Jump to content

ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய


Recommended Posts

கருணாநிதி அதிரடி வைத்தியத்தால் சர்ச்சைக்கு முடிவு

சென்னை, பிப்.21: திமுக தலைவர் மு. கருணாநிதியின் அதிரடி பேட்டியால் ம.தி.மு.க. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் பகிர்ந்து கொள்ள விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை பட்டியல் பிப்.15-க்குள் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது. சில கட்சிகள் பட்டியல் சமர்ப்பித்தன. சில கட்சிகள் எப்போது பட்டியல் தரப்படும் என தெரிவித்தன.

ம.தி.மு.க. மட்டும் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அதிமுக அணிக்கு மாறிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் மூத்த நிர்வாகி பேசி வந்தார். இதனால் சர்ச்சை எழுந்தது.

தொடர்ந்து சந்தேகம் இருப்பதை முடிவுக்குக் கொண்டு வர அதிரடி வைத்தியம் செய்தவர் கருணாநிதி. சனிக்கிழமை ( பிப்.18 ) நிருபர்களை சந்தித்த அவர், "வைகோ ஏதோ முடிவு செய்துவிட்டதைப் போலத் தெரிகிறது; அப்படி முடிவு செய்திருந்தால் நாங்களும் அதற்கேற்ப முடிவு செய்ய வேண்டும்' என்று கூறினார்.

பிப்.8 வரையில் வைகோவுக்கு ஆதரவாகவே பேசி வந்த, கருணாநிதி, தொடர்ந்து காத்திருக்க முடியாது என்ற நிலையில் சற்று கடுமையாகவே பிப்.18-ல் பேசினார்.

இதனால் அதிமுக தரப்பில் பேரம் பேசும் சக்தியும் ம.தி.மு.க.வுக்கு குறைந்துவிட்டது. திமுக அணியில் நீடிக்க வேண்டும் என்று இருக்கும் கட்சியை இழுப்பதாக இருந்தால் நிறைய தொகுதிகளை அதிமுக ஒதுக்க வேண்டியிருக்கும். ஆனால், திமுக கூட்டணி இழப்பதற்குத் தயாராகிவிட்ட ஒரு கட்சி, வேறொரு கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கொடுத்தால்தான் சேருவேன் என்று கூற முடியாது. அந்த வகையில் ம.தி.மு.க.வுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கிவிட்டார் கருணாநிதி.

2001 தேர்தலில் ம.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டபோது தென் மாவட்டங்களில் தான் கணிசமாக வாக்குகள் கிடைத்தன. ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து இறக்குவேன் என்று கூறி வேலூர் சிறை வாசலில் இருந்தே பிரசாரத்தைத் தொடங்கிய வைகோ, இப்போது அதே ஜெயலலிதாவுடன் கூட்டு சேருவதற்கு ஒரு காரணத்தைக் கூறியாக வேண்டும்.

"பொடா' சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வைகோவை சிறையில் அடைத்துவிட்டனர் என்று கூறி திமுக அணியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். ம.தி.மு.க. நடத்திய கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவளித்தனர்.

பா.ஜ.க. ஆட்சியில் "பொடா' மறு ஆய்வுக் குழு அமைக்கவும், ஆட்சி மாறியபிறகு அச் சட்டத்தையே ரத்து செய்யவும் காரணமாக இருந்தது இந்தக் கூட்டணிதான்.

இதையெல்லாம் மறக்கச் செய்யும் அளவுக்கு வலுவான காரணங்களைக் கூறி அதிமுகவுடன் சேர்ந்தால் மட்டுமே மக்கள் அதை ஏற்பார்கள். இல்லாவிட்டால், சிறைவாசத்தால் வைகோவுக்குக் கிடைத்த ஆதரவு, இப்போது கைவிட்டுப் போய்விடும் என்ற அச்சம் ம.தி.மு.க.வினருக்கு ஏற்பட்டது.

வைகோவைப் பொருத்தவரை கட்சியில் ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்டு நிறைய செலவு செய்த 300-க்கும் மேற்பட்டவர்களில் பலருக்கு இந்த முறை வாய்ப்பு தர வேண்டும் என விரும்பியதாகத் தெரிகிறது. வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ள இந்தத் தேர்தலில் எப்படியும் "சீட்' வாங்கிவிட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களும், முக்கியப் பிரமுகர்களும் ஆர்வம் காட்டினர்.

அதனால் ஏற்பட்ட நெருக்கடிதான் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

வைகோ எப்போதுமே திமுக அணிக்கு தான் ஆதரவு தெரிவித்து வந்தார். அவருக்கு நெருக்கமானவர்களின் பேச்சுதான் கருத்துவேறுபாடுகளை உருவாக்கிவிட்டன என ம.தி.மு.க.வினர் இப்போது கூறுகின்றனர்.

இப்போதைக்கு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இதை "கமா'வாக மாற்றி, மீண்டும் பிரச்சினையை உருவாக்க முடியாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதே உற்சாகத்தில் தொகுதிப் பகிர்வு பேச்சுகளையும் கருணாநிதி தொடங்கிவிட்டார்.

தட்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply

பெரும்பாலும் அனைத்து செய்தி தாள்களும் அவற்றின் சொந்த அபிலாஷைகளுக்கு ஏற்பவே செய்திகளை வெளியிடுகின்றன. வைகோ குறித்த செய்திகளிலும் அதே நிலை தான்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நாற்சந்தியில் வைகோ

- மு. சுந்தரமூர்த்தி

இன்னும் சில மாதங்களில் தமிழகம் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டன. எல்லா தேர்தல்களிலும் ஏதாவது ஒரு சிறு பிரச்சினை ஊடகங்களால் பூதாகரமாக்கப்பட்டு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளில் ரஜினிகாந்த் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். ஒருவழியாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அரசியலில் அவருடைய இடம் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இத்தேர்தலில் விஜய்காந்துக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்குமென்று நினைத்திருந்தேன். திடீரென்று மதிமுக தலைவர் தலைப்புச் செய்திகளை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவருடைய இடம் தமிழக அரசியலில் ஓரளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதெ

Link to comment
Share on other sites

வைகோ - ஜெயலலிதா கூட்டணி!

இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி உடன்பாடு கண்டார். நேற்று கலைஞர் கருணாநிதி "மதிமுகவிற்கு 22 தொகுதிகள் மட்டுமே வழங்குவோம், இதற்கு உடன்படாவிட்டால் அவர்கள் போகலாம்" என்று அறிவித்ததன் மூலம் மதிமுகவை தன்னுடைய கூட்டணியில் இருந்து வெளியேறும்படி செய்தார். கலைஞர் கருணாநிதியின் அறிவிப்பை அடுத்து மதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய வைகோ, நிர்வாகிகளினதும், தொண்டர்களினதும் விருப்பப்படி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்தார். இன்று ஜெயலலிதாவை சந்தித்த வைகோவிற்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக வைகோ விவகாரம் இழுபறி நிலையில் இருந்து வந்து இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. முன்பு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த பொழுதே, வைகோவின் கட்சி முதன்முறையாக வெற்றி பெற்று நடாளுமன்றத்திற்குள் சென்றது. தற்பொழுது அமைந்துள்ள கூட்டணி மூலம், வைகோவும் மதிமுக கட்சியும் சட்டமன்றித்திற்குள்ளும் செல்ல வேண்டும். இதுவே பலருடைய விருப்பமும்

www.eelamweb.com

Link to comment
Share on other sites

«ñ½ý ¨Å§¸¡ «Å÷¸Ç¢ý «Ãº¢Âø ¾ü¦¸¡¨ÄìÌ ¬úó¾ «Û¾¡Àí¸û

கட்டுரை ஆசிரியர் சொல்வதிலும் பிழை இல்லை ஆனாலும். வைகோ தன்னை வளர்த்துக் கொள்ளாததுதான் அவர்பின் பலர் கூடவில்லை போல் தோண்ருகிறது... அவரின் பதவி மேல் இல்லாமல் போன ஆசை தான் அவரின் கட்ச்சியை செயலற்றதாக்கியதாய் சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன்... இதில் வைகோ செயலாற்றிக்காட்டவில்லை எண்றும் பலர் சொல்வார்கள்.

வைகோ இந்தமுறையாவது செயற்திறனை நிரூபிக்க வளிகொள்ளவேண்டும் என்பது தான் எம் ஆசை.

ஒருவேளை வைகோ "நாஞ்சில் சம்பத்தை" அண்ணாவை மனசாட்ச்சியாக கொண்டவர் என்பதால் அவரின் விருப்பத்தை செயலாக்கி இருக்கலாம். எதிர்கால தலைவர் ஒருவேளை சம்பத்தாக கூட இருக்கலாம்.. வைகோ முடிவெடுக்கட்டும்..

Link to comment
Share on other sites

83 கலவரத்தின் போது வைகோ பாரளுமன்றத்தில் ஈழ தமிழருக்காக முழங்கியபோது.....இந்திராகாந்தி

Link to comment
Share on other sites

நண்பர்களே கலைஞர் என்ற குள்ள நரியைவிட ஜெயலலிதா எவளவோ பாறவாய்யில்லை.....

Link to comment
Share on other sites

அதிமுக அணிக்கு மாறியது மதிமுக

20060304172534vaikojaya203.jpg

அஇஅதிமுக முகாமிற்கு அணி மாறியிருக்கிறது மதிமுக. அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 35 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சி சகாக்களுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து ஏறத்தாழ 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதற்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது

அஇஅதிமுக - மதிமுக கூட்டணி பெரும் வெற்றிபெறும் என வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

இருகட்சிகளுக்குமிடையே தொகுதிப்பங்கீடு ஏற்பட்டுவிட்டது என்ற செய்திவெளியானவுடன் மதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். வைகோவை பொடா சட்டத்தின் கீழ்கைது செய்து ஒன்றரை ஆண்டு காலம் சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா என்பதைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை.

செய்தியாளர்களை சந்தித்தபோது ஜெயலலிதா, வைகோ இருவருமே நடந்ததைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது, எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்போம் எனக் கூறினர்.

தனியாக மாலையில் நிருபர்களிடம் பேசியபோதும் வைகோ ஈழத்தைப் பொறுத்தவரை தன் நிலையில் மாற்றமில்லை என்றும் களத்தில் நிற்கும் போராளிகளுக்கு தங்கள் ஆதரவு தொடரும் என்றும் கூறினார்.

நூறு இடங்கள் கொடுத்தாலும் என் மகன் ஜெயலலிதா பக்கம் போகமாட்டான் என்று சமீபத்தில் வைகோவின் தாய் பேட்டி அளித்திருந்தார். வைகோவும் சிலவாரங்ள் ஊசலாடிவிட்டு திமுகவுடன்தான் என அறிக்கை விடுத்தார்.

ஆனால் இப்போது திமுக அளிக்க முன்வந்த இடங்கள் போதாது என்கிறார் வைகோ. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தொடரும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக மாநாட்டில் கொந்தளிப்பு - வைகோ அணிமாற்றம் எதிரொலி

20060304172406vaikocutoutremoval203.jpg

களையப்படுகிறது வைகோ கட்-அவுட்

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விலகிய செய்தி, திருச்சியில் நடைபெற்றுவரும் திமுக மாநில மாநாட்டில் கலந்து கொண்டுவரும் திமுக தொண்டர்கள் மத்தியில் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

திமுக மாநாட்டு பந்தலை ஒட்டிவைக்கப்பட்டிருந்த வைகோவின் கட்-அவுட்கள் அகற்றப்பட்டன. அவரின் படங்கள் கிழித்தெறியப்பட்டன.

வைகோவின் முடிவை தாங்கள் எதிர்பார்த்திருந்ததாக சில திமுக தொண்டர்கள் கூறினார்கள். வைகோ துரோகம் செய்து விட்டார், தவறான பாதையில் சென்றுவிட்டார் போன்ற கருத்துக்களையும் திமுக தொண்டர்கள் வெளிப்படுத்தினர்.

வைகோ மத்திய கூட்டணியில் நீடிப்பதை அனுமதிக்க மாட்டோம்: கருணாநிதி

20040628130856040628_karuna_203.jpg

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகிய வைகோ மத்திய அரசில் ஆட்சி செய்யும் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் காரணமாக வைகோ அதிமுக கூட்டணிக்குப் போகவில்லை என்று தெரிவித்த திமுக தலைவர், அதே சமயம் வைகோ எதனால் அணி மாறினார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

நூறு இடங்கள் கொடுத்தாலும் என் மகன் அதிமுக கூட்டணிக்குப் போக மாட்டான் என்று வைகோவின் தாயார் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியை சுட்டிக்காட்டிய திமுக தலைவர் மு.கருணாநிதி, தாய் சொல்லியே கேட்காத வைகோ இந்தத் தனயன் சொல்லிக் கேட்பாரா என்று செய்தியாளர்களிடம் வினவினார்.

-BBC tamil

Link to comment
Share on other sites

வை.கோவிற்கு தன் பலம் தெரியவில்லை, கருணாநிதி பிசாசு என்றால், ஜெ.ஜெ ராட்சகி. வை.கோ மூன்றாம் அணியை உருவாக்கியிருக்க வேண்டும். தமிழகத்தை காக்க யார் வருவாரோ?

இவர்களால் எமக்கு எவ்வித நன்மையும் இல்லை.

Link to comment
Share on other sites

தமிழகத்தில் எவராலும் தனித்து நின்று போட்டி போட்டு வெற்றியடைய முடியாது.

கூட்டு இல்லாமல் ஜெயலலிதாவாலே ஜெயிக்க முடியாது என்ற நிலை.

அதுதான் கடந்த காலத்தில் போட்ட சட்டங்கள் அனைத்தையும் ஜனவரியில் வாபஸ் பெற்று

பறித்ததை விட அதிக சலுகைகளை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுத்தது மட்டுமல்லாமல்

பறிக்கப்பட்ட வேலைகளையும் திரும்பக் கொடுத்து அசத்தினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா இருக்கும் வரை யாரும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதுவே அவரது முனைப்பு.

