Jump to content

போரட்டத்திற்கு பிள்ளைகளினை அனுப்பும் பெற்றோர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போரட்டத்திற்கு பிள்ளைகளினை அனுப்பும் பெற்றோர்கள்

தனது மகளை போராட்டத்திற்கு வழி அனுப்பிவைத்த தந்தை. நிதர்சனம் இணையத்தளத்தில் வந்தசெய்தி.

http://www.nitharsanam.com/?art=14948

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றித் திலகமிட்டு பிள்ளைகளை புலிகளிடம் ஒப்படைத்த தமிழ்ப் பெண்கள்!

[செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2006, 14:42 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]

சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பை எதிர்த்தும் தமிழீழ தேசத்தின் விடிவை விரைவாக ஏற்படுத்துவதற்காகவும் தங்களது பிள்ளைகளை வெற்றித் திலகமிட்டு விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்து வரும் நிகழ்வுகள் தமிழீழத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கிளிநொச்சி அக்கராயனைச் சேர்ந்த திருமதி தியாகராசா என்ற தாய் தனது மகளை போராட்டத்தில் இணைத்துள்ளார்.

அக்கராயன் வலயப் பொறுப்பாளர் குட்டிமணியிடம் நேற்றுக் காலை தனது மகளான ரி.ஜெனிதாவை அவர் விடுதலைப் போராட்டத்திற்காக இணைத்தார்.

"தமிழீழ விடுதலைப் போராட்டம் நீடித்துச் செல்லக்கூடாது. விரைவில் தமிழீழ தனியரசை நாங்கள் அடையவேண்டும். அதற்காக எங்கள் தலைவரின் கையை நாம் பலப்படுத்த வேண்டும். அனைத்துத் தாய்மாரும் தமது பிள்ளைகளைப் போராட்டத்தில் முன்வந்து இணைந்து தலைவரின் கையை பலப்படுத்த வேண்டும். அதற்காகவே நான் எனது மகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்வந்து இணைக்கின்றேன்" எனவும் வலயப் பொறுப்பாளர் குட்டிமணியிடம் திருமதி தியாகராசா தெரிவித்தார்.

இதேபோல் மன்னார் மாவட்டத்தின் பலாப்பொருமாள் கட்டு வட்டக்கண்டல் எனும் பகுதியில் வசித்து வரும் சண்முகம் காளியம்மா எனும் இத்தாயார் தனது ஆறு பிள்ளைகளில் ஒருவரை தாயக விடுதலைப் போருக்காக தானாகவே முன்வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைத்துள்ளார்.

பிரபாகரன் எனும் மகனை நேற்று முற்பகல் 9.00 மணியளவில் மன்னார் மாவட்ட அரசியல்துறை செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரிடம் இத்தாயார் விடுதலைப் போருக்காக அனுப்பிவைத்ததோடு தமிழ் பெண்களின் வீர வரலாற்றை நினைவுபடுத்தும் முகமாக மகனுக்கு நெற்றி திலகமிட்டு போருக்கு போய் வருமாறு விடை கொடுத்தனுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.

தன் மகனை போருக்கு அனுப்பிய அத்தாயார் கூறியதாவது:

எனக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றார்கள். எனது கணவர் மன்னார்ப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகி சுகவீனமுற்றிருந்து 1997 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவர் உயிரோடு இருக்கும் போது இரண்டு பிள்ளைகளை தேச விடுதலைப் போருக்கு அனுப்பவேண்டும் என்று கூறிவருவார். அவர் இறந்ததன் பின்புதான் எனது பிள்ளைகளுக்கு போராடும் வயது நிரம்பியதால் இப்போது நான் எனது மகனை இயக்கத்தின் இணைக்கிறேன்.

