Jump to content

சுகமே.... சுவாசமே.......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா, உங்கள் கதையின் கருப் பொருளும், அதனைக் நகர்த்திச் சென்ற வடிவமும் அருமை, பாராட்டுகளாக ஒரு பச்சை மட்டுமே போட முடிந்தது!

அப்படி என்று முழுதாகச் சொல்ல முடியாது சாத்திரி!

வீட்டில் ஒருவர் புகைப் பிடித்தாலே போதும் அந்தப் புகையச் சுவாசிப்பதால் கர்ப்பிணிகளுக்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் ஆபத்து நேரிட பல காரணிகள் உள்ளது. அதாவது கர்ப்பிணிப் பெண்கள் புகைப் பிடிக்காமல் அருகில் இருப்பவர் புகைப் பிடிப்பதால் கூட பல ஆபத்துக்கள் கர்ப்பிணிப் பெண்களால் எதிர் நோக்கப் படுகிறது, இதைப் பலர் அலட்சியப் படுத்துவது தவிர்க்க வேண்டிய ஒன்று. இல்லையேல் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து நேரிடும் வாய்ப்புகள் அதிகம்.

http://www.bbc.co.uk...e_smoking.shtml

(அதோடு சகாரா அக்காவின் கதையில் கர்ப்பம் தரித்திருக்கும் மைதிலிக்கு ஆஸ்த்துமா இருப்பதாகவும் குறிப்பிடு இருக்கிறார், அதனால் குழந்தை தாயின் வயிற்றினுள் மரணித்திருக்க சந்தர்ப்பங்கள் உள்ளது என்றே நினைக்கிறன்.)

நன்றி குட்டி.

புகைத்தல் என்பது மிகவும் அபாயமான பின்விளைவுகளை உருவாக்கக்கூடியது.

எனக்குத் தெரிந்த ஒருவரின் குழந்தை குறைமாதத்தில் பிறந்து வெப்பமூட்டப்பட்ட கண்ணாடிப் பெட்டிக்குள் ஆறு வாரங்களாக வைத்திருந்தார்கள். குறைமாதத்தில் பிறந்த அக்குழந்தைக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளதாகவும் சுவாசிக்கும் சக்தி குறைவாக இருந்ததாகவும் வைத்தியர்கள் தம்முடைய முழுநேரக் கண்காணிப்பில் வைத்திருந்தார்கள். அக்குழந்தையின் தாயார் நல்ல சுகதேகி. அவரிடம் குழந்தை குறைமாதத்தில் பிறப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் இந்தக்கதையில் உள்ளதுபோல் அவசரப்பிறப்பு. குழந்தையை தொடர்ச்சியாக கவனித்து வந்த வைத்திய அதிகாரிகளின் தகவலின்படி அக்குழந்தையின் தந்தையின் புகைப்பழக்கம் குழந்தையைத் தாக்கியிருக்கிறது என்பதாகும். அதன் பின்னர் அத்தந்தை தன் புகைப்பழக்கத்தை நிறுத்தியே விட்டார். இப்போது அக்குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா! ஒரு பெரியவிடயத்தை உங்கள் சிறுகதையில் அழகாக...... அர்த்தத்துடன் சொல்லியிருக்கின்றீர்கள்.

நன்றி கு.சா அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் பரீட்சைக்குப் படிக்கிறார் போலை.. :unsure: ஆள் இந்தப்பக்கம் கொஞ்சம் தலையைக் காட்டினால் நல்லாயிருக்கும்..! :wub:

எனக்கெண்டால்????? இது ஊரிலை எதுக்கெடுத்தாலும்..விதானைமாரையும்...சனசமூகதலைவர்மாரையும் கூப்பிடுறமாதிரி கிடக்கு? :icon_idea:

Link to comment
Share on other sites

இப்ப லண்டனில் யாருக்கும் பரீட்சை சமயமில்லையே?

யூனியில் அரியஸ் என்றால் கூட அது முடிஞ்சிருக்குமே? நெடுக்கர் அரியஸ் வைக்கிற ஆள் மாதிரி தெரியேல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன் சகோதரி

நான் எதுவும் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் எழுதாமல் இருந்தாலே எனக்கு கோபம் வரும். இங்கு பன்றிக்குட்டிகள் சிலிர்த்துக்கொண்டு திரிவதற்கு தங்கள் போன்றோரின் ஒதுங்குதலே வழி கோலுகிறது. அந்த வழியை அடைக்க தங்கள் போன்றோரைவிட்டால் நாம் எங்கு போவது??? தயவு செய்து தொடருங்கள்.

குறிப்பு: என் மனைவியின் பெயரை எப்படி தெரிந்துகொண்டீர்கள்? :icon_idea:

Link to comment
Share on other sites

இன்றுதான் பார்த்தேன் சகோதரி

நான் எதுவும் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் எழுதாமல் இருந்தாலே எனக்கு கோபம் வரும். இங்கு பன்றிக்குட்டிகள் சிலிர்த்துக்கொண்டு திரிவதற்கு தங்கள் போன்றோரின் ஒதுங்குதலே வழி கோலுகிறது. அந்த வழியை அடைக்க தங்கள் போன்றோரைவிட்டால் நாம் எங்கு போவது??? தயவு செய்து தொடருங்கள்.