யாருக்கு எத்தனை சீட்டுக் கொடுத்தாலும் முதல்வர் அவர்தானே?

கருணாநிதியை வரவே விடக் கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருக்கிறார்.

கருணாநிதியோ

தனது குடும்ப சொத்தான திமுக

தம் குடும்பத்தை விட்டு யார் கைக்கும் போய் விடக் கூடாது என்பதில் விடாக் கண்டனாய் இருக்கிறார்.

இதுவே வைகோ பிரச்சனைக்கு காரணம்.

பேசியே பயஸ்கோப் காட்டுவதை விட

ஒரு சக்தியாக நிலைக்க அரசியலில் எடுத்த வைகோவின் சாணக்கிய முடிவு ராஜதந்திரமானதே..............

இது தவறாகப்பட்டாலும்

எவன் காலிலோ விழுவதற்கு பதிலாக இவன் காலில விழலாம் ...................

என்ற மாதிரி ஏதோ உளறுவாங்க............

அது நடந்திருக்கு...............

ஜெயிக்காத இடத்தில இருந்து நாக்கு வழிக்கிறதை விட

இது எவ்வளவோ மேல்..........

அடுத்த முதல்வர் ஜெயலலிதாதான்.

மக்கள் திலகத்தின் வாரிசாக மீண்டும் :P

எனவே வைகோ குரல் மத்தியிலும் மாநிலத்திலும் கேட்கப் போவது உறுதி.

ஈழத் தமிழர்கான குரலாகவும் அது நிச்சயம் இருக்கும்

அரசியலில இதெல்லாம் சகஜம்பா :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசயிலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பணும் இல்லை என்றதை நேரடியாக பார்க்க முடியுது.. :)

வைக்கோ சிறை சென்று அல்லல்ப்பட்டு மீண்டு வந்ததை மறந்து எப்படி ஜெயா முன்னால் சிரிக்கிறார்..?? இது தான் அரசியலோ..

Link to comment
Share on other sites

'பொடா நாயகனின்' மெகா பிளான்!

மார்ச் 05, 2006

சென்னை:

''மக்கள் என்னும் சக்தியைத் திரட்டி இந்த பாசிச ஆட்சியை தூக்கி எறிவேன்''. இது தான் சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் பொடாவில் கைது செய்யப்பட்டபோது வைகோ ஆவேசமாக இட்ட முழக்கம்.

''தமிழ்நாட்டை வாழ வைக்க ஏதோ அவதாரம் எடுத்து வந்தவர் மாதிரி பேசும் ஜெயலலிதாவை அரசியலை விட்டு விரட்டுவேன்''.. இது பொடா கோர்ட்டுக்கும் வேலூர் சிறைக்கும் வேனில் வந்து போன போது வைகோ பேசியது.

''தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு அற்புதமான நிகழ்வு. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை மறந்து விட்டு, அதிமுகவின் வெற்றிக்காக நாங்கள் உழைப்போம்..'' போயஸ் தோட்டத்து படிக்கட்டுகளில் முதல்வர் ஜெயலலிதாவின், வழக்கத்துக்கு மாறான பயங்கர சிரிப்பு முகத்துக்கு, நடுவே 'பொடா நாயகன்' வைகோ பேசியது.

எந்தத் தலைவரால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டாரோ, அதே தலைவருடன் கை குலுக்கி புதிய அரசியல் வரலாற்றை படைத்துள்ளார் வைகோ.

திமுகவில் இருந்தபோதும் சரி, மதிமுகவைத் தொடங்கிய பின்னரும் சரி வைகோ சந்தித்த போராட்டங்கள், களங்கள் ஏராளம். எத்தனை களம் கண்டாலும், தோல்விகள் கண்டாலும் புன்னகையுடன் நிமிர்ந்து நிற்பார் வைகோ.

ஆனால், நேற்று அவர் கூட்டணி விஷயத்தில் வெற்றி கண்டு (35 சீட்களை அள்ளி) நின்றபோது வைகோவிடம் இயல்பான புன்னகை இல்லை.

வலிய வரவழைத்துக் கொண்ட புன்முறுவலோடு பேச அவர் படாதபாடு பட்டதை பார்க்க பாவமாய் இருந்தது.

அவரது கட்சியின் கொள்கை வரிகளான 'லட்சியத்தில் உறுதி, பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை' என்ற வாசகம் வைகோவுக்கு முற்றிலும் பொருந்தும்.

கொண்ட கொள்கையிலிருந்து இம்மியளவும் பிசகாதவர் தான் வைகோ. ஆனால், முதல் முறையாக தனது கட்சியினருக்காக ரொம்பவே வளைந்து (கரெக்டாக சொன்னால் கூனிக் குறுகி) கொடுத்து அதிமுகவுடன் கை கோர்த்துள்ளார்.

ஸ்டாலினின் எதிர்காலத்துக்கு இடையூராக இருந்தார் என்பதற்காக வைகோவை கட்டம் கட்டி வெளியேற்றியது திமுக.

திமுக கண்ட மிகப் பெரிய பிளவுகளில் ஒன்று எம்ஜிஆர் திட்டம்போட்டு வெளியேறியது. இரண்டாவது வைகோவை வெளியேற்றியது.

ஆனால், எம்ஜிஆர் மடமடவென உச்சாணிக் கொம்புக்குப் போனது போல வைகோவால் போக முடியவில்லை.

1994ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி பிறந்தது வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். வைகோவுக்கு ஆதரவு தெரிவித்து கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியிலிருந்து விலகி வைகோவுடன் இணைந்தனர்.

கட்சி ஆரம்பித்து 12 ஆண்டுகளைக் கடந்து விட்டபோதிலும், சற்றும் கட்டுக் குலையாமல், கட்டுக் கோப்புடன், வைகோ சொல்வதே வேதம் என்று ராணுவ மிடுக்குடன் நடைபோட்டுக் கொண்டிருந்தது மதிமுக.

12 ஆண்டு கால மதிமுக வரலாற்றில் 2 முறை சட்டசபை இடைத் தேர்தல், ஒரு சட்டசபை பொதுத் தேர்தல், 3 நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களை சந்தித்தள்ளது.

இதில் 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்து மதிமுக போட்டியிட்டது. அத்தேர்தலில் தோல்வியே கிடைத்தது.

1997ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன், கூட்டணி சேர்ந்தது மதிமுக. அத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. மதிமுகவுக்கு முதன்முதலாக எம்.பிக்கள் கிடைத்தனர்.

பின்னர் 1999, 2004ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தார் வைகோ.

2 முறை மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றது மதிமுக

2004ம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மதிமுக இடம் பெறவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவின் பொடா சிறை வாசமும், அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் அவர் செய்த பிரச்சாரமும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பெருமளவில் உதவியது.

ஆனாலும் அந்த வெற்றிக்குப் பின் திமுகவிடம் இருந்து விலக ஆரம்பித்தார் வைகோ. அல்லது வைகோவை விட்டு திமுக விலகியது.

கூட்டணியில் இருக்கும் தலைவர் என்றாலும் கூட அவருக்கு ராமதாசுக்கு இணையான மரியாதையை திமுக தரவில்லை.

