Jump to content

அப்பிடி போடு..... போடு.....


Recommended Posts

ஆசிரியர்: கிளாஸ்ல யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு!

மாணவன்: சரி சார்

ஆசிரியர்: நான் தூங்கிட்டு இருந்தா கூட பரவாயில்ல எழுப்பி சொல்லு! :evil:

----------------------------------------------------

லெக்சர்: என்னப்பா ஸ்டூடண்ட் நீ?

நான் நான் கொடுத்த லெக்சர் எப்பிடி இருக்குனு கேட்டா பெரிசா கொட்டாவி விடுற? :?

ஸ்டூடண்ட்: நீங்கதானே சார் எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லணும் என்று சொன்னிங்க!:wink:

----------------------------------------------------

ஆசிரியர் : உங்க பையன் ஹிஸ்ட்ரில இவ்ளோ வீக் ஆ இருப்பான்னு நான் நினைக்கல

"எப்படி சொல்லுறீங்க?"

ஆசிரியர் : தாத்தா பேர் என்னண்ணு கேட்டா கூட தெரியாது எங்கிறான்!

--------------------------------------------------

ஒரு மாணவன்: வாத்தியாருக்கு மிஞ்சிய மாணவன்னு சொல்லுறியே நீ அவ்ளோ புத்திசாலியா?

[

மற்றவன்: நீ வேற :evil: அவர் சரியா சொல்லி குடுக்காததால எல்லா மாணவர்களும் வெளியில போய்விட்ட பிறகு- வாத்தியாருக்கு மிஞ்சிய மாணவன் இவன் ஒருத்தன் தான்னு சொன்னன்! :lol:

--------------------------------------------------

ஆசிரியர்: ரெளடியோட பையன ஸ்கூல்ல சேர்த்தது தப்பா போச்சு! :lol:

"ஏன்?"

ஆசிரியர்: தலையை சீவிக்கிட்டு வாடான்னா- யார் தலையை என்கிறான்! :?

----------------------------------------------------

"கள்ளநோட்டு அடிச்சதுக்கான தண்டனையை இரட்டிப்பாக்கிட்டாங்களா? ஏன்? "

"கோர்ட்ல போட்ட ஃபைன் 10000 தயும் கள்ள நோட்டிலயே கட்டினாராம்"

---------------------------------------------

வக்கீல்: மை லார்ட்.... என் கட்சிக்காரர் ஒரு நல்ல மனிதர் -நேர்மையானவர்-யாரிடமும் கொடுமையாக நடந்து கொள்வதை வெறுப்பவர்-எல்லோரிடமும் அன்பு செலுத்துவதில்- என் கட்சிக்காரர் சிறந்தவர்...

கட்சிக்காரர்: (சத்தமாக) யோவ் வக்கீல் என்ன விளையாடுறியா? காசு வாங்கிட்டு என்ன பத்தி சொல்லுய்யானு சொன்னா வேற யாரோ பத்தி சொல்லிகிட்டு இருக்கியே தொலைசிடுவன் தொலைச்சு :evil:

----------------------------------------------------

நீதிபதி: திரும்ப திரும்ப ஒரே தப்பை செஞ்சிட்டுவந்து இப்பிடி கோர்ட்ல நிக்கிறியே உனக்கு வெக்கமாயிலயா?

திருடன்: திரும்ப திரும்ப என்னை நீங்களே விசாரிக்கிறீங்களே- உங்களூக்கு வெக்கமா இல்லையா எஜமான்?

------------------------------------------------

ஒரு ஊழல் வழக்கில்!

வக்கீல் 1 : அந்த ஊழல் வழக்கில் சமரசம் பேச ரூபா 10000 வாங்கினீங்களா?

வக்கீல்-2 (இரண்டு மூன்றுமுறை கேட்டபோது கூட காதில விழாததுபோல் பேசாம இருக்கிறார். உடனே நீதிபதி பேசுகிறார்)

நீதிபதி: கேள்விக்கு பதில் சொல்லணும் தெரியுமா?

வக்கீல்-2 : தெரியும்- ஆனா அவர் கேள்விய உங்ககிட்ட கேட்டதா நினைச்சன்! :roll:

----------------------------------------------------

நன்றி: வெப்-உலகம்

Link to comment
Share on other sites

----------------------------------------------------

நீதிபதி: திரும்ப திரும்ப ஒரே தப்பை செஞ்சிட்டுவந்து இப்பிடி கோர்ட்ல நிக்கிறியே உனக்கு வெக்கமாயிலயா?

திருடன்: திரும்ப திரும்ப என்னை நீங்களே விசாரிக்கிறீங்களே- உங்களூக்கு வெக்கமா இல்லையா எஜமான்?

------------------------------------------------

நன்றி இங்கு இனைத்தமைக்கு வர்ணன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.