Jump to content

ஓரு போராளியின் ஆக்கம்


Recommended Posts

ஓரு போராளியின் ஆக்கம்

அன்றும் வழமைபோல் அதிகாலை 5.00 மணி. தனது சகாக்களை எல்லோரையும் தனது வழமையான எழுந்து வாடா தம்பி இந்த நாடு இருக்குது உன்னை நம்பிஇ நீ எழுந்தால் விலங்கு தெறிக்கும் எங்கள் தமிழினம் நிமிர்ந்து நடக்கும் என்ற பாடலுடன் துயிலெமுப்பிக் கொண்டிருந்தான். பாடலைக் கேட்டு அனைவரும துள்ளியெழுந்து; காலைக்கடனை முடித்துக் கொண்டு அவசரம் அவசரமாக புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தனர். இடையில் போராளி இனியவன் பொறுப்பாளரிடம் வந்து அண்ணே என்ர இடத்தில கிராமப் படைக்கான பயிற்ச்சிக்கு எல்லோரும் ஒத்துழைத்திருக்கிறார்கள்.; இண்டைக்கு நீங்கள் ஒருக்கா வரவேணும் அவர்களோடு கதைக்க வேண்டும.; எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை ஒன்று. எப்படிச் சமாளிப்பதென்று தெரியவில்லை. அதுதான் நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று தயங்கித்தயங்கி; கேட்டான். சின்னப்பிரச்சனையோ அது என்ன பிரச்சனை? இல்லையண்ணே கிராமப்படை பயிற்;ச்சி எல்லாம் நிறைவாக முடித்தாச்சு. கிராமப்படைக்கான பயிற்சி முடித்தவர்களில் ஆண்களை மட்டும் எல்லைப்படைக்கு எடுக்கினம். பெண்களை ஏன் எடுக்கிறியள் இல்லை என்று சில அம்மாக்கள் ஒரே சண்டையாக்கிடக்கு ஓ இதுவா பிரச்சனை. இதுக்கு நான் ஏன்தம்பி நீதான் சமாளிக்க வேண்டும். அம்மாக்களுக்குச் சொல்லு கட்டாயம் எடுப்பம் என்று. தேவை ஏற்பட்டால் எல்லோரும் துவக்குத் து}க்கத்தானே வேண்டும். இண்டைக்கு நான் வரமுடியாதடா தம்பி. உமக்குத் தெரியும தானேஇ; இன்று புதன்கிழமை வழமையாக எமது செயலகத்தில் மக்கள் சந்திப்பு. து}ர இடங்களிலிருந்து எல்லாம் மக்கள் வருவினம். எனவே இன்று நான் எப்படி அப்பன் வாறது. மீன்குஞ்சுக்கு நானா நீந்தக் கற்றுக்கொடுக்கிறது சிரித்தபடியே விடை பெற்றுச்சென்றான் இனியவன். வேகமாக காலைககடன் முடித்துக்கொண்டு மக்களைச் சந்திக்க தயாராகினான் பொறுப்பாளன். ஒருவர் இருவர், மூவர் என்று மக்களைச் சந்திக்கும் கொட்டலாக நிறைந்து கொண்டிரந்தது. வரதன் அம்மக்களுக்கு hP கொடுத்தாச்சோ. வந்து கொண்டிருக்கினம். ஒருத்தரும் தவறக்கூடாது ஓம் அண்ணா பிரச்சனை இல்லை என்றபடி நீங்கள் hP எடுக்கேல்லை என்றவனைப் பார்த்து ஓம் எடுக்கிறன் என்றவன் hPயைக் கையில் எடுத்தபடி மக்களிடம் சென்றான்;. எல்லா அம்மாக்களும் எழுந்து வாங்கோ தம்பி வாங்கோ என்றபடி வரவேற்றனர். இருங்கோ அம்மாக்கள் இருங்கோ இதென்ன பழக்கம் எங்களைக் கண்டிட்டு நீங்கள் எழும்பக்கூடாது. ஏன் என்றால் நீங்கள் தான் இங்கே பெரியாக்கள் தேச விடுதலைக்காக போராளிகளாக, மாவீரர்களாக் பிள்ளைகளைக் கொடுத்த உன்னதமானவர்கள் யாரைக்கண்டு யார் எழும்புவது என்று எண்ணிய படியே இருங்கோ இருங்கோ

ஒவ்வொருவருக்கும் மிக அருகில் சென்று ஏனம்மா உங்களுக்கு என்ன பிரச்சனை? ஒரு அம்மா தம்பி என்ரை மூன்றாவது வெளிக்கிட்டு இன்றைக்கு மூன்று வருசமடா எங்கே நிற்கிறான். எப்படி நிக்கிறானேர். இப்ப எல்லாப்பக்கமும் வெடிகேக்குது ஒரு நாள் கூட லீவிலையும் வரலே; அதுதான்ரா தம்பி சும்மா இருந்து யோசிச்சு விசராய்க்கிடக்குது. இவரும் எல்லைப்படைக்குப் போய் ஒன்பது நாளாய்ப்போச்சு. உன்னட்டை வந்தால் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும் என்று அம்மா கூறி முடிக்க பக்கத்தில் இருந்த இன்னொரு அம்மா ஏற்கனவே ஒருத்தன் மாவீரனாப் போயிட்டான் நேற்று மற்றவனும் போட்டான் இனி எங்களைப் பார்க்க என்று யார் இருக்கினம் அடுத்தவ தம்பி வீரச்சாவு அடைந்து ஒருவருசமடா. சனிக்கிழமை திதி. உன்னோட நிற்கிற எல்லாரையும் அனுப்பு. நீயும் கட்டாயம் ஒரு இடையிலே வந்திட்டுப்போ இப்படியாக ஒவ்வொரு அம்மாக்களும் ஒவ்வொரு விடயமாக சொல்லிக் கொண்டு இருக்கும் போது இடையிலே எட் தம்பி; எங்கள் இடத்திற்கு இண்டைக்கு நீ வருவாய் என்று உவன் தம்பி இனியவன் சொன்னவன.; நீ வரவே இல்லை அதுதான் உன்னட்ட ஒரு முக்கியமான அலுவல் கதைக்க வந்தனான் அப்ப அம்மா தருமபுரமே இருக்கிறியள் ஓமடாதம்பி தருமபுரத்தில மாலிகா குடியருப்பிலே இருக்கிறனான்.

