Jump to content

ராஜினாமா முடிவை எடுத்த பின் 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பெர்லுஸ்கோனி


BLUE BIRD

Recommended Posts

ராஜினாமா முடிவை எடுத்த பின் 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பெர்லுஸ்கோனி

13-berlusconi-with-pascale300.jpg

ரோம் கடைசி வரை தனது கட்டில் விளையாட்டை நிறுத்தவில்லை பெர்லுஸ்கோனி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று தான் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த பெர்லுஸ்கோனி, அன்றைய இரவை 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசமாக கழித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பெர்லுஸ்கோனியின் பெர்சனல் வாழ்க்கை காமக் களியாட்டங்கள் நிறைந்தது. அவரைப் போல காதல் லீலைகளில் ஈடுபட்ட தலைவர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு ஏகப்பட்ட லீலைகளில் ஈடுபட்டிருந்தவர் பெர்லுஸ்கோனி.

தற்போது அவர் பிரதமர் பதவியை விட்டு விலகி விட்டார். இதுதொடர்பான முடிவை கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் அறிவித்தார். அதற்குப் பின்னர் அவர் ஒரு இளம் பெண்ணுடன் அன்றைய இரவைக் கழித்துள்ளார்.

அவரது பெயர் பிரான்செஸ்கா பாஸ்கர். இவர் பெர்லுஸ்கோனியின் கட்சியைச் சேர்ந்தவர். இவருடன் ஏற்கனவே பெர்லுஸ்கோனியை இணைத்து ஏராளமான செய்திகள் வந்துள்ளன.

அன்றைய இரவு ஏழரை மணியளவில் பெர்லுஸ்கோனியின் வீட்டுக்கு பாஸ்கல். அடுத்த நாள் காலை 10 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றார்.

இரவு முழுவதும் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இதுகுறித்து பாஸ்கலிடம் சில செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் இதில் வெட்கப்பட என்ன உள்ளது என்று பட்டென்று கேட்டாராம். இதைக் கேட்டதும் செய்தியாளர்களுக்குத்தான் ரொம்ப வெட்கமாகிப் போய் விட்டதாம்.

இதுவரை பிரதமர் என்ற பதவிக்குள் கட்டுப்பட்டிருந்தார் பெர்லுஸ்கோனி. எனவே இதுவரை நடந்ததெல்லாம் வெறும் டிரெய்லர்தான்.

இனிமேல்தான் மெயின் பிக்சரே வரப் போகிறது, இனிமேல்தான் அவர் ஓவராக ஆடுவார் என்று இத்தாலியர்கள் ஆரூடம் கூறுகிறார்கள்

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான்....

ரோம் பற்றி எரியும் போது.... பிடில் வாசிக்கிறது என்று சொல்வார்கள். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு முழுவதும் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை

என்ன செய்திருப்பார்கள்.. வேர்ல்டு எக்கனாமிய பத்தி டிஸ்கசன் செய்து இருப்பார்கள்.. பத்திரிகை நிருபர்களுக்கு விவஸ்தை கிடையாது.. :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பதவியை துறந்த பிறகும் நினைச்ச பெண்ணோடு படுப்பதற்கு அவருக்கு தடையா...கறுமம்டா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவருக்கு ஓட்டு போட வில்லை.அதால அவர் என்ன செய்தால் எனக்கென்ன. :)

எப்ப எங்களுக்கு இப்படியான விசயங்கள் புதினம் இல்லாமல் போகுதோ அப்பதான் நாங்கள் எங்களைப்பற்றி யோசிப்போம் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எந்தத் தளத்தில் செய்தியாக போட்டார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்திருப்பார்கள்.. வேர்ல்டு எக்கனாமிய பத்தி டிஸ்கசன் செய்து இருப்பார்கள்.. பத்திரிகை நிருபர்களுக்கு விவஸ்தை கிடையாது.. :) :)

:lol: :lol: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இதைத்தான்....

ரோம் பற்றி எரியும் போது.... பிடில் வாசிக்கிறது என்று சொல்வார்கள். :D:lol:

யார்.....

