்று எங்கள் ஏக்கங்கள் மனசுக்க குவிஞ்சு கிடக்க.. அதைக் கிடப்பில் போட்டிட்டு... அங்கலாய்ப்பது. இந்த யாழ் கள களமாளுமன்றம்.. எங்களிலும் ஒருவருக்கு இந்த கட்சி ஜனநாயக ஆளுமையை அளித்து அவர் நாளை நிஜமாகவே ஒரு தேர்தலில் நின்று உறுப்பினரானால்.. அவருக்கு மக்களின் எண்ணங்கள் என்ன என்பதை இலகுவாக கண்டுணர்ந்து செயற்பட வழி இருக்குமா இல்லையா. எம்மில் இருந்து நல்ல ஒரு அரசியல் தலைமைத்துவத்துடன் கூடிய ஒருவர்.. நிஜ அரசியல் களத்தை அடைய இது வழிகாட்டலாம்.. இல்லையா..??!

எல்லாத்தையும் அறியுறம்.. ஆனால் எங்கள் வாக்குகளைப் பெற்று எங்களை ஆளப் போறவனைப் பற்றி.. ஏன் நாங்க அக்கறை செய்வதில்லை.

ஏன் நாங்க.. எங்கள் விருப்பங்களை இழந்து மற்றவரின் விருப்பத்தோடு மட்டும்.. பயணிக்க வேண்டும் என்ற விதிப்பு. இது தற்போதைய ஜனநாயகத்தின் பலவீனமான பக்கமும் கூட. இதைக் களையனும் என்றால்.. மக்கள் மயப்படுத்திய ஜனநாயக மாற்றங்கள் அவசியம். மக்கள்.. கூடிய பங்களிப்புச் செய்யும்.. அவர்களின் விருப்பை வெளிப்படுத்தும்.. அடைந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கனும். அந்த வகையில்.. இது ஒரு நல்ல அடிப்படை அறிவூட்டலை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எமக்கு இருக்க வேண்டும்.

ஜோக்ஸ் என்று சொல்லி ஆரம்பித்த பல விடயங்களே பின்னாளில்.. பல மாற்றங்களுக்கு வித்திட்டும் உள்ளன. மக்களின் பங்களிப்பு இல்லாமல்.. அவர்களை அதில் ஈடுபட வைக்காமல்.. அதை அவர்களுக்கு உணர்த்துவது கடினம்..! மக்கள் ஒதுங்கி இருப்பது.. மக்களில் தீயவர்களின் வளர்ச்சிக்கு அதிகம் உதவுகிறது.. இது அரசியலுக்கும் பொருந்தும்.. சமூகத்திற்கும் பொருந்தும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்திட்டதிற்கு இரண்டு வாரங்களுக்குள் 10 பச்சைப் புள்ளியும்.. 5 கட்சிப் பெயர்களும்.. கட்சிகளுக்கு தலா குறைந்தது.. இருவர் என்ற வகையில் அங்கத்துவமும் இன்றேல்.. இத்திட்டம் முற்றாகக் கைவிடப்படும்.

நன்றி... உங்கள் ஆதரவிற்கு. :):icon_idea:

10வது பச்சைப் புள்ளி என்னுடையது .

நல்ல முயற்சி. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்சி.

"ஏக்கமுள்ளோர் கட்சி" அந்தக்காலத்து ஏக்கம் இந்தக்காலத்து ஏக்கம் அனைத்தும் இருக்கும் அனைவரையும் இக்கட்சி அன்புடன் உறுப்பினராக வரவேற்கிறது. வாருங்கோ வந்து பழகிப்பாருருங்கோ.

"ஏக்கமுள்ளோர் கட்சி" யின் அடிமட்ட உறுப்பினராக என்னைப் பதிவு செய்து கொள்கிறேன்.

நேற்று நடக்காததை நினைத்து ஏக்கம். இன்று விரும்பியது கிடைக்குதில்லையே என்ற ஏக்கம். நாளை நினைப்பது நடக்குமா என்ற ஏக்கம்.

'ஏக்கம்தானே வாழ்க்கை'

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.