Jump to content

QUADRUPLETS- என்னுடன் வந்தவன் -2


arjun

Recommended Posts

எனது வீட்டு டெக்,

அந்த மேல் இருக்கையில் இருந்து மக்கோவன் வீதியை பார்த்தபடி குமார் என்னை கட்டி பிடிக்கின்றான் .அவனது மூன்று பெண்பிள்ளைகளும் முந்திரிகை பந்தலுக்கு பின் ஓடி ஒளிக்க பெடியன் கண்ணை கட்டியபடி பிடிக்கப்போகின்றான் .எனது சின்னவருக்கு நம்பவே முடியால் இருக்கின்றது .மூன்று பெட்டைகளும் ஒரே மாதிரி, ஒரே உடுப்பு வேறு.ஆனால் பெடிக்கு வித்தியாசம் தெரியுது.நான் குமாரை கேட்கின்றேன் "உனக்காவது வித்தியாசம் தெரியுமா" சிரித்தபடி குமாரின் மனைவி சொன்னா இவருக்கென்ன வீட்டில் நிற்பதில்லை நான் படும்பாடு சொல்லி மாளாது.ஆனால் அதுகள் மாத்திரம் ஆளை ஆள் அந்தமாதிரி அடையாளம் பிடிக்கும்.கலிபோணியாவில் இருந்து காரில் வந்தனியா என்று கேட்க, எல்லாம் தமிழ்நாட்டில் மொட்டர்சைக்கில் கொடுத்த கெப்பு என சிரிக்கின்றான் .

உரத்தநாடு நான் போய் கருணாவிடம் பணத்தை கொடுக்க கருணா சிரித்துக்கொண்டு உம்மடை ஆள் நேற்றே ஓடிவிட்டார் என்றார் .கருணாவிடம் இருந்து தோழர் ஓடி விட்டதற்கான ஒரு கடிதத்தையும் வாங்கிக்கொண்டு சென்னை வந்து அண்ணா நகரில் குமாரை சந்திகின்றேன்.உன்னை அவர்களால் கொன்றிருந்தால் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டன்,மூன்று வருடங்களுக்கு மேலாக முகாம்களில் பயிற்சி என்று எல்லோரும் படாபாடு பட, ஆறு மாத பயிற்சி ,பின் சென்னையில் ஆபிஸ் உத்தியோகம் ,மோட்டார் சயிக்கிளில் புலன் ஆய்வு, பிறகு ஊருக்கு போய் வடக்கு,கிழக்கு சுத்தியடித்து வந்து "we missed the bus " என்று சொல்லிவிட்டு ஓடிப்போக, அவங்கள் என்ன பொன்னையர்களா?.உனக்கு மட்டும் எவ்வளவு காசு செலவழித்திருப்பார்கள் என்று யோசித்து பார்த்தாயா? எல்லாவற்றிகும் தலை குனிந்தபடி ஆள் நிக்குது .ஆளை கொண்டுபோய் அண்ணா நகரில் இருக்கும் பிரபல ஏஜன்சி மாட்டின் ரோட் மகேந்திரனின் வீட்டில் விட்டு,திரும்ப லண்டன் போகும் ஏற்பாடுகளை செய்யுமாறு சொல்லி வந்தேன்.அதற்குள் தான் மொட்டை மாடியில் நிற்கும் போது ராஜன் ,மாணிக்கம் வேறு மகேந்திரனிடம் வந்து போனதாக பின்னர் சொன்னான் .(எல்லோரும் மாட்டின் ரோட் தான் )

குமார் லண்டன் திரும்பி பின்னர் அவர் அக்கா அமெரிக்கா கூப்பிட்டு இப்ப கலிபோனியாவில் இருக்கின்றார் .கலியாணம் கட்டி சில காலம் பிள்ளைகள் இல்லாமல் இருந்து பின்னர் ஒரே தரத்தில் நாலு பிள்ளைகளை பெற்று இருக்கின்றார் .மூன்று பெண்கள் ,ஒரு ஆண்.

நாலுபேரும் எனது வீட்டு தோட்டத்தில் ஓடிவிளையாடுகின்றார்கள்,பெடி பெரும் குழப்படி போல் இருக்கு ,பெட்டைகளுக்கு ஒரே அலுப்பு கொடுத்தபடி, எனக்கு ஏன் கண்களையே நம்ப முடியவில்லை.பார்க்க அவ்வளவு அழகாக இருக்கு, எனது மனைவியார் வீடியோ எடுக்கின்றார் ,குமாரிடம் உத்தரவு வாங்கி பதிவிடுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இந்த கதை மூலம் என்ன சொல்ல வாரீயள் அர்சுன்....தோழர் தப்பினது நல்லம் என்று சொல்லுறீயளோ?கூடாது என்று சொல்லுறீயளோ?....

