Jump to content

சாதிவெறி இன்னும் தீரவில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதிவெறி இன்னும்

சத்தியமாய் தீரவில்லை

எங்கள் தமிழ் போராட்டமும்

அவ்வெறியை தீர்க்கவில்லை

பலநூறு மைல்கள்

பறந்து வந்தும் ஐயையோ

பார்கின்றோமே

சாதியது இங்குமல்லோ

ஆதியிலே சாதியில்லை

பாதியிலே வந்ததென்று

சேதியாகச் சொல்லுறாங்க

ஓதியே வைச்சாங்க

மோதித்தான் சாகிறாங்க

கோதித்ததான் பார்க்கிறாங்க

மீதியாய் ஒன்றும் இல்லை

சாதியால் அழிவுதாங்க.

பார்பனரோ கொண்டு வந்தார்

ஏற்பவரோ ஏற்றி விட்டார்

தீர்ப்பவரோ இன்று இங்கு

திண்டாட்டப் படுறாங்க

மோர்மிளகாய் செய்து தந்தால்

முட்டி மோதித் தின்னுவாங்க

ஊர்காரர் உள்ளே வந்தால்

எட்ட நில்லு என்கிறாங்க

சாதியில்லை என்று தான்

அம்பேத்கர் சொன்னாங்க

வாதியாக பெரியாரும்

அதைத்தானே சொன்னாங்க

நாதியாக்கி ஒளவையாரும்

பெண்சாதி ஆண்சாதின்னு

ஓதியே சொன்னாங்க

அதுவும் தெரியவில்லை

உண்மை நிலை புரியவில்லை

உயர்சாதி என்றாங்க

பண்ணும் நிலை பாவம் நீங்க

கோயிலுக்குள் போறாங்க

உண்ணும் உணவிலேயும்

சாதிதான் சொல்லுறாங்க

எண்ணும் நிலை என்றும் இல்லை

விண்ணாடம்தான் பேசுறாங்க

அவன் எங்கள் குடிமகனாம்

நான் உடையார் பரம்பரைதான்

இவன் அந்தப் பக்கமாம்

அவன் கரையோரப்பக்கமாம்

தான் அடிமை வேலைதானே

கழிவறைகள் கழுவினாலும்

நான் பெரிய சாதி என்று

செய்யும் தொழில் மறைக்கிறாங்க

ஈழச்சண்டை வந்த போது

சாதிச்சண்டை போனதென்றார்

சூழச் சண்டை இல்லை என்றார்

சாதிவெறி அகன்றதென்றார்

வீழாச்சாதி நெறி என்றே ஓதுறாங்க

பாதிதானும் போகலைங்க

வாழச் சாதி பேதங்கள்

சற்றியே வைக்கிறாங்க

புலம் பெயர்ந்து வந்துட்டாக

நலம் பார்த்து திரிகிறாங்க

குலம் வேறு என்கிறாங்க

குடீபோதை கொள்கிறாங்க

வலம் வந்தே கலியாணம்

சாதியாலே பேசுறாங்க

கலம் நிறையச் சீதனமும்

பலமாக வாங்குறாங்க

வந்திருந்த இடத்தினிலே

பிறந்து வந்த பிள்ளைகட்கு

சிந்திக்காச் சாதியேல்லாம்

உந்திக்கக் சொல்லுறாங்க

பந்தியிலே சாதிப்பெயர்

பத்திரமாய் ஊட்டுறாங்க

முந்தி நின்று கழிவறையை

இரவு பகல் கழுவுறாங்க

கடையினிலே சிப்பந்தி

நடையினிலே கால் நடையாய்

உடையினிலே கேவலமாய்

பார்தலே பரிதாபம்

சடையினிலே பேன் வழியும்

மூக்கிலே சளிமூட்டம்

வாடையிலே அசிங்கம் தான்

பெயர் மட்டும் பெரிய சாதி தான்

தரகர் வேலை தரத்தாங்க

சாதிவேற பார்க்கிறாங்க

ஊர்பேர் எல்லாங் கேட்பாங்க

படிக்காத மாப்பிள்ளைக்கு

காரோடு பொம்பிளைங்க

திமிராக வேண்டுவாங்க

பேரேடு கேட்பானுகங்க

வேறோடு விசாரிப்பாங்க