அதுசரி அது என்னண்டு உனக்குத் தெரியும். இல்லை அம்மா காலையில் தான் தம்பி இனியவன்; கதைத்தவன சொல்லிமுடிக்க முன் அம்மா தொடங்கினாள். நான் கேட்கிறன் தலைவர் இன்டைக்கு வீட்டில அகப்பை பிடித்துக் கொண்டு கிளிப்பிள்ளைகளாக் இருந்த எங்கட பொம்பிளைப் பிள்ளைகளை எல்லாம் புலிப்;பிள்ளைகளாக்கி, அவனைக்கண்டிட்டு தலைவிரி கோலமாக ஓடின எங்கட பிள்ளைகளை விடுதலைப்புலி பெண்களாக்கி உலகம் மூக்கில் விரல வைக்கிற மாதிரி தன்மானத்தோட தலை நிமிர்ந்து நிக்கேக்க நீங்கள் எங்களை ஏன் எல்லைக்கு அனுப்பக்கூடாது. ஏன் நாங்கள் உவங்களச் சுடமாட்டமே, நாங்கள் சுட்டால் துவக்குச் சுடாதோ இல்லைக் கேட்கிறன். நாங்களும் போக வேண்டும் தனிய ஆம்பிளையள் மட்டுமில்லை எல்லைப்படைக்கு பொம்பிளைகளும் போக வேணும் ஓயாமல் அம்மா ஒரு முழக்கம் முழங்கி ஓய்ந்தாள். சிரித்தபடி சுடமாட்டியள் என்று யார் சொன்னது. கட்டாயம் சந்தர்ப்பம் வரும் போகலாம். நான் அனுப்புவன் என்று அம்மாவைச் சமாதானப்படுத்தவும் அம்மாவின் கண்கள் கண்ணீரால் நிரம்ப உதடுகள் பதபதத்தபடி மெல்லிய விம்மலோடு தொடர்ந்து பேசினாள். தம்பி நான் தெய்வானை. என்ற புரிசன் சிவராசா எனக்கு ஒரே ஒரு மகனடா அவனுக்கு சிவகுமார் பெயரடா 9 வயது. நாங்கள் பரந்தன் குமரபுரத்தில இருந்தனாங்கள் உந்தக் கொல்லையில போவான்;கள் ஆனையிறவில் இருந்து அடிக்கிற செல்மழைக்க எல்லாம் தப்பித்தப்பி வீட்டை விட்டிட்டு வெளிக்கிடுறதே இல்லை என்று வீPட்டோட இருந்தம.; இவர் சரியான பயந்த மனுசன் உவங்களின்ர செல் ஒரு நாளைக்கு எங்கட முத்தத்தில விழேக்க தான் உனக்குப் புத்திவரும் அதுக்கு முன்ன நீ வரமாட்டாய் என்று என்னைப்; பேசுவர். நான் அவரை ஆறுதல்படுத்துவன். எங்கட அம்மாக்களை எல்லாம் முந்தி மலையகத்தில் இருந்தவை அங்கே நடத்த சிங்களக் கலவரத்தில் சிங்கள காடையர்களால் அடித்து விரட்டப்பட்டுத்தான் இங்க வந்தவை. இங்கேவந்தும் இன்னும் எங்களுக்கு என்று ஒரு காணி இல்லை யாழ்ப்பாணத்து துரைஐயாவின்ர காணி ஒன்றிலைதான் நாங்கள் ஒருவீடு கட்டி இருந்தனாங்கள். ஆனையிறவு ஆமி அங்கேயும் ராணுவ நடவடிக்கை என்று வெளிக்கிட்டான் தம்பி உடுத்த உடுப்போட ஒன்டுமே எடுக்கேல கால்போன போக்கில ஓடிவந்தம் இப்ப மாலிகா குடியிருப்பில எங்கட பிள்ளையள் (இயக்கம்) காலேக்கர் காணி தந்து அதில உந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைக் கொண்டு ஒரு ஓலைக் குடிசையும் போட்டுத் தந்திருக்குது.

இனியாவது நாங்கள் நின்மதியாய் இருக்கலாமோ என்டால் அவன் இஞ்சையும் வரமாட்டான் என்று சொல்ல என்ன உத்தரவாதமிருக்கு அந்த மனிசனும் என்ன செய்யுறது எந்தப் பக்கப் பிரச்சனை என்று பார்க்கிறது நாங்கள் என்டாலும் ஒன்றாய் நின்று அந்த மனிசன்ரை கையைப் பலப்படுத்தவேணும் அம்மா கூறும் வரை அவளுடைய கதையை மிக ஆழமாக மனதில் பதித்தபடி அம்மா ஓமம்மா அப்படித்தான் நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தமென்றால் அவன் எந்த மூலைக்கு நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். இப்ப உங்கட ஊர்ப்பக்கம்தான் சண்டை துவங்கியிருக்கு கிராமியப்படைக்கு நிறைய வேலை இருக்கு முதல்ல அதைச் செய்யுங்கோ பிறகு நான் சொல்லுறன். ஒருவாறு அம்மாவைச் சமாதானப்படுத்திவிட்டேன் என்று எண்ணியடி நிமிர்ந்தவனைப்பார்த்து அது சரி கிராமியப்படைக்கு என்ன முக்கியமான வேலை பொறுப்பாளர் கூறுகின்றபோது ஒவ்வொன்றாக விழிகளை உயர்த்தியபடி கேட்டிருந்த அம்மா நீண்ட ஒரு பெருமூச்சுடன் நான் இனியவனுக்கூடாக என்னுடைய வேலைகள் எல்லாம் செய்கிறேன். அப்ப நான் போட்டுவாறன் என்றபடி விடைபெற்றாள். அம்மா போகிற வேகத்தைப் பார்த்தபடி கிராமியப்படை எங்கட மக்கள் எப்படி எல்லாம் இந்தப்போருக்கு முகம் கொடுக்கினம் களமுனையில நிக்கிற போராளிகளுக்கு உலர்உணவு சேகரித்தல், காயப்பட்ட போராளிகளுக்கு ஏற்ப்பட்ட குருதியிழப்பை ஈடுசெய்ய மக்களிடம் நிலமையை விளக்கி இரத்ததானம் செய்யக்கூடிவர்களை இனங்கண்டு அவசரமாக தேவைப்படும் இடத்திற்கு அவர்களை அழைத்து வந்து இரத்ததானம் செய்வது, இவற்றை விட களமுனையில காயப்பட்ட போராளிகளைப் பராமரித்தல் இப்படி பல பின் தளவேலைகள் கிராமியப் படையாக எங்களுடைய மக்கள் எவ்வளவு பெரிய வேலைகளை சுமந்தார்கள் குறிப்பாக எல்லைப்படை என்றால் நு}ற்றிற்கு 80மூவீதமானர்கள் குடும்பஸ்தர்கள் இந்த குடும்பத் தலைவர்களில் அதிகமானவர்கள் அன்றாடம் கூலி வேலைக்குப் போனால்த்தான் அன்று அவன் வீட்டில் அடுப்பெரியும். இவர்கள் எல்லைப்படையாக தமது பத்துநாள் பணிக்குச் செல்வதென்றால் அந்தப்பத்து நாளுக்கும் அவர்களின்; குடும்பம் நினைக்கவே நெஞ்சு கனக்கும்.

