Jump to content

முடியுநட்புடன் பழகுவது ஆபத்தில் ம்: நடிகை சினேகா


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

goldentamiljana30mv.jpg

முடியுநட்புடன் பழகுவது ஆபத்தில் ம்: நடிகை சினேகா சொல்கிறார்

நடிகை சினேகா நடந்த சம்பவங்களை மறந்து இப்போதுதான் மாமூல் நிலைக்கு திரும்பியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் என்றாலே நாகாரவியைப் பற்றி கேட்டு விடுவார்களோ என்று ஒதுங்கி ஓடிய சினேகா இப்போது மனம் விட்டுப் பேசுகிறார்.

நான் சினிமாவில் நடிக்க ஒப்புக்கொண்ட போது இப்படியெல்லாம் பிரச்சினைகள் வரும் என்று நினைக்கவில்லை. இரண்டு மூன்று மாதங்களாக மிகவும் வேதனையை அனுபவித்து விட்டேன். காதல், கல்யாணம், என்றார்கள். நாகாரவியிடம் நான் நட்புடன்தான் பழகினேன். அதிலும் ஆபத்து உண்டு என்பதை தெரிந்து கொண்டேன்.

நண்பர்களிடமும் உஷாராக இருக்க வேண்டும் என்பதை நடந்த சம்பங்கள் மூலம் பாடமாக கற்றுக் கொண்டேன். நல்லவேளை அதில் இருந்து எப்படியோ மீண்டு வந்து விட்டேன். இந்த புத்தாண்டு பழையவற்றை மறந்து மகிழ்ச்சியுடன் வாழும் நல்ல ஆண்டாக அமையும் என்று நம்புகிறேன்.

மும்பையில் பிறந்து, துபாயில் வளர்ந்த நான், அங்கு நடந்த சினிமா நட்சத்திர கலை நிகழ்ச்சியை பார்க்க சென்றேன். அப்போது என்னை பார்த்த மலையாள டைரக்டர் பாசில் சினிமாவில் நடிக்க அழைத்தார். எனது முதல் படம் மலையாளம். எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றி பெறவில்லை. அடுத்து நடித்த தமிழ் படமும் `ரிலீஸ்' ஆகவில்லை. படஉலகில் இருந்து விலகி படிக்கலாமா என்று யோசித்த போது ஆர்.பி. சவுத்ரி தயாரித்த `ஆனந்தம்' படத்தில் நடித்தேன். அதில் நல்ல பெயர் கிடைத்தது.

தற்போது தெலுங்கில் `ஸ்ரீíராமதாஸ்', `ஏமண்டி சீவாரு' என்ற படங்களிலும், தமிழிலில் செல்வராகவன் இயக்கத்தில் `புதுப்பேட்டை'யிலும், மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்திலும் நடிக்கிறேன். இது எனது 32-வது படம்.

`புதுப்பேட்டை' படத்தில் விலைமாதுவாக நடிக்கிறேன். இது ஒரு விலைமாது அனுபவிக்கும் மன வேதனைகளையும், குடும்ப கஷ்டங்களையும் பிரதி பலிக்கும் வேடம். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது போன்ற பாத்திரம் கிடைத்தால் தெலுங்கிலும் நடிக்க தயார்.

நான் `கமர்சியல்' படங்களிலும் நடிக்கிறேன். என்றாலும், குறிப்பிட்ட எல்லையை தாண்டி என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ஒரு பிரபல டைரக்டர் என்னை கவர்ச்சி வேடத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. கதை எனக்குப் பிடித்தால்தான் நான் நடிப்பேன்.

தமிழில் `ஏபிசிடி'யில் நடித்த விதவைப் பெண் வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. `ஆனந்தம், `பார்த்திபன் கனவு' படங்கள் பிடித்தவை. அடுத்து பிடித்த வேடம் `புதுப்பேட்டை'யில் நான் நடிப்பதுதான். தெலுங்கில் ஸ்ரீராமதாஸ் படத்தில் நடிக்கும் வேடம் பிடித்திருக்கிறது. இது தெலுங்கு பட உலகில் எனக்கு ஒரு மைல் கல்லாக அமையும்.

காதல் கதைகளில் நடிக்க மிகவும் பிடிக்கும். `மரோசரித்ரா' போன்ற காதல் படங்களில் நடிக்க ஆசை. படங்களில் டைரக்டர் சொல்வதை செய்கிறேன். எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

சமீபத்தில் ஒரு விழாவில் நடிகர் சிரஞ்சீவி என்னை மற்றொரு சவுந்தர்யா என்று பாராட்டினார். இதை என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன்.

என்னை தமிழ் பெண் என்று கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. எனது மூதாதையர்கள் ஆந்தி ராவை சேர்ந்தவர்கள். எனது தாய்மொழி தெலுங்குதான். தெலுங்கு பட உலகில் நிலையான இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அது நிச்சயம் நிறைவேறும் என்பது லட்சியம் என்றார் சினேகா.

maalaimalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.