Jump to content

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபட கணவன்மாருக்கு "நற்செய்தி' "உலகில் முதற்தடவையாக மூலிகை நிவாரணி அறிமுகம்' .


Recommended Posts

வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக சதா காலமும் மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு ஆண்களுக்கான நல்ல செய்தியாக இது உள்ளது.

நச்சரிப்புக்கு எதிரான மருந்தொன்று உலகில் முதல் முறையாக அறிமுகமாகின்றது. மூலிகை மருந்தே இந்த நிவாரணியாகும். நச்சரிப்பு தொடங்கியவுடன் அவர்களை இந்த மூலிகை நிவாரணியால் கட்டுப்படுத்த முடியும் என்று அதனைத் தயாரித்தோர் கூறுகின்றனர். ஆண்கள்,பெண்கள் இருபாலாரிடத்தும் இந்த மருந்து வேலை செய்யுமென அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் இது சிறப்பான முறையில் பயனளிக்குமென அவர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றனர்.

மனைவிமாரால் இரக்கமற்ற முறையில் அடக்குமுறைக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான கணவன்மாருக்கு இது ஆறுதலையளிக்கும் என்று கூறப்படுகிறது. பெண்ணின் ஹோர்மோன் சமநிலையை இந்த மூலிகை மருந்து ஏற்படுத்திக் கொடுக்குமென்று அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் ஜோடிகளின் தாம்பத்திய வாழ்வையும் இது மேம்படுத்தும் எனவும் ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

அடாவடித்தனமாகவும் ஆத்திரத்துடனும் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களையும் இந்த மூலிகை நிவாரணி மகிழ்ச்சியானவர்களாக மாற்றுமெனவும் தனிப்பட்டவர்களுக்கு ஆறுதலான மன நிலையை ஏற்படுத்துமெனவும் தயாரிப்பாளரின் பேச்சாளரான மைக்கேல் ரிலே என்பவரை மேற்கோள்காட்டி பிரிட்டனின் டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அலோவேரா சீன மற்றும் மருத்துவ மூலிகைகளைக் கலந்து தயாரிக்கப்படும் இந்த நிவாரணியானது மனதை அமைதிப்படுத்துமெனவும் முரண்பாடான உணர்வைக் குறைக்குமெனவும் சமநிலையற்ற தன்மையை மாற்றுமெனவும் அவர் கூறியுள்ளார். தினசரி இரு தடவை நாக்குக் கீழே இதனைத் தெளிக்க வேண்டும். எட்டு வாரங்களில் இதன் பெறுபேறுகளைக் காண முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மூலிகை நிவாரணி மலிவானதல்ல. போத்தல் ஒன்று 49 பவுண்ஸாகும்.

http://www.thinakkural.com/news/all-news/business/7171-----q-q----.html

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு நான் ஒரு நல்ல வழி சொல்லுறன்.. நச்சரிக்கிற மனிசிக்கு 3 முறை எச்சரிக்கை கொடுங்க.. அதுக்கும் கேட்கல்லைன்னா.. விவாகரத்தை பெற்றிடுங்க. அதுதான் நல்ல வழி. :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நச்சரிக்கிற மனிசிக்கு 3 முறை எச்சரிக்கை கொடுங்க. அதுவும் பலனளிக்காவிட்டால் கன்னத்தில் பளார் எண்டு வையுங்க. எதுக்குங்க நிவாரணி எல்லாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருந்து பக்கத்து வீட்டுக்காரிக்கு கொடுத்தால் இங்கை எல்லா வருத்தமும் சுகமாகும் :unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவிக்கு ஏற்ற கணவனாக இருந்தால் மனைவி ஏன் இப்படி நச்சரிக்கப் போகிறார் :lol:

Link to comment
Share on other sites

இதுக்கு நான் ஒரு நல்ல வழி சொல்லுறன்.. நச்சரிக்கிற மனிசிக்கு 3 முறை எச்சரிக்கை கொடுங்க.. அதுக்கும் கேட்கல்லைன்னா.. விவாகரத்தை பெற்றிடுங்க. அதுதான் நல்ல வழி. :D:)

இஸ்லாமிய சமய முறைப்படி இப்படி மூன்றுமுறை தலாக் ...தலாக் தலாக்.. என்று சொன்னால் விவாகரத்து பெற்றதாக அர்த்தம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதையா சொல்கிறீர்கள்? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவிக்கு ஏற்ற கணவனாக இருந்தால் மனைவி ஏன் இப்படி நச்சரிக்கப் போகிறார் :lol:

மொத்தத்தில் கூஜாவாக இருக்கனும் என்று சொல்றிங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் கூஜாவாக இருக்கனும் என்று சொல்றிங்க.

கூஜா மட்டுமில்ல.. தாஜா வேறயாம். கொடுமைடா சாமி. இதில கணவன் என்ற ஒரு வெற்றுத் தகுதி வேற..! :D:lol:

Link to comment
Share on other sites

வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக சதா காலமும் மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு ஆண்களுக்கான நல்ல செய்தியாக இது உள்ளது.

....

http://www.thinakkural.com/news/all-news/business/7171-----q-q----.html

ஒரு சின்ன சந்தேகம்... கட்டாயம் இது கணவன் மனைவிக்குள்ள தான் வேலை செய்யுமா? :unsure: வேலை இடத்தில முதலாளிக்கு வேலை செய்யாதா