மேலும் வைகோவுடன் இருக்கும் இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கும் திமுகவிடம் உரிய மரியாதை கிடைக்கவில்லை.

இங்கு தான் புகுந்தது அதிமுக. சசிகலாவின் உறவினரான எல்.கணேசன் மூலமாக வைகோவை மெதுவாக வளைக்க ஆரம்பித்தனர்.

மேலும் இந்திரா காந்திக்கு பயந்து கருணாநிதிக்காக காரோட்ட யாரும் முன்வராதபோது தைரியமாய் முன்வந்து ரிஸ்க் எடுத்த அந்தக் காலத்தின் திமுக முன்னோடியான 'காரோட்டி' கண்ணப்பனை (மதிமுக பொருளாளர்) உளவுத்துறை பொடி போட்டு வளைத்தது.

இருவரும் சேர்ந்து வைகோவை ஒரு பக்கம் பிரைன் வாஷ் செய்து கொண்டிருக்க, திமுகவின் நடவடிக்கைகளும் வைகோவை யோசிக்க வைத்தன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 17 தர, 21 இடங்களைக் கேட்டு 4 தொகுதிகளுக்காக கூட்டணியை விட்டு வெளியேறினார் வைகோ. இந்த முறையும் திமுக 22 தர, 25 கேட்டு வெளியேறியுள்ளார் வைகோ.

ஆனால், கடந்தமுறைக்கும் இந்த முறைக்கும் நிறையவே வித்தியாசம். கடந்தமுறை அதிமுகவுடன் சேராமல் தனித்துப் போட்டியிட்டார் வைகோ. காரணம், கொள்கையிலே உறுதி என்பதல் உறுதியாக இருந்தார்.

இந்த முறை 'தொகுதியிலே உறுதி' என்ற அளவுக்கு அரசியலில் 'பக்குவம்' அடைந்துவிட்டார் வைகோ. தொகுதி தான் முக்கியம் கொள்கை எல்லாம் சும்மா என்று ஆவரேஜ் அரசியல்வாதிகள் மாதிரி வைகோவும் நேற்று பேசியதைப் பார்த்து அவரை உள்ளப்பூர்வமாக ஆதரிக்கும் தொண்டர்கள் கூட மிரண்டு தான் போயிருப்பார்கள்.

கடந்த தேர்தலில் குட்டிக் கட்சிகளை திரட்டிக் கொண்டு தனித்துப் போட்டியிட்ட மதிமுக பிரித்த வாக்குளால் தான் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தோல்வி கண்டது. அந்தப் படிப்பினையை திமுக இவ்வளவு வேகத்தில் மறந்துவிட்டது கொடுமை தான்.

ஆனால், இப்போது அதிமுகவுடன் அணி சேர்ந்துள்ள வைகோவிடம் நீண்ட கால பிளான்கள் இருப்பது தெரிகிறது. அதிமுக ஜெயித்து ஆட்சியமைத்தாலும் இல்லாவிட்டாலும் இந்தக் கூட்டணியில் வைகோ நீண்டகாலம் நீடிக்க மாட்டார்.

இத்தனை ஆண்டுகள் கட்சி நடத்தியும் சட்டசபையில் ஒரு மதிமுக கூட இல்லை. முதலில் அந்தக் குறையைப் போக்க யாருடனாவது கூட்டணி அமைத்தே ஆக வேண்டிய நிலை வைகோவுக்கு.

தனித்து நின்றால் மீண்டும் அது அதிமுகவுக்கே உதவும், ஆனால், மதிமுகவுக்கு அதனால் ஒரு பலனும் இல்லை.

முதலில் சட்டமன்றத்தில் புக வேண்டும், அதுவும் அதிக எண்ணிக்கையில்.

அடுத்ததாக வைகோ எதிர்பார்ப்பது, மிக விரைவில் ஸ்டாலினுக்கு திமுக பட்டாபிசேகம் சூட்டப் போகிறது. திமுக வென்றால் கருணாநிதி பேருக்கு சில மாதங்கள் முதல்வராக இருந்துவிட்டு ஸ்டாலினை அந்தப் பதவியில் அமர்த்துவார் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு உள்ளது.

அப்படிப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் மதிமுக இருக்க முடியாது. ஸ்டாலினை எதிர்த்து அரசியல் களத்தில் நிற்க வேண்டும்.

''வைகோ நம்ம கூட இருந்தா அவருக்கு நல்லது.. அதிமுகவுக்கு போய்ட்டா நமக்கு நல்லது'' என்றாராம் கருணாநிதி சமீபத்தில் தனது கட்சியின் நிர்வாகிகளிடம்.

இதன்மூலம் ஸ்டாலினுக்கு எதிரான ஒரு தலைவரை கூட்டணியில் வைத்திருக்க திமுக விரும்பவில்லை என்பது உறுதியாகிறது. ஆனாலும் ஆட்சியைப் பிடிக்க மதிமுகவின் ஆதரவு வேண்டும் என்பதால் வேண்டா வெறுப்பாக இடம் தந்தது திமுக.

கருணாநிதி விலகிக் கொண்டு ஸ்டாலினை முதல்வராக்கினால் ஜெயலலிதாஸ்டாலின் என்று அடுத்தகட்ட பைட்டுக்கு தமிழகம் தயாராகும் என்பதை கணக்கிட்டார் வைகோ. அப்போதும் தூர நின்று கொண்டு இவர்களது சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் சரி வராது என்பதால் அந்த பைட் ஸ்டாலின்ஜெயலலிதாவைகோ என்ற மும்முனைப் போட்டியாக வேண்டும் என்று கருதுகிறார் வைகோ.

அதற்கு முதல் கட்டமாக சட்டசபையில் பெரிய எண்ணிக்கையில் நுழைய வேண்டும். தங்களது 'பிரசன்ஸை' தமிழகத்தில் அழுத்தமாக உணர்த்த வேண்டும்.

அடுத்து அதிமுக, திமுக என எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனியாக வேண்டும். ஜெயலலிதாஸ்டாலின்வைகோ என்ற மூன்று துருவ போட்டியை உருவாக்க வேண்டும் என்பதே வைகோவின் திட்டம்.

அதற்கு முதலில் திமுகவிடம் இருந்து விலகுவது, அதிமுகவிடம் அதிகமான சீட்களை பெறுவது, முடிந்த வரை தொகுதிகளில் வென்று சட்டசபைக்குள் நுழைவது, அடுத்து யாரிடமும் இல்லாமல் பிரிவது.

தேர்தல் முடிந்த கையோடு வைகோவும் பிரிந்து போய்விடுவார் என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும். ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளில் அதிமுகவின் ஓட்டு வங்கியில் விழுந்துள்ள ஓட்டை மிகப் பெரியது என்பதை உளவுத்துறையின் பல சர்வேக்கள் தெளிவாக்கிவிட்டதால், திமுக தவிர எல்லா கட்சிகளுக்கும் வலை வீசி வருகிறார் ஜெயலலிதா.

