Jump to content

பெண்களை வசியம் செய்யும் மாந்திரீகம்


Recommended Posts

விசரன் என்னை மன்னிப்பார் என்கின்ற நம்பிக்கையில் , எனக்குப் பிடித்த அவரின் ஆக்கத்தை உங்களுடன் பகிர்கின்றேன் . ஆனால் , இதைப் பிரதேசவாதம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இதைத் தயவு செய்து பார்க வேண்டாம் . எமது மக்களின் ஊத்தைகளை எள்ளலுடன் விபரித்துள்ளார் . இனி....................................................................

ஏறத்தாள 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் வாழ்ந்திருந்த காலமது. என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோருமே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். நான் மட்டுமே மட்டக்களப்பைச் சேர்ந்தவன். மட்டக்களப்பு என்பதாலேயே சில நக்கல் கதைகள் என்னை நோக்கி வரும். அதில் நக்கல், பகடி இருந்ததே அன்றி விஷம் பூசிய வார்த்தைகள் இருந்ததில்லை. அப்படி நான் உணர்ந்ததுமில்லை.

டேய் உன்னூர் பாயில் படுத்தால் அப்படியே ஒட்டி விடுமே என்பார்கள். நானும் பதிலுக்கு எங்களூர் உபசரிப்பில் நீங்கள் மயங்கி, சில பல வேளையில் காதலித்து கசிங்து உருகி எங்களூர் மனிதர்களாய் மாறிப்போவதை நாங்கள் மாந்தரீகம் செய்து பாயில் போடுகிறோம் என்கிறீர்கள் என்பேன்.

பின்பு மாந்தரீகம் பற்றி பேசுவார்கள். காதலித்த பெண்ணை வசியம் செய்வது பற்றித் தெரியுமா என்பார்கள் மிகுந்த ஆர்வத்துடன். நானும் அந்தக் காலத்தில் கேட்டறிந்த சில விடயங்களைக் கூறி எங்கள் ஊரின் மேலான அவர்களின் ஒரு வித பயத்தன்மையை ரசித்திருப்பேன்.

பெண்ணை வசியம் செய்வது பற்றியே அடிக்கடி கதை வரும். அப்போதெல்லாம் அமாவாசை அன்று காலை அவளின் காலடி மண் எடுத்து, ஒரு தலைமுடியுடன், ஒரு கோழி சாராயப்போத்தில் ஆகியவற்றுடன் மந்திரவாதியிடம் கொடுத்தால் அவர் அவளை உன் பின்னால் அலையவைப்பார் என்பேன். திறந்த வாய்க்குள் கொசு பூந்தது கூட தெரியாமல் மெய் மறந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

எங்கள் ஏறாவூர் காளி கோயில் ”சாமி கட்டுதல், பலி கொடுத்தல்” விடயங்களையும் ஏகத்துக்கும் சஸ்பென்ஸ் கலந்து சொல்வதால் என்னைப் பற்றி ஒரு வித மாந்திரீகம் தெரிந்தவன் என்னும் எண்ணம் சிலரிடம் இருந்தது.

அதனாலோ என்னவோ ஒரிருவர் காதலுக்காக என்னை நாடிய கதையும் இருக்கிறது. உண்மையில் நமக்கு அதெல்லாம் தெரியாதப்பா என்று அவர்களை நான் நம்பவைக்க பெரும் பாடுபட்டேன்.

ஆனால் ஒரு இடத்தில் மட்டும் நமக்கு தெரிந்த ஜால வித்தையைக் காட்டினேன். அதனால் என் மீது ஏற்படுத்தப்பட்ட ”இமேஜ்” இன்னும் கலைந்ததாயில்லை.