கறுப்பினம் வெள்ளையினம்

சாதியேதும் பார்க்காதுங்க

நிறத்தை விட சாதி என்னன்பாங்க

இணைத்தும் கூட நிற்பாங்க

மறுத்து விட முடியாமல்

அவன் பிள்ளை வாளர்ப்பாங்க

குறு குறுத்து திரிவாங்க

மெளனம் கொண்டு இருப்பாங்க

பேதி குடித்தவராய் அலைகிறாங்க

சாதி மான்கள் தானுங்க

ஓதி இருந்த பிள்ளை மாற்றினதில்

கல்யாணம் பண்ணிட்டாங்க

சேதி சொன்னால் வெட்கம் என்று

நாதியற்று உறைந்தாருங்க

மோதி முட்டி மனைவியிடம்

அடங்கி ஒடங்கி விட்டானுங்க

ஐயையோ அநியாயம்

என்றே உளறுகின்றார்

பொய்யையோ என் பிள்ளை

நடக்காது என்கின்றார்

மெய்யாகத் தன்பிள்ளை

கலப்பு கலியாணம்

செய்ததையே ஏற்காது

நிலவுக்கா ஓடப்போறானுங்க

மான்பதையே மாறவில்லை

மனித குலம் வளரவில்லை

என்பதையே சொல்லிடலாம்

தமிழன் மானம் சாதியில் தான்

தன்வினையால் தவிக்கிறது

இங்கு உள்ளோன் வளர்வதற்க்கு

பன்மையில் சாதியில்லா

பக்குவமே உணர்வானோ நம் தமிழன்

எழுதியவர்: "மணிக்கவி" சிவபாலு

http://www.vannithendral.net/index.php?opt...id=121&Itemid=1

Link to comment
Share on other sites

பாரினில் தமிழன் தான்

ஓர் இனம்..!

மனுக்குல உண்மைகள்

மறந்தும் சிலர்

பார்ப்பர்ணியம் உச்சரித்தே

சாதிக்கத் துடிக்கிறார்

இன்னும் தமிழருள் பிரிவினைகள்..!

பெரியார் ஓதாமல்

ஓதிவைத்தான் வேற்றுமைகள்

சிறுமைகள் காட்டி

மதத்தால் ஒதுக்கி

பேசியது என்னவோ

"வேண்டாம் பிரிவினை"..!

உதாரணம் சொல்ல

ஒரு அம்பேத்கார்

யாரவர்..??!

கேள்விகள் முளைக்க

விடைகள் வரும்

"ஒடுக்கப்பட்டவர்"

இப்படித்தான் இன்னும்

அடையாளம் காவுகிறார் தந்திரமாய்..!

இன்னது இல்லையென்று

அத்தனையும் உச்சரிச்சு

மறைமுகமாய் அனைத்தும் காட்டி

சாதிக்க நிற்கின்றார் சிலர்..!

போடும் கோஷம் என்னவோ

"வேண்டாம் ஒழிப்போம்"..!

கேவலம்...

வேஷங்களை கலைக்கா

கோமாளிகள் தாமென்ற

உண்மை உணரவில்லை அவரும்..!

தமிழனவன் திராவிடன்

தென்னகம் அவன் வாழ்நிலம்

வஞ்சிக்க வந்த அந்நியம் கண்டு

ஆரியம் திராவிடம் வகுந்து

கொண்ட வீரம் தொலைத்து

மருண்டதேனோ..?!

பிரிவினைகள் பாகுபாடுகள்

தந்ததென்று

இன்னும் வரலாறு வரைவதேனோ..?!

மறந்திட வேண்டியவை

மறுபடி வரலாற்றில்

மதிக்கப்படவும் வேண்டுமோ...?!

பார் இன்னும்

பார்ப்பர்ணியம் உச்சரிக்கும்

கூட்டம் இருக்குது...

பெரியார் வழியில்

வந்த சிறுமைகள் அவை

வாய் கிழிய உச்சரிப்பது

இன்னும் என்னவோ

வேற்றுமை தான்..!

பேடிகள்

இந்தக் குள்ளநரிகள்

கையறுத்து

அழிப்போம் மீளப்பதியும்

தந்திரச் சான்றுகள்..!

திராவிட உலகில்

தமிழன் ஓர் மனித இனம்

அதுவே உண்மை...