பெர்லுஸ்கோனியா பிரான்செஸ்காவா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பதவியை துறந்த பிறகும் நினைச்ச பெண்ணோடு படுப்பதற்கு அவருக்கு தடையா...கறுமம்டா :lol:

ரதி, நீங்கள் ஒரு வளரும் எழுத்தாளர்! உங்கள் கருத்துக்களை, சிறுவர்கள் (குறிப்பாகப் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள்) வாசிக்கக் கூடும்!

'படுப்பது' என்பது ஒரு நல்ல தமிழ் வார்த்தை அல்ல! இதை தரமான எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் உபயோகிப்பது, மனதிற்குக் கவலையைத் தருகின்றது!

மற்றது எழுதுவது உங்கள் உரிமை! இதே கருத்தை வேறு வகையான வார்த்தைகளால் சொல்ல முடியும்!

தமிழ் ஒரு வளமான மொழி! அதில் வார்த்தைகளுக்கா பஞ்சம்!

ஏதோ கள உறவு, என்ற வகையில் சுட்டிக் காட்டினேன்! எனது வரம்புகளைக் கடந்து விட்டேன் என நீங்கள் கருதினால் மன்னித்து விடுங்கள்!

தனி மடலில் தான் தெரியப் படுத்த நினைத்தேன்!

ஆனால் பல கள உறவுகள், இந்த வார்த்தையை உபயோகிப்பதை, அவதானித்ததால் , இங்கு பதிந்தேன்!

நன்றிகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, நீங்கள் ஒரு வளரும் எழுத்தாளர்! உங்கள் கருத்துக்களை, சிறுவர்கள் (குறிப்பாகப் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள்) வாசிக்கக் கூடும்!

'படுப்பது' என்பது ஒரு நல்ல தமிழ் வார்த்தை அல்ல! இதை தரமான எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் உபயோகிப்பது, மனதிற்குக் கவலையைத் தருகின்றது!

மற்றது எழுதுவது உங்கள் உரிமை! இதே கருத்தை வேறு வகையான வார்த்தைகளால் சொல்ல முடியும்!

தமிழ் ஒரு வளமான மொழி! அதில் வார்த்தைகளுக்கா பஞ்சம்!

ஏதோ கள உறவு, என்ற வகையில் சுட்டிக் காட்டினேன்! எனது வரம்புகளைக் கடந்து விட்டேன் என நீங்கள் கருதினால் மன்னித்து விடுங்கள்!

தனி மடலில் தான் தெரியப் படுத்த நினைத்தேன்!

ஆனால் பல கள உறவுகள், இந்த வார்த்தையை உபயோகிப்பதை, அவதானித்ததால் , இங்கு பதிந்தேன்!

நன்றிகள்!!!

மன்னிக்க வேண்டும் புங்கையூரான் "படுப்பது" என்பது பொதுவான வார்த்தை என்பதாலேயே அப்படி எழுதினேன்...இனி மேல் நீங்கள் சொல்வதை கவனத்திலெடுத்து அப்படி எழுதாமல் தவிர்க்கிறேன்...உங்கள் ஆலோசனைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் புங்கையூரான் "படுப்பது" என்பது பொதுவான வார்த்தை என்பதாலேயே அப்படி எழுதினேன்...இனி மேல் நீங்கள் சொல்வதை கவனத்திலெடுத்து அப்படி எழுதாமல் தவிர்க்கிறேன்...உங்கள் ஆலோசனைக்கு நன்றி

இதற்கெல்லாம் மன்னிப்பா, ரதி!

நீங்களும் எங்கள் வீட்டுப் பிள்ளை தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"படுப்பது" கூடாத அல்லது கெட்டவார்த்தையல்ல என நினைக்கின்றேன். "பெண்ணோடு படுப்பது" எனும் சொல்தான் அங்கே கொஞ்சம் நாகரீகமில்லாமல் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

புங்கையூரான் படுப்பது என்பது கெட்டவார்த்தையல்ல ஆனால் அது பேச்சுத் தமிழில் கெட்டவார்ததையாக பார்க்கப்பட்டது அவ்வளவுதான். அப்படிப்பார்தால் கீழே உள்ள பாடல் எவ்வளவு மோசமான அர்த்தங்களை கொண்டிருக்கும். என்பதை எண்ணிப்பாருங்கள்

படுப்பது என்பது கெட்டவார்த்தையாக இருந்தால் இப்படி ஒரு பாடலை எழுதியிருப்பார்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"படுப்பது" கூடாத அல்லது கெட்டவார்த்தையல்ல என நினைக்கின்றேன். "பெண்ணோடு படுப்பது" எனும் சொல்தான் அங்கே கொஞ்சம் நாகரீகமில்லாமல் இருக்கின்றது.