என் நண்பர் ஒருவரின் நெருங்கிய உறவினர், பெண். எதற்கெடுத்தாலும் பயமும், சந்தேகமும் கொண்டவர். பேய், மந்திரம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ளவர். நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதற்காகவே பல காலம் எடுத்தது அவர் என்னுடன் சகஜமாகப் பழக. எனது நண்பரும் மிகவும் ஜாலியான பேர்வழி. ஒரு நாள் தனது உறவினரை கலாய்க்க எண்ணி தனது உறவினரிடம் எனக்கு மாந்திரீகம் தெரியும் ‌என்றும், நான் அவருக்கு வாழைப்பழத்ததை உரிக்காமலே துண்டு துண்டாக வெட்டிக் காட்டினேன் என்றும் சொன்னதனால் அதை நிருபித்தக் காட்ட வேண்டும் என்று உறவினர் கேட்டிருக்கிறார். நண்பரும் என்னை அழைத்த வருவதாக கூறி என்னை அழைத்த வந்தார்.

நானும் இரண்டு பழுத்த வாழைப்பழங்களை ஒரு வெள்ளைத் துணியில் வைத்து மூடி, ஊதுபத்தி கொழுத்தி, கற்பூரம் காட்டி, தேசிக்காய் வெட்டி, மந்திரம் சொல்லிய பின் நண்பரின் உறவினரை அந்த இரண்டு வாழைப்பழங்களையும் உரிக்கச் சொன்னேன். அவர் அவற்றை உரித்த போது அவை கத்தியால் வெட்டப்பட்ட துண்டு துண்டுகள் போன்று கீழே விழ, அவர் பலத்த அலரலுடன் கத்தியபடியே வாழைப்பழத்தை கீழே போட்டுவிட்டு நண்பரின் பின்னால் நின்று கொண்டார். நண்பரும் பார்த்தீர்களா இவரின் சக்தியை என்று உறவினரை வெருட்டித் தள்ளினார். உறவினர் உண்மையாகவே என்னை ஒரு மந்திரவாதியாகவே நம்பிவிட்டார். அதன் பின் ஊருக்குள் தான் கண்ணால் கண்டதை சிலரிடம் கூறவும் செய்தார்.

நிலைமை சற்று மோசமடைவதை கண்ட நான் நண்பரை அணுகி உண்மையை கூறுவோம் என்றேன். அவருக்கும் ஏற்புடையதாய் இருந்ததால் உண்மையை செய்முறையால் செய்து காட்டினோம். அந்த உறவினரால் நம்ப முடியவில்லை. எனது நண்பனும் அதை செய்து காட்டிய பின்பே அவர் ஓரளவு நம்பினார். ஏறத்தாள 18 ஆண்டுகளின் பின் அவரை சில மாதங்களுக்கு முன் சந்தித்தேன். வாடா வா வாழைப்பழ மந்திரவாதியே என்று அன்பாய் அழைத்தார். சேர்ந்து சிரித்தோம்.

பி.கு: ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதனை ஒரு மெல்லிய ஊசியினால் குத்தி வாழைப்பழத்தினை குறுக்காக வெட்டினால் தோலின் உள்ளே வாழைப்பழம் வெட்டுப்படும். தோல் வெட்டுப்படாது. இது தான் எனது மாந்தரீகத்தின் சிதம்பர ரகசியம். இதை விட மட்டக்களப்பு மாந்தரீகம் தெரிந்தவன் நான் என்று நீங்கள் நினைத்தால் அது ரொம்ப டூமச்.

http://visaran.blogs...og-post_09.html

Link to comment
Share on other sites

அருமையான விருந்தோம்பலுக்கு பெயர் போனவர்கள் .. இப்ப அதை கெடுக்க வைத்தது இப்ப தங்களை மட்டகளப்பார் என்று சொல்லுகிற முந்தி வந்த வெளி மாநிலத்தவர் தான்,

// உள்ளதைச் சொல்லப் போனால் கலகலப்பாக சகஜமாகப் பழகும் மட்டக்களப்புப் பெண்களை விரும்பாமல் இருக்க , யாழ்ப்பாணத்து அம்மாமார் கண்டுபிடித்ததுதான் இந்தப் பாயில் ஓட்டும் சமாச்சாரம்.//

Link to comment
Share on other sites

என்னதான் சொன்னாலும் மட்டக்கிளப்பு பெண்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கு

