Jump to content

சிங்களத்து சின்ன குயில் - பூஜா


Recommended Posts

'பொறி' வைக்கும் பூஜா

pooja12-525.jpg

திடீரென்று ஆளைக் காணலையே என்று ஏங்கித் தவிக்கும் ரசிகர்களின் ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் பொறி படம் மூலம் மீண்டும் வருகிறார் பூஜா.

அவ்வப்போது வந்துவிட்டு காணாமல் போகும் நடிகைகளில் ஒருவர் பூஜா. ஜேஜேவில் அறிமுகமாகி அப்படியே மறைந்து போய் பின்னர் உள்ளம் கேட்குமே, அட்டகாசம், ஜித்தன் என திரும்பி வந்தவர் இந்த சிங்களத்து ஆப்பிள். (அப்பா சிங்களம்)

பெங்களூர் மௌண்ட் கார்மெல் கல்லூரியில் படித்த இந்த மங்களூர் பெண் (அம்மா கர்நாடகா) இடையில் இலங்கைக்குப் போய் அஞ்சலிக்கா என்ற சிங்களப் படம் ஒன்றிலும் தலை காட்டினார். போன இடத்தில் சும்மா இருக்காமல் பழைய சரக்கு ஒன்றை சாப்பிட்டு வாந்தி, பேதியாகி பெரும் அவஸ்தைக்குள்ளாகி மீண்டார்.

pooja-family-450.jpg

தமிழில் அவ்வப்போது பூஜா கேப் விட்டதால் நயன்தாரா, அசின், ரேணுகா மேனன் என ஏகப்பட்ட கேரளத்து குஜிலிகள் கூடி நின்று கும்மியடித்து அவரது இடத்தை ஒன்றுவிடாமல் பிடித்துவிட்டார்கள்.

இந் நிலையில் திரும்ப வந்திருக்கும் பூஜா கஷ்டப்பட்டு வாய்ப்புத் தேடி இப்போது பிரஷாந்த்துடன் தகப்பன்சாமி, ஜீவாவுடன் பொறி மற்றும் பரத்துக்கு ஜோடியாக பட்டியல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2 படங்களுக்கு பேச்சுவார்த்தை (எல்லாம் துட்டு விவகாரம் தான்) நடக்கிறது.

பட்டியல் படத்தில் மெயின் ஹீரோயினாக பத்மப்ரியா நடிக்கிறார். பொறி மற்றும் தகப்பன் சாமியில் பூஜா தான் மெயின் ஹீரோயின். ஆனால், தகப்பன்சாமியில் நமிதா புகுந்துவிட்டதால் அதை சமாளிக்க, ஜித்தனில் கலக்கிய மாதிரி இதிலும் கவர்ச்சி ரசம் சொட்ட விட்டுள்ளாராம் பூஜா.

pooja14-360.jpg

திருடா திருடி என்ற மிகப் பெரிய 'சமூகப் படத்தைக்' கொடுத்த சுப்ரமணியம் சிவாவின் இயக்கத்தில் உருவாகிறது பொறி. இதில் பூஜாவுடன் ஜோடி போடப் போவது ஜீவா. ஏற்கனவே ஜீவாவின் அண்ணன் ரமேஷûடன் ஜித்தனில் கலக்கிய பூஜா, இப்போது தம்பியுடன், ஜமாய்க்கப் போகிறார்.

ஹாலிவுட் போய் தயாரிப்பு நுணுக்கம், டைரக்ஷன் நுணுக்கம் (தமிழ் சினிமாவுக்கு இதெல்லாம் தேவையில்லை தான்) என ஏகப்பட்ட விஷயங்களை கரைத்துக் குடித்து விட்டு வந்துள்ள கார்த்தி சம்பந்தம் என்பவர்தான் படத்தைத் தயாரிக்கப் போகிறார்.

திருடா திருடியில் மன்மதா ராசா என்ற சூப்பர் ஹிட் கலக்கல் பாட்டை சேர்த்தது போல, இந்தப் படத்திலும் ஒரு 'கும்மாங்' பாட்டை கோர்க்கப் போகிறார்களாம். இந்தப் பாட்டுக்கும் மன்மதா ராணி சாயாசிங்கை கூப்பிட்டுக் குத்த வைத்து விட சுப்ரமணியம் சிவா திட்டமிட்டுள்ளாராம்.

பிட்டு 1: பூஜாவின் உண்மைப் பெயர் என்ன தெரியுமோ?

கௌதமி உமாசங்கர்.. (ரொம்ப முக்கியம்)

பிட்டு 2: பூஜாவின் சம்பளம் என்ன?

கேட்பது ரூ. 15 லட்சம்

ஒத்துகொள்வது ரூ. 12 லட்சத்துக்கு

தட்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

பூஜாவின் அம்மா சிங்களம் என்று எங்கோ படித்த நினைவு. இதில் அப்பா சிங்களம் என்று எழுதியிருக்கின்றார்கள். எது உண்மையோ :roll:

Link to comment
Share on other sites

புஜாவின் அம்மாதான் சிங்களம் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்பா கர்நாடகம் தனது புதிய படங்கள் இலங்கேலையும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் றிலீஸ் ஆவதால் தான் இலங்கை வந்து அம்மாவுடன் பார்ப்பதாக தனது சண் ரிவி பேட்டியின் போது அவரே சொன்னார் (அம்மா பௌத்த மதத்தை சேர்ந்த படியால் புத்தரின் பெயரான "கௌதம" என்ற பெயரை தனது பேரிலும் சேர்த்திருப்பதாக சொன்னார்)

Link to comment
Share on other sites

பூஜாவின் அம்மா சிங்களம் என்று எங்கோ படித்த நினைவு. இதில் அப்பா சிங்களம் என்று எழுதியிருக்கின்றார்கள். எது உண்மையோ  :roll:

ரொம்ப முக்கியம் இப்ப :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப முக்கியம் இப்ப :twisted: :twisted:

:):lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol: :mrgreen:

Link to comment
Share on other sites

பூஜாவின் நடிப்பு எனக்கு ஓரளவு பிடிக்கும். நன்றாக டான்ஸ் கூட ஆடுவார்.. :)

ரொம்ப முக்கியம் இப்ப :twisted: :twisted:

அப்ப இப்ப எது முக்கியம் என்கிறீர்கள்? :roll: :wink: :P

Link to comment
Share on other sites

பூஜாவின் நடிப்பு எனக்கு ஓரளவு பிடிக்கும். நன்றாக டான்ஸ் கூட ஆடுவார்.. :)  

அப்ப இப்ப எது முக்கியம் என்கிறீர்கள்? :roll: :wink: :P

:P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாலை விபத்தில் நடிகை பூஜா படுகாயம்

பிப்ரவரி 08, 2006

பெங்களூர்:

நடிகை பூஜா பயணம் செய்த காரும், டாக்சியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பூஜா படுகாயம் அடைந்தார்.

ஜேஜே, அட்டகாசம், தம்பி, தகப்பன்சாமி என பல படங்களில் நடித்துள்ளவர் பூஜா. இப்போது பொறி என்ற புதுப் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது.

படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பெங்களூரில் உள்ள தனது வீட்டிலிருந்து கிளம்பினார் பூஜா. விமான நிலையம் செல்லும் வழியில் அவரது காரும், இன்னொரு டாக்சியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் பூஜாவுக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போகப்பட்டார். அங்கு பூஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தட்ஸ்தமிழிலிருந்து செய்தி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.