அதிமுக இழந்த ஓட்டுக்களை பிற கட்சிகளை உள்ளே கொண்டு வந்து தான் ஈடு செய்ய முடியும். அதற்காக ஜெயலலிதா கதவைத் திறந்து காத்திருக்க, தனது எதிர்கால பிளானுக்கும் இந்தத் திட்டம் பொறுத்தமாகவே இருப்பதை உணர்ந்த வைகோ, போயஸ் கார்டனுக்குள் அடி எடுத்து வைத்துள்ளார்.

மேலும் எல்.ஜி உள்பட பல மூலம் வைகோவை அதிமுக கெஞ்சிய கெஞ்சல் இருக்கிறதே அது கொஞ்ச நஞ்ச கெஞ்சல் அல்ல. ''வேணா.. அழுதுருவேன்''.. என்று வடிவேலு ரேஞ்சுக்கான அதிமுகவின் சரண்டர் அது.

இதனால் தான் 27 சீட் தருகிறோம் என்று சொன்ன ஜெயலலிதாவை 35 சீட்டுக்கு ஒப்புக் கொள்ள வைக்க வைகோவால் முடிந்தது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவுக்கே கூட்டணியில் சொற்ப சீட்களைத் தந்ததோடு, அக் கட்சியின் கேண்டிடேட்ஸையும் முடிவு செய்தராயிற்றே ஜெயலலிதா. அதுவும் அடுத்து வாஜ்பாய் தான் பிரதமர் என்று நாட்டின் எல்லா பத்திரிக்கைகளும் சைரன் அடித்துக் கொண்டிருந்த காலத்தில் நடந்த கதை அது.

அப்படிப்பட்ட ஜெயலலிதாவிடமே 45 சீட்களை கேட்டு பேரம் பேசி, கொஞ்சம் விட்டுத் தந்து, நிறையே பிடிவாதம் பிடித்து 35 இடங்களை வாங்கிவிட்டார் வைகோ.

இதனால் தனது கட்சியில் இதுவரை எந்தப் பதவியையும் ருசித்திராத மாவட்டச் செயலாளர்களுக்கும் முன்னணித் தலைவர்களுக்கும் சீட் தந்துவிட வைகோவால் முடியும்.

மேலும் அதிமுக கூட்டணி இருப்பதால் மதிமுக வேட்பாளர்களுக்கு பெரிய நிதிப் பிரச்சனையும் எழாது. அதையெல்லாம் அதிமுக பார்த்துக் கொள்ளும்.

இப்படியாக தட்டில் பழம் வைத்து வைகோவிடம் தந்திருக்கிறது அதிமுக.

ஆனால், தன்னை சிறையில் அடைத்து 'அழகு பார்த்த' ஜெயலலிதாவுடன் வைகோ பிரசாரத்திற்குப் போக வேண்டும், ஒரே மேடை ஏற வேண்டும், நேற்று போயஸ் தோட்டத்தில் சிரித்தாரே அதே செயற்கையான சிரிப்போடு...

திமுகவின் 'அய்யோ போயிட்டாரே' கூட்டணி, அதிமுகவின் 'விடாதே பிடி' கூட்டணி.. இதையெல்லாம் பார்த்து பொது ஜனங்களும், சிரிக்கிறார்கள். ஆனால், அது 'ஒரிஜினல்' சிரிப்பு

மக்கள் 'சிரித்தால்' என்னவாகும் என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா என்ன?

Link to comment
Share on other sites

வைகோ அணி மாறியதன் காரணங்களும் விளைவுகளும் - ஓர் ஆய்வு

20060304172534vaikojaya203.jpg

ஜெயலலிதாவுடன் புதிய கூட்டணி அமைத்துள்ளார் வைகோ

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதற்கான காரணங்கள் மற்றும் இதன் காரணமாக அரசியல் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அரசியல் ஆய்வாளரும் பத்திரிகையாளருமாகிய ஞானி தமிழோசையில் கருத்துவெளியிட்டார். அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:

'திமுகவில் இருந்து வைகோ வெளியேவர முக்கியக் காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்தான். அதைத் தவிர அவருக்கும் திமுகவுக்கும் பெரிய அளவில் கொள்கை வேறுபாடுகள் இருக்கவில்லை. தற்போது திமுக தலைவருக்கு வயதாகிவிட்டதால் திமுக ஆட்சியைப் பிடித்தால், விரைவில் ஸ்டாலின் முதல்வராக்கப்படுவார் என்பது பகிரங்கமாகவே தெரிவிக்கப்படும் நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வைகோவுக்கு வேறுவழியில்லை.

கடந்த முறை வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இதேநிலை தொடரும் என்று கூறமுடியாது என்றாலும் திமுகவுக்கு சற்றே சரிவு ஏற்படும். அதிமுகவுக்கு இது ஆதாயம்தான். மதிமுகவுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற இந்த கூட்டணி வழிவகை செய்துள்ளது.

மதிமுக தொண்டர்கள் வைகோவை பொடாவில் சிறையில் தள்ளியதைப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. திமுக கூட்டணியில் வைகோவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாததைத்தான் பெரிய பிரச்சனையாகக் கருதுகிறார்கள்.

வைகோவும் திருமாவளவனும் தங்களின் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையை தொடர்ந்து மேற்கொள்வார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து எதிர்ப்பார் என்றே எதிர்பார்க்கலாம். தமிழகத் தேர்தலில் ஈழப் பிரச்சனை பிரதான பிரச்சனை கிடையாது. இது தேர்தலை ஒட்டிய கூட்டணி மட்டுமே.'

-பீபீசி தமிழ்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மாறினேன்?வைகோ சொல்வது இது தான்!

மார்ச் 05இ 2006

சென்னை:

திமுகவும், சன் டிவியும் மதிமுகவினரை தொடர்ந்து புறக்கணித்தும், அவமானப்படுத்தியும் வந்ததால் வேறு வழியின்றிஇ சுயமரியாதையைக் காக்க விலகல் முடிவை எடுக்க வேண்டியதாயிற்று என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பின் செய்தியாளர்களிடம் அணி மாற்றம் குறித்து மிக விளக்கமாகவே பேசினார் வைகோ.

அதன் சுருக்கத்தை நேற்று தந்தோம். அந்தப் பேட்டியின் முழு விவரம்:

திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றிருந்தது. ஜனவரி 26ம் தேதி கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். அவரோடு தேர்தல் குறித்தும்இ கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதில்,

மதிமுக 35 மாவட்டங்களில் கட்சி அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறது. 35 மாவட்டங்களிலும் எங்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று விரும்புகிறோம்.

மாவட்டத்தில் ஒரு இடமாவது போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறோம் என்றேன்.

அதற்கு கலைஞர் அமைதியாக இருந்தார். பின்னர் நான் தொடர்ந்தேன். இதில்இ 5 மாவட்டங்கள் மாநகர மாவட்டங்களாக இருக்கிறது இதைத் தவிர்த்துப் பார்த்தால் 30 மாவட்டங்களில் நாங்கள் போட்டியிட விரும்புகிறோம்.

கடந்த 2 ஆண்டுகளில் நடைபயணம்இ பாசறை நிகழ்ச்சிகள்இ ஆய்வு நிகழ்ச்சிகள் என கட்சி அடிமட்டத் தொண்டர்கள் வரை நான் சந்தித்திருக்கிறேன்.