விடுதலைப் போருக்காக ஒரு பிள்ளையைப் பெற்ற பெற்றோர்கள் கூட தமது பிள்ளைகளை இணைத்துள்ளார்கள். எனவே ஆறு பிள்ளைகளைப் பெற்ற நான் ஒரு பிள்ளையேனும் போராட்டத்திற்கு அனுப்பாவிட்டால் தேசம் என்னை மதிக்காது.

எனவேதான் நான் இப்போது எனது 19 வயது நிரம்பிய மகனை இணைத்துள்ளேன். தொடர்ந்து வரும் காலத்தில் விடுதலைப் போர் உக்கிரமடையும் நிலை உருவாகுமானால் எனது 20 வயது நிரம்பிய மற்ற மகனையும் போருக்கு அனுப்ப தயாராக இருக்கிறேன். சிங்கள இராணுவ கெடுபிடிகளுக்குள் சிக்கி துன்பப்படுவதை விட எமது தேசத்தின் விடுதலைக்காக எனது பிள்ளைகளை போராட்டத்தில் இணைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

எமது தேசியத் தலைவரின் போராட்டப் படையணிகளை வலுப்படுத்துவதற்காகவும் நீண்ட காலமாக சிங்கள பேரினவாதிகளின் அடக்குமுறையில் சிக்குண்டுள்ள எமது தாயக மண்ணையும் எமது இனத்தையும் மீட்பதற்காகவேவுமே எனது மகனை நான் போருக்கு அனுப்புகிறேன்.

எனது மகனும் என்னுடைய இலட்சியத்தையும் எனது கணவரின் இலட்சியத்தையும் நிறைவேற்றுவான் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உண்டு.

எனவேதான் நானாகவே முன்வந்து எனது மகனைப் போருக்கு அனுப்புகிறேன். என்னைப் போன்று இதுவரை காலமும் இந்த விடுதலைப் போருக்காக தமது பங்களிப்பினை செய்யாதிருந்த ஒவ்வொருவரும் முன்வந்து பங்களிக்க வேண்டும் என்பதே எனது விரும்பம்.

ஒவ்வொரு தமிழரும் இப்படிச் செய்வதன் மூலமே எமது தேசம் விரைவில் விடுதலையடையும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

- புதினம்

Link to comment
Share on other sites

நிச்சயமாக தமிழிழம் கான்பது உறுதி.

ஒவ்வொரு தமிழரும் இப்படிச் செய்வதன் மூலமே எமது தேசம் விரைவில் விடுதலையடையும்

Link to comment
Share on other sites

வெற்றித் திலகமிட்டு பிள்ளைகளை புலிகளிடம் ஒப்படைத்த தமிழ்ப் பெண்கள்!

சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பை எதிர்த்தும் தமிழீழ தேசத்தின் விடிவை விரைவாக ஏற்படுத்துவதற்காகவும் தங்களது பிள்ளைகளை வெற்றித் திலகமிட்டு விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்து வரும் நிகழ்வுகள் தமிழீழத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கிளிநொச்சி அக்கராயனைச் சேர்ந்த திருமதி தியாகராசா என்ற தாய் தனது மகளை போராட்டத்தில் இணைத்துள்ளார்.

அக்கராயன் வலயப் பொறுப்பாளர் குட்டிமணியிடம் நேற்றுக் காலை தனது மகளான ரி.ஜெனிதாவை அவர் விடுதலைப் போராட்டத்திற்காக இணைத்தார்.

"தமிழீழ விடுதலைப் போராட்டம் நீடித்துச் செல்லக்கூடாது. விரைவில் தமிழீழ தனியரசை நாங்கள் அடையவேண்டும். அதற்காக எங்கள் தலைவரின் கையை நாம் பலப்படுத்த வேண்டும். அனைத்துத் தாய்மாரும் தமது பிள்ளைகளைப் போராட்டத்தில் முன்வந்து இணைந்து தலைவரின் கையை பலப்படுத்த வேண்டும். அதற்காகவே நான் எனது மகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்வந்து இணைக்கின்றேன்" எனவும் வலயப் பொறுப்பாளர் குட்டிமணியிடம் திருமதி தியாகராசா தெரிவித்தார்.

