Jump to content

அகதியாக சென்ற ஈழத்தமிழன் நித்திரையில் அடித்துக்கொலை


Recommended Posts

இ****** அகதியாக சென்ற ஈழத்தமிழன் நித்திரையில் அடித்துக் கொலை. அகதியாக இ**** வந்தால் இதுதான் பதில் என்று கூறி தாக்கினர்.

இலங்கை அரச வன்முறைகளுக்கு பயந்து இ******அகதியாக தலைமன்னார் ஊடாக சென்ற ஈழத்தமிழன் இ***** அகதி முகாமில் ஆழந்த நித்திரையில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இ***** த**நாட்டின் மறக்கனம் என்ற இடத்திற்கு அருகாமையில் இந்த கோரச்சம்பவம் நடந்துள்ளது. இலங்கை அரசின் வன்முறைகளுக்கு பயந்து இ***** ஈழத்தமிழன் தனது மனைவி பிள்ளைகள் சகிதம் அண்மையில் அகதியாக சென்றுள்ளார். 26 வயதுடடைய நித்தியானந்தம் என்ற நேசன் தனது 24 வயது நிரம்பிய மனைவி கவிதா, 2 வயது குழந்தை பானு அல்லது மீராதர்சினியுடன் இ***** அகதியாக சென்றுள்ளார். தனது மனைவி குழந்தையுடன் ஆழ்ந்த நித்திரையில் உறங்கிய நேசனை ஒரு தமிழ் குழுவினர் அடித்துக் கொலை செய்துள்ளதுடன் மனைவி கவிதா கணவனை காப்பாற்ற இடைநடுவில் அகப்பட்டதால் படுகாயமடைந்துள்ளார். நேசனை அடித்து கொலை செய்தவர்கள் இ***** ஈழத்தமிழர்கள் அகதியாக வரக்கூடாது என்று கூறி தாக்கியதாக அறியமுடிகிறது.

இது தமிழீழ-தமிழக மக்களிடையே குரோதத்தை வளர்க்கும் அளவிற்கு செய்தி திரிவுபடுத்தப்பட்டுள்ளது

மோதலுக்கு காரணம் பழைய குரோதமே

ஆதாரம்: நிதர்சனம் இணையம்

Link to comment
Share on other sites

அகதிகள் முகாமில் வாலிபர் வெட்டி கொலை

impn43.jpg

காலாப்பட்டு: புதுச்சேரி அருகே இலங்கை அகதிகள் முகாமில் அதிகாலையில் கணவன்மனைவி மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலில் கணவன் படுகொலை செய்யப்பட்டார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் புத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இலங்கையை சேர்ந்த 250 குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டிற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்த முகாமில் இலங்கை மன்னார் மாவட்டம் நானாட்டா பகுதியை சேர்ந்த மகன் நேசன் (26) தனது மனைவி கவிதா(25), மகள் பானு (2) ஆகியயோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 .30 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேசனின் வீட்டு கதவை தட்டி குடிக்க தண்ணீர் கேட்டனர். உடன் நேசனின் மனைவி கவிதா தண்ணீர் குவளையுடன் கதவை திறந்தார். அப்போது வெளியே நின்றிருந்த மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து கவிதாவையும், அவரது கணவர் நேசனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது நேசனின் வீட்டிலிருந்து வெளியே வந்த முகமூடி(மப்ளர்) அணிந்த கொலையாளிகள் கத்தியைக் காட்டி மிரட்டியபடி தப்பி சென்றனர்.

பின்னர் வீட்டினுல் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த நேசன் மற்றும் கவிதாவை பொதுமக்கள் மீட்டு கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேசன் இறந்தார். கவிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., இளங்கோ, மரக்காணம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சப்இன்ஸ்பெக்டர்கள் அரிக்குமார், அரிக்கிருஷ்ணன், ஏட்டு அலெக்ஸ்சாண்டார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் ஏஞ்சல் சம்பவ இடத்தில் இருந்து முதலியார்குப்பம், அனிச்சங்குப்பம் வழியே சுமார் 3 கி.மீ., துõரத்திற்கு ஓடி திரும்பியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சம்பவம் நடந்த கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமில் பொங்கலுக்கு முன்பு நேசனுக்கும்முகாமில் தங்கியுள்ள வேறு சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. இருப்பினும் இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

http://dinamalar.com/2006jan20/imp43.asp

Link to comment
Share on other sites

உண்மையை புரிந்து கொண்டதற்கு நன்றி ஊமை...... இதே புரிந்துணர்தல் அனைத்து சகோதரர்களுக்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.