மக்களிடத்தில் கட்சி நல்ல வரவேற்பைப் பெற்று வளர்ந்திருக்கிறது. மக்கள் இயக்கமாக வளர்ந்திருக்கிறோம். எனவே குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறேன் என்றேன். அதற்கும் அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.

சில நிமிடம் கழித்து, உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே 25 இடங்கள மதிமுகவுக்கு ஒதுக்குங்கள் என்றேன்.

உடனேஇ கலைஞர், ஒன்று அல்லது இரண்டு இடங்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்றார். அதற்கு நான், 234 தொகுதிகளிலும் கடுமையாக உழைக்கப் போகிறது மதிமுக. வாக்கு வங்கியும் வளர்ந்திருக்கிறது. அந்த ஒன்றிரண்டு தொகுதிகளை ஏன் குறைக்கிறீர்கள்? 25 தொகுதிகளையும் கொடுத்து விடுங்கள் என்றேன்.

அவருடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் நான் வாதத்தை எடுத்து வைத்தேன். சரி அப்படியே செய்யலாம் என்றார் அவரும்.

இதனை நமக்குள் வைத்துக் கொண்டு தொகுதிப் பங்கீடெல்லாம் நடைபெறும்போது வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்றார். நானும் வெளிப்படுத்த மாட்டேன் என்றேன். இதுதான் அன்று நடந்தது.

நான் நிறைந்த நம்பிக்கையோடு, அந்த சந்திப்புக்குப் பிறகுஇ 25 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள் என்று இருந்தேன். அதன் பிறகு 8ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

பிப்ரவரி 14ம் தேதி டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடந்த ஐக்கிய ¬ற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றேன். எந்த ஒரு நெருடலையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் துளிக் கூட எனக்கு இல்லை.

இந்த சந்தர்ப்பத்தில் நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு ஆட்சேபகரமானவை என்ற விதத்தில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலைஞர் ஒரு கருத்தைக் கூறினார் கூட்டணியில் நீடிக்கிறோமாஇ இல்லையா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.

இந்தப் பின்னணியில்இ 8ம் தேதி கூட்டம்இ 14ம் தேதி டெல்லியில் கூட்டணியில் இருப்பதாக பேட்டி, 17ம் தேதி இரவு நன்றி தெரிவித்துக் கூட்டத்தில் பேசுகிறேன், 18ம் தேதி கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்று நாங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று சொன்னால், நாங்கள் இந்த கூட்டணியில் இல்லை என்ற எண்ணத்தை கலைஞர்தான் ¬தன் முதலில் ஏற்படுத்தினார்.

பிறகு மீண்டும்இ நாஞ்சில் சம்பத் குறித்து ஆற்காடு வீராசாமி அறிக்கை வெளியிட்டார். அதில்இ எங்கள் அவைத் தலைவர் எல்.கணேசன்இ தமிழ்நாட்டின் மூன்றாவது சக்தி மதிமுகதான் என்று கூறியதை பற்றி, அவர் பயன்படுத்திய வார்த்தை ஆட்சேபகரமானது என்றும். சம்பத் பயன்படுத்திய வார்த்தை ஆட்சேபகரமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மதிமு¬க நாடகமாடுகிறது, பேரம் பேசுகிறது என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த அறிக்கைக்கு நான் பதில் தருவதற்கு முன் கலைஞரிடம் பேசினேன். எங்கள் பேச்சாளர்கள் பேசியது தவறுதான்இ அதைக் கண்டித்தது சரிதான். அதற்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம்.

நாஞ்சில் சம்பத்திடம் விளக்கம் கேட்கிறேன். கட்சியையும்இ என்னையும் காயப்படுத்தும் விதத்தில் வீராசாமியின் அறிக்கை இருக்கிறதே, எங்களை நேரடியாக தாக்குகிற விதத்தில் இருக்கிறதே, எங்களுடைய தோழர்கள் எல்லாம் மிகுந்த மன வேதனைப்படுகிறார்களே என்றபோது பதிலுக்கு நீங்கள் வேண்டுமானால் கடுமையாக விமர்சித்து அறிக்கை கொடுங்கள் என்றார் கலைஞர்.

அப்படி ஒரு அறிக்கை கொடுத்தால், கூட்டணியில் திமுகவை அது புண்படுத்தும் என்று எங்கள் நிலையை மட்டும் விளக்கி பதில் அறிக்கை கொடுத்தேன். பின்னர் 22ம் தேதி கலைஞரை சந்தித்துப் பேசினேன்.

25 தொகுதிகளை தருவதாக சொன்னீர்கள், ஆனால் நீங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில்இ ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை வைகோ கேட்டார்இ ஒன்றிரண்டு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொன்னேன் என்று கூறியிருக்கிறீர்களே என்று நான் கேட்டதற்கு, நான் 25 தொகுதிகள் தருவதாக சொல்லவில்லையே என்றார்.

நீங்கள் சொன்னீர்கள் என்று கூறியதற்குஇ நீங்கள் தப்பாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றார். நீங்கள் ஒன்றிரண்டு குறைத்துக் கொள்வதாக கூறியதற்கு அது எப்படி முடியும், 25 இடங்கள் கொடுக்க வேண்டும் என்றேன்.

அது கஷ்டம் 20 இடங்கள் கொடுக்கிறோம் என்று சொன்னார்.

இந்தச் சூழ்நிலையில் 27ம் தேதி கலைஞரிடம் நான் எப்போது பார்க்க வரலாம் என்று கேட்டேன். நாளை சொல்கிறேன் என்று சொன்னார். இரவு ஆற்காடு வீராசாமி போன் செய்து, நாளை காலை உங்களை பார்க்க வீட்டுக்கு வருகிறேன் என்றார்.

25 சீட் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள் என்றேன். அதற்கு வாய்ப்பில்லை என்றார் வீராசாமி. 21 சீட் தருகிறோம் என்றார். தலைவர் சொன்னதை மாற்றினால் எப்படி என்றேன். கடைசியாகஇ 23 சீட் கொடுத்தால் ஒத்துக் கொள்வீர்களா என்று கேட்டார்.

அதற்கு நான் கஷ்டம் என்றேன். சொன்னபடி கொடுத்தால் வருகிறோம்இ எப்போது கூப்பிட்டாலும் கையெழுத்துப் போட வருகிறேன் என்றேன். சரி என்று போய் விட்டார்.

கலைஞர் அழைப்பார் என்று நினைத்து மதுரை செல்வதற்காக எடுத்து வைத்திருந்த விமான டிக்கெட்டை ரத்து செய்து விட்டு வீட்டிலேயே இருந்தேன்.

3ம் தேதி காலை 8 மணிக்கு கலைஞரிடம் போனில் பேசினேன். உங்களிடமிருந்து அழைப்பு வரும் என்று 28ம் தேதி மாலையிலிருந்து 1ம் தேதி மாலை வரை காத்திருந்தேன். அழைப்பே வரவில்லையே என்றேன்.