என்ன செய்வது கிராமப் படையிடையே தோற்றம் பெற்ற போர் எழுச்சிக்குழு வீடுவீடா அரிசி, சிறுதொகை நிதி என்று சேகரிக்கும். அதிலும் மறக்க முடியாத சம்பவங்கள் நிறையநிறைய அரிசி சேகரிக்கும் போர் எழுச்சிக்குழு ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு சொப்பிங் பாக் கொடுத்திருப்பார்கள். வீட்டில உலையிலே அன்றைதினம் கஞ்சிக்காகத்தான் அரிசி போடுவதானாலும் அதில ஒருபிடி இந்தச் சொப்பிக் பாக்கிலும் விழும் இப்படியாக சிறுகச் சிறுக சேகரித்து பத்தாம் நாள் பக்குவமாக போர் குழுவின் கையில் கொடுப்பார்கள். எல்லைக்குப் போனவன் திரும்பிவரும்வரை மூச்சைப் பிடித்திருக்க இந்த அரிசி அக்குடும்பங்களுக்கு ஆதார தேவதையாக ஆகி நிற்கும் எல்லைக்குப் போகிற போது ஒவ்வொரு குடும்பத்தலைவர்கள் அண்ணை போட்டுவாறம் நான்வரும் வரை வீடு கவனம் ஒருவன் கூறுவான். அடுத்தவன அண்ணை; மூத்தவனுக்கு மலேரியா நேற்றுத்தான் மருந்தெடுத்தது கவனம். அண்ணை; என்ரை அவளுக்கு இதுதான் தலைப்பிரசவம் இதுதான் மாதமும் கவனம். இப்படியாக ஒவ்வொரு சுழற்சிக்கும் அவர்கள் செல்கின்ற போதெல்லாம் மிகக் கவனமாகவே கேட்டுக் கொண்டு அவர்கள் சென்றபின் அவர்கள் திரும்பிவரும் வரை அந்தக் குடும்பங்களின் சுமைகளை தானும் ஒருவனாக சுமந்து கொண்டு வெடி கேட்கின்ற போதெல்லாம் யார் யாரோ எவர் எவரோ சீச்சி அப்படி ஒன்றும் நடக்காது என்ரை சனத்திற்கு ஒன்றும் நடக்கக்கூடாது என்று எண்ணியபடி பொறுப்பாளர் பார்த்து நின்றால் போனவர்கள் தங்கள் கடமை முடித்து திரும்பி வருவார்கள். வந்தவர்கள் ஒரு கிழமைக்கு கடும் சோகமாக காணப்படுவார்கள். ஏன் அண்ணை போகேக்க நல்ல உசாராக சந்தோசமாக போனீர்கள் போய்வந்து ஏன் இப்படி. நீள இழுந்து நெடுமூச்சு விட்டபடி இல்லைத்தம்பி களமுனையில எங்கட பிள்ளையள் என்ன சாப்பாடு தம்பி நாங்கள் எவ்வளவு பரவாய் இல்லை. கஞ்சியும் கத்தரிக்காயும் சிலவேளை மரவள்ளிக்கிழங்கும் சே.. எவ்வளவு கஸ்டங்களை எல்லாம் எங்களுக்காக இந்தப் பிளளைகள் சுமக்குதுகள்.

கிராமத்திலே வேகம் வேகமா இந்த செய்தி அடிபடும் போர் எழுச்சிக் குழுவிடம் முட்டை மாவென்றும் பொரித்த உணவுப் பண்டங்கள் என்றும் அவசரம் அவசரமாக ஒன்று சேர்ந்து வேகம் வேகமாக வாகனங்களில் ஏற்றிக் கொண்டு கிராமியப் படையும், போர் குழுவும் களமுனைக்கு கொண்டு சென்று தங்களின் கைகளில் தங்கள் போராளிப் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டி கட்டி அனைத்து முத்தமிட்டு கண்ணீர் மல்க கதை பேசும். உங்களால தான், நீங்கள் கண்விழித்து காவல் காப்பதால் தான், நாங்கள் ஊரில வீட்டில நிம்மதியாய் து}ங்கினம். இப்படியான பணிகளை எல்லாம் மிக நேர்த்தியாக தெய்வானை அம்மாவும் செய்து வந்தாள். பெண்களையும் எல்லைப்படைக்குச் சேர்க்கிறார்கள் என்றதும் வேகமாக வந்த தெய்வானை அம்மா ஆனந்தகூத்தாடினார். இனி இவர் என்ன செய்யப்போறார் பாப்பம் என்னண்டு எங்களை மறிக்கப்போறார். அம்மா அழுத்தம் திருத்தமாக பேசினாள். மிக நேர்த்தியாக இளசுகளுடன் தானும் ஒருத்தியாக எல்லைப்படைப் பயிற்ச்சி பெற்றவள் பெண்பிள்ளைகளுடன் எல்லைப்படையாக தங்கள் பணியினை தொடங்கினாள். இப்ப அம்மாக்கள் இல்லை அடுத்தமுறை அதுக்கடுத்தமுறை என்று பலதடவைகள் பொறுப்பாளர் தெய்வானை அம்மாவை எல்லைப்படைக்கு அனுப்பாது கிராமிய படைக்கான பணியை செய்யுமாறு வேண்டினான்;. ஒருநாள் காலையில் எல்லைப்படை பெண்கள் அணி புறப்படத் தயாராகிறது தெய்வானை அம்மாவும் நீளக்கால்; சட்டையும் சேட்டும் அணிந்தபடி தலையைச் சீவி இரட்டைப்பின்னல் போட்டு புலிப்பெண்பிள்ளைகள் போல் புலித்தாயும் புறப்பட ஆயத்தமானாள்;. இன்றும் பொறுப்பாளர் சொன்னான் அம்மா! அம்மா!! அவள் எதையும் காதில் வாங்காது இண்டைக்கு என்னை யாரும் மறிக்கேலாது. நான் போறது போறதுதான் கள்ளமான ஒரு கோவத்தை வரவழைத்துக்கொண்டு பொறுப்பாளரின் பக்கம் பாராமலே புறப்படுவதுதான் என்ற இறுமாப்புடன் காணப்பட்டாள்.

