Jump to content

கோழி வறுத்த கறி


Recommended Posts

கோழி வறுத்த கறி

தேவையான பொருட்கள்

கோழிக்கறி ஒன்றரை கிலோ

இஞ்சி விழுது 7 தேக்கரண்டி

பூண்டு விழுது 5 தேக்கரண்டி

மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி

எண்ணெய் 120 மி.லி.

வெங்காயம் ஒரு கப்

தக்காளி அரை கப்

மல்லித்தூள் அரைத்தேக்கரண்டி

மிளகாய்த்தூள் அரைத்தேக்கரண்டி

ஏலப்பொடி அரைத்தேக்கரண்டி

கிராம்பு 2

பட்டை சிறுதுண்டு

புளி சிறுநெல்லிக்காய் அளவு

மிளகு ஒரு தேக்கரண்டி

எலுமிச்சைசாறு ஒரு மேசைக்கரண்டி

கொத்தமல்லித்தழை சிறிது

கறிவேப்பிலை சிறிது

உப்பு தேவையான அளவு

செய்முறை

கோழிக்கறியினைச் சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கி, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு விழுதில் பாதிப் பாதி எடுத்துக் கொண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு கறிகளின் மீது பூசி சுமார் 30 நிமிடங்கள் ஊற விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியைப் போட்டு மிதமான தீயில் லேசாகப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

கறித்துண்டுகளை தனியே எடுத்து வைத்து, எண்ணெய்யைத் தனியே வடித்து வைக்கவும்.

வெங்காயத்தை தோலுரித்து, நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

புளியை இரண்டு மேசைக்கரண்டி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். மிளகினைப் பொடி செய்து கொள்ளவும்.

தனியே எடுத்து வைத்த எண்ணெய்யை சூடாக்கி, கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும். வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும்.

மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு தக்காளியைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு, தீயைச் சற்று கூட்டி எண்ணெய் விடும் வரை வதக்கிக் கொள்ளவும்.

இத்துடன் மல்லித்தூள், ஏலப்பொடி, பட்டைப் பொடி, கிராம்பு பொடி அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இரண்டு மேசைக்கரண்டி புளிக்கரைசலை விட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும்.

பிறகு மசாலாவில் ஊற வைத்துள்ள கோழித்துண்டுகளைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து தீயின் அளவைச் சற்று கூட்டி கொதிக்கவிடவும்.

கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயின் அளவை மிதமாக வைத்து, நன்கு கிளறவும். ஈரம் போய், மசாலா கறியில் படிந்து இறங்கியவுடன் எலுமிச்சை சாறு தெளித்து, மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

கால அளவு 45 நிமிடங்கள்

பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு :lol: :P

அன்புடன் அஷ்வனா

Link to comment
Share on other sites

நன்றி கறி நல்லா :P

தான் இருக்கு அதுக்கு முதல் கறி சட்டிஅயை துக்கி கொண்டு ஒடுங்கோ வர போயினம் வெட்டுநிறுத்தினர் அறிமுகம் பகுதியில் இதை போட்டதுக்கு

:wink: :wink:

Link to comment
Share on other sites

சமையல் செய்து உண்டு சந்தோசமாய் இருக்கவும். ( என்னையும் நினைக்கவும்)

ஓ கே

நன்றி

Link to comment
Share on other sites

அறிமுகம் பகுதியில் இருந்து தலைப்பு இங்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

சமையல் செய்து உண்டு சந்தோசமாய் இருக்கவும். ( என்னையும் நினைக்கவும்)

ஓ கே

நன்றி

உங்களை நினைக்கமால? :P :P

சமையல் பகுதியில் இதை போட்டு இருக்கலாம்

சரி

Link to comment
Share on other sites

அஷ்வனா உங்கள் கோழிக்கறி நல்லா இருக்கு செய்முறைக்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.