வேலையாக இருந்தேன்இ செக் அப்புக்குப் போயிருந்தேன் என்றார். சரி என்று, ஏன் அண்ணே, 25 தொகுதிகள் கொடுத்தால்தான் என்ன அண்ணே என்றேன் கெஞ்சும் குரலில்.

அதற்கு வாய்ப்பே இல்லை என்றார். ஒன்றிரண்டு குறைத்துக் கொடுத்தால் உங்களுக்கு நாங்கள் என்ன தொல்லை கொடுக்கப் போகிறோமாஇ அல்லது வேறு ஏதாவது பேரம் பேசப் போகிறோமாஇ நீங்களே கொடுங்கள் என்றேன். 22க்கு மேல் வாய்ப்பே இல்லை என்றார்.

அப்போதுஇ 25 சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள். உங்களுடைய வாதப்படி ஒன்றிரண்டு இடங்களை குறைத்துக் கொண்டு தருகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்களே? அதன்படி ஒன்றிரண்டு குறைத்துக் கொண்டு கொடுங்கள் என்றேன்.

ஒன்றுஇ இரண்டு, மூன்று இடங்களைக் குறைத்துக் கொண்டு என்று சொன்னேன் என்று மூன்று இடங்களைச் சொன்னார். மூன்று என்ற சொல்லையே பயன்படுத்தவே இல்லையே என்று கேட்டதற்குஇ ஒன்றையும், இரண்டையும் கூட்டினால் மூன்றுதானே என்று கேட்டார்.

சொற் சிலம்பத்துக்கு நான் தயாரில்லை என்றேன். இரண்டு தொகுதிகளைக் குறைத்துக் கொண்டு 23 ஆக கொடுங்கள் என்றேன். கெஞ்சி மன்றாடி நிற்கிறேன். யோசனை செய்தாவது கொடுங்கள் என்றேன். சரி யோசிக்கிறேன், மாநாடு முடியட்டும் என்றார்.

நான் மாநாட்டுக்குச் செல்வதற்காக பேச்செல்லாம் தயாரிக்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் பொதுக்குழு கூட்டம் முடிந்து பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கிறார் கலைஞர். 22 தொகுதிகளை ஏற்றுக் கொண்டால். மதிமுக கூட்டணியில் தொடரலாம் என்கிறார்.

பாமகஇ காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளெல்லாம் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளன. அவர்களுக்கெல்லாம் கேட்ட இடங்களைக் கொடுத்து விடவில்லை. எல்லாக் கட்சிகளும் அதிக இடங்களைக் கேட்கிறது.

எங்களுக்கு மட்டும் ஒரு எண்ணிக்கையைச் சொல்லி இதை ஏற்றுக் கொண்டால்தான் கூட்டணியில் தொடரலாம் என்று எங்களை வித்தியாசமாக நடத்துகிற விதம் எல்லோருக்கும் மனதில் ஒரு வருத்தம்.

2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, எந்தக் கட்சி அதிக இடங்கள் தருகிறதோ, அவர்களுடன்தான் கூட்டணி என்று பாமக போன்ற கட்சிகள் கூறின. அப்போது திமுக கோப்படவில்லையே. அவர்களை சமாதானம் செய்து, கேட்ட இடங்களைத் தானே கொடுத்தார்கள். அம்மாதிரி கருத்து ஏதாவது நான் சொல்லியிருக்கிறேனா?

இதுதவிர பொதுக்குழுவில் அவர்கள் வெளியே போகட்டும், இருக்கத் தேவையில்லை என்ற விதத்தில் விமர்சனங்கள் கடுமையாக எங்கள் மீது செய்யப்பட்டன. இந் நிலையில், நாங்கள் கேட்கிற தொகுதிகளைக் கொடுப்பார்கள் என்ற உத்தரவாதம் இல்லை, கொடுத்தாலும் வெற்றி பெறுகிற தொகுதிகள் கிடைக்குமா என்பதும் சந்தேகம்.

மனப்பூர்வமாக வேலை செய்யக் கூடிய மன நிலை அங்கே உருவாக்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

லட்சோப லட்சம் தொண்டர்களின் தியாகத்தால் உருவானது மதிமுக. 2 சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்தபோதும் இந்தக் கட்சியைப் பாதுகாத்திருக்கிறோம்.

2 ஆண்டு காலம் மதிமுகவினரை திமுகவினர் நடத்திய விதம் மனக்காயத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை திமுக தலைவரிடமே சொல்லியிருக்கிறேன்.

அவர்கள் சார்ந்த டிவியில் (சன்டிவி) 2 ஆண்டுகளாக எங்களை முழுமையாக இருட்டடிப்பு செய்தார்கள். இதுவும் எங்களை வேதனைப்படுத்தியது. இதுகுறித்தும் கலைஞரிடம் கூறியிருக்கிறேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த கூட்டணியில் இனிமேலும் நீடிப்பது சுயமரியாதைக்கு இழுக்கு என்ற நிலையில்தான் இப்படிப்பட்ட முடிவை நாங்கள் மேற்கொள்ள நேர்ந்தது.

நாங்கள் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. 2001ல் எப்படி நடத்தப்பட்டோமோ, அவமானப்படுத்தப்பட்டோமோ அதே நிலைதான் இப்போதும். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் 62 நாட்கள் நான் பிரசாரம் செய்திருந்தேன். திமுகவுக்கு ஆதரவான அந்த டிவி, ஒரு நாள் கூட என்னுடைய பிரசாரத்தை காட்டியதில்லை.

அருப்புக்கோட்டையில் கலைஞருடன் நான் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவரை மட்டும் காட்டினார்கள், என்னைக் காட்டவில்லை. இது தேர்தல் பிரசாரத்தில் நடந்தது.

எங்கள் நடைப்பயணத்தைக் காட்டிய ஒரே காரணத்திற்காக ராஜ் டிவி பெரும் பாதிப்புக்குள்ளானது.

மூன்று வேளையும் எங்களுடைய செய்தியைக் காட்டினார்கள் என்பதால் ராஜ் டிவியின் லைசன்ஸ் பறிபோனது. இதுவும் மிகுந்த காயத்தை ஏற்படுத்தியது.

அதேபோல, அவர்கள் சார்ந்த டிவியில், சின்னப் பாப்பா பெரிய பாப்பா என்று ஒரு நாடகம். அதில் ஒரு காட்சியில், ஒருவன் பாதயாத்திரை போகிறான். கருப்புத் துண்டு போட்டுக் கொண்டு ஒரு ஆள் போகிறான். கொஞ்ச தூரம் போனதும் நடக்க முடியாமல் படுத்து விடுகிறான்.

நோய்வாய்ப்பட்டு விழுந்து விட்டான் என்கிறார்கள். இனி இவன் நடக்கவே முடியாதுஇ இவன் எங்கேயும் போக மு¬டியாதுஇ இவன் போய்ச் சேர வேண்டியஇடம் வேறு என்று கூறி நான்கு பேர் பாடையில் தூக்கிச் செல்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் எங்கள் தொண்டர்கள் இதைப் பார்த்து விட்டு கடுமையான ஆத்திரத்துக்கு ஆளானார்கள்.