சாதித்து நின்று

கரம் கோர்ப்போம் ஓரணியில்

மற்றதுகள் மறுப்போம்..!

வடிவங்கள் மாறினும்

புரட்சியாய் தோன்றிலும்

பலரும் போதிப்பது என்னவோ

ஏற்றமும் தாழ்வும்..!

வேண்டாம் அது

தமிழரும் மனிதராகி

சமத்துவம் காணுவோம்

நமக்குள்ளேயே...!

வேண்டாத உச்சரிப்புகள்

தவிர்ப்போம்...

மறந்தவை மரிக்கட்டும்..

நிரந்தரமாய்..! :P :idea:

Link to comment
Share on other sites

நிதர்சன் இணைப்புக்கு நன்றி. குருவிகள் உங்கள் கவிக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

மேற்கோள்:

சாதிவெறி இன்னும்

சத்தியமாய் தீரவில்லை

எங்கள் தமிழ் போராட்டமும்

அவ்வெறியை தீர்க்கவில்லை

இந்த வரிகளில் உடன்பாடு இல்லை எனக்கு-

இதை மாற்ற கடுமையா நடவடிக்கைகள் எடுத்து இருக்கு-என்று நினைக்கிறேன் - . . . .

எங்களின் உண்மையான போராட்டமும் தலைமையும்!!

திருந்தவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஒரு சிலர் செயற்பாடுகளை வைத்து -போராட்டத்தை குறை சொல்லி என்ன ஆகும்? :roll: :roll:

நன்றி இணைப்புக்கு நிதர்ஷன்! 8)

Link to comment
Share on other sites

குருவிகள் உங்கள் கவியும் அற்புதம்-ரசித்தேன் - நன்றி! 8)

ஆனாலும் -ஒரு நெருடல் - ஏன் அடுத்தவர் இணைப்புக்கும்- கவிதைக்கும் - இடையில் - உங்கள் ஆக்கத்தையும் சொருகிறீங்க?- நல்லாவா இருக்கு?

கருத்தும்- விமர்சனமும் மட்டும் சொல்வதே பொருத்தப்பாடானது என்பது- எனக்கு தோன்றும் எண்ணம்! 8)

Link to comment
Share on other sites

சம்பந்தப்பட்ட தலைப்புக்கும் ஆக்கத்துக்கும் பொருத்தமா இருந்திச்சா எனவே இங்கு வைத்துக் கொண்டோம்..! செருகலில்லை...என்றே நோக்கலாம்..! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கேயோ கேட்ட கவிவரியொன்று....

...

சாதிவெறி

தற்காலிகமாக

உறைநிலையிலாம்!

......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ கேட்ட கவிவரியொன்று....

...

சாதிவெறி  

தற்காலிகமாக  

உறைநிலையிலாம்!

......

இதை பத்திரிகையில் வரும் மணமக்கள் தேவைகளில் கண்டு கொள்ளலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

இங்கே இந்த கவிதையை போட்டது கவியின் அழகை இரசிப்பதற்கோ அதை விமர்சிக்கவோ அல்ல. அந்த கவிக்குள் அடங்கியிருக்கும் சாதீயம் என்ற ஒன்றைப்பற்றி கதைக்கவே. குருவிகளின் கருத்துப்படியும் பெரியார் பிரிவினையை வளாத்திருக்கலாம், அம்பேத்கார் சொல்லாமல் விட்டிருக்'கலாம் ஆனால் யார் இவர்கள்? ஈழத்திலே சாதியத்தை இவர்கள் வளர்த்தார்களா? இல்லை இவர்களது பேச்சை ஈழத்தவர்கள் கேட்கும் நிலையிருந்து இந்த சாதீயத்தை வழக்கில் கொண்டு வந்தார்களா?