அம்மாவிடம் தோற்றுப் போன பொறுப்பாளர் அணித்தலைவரிடம் அம்மா அடம்பிடிக்கிறாள் பிரச்சனை இல்லை அம்மாவைக் கூட்டிப்போங்கோ முன்னரனுக்கு விடவேண்டாம். சரியோ பின்னுக்கு உணவு எடுத்துக் கொடுத்தல். நீராகாரம் கொடுத்தல் என பல பின்தள வேலைகளுண்டு தானே. சரி கவனம் போட்டு வாங்கோ வெற்றிக்களிப்புடன் டேய் தம்பி அம்மா பிள்ளையில கோவிப்பனே சும்மா ஒரு இதுதான்ரா கையசைத்தபடி விடைபெற வழி அனுப்பிவிட்டு வெறித்த முகத்துடன் வாகனம் புறப்பட்ட திசையில் வாகனம் தன் கண்ணில் இருந்து மறையும் வரை தன்னை மறந்து நின்ற பொறுப்பாளரை அண்ணை வாங்கோ என்றான் வரதன் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தன் கடமைக்கு தயாராகினான் பொறுப்பாளர், நாட்கள் மூன்று நகர்ந்து விட்டது. தெய்வானை அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் மகனிடம் கொடுக்கும்படி பொறுப்பாளர் முகவரியிட்டு தம்பியும் வாசிக்கமாட்டான். இவரும் வாசிக்கமாட்டார் தம்பிக்கு கடிதத்தை வாசித்துக் காட்டவும். வரதன் ஏறுங்கோ என்றபடி மாலிpகா குடியிருப்பு நோக்கி புறப்பட்டது. மோட்டார் சைக்கில் சிவராசா அண்ணரின் வீடு இதுதானே என்றபடி உள்ளேநுளைந்தபோது நல்ல மதுபோதையில் மிதந்தார் சிவராசா அண்ணர். அண்ணே என்ன இது ஏன் இப்படி சீ எவ்வளவு சரியில்லை மகன் எங்கே என்றதும் முற்றத்தில் நின்ற நாவல் மரத்தில் சிரித்தபடி அம்மா எப்ப வருவா அம்மா வாறாவோ என்று பார்த்துக்கொண்டு நிக்கிறான். இதில இருந்து பார்த்தால் து}ரத்தில் வரவே எனக்குத் தெரியும் இடையில நான் ஓடிப்போய் மறைந்து நின்று டோம் என்று சத்தம் போடுவன் அம்மா பயந்துபோவா என்று கூறியபடி இறங்கி வந்தான். வந்தவனின் தலையை வருடியபடி அம்மா இன்னும் ஒரு கிழமையில் வந்திடுவா இபபபிள்ளைக்கு கடிதம் கொடுத்து விட்டவ அதுதான் கொண்டுவந்தனாங்கள். கடிதத்தை வாசிக்கட்டோ இல்லை நீங்கள் வாசிப்பீர்களோ தயங்கித்தயங்கி இல்லை இல்லை நீங்கள் வாசியுங்கோ. சரிவாசிக்கிறன். கவனமாய் கேட்கவேணும் என்ன? அன்புள்ள அப்பாவுக்கும் என்ரை அன்பு மகனுக்கும் நான் நலம் நீங்களும் நலமே இருக்க புளியம்பொக்கனை நாகதம்பிரான் துணை புரிய வேண்டுகிறேன்.

அப்பா நீங்கள் கவலைப்படக்கூடாது. நான் இல்லை என்று கடுமையாய்க் குடிக்கக்கூடாது. பிள்ளை கவனம் நான் ஒரு கிழமையில் வந்திடுவன் தம்பி கவனம், உங்களோட வைச்சுக்கொண்டு படுங்கோ.

மேலும் மகனுக்கு அப்பன் அம்மா இன்னும் ஒரு கிழமையில் வந்திடுவார் குழப்படி விடாமல் இருக்கவேணும். கிணத்தில் தண்ணி அள்ளக்கூடாது. குளப்பக்கம் போகக்கூடாது. அப்பாவுடைய சொல்லுக்கேக்க வேணும் அச்சாப்பிள்ளையாய் இருக்கவேணும். அம்மா வந்திடுவேன் நன்றி. அன்புள்ள அம்மா மனைவி கடிதம் வாசித்து முடிந்தது அப்பாவும் பிள்ளையு மாக சேர்ந்து சிறிது நேரம் மௌனமாக நின்றனர். தலைகுனிந்தபடி நிலத்தில் விரல்களைக்கோடுபோட்டபடி இருந்த சிவராசா அவர்கள் தலையை நிமிர்;த்தி தன்ரை ஆசைக்கு ஒருக்கபோக வேணும் என்று சண்டை போட்டுக்கொண்டுதான் போனய் வரட்டும். இனி விடமாட்;டான். கடசிவரையும் இனிவிடுவதே இல்லை. நல்லவிசயமண்ணே இனி அவவை விடவேண்டாம் விடக்கூடாது வேறு என்ன என்ன சமைத்தனீங்கள் இரவுக்குமாக சேர்த்து சோறு ஆக்கினான் சைக்கிளில்ல வந்தவங்களிட்டை சூடை மீன் கிலோ வேண்டினன் மதியம் தம்பி சாப்பிட்டிட்டான் நான் சாப்பிடுவன். பிரச்சினை இல்லை. அது சரி நீங்கள் சாப்பிட்டீங்களா ஓம் அண்ணை இப்ப. இப்ப தான் வாற வழியிலே வீரச்சாவு அடைந்த முரளியின்ரை நாற்பத்தி ஐந்தாம் நாள் அங்கே சாப்பிட்டிட்டு வந்தம் சரி வேறு என்ன ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ நாங்கள் போட்டு வாறம் தம்பி கவனம் என்றபடி விடைபெற்றுச் சென்றான் பொறுப்பாளர்.

