Jump to content

சந்தியாவின் சித்தப்பா


Recommended Posts

சித்தப்பா

அன்பின் உருவானவரே!

பாசத்தின் உறைவிடமானவரே!

தந்தைக்கு நிகர் அற்றவரே!

தாய் போன்று எமை வளர்த்தவரே!

தந்தையின் உடன் பிறப்பே!-

தந்தை போன்றே எமை காத்தவரே!

அறியா வயதில்

அப்பா முகம் பார்க்க ஏங்கியதில்லை – என்

அப்பாவாக நீங்கள் இருந்தீங்கள் - ஆனால்

தந்தையுடன் வாழ்ந்தாலும்

தங்கள் முகம் பார்க்க ஏங்கதா நாள்லிலை

அன்னை மடி தேடியதில்லை

அன்னை உருவில் உங்கள் அன்பு

ஆசைப்பட்டதை வாங்கியும் தந்தீங்கள் - என்

சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றியும் வைத்தீங்கள்

தப்புக்களை தட்டியும் கேட்டீங்கள்

வாழ்க்கையெனும் பாதையில் வீறு கொண்டு நடக்கவும் செய்தீர்கள்

தோல்விகளைக் கண்டு துவண்டிடும் போதெல்லாம் - அவை

தோல்வியல்ல வெற்றியின் அறிகுறி என்று உற்சாகப் படுத்தினீங்கள்

அன்னை சொல்ல கேட்டிருக்கிறேன் - எனக்காக

நீங்கள் கண் விழித்திருந்த இரவுகள் பற்றி

அயலார் சொல்லக் கேட்டிருக்கேன் - எனக்காக

நீங்கள் அர்ப்பணித்த உங்கள் வாழ்க்கைதனை

உண்மையிலே நீங்கள் உயர்ந்தவர்தான்

நீங்கள் மட்டுமா? உங்கள் தியாகங்களும் தான்

சித்தப்பா

Link to comment
Share on other sites

இது என் நெடுநாள் ஆசை சித்தப்பா பற்றி எழுதனும் என்பது இங்கு வந்து செந்தில் அண்ணாவின் சித்தப்பா கவியைப் படித்ததும் என்னையும் அறியாமல் கிறுக்கி விட்டேன்.

அத்துடன் இது வெறும் கவியல்ல செந்தில் அண்ணா சொன்னமாதிரி சித்தப்பாவுக்கு அனுப்ப வேண்டிய மடல்.

படித்துவிட்டு பிழைகளை சுட்டிக்காட்டவும்

Link to comment
Share on other sites

சந்தியா சித்தப்பா கவிதை நல்லா இருக்கு. உருக்கமான வரிகள் நெஞ்சை தொட்டு செல்கின்றன. வாழ்த்துக்கள் மேலும் கவி படைக்க

Link to comment
Share on other sites

நல்ல கவிதை சந்தியா!

அப்பா மேல கூட சில நேரம் கோவம் வரும்-

ஆனா சித்தப்பா ரொம்ப நல்லவர்- ஏனெண்டால் எங்களுக்கு - 4 சாத்து சாத்தணும் எண்டு அப்பா வரேக்க குறுக்க வந்து தடுப்பாரே :lol:

தொடருங்கள்! 8)

Link to comment
Share on other sites

இது என் நெடுநாள் ஆசை சித்தப்பா பற்றி எழுதனும் என்பது இங்கு வந்து செந்தில் அண்ணாவின் சித்தப்பா கவியைப் படித்ததும் என்னையும் அறியாமல் கிறுக்கி விட்டேன்.

அத்துடன் இது வெறும் கவியல்ல செந்தில் அண்ணா சொன்னமாதிரி சித்தப்பாவுக்கு அனுப்ப வேண்டிய மடல்.

படித்துவிட்டு பிழைகளை சுட்டிக்காட்டவும்

:cry: :cry: :cry: :cry:

«ý¨À ÒâóЦ¸¡ûÙõ ÁÉõ ¦¸¡ñ§¼¡Õì̾¡ý «ýÒ ¦ºÖòЧšâý ÁÉõ ÒâÔõ,¸Å¢¨¾ þ측¨Ä §¿Ãò¾¢ø ¸ñ½£÷ ÅÊ츨ÅòÐÅ¢ð¼Ð.Å¡úòÐì¸û

Link to comment
Share on other sites

வழமையாக அம்மாவின் சகோதரங்களுடன்தான் எங்களுக்கு அதிக ஈடுபாடு இருப்பது (மாமா. .சித்தி எண்டு) ஆனா வித்தியாசமாக அப்பாவின் உறவுகளின் பெருமையை கொண்டு வந்த சித்தப்பா என்ற கவி நல்லாக இருக்கிறது .........சந்தியா எனக்கெழுதிய மடலாக எடுத்துக் கொள்ளுகிறேன் நன்றியம்மா......

