Jump to content

மாங்காய் சம்பல்


Recommended Posts

மாங்காய் சம்பல்

எங்கள் வாழ்வில் சின்ன வயசில் அம்மா சமைத்த சாப்பாட்டை விட இதை தானே அதிகம் சாப்பிட்டு இருக்கிறம்...

தேவையானது:

மாங்காய்

மிளகாய் தூள்

உப்பு

வெங்காயம் (நான் யாரையும் திட்டவில்லை)

மிளகாய் (நிறைய போட்டு போட்டு பிறகு....என்னை குறை சொல்ல வேண்டாம்)

1. மாங்காயை சின்னனா வெட்டுங்க.

2. வெங்காயம், மிளகாயை சின்னதா வெட்டுங்க

3. மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.

4. மற்றவர்களுக்கும் குடுத்து சாப்பிடவும்.

பி.கு - களவெடுத்த மாங்காய்க்கு ருசி அதிகமாம்..ஆனால் காவல்துறையில் இருந்து உங்களை வெளியே எடுக்க நாங்கள் வரமாட்டோம்.

நன்றி

சரி சரி உங்கட மாங்காய் சம்பல் கதைகளை எழுதுங்கோ..

Link to comment
Share on other sites

ஆகா...மாங்காய் சம்பல் நான் ஒருக்கால் செய்து பார்க்கத்தான் போறேன்.....:lol:

தூயா..களவு ஊரிலதானே எடுக்கலாம்..இங்கு சான்சே இல்லை...என்ன செய்ய??

அத்தோட..மங்காயை தூள், உப்பு போட்டு சாப்பிட்டாலும் நன்றாய் இருக்கும்...பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல... :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தூயாஅக்கா தகவலுக்கு

நான் சின்ன வயதில் ஊரில் இருக்கும் போது மாங்காய் சம்பல் செய்து செய்து சாப்பிட்டு அலுத்துப்போட்டு

விளாங்காய் தெரியுமா? அதை உடைத்து துருவலையில் சின்னப்புூவாக துருவிப்போட்டு மிளகாய் உப்பு வெங்காயம் தேசிப்புளி அனைத்தையும் சேர்த்து பிசைந்து போட்டு சாப்பிட்டு பாருங்கள் எப்படி இருக்கும்

விளாங்காய் சாறு வயிற்று வலிக்கு சிறந்தது :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா...மாங்காய் சம்பல் நான் ஒருக்கால் செய்து பார்க்கத்தான் போறேன்.....:lol:

தூயா..களவு ஊரிலதானே எடுக்கலாம்..இங்கு சான்சே இல்லை...என்ன செய்ய??

அத்தோட..மங்காயை தூள், உப்பு போட்டு சாப்பிட்டாலும் நன்றாய் இருக்கும்...பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல... :wink:

அட என்னும் செய்து சாப்பிடவில்லையா

எல்லாரும் மாங்காய் சம்பல் சாப்பிட்டால் ஒரு சிலருக்கத்தான் அந்த விளைவுகள் வரும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் பாடசாலையில் வாசலில் வைத்து விற்பார்கள். சேரன் மாங்காயை நன்றாக கீறிப்போட்டு உப்பு மிளகாய் இரண்டு துள்களையும் கலக்கிப்போட்டு அந்த கீறலுக்குள் போட்டு ஒருக்கா குலுககிப்போட்டுத்தருவார்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் கீதாக்குட்டி.. :P

ஆகா இந்த உலகிலேயே முதல் முதலாக எனது அக்கா குட்டி என்று அழைத்து விட்டாவே மிக்க சந்தோசம் :o:o

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றி தூயா

ஆனால் ஒரு டவுட்டு.

மாங்காய் சம்பலுக்கு மிளகாய்தூள் போடுறதா????. மிளகுதூள் தான் போட்டு கேள்விப்பட்டு இருக்கிறன்.

நான் செய்யும் மாங்காய் சம்பலுக்கு. மாங்காயை துருவிவிட்டு உப்பு வெங்காய். பச்சைமிளாகாய் மிளகுதூள் தேங்காய் போட்டுத்தான். செய்வோம்.

Link to comment
Share on other sites

மாங்காய் என்றால் எடுக்கலாம்...விளாங்காய் நான் கண்டதே இல்ல்லை..கொழும்பில் தான் நான் இதெல்லாம் சாப்பிட்டனான். இங்க எங்க இதெல்லாஅம்...நெல்லிக்காய்யும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எங்கள் பாடசாலையில் வாசலில் வைத்து விற்பார்கள். சேரன் மாங்காயை நன்றாக கீறிப்போட்டு உப்பு மிளகாய் இரண்டு துள்களையும் கலக்கிப்போட்டு அந்த கீறலுக்குள் போட்டு ஒருக்கா குலுககிப்போட்டுத்தருவார்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்முறைக்கு நன்றி தூயா

ஆனால் ஒரு டவுட்டு.

மாங்காய் சம்பலுக்கு மிளகாய்தூள் போடுறதா????. மிளகுதூள் தான் போட்டு கேள்விப்பட்டு இருக்கிறன்.

நான் செய்யும் மாங்காய் சம்பலுக்கு. மாங்காயை துருவிவிட்டு உப்பு வெங்காய். பச்சைமிளாகாய் மிளகுதூள் தேங்காய் போட்டுத்தான். செய்வோம்.

எந்த ஊர் காணும் நீங்கள்? :twisted: மிளகுதூள் போடுறதில்லை :?