மறுநாள் காலையிலை 9.00 மணியிருக்கும் குமரன், குமரன் திலீபன் தொலைத்தொடர்புச் சாதனம் அலறியது. இளந்தேவன் பதிலளித்தான் ஓமோம் குமரன் தான் சொல்லுங்கோ (குமரன் என்பது செயலகத்தின் குறியீட்டுப் பெயர்) குமரன் என்னெண்டால் பொறுப்பாளருக்கு சொல்லுங்கோ. உங்கட இடத்தில இருந்து வந்த எல்லைப் படையில் ஒரு அம்மா வீரச்சாவு, இரவு நடந்த நேரடி மோதலிலே சிவராசா தெய்வானை, மாலிகா குடியிருப்பு, தருமபுரம், பின்னேரம் வித்துடல் கிடைக்கும். வீட்டிற்கு தெரியப்படுத்தி வீரச்சாவு நிகழ்வுக்கான ஒழுங்குகளை செய்யுங்கோ. இளந்தேவன் துடிதுடித்தபடி பொறுப்பாளரிடம் ஓடி வந்தான். வேகமாக ஓடி வந்தவனைப் பார்த்து என்ன தம்பி இப்படி ஓடி வாறியள் என்ன விசயம் ஏதும் முகத்தை கூர்ந்து கவனித்தான் இல்லை அண்ணை எங்கட எல்லைப் படையில .. எல்லைப் படையில மேலே ஏதும் பேச முடியாதவனாக கையிலே இருந்த ஒரு விபரத்தினை நீட்டியவன் உதட்டைக் கடித்தபடி வேகமாக திரும்பினான். அவன் கொடுத்த விபரத்தை பார்த்ததும் பொறுப்பாளர் விக்கித்து நின்றார். சிறிது நேர அமைதிக்குப் பின்னால வரதன் வரதன் பலமாக கத்தினான் இந்தா இந்த விபரத்தைப் பார் அண்ணே நேற்றுத்தானே நாங்கள் போட்டு வந்தனாங்கள், அடக்கடவுளே இது என்ன கொடுமை இப்ப என்னண்டு போறது சிவராசா அண்ணை இதைத் தாங்கமாட்டார் பாவம் பெடியன்.

அவன் என்ன செய்யப் போறான் ஓயாமல் புலம்பிய வரதனைப் பார்த்து தன்னை நிதானப்படுத்தி சுதாகரித்துக் கொண்டு தம்பி என்ன செய்யிறது நாங்கள்தானே முகங்கொடுக்க வேண்டும். எங்கே சுபாவையும் ராஜனையும் கூப்பிடு. ஏற்கெனவே இந்த நிகழ்வினை எல்லாம் கவனித்துக் கொண்டுநின்ற இருவரும் என்னண்னே எப்ப வருமாம் வித்துடல் இன்று பின்னேரம் வருமாம் நீங்கள் வீட்டிற்குப் போய் தெரியப்படுத்துவதுடன் எல்லா ஒழுங்குகளையும் கவனமாகச் செய்யுங்கோ. சரியா? விடைபெற்றச் சென்றார்கள்; சுபாவும் ராஜனும் .; வீரச்சாவு நிகழ்வு என்றால் வீட்டிற்குத் தெரியப்படுத்தும் பணி இவர்களுடையது. இவர்கள் இருவரும் போராளிகளாக இல்லாத போதிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு தங்கள் கடமை செய்வார்கள். பல சந்தர்ப்பங்களில் வீரச்சாவு என அறிவிக்கச்சென்று அடிவாங்கி காயப்பட்டவர்கள். வித்துடலை வீட்டிற்குப் பக்குவமாக எடுத்துச்சென்று கொடுப்பதுடன் மாவீரர் துயிலும் இல்லத்திலே விதைக்கின்றவரை ஓயாமல் உழைத்தவர்கள். இன்றும் தங்கள் கடமைக்குப் புறப்படும்போதே பொறுப்பாளர் சொன்னார் போகிறார்கள் அடிவிழுதோ. உதைவிழுதோ ஆனாலும் ஆகவேண்டியதை அப்படியே செய்வார்கள்.

மாலை வேளை 4.00 மணியளவில் வித்துடல் பேளையைச் சுமந்தபடி கன்ரர் வாகனம் செயலகத்தின் முன்னால் வந்து நிற்கவும் எதிhபார்த்துக் காத்திருந்த பொறுப்பாளர் வரதன் பெட்டியைத் திறந்து பாருங்கோ விபரம் எல்லாம் சரிபாருங்கோ என்றவன் அம்மா போகின்றபோது தன்னுடன் போட்ட சண்டையினை இரைமீட்டு இரைமீட்டு அசைபோட்டான். பைத்தியம் பிடித்தவன்போல ஏதோ தன்னுடைய செவிகளுக்குமட்டும் கேட்கும்படி சொல்லிக் கொண்டிருந்தான். ஓ. அம்மாவின் சாவு ஒரு தனிமனித சரித்திரம் இல்லை ஒரு இனத்தின் விடுதலைக்காக இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொரு தனிமனிதனும் தான்தான் செய்ய வேண்டிய பணியினைச் செவ்வனே செய்துமுடித்துவிட்டு நின்மதியாகத் து}ங்கிறாள் அம்மா முடிந்து போகவில்லை. தொலைந்து போகவில்லை. ஒரு இனம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய உயிரைக் கொடுத்துள்ளாள். ஒரு இனத்தினுடைய உயிர்ப்பாதுகாப்பிற்காக ஓரு உன்னதமான ஈகம் செய்திருக்கிறாள். தனக்குத்தானே சமாதானம் சொன்னவன் சரிசரி எல்லாம் சரிதானே வரதன் மோட்டார் சைக்கிளை எடுங்கோ வாகன சாரதியைப் பார்த்து தம்பி நாங்கள் முன்னுக்குப் போறம் பின்னாலை நீங்கள் வாங்கோ.

