Jump to content

திமுகவில் சேருகிறாரா விஜய்?


Mathan

Recommended Posts

திமுகவில் சேருகிறாரா விஜய்?

vijayh4004cb.jpg

அரசியலில் ஏபிசிடி கூட எனக்குத் தெரியாது. நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பலரின் வீடுகளில் அதிரடி வருமான வரி சோதனை நடந்தது. இதில் அதிகம் சோதனைக்குள்ளானது நடிகர் விஜய்தான். அவரது வீடுகள், கல்யாண மண்டபங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சோதனையின்போது கோடிக்கணக்கான பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந் நிலையில், விஜய் திடீரென டெல்லியில் நடந்த பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இது தமிழகத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் தேசிய அளவில், மத்திய அரசு அளவில் நடைபெறும் நிகழ்ச்சி என்றால் பொதுவாக தேசிய அளவில் பிரபலமான தமிழ்க் கலைஞர்கள்தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

ஆனால் டெல்லிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஜய் கலந்து கொண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த விழாவை ஏற்பாடு செய்ததும் தயாநிதி மாறன் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தயாநிதி மாறனும், விஜய்யும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றும் சன் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. வருமான வரி சோதனை, தயாநிதி மாறனுடன் டிவி பேட்டி, பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்றது ஆகியவற்றை கூட்டிக் கழித்துப் பார்த்து விஜய் திமுகவில் சேரப் போகிறார், வருமான வரி சோதனைகளிலிருந்து தப்பிக்க பேட்ச்அப் நடந்து விட்டது என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின.

மேலும், விஜய் நடித்த சச்சின் படத்தை வாங்குவது தொடர்பாக சன் டிவிக்கும், விஜய் தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக சச்சின் படத்தையே சன் டிவி புறக்கணித்தது. சச்சின் படம் குறித்த விளம்பரமோ அல்லது பாடல் காட்சிகளோ, படக் காட்சிகளோ சன் டிவியில் இடம் பெறவில்லை. அந்த அளவுக்கு விஜய்யை ஒதுக்கி வைத்தது சன் டிவி.

இந் நிலையில் அத்தனைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் தயாநிதி மாறன் மூலமாக சன் டிவியுடன் விஜய் சமரசம் பேசியிருக்கலாம், அதன் தொடர்ச்சியாகவே டெல்லியில் நடந்த நிகழ்ச்சிக்கு விஜய்யை தயாநிதி மாறன் அழைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டன.

ஆனால் இதையெல்லாம் விஜய் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. எனக்கு அரசியலில் ஏபிசிடி கூட தெரியாது. நான் பொங்கல் சிறப்புத் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எந்த விசேஷமும் இல்லை.

பிரதமர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்ததால் நான் கலந்து கொண்டேன். இதை பெருமையாகவே உணர்கிறேன். இதை வைத்து நான் திமுகவில் சேரப் போவதாக கூறுவது தவறு. அதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் விஜய்.

Thats Tamil

Link to comment
Share on other sites

திமுகவுடன் தொடர்பு இல்லை: எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன் நடிகர் விஜய் பேட்டி

அண்மையில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஏற்பாடு செய்த விழாவில் விஜய் கலந்துகொண்டார். மேலும் தயாநிதி மாறன் - விஜய் உரையாடும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இதையடுத்து விஜய் திமுகவில் சேரப்போவதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து விஜய் கூறியதாவது:

என் அப்பா திமுக தலைவர் கருணாநிதி வசனத்தில் 4 படங்கள் தயாரித்து இயக்கி இருக்கிறார். ஆனாலும் அவர் அந்த கட்சியைச் சார்ந்தவர் அல்ல. திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. ஆனால் அந்த கட்சிக்கும் எனக்கும் என்த சம்பந்தமோ உறவோ கிடையாது.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறனோடு கலந்து கொண்ட டி.வி. நிகழ்ச்சி தற்செயலானது. அன்று மாலை நடக்க இருந்த தபால் வெளியீட்டு விழாவுக்காக காலையிலேயே நான் தில்லி சென்றுவிட்டேன்.

ஓய்வாக இருந்தபோது நானும் அவரும் தற்செயலாகச் சந்தித்து கொண்டோம். அப்போது இருவரும் உரையாடிய நிகழ்ச்சிதான் டி.வி.யில் ஒளிப்பரப்பானது. இதற்கு அரசியல் சாயம் பூசுவது நியாயம் அல்ல. சரியானதும் அல்ல.

இன்று மட்டுமல்ல என்றுமே எனக்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு அரசியலில் ஆனா ஆவன்னா கூட தெரியாது. நான் எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றார்.

dinamani

Link to comment
Share on other sites

பொங்கல் தபால் தலையை இந்திய பிரதமர் விஜயிடம் வெளியிடும் அளவுக்கு அவருக்கு என்ன முக்கியத்துவம் என்று தெரியவில்லை. இது நிச்சயமாக திமுக மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் ஒழுங்கு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

ஆனால் விஜய் புத்திசாலி. தற்போது சினிமாவில் எல்லோராலும் விரும்பப்படுபவராக இருக்கும் அவர் அரசியலில் சேர்ந்து அதை பாழடிக்க விரும்பமாட்டார் என்றே நம்புகின்றேன். விரைவில் ரஜனியின் இடத்தைப் பிடிக்கப்போகும் அவர் அரசியலால் ரஜனியின் பாடத்தையும் புரிந்திருப்பார்.