'படுப்பது" கெட்ட வார்த்தையே அல்ல, கு.சா!

அது வரும் இடம் தான், அதற்குக் கெட்ட பேரைக் கொடுக்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த இந்தப் பதிவில் ரதி என்ற கருத்துக்கள உறவு தவறான அர்த்தப்படுத்தலுக்கு என்று பாவித்த சொல்லாடலை நியாயப்படுத்த எங்களின் உணர்வுகள் பூராவும் பரவி இருக்கும் தன்னிகரற்ற தியாகங்களைச் செய்த மாவீரர்களின் நினைவுப் பாடலை பாவித்திருப்பதை வன்மையாக எதிர்ப்பதோடு இந்தப் பாடலை தயவுசெய்து இதில் இருந்து நீக்க சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி எடுக்க வினவிக் கொள்கின்றேன்.

ரதி என்ற கருத்துக்கள உறவுக்கு.. இந்தச் சொல்லாடல் தொடர்பாக போதிய அளவு விளக்கம் பிற தலைப்பொன்றில் சமீபத்தில் வழங்கப்பட்டும்.. அவர் வேண்டும் என்றே தான் இச்சொல்லை இப்படியான சந்தர்ப்பங்களுக்கு பாவித்து வருகிறார். சில சொற்கள்.. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பொருள் தரவல்லது என்பதால்.. இந்த மயக்க நிலையை வேறு சிலரும்.. தங்களின் மட்டமான சிந்தனைகளை சிதற விட பயன்படுத்துகிறார்கள். இது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இந்த நடவடிக்கைகளை யாழ் கள உறவுகள் தாமாக முன் வந்து கைவிடுவதே அவர்களுக்கு சிறப்பு. இன்றேல்... இவர்கள் மீதான அனைத்து வித நன்மதிப்பையும் இவர்கள் தாங்களாகவே இழக்கச் செய்வதாக கருத வேண்டியது தான். :(:rolleyes::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் என்ன செய்கிறது எனக்கு உங்கள் மாதிரி அறிவை கடவுள் கொடுக்கவில்லையே அத்தோடு இந்த சொல்லாடலில் எனக்கு அவ்வளவு ஆசை அது தான் திரும்ப,திரும்ப எழுதினேன்...இந்த கருத்துகளத்தில் நீங்கள் உட்பட மற்றவர்களின் நன் மதிப்பை பெற வேண்டும் என்கிறதிற்காக நான் கருத்து எழுதுவதில்லை...உங்களுக்கு என் மேல் கோபமிருக்கும் அது உங்கள் தப்பு இல்லை கூல் டவுண் :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் என்ன செய்கிறது எனக்கு உங்கள் மாதிரி அறிவை கடவுள் கொடுக்கவில்லையே அத்தோடு இந்த சொல்லாடலில் எனக்கு அவ்வளவு ஆசை அது தான் திரும்ப,திரும்ப எழுதினேன்...இந்த கருத்துகளத்தில் நீங்கள் உட்பட மற்றவர்களின் நன் மதிப்பை பெற வேண்டும் என்கிறதிற்காக நான் கருத்து எழுதுவதில்லை...உங்களுக்கு என் மேல் கோபமிருக்கும் அது உங்கள் தப்பு இல்லை கூல் டவுண் :lol::D:icon_idea:

இந்தச் சொல்லாடல் வேறுபாட்டை உணர.. படிப்பறிவு அவசியமில்லை. மனிதர்களாக இருந்தால்.. இயற்கையான பகுத்தறிவே போதும். அது இல்லாதவங்கள.. எப்படி மனுசங்க என்று கருத முடியும். அப்படி மனுசங்களா கருத முடியாதவங்க கூட எது சொன்னாலும்.. பிரயோசனம் இல்ல.

