Jump to content

சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!!


Recommended Posts

சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!!

[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:29 ஈழம்] [ம.சேரமான்]

சிறிலங்கா அரசாங்கத்து மருத்துவர்களும், செவிலியர்களும் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேல் உதவ வேண்டும் எனில் அது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயலலிதா அளித்த நேர்காணல்:

தமிழகத்துக்கு இலங்கை அகதிகள் வருவது எமக்கு 1983 ஆம் ஆண்டு நிலைமையை நினைவுபடுத்துகிறது. அப்போது பெருந்தொகையானோர் அகதிகளாக வந்தனர்.

நாளாந்தம் மேலும் மேலும் அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அகதிகள் வருகை மூலம் அங்கே அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்று தெரிகிறது என்றார்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பிலான கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில்:

சிறிலங்கா அரசாங்கம் என்ன கோரிக்கைகளை முன்வைக்கிறது என்பதைப் பொறுத்தே உதவிகள் அமைய வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களுக்குத் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேலான உதவிகள் எனில், அது குறித்து நாம் மேலதிகமாக யோசிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

ஈழத் தமிழர் பிரச்சனையில் கடும் போக்கை கடைபிடிப்பவர் ஜெயலலிதா என்று இந்து போன்ற ஆங்கில ஊடகங்கள் அவரைச் சுட்டிக்கு ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நசுக்கி நச்சுக்கருத்துகளை பரப்பி வரும் நிலையில் ஈழத் தமிழர்களின் யதார்த்த நிலைமையை புரிந்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துகள் இந்திய அரசியலில் முக்கியமானவையாக கருதப்படுகிறது என்று சென்னை ஊடகவியலாலர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கவர்ச்சிக்காகவும், வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் கட்சியுடன் இணைப்பதற்கு ஏதுவான தற்காலிக சூழலை உருவாக்குவது போன்ற பிரேமையை ஏற்படுத்தும் இரகசியத் திட்டத்துடனுமே, ஜெயலலிதா இத்தகைய திடீர் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக, ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

www.puthinam.com

Link to comment
Share on other sites

தற்போது தமிழகத்தில் தமிழீழ மக்களின் போரட்டத்திற்கு மிகுந்த ஆதரவு காணப்படுகின்றது, ஆதலால் ஜெ.ஜெ ம், தனது கொள்கையில் மாற்றம் கொண்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளின் சார்பு தமிழீழ போரட்த்திற்கு ஆதரவாக இருப்பதால், மத்தியிலும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகின்றது. ஆதலால் இவ் ஆண்டு தமிழீழ மக்களின் விடுதலையை தீர்மானிக்கும் ஆண்டாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

வினித் எழுதியது:

இருப்பினும், மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கவர்ச்சிக்காகவும், வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் கட்சியுடன் இணைப்பதற்கு ஏதுவான தற்காலிக சூழலை உருவாக்குவது போன்ற பிரேமையை ஏற்படுத்தும் இரகசியத் திட்டத்துடனுமே, ஜெயலலிதா இத்தகைய திடீர் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக, ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இணைக்கும் போது புரியாமல் 5.30மணி நேரத்தின் பின்னாவது புரிந்திருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

********

எப்ப பார், ஏதாவது குறைகண்டு பிடிக்கிறதே வேலையா போச்சு.

-அங்க பாத்தா, பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு அனுதாபம் தெரிவிப்பீர் எண்டு பாத்தா சம்பந்தம்மில்லாமல் ஏஜன்சிமாரை சாடுறீர்.

-கடத்தப்பட்ட பெண்பற்றிய ஒரு செய்திக்கு அனுதாபம் தெரிவிப்பீர் எண்டு பாத்தா ஆதாரம் கேக்கிறீர்.

ஐயா சொல்றன் என்று கோபிக்க வேண்டாம், ******* அது தான் உமக்கு தமிழ் உணர்வு மிச்சம் கம்மியாக இருக்கு.

********

கருத்துக்களை கவனத்துடன் முன்வைக்கவும் அவை சிலநேரம் சக கள உறுப்பினரை தனிப்பட விமர்சிப்பதாக அமையலாம் - மதன்

Link to comment
Share on other sites

வினித் எழுதியது:

இருப்பினும், மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கவர்ச்சிக்காகவும், வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் கட்சியுடன் இணைப்பதற்கு ஏதுவான தற்காலிக சூழலை உருவாக்குவது போன்ற பிரேமையை ஏற்படுத்தும் இரகசியத் திட்டத்துடனுமே, ஜெயலலிதா இத்தகைய திடீர் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக, ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இணைக்கும் போது புரியாமல் 5.30மணி நேரத்தின் பின்னாவது புரிந்திருக்கின்றது.

யாருக்கு புதினதிக்க? இல்லை எனக்க?

செய்தி பார்த்த பின் தானே ஆய்வாளர்கள் கருத்து கூற முடியும்

இதன் முலம் தெரிகிறது நீங்கள் யார் எண்டு :!: :!:

நான் முதல் செய்தி பதியும் போது புதினத்தில் கூட இது இனைக்க பட வில்லை பின் தான் மேலதிக இனைப்பு எண்டு போட்டு இருக்கு தீக்கோழி பற்றி

(மேலதிக இணைப்பு) சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!!

http://www.eelampage.com/

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

Link to comment
Share on other sites

ஞாயம் என்றும் வெல்லும் செல்வி ஜெயலலிதா அதற்கு விதிவிலக்கல்ல....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.