Link to comment
Share on other sites

மட்டக்களப்பு மிக வளமான மண். வசதிகள் கூடிய இடம். ஆறு குளங்களுடன் இருபாட்டி மண் உள்ள பூமி. அதனாலேயே யாழிலிருந்து வந்த பலர் திரும்பிச் செல்லவில்லை. அங்கேயே கலியாணம் கட்டிக் குடியிருந்தார்கள். அதில் ஆண்கள் பெண்கள் சகலரும் அடக்கம். வெளிநாட்டிற்கு வந்த தமிழர்களில் எத்தனை பேர் இலங்கைக்குத் திரும்பியுள்ளார்கள். உங்களை மாந்திரீகம் செய்து மடக்கி வைத்துள்ளார்களா? என்ன பாடுபட்டாவது இந்தக் குளிரிற்குள் 'அசைலம்' அடிக்கும் காரணம் என்ன? வசதி கூடிய இடத்தில் வாழ்ந்து கொண்டு மாந்திரீகம், தாந்திரீகம் என்பவர்களுக்கு சுயபுத்தி இல்லையா? இந்த மாந்திரீகமும் மந்திரமும் வேலை செய்யுமென்றால் சிங்கள இராணுவத்தை மந்திரத்தாலே முகாமுக்குள் முடக்கியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

என்னதான் சொன்னாலும் மட்டக்கிளப்பு பெண்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கு

இத்தோடா.................................... :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

என்னதான் சொன்னாலும் மட்டக்கிளப்பு பெண்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கு

ஏன் யாழ் பெண்கள் அழகில்லை என்று சொல்கிறீர்களா?

Link to comment
Share on other sites

ஏன் யாழ் பெண்கள் அழகில்லை என்று சொல்கிறீர்களா?

அதே......................................... :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாருக்கு யாழில கண்ணிவெடி வைக்கிறார்கள். கவனம். :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மிக வளமான மண். வசதிகள் கூடிய இடம். ஆறு குளங்களுடன் இருபாட்டி மண் உள்ள பூமி. அதனாலேயே யாழிலிருந்து வந்த பலர் திரும்பிச் செல்லவில்லை. அங்கேயே கலியாணம் கட்டிக் குடியிருந்தார்கள். அதில் ஆண்கள் பெண்கள் சகலரும் அடக்கம். வெளிநாட்டிற்கு வந்த தமிழர்களில் எத்தனை பேர் இலங்கைக்குத் திரும்பியுள்ளார்கள். உங்களை மாந்திரீகம் செய்து மடக்கி வைத்துள்ளார்களா? என்ன பாடுபட்டாவது இந்தக் குளிரிற்குள் 'அசைலம்' அடிக்கும் காரணம் என்ன? வசதி கூடிய இடத்தில் வாழ்ந்து கொண்டு மாந்திரீகம், தாந்திரீகம் என்பவர்களுக்கு சுயபுத்தி இல்லையா? இந்த மாந்திரீகமும் மந்திரமும் வேலை செய்யுமென்றால் சிங்கள இராணுவத்தை மந்திரத்தாலே முகாமுக்குள் முடக்கியிருக்கலாம்.

தப்பிலிக்கு ஒரு பச்சை.. வசதிகளும் வாய்ப்புக்களும்தான் எவருக்கும் முக்கியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழ் பெண்கள் அழகில்லை என்று சொல்கிறீர்களா?

யாழ் களத்தில் உள்ளவர்கள் தமது படங்களை போட்டால்தான்..............

அதை முடிவு செய்யலாம்.

Link to comment
Share on other sites

ஏன் யாழ் பெண்கள் அழகில்லை என்று சொல்கிறீர்களா?