நான் உங்களுக்கு இந்தத் தலைப்பில் புத்திமதி சொல்லேல்ல. இந்தத் தலைப்பில் குறித்த பதம் கையாளப்பட்டுள்ளதன் நோக்கத்தை நான் உணர்ந்த வகையில் சொல்லி இருக்கிறேன். மற்றும்படி உங்களை எல்லாம் திருத்தவோ.. வழிநடத்தவோ.. என் நன்மதிப்பை யாரும் சம்பாதிக்கச் செய்யவோ.. எனக்கு எந்த வித அவசியமும் இருப்பதாக நான் உணரவில்லை. என் மூளையில் குற்றமாக உணரப்பட்டதை சுட்டிக்காட்டினேன். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளே அவர்களுக்கான நாளைய இயற்கையின் பிரதிபலனாக அமையும். அவ்வளவும் தான். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் படுப்பது என்பது கெட்டவார்த்தையல்ல ஆனால் அது பேச்சுத் தமிழில் கெட்டவார்ததையாக பார்க்கப்பட்டது அவ்வளவுதான். அப்படிப்பார்தால் கீழே உள்ள பாடல் எவ்வளவு மோசமான அர்த்தங்களை கொண்டிருக்கும். என்பதை எண்ணிப்பாருங்கள்

படுப்பது என்பது கெட்டவார்த்தையாக இருந்தால் இப்படி ஒரு பாடலை எழுதியிருப்பார்களா??

தவறில்லை, சாத்திரியார்!! வார்த்தை சரியாகவே கையாளப் பட்டு இருக்கின்றது!

மிருகங்கள், பறவைகளுக்கு, இந்தப் படுப்பது என்ற வார்த்தை கையாளப் படுவது வழமையாக இருந்துள்ளது!

கோழிகள் மரத்தில் படுக்கின்றன! புலிகள் ஒன்றாகப் படுக்கின்றன!

மேலுள்ளவற்றில், வார்த்தைக் கையாள்கையில் தவறில்லை!

ஆனால் நீ குரங்கோடு படுத்தாய்! என்று கூறும் போது அதன் அர்த்தம் பூரணமாக மாறிப் போய் விடுகின்றது!

நீ குரங்கோடு உறங்கினாய்! என்று கூறும்போது அதில் முந்தைய வசனத்தின் தாக்கம் அவ்வளவு தெரியவில்லை அல்லவா?

நெடுக்கர் கூறுவது போல, தமிழ் வார்த்தைகளின் கருத்துக்கள், அவை வரும் இடங்களைப் பொறுத்து, வேறு வேறு அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும்!

இன்னொரு உதாரணம்!

'போற்றி மான் நான்முகனும் காணாத ******''

இதில் விடு பட்ட வார்த்தை ' தாமரைப் பூ' என்ற கருத்தில் வருகின்றது!

இதே வார்த்தையைத் தனியாகப் பாவித்துப் பாருங்கள்!

அதன் அர்த்தமே வேறாகி விடுகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம்...நான் பள்ளிக்கூடம் போகேல்லை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 வீதம் நெடுக்கின் கருத்தே எனதும்.

ரதி இது போன்ற சொற்களை வேண்டுமென்றே இங்கு பதிகிறார். இது போன்ற சொற்களை அவர் இங்கு பாவித்தபோது அதை ஊக்கிவித்தவர்களே அதற்கு காரணம். அவரை சிலரின் வஞ்சக புகழ்ச்சிக்குள் சிக்குண்ட அப்பாவியாகத்தான் நான் பார்க்கின்றேன். அத்துடன் அவர் போல் எழுதுமாறு மற்றவர்களையும் தூண்டிவருவது கவலைக்குரியது. வயதுக்கு வந்தவர்களுக்கு ஒருமுறை இருமுறைதான் சொல்லமுடியும். அதற்கு மேல் அவர்கள் வளரும் வளரப்போகும் இடங்களைப்பொறுத்தது.

இல்லை இது சாதாரணம் என்று மீண்டும் மீண்டும் ரதி இங்கு எழுதுவாராக இருந்தால்.....

ரதி தனது வீட்டில் தாய் தகப்பன் சகோதரங்களுக்கு முன்னாலும் இதுபோன்ற சொற்களைப்பாவிப்பவராக இருக்கவேண்டும். எனவே எமது எல்லையுடன் நாம் நிறுத்தவேண்டியதுதான். நன்றி.

