Jump to content

கைதிகள்சட்ட விரோதமாக கடத்தப்படுவதை நியாயப்படுத்தும் USA


adsharan

Recommended Posts

வாஷிங்டன் மேற்கொள்கின்ற சட்டவிரோதமான நடைமுறையான கைதிகளை மூன்றாவது நாடுகளில் கடத்துதல் தொடர்பாக தகவலை தர வேண்டும் என்று ஐரோப்பா விடுத்த வேண்டுகோளுக்கு பதில் தருகின்ற வகையில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் அந்த நடைமுறை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தினார். ஐரோப்பிய விமர்சகர்கள் மீது அதே குற்றச்சாட்டை திருப்பிப்போடும் முயற்சியில், அத்தகைய கோரிக்கைகளை ஐரோப்பா தொடர்ந்து எழுப்பிக் கொண்டு இருக்குமானால் வாஷிங்டன் ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் விமான நிலையங்களை CIA விமானங்கள் மூன்றாவது நாடுகளுக்கு கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு அனுமதித்ததையும் மற்றும் CIA இரகசிய சிறைகளை நடத்துவதை அனுமதித்ததிலும் உடந்தையாக செயல்பட்டதை அவர் எடுத்துக்காட்டினார்.

மூன்றாம் தரப்பு நாடுகளில் கைதிகளை கடத்தும் நடவடிக்கைகளை பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படுபவர்களுக்கு எதிராக எந்த நீதிமன்ற நடைமுறையும் இல்லாமல் அமெரிக்காவின் சட்டங்கள் செயல்படாது என்று அமெரிக்க அரசாங்கம் கருதுகிறதோ அத்தகைய நாடுகளில் கைதிகளை கடத்துகின்றது. அமெரிக்க வெளியுறவுத் துறையினால் சித்திரவதையை கடைப்பிடிக்கும் நாடுகள் என்று சுட்டிக் காட்டும் நாடுகளுக்கு வாஷிங்டன் வழக்கமாக இக்கைதிகளை அனுப்புகிறது. "அசாதாரணமான கடத்துதல்" என்பது வெளிநாட்டு மண்ணில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை வெளிநாடுகளில் அமைந்திருக்கும் சிறைச்சாலைகளில் காணாமற்போவதற்கு முன்னர் அந்த நபரையே கடத்திச் செல்லும் நடவடிக்கையை குறிப்பதாகும்.

ரைஸ் தமது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை பேர்லினில் ஆரம்பிக்கிறார் மற்றும் நேட்டோ வெளியுறவு அமைச்சர்களின் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பிரஸ்சல்ஸ் செல்கிறார். அவரது விஜயத்திற்கு முன்னர் குறைந்த பட்சம் எட்டு ஐரோப்பிய நாடுகள் அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் கடத்தல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட CIA விமான நிலையங்களை பயன்படுத்தியதா என்பது பற்றி விளக்கம் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஜேர்மன் மற்றும் பிரிட்டனின் விமான நிலையங்கள் மிகவும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

ஜேர்மனிக்கு புறப்படுதவதற்கு முன்னர் ஆன்ரூஸ் விமானப்படைத்தளத்தில் திங்களன்று உரையாற்றிய போது வெளிநாடுகளுக்கு விமானத்தின் மூலம் சந்தேகத்திற்குரிய நபர்களை உண்மையில் அமெரிக்கா கொண்டு சென்றது மற்றும் பல தசாப்தங்களாக இப்படித் தான் செய்து வருகிறது என்று ரைஸ் குறிப்பிட்டார். இது சித்திரவதையை செய்வதற்கு வசதியாக அல்ல என்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இரகசிய சிறைகளை CIA நடத்தி வருகிறதா என்பதை கூற மறுத்துவிட்டார். "புலனாய்வு சட்ட அமுலாக்கம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் வெற்றிக்கு ஊறு விளைவிக்கும் தகவலை நாம் விவாதிக்க முடியாது. இதே கருத்தை இதர நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டார். அத்தகைய CIA சிறைகள் போலந்து மற்றும் ரூமேனியாவுடன் இதர ஆறு நாடுகளிலும் இருக்கக்கூடும் என்று அறியப்படுத்தப்பட்டிருக்கிற

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.