யாழ்ப்பாண பெட்டையள் அழகில்லையெண்டு யார் சொன்னது ?? அழகு இருக்கு ஆனால் ஆக்களை பாத்த்தால் ஒரு காய்ஞ்சுபோன அழகு. அது மட்டுமில்லை லேசிலை கதைக்கமாட்டாளவவை. தேவையில்லாமல் வெருளுறது. ஆனால் மட்டக்களப்பு பெண்களை பாத்தால் தப்பிலி சொன்னதை போல வளமான மண் அதாலை பெண்களிலையும் அதே வளமான அளகும் குளிர்மையும் காணலாம். அதே நேரம் தைரியமாக ஆண்களுடன் சகஜமாகப் பழகும் தன்மை இவை என்னுடைய சொந்த அனுபவங்கள் தான் . நாங்களும் கொஞ்சக்காலம் அந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள் எண்ட அனுபவத்திலை சொல்லுறன். ஆனால் என்னதான் சொன்னாலும் யாழ்ப்பாண பெட்டையளின்ரை திமிர் மாதிரி ஒருத்தருக்கும் வராது :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பெட்டையள் அழகில்லையெண்டு யார் சொன்னது ?? அழகு இருக்கு ஆனால் ஆக்களை பாத்த்தால் ஒரு காய்ஞ்சுபோன அழகு. அது மட்டுமில்லை லேசிலை கதைக்கமாட்டாளவவை. தேவையில்லாமல் வெருளுறது. ஆனால் மட்டக்களப்பு பெண்களை பாத்தால் தப்பிலி சொன்னதை போல வளமான மண் அதாலை பெண்களிலையும் அதே வளமான அளகும் குளிர்மையும் காணலாம். அதே நேரம் தைரியமாக ஆண்களுடன் சகஜமாகப் பழகும் தன்மை இவை என்னுடைய சொந்த அனுபவங்கள் தான் . நாங்களும் கொஞ்சக்காலம் அந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள் எண்ட அனுபவத்திலை சொல்லுறன். ஆனால் என்னதான் சொன்னாலும் யாழ்ப்பாண பெட்டையளின்ரை திமிர் மாதிரி ஒருத்தருக்கும் வராது :lol: :lol: :lol:

திமிர் என்று ஏதும் பொடி வைத்து சொல்கின்றீர்களா???

அல்லது திமிரைதான் சொல்கின்றீர்கள?

கரைசேரும் காலம் வருவதால் உள்ளதுகளை எழுதினால் கொஞ்சம் உதவியாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் உள்ளவர்கள் தமது படங்களை போட்டால்தான்..............

அதை முடிவு செய்யலாம்.

கருத்து எழுதினமா போனமா என்றில்லாமல் ஏன் வீண் ரிஸ்க்.

கரை சேருகிற காலம் என்று வேறு சொல்கிறீர்கள். :(

நானும் தப்பிலியும் சொன்னது யாழ் பெட்டையளை :lol: :lol: :D :D .

அட பாவி. அதென்ன 'தப்பிலியும்' .

நான் சாத்திரியைப் பார்த்துக் கேள்விதான் கேட்டனான்.

Link to comment
Share on other sites

என்னதான் சொன்னாலும் மட்டக்கிளப்பு பெண்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கு

ம்............... சாத்தர் நல்லாய் தான் இரசித்து இருக்கிறார் :rolleyes:

Link to comment
Share on other sites

நாங்களும் கொஞ்சக்காலம் அந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள் எண்ட அனுபவத்திலை சொல்லுறன்.

எத்தனையாம் ஆண்டு, எங்கு இருந்தனீங்கள்?

Link to comment
Share on other sites

ஆனால் என்னதான் சொன்னாலும் யாழ்ப்பாண பெட்டையளின்ரை திமிர் மாதிரி ஒருத்தருக்கும் வராது :lol: :lol: :lol:

திமிரா...........................அப்படியென்றால்????????????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதினமா போனமா என்றில்லாமல் ஏன் வீண் ரிஸ்க்.

கரை சேருகிற காலம் என்று வேறு சொல்கிறீர்கள். :(

அட பாவி. அதென்ன 'தப்பிலியும்' .

நான் சாத்திரியைப் பார்த்துக் கேள்விதான் கேட்டனான்.

களத்தில் இருக்கும் பெண்களை பற்றி அந்தளவுக்கு நல்ல அபிபிராயம் வைத்திருக்கின்றீர்கள் ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் யாழ் பெண்கள் அழகில்லை என்று சொல்கிறீர்களா?

இங்கையாரப்பா அப்பிடி இருக்கினம்.. இருக்கிறதே ரதியும் சுஜியும்தான்.. அதுவும் நிச்சயமா இல்ல.. துாயா ஒருக்கா எங்களோ பேட்டி குடுத்திருந்தவ.. அதை வைச்சு அவ பொண்ணுதான் என்று சொல்லலாம். இதில ஆராய்ச்சி வேறை..