வர்னன்

கவிதையிலே ஈழப்போராட்டத்தை யாரும் குறை கூறவில்லை. ஆனால் அந்த போராட்டம் வந்த பின் சாதீயம் அடியோடு அழிக்கப்பட்டதாகவே பலர் கருதினர் ஆனால் அது புலத்தில் கூட தொடர்கின்றது என்பதை காட்டவே அந்த வரிகள் அமைந்திருந்தன. கவிதை எப்படியோ..அது இருக்கட்டும்..ஆனால் புலத்திலும் தாயகத்திலும் சாதிவெறியில்லையா? ஏன் இந்த பத்திரிகைகள் புரட்சி புதமை என்று சொல்லி விட்டு மணமகன் மணமகள் தெரிவுப்பகுதியில் மட்டும் சின்ன தாய்....______________________________ இந்த சாதியிலிருந்து எதிர்பார்க்கபப்டுகின்றனர் என்று போடுகின்றனர்? சாதி வெறியை தூண்டுவது எமது சமூகமாக இருக்கின்றது. இந்த கவிதையை யாழில் போட்டேன் ஆனால். அரட்டை அடிப்பதும் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடவோருமே அதிகம் அவர்கள் அதிலே நேரத்தை செலவு செய்கின்றனர். இதை பற்றி அதாவது முக்கியமான எங்கள் சமூக பிரச்சினைகளில் ஒன்றைப்பற்றி இவர்கள் அக்கறைப்படவில்லை. அதன் காரணம் என்ன?

இவர்களும் சாதீயத்தை ஆதரிக்கின்றனாரா? அல்லது சமூகம் எப்படி போனால் எனக்கென்ன என்று நினைக்கின்றார்களா? அல்லது இது பற்றி கருத்து வைத்து களைத்து விட்டார்களா? புரியவில்லை... ஆண் பெண் என்ற இரு பாலை தவிர தமிழர்களில் மட்டுமல்ல எந்த இனத்திலும் சாதிகள் இல்லை என்ற நிலையை உருவாக்க இங்கிருக்கும் இளைஞர்கள் ஏன் முன்வரமாட்டேன் என்கின்றனர்.? தாய் தந்தையரை போல இவர்களுக்கும் சாதி வெறி ஏறிவிட்டதா? தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நிதர்சன்.

சாதியத்தைப் பற்றி விவாதிப்பதை விட அதை செயலிழக்கச் செய்வதே சாலச் சிறந்தது. சொல்லப்போனால் இன்று வரை புலிகள் சாதியத்தை விவாதித்ததில்லை. ஆனால் அவற்றை மழுங்கடிக்க முயற்சி செய்திருக்கின்றார்கள்.

ஏனென்றால் அது தான் எமக்குத் தேவையும் கூட. இந்தியாவில் சாதிகளைப் பற்றி கரு த்தோட்டம் கொண்டு செல்லப்பட்டமையால் தான் பல சாதிக்கட்சிகள் தோற்றம் பெற்றன. எனவே சாதிகள் குறித்தான விவாதமோ, அல்லது அது குறித்தான கருத்துக்களோ சாதிகள் பற்றிய கண்ணோட்டத்தை புதுப்பிற்கும்.

Link to comment
Share on other sites

உங்கள் கோபம் புரிகின்றது நிதர்சன். சாதி என்பது எப்படி வந்தது என்றால் அவர் அவர் செய்த தொழில்களின் நிமிர்த்தமே வந்தது என்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் என்ன தொழிலை வைத்து என்ன சாதி என்று எப்படி பிரிப்பது என்று தான் எனக்கு விளங்கவில்லை?

இங்கு பிறந்து வளரும் சிறுவர்கள் கூட சிலசமயங்களில் சாதியை பற்றி கதைக்கும்போது சிரிக்க தான் தோன்றுகின்றது. பிள்ளைகளுக்கு எது தேவையோ அதை கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் முன் வருவதை பார்க்கிலும் ஒரு சதத்திற்கும் பிரயோசனப்படதா இந்த சாதியை பற்றி பிள்ளைகளுக்கு வகுப்பு எடுப்பது தான் நகைச்சுவையாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

உங்கள் கோபம் புரிகின்றது நிதர்சன். சாதி என்பது எப்படி வந்தது என்றால் அவர் அவர் செய்த தொழில்களின் நிமிர்த்தமே வந்தது என்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் என்ன தொழிலை வைத்து என்ன சாதி என்று எப்படி பிரிப்பது என்று தான் எனக்கு விளங்கவில்லை?

இங்கு பிறந்து வளரும் சிறுவர்கள் கூட சிலசமயங்களில் சாதியை பற்றி கதைக்கும்போது சிரிக்க தான் தோன்றுகின்றது. பிள்ளைகளுக்கு எது தேவையோ அதை கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் முன் வருவதை பார்க்கிலும் ஒரு சதத்திற்கும் பிரயோசனப்படதா இந்த சாதியை பற்றி பிள்ளைகளுக்கு வகுப்பு எடுப்பது தான் நகைச்சுவையாக இருக்கின்றது.

