Jump to content

புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு


Recommended Posts

புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு!

* போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசின் இயலாமையை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த புலிகள் உபாயம்

நாட்டில் எவ்வேளையிலும் பெரும்போர் வெடிக்கலாமென்ற சூழ்நிலை சற்றுத் தணிந்துள்ளது. நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மின் வருகை, பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்குமா? அல்லது யுத்தத்திற்கான நாள் குறிக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் சொல்ஹெய்ம் பேச்சுக்கான நாளை குறித்துள்ளார்.

புதிய அரசு பதவியேற்றவுடனேயே வடக்கு - கிழக்கில் மோசமான சூழ்நிலை உருவானது. பெரும்போர் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. சமாதான முறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதை விட சண்டை மூலம் தீர்வொன்றை எட்டிவிடலாமென நினைப்போரே ஜனாதிபதி மகிந்தவைச் சூழ இருக்கின்றனர்.

ஆனாலும், புலிகளின் பலம் குறித்த அச்சம், யுத்தம் மூலமான தீர்வுக்கு இந்த அரசுக்கு பெரும் தடையாக இருப்பதால் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தும் அதேநேரம், தீர்வொன்றை நோக்கி முன்நகர்வதற்கு முன்னர் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று புலிகளுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து அரைகுறைத் தீர்வை திணித்து விடலாமெனவும் புதிய அரசு கருதுகிறது.

முன்னாள் வெளிவிகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைப் போன்றே தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் செயற்பட முனைகின்றார். சர்வதேச ரீதியில் புலிகளைத் தடை செய்வதன் மூலம் அவர்களது கருத்துக்களை வெளியுலகுக்குக் கேட்கச் செய்யாது, இந்தத் தடை மூலம் சர்வதேச ரீதியில் கிடைக்கும் ஆதரவுகளைப் பெற்று ஈழவிடுதலைப் போராட்டத்தை அடக்கி விடலாமெனவும் இந்த அரசு கருதுகிறது.

ஆனாலும், புலிகளின் பலம் குறித்த அச்சம், மக்கள் மத்தியில் அவர்களுக்குள்ள மிகப்பெரும் செல்வாக்கு சர்வதேச ரீதியில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு கிடைத்துவரும் அங்கீகாரங்களெல்லாம், சாணேற அரசுக்கும் முழம் சறுக்கும் நிலையை உருவாக்கி வருகிறது.

ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் கிழக்கில் தொடங்கிய நிழல் யுத்தம் இன்று வடக்கு வரை வந்துவிட்டது. இது பெரும் போர்ச் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இந்த நிலைமையை தணிக்கக் கிடைத்த இறுதிச் சந்தர்ப்பமே, போர்நிறுத்த உடன்பாட்டை அமுலாக்குவது தொடர்பாக ஜெனிவாவில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள பேச்சுக்களாகும்.

இந்தப் பேச்சுக்கான இடத் தெரிவிலும் இந்த அரசு ஒரு அரசியலை நடத்த முயன்றது. இலங்கையில் அல்லது, ஆசியாவில் எங்காவது ஒரு நாட்டிலேயே பேசுவோமென உறுதிபடக் கூறியது. ஒஸ்லோவில் பேசலாமென்ற புலிகளின் கோரிக்கையையும் நிராகரித்து வந்தது.

புலிகள் மீது கடந்த வருடம் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் பயணத்தடை விதித்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மூலம் புலிகளுக்கு தடை விதித்துவிட வேண்டுமென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், சர்வதேச மயப்பட்டிருந்த இலங்கை இனப்பிரச்சினையை ஆசிய மயப்படுத்துவதற்கு புலிகள் மீதான ஐரோப்பியத் தடையும் இலங்கை அரசுக்கு அவசியம் தேவை. இதனாலேயே புலிகளுடனான பேச்சுக்களை ஐரோப்பிய நாடொன்றில் நடத்தாது ஆசியாவில் எங்காவது ஓரிடத்தில் நடத்திவிடவேண்டுமென இலங்கை அரசு பெரும் முனைப்புக் காட்டி வந்தது.

ஐரோப்பிய நாடுகளில் அல்லது ஸ்கண்டிநேவிய நாடுகளில் பேச்சுக்களை நடத்தும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தால் புலிகளைத் தடைசெய்ய முடியாததொரு நிலை ஏற்படலாம். அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்கள் நடைபெறுவதன் மூலம் இந்தப் பிரச்சினை மேலும் மேலும் சர்வதேச மயப்படுத்தப்படுவதையும் இலங்கை அரசு விரும்பவில்லை.

புலிகள் மீது ஐரோப்பா தடை விதித்துவிட்டால் அங்கு புலிகளின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்படுவதுடன், அவர்களது நிதி சேகரிப்பு மற்று பிரசார நடவடிக்கைகளையும் முழுமையாக முடக்கிவிடவும் இலங்கை அரசு திட்டமிட்ட அதேநேரம், சர்வதேசமயப்படுத்தப்பட்டிரு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.