Link to comment
Share on other sites

சந்தியா சித்தப்பா பற்றி எழுதிய கவிதை நல்லாய் இருக்கு. எனக்கும் மிகவும் பிடித்தவர் சித்தப்பா. எனது சித்தப்பாவுக்காக எழுதியதாக எண்ணிக்கொள்கின்றேன். நன்றி

தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

சந்தியா சித்தப்பா கவிதை நல்லா இருக்கு. உருக்கமான வரிகள் நெஞ்சை தொட்டு செல்கின்றன. வாழ்த்துக்கள் மேலும் கவி படைக்க

நன்றி அக்கா தங்கள் கருத்துக்கு ம்ம் சித்தப்பா என்றால் எனக்கு உயிர் அதுதான் அவருக்காக இக்கவி

Link to comment
Share on other sites

நல்ல கவிதை சந்தியா!

அப்பா மேல கூட சில நேரம் கோவம் வரும்-

ஆனா சித்தப்பா ரொம்ப நல்லவர்- ஏனெண்டால் எங்களுக்கு - 4 சாத்து சாத்தணும் எண்டு அப்பா வரேக்க குறுக்க வந்து தடுப்பாரே :(

தொடருங்கள்! 8)

ஆம் அண்ணா அதுமட்டுமா பிறகு அண்ணன் என்று பார்க்காமல் எங்கள் மேல் உள்ள பாசத்திலை அப்பாக்கு நல்ல ஏச்சும் கொடுப்பார்.

நன்றி அண்ணா தங்கள் கருத்துக்கு

Link to comment
Share on other sites

:cry: :cry: :cry: :cry:

«ý¨À ÒâóЦ¸¡ûÙõ ÁÉõ ¦¸¡ñ§¼¡Õì̾¡ý «ýÒ ¦ºÖòЧšâý ÁÉõ ÒâÔõ,¸Å¢¨¾ þ측¨Ä §¿Ãò¾¢ø ¸ñ½£÷ ÅÊ츨ÅòÐÅ¢ð¼Ð.Å¡úòÐì¸û

செந்தில் அண்ணா நீங்கள் சொல்வதும் சரி ஆனால் எல்லோரும் கட்டாயமாக புரிந்து கொள்வார்கள் அந்த அன்பைப் புரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அப்படிப் பட்ட ஓர் புனிதமான அன்பு சித்தப்பாவின் அன்பு

Link to comment
Share on other sites

வழமையாக அம்மாவின் சகோதரங்களுடன்தான் எங்களுக்கு அதிக ஈடுபாடு இருப்பது (மாமா. .சித்தி எண்டு) ஆனா வித்தியாசமாக அப்பாவின் உறவுகளின் பெருமையை கொண்டு வந்த சித்தப்பா என்ற கவி நல்லாக இருக்கிறது .........

ஆமாம் தாத்தா நீங்கள் சொன்ன மாதிரித்தான் எனக்கும் அம்மாவுடைய சகோதரங்களுடன்தான் கூட ஈடுபாடு ஆனால் என் சித்தப்பா என் கூட தான் இருந்தார் அதைவிட நான் ஒரு நாளும் அவரை அப்பாவிலிருந்து பிரித்துப் பார்த்ததும் இல்லை.

சந்தியா எனக்கெழுதிய மடலாக எடுத்துக் கொள்ளுகிறேன் நன்றியம்மா......

சரி தாத்தா அப்படியே ஆகட்டும்

உங்கள் கருத்துக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

சந்தியா சித்தப்பா பற்றி எழுதிய கவிதை நல்லாய் இருக்கு. எனக்கும் மிகவும் பிடித்தவர் சித்தப்பா. எனது சித்தப்பாவுக்காக எழுதியதாக எண்ணிக்கொள்கின்றேன். நன்றி

தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி அக்கா ம்ம் கூடுதலாக எல்லோருக்கும் சித்தப்பாவென்றால் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை ரொம்ப நல்லாக இருக்கு

Link to comment
Share on other sites

சந்தியா கவிதை நல்லாயிருக்கு

எனக்கு சித்தப்பா இல்லை ஆனால் மாமாக்கள் இருக்கினம் இதே போல பாசத்துடன் உங்கட கவிதையை பார்த்ததும் தான்

பாசம் கட்டாயம் பகிரப்பட வேண்டியது தான் எண்டு நினைக்கிறன்

Link to comment
Share on other sites

எனக்கு சித்தப்பா இல்லை ஆனால் மாமாக்கள் இருக்கினம் இதே போல பாசத்துடன் உங்கட கவிதையை பார்த்ததும் தான்

பாசம் கட்டாயம் பகிரப்பட வேண்டியது தான் எண்டு நினைக்கிறன்

சரியப்ப ..........இண்டேலைஇருந்து என்னை அங்கிள் எண்டு கூப்பிடுறதை விட்டுட்டு சித்தப்பா எண்டு கூப்பிடுங்கோ உங்கடை ஏக்கத்தை தீர்த்து வைச்ச புண்ணியமாவது எனக்கு வரட்டும்

Link to comment
Share on other sites

சரியப்ப ..........இண்டேலைஇருந்து என்னை அங்கிள் எண்டு கூப்பிடுறதை விட்டுட்டு சித்தப்பா எண்டு கூப்பிடுங்கோ உங்கடை ஏக்கத்தை தீர்த்து வைச்ச புண்ணியமாவது எனக்கு வரட்டும்

சரி உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான் இன்றில்லிருந்து நீங்கள் தாத்தாவோ, மாமாவோ இல்லை சித்தப்பு சீ....சீசீ... சித்தப்பா

சரியா? இனியாவது அழாதைங்கோ :P :P :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.