மெதுமெதுவாக வருகின்ற வாகனத்தின் வேகத்திற்கு ஏற்றாப்போலை மோட்டார் சைக்கிளை செலுத்தினான் வரதன். மாலிகா குடியிருப்பினை நெருங்குகின்றபோது வெளிவீதி இருபக்கமும் தோரணங்களால் மஞ்சள் சிவப்புக் கொடிகளால் மக்கள் தங்கள் கிராமத்தை அலங்கரித்து வைத்திருந்ததார்கள். வீடு நெருங்க நெருங்க நெஞ்சுக்குள்ளே இனம் புரியாத ஒரு வேதனையால் துடிதுடித்துப் போனான் பொறுப்பாளர், வீட்டை நெருங்கியதும் மெதுவாக சற்றது}ரத்திலே இறங்கியவன் அம்மாவின் வீட்டுப்படலை நெருங்கியதும் எங்கிருந்தோ புயல் வேகமாக சிவராசா அண்ணன் தனது தலையிலே ஓங்கிஓங்கி அடித்து கொண்டு ஓடிவந்தான். பொறப்பாளரைப் பார்த்து ஐயோ ஐயகோ நேற்றுத்தானே வந்தனீங்கள் இண்டைக்கு இப்படிக் கொண்டு வாறியளே தன்பலம்காட்டி பொறுப்பாளர் நெஞ்சிலே தனது இரு கைகளாலும் மளமளவென்று குத்திக்குத்தி கதறி அழுதான்;. இனி என்ன செய்யப்போறம் அண்ணே எங்கள் இரண்டு பேரையும் இப்பிடி நடுத்தெருவில் விட்டிட்டு அவமட்டும் நிம்மதியாயப் போட்டாவே. அடியை நிறுத்தி இறுக அணைத்தபடி பொறப்பாளரின் நெஞ்சிலே முகம் புதைத்து தேம்பித் தேம்பி அழுதவனை மெதுவாக முதுகினை வருடியபடி அண்ணே அழாதேங்கோ அழாதேங்கோ நாதளதளக்கச் சிவராசா அண்ணனை ஆறதல்படுத்திய பொறுப்பாளரின் இடுப்பினை இன்னொரு பிஞ்சுக்கைகள் இரண்டு கட்டிப்பிடித்தது. மாமா என்னமாமா அம்மாவுக்கு என்ன நடந்தது மாமா ஒரு கையால் குழந்தையின் தலையை வருடிக்கொண்டு விக்கித்த படிநின்றான். வித்துடல் பேளையை இறக்கி நால்வர் சுமந்துவந்து வீட்டமுற்றத்தில் அமைக்கப்பட்ட பந்தலுக்குக் கொண்டுவந்து பெட்டியை இறக்கும்போது வானைப்பிளக்க ஓவென்று அலறும் அவல ஓசை தெய்வம் எங்கட தெய்வம், என்ரை தெய்வம் சத்தம்கேட்டுத் திடுக்கென்ற சிவராசா அண்ணனும் மகனுமாக பந்தலில் வைக்கப்பட்டிருந்த வித்துடலை நோக்கி விரைந்து ஓடினார்கள் வித்துடல் தெரியாதவாறு அம்மாவின் தாயாரும் சகோதரிகளும் கட்டி அணைத்தபடி கதறி அழுதுகொண்டிருக்க அப்பாவும் பிள்ளையுமாக வித்துடலருகே விடுங்கோ எங்களைவிடுங்கோ என்னைப் பாக்கவிடுங்கோ என்ரை தெய்வத்தைப் பாக்கவிடுங்கோ ஐயோ ஏனணை இப்பிடிச் செய்தனீ எங்களைத் தனியவிட்டிட்டு நீமட்டும் நிம்மதியாய் போக எப்பிடியனே உனககு மனம் வந்தது.

ஐயோ என்னாலை ஏலாது ஐயோ ஐயோ என்று அலறியவன் மூச்சடங்கி விழிமேல செருக மெதுவாக சோர்ந்து விழுந்தவனை உறவுகள் தாங்கிப்பிடித்து ஒரு ஓரமாக படுக்கவைத்து காற்றுப்படும்படி கவனப்படுத்தினார்கள். இதுவரை அம்மாவைப்பார்த்து வாயிலை வந்தபடி எல்லாம் சொல்லிச் சொல்லி அழுத அவளின் ஒரே ஒரு செல்லக்குழந்தை தேம்பித்தேம்பி அம்மா நான் குழப்படி விடமாட்டன், குழத்திற்குப் போகமாட்டன், ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போவன் எழும்புங்கோ அம்மா என்ரை அம்மாவல்லே எழுங்புங்கோ அம்மா என்னை ஒருக்காப் பாருங்கோ அம்மா என்றவன் தந்தை மயங்கி விழுந்ததைக் கண்டதும் மேலும் வீரிட்டான். அப்பா அப்பா அப்பாவும்.. அம்மா அப்பா அப்பாவும் முகத்தைத் தடவித்தடவி அழுதான் எழும்புங்கோ அப்பா அம்மாவை என்னோடை கதைக்கச் சொல்லுங்கோ அப்பா!

பார்த்திருந்த மக்கள் கூட்டம் தங்களைக் கட்டுப்படுத்தமுடியாது விக்கித்து விக்கித்து தேம்பி அழுதனர். பல வீரச்சாவுகளைப் பல சோகங்களைத் தாங்கி நடந்துவந்த பயணத்திலே இது ஒரு புதுவிதமானது. இதுவரை பல வீரச்சாவுகள் அத்தனையும் இளைஞர்கள், யுவதிகள் ஆனால் இந்தவீரச்சாவு இன்னொருவிதமானது.

சங்ககால இலக்கியங்களிலே புறநானு}ற்றுத் தாயைக் கேள்விப்பட்டிருக்-கிறோம். முதல்நாள் போரிலே தந்தை, மறுநாள் போரிலே கணவன், போர் முழக்கம் ஓயவில்லை தன் ஒரே குழந்தையையும் போருக்கு அனுப்பினாள். இது வரலாறு சொல்லும் பாடம், ஆனால் இன்று எம் சந்ததியினரின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும் நாம்பட்ட துன்பதுயரங்கள் எங்களுடனே முடியட்டும். தமிழர்களின் வரலாற்றிலே ஈழத்தமிழ்ப் பெண்களென்றால் யார் என்று ஒரு பரணி எழுதிவிட்டாள். தெய்வானை புருசனை, பிள்ளையைப் போருக்கு அனுப்பினாள் புறநானு}ற்றுத் தாய், பிள்ளைக்காக தமிழ் மக்களுக்காக தன்னுயிரை ஈந்தாள் தமிழீழத் தாயிவள். மாலதி மூட்டிய தீயினிலே தாயிவள் தானும் சேர்ந்து கொண்டாள். மனதிற்குள் ஆயிரம் எண்ண அலைகள் மேலிட அடுத்து நடக்க வேண்டியவற்றிற்கு ஆயுத்தமாயினர் போராளிகளும் பொறுப்பாளர்களும்.