சாத்திரி வட் யு மீன் பை குளிர்மை...

Link to comment
Share on other sites

இங்கையாரப்பா அப்பிடி இருக்கினம்.. இருக்கிறதே ரதியும் சுஜியும்தான்.. அதுவும் நிச்சயமா இல்ல.. துாயா ஒருக்கா எங்களோ பேட்டி குடுத்திருந்தவ.. அதை வைச்சு அவ பொண்ணுதான் என்று சொல்லலாம். இதில ஆராய்ச்சி வேறை..

அப்பா ரதியும் சுஜியும் பெண் இல்லையா?

Link to comment
Share on other sites

இங்கையாரப்பா அப்பிடி இருக்கினம்.. இருக்கிறதே ரதியும் சுஜியும்தான்.. அதுவும் நிச்சயமா இல்ல.. துாயா ஒருக்கா எங்களோ பேட்டி குடுத்திருந்தவ.. அதை வைச்சு அவ பொண்ணுதான் என்று சொல்லலாம். இதில ஆராய்ச்சி வேறை..

சாத்திரி வட் யு மீன் பை குளிர்மை...

காவடி சனி பிடிச்சுட்டுது உங்களுக்கு :o .தப்புறது கஸ்ரம் :lol: :lol: :D .

அப்பா ரதியும் சுஜியும் பெண் இல்லையா?

இது மரணத்துச் சனி தப்பிலி , கஸ்ரம் தான் :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் என்னதான் சொன்னாலும் யாழ்ப்பாண பெட்டையளின்ரை திமிர் மாதிரி ஒருத்தருக்கும் வராது :lol: :lol: :lol:

திமிர் என்பதை விடப் பெருமைதான். சிலநேரம் வரட்டுக் கெளரவம்..

எவ்வளவு நேரம் செலவழித்து மிதியுந்து உழக்கி அலைந்தாலும் கடைக்கண்ணால்கூடப் பார்க்காமல் விட்டார்கள் என்ற கோபம்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்து பெண்கள் இருப்பதை வைத்து எளிமையாக வாழக்கூடியவர்கள்.சேமித்து வாழ நினைப்பவர்கள்.

கிழக்குமாகாணத்து பெண்கள் இருக்குதோ இல்லையோ ஆடம்பரமாக வாழ்பவர்கள்...வாழ நினைப்பவர்கள்.

Link to comment
Share on other sites

எத்தனையாம் ஆண்டு, எங்கு இருந்தனீங்கள்?

தப்பிலி 86 லை சில காலம் அம்பாறை மட்டக்கிளப்பு பக்கம். சின்ன முகத்துவாரம் அக்ரை பற்று ஓலுவில் பிறகு மீண்டும் 93 கரஎயனாறு இலுப்பையடிச்சேனை செங்கலடியெண்டு பல இடம் மண்டுர் தானே பத்தினியம்மன் கோயிலடி அங்கை வரை திரிஞ்சிருக்கிறன். கூடுதலாய் கடலோரககிராமங்கள்தான் பழக்கம். உள்ளை வந்தது குறைவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை வசியம் செய்து என்ன பண்ணுறது.. ஒன்னுமே.. வேலைக்கு ஆகப் போறதில்ல. சும்மா வேலில போற ஓணானை.. பிடிச்சு.. வேட்டிக்க விட்ட கணக்காத் தான் முடியும். அதுவும் இல்லாம.. இப்ப எல்லாம்.. உவைய வசியம் பண்ண.. ஒன்னும் தேவைல்ல.. கொஞ்சம் சிமாட்டும்.. ஒரு பேஸ் புக் எக்கவுண்டும்.. ஒரு காரும்.. நல்ல கிரடிட் காட்டும் இருந்தா... எல்லாம் சும்மா வந்து அமையும். :):lol::icon_idea:

யாழ்ப்பாணப் பெண்கள்.. நகைப் பைத்தியங்களுன்னா.. மட்டக்களப்பு.. சேலைப் பைத்தியங்கள். அடிப்படையில எல்லாம்.. எண்ணெய் வழில மூஞ்சியோட.. அமையுற.. பைத்தியங்கள் தான்..! தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.