Link to comment
Share on other sites

வசம்பு ஏன் எப்போதும் தடித்த எழுத்தையையே உபயோகிக்கிறீங்க? சாதாரணமாக முக்கியமான ஒரு விடயத்தை அல்லது கருத்தின் சாரத்தை தானே தடித்த போல்ட் செய்யப்பட்ட எழுத்துக்களில் எழுதுவார்கள்? எந்த எழுத்துருவில் எழுதுவது என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம் ஒரு குறுகுறுப்பில் கேட்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு ஏன் எப்போதும் தடித்த எழுத்தையையே உபயோகிக்கிறீங்க? சாதாரணமாக முக்கியமான ஒரு விடயத்தை அல்லது கருத்தின் சாரத்தை தானே தடித்த போல்ட் செய்யப்பட்ட எழுத்துக்களில் எழுதுவார்கள்? எந்த எழுத்துருவில் எழுதுவது என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம் ஒரு குறுகுறுப்பில் கேட்கின்றேன்

சரியான கேள்வி! இதைப் பலரிடம் கண்டிருக்கின்றேன். சுகம் கேட்பதைக் கூட கண்குத்தும் அளவு சிவப்பு நிறத்தில் போடுவார்கள்

Link to comment
Share on other sites

நல்ல கேள்வி மதன். நானும் முன்பு சாதரணமாகத்தான் எழுதி வந்தேன். ஆனால் எனக்குப் பிறகு கருத்தெழுதவரும் சிலர் தலையங்கத்திற்கு கருத்தெழுதுவதை விட்டுவிட்டு எனது கருத்திற்கு நான் என்ன எழுதியுள்ளேன் என்பதைக் கூட சரியாகக் கவனிக்காமல் தம் பாணியில் கருத்தெழுதினார்கள். பாவம் அவர்களுக்கு புரியட்டுமேயென்று தான் தடித்த எழுத்தில் சில முக்கியமானவற்றை எழுதுகின்றென். உங்களுக்கு இது புரியுமென்பதால் இங்கு அதை தவிர்த்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

வசம்பு தடித்து எழுதினாலும் சரி.... அல்லது அளவில் சிறியதாக எழுதினாலும் சரி..... அவரது கருத்து அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது என்பதே உண்மை.....

Link to comment
Share on other sites

ஆம் அவர் கருத்துகள் எப்போதும் அவரது கருத்து அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது என்பதே உண்மை.....

Link to comment
Share on other sites

அந்த கருத்துக்களை அவமானப்படுத்தவோ, அல்லது அவரை அவமானப்படுத்தவோ தான் பெரும்பாலும் உற்று நோக்கப்படுகிறது என்பது தான் கொடுமையிலும் கொடுமை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்கே!!! :evil: :evil:

திமுகாவில் விஜய் இணைவதைக் கதைப்பதை விட்டு,

நீங்கள் பேசமால் வசம்புக்கு கட்சி அமைத்து, அதில் இணையலாமே!! :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகராவெண்டானாம் ............

ஆனால் விஜய் புத்திசாலி.

:roll: :roll: :roll: :shock:

வசம்பு ஏன் எப்போதும் தடித்த எழுத்தையையே உபயோகிக்கிறீங்க? சாதாரணமாக முக்கியமான ஒரு விடயத்தை அல்லது கருத்தின் சாரத்தை தானே தடித்த போல்ட் செய்யப்பட்ட எழுத்துக்களில் எழுதுவார்கள்?

அவருக்கு எல்லாம் மரத்து/தடித்துப் போச்சு.. அதுதான் ..... :lol:

வசம்பு தடித்து எழுதினாலும் சரி.... அல்லது அளவில் சிறியதாக எழுதினாலும் சரி..... அவரது கருத்து அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது என்பதே உண்மை.....

ஐயோ........ இந்த ஜால்ராக்கள் என்று ஓயுமோ போடு போடு :evil: :evil:

ஆம் அவர் கருத்துகள் எப்போதும் அவரது கருத்து அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது என்பதே உண்மை.....

இது அடுத்த ஜிஞ்சக் ஆஆஆஆஆ.......... அபாரம்... அற்புதம்.... :x :x :x :x :x :x

என்ன நடக்குது இங்கே!!!

அதே இண்டிய அறசியழ் :lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் எதிலும் சேரலாம்தானே?

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்கே!!! :evil: :evil:

திமுகாவில் விஜய் இணைவதைக் கதைப்பதை விட்டு,

நீங்கள் பேசமால் வசம்புக்கு கட்சி அமைத்து, அதில் இணையலாமே!! :oops:

:P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

சென்ற பொங்கலுக்கு சண் ரிவியில் விஜயின் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது (பார்த்வர்களுக்கு தெரியும்)அவரின் புதிய படமான ஆதியின் சிறப்பு கண்னோட்டம் . கிராம மக்களுடன் பொங்கல் விழா . மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுடன் விஜயின் சந்திப்பு என்று கிட்டத்தட்ட அரசியலுக்கு விஜயை இழுப்பதற்காக மக்கள் ஆதரவு என சண் ரிவி ஒளிபரப்பிக் காட்டியது............. இதையெல்லாம் பார்க்கையில் விஜய் திமுகவில் சேர்ந்தாலும் அதிசயமில்லை.........என்ன கொஞ்ச நஞ்ச மதிப்பிருக்கிற மனுஷன் அரசியலுக்கை போய் நாயாகப் போகுது என்னும் போது கவலையாகத் தான் இருக்கு..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.