மறுநாள் காலை 10.00 மணி அலங்கரிக்கப்பட்ட ஊர்த்தியிலே அம்மா தெய்வானையின் வித்துடல், அமைதியாக மிக அமைதியாக வீதியிலே ஊர்வலமாக குடியிருப்பு மக்கள் புடைசூழ மாவீரர் நினைவுமண்டபம் நோக்கி நகர்ந்தது. பல்லாயிரக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலி தான் நேசித்த மக்களின் தான் கூடிக்குலாவித்திரிந்த தோழியரின் இறுதி அஞ்சலி தன் தாயின் தன் உடன்பிறப்புக்களின் தன் கணவனின் ஓ தான் ஈன்றெடுத்த தவப்புதல்வனின் இறுதி அஞ்சலி மலரால், மலர்மாலைகளால் நிறைந்த வித்துடல் பேழை வீதியின் இருபக்கமும் வீட்டு வாசல்களில் விளக்கேற்றி வித்துடலின் காலடியில் மலர்;சொரிந்து வீரத்தாயினை விடைகொடுத்து வழி அனுப்ப நிறைந்தது வீதி எங்கும் மக்கள் வெள்ளம் விடைபெற்ற தாயிவளை விதைத்தோம் நாம் துயிலும் இல்லத்தில் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திலா? விதைத்தோம் இல்லை தமிழ் மக்களின் இல்லங்களில் தமிழ் மக்களின் உள்ளங்களில் விதைத்தோம் விடிகின்ற தேசம் புலர்ந்திடும்போது மலர்கின்ற தமிழீழத்தில் மானத்தாயின் மாண்பினைக் காண்போம்

புலிகளும் மக்களுமாக தம்பலம்காட்டித் தம்மை அழிக்கவந்த பகைவனுக்கு நல்லபாடம் புகட்டினர், கிராமப்படை என்றும், எல்லைப்படை என்றும், போர் எழுச்சிக்குழு என்றும் தலைவரின் கரங்களுக்கு ஆதார துணையாக பணியாற்றினார். சத்ஜெய என்றும், ஜெயசுக்குறு என்றும்,; தீச்சுவாலை என்றும் பகை எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் புலிகளுடன் வன்னிமக்கள் போர்க்கோலம் புூண்டு முறியடித்தனர், எதிரியின் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் உள்ளமக்களும் பொங்குதமிழ் என்றும், சங்கே முழங்கு என்றும் தமிழ் எங்கள் உயிர் அந்த உயிரே பிரபாகரன் என்றும் பொங்கி எழுந்து புலிகளின் போருக்கு புதுவேகமூட்டினர். புலம்பெயர்ந்த உறவுகளும், சர்வதேச அரங்கிலே புலிகளின் போரென்பது தமிழீழ விடுதலைப்புலிகள் வாழ்வதற்கான போரல்ல. அது அனைத்துத் தமிழ்மக்களினதும் மொழியைப் பாதுகாப்பதற்கான போர், தமிழ்நிலத்தை மீட்பதற்கான போர், தமிழினம் தன்மானத்தோடு, சுயமரியாதையோடு, சுயகௌரவத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான போர் என்று தாம்வாழும் அனைத்து நாடுகளிலும் போர்முழக்க மிட்டனர். சர்வதேசமும் விழித்துக் கொண்டது. தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஒரு பெரும் சக்தியாகப் புலிகள்தான் தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள், புலிகளே மக்கள், மக்களே புலிகள் என்று உரத்துப்பறை சாற்றினர். தலைவர் பிரபாகரனின் போர்வியுூகம் ஓயாத அலையாக உருவெடுத்ததால் பகை பணிந்து இன்று போர் நிறுத்தம், பேச்சவார்த்தை, சமாதானம் எத்தனை நாளைக்கு இத்தனை வேசம் வரலாற்றை மீட்டபடியே இன்றும் எம்மக்கள் எது எப்போது எந்தவடிவத்தில் வந்தாலும் தாய்க்கோழியாகத் தலைவன் பிரபாகரன் எமைக்காப்பான் என்ற எண்ணத்தோடு இன்றும் எம்மக்கள்.

காலம் உருண்டோடியது. பொறுப்பாளரும் பணிநிலை மாற்றம்பெற்று இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தான். திடீரென எதையோ உணர்ந்தவனாக தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாகப் புறப்பட்டான். தெய்வானை அம்மாவின் துணைவனும், அவவின் செல்லக்குழந்தையின் நினைவுமாக அவர்களின் வீட்டுக்குச் சென்றவன் வீட்டில் யாரும் இல்லை என்ன இது எங்கே போயிருப்பார்கள் அயலில் உள்ளவர்களை விசாரித்தான். தம்பிஅவள் போனதோடை அந்தாள் ஒரே குடியடா, பெடியனைக் கொண்டுபோய் சின்னத்துரையின் வீட்டில் மாடு மேய்க்க விட்டிருக்கு, கதை சொல்லிமுடியுமுன் எங்கே அந்த சின்னத்துரையின் வீடு. இப்ப சிவராசா அண்ணன் எங்கே நிற்பார். ஏக்கத்துடன் கேட்டான். பொறுப்பாளர் பதில்கேட்டு விரைந்து சென்றான். நல்ல நிறைவெறியில் கள்ளுக்கொட்டில் ஒன்றில் கண்டுகொண்டான். நா தடுமாறியபடி த..ம்பி…. வாங்கோ என்றவனை அணைத்தபடியே வெளியே கூட்டிவந்து அண்ணை இது என்ன கோலம், சீச்சீ உங்களை நம்பித்தானே தெய்வானை அக்கா .. இடைமறித்த சிவராசா அண்ணன் அவதான் போயிட்டாவே என்ரை சரசுவதி எங்களை விட்டிட்டு விம்ம்pனான். தனனைச் சுதாகரித்துக்கொண்டு அண்ணே அழதேங்கோ தம்பி எங்கே நான் அவனை உடனே பார்க்க வேணும் வாங்கோ ஏறுங்கோ மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்த கொண்டு ஏதேதோ எல்லாம் சொல்லிப் புலம்பியபடி பாதை காட்டினான். சின்னத்துரையின் வீட்டை நெருங்கினோம். கையிலே ஒரு சிறிய றேடியோவுடன் காற்சட்டை தெரியாதபடி அவனுக்கு அளவில்லாத ஒரு கசங்கிய சேட்டும் போட்டபடி நின்றான் அந்தச்சிறுவன். அப்பாவுடன் வந்த பொறுப்பாளரைக் கண்டதும் மெதுவாகத் தலையைக் குனிந்படி அருகே வந்தவனைத் தன்னோடு இறக அணைத்துக் கொண்டான் பொறுப்பாளர், பார்தம்பி பாருங்கோ தம்பி தெய்வா இருந்தால் இப்பிடி நடக்குமே சிவராசா அண்ணன் சிணுங்கினான்; வாருங்கோ அண்ணை வாருங்கோ என்று வரவேற்றார் சின்னத்துரை இவன்தான் தம்பி இப்ப என்ரை மாடுகளைப் பார்க்கிறான். மாதம் 450 ரூபா காசு கொடுக்கிறன்.

