Jump to content

கணினி ஓவியம் (digital imaging)


Recommended Posts

இரண்டாவது படம்:

image composing செய்வதற்கு முன்னரான திட்டமிடல்

4scribbles_355.jpg

பயன்படுத்தப்பட்ட படங்கள்

all4_146.jpg

ஈழத்துக் காட்சிக்காக உருவாக்கப்பட்ட படம்

sl_glas-kopie_393.jpg

முதலாவது படம்:

image composing செய்வதற்கு முன்னரான திட்டமிடல்

1scribbles_180.jpg

பயன்படுத்தப்பட்ட படங்கள்

all1_443.jpg

ஈழத்துக் காட்சிக்காக உருவாக்கப்பட்ட படம்

sl-only-palm_481.jpg

இந்தப்படங்கள் பார்ப்பதற்கு சாதாரணமாகப் தோன்றினாலும், செயற்படுத்துவதில் நுணுக்கமான வேலைகள் செய்யவேண்டி இருந்தது. உதாரணமாக கண்ணாடியில் தோன்றும் காட்சிகளின் பிம்பம், நிழல், வெளிச்சம் போன்றவற்றை கண்கிலெடுக்கவேண்டி இருந்தது. படத்தில் காணப்படும் பனித்துகள்கள் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

adobe Photoshop ஐ எங்கு தரவிறக்கம் செய்யலாம் ( பரீட்சாத்தமாக இல்லை முழுவதாக) நாங்களும் செய்து பார்க்க தான்

Link to comment
Share on other sites

digital imaging அல்லது image composing அல்லது image retouching போன்றவை இன்று ஊடகங்களுக்கு மிகவும் பயன்படுகின்ற துறை. முன்னரெல்லாம் ஒரு நிழற்படத்தை எடுக்கவேண்டுமென்றால் studio ஒழுங்கு செய்யவேண்டும், படப்பிடிப்பாளருக்கு உதவியாளர்கள் தேவை, வெளிச்சம் சரியாக அமைக்கப்படவேண்டும், காட்சிக்கு நடிப்பவருக்கு அலங்காரம் செய்யவேண்டும். இப்படி பல வேலைகள் இருந்தது. படம் பிழைத்தால் முழுவதையும் திரும்ப எடுக்கவெண்டிய சூழல் இருந்தது. பணச்செலவு, நேரச்செலவு என்று பலசெலவுகள் கணக்கிலெடுக்கப்படவேண்டி இருந்தன.

ஆனால் இன்று அப்படியல்ல. digital புரட்சி ஏற்பட்ட காரணத்தால் எடுக்கின்ற நிழற்படத்தை சாதாரணமாக எடுத்துவிட்டு மிகுதியை கணினியில் மெருகேற்றிக் கொள்ளமுடிகிறது. இது ஒரு தனித்துறையாக இன்று வளர்ந்திருக்கிறது. ஒருபக்கம் நன்மை பயக்கிற போதும் இன்னொருபக்கம் தீமைகள் சிலவற்றை உள்ளடக்கியதாகவும் இருப்பது உண்மையே. பல சட்டவிரோதமான வேலைகளைச் செய்வதற்கும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படும் என்பது கவலைக்குரியதே.

இன்று பொழுதுபோக்கு சஞ்சிகைகள், விளம்பர இதழ்கள், உடற்பயிற்சி சார்ந்த சஞ்சிகைகள் போன்றவற்றிற்கான படங்கள் இந்தமுறையிலேயே செய்யப்படுகின்றன. முகத்தில் ஒரு பருக்கூட இல்லாத, தோல் மென்மையாக இருக்கிற, கண்கள் ஒளிர்கிற படங்களைப் பார்த்து ஏமாருபவர்கள் பலர். நாம் அப்படி இல்லையே என்று தமக்குள் ஏங்குபவர்கள் பலர். ஆனால் உண்மையில் ஒரு பருக்கூட இல்லாத, ஒரு காயமோ, கீறலோ இல்லாத முகம் அல்லது மேனி எங்கும் இல்லை என்பதே உண்மை. digital imaging மூலம் தேவதைகளையும் மன்மதன்களையும் விளம்பர இதழ்கள் உருவாக்கிவிட்டுள்ளன.

Link to comment
Share on other sites

adobe Photoshop ஐ எங்கு தரவிறக்கம் செய்யலாம் ( பரீட்சாத்தமாக இல்லை முழுவதாக) நாங்களும் செய்து பார்க்க தான்

:lol: தரவிறக்கம் செய்வதற்கான முகவரி தெரியவில்லை. யாரும் அறிந்திருந்தால் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயா இங்கு பாருங்கள் தரவிறக்கலாம் பலமென்பொருட்கள்... ஆனால் சீரியல் நம்பர் தான் சிக்கல்.

adobe Photoshop CS2 கீ இருந்தா சொல்லுங்க நமக்கும்.

http://www.adobe.co.uk/products/tryadobe/main.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயா இங்கு பாருங்கள் தரவிறக்கலாம் பலமென்பொருட்கள்... ஆனால் சீரியல் நம்பர் தான் சிக்கல்.

adobe Photoshop CS2 கீ இருந்தா சொல்லுங்க நமக்கும்.

http://www.adobe.co.uk/products/tryadobe/main.html

http://www.crackdb.com/Adobe.Photoshop.CS2...tion_crack.html

http://www.crackdb.com/Adobe.Photoshop.CS2...v9.0_crack.html

http://www.crackdb.com/ADOBE.PHOTOSHOP.CS2....CS2_crack.html

Link to comment
Share on other sites

முதலில் உங்களின் படத்தை இங்கு இனணத்தைமைக்கு நன்றி.

படங்கள் அருமை மேலும் முயற்சி செய்திருந்;தால் சிறிய தவறுகளை குறைத்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

விளக்கத்துக்கு நன்றி இளைஞன். நேரம் கிடைக்கும் போது முயற்சித்துப் பார்க்கிறேன். சீம் வெரி இன்ரஸ்ட்டிங்

ஆஹா..... அப்படியா :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • 1 month later...

இளைஞன் படங்கள் நல்லா வந்திருக்கு.நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.