Jump to content

இலங்கையில் இருந்து அகதிகள் வருவது... அதிகரிப்பு


Recommended Posts

இலங்கையில் இருந்து அகதிகள் வருவது... அதிகரிப்பு: புலிகள் ராணுவம் மோதலால் கடும் பதட்டம்

ராமேஸ்வரம்: கடந்த ஒரு மாதமாக இலங்கையில் ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருவதால் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால், பீதியடைந்த தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வருவது அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ஐந்து பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். இதுவரை மொத்தம் 38 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவரும் இனப்போராட்டத்தில் இதுவரை 64 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்பாடா...! சண்டை ஓய்ந்தது என்று இலங்கை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்சே பதவியேற்ற பின்னர் நிலைமை மாறி விட்டது.

கடந்தாண்டு இறுதியில் இலங்கை ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ராக்கெட் வீசி தாக்கப்பட்டது. இலங்கை கடற்படையினர் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த இரு சம்பவங்களையும் புலிகள் மறுத்துள்ளனர். இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் கடந்தாண்டு டிசம்பரில் மட்டும் 100 பேர் பலியாகி யுள்ளனர்.

அமெரிக்கா அரசு சார்பில் இந்த மோதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது. இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இருப்பினும், மோதல்கள் தொடர்கின்றன.

இலங்கை மட்டகளப்பில் நார்வே நாட்டு அமைதித் துõதர்கள் தலைமையிலான சண்டை நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தங்கியிருந்த அலுவலக கட்டடத்தின் மீது நேற்று யாரோ சில மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும், கட்டடத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் புலிகள் மறுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து சண்டை நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹெலன் வோலப்ஸ் டாட்டிர் கூறுகையில், ""தாக்குதல் சம்பவத்திற்கு பிண்ணனியில் யார் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. முதல்முறையாக எங்கள் அலுவலகம் <உள்ள கட்டடம் நேரடியாக தாக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

இலங்கையில் போர் மேகம் சூழ்ந்துள்ளதால், அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். மூன்றாண்டு காலத்திற்கு பின்பு கடந்த மூன்று நாட்களாக ராமேஸ்வரத்திற்கு அகதிகள் வருவது அதிகரித்துள்ளது. மூன்று நாட்களில் மட்டும் 38 பேர் அகதிகளாக வந்துள்ளனர். நேற்று மட்டும் இரண்டு ஆண்கள் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர்.

இதுகுறித்து கவுசல்யா என்ற 19 வயதுப் பெண் கூறுகையில்,""நாங்கள் தலைக்கு ரூ. 3 ஆயிரம் கட்டணமாக கொடுத்து தமிழ்நாடு வந்திருக்கி றோம். இலங்கையில் இனி அமைதியாக வாழ முடியாது. அங்கு இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் நாங்கள் பீதியில் இருந்தோம். ராணுவத்தினர் எங்கள் மீது துப்பாக்கியால் சுடுகின்றனர். குழந்தைகளை கொன்று குவிக் கின்றனர். பெண்களுக்கு எதிராக வன்முறையில் இறங்குகின்றனர். நாங்கள் உயிருக்கு பயந்தே இங்கு வந்திருக்கிறோம்,'' என்றார்.

ஏற்கனவே வந்துள்ளவர்களில் 24 பேர் இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 12ம் தேதி இங்கு வந்தனர். அடுத்து வந்துள்ள ஒன்பது பேரும் மன்னார் மாவட்டத்திலுள்ள தெசலையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் மண்டபம் முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1980ம் ஆண்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் இந்தியா வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : dinamalar.com

http://www.dinamalar.com/2006jan15/imp1.asp

Link to comment
Share on other sites

இலங்கையிலிருந்து மேலும் 25 அகதிகள் வருகை

ஜனவரி 15, 2006

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்திற்கு வரும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

வட கிழக்கு இலங்கையில் போர் அபாயம் அதிகரித்து வருவதால், தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர். சனிக்கிழமை 5 பேர் யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம் வந்தனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 37 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் தனுஷ்கோடி அருகே உள்ள தம்பிக்காடு என்ற இடத்திற்கு 20 பேர் அகதிகளாக வந்தனர். அவர்களை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் மண்டபம் அகதிகள் ¬முகாமு¬க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அகதிகள் வருகை தினசரி நடவடிக்கையாக மாறி வருவதையடுத்து உயர் காவல் அதிகாரிகள் தனுஷ்கோடியில் சனிக்கிழமை தீவிர ஆய்வு நடத்தினர். அங்கு தற்காலிகமாக ஒரு போலீஸ் சோதனை முகாமை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மண்டபம் அகதிகள் ¬முகாமில் தற்போது 2,269 வீடுகள் உள்ளன. அங்கு 702 அகதிகள் தங்கியுள்ளனர். இங்குள்ள பெரும்பாலான வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே பல வீடுகளில் அகதிகள் யாரும் தங்க வைக்கப்படவில்லை. தற்போது மீண்டும் அகதிகள் வருகை ஆரம்பித்திருப்பதால் அதிகாரிகளுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

நன்றி ; தட்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.