Link to comment
Share on other sites

பேச்சை இடையில் நிறத்தியவன் பொறப்பாளரின் முகத்தைப்பார்த்து ஏதோ புரிந்தவனாக ஏன்ஏன் தம்பி கூட்டிக்கொண்டு போகப்போறியளோ கொண்டுபோய் என்ன செய்யப்போறியள் பொறுப்பாளர் நிமிர்ந்து அண்ணை கோவிக்காதேங்கோ இது உங்கட பிழையில்லைஇ எங்கட பிழைஇ எங்கட தலைவர் தனிய எங்கட சனத்தை அழிக்கவாற எதிரியோட மட்டும் சண்டைபோடவில்லை. அப்பா. அம்மா இல்லாத அனாதைகளாகத் தமிழீழத் தேசத்தில் யாரும் இருக்கக்கூடாதுஎன்று செஞ்சோலைஇ அறிவச்சோலைஇ புனிதபுூமிஇ பாரதி இல்லம்இ குருகுலம்இ காந்தி இல்லம் இப்படி எத்தனை இடமெல்லாம் உருவாக்கி எங்கட மக்களுக்காகத்தானே ஒருதாயாகி அன்போடு அரவணைத்துப் பார்க்கிறார். அதில ஒரு இடம் இவனுக்கம் உண்டு. நான் இனி இவனை இங்கே விட்டிட்டுப்போக மாட்டன். தயவுசெய்து என்னுடன் அனுப்புங்கோ என்று முகத்தைத் திருப்பி சிவராசா அண்ணனைக் கேட்கவும் சிவராசா அண்ணன் மகனைப்பார்த்து போகப்போறியே என்று கேட்கவும் பொறுப்பாளரை இறுக அணைத்தபடி தம்பி ஓம் நான் மாமாவோடை போகப்போறன் என்றான் தம்பி சிவகுமார். மட்டற்ற மகிழ்வோடு அவர்களிடம் இருந்து விடைபெற்றவன் இருவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்து சிவராசா அண்ணனை வீட்டில் விட்டிட்டு தம்பி அப்பாவிடம் சொல்லிப்போட்டு வா என்றான். தகப்பன் குனிந்து முகத்தைக் கொடுக்க இரண்டு கன்னங்களிலும் தனது பிஞ்சுமுகம் புதைத்து முத்தமிட்டுச் சிறகுவிரித்த பறவையாக ஒரு புதுத்தெம்புடன் ஓடிவந்து பொறுப்பாளருடன் புறப்பட்டான். முகாம்வரும்வரை தம்பி நீபடிக்க வேணுமடா நல்லாப்படிச்சு பெரிய மனிதனாக வரவேணுமடா தலைவர் மாமா இரக்கிறார். நீ ஒருத்தருக்கும் பயப்படக்கூடாது என்று அறிவுரை கூறியபடி முகாமுக்குவந்து நின்று சக போராளிகளிடம் இவருக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்யும்படி பணித்துவிட்டு மிகவேகமாக விரைந்து சென்று தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடத்தும் காந்தி இல்லத்தில் அவனை இணைப்பதற்கான அனுமதியை அதன் நிறைவேற்றப் பணிப்பாளர் திரு. கே. பி. றெஜியிடம் அவனது வரலாற்றைகூறி அனுமதி பெற்றுவந்து சிவகுமாரை அழைத்து தம்பி நீங்கள் காந்தி இல்லம் சிறுவர் இல்லத்தில் நின்று படிக்கப் போறியள். மாமா அடிக்கடி அங்கே வருவேன்.

பிள்ளை கவனமாக நின்று படிக்க வேணும். சரியோஇ ஓம் மாமா நான் படிக்க வேணும் சிரித்தபடி தலையை ஆட்டி ஆட்டிப் பதிலளித்தான். இன்று அவன் ஆண்டு ஏழு படிக்கும் மாணவனாக காந்தி இல்லத்தில் ஒருவனாகப் படிக்கின்றான். திடீரென ஒருநாள் பொறுப்பாளரிடம் ஒருவன் வந்து நின்றான். அண்ணே வணக்கம்இ நான் தமிழ்ச்செல்வனிடம் இருந்து வருகிறேன் ஓம் தெரியும் என்ன விசயம் இல்லயண்ணே எங்கடை தலைவர் எல்லைப்படையில் வீரச்சாவடைந்த தெய்வானை அம்மாவின் மகன் இப்ப என்ன செய்கிறார் என்று விளக்கமாக அறிக்கை கேட்டிருக்கிறார். அதுதான் வீட்டைபோன நாங்கள் நீங்கள் கூட்டிவந்ததாக இழுத்தபடி முடித்தான். ஓமோம் கூட்டிவந்திருக்கிறேன். அவன் இப்ப. கதையைச்சொல்லி அவனை அனுப்பியதும் திகைத்து நின்றான். பொறுப்பாளர் தலைவருக்கு இருக்கின்ற இத்தனை வேலைச்சுமைகளுக்குள்ளேயும் அந்த அம்மாவின் வீரச்சாவு அவளுடைய மகன் இப்ப என்ன செய்கிறான் என்று அவர் கேட்டுள்ளாரே உண்மையிலே மக்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள் இப்படி ஒரு தலைமையைப் பெறுவதற்கு கோடானகோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். இவருடைய காலத்தில் தமிழினம் நிச்சயமாக விடுதலை பெற்றே தீரும். தமிழ்பேசும் அனைத்து மக்களுக்கும் தாயாகித் தமிழினத்தை அழிக்கவரும் பகைவனுக்கு தீயாகிஇ எம்தலைவன் உள்ளவரை அஞ்சற்க என்றபடி எழுந்து சென்றான் பொறுப்பாளன்.

நிதர்சனம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.