கட்சியின் தொண்டர்களின் உணர்வுகளை மதித்து திமுக கூட்டணியைவிட்டு வெளியேறிஇ அதிமு¬கவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு ஒரு மனதாக வந்தோம். இதுதான் கூட்டணி அமைத்ததன் பின்னணி.

தனித்து நாங்கள் ஏன் போட்டியிட வேண்டும்? 2 முறை நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருக்கிறோம். கடைசி நேரத்தில் பிடறியில் அடித்துத் தள்ளியதால்தான் கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். இந்த முறை அந்த தவறைச் செய்ய விரும்பவில்லை.

தேர்தல்களில் கொள்கைக் கூட்டணி என்பதே கிடையாதுஇ எல்லாம் தேர்தல் கூட்டணிதான். 98இ 99 நாடாளுமன்றத் தேர்தலில் என்ன நடந்தது? ஓராண்டுக்குள் கிளைடாஸ்கோப் மாதிரி கூட்டணி மாறியிருக்கிறது.

98ல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்ததுஇ 99ல் அதிமுக வெளியேறிய பின்னர்இ அதுவரை பண்டாரம்இ பரதேசி கட்சி உள்ளே நுழைய விட மாட்டோம் என்று பாஜக பற்றிக் கூறிய திமுகஇ அமைச்சரவையில் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் கூட்டணி வைத்தது.

முரசொலி மாறன் உடல் நலம் இல்லாமல் இருந்தபோதுஇ இலாகா இல்லாத மந்திரியாக இருந்தார். அவர் மறைந்து இறுதிச் சடங்குகள் நடந்தபோதுஇ வாஜ்பாய் வந்தார். வாஜ்பாய் வருகிற வரை கூட்டணியில் இருந்த திமுகஇ அவர் டெல்லி பக்கம் போனவுடன்இ காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லையா?

பாஜகஇ கம்யூனிஸ்டுகள் ஆதரவுடன் விபிசிங் ஆட்சி அமைக்கவில்லையா?கூட்டணி என்பது தேர்தலை மையமாகக் கொண்டு அமைகின்றது. அவரவர் கொள்கையை யாரும் விட்டு விட முடியாது.

அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு இப்போது எந்தவித வெறுப்பும் இல்லை. கடந்த ஒரு ஆண்டு காலத்தில்இ இந்த அரசில் அதற்கு மு¬ன்பு எடுக்கப்பட்ட முடிவுகள் பல திரும்பப் பெறப்பட்டுள்ளது. மதமாற்றத் தடைச் சட்டம்இ ஆடுஇ கோழி பலி தடைச் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களிடம் பறிக்கப்பட்ட சலுகைகள் திரும்பத் தரப்பட்டுள்ளது.

மழைஇ வெள்ள நிவாரணப் பணிகள்இ சுனாமி நிவாரணப் பணிகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நாங்கள் தொடருகிறோம். எப்படிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தருகிறதோஇ அதேபோல நாங்களும் மத்திய அரசுக்கு ஆதரவு தருகிறோம்.

புதுச்சேரியிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக குழு ஒன்றை அமைக்கிறோம். நான் தேர்தலில் போட்டியிடுவேனா என்பது குறித்து வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது தெரிய வரும்.

கூட்டணி மாறுவது குறித்து எனது தாயார் என்னை நிர்ப்பந்திக்கவில்லை. எது சரி என்று தோன்றுகிறதோஇ அதை செய் என்று கூறி விடடார். அரசியலில் அவர் எப்போதும் தலையிட்டதில்லை. மக்கள் அபிப்பிராயம் மாறாக இருக்கிறது என்றால் அதன்படி செய் என்று கூறி விட்டார். மகனுக்கு மன வருத்தம் வரக் கூடாது என்பதுதான் அவரது எண்ணம் என்றார் வைகோ.

http://thatstamil.oneindia.in/news/2006/03...3/05/vaiko.html

Link to comment
Share on other sites

மத்திய ஆளும் கூட்டணியில் வைகோ நீடிப்பார்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச்.7-: மத்திய கூட்டணியில் வைகோ நீடிப்பார் என்று, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி அறிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., விலகி அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினாலும், மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிப்போம் என்று அறிவித்து இருந்தார்.

ஆனால், அதற்கு மாறாக, மத்திய கூட்டணியில் வைகோ நீடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

இந்த பிரச்சினை பற்றி காங்கிரஸ் கட்சி தனது நிலையை தெளிவுபடுத்தி உள்ளது.

நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்கக்கூடாது என்பது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த கருத்து. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கருத்து அல்ல என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வைகோ அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருப்பது, மத்திய கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறி இருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். வைகோ விவகாரத்தில் நாங்கள் மனதை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.

கூட்டணி அரசில் எப்போதும் மாநில கூட்டணிக்கும், மத்திய கூட்டணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மாநில அளவில் ம.தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிப்பதில் தவறு இல்லை. ம.தி.மு.க. தொடர்ந்து மத்திய கூட்டணியில் நீடிக்கலாம். கடந்த கால ஆட்சியிலும் இதுபோன்ற நிலைமைகள் ஏற்பட்டு உள்ளன.

இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

நன்றி:விகடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயாலலிதா/வைகோ/திருமா எழுச்சிக் கூட்டணி எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

ஆனால் டாக்டர் ராம்தாஸ் போட்டியிடும் 30 தொகுதிகள் மற்றும் டாக்டர் சேதுராமன் போட்டியிடும் ஒன்றுமாக, மொத்தம் 31 தொகுதிகளில் வெல்லாமலிருந்தால் நல்லது!!!

Link to comment
Share on other sites

ஜெயலலிதா வெல்லுறாரோ இல்லையோ வைகோவும் திருமாவளவனும் அனைத்துத் தொகுதிகளிலும் வென்று தமிழக சட்டசபையில் நுழைந்து மக்கள் நலனுக்காக பாடுபடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவின் மீது அவரை ஈன்ற 'அம்மா' பாசம் மிக்கவரா அல்லது தமிழ்நாட்டின் 'அம்மா' பாசம் மிக்கவரா?

பதில்: தமிழ்நாட்டின் 'அம்மா'

ஏன்: அவரை ஈன்ற அம்மா அவரை 10 மாதங்கள் தான் உள்ளே வைத்திருந்தார் ஆனால் தமிழ்நாட்டின் 'அம்மா' அவரை 19 மாதங்கள் உள்ளே வைத்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசிய போராட்டத்தை வைத்து ஆசிய நாடுகள் அனைத்தும் அரசியல் நடத்த பார்கிறது.வாழ்க ஜனநாயகம்.

Link to comment
Share on other sites

கருணானிதியின் கணக்கும் வைகோவின் காய் நகர்த்தலும் - என்ற தலைப்பில் மெல்பேர்ண் தமிழ்க்குரல் வானொலியில் சென்ற 12ம் திகதி ஒலிபரப்பாகிய சபேசனின் ஆய்வின் எழுத்து வடிவம்

http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060314.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
    • திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.
    • 5 ஓ…. 8 ஓ…. 10 ஓ….. சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்…… முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.