அப்பிடி போடுங்க அரிவாளை - ரமா :P

நிதர்சன் இதையும் வாசியுங்க- 8) தவறு எங்கே இருக்கு என்று கண்டு கொள்வீர்கள்!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எங்கடை சனம் சாதி இல்லை எண்டால் தங்கடை சொந்தக்காறரை விட்டு தாங்கள் விலகி விடுவம் எண்டும் தங்கள் தங்கட சாதி பெரிசு சின்னன் எண்டும் ஒரு விதமான அடிப்படைவாதப் போக்கிலை தான் இருக்குதுகள்... இதை இனி வாற தலைமுறை தான் மாத்த வேணும்... ஆனால் புலம் பெயர்ந்து போயும் மாறல்லை எண்டு பாத்தா....

சிரிப்பாத் தான் இருக்கு.... அங்கை போய் எங்கடை மொழியை மறந்தாலும் சாதியை மறக்கல்லை....... வாழ்த்துக்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியத்தைப் பற்றி விவாதிப்பதை விட அதை செயலிழக்கச் செய்வதே சாலச் சிறந்தது. சொல்லப்போனால் இன்று வரை புலிகள் சாதியத்தை விவாதித்ததில்லை. ஆனால் அவற்றை மழுங்கடிக்க முயற்சி செய்திருக்கின்றார்கள்.

ஏனென்றால் அது தான் எமக்குத் தேவையும் கூட. இந்தியாவில் சாதிகளைப் பற்றி கரு த்தோட்டம் கொண்டு செல்லப்பட்டமையால் தான் பல சாதிக்கட்சிகள் தோற்றம் பெற்றன. எனவே சாதிகள் குறித்தான விவாதமோ, அல்லது அது குறித்தான கருத்துக்களோ சாதிகள் பற்றிய கண்ணோட்டத்தை புதுப்பிற்கும்.

தூயவன் மிக பிந்திய பதிலை தருவதையிட்டு மனம்வருந்துகின்றேன்.

சாதியத்தை பற்றி விவாதிப்பதில் பயனில்லை என்றே வைத்துக் கொள்ளுவோம். ஆனால் அதை அப்படியே விடுவதில் என்ன பயன்? நிறு பூத்த நெருப்பாய் தமிழர்களுக்குள் சாதிவெறி இன்னமும் இருக்கின்றது. புலிகள் அதைப்பற்றி விவாதிக்க வில்லை ஆனால் அதற்கெதிராக செய்ற்ப்படுகின்றனர். ஆனால் புலத்தில் யார் இதை செயற்ப்படுத்துவார்கள்? இந்தியாவில் சாதி பற்றி விவாதம் செய்ததால் கட்சிகள் உருவாகவில்லை. மாறாக சாதிக்கெதிராக பிரச்சாரம் செய்யும் போது அக்கட்சிகள் முளைத்தன. அன்று சாதியை எதிர்ந்து நின்றவர்கள் இன்று அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் இன்னும் இனிமேல் ஒரு போதும் இந்தியாவில் சாதியை அழிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தியர்களோடு ஒப்பிடுகையில் ஈழம் மிகவும் பரவாயில்லை. ஆனாலும் இன்னும் ஈழத்தில் பல மாற்றங்கள் வரவேண்டும். அது ஈழத்தில் என்பதை விட பல்லாயிரம் மயில்களுக்கப்பால் புகலிடம் தேடி இங்கு வந்திருக்கும் நாங்கள் சாதியை மட்டும் கையில் பிடித்து கொண்டு கலாச்சாரம், மொழி,பண்பாடு என்பவற்றை காற்றிலே பறக்க விட்டுவிட்டேம். இதைப்பற்றி தான் கதைக்கலாம் என்றேன். தொழில் நிமிர்த்தம் சாதி பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் தொழில்களுக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு? என்று புரியவில்லை. காலம் காலமாக இருந்து வரும் இந்த சாதி முறையை எமது தலைமுறை ஏன் இல்லாதொழிக்க முயலக்கூடாது என்பதே எனது ஆதங்கம்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.