Jump to content

முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு

இலங்கை அமைதிப் பேச்சுகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

முஸ்லிம்களை தனித்தரப்பாக பேச்சுகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைத்தால் சிங்களவர்களும் தனித்தரப்பாக தங்களை இணைத்துக் கொள்ள கோரிக்கை விடுப்பார்கள் என்பதால் அதை நிராகரிப்பதாக மகிந்த கூறியுள்ளார்.

இதனிடையே இதுவிடயத்தில் ஒருமித்த முடிவை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆலோசனை நடத்த முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது

தகவல்மூலம்;- புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதான பேச்சகளில் முஸ்லிம் தனித்தரப்பு சாத்தியம் இல்லையாம் - மகிந்த

சமாதான பேச்சுகளில் முஸ்லிம்களின் தனித்தரப்பு பற்றி நெடுங்காலமாக முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்திவரும் வேளையில், தற்போது அந்த தனித்தரப்பு கோரிக்கை சாத்தியம் இல்லை என்று ஸ்ரீ லங்கா அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.

நடக்கவிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சுகளின்போது முஸ்லிம்களை தனித்தரப்பாக அரசாங்கத்தோடும், விடுதலைப்புலிகளுடனும், பேச்சுகளில் இணைந்து கொண்டால் சிங்களவர்களும் தாமும் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிப்பார்கள் என்பதனாலேயே இந்த முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கையினை தாம் நிராகரித்துள்ளதாக ஒரு விசித்திரமான காரணத்தைக் கூறியுள்ளார

தகவல் மூலம்- சங்கதி

Link to comment
Share on other sites

இதே மாதிரி தொல்லையினால் தான் பாகிஸ்தான் உருவானது..... மகிந்தா நல்ல வேலை தான் செய்திருக்கிறார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம்களுக்கு சம அந்தஸ்து கோரி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பினால் கையெழுத்து சேகரிப்பு.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்தி;ற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் சமஅந்தஸ்தை கோரி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து சேகரிப்பு இன்று கிழக்கு மாகாணத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கையொப்ப திரட்டல் இன்று அம்பாறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடம்பெற்றது.

இதன்போது அம்பாறையில் மாத்திரம் சுமார் 40 ஆயிரம் கையொப்பங்கள் திரட்டப்பட்டதாக கட்சியின் மாவட்ட இணைப்பாளர் எம் எம் பஹீஜ் தெரிவித்தார்.

இதேவேளை கையொப்பங்கள் திரட்டப்பட்டு அவை ஜனாதிபதி, நேர்வே ஏற்பாட்டாளர், மற்றும் இலங்கைக்கு உதவியளிக்கும் சமதலைமை நாடுகள் என்பவற்றிடம் கையளிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவர் ஹாபிஸ் அகமட் நசிர் தெரிவித்துள்ளார்.

தகவல் மூலம்-பதிவு.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம் தரப்பிற்கு உண்டியலானின் வேண்டுகோள்....

"பத்து, பதினைந்து என்பதைக் கட் பண்ணி, ஒன்று, இரண்டில் நிறுத்துங்கள் எண்று..."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம் தரப்பிற்கு உண்டியலானின் வேண்டுகோள்....

"பத்து, பதினைந்து என்பதைக் கட் பண்ணி, ஒன்று, இரண்டில் நிறுத்துங்கள் எண்று..."

மேல் உள்ள கருத்தை பிழையாக யாரும் எடுக்க வேண்டாம்!! அடியேன் சொல்ல வந்தது என்னவென்றால் "பத்துக்கு கூடுதலான கட்சிகளாக பிரிந்து நில்லாமல் ஒன்றோ இரண்டில் நிறுத்துங்கள் என்றே... :):)

Link to comment
Share on other sites

மேல் உள்ள கருத்தை பிழையாக யாரும் எடுக்க வேண்டாம்!! அடியேன் சொல்ல வந்தது என்னவென்றால் "பத்துக்கு கூடுதலான கட்சிகளாக பிரிந்து நில்லாமல் ஒன்றோ இரண்டில் நிறுத்துங்கள் என்றே... :):)

நான் தப்பாக எடுக்கவில்லை நீங்கள் சொல்ல வந்தது என்ன எண்டு தெரியுது அண்ணா :P :P

நாங்கள் என்ன செய்வது ********* கொடுப்பதை யாரால் தடுக்க முடியும் :wink: :wink:

நான் சொல்ல வந்தது ****************************** :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தப்பாக எடுக்கவில்லை நீங்கள் சொல்ல வந்தது என்ன எண்டு தெரியுது அண்ணா

:):)

Link to comment
Share on other sites

:):)

இதில சிரிக்க என்ன இருக்கு அவர்கள் சுமார் 40 ஆயிரம் கையொப்பங்கள் வாங்கிட்டார்கள் இனி அவர்களை ஒண்டும் செய்ய முடியாது..........

Link to comment
Share on other sites

ஏற்கனவே மொட்டைகளின்ரையும் சிவப்பு சட்டைகளின்ரை ரோதனைகளை தாங்கேலாமல் மனஷன்(மகிந்தா) கிடந்து தடுமாறேக்கை இவையும் போய் எங்களுக்கும் சேத்து எதன் செய் எண்டா என்ன செய்யிறது அதுதான் இந்த முறை மனுஷன் கழட்டியே விட்டுட்டு.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதான பேச்சு வார்த்தையில் முஸ்லிம்களின் பங்கு குறித்த மகிந்தவின்கருத்துக்கு ஹக்கீம் கண்டனம்

நோர்வேயின் இலங்கைக்கான சமாதான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்தார். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கிம் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.

சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடுகள் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிதுவம் என்பன குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் சமாதான பேச்சுவார்ததைகளில் முஸ்லிம்தரப்பு குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

தகவல் மூலம்- சங்கதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை நிராகரிப்பு: முஸ்லிம் சபை கவலை

இலங்கை அமைதி முயற்சிகளுக்கான பேச்சுகளில் முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளமை கவலை அளிப்பதாக சிறிலங்கா முஸ்லிம் சபை கவலை தெரிவித்துள்ளது.

58 முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான முஸ்லிம் சபை மகிந்த ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடித விவரம்:

முஸ்லிம்களை தனித்தரப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் நிராகரித்திருப்பது எமக்கு கவலையளிக்கிறது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது முதலே இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அமைதி முயற்சிகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக இணைக்கப்படாவிட்டால் முஸ்லிம்களினது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அமைதி நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்பட்டுவிடும் நிலை உள்ளது.

இருந்தபோதும் அமைதி முயற்சிகள் வெற்றி பெற நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தகவல் மூலம்-புதினம்.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சுகளில் முஸ்லிம் தனித்தரப்பு விவகாரம்!- மகிந்த மீது ஹக்கீம் கண்டனம்.

இடம்பெறவிருக்கும் பேச்சுகளின்போது முஸ்லிம்கள் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு கட்டங்களிலும் வலியுறுத்தி வருகின்றது. பேச்சுகள் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் மட்டுமே தீர்க்கப்படவேண்டிய முக்கிய விடயமாகும் இதில் முஸ்லிம் தரப்பினருக்கு எதுவித இடமும் இல்லை என ஸ்ரீ லங்கா அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதனைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ராவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்காவின் சமாதான அனுசரணையாளராக செயற்படும் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை செவ்வாயக்கிழமை மாலை சந்தித்துப்பேச்சு நடத்தினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்களிலேயே ரவுப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்த சிந்தனைகள் என்பதில், சமாதானப்பேச்சகளில் முஸ்லிம் தரப்பினர் தனித்தரப்பாக கலந்தகொள்ளுவார்கள் எனத் தெரிவித்திருந்தவர் தற்போது அதனை உதாசீனப்படுத்திவிட்டு அது சாத்தியமில்லை என்கின்றார்.

எவை எப்படி இருப்பினும் முஸ்லிம்கள் தனித்தரப்பாகவே கலந்துகொள்வார்கள் இதனை, விடுதலைப்புலிகளும் புரிந்து கொள்ளவேண்டும். அமைதிப்பேச்சக்கள் இடம்பெறவுள்ள இந்தவேளையில் அதற்குப்பூரண ஆதரவு வழங்குமாறும் மீண்டும் ஒரு யுத்தம் எற்படாதவாறு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வண்ணமும் நாம் அவரைக்கேட்டுக் கொள்கின்றோம். இதே வேளை முஸ்லிம்களின் உரிமைகள், பாதுகாப்பு தொடர்பாகவும் அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சமாதானப்பேச்சுகள் இடம்பெறும் போது முஸ்லிம்கள் தனித்தரப்பாகவே கலந்துகொள்வதற்கு ஆவன செய்யவேண்டும் என்று மீண்டும் நாம் கோருகின்றோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தகவல் மூலம்- சங்கதி

Link to comment
Share on other sites

உடனுக்குடன் செய்திகளை இங்கு இணைப்பதின் மூலம்-

செய்திகள்:தமிழீழம் பகுதியை மேலும் சிறப்பாக்குகிறீர்கள்- நன்றி-மேகநாதன்! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன்,

உங்கள் உளப்பூர்வமான ஊக்கத்துக்கு நன்றிகள்...

எம்மலான சிறுசிறு பணிகளை நேரம் கிடைக்கிற போது மட்டுமே இவ்வாறேனும் செய்ய முடிகிறது....

Link to comment
Share on other sites

முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை :P :P :P :P

இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் அவர்கள் தனித்தரப்பாக இருந்து என்னத்தை தான் சாதிக்கப்போகிறார்கள். கை விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுக்கெல்லாம

Link to comment
Share on other sites

அவர்கள் சுமார் 40 ஆயிரம் கையொப்பங்கள் வாங்கிட்டார்கள் இனி அவர்களை ஒண்டும் செய்ய முடியாது

அது சரி மவுத்தான முஸ்தபாவும், மொஹமெட்டும் இன்னும் யார் யாரோவும் அவர்களுக்கு கையெழுத்து போட மாட்டார்களா என்ன? ஏன் கையெழுத்து வேட்டை நடாத்தியவரே சுமார் ஆயிரக்கணக்கில் தானே கையெழுத்தை இட முடியாதா ? இந்த கையெழுத்து வேட்டை எல்லாம் என்ன மகிந்த மாத்தையா முன்னிலையில் தான் நடந்ததா?

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கு இடமளிக்கப்படும் - ஐனாதிபதி

எதிர் காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கு இடமளிக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கௌரவமான சமாதானம் ஒன்றையே எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித அநீதிகளும் இழைக்கப்படாதவாறு செயற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேபோன்று எதிர்காலத்திலும் தொடர்ந்து செயலாற்றவுள்ளதாக நேற்றுக் காலை அலரிமாளிகையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியபோது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர் ஆகிய அனைத்து சமூகங்களினது உரிமைகளை பாதுகாப்பதே மஹிந்த சிந்தனையில் முக்கிய குறிக்கோள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எந்தவொரு பிரஜைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தாம் செயற்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் அலுவலகத்தின் கிளை அலுவலகத்தை அம்பாறை மாவட்டத்தின் உரிய இடமொன்றில் செயற்படுத்த ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்றைய சந்திப்பின்போது ஜனாதிபதி கூறினார் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்- பதிவு.கொம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.