Jump to content

கண்ட நாள் முதல்


Recommended Posts

கண்ட நாள் முதல்

Kanda%20Naal%20Muthal_01.jpg

நண்பனுக்கு மனைவியாகப்போகிறவள் சந்தர்ப்பவசத்தால் தனக்கு காதலியானால் அந்த நண்பன் - காதலன் - காதலி இம்மூவரின் மனநிலை எப்படி இருக்கும்? கண்ட நாள் முதலின் ஒருவரிக்கதை இதுதான்.

குழந்தை பருவத்திலிருந்தே சதா சண்டை போட்டுக்கொள்ளும் பிரசன்னா - லைலா மோதல் கல்லூரி காலத்திலும் தொடர்கிறது. பார்க்கும் போதெல்லாம் இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை - சண்டை தான். இந்நிலையில் லைலாவை பெண் பார்க்க வருகிறார் பிரசன்னாவின் உயிர் நண்பனான கார்த்திக்குமார். லைலா தான் தன் நண்பன் பார்க்க வந்த பெண் என்பது தெரிந்தவுடன் லைலாவைப் பற்றி தன்னால் முடிந்தவரை எடக்கு மடக்காக பேசி கல்யாணத்தை நிறுத்தப்பார்க்கிறார் பிரசன்னா. ஆனால் தொட்டதெற்கெல்லாம் பட்டாசாக வெடிக்கும் லைலா இந்தக் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காகவே தன் குணத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு சாந்தமாக கார்த்திக் முன் உலாவருகிறார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் லைலாவை தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு அமெரிக்கா சென்று விடுகிறார் கார்த்திக்.

இந்நிலையில் தன் கல்யாணம் தடைபட பிரசன்னாதான் காரணம் என்று நினைத்து அவர் மீது மேலும் ஆத்திரப்படுகிறார் லைலா. எரிகிற நெருப்பில் எண்ணெய் விடும் விதமாக லைலாவின் தங்கை வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். தான் எடுத்த முடிவிற்கு பிரசன்னா கொடுத்த அறிவுரை தான் காரணம் என்று கூறுகிறார் தங்கை. ஆக பிரசன்னாவின் மீதான லைலாவின் கோபம் பலமடங்கு அதிகரிக்கிறது. இளைய மகள் வீட்டை விட்டு ஓடியதால் லைலாவின் அம்மா ரேவதி இதய நோயால் பாதிக்கப்படுகிறார். இந்நிலையில் பிரசன்னா நிதானம் இழக்காமல் லைலா குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்கிறார்.

நண்பர்களாக பழக ஆரம்பிக்கும் லைலா பிரசன்னா இருவரும் ஒரு கட்டத்தில் காதல் கொள்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலை சொல்ல இருவருமே தயங்கும் போது கார்த்திக் மீண்டும் இந்தியா வருகிறார். லைலாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். கார்த்திக்கின் இந்த முடிவால் இரு குடும்பத்தாரும் மகிழ்ச்சியடைகிறார்கள். திருமண ஏற்பாடுகள் எல்லாம் நடக்கின்றன. பிரசன்னா தன் காதலை நண்பனுக்காக விட்டுக்கொடுக்க, லைலா - கார்த்திக் கல்யாணம் நடந்ததா என்பதே கிளைமாக்ஸ்.

அருமையாக நடித்திருக்கிறார் பிரசன்னா. லைலாவுடன் முதலில் சண்டை போடும் காட்சிகளாகட்டும், கார்த்திக்கிடம் லைலாவைப் பற்றி போடுக்கொடுப்பதாகட்டும், கல்யாணம் நின்று போன சூழ்நிலையில் லைலா குடும்பத்தாருக்கு உதவி செய்வதாகட்டும் - கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் பிரசன்னா.

அடங்காப்பிடாரியாக லைலா. ஆக்ரோஷம், பிடிவாதம் என எல்லாம் கலந்த கலவை. நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். தன் காதலை பிரசன்னாவிடம் சொல்லத் தயங்கும் காட்சிகளில் தனக்கு எந்த அளவிற்கு நடிக்க வரும் என்பதை அற்புதமாக நிரூபித்துள்ளார்.

புதுமுகம் கார்த்திக்குமார் - இவரைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. பொம்மை மாதிரி வந்து போகிறார். லைலாவின் அம்மாவாக ரேவதி மற்றும் கார்த்திக்கின் அம்மாவாக லஷ்மி. கொஞ்சமாக வந்தாலும் இருவருமே தாங்கள் நடிப்பில் எத்தனை சீனியர்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.

இசை யுவன்ஷங்கர்ராஜா. பாடல்கள் ஒக்கே ரகம். கண்ட நாள் முதலாய் பாடலில் மட்டும் முத்திரை பதிக்க முயன்றுள்ளார் யுவன். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். தயாரிப்பு பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்கம் ப்ரியா.. தமிழ் திரையுலகிற்கு கிடைத்துள்ள புதிய பெண் இயக்குனர். தெரிந்த கதை என்றாலும் அதை அழகாக எடுத்திருக்கும் விதத்திற்காகவே ப்ரியாவிற்கு ஒரு சபாஷ்.

மீனா / தமிழோவியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இந்த படம் பார்த்தேன்.. லைலாவின் நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு.

Link to comment
Share on other sites

நானும் படம் பார்த்தன் கதை என்னவோ Mills and Boon காதல் கதையை கொப்பி பண்ணின மாதிரி இருக்கு ஆனா வடிவா கொப்பி பண்ணேல்லை எனறு நான் நினைக்கிறன்

Link to comment
Share on other sites

நானும் படம் பார்த்தன் கதை என்னவோ Mills and Boon காதல் கதையை கொப்பி பண்ணின மாதிரி இருக்கு ஆனா வடிவா கொப்பி பண்ணேல்லை எனறு நான் நினைக்கிறன்

கொப்பி பன்னின மிசின் சரி இல்லையோ தெரியா?

அல்லது மை முடிந்து விட்டதா கொப்பி பன்னுற மிசின்ல?

Link to comment
Share on other sites

ம்ம் படம் பார்த்தேன். பறவாய் இல்லை. படம் பார்க்கலாம். லைலா பிரசன்னாவின் சண்டைகள் இரசிக்க கூடியதாக இருந்தது.

Link to comment
Share on other sites

வழக்கமாக பிரபலமானவர்களின் மசாலாப்படங்களை பார்ப்பதில் இந்த படத்தை தவற விட்டுவிட்டேன். இந்த படம் சுப்பர் என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை நன்றாக இருக்கின்றது ... ரசித்து பார்க்க முடிகின்றது. மென்மையான கதை. அதனால் தான் விமர்சனத்தை இப்போது தேடி பிடித்து இணைத்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.