நான் நினைக்கிறன் உங்கன்ட தோழர் சுழியன் என்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரத்த நாட்டில் உரமாய் போவதைவிட தோழர் தப்பியது நல்லதுதான்.

உரத்த நாட்டிலும், முள்ளிவாய்க்காலிலும் தப்பாதவர்களின் கதைகள் மெல்ல இனி மறையும்.

Link to comment
Share on other sites

இயக்கமே உடைந்து சுக்கு நூறாகிய பின் குமாருக்கு இனி என்ன வேலை? வாழ்க்கையாவது நாலு பிள்ளைகளுடன் அனுபவிக்கட்டுமே?.தனது இனத்தை காட்டிக்கொடுக்காத வரை அவர் மேல் தான்.

குமார் நீண்ட காலமாக கலிவோர்ணியாவில் வாழ்கிறாரா?

Link to comment
Share on other sites

ஊடகவியலாளர் நிர்மலராஜனை சுட்டவனும் தான் இலண்டனில் உள்ளான்.

Link to comment
Share on other sites

ஒரத்த நாட்டில் இருந்து தப்பி வந்த எங்கள் நண்பனை காப்பாற்றி மறைவாக ஒரு இடத்தில் வைத்திருந்தோம். வெளியில் செல்லும் பொழுது பிடித்து விட்டார்கள். சங்கிலியாலும் டம்பிங்காலும் (தற்போது மத போதகர் என்று கேள்விப்பட்டேன்) எனது உறவினருக்கும் எனக்கும் பெரிய பிரச்சனை வந்தது. கடத்துவதற்கு தேடித் திரிந்தார்கள். அப்பொழுது புளட் நன்றாக உடைவுபட்டு கடைசிக் கட்டத்திலிருந்த நேரம். எனது உறவினருக்கு பெரிய மட்டத்தில் தொடர்புகள் இருந்தபடியால் நண்பனையும் மீட்டு நாங்களும் தப்பக் கூடியதாக இருந்தது. நண்பனின் பெயரும் குமார்தான்.

பாவம் தப்புவதற்கு வசதிகள் இல்லாதபடியால் விடுதலைக்கென்று போன பல இளைஞர்கள் அநியாயமாக பலியாகி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

எனது வீட்டு டெக்,

அந்த மேல் இருக்கையில் இருந்து மக்கோவன் வீதியை பார்த்தபடி குமார் என்னை கட்டி பிடிக்கின்றான் .அவனது மூன்று பெண்பிள்ளைகளும் முந்திரிகை பந்தலுக்கு பின் ஓடி ஒளிக்க பெடியன் கண்ணை கட்டியபடி பிடிக்கப்போகின்றான் .எனது சின்னவருக்கு நம்பவே முடியால் இருக்கின்றது .மூன்று பெட்டைகளும் ஒரே மாதிரி, ஒரே உடுப்பு வேறு.ஆனால் பெடிக்கு வித்தியாசம் தெரியுது.நான் குமாரை கேட்கின்றேன் "உனக்காவது வித்தியாசம் தெரியுமா" சிரித்தபடி குமாரின் மனைவி சொன்னா இவருக்கென்ன வீட்டில் நிற்பதில்லை நான் படும்பாடு சொல்லி மாளாது.ஆனால் அதுகள் மாத்திரம் ஆளை ஆள் அந்தமாதிரி அடையாளம் பிடிக்கும்.கலிபோணியாவில் இருந்து காரில் வந்தனியா என்று கேட்க, எல்லாம் தமிழ்நாட்டில் மொட்டர்சைக்கில் கொடுத்த கெப்பு என சிரிக்கின்றான் .