இதேபோல் மன்னார் மாவட்டத்தின் பலாப்பொருமாள் கட்டு வட்டக்கண்டல் எனும் பகுதியில் வசித்து வரும் சண்முகம் காளியம்மா எனும் இத்தாயார் தனது ஆறு பிள்ளைகளில் ஒருவரை தாயக விடுதலைப் போருக்காக தானாகவே முன்வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைத்துள்ளார்.

பிரபாகரன் எனும் மகனை நேற்று முற்பகல் 9.00 மணியளவில் மன்னார் மாவட்ட அரசியல்துறை செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரிடம் இத்தாயார் விடுதலைப் போருக்காக அனுப்பிவைத்ததோடு தமிழ் பெண்களின் வீர வரலாற்றை நினைவுபடுத்தும் முகமாக மகனுக்கு நெற்றி திலகமிட்டு போருக்கு போய் வருமாறு விடை கொடுத்தனுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.

தன் மகனை போருக்கு அனுப்பிய அத்தாயார் கூறியதாவது:

எனக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றார்கள். எனது கணவர் மன்னார்ப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகி சுகவீனமுற்றிருந்து 1997 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவர் உயிரோடு இருக்கும் போது இரண்டு பிள்ளைகளை தேச விடுதலைப் போருக்கு அனுப்பவேண்டும் என்று கூறிவருவார். அவர் இறந்ததன் பின்புதான் எனது பிள்ளைகளுக்கு போராடும் வயது நிரம்பியதால் இப்போது நான் எனது மகனை இயக்கத்தின் இணைக்கிறேன்.

விடுதலைப் போருக்காக ஒரு பிள்ளையைப் பெற்ற பெற்றோர்கள் கூட தமது பிள்ளைகளை இணைத்துள்ளார்கள். எனவே ஆறு பிள்ளைகளைப் பெற்ற நான் ஒரு பிள்ளையேனும் போராட்டத்திற்கு அனுப்பாவிட்டால் தேசம் என்னை மதிக்காது.

எனவேதான் நான் இப்போது எனது 19 வயது நிரம்பிய மகனை இணைத்துள்ளேன். தொடர்ந்து வரும் காலத்தில் விடுதலைப் போர் உக்கிரமடையும் நிலை உருவாகுமானால் எனது 20 வயது நிரம்பிய மற்ற மகனையும் போருக்கு அனுப்ப தயாராக இருக்கிறேன். சிங்கள இராணுவ கெடுபிடிகளுக்குள் சிக்கி துன்பப்படுவதை விட எமது தேசத்தின் விடுதலைக்காக எனது பிள்ளைகளை போராட்டத்தில் இணைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

எமது தேசியத் தலைவரின் போராட்டப் படையணிகளை வலுப்படுத்துவதற்காகவும் நீண்ட காலமாக சிங்கள பேரினவாதிகளின் அடக்குமுறையில் சிக்குண்டுள்ள எமது தாயக மண்ணையும் எமது இனத்தையும் மீட்பதற்காகவேவுமே எனது மகனை நான் போருக்கு அனுப்புகிறேன்.

எனது மகனும் என்னுடைய இலட்சியத்தையும் எனது கணவரின் இலட்சியத்தையும் நிறைவேற்றுவான் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உண்டு.

எனவேதான் நானாகவே முன்வந்து எனது மகனைப் போருக்கு அனுப்புகிறேன். என்னைப் போன்று இதுவரை காலமும் இந்த விடுதலைப் போருக்காக தமது பங்களிப்பினை செய்யாதிருந்த ஒவ்வொருவரும் முன்வந்து பங்களிக்க வேண்டும் என்பதே எனது விரும்பம்.

ஒவ்வொரு தமிழரும் இப்படிச் செய்வதன் மூலமே எமது தேசம் விரைவில் விடுதலையடையும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.