Link to comment
Share on other sites

இந்த திரியின் தலைப்பே ஒரு பெண் கூட உல்லாசம் ..சம்பந்தமானது அதை ஒட்டி கருத்து எழுதும் போது

இப்பிடியான சொல்லாடல்கள் தான் பேச்சு வழக்கில் பாவிப்பார்கள்..(படுப்பது ) அதையே தான் அவரும் பாவித்துள்ளார்.. புங்கையூரான் சுட்டி காட்டியதுக்கு அவர் மன்னிப்பும்கேட்டு விட்டார் அதுக்கு பிறகும் ஏன் ?

கருத்து எழுதுவது ஒரு ஜில் மால் திரிக்கு அதுக்குள்ள அப்பிடி எழுதிட்டார் இப்பிடி எழுதிட்டார் ..

ஒரு சிலருக்கு தொழிலே குற்றம் கண்டு பிடிப்பது என்று ஆகி விட்டது..

இதுக்குள்ள ஏன் அம்மா அப்பா சகோதரங்களை இழுப்பான் அதுகளை முதலில

நிறுத்துங்க..

உங்களுக்கு எல்லாம் மஜா மல்லிகா பாணி எழுத்துகள் தான் சரி போல இருக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரசமாகப் பல ஆண்கள் யாழ் களத்தில் எழுதுவார்கள்.. அது எல்லாம் பிரச்சினை இல்லை.. ஆனால் "படுப்பது" (உடலுறவைக் குறிக்கும் சொல்) என்று ரதி என்ற பெண்ணின் பெயரில் எழுதினால் தாங்காது நமது பண்பாடு, விழுமியங்கள், கலாச்சாரங்களின் காவலர்களுக்கு,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவுக்கு போகத்தேவையில்லை கிருபன்

நீங்கள் இங்கு அப்படியான சொற்களைப்பாவிப்பது இல்லை. ஏன்???

அது போன்ற திரிகளுக்கோ அல்லது பதங்களை பாவிக்கவேண்டாம் என்றோ சொல்லவில்லை. தமிழில் அதற்கும் வேறு சொற்கள் இருக்கின்றன. என்றுதான் சொல்கின்றோம். அத்துடன் ஆண் பெண் வித்தியாசமில்லை. நீங்கள் எழுதியிருந்தாலும் நான் இப்படித்தான் சுட்டிக்காட்டியிருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரசமாகப் பல ஆண்கள் யாழ் களத்தில் எழுதுவார்கள்.. அது எல்லாம் பிரச்சினை இல்லை.. ஆனால் "படுப்பது" (உடலுறவைக் குறிக்கும் சொல்) என்று ரதி என்ற பெண்ணின் பெயரில் எழுதினால் தாங்காது நமது பண்பாடு, விழுமியங்கள், கலாச்சாரங்களின் காவலர்களுக்கு,

ஒருவர் "படு" வை எழுதுவதால்.. பண்பாடு.. விழுமியம்.. கலாசாரம்.. பழுதாப் போகிடும் என்று மற்றவங்க நினைக்கிறாங்க என்று நீங்க நினைக்கிறீங்க போல.! அதுவே தப்பு. ஒரு கூட்டம் கெடுக்கிறது என்பதற்காக.. கெட்டுப் போகக் கூடிய ஒன்றாக இல்லை.. ஒரு இனம் சார்ந்த வரலாற்றியல் அடிப்படையில் பிறக்கும் பண்பாடும்.. விழுமியமும்.

ஆனால் இங்குள்ள பலரின் கருத்து.. அது அடிப்படை கருத்துப் பகிர்வு நாகரிகத்திற்குள் சகிக்கக் கூடிய ஒன்றாக இல்லை என்ற உணர்தலையே இனங்காட்டுகிறது. அதனால் தான் தவிர்க்கச் சொல்கிறார்களே ஒழிய.. றோட்டில ஆயிரம் பேர் ஆயிரம் வகையில தூசணம் பேசுவான்.. அதுக்காக மற்றவன் தன்ர தனி மனித ஒழுக்கம்.. சமூகப் பண்பாடு.. கலாசாரம்.. விழுமியத்தை தொலைச்சிடுவானுன்னு பயப்பிடுவது கூட ஒரு வகை அறியாமையே..! அதேபோல்.. உள்ளது உங்கள் குற்றச்சாட்டு. :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.