Jump to content

சினிமாவுக்காக காதலியை இழந்தேன்: ஆர்யா மனம் திறக்கிறார்


Recommended Posts

சினிமாவுக்காக காதலியை இழந்தேன்: ஆர்யா மனம் திறக்கிறார்

உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழ்ப்பட உலகில் காலடி எடுத்து வைத்தவர் ஆர்யா.

இந்த படம் வெளியாவதற்கு முன்பே இவர் நடிப்பில் வெளிவந்த `அறிந்தும் அறியாமலும்' படம் இவருக்கு தனி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.

`ஒரு கல்லூரியின் கதை'யில் வித்தியாசமான வேடம் ஏற்றார். அடுத்து `கலாபக்காதலன்', `பட்டியல்', படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன. கவுதம் மேனன், ஜீவா போன்ற பிரபல டைரக்டர்களே இவரை வைத்து படம் எடுக்க தயாராக இருக்கிறார்கள். தமிழ்ப்பட உலகின் முக்கிய கதாநாயகர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள ஆர்யாவிடம் அவர் கடந்து வந்த பாதை பற்றி கேட்டபோது...

"என் அப்பா ஓட்டல் வைத்து நடத்துகிறார். படிப்பதற்காக கேரளாவில் இருந்து வந்தேன். ஆரம்பத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டும் தெரியாது. உலகம் அறியும் விளையாட்டு வீரனாக பெயர் வாங்கவேண்டும் என்பதே எனது லட்சியமாக இருந்தது.

விளையாட்டில் நான் காட்டிய ஆர்வம் காரணமாக இத்தாலியில் நடந்த `அதலெட்டிக்' பயிற்சியில் கலந்து கொள்ள தேர்ந்து எடுக்கப்பட்டேன். 10-வது வகுப்பு படிக்கும் போதே, `பாக்கெட் மணி'க்காக மாடலிங் செய்யத் தொடங்கி னேன்.

கல்லூரியில் படித்தபோது, `மாடலிங்'கில் தனி கவனம் செலுத்தினேன். என்றாலும், அப்போது எனக்கு சினிமா பற்றி எந்த எண்ணமும் இல்லை. என்னுடன் `மாடலிங்' செய்த பெண்கள் அனைவரும் சினிமா கனவுகளுடனேயே இருந்தார்கள். அவர்களின் தூண்டுதலால் எனக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது.

இதற்கிடையே என்ஜினீயரிங் படிப்பை முடித்து சென்னையில் உள்ள ஒரு `சாப்ட்வேர்' நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது இடை இடையே சினிமா கம்பெனிகளுக்கு சென்று நடிக்க சான்ஸ் கேட்டேன். டைரக்டர் ஜீவாவை சந்தித்தேன். அவர் 100 பேருக்கு `ஸ்கரீன் டெஸ்ட்' நடத்தினார். அதில் நான் தேர்வு பெற்றேன்.

6 மாதத்தில் முடிய வேண்டிய எனது முதல் படம் 3 வருடங்களாக வெளி வரவில்லை. இந்த நேரத்தில், எனக்கு வேலைக்காக அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தது. என்றாலும் நான் நடித்த படத்தை முடித்து கொடுக்காவிட்டால் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அமெரிக்கா போகவில்லை.

கல்லூரியில் படித்தபோது எனக்கும் காதல் அனுபவம் ஏற்பட்டது. என்னை ஒரு பெண் விரும்பினாள். நானும் காதலித்தேன். படிப்பு முடிந்த பிறகு கிடைத்த வேலைக்கு சரியாக செல்லாமல், வெளிநாட்டு வேலை வாய்ப்பையும் தள்ளி வைத்து விட்டு முதல் படம் வெளிவருவதை எதிர்பார்த்து அந்த கனவிலேயே இருந்தேன். எத்தனை வருடங்கள்தான் அவள் எனக்காக காத்திருப்பாள். என் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாள். காதலையும், காதலியையும் தியாகம் செய்து விட்டு சினிமாவில் நல்ல நேரத்துக்காக காத்திருந்தேன். அது வீண் போகவில்லை.

`கலாபக் காதலன்' படப்பிடிப்பின்போது, நடிகர் விக்ரம் தனது குழந்தைகளுடன் அங்கு வந்தார். `என் குழந்தைகள் உங்கள் விசிறிகள்' என்று சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு எனக்கு கொஞ்சம் கடன் இருந்தது. இப்போது அதை கொடுத்து விட்டேன். பழைய வீட்டில் தான் வசிக் கிறேன். இன்றும் என் நண்பர் களை மறக்கவில்லை. இப் பொழுதும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை பச்சையப்பா கல்லூரியில் `புட்பால்' ஆடுகிறேன். தியேட்டரில் நண்பர்களுடன் சென்று படம் பார்க்கிறேன்.

ரசிகர்களிடம் நல்ல நடிகன் என்று பெயர் வாங்க முடிந்த வரை உழைக்கிறேன். நல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது ...என்றார் ஆர்யா.

maalaimalar.com

Link to comment
Share on other sites

கல்லூரியில் படித்தபோது எனக்கும் காதல் அனுபவம் ஏற்பட்டது. என்னை ஒரு பெண் விரும்பினாள். நானும் காதலித்தேன். படிப்பு முடிந்த பிறகு கிடைத்த வேலைக்கு சரியாக செல்லாமல், வெளிநாட்டு வேலை வாய்ப்பையும் தள்ளி வைத்து விட்டு முதல் படம் வெளிவருவதை எதிர்பார்த்து அந்த கனவிலேயே இருந்தேன். எத்தனை வருடங்கள்தான் அவள் எனக்காக காத்திருப்பாள். என் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாள். காதலையும், காதலியையும் தியாகம் செய்து விட்டு சினிமாவில் நல்ல நேரத்துக்காக காத்திருந்தேன்.

அடபாவமே ... கவலை வேண்டாம் ஆர்யா உங்கள் ரசிகைகள் இனி உங்கள் திருமணம் செய்ய தேடி வருவார்கள் :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.