Link to comment
Share on other sites

மாங்காயில இன்னொன்றும் செய்யுறது..அதைச் சம்பல் என்றதா இல்ல சலாட் என்றதா.. என்னென்றது எல்லாம் நமக்குத் தெரியாதுங்கோ..! செய்ய வேண்டியது..

கரட் சீவிற ஸ்கிறப்பற (துருவி) எடுத்து தோல் சீவிய மாங்காயை துருவிட்டு.. போதிய அளவுக்கு சீனியும் கொஞ்சோண்டு உப்பும் போட்டு சாப்பிட்டுப் பாருங்க.. அப்புறம் தினமும் கேட்பீங்கள்..! :wink: :P

Link to comment
Share on other sites

எந்த ஊர் காணும் நீங்கள்? :twisted: மிளகுதூள் போடுறதில்லை :?

தூயா மிளகாய் தூள் போடுற மாதிரி நான் மிளகுதூள் போடுறன் நீங்கள் போடுற இல்லை அதுக்கு ஏன் இப்படி கோவப்படுறீங்கள். பார்த்து பிறஸர் வர போகுது :P :P :P

Link to comment
Share on other sites

bsar_ramadan_mango_salad_1.jpg

நாங்க சொன்ன ஐரமும் இப்படித்தான் இருக்கும்..இதுக்க வேற மிக்ஸ் பண்ணி இருக்காங்க...துயா பாப்ஸின் சம்பல் இப்படித்தான் இருக்கும் போல..! :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாங்காய் வறை சாப்பிட்டிருக்கிறியளா? அதுக்குள் றாலும் போட்டு வறுத்தால் அதன் சுவையோ தனிதான் இப்பவே எனக்கு வாயுறுது.

Link to comment
Share on other sites

கொழும்பில அம்ப்ரலங்காய் என்டு இருக்கு தானெ....அதுவும் இப்படி சாப்பிடுவார்கள்

Link to comment
Share on other sites

கொழும்பில அம்ப்ரலங்காய் என்டு இருக்கு தானெ....அதுவும் இப்படி சாப்பிடுவார்கள்

ஏன் பிள்ளை கொழும்பு கோல்பேசிலை போய் மத்தியான வெயிலிலை குடைபிடிச்சுக் கொண்டு இருக்கேக்கை அன்னாசிபழம் இப்பிடித்தான் வெட்டிக் கொண்டு வருவாங்கள் உப்புத்தூள் போட்டு வாங்கிச் சாப்பிட்டால் சும்மா தூக்கும்................(ஆனா எதாலை அப்பிடி சுவை எண்டு தெரியேலை காரணம் பக்கதிலை இருக்கிற ஆளாலையோ தெரியலை...........)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாங்காய் சம்பலிலிருந்து

நிறைய வகையறாக்கள் ..

பகிர்ந்துகொண்ட உள்ளங்களுக்கு நன்றிகள்.....

மாங்காய் குழம்பும் அருமையாய் இருக்கும்....

செங்காயாய் இருக்கணும்....

சர்க்கரை சிறிதளவு சேர்க்கிரவையள்...

பூடும் போட்டா...

அந்த மாதிரி இருக்கும் ..

விரத சாப்பாட்டுக்கு மணியா இருக்கும்...

(மன்னியுங்கோ..செய்முறை தெரியாது பாருங்கோ;

சாப்பிட மட்டும் தான் தெரியும்...)

Link to comment
Share on other sites

என்ன அக்காமார் எல்லாம் மாங்காய்ச்சம்பல் விளாங்காய்ச்சம்பல் என்று இறங்கீட்டிங்கள்? வீடுகள்ள ஏதும் விசேசமோ? உது மாதிரி புளியங்காயயும் உப்பு, பச்சமிளகாய் சேர்த்து இடித்து சாப்பிட்டால் ருசியாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

சர்க்கரை என்டால் சீனி தானே??

Link to comment
Share on other sites

சர்க்கரை என்டால் சீனி தானே??

இலங்கை இப்படி கூறுவதில்லை சர்க்கரையை சர்க்கரை(வெல்லக்கட்டி) என்றுதான் கூறுவார்கள்

இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்

Link to comment
Share on other sites

நர்மதா.., இந்தியாவில் சீனியைத்தான் 'சர்க்கரை' என்று சொல்வார்கள். நாம் சர்க்கரை என்று சொல்லும் வெல்லக்கட்டியை, அவர்கள் 'வெல்லம்' என்று சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

அதைத்தானே மேலே குறிப்பிட்டுள்ளேன் அதில் ஏதும் பிழையா நான் கூறியதைத்தானே நீங்கள் மீண்டும் கூறியுள்ளீர்கள்? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதைத்தானே மேலே குறிப்பிட்டுள்ளேன் அதில் ஏதும் பிழையா நான் கூறியதைத்தானே நீங்கள் மீண்டும் கூறியுள்ளீர்கள்? :roll:

இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்

இந்தியாவில் நாம் சொல்லும் சீனியை சர்க்கரை என்று கூறுவார்கள் என்றால் சரியாய் இருக்கும் நர்மதா.

:lol::lol:

இந்தியாவில் சீனி எனும் சொல்லே பாவனையில் இல்லை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

[

இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்

இந்தியாவில் நாம் சொல்லும் சீனியை சர்க்கரை என்று கூறுவார்கள் என்றால் சரியாய் இருக்கும் நர்மதா.

:lol::lol:

இந்தியாவில் சீனி எனும் சொல்லே பாவனையில் இல்லை என நினைக்கிறேன்.

இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்

ஓ நான் மாறிப்பேட்டுட்டன் நன்றி அண்னா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.