குறிப்பு: என் மனைவியின் பெயரை எப்படி தெரிந்துகொண்டீர்கள்? :icon_idea:

இதில் யார் யார் பன்றிக்குட்டிகள் என்று சொன்னால் நன்றாக இருக்கும் விசுகு <_< <_< <_<

Link to comment
Share on other sites

புகைத்தல் எனும் பழக்கம் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியது !

வயிற்றில் வளரும் கருவைப் பாதிக்கும் என்பதற்காக மட்டுமில்லை ... அக்குழந்தையின் தந்தையும் நீண்ட காலம் தேகாரோக்கியத்தொடு வாழ அப்பழக்கத்தினை அடியோடு கைவிட வேண்டும்!

நல்ல ஒரு கருத்தினை தங்களது கதையில் மிருதுவாகப் புகுத்தியுள்ள கதையாக்கத்திற்கு பாராட்டுக்கள் அக்கா!

சில மாதங்கள் முன்னாடி வரைக்கும் நானும் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாயிருந்தேன்! அதிலிருந்து விடுபட்டதில் இருந்து .... கொஞ்சம் ஆறுதல். இப்பொழுது என்னவளின் அன்புக்கு நான் அடிமை! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா நல்ல கதை தொடர்ந்து உங்கள் ஆக்கம்கள் வரட்டும்...

இதில் யார்  யார் பன்றிக்குட்டிகள் என்று சொன்னால் நன்றாக இருக்கும் விசுகு <_< <_< <_<

:o
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன் சகோதரி

நான் எதுவும் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் எழுதாமல் இருந்தாலே எனக்கு கோபம் வரும். இங்கு பன்றிக்குட்டிகள் சிலிர்த்துக்கொண்டு திரிவதற்கு தங்கள் போன்றோரின் ஒதுங்குதலே வழி கோலுகிறது. அந்த வழியை அடைக்க தங்கள் போன்றோரைவிட்டால் நாம் எங்கு போவது??? தயவு செய்து தொடருங்கள்.

உங்கள் வரவிற்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி விசுகு அண்ணா......

இருப்பினும்.... மனதில் மகிழ்ச்சி இல்லை...

விசுகு அண்ணா நீங்கள் யாரைக் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நானறியேன், ஆனாலும் எழுத்துலகத்தில் உள்ளவர்களைத்தான் நீங்கள் சாடுகிறீர்கள். உங்கள் சாடலுக்கான காரணமும் அதை இச்சிறுகதையின் கருத்துப்பதிவிடத்தில் இடவேண்டிய தேவையும் ஏதென்று புரியவில்லை. எது எவ்வாறாயினும் ஒருவரைத் தூக்கி மற்றையோரைத்தாக்கும் கருத்துகளை வரவேற்க விரும்பவில்லை. அததோடு உங்களுடைய இக்கருத்து எழுத்துத்துறையில் இருக்கும் அனைவரையும் புண்படுத்தக்கூடியது. வளர்ந்துவரும் படைப்பாளிகளையும் முடக்கிப் போடக்கூடியது. ஒருவரை ஊக்குவிப்பதற்காக மற்றவர்களை மட்டந்தட்டுவது ஏற்புடையதல்ல. எதிரியாக இருப்பவராயினும் மாற்றுக்கருத்துடையவராயினும் அநாகரீகமாக விமர்சிப்பது தவிர்க்கப்படவேண்டும். அதுவே ஒரு நல்ல கருத்தாளர்களாக எதிர்காலத்தில் பலரை உருவாக்கும். இந்த யாழ்க்கருத்துக்களத்தில் உள்ளவர்களுக்கும் மாற்றுக்கருத்தாளர்களை மதிக்கவும் தெரியும் மன்னிக்கவும் தெரியும் என்பதை உணர்த்தவேண்டும். மீண்டும் இத்தகைய அநாகரீகமான கருத்துக்கள் உங்களைப் போன்றவர்களிடம் இருந்து பிறக்காது என்று நம்புகிறேன்.

புகைத்தல் எனும் பழக்கம் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியது !

வயிற்றில் வளரும் கருவைப் பாதிக்கும் என்பதற்காக மட்டுமில்லை ... அக்குழந்தையின் தந்தையும் நீண்ட காலம் தேகாரோக்கியத்தொடு வாழ அப்பழக்கத்தினை அடியோடு கைவிட வேண்டும்!

நல்ல ஒரு கருத்தினை தங்களது கதையில் மிருதுவாகப் புகுத்தியுள்ள கதையாக்கத்திற்கு பாராட்டுக்கள் அக்கா!

சில மாதங்கள் முன்னாடி வரைக்கும் நானும் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாயிருந்தேன்! அதிலிருந்து விடுபட்டதில் இருந்து .... கொஞ்சம் ஆறுதல். இப்பொழுது என்னவளின் அன்புக்கு நான் அடிமை! :wub:

உங்கள் வரவிற்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி கவிதை.

அக்கா நல்ல கதை தொடர்ந்து உங்கள் ஆக்கம்கள் வரட்டும்...

நன்றி சுபேஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லும் அளவிற்கு கதை விளங்காமல் இல்லையே சகாரா அக்கா.... நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடர்நது எழுதுங்கோ...:)

Link to comment
Share on other sites

  • 7 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.