உரத்தநாடு நான் போய் கருணாவிடம் பணத்தை கொடுக்க கருணா சிரித்துக்கொண்டு உம்மடை ஆள் நேற்றே ஓடிவிட்டார் என்றார் .கருணாவிடம் இருந்து தோழர் ஓடி விட்டதற்கான ஒரு கடிதத்தையும் வாங்கிக்கொண்டு சென்னை வந்து அண்ணா நகரில் குமாரை சந்திகின்றேன்.உன்னை அவர்களால் கொன்றிருந்தால் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டன்,மூன்று வருடங்களுக்கு மேலாக முகாம்களில் பயிற்சி என்று எல்லோரும் படாபாடு பட, ஆறு மாத பயிற்சி ,பின் சென்னையில் ஆபிஸ் உத்தியோகம் ,மோட்டார் சயிக்கிளில் புலன் ஆய்வு, பிறகு ஊருக்கு போய் வடக்கு,கிழக்கு சுத்தியடித்து வந்து "we missed the bus " என்று சொல்லிவிட்டு ஓடிப்போக, அவங்கள் என்ன பொன்னையர்களா?.உனக்கு மட்டும் எவ்வளவு காசு செலவழித்திருப்பார்கள் என்று யோசித்து பார்த்தாயா? எல்லாவற்றிகும் தலை குனிந்தபடி ஆள் நிக்குது .ஆளை கொண்டுபோய் அண்ணா நகரில் இருக்கும் பிரபல ஏஜன்சி மாட்டின் ரோட் மகேந்திரனின் வீட்டில் விட்டு,திரும்ப லண்டன் போகும் ஏற்பாடுகளை செய்யுமாறு சொல்லி வந்தேன்.அதற்குள் தான் மொட்டை மாடியில் நிற்கும் போது ராஜன் ,மாணிக்கம் வேறு மகேந்திரனிடம் வந்து போனதாக பின்னர் சொன்னான் .(எல்லோரும் மாட்டின் ரோட் தான் )

குமார் லண்டன் திரும்பி பின்னர் அவர் அக்கா அமெரிக்கா கூப்பிட்டு இப்ப கலிபோனியாவில் இருக்கின்றார் .கலியாணம் கட்டி சில காலம் பிள்ளைகள் இல்லாமல் இருந்து பின்னர் ஒரே தரத்தில் நாலு பிள்ளைகளை பெற்று இருக்கின்றார் .மூன்று பெண்கள் ,ஒரு ஆண்.

நாலுபேரும் எனது வீட்டு தோட்டத்தில் ஓடிவிளையாடுகின்றார்கள்,பெடி பெரும் குழப்படி போல் இருக்கு ,பெட்டைகளுக்கு ஒரே அலுப்பு கொடுத்தபடி, எனக்கு ஏன் கண்களையே நம்ப முடியவில்லை.பார்க்க அவ்வளவு அழகாக இருக்கு, எனது மனைவியார் வீடியோ எடுக்கின்றார் ,குமாரிடம் உத்தரவு வாங்கி பதிவிடுகின்றேன்.

மிகவும் அழகாகாகக் சொல்லியிருக்கின்றீர்கள் அர்ஜுன் . உங்கள் எழுத்தில் மனிதம் தெரிகின்றது . உங்களால் ஒரு குமாரைத்தானே காப்பாற்ரமுடிந்தது ? புதியதோர் உலகத்தைக் காண வெளிக்கிட்ட ஏதும்அறியா அப்பாவிகள் , தலைமைகளை நம்பி உரமானது ஏனோ கறைபிடித்த வரலாறாகவே இருக்கின்றது . இதில் புலி புரணம் வேண்டாம் அர்ஜுன் . எல்லா அமைப்புகளுக்குமே கறைகள் இருக்கின்றது . இந்த அப்பாவிகள் காப்பாற்ரப் பட்டார்களா என்றால் இல்லை என்ற பதிலே கண்முன்னே விரிகின்றது :( :( :( :( .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா...நன்றாக இருக்கிறது உங்கள் அனுபவப் பகிர்வு..தொடர்ந்தும் எழுதுங்கள்..இதை தனித்திரியாக இணைக்காமல் பாகம் ஒன்றின் கீழ் இணைத்திருந்தால் வாசிப்பதற்க்கு இலகுவாக இருந்திருக்கும்..

Link to comment
Share on other sites

  • 4 years later...

அந்த நாலு பேர்களின் படங்களை இன்று முகபுத்தத்தில் பார்க்க இந்த பதிவு நினைவு வந்தது .

நிர்வாகம் சம்மதித்தால் படத்தை மீண்டும் இணைகின்றேன் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

12208711_414498202082114_219609944837584

எப்படி வளர்ந்துவிட்டார்கள் .

ஒன்றாக பிறந்த நால்வரும் தாயும் .

கலிபோர்ணியாவில் இருந்து இந்திய வாழ்க்கைக்கு மாறிவிட்டார்கள் .

படத்தை போட கொஞ்சம் யோசனை இருந்தது இருந்தாலும் இணைத்துவிட்டேன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.