Jump to content

லெப். கேணல் – இரும்பொறை மாஸ்டர் – கடற்புலிகளின் துணைத் தளபதியினதும், மற்றும் – 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவஞ்சலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

15_09_05-150x150.jpg

சென்ற 16.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிக் கடற் கலங்களை மூழ்கடித்து மேலும் சில கடற்கலங்களை தேசமாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர், லெப்.கேணல் குமுதன் உட்பட்ட…..

….கடற் கரும்புலிகள் லெப்.கேணல் அனோசன், மேஜர் அருணா, மேஜர் நித்தியா, மேஜர் காந்தி மற்றும் – 10 மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பற் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வழிமறித்து கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான கடற் புலிகளும், கடற் கரும்புலிகளும் சிறிலங்கா கடற் படையினருக்கு பலத்த அழிவுகளை ஏற்படுத்தினர்.

15 ற்கும் அதிகமான டோறா பீரங்கிப்படகுகளுடன் சுமார் எட்டு மணிநேரம் கடுமையாக சமரிட்டு அவற்றில் இரண்டை மூழ்கடித்து மேலும் இரண்டை கடுமையாகச் சேதப்படுத்தினர்.

இக்கப்பற் தொடரணியில் 1,200 படையினருடன் சென்று கொண்டிருந்த பிரைட் ஒப் சவுத் கப்பலை தகர்த்து மூழ்கடிக்கும் வாய்ப்பிருந்தது. எனினும் படையினருடன் மக்களும் அதில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்தார்கள் என கிடைக்கப்பட்ட தவறான தகவலால் தாக்குதல் நடவடிக்கை தாமதமானதன் காரணத்தால் அக்கப்பல் தப்பிச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது எமது சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள்.

கவிதை

லெப். கேணல் – இரும்பொறை மாஸ்ரர் – கடற் புலிகளின் துணைத்தளபதி,

வீரக் கடற்புலிகளின் துணைத் தளபதியே!! வீரவணக்கம்

நீல வரி தரித்த இரும்பொறை வீரனே!! வீரவணக்கம்

திருக்கோண மாமலை துறைமுகம் அதிர செங்களம் ஆடியவன்

எமனேறும் – இரு கப்பல்கள் மூழ்கடித்து – அங்கே

பகையேறி வந்த வான்கலம் ஒன்றையும் வீழ்த்திய வீரனே!!

ஈனப் படைகொண்ட கயவர் கூட்டத்தை – எல்லையில்

உடல் கிழித்துப் – போர்க்களத்தில் புறமுதுகிடச் செய்தவன்

பருத்தித்துறை கடற்பரப்பில் – துரும்பரை நீ எதிர்த்துக்

கயவர்கள் படகினை கலங்கடித்த வெஞ்சமரில்

சிந்திய உன் செங் குருதி உப்பு நீருடன் சங்கமிக்க

வீரச் சாவடைந்த கடற்புலித் தளபதியே!! வீரவணக்கம்!!

இரும்பொறை என்றொரு பெயர் கொண்டு

பெரும்பகை தகர்த்தழித்தான் கரிகாலன் தளபதியே!!

உங்களிற்கு எம் சிரம் தாழ்த்திய கண்ணீர் அஞ்சலிகள்!!

உங்கள் பணி – விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்

என உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

15_09_06.jpg

15_09_07.jpg

15_09_03.jpg

15_09_04.jpg

15_09_05.jpg

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தமிழீழ கடலிலே காவியமான இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர காவியமாகி விட்டவர்களுக்கு . வீர வணக்கங்கள்!!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வங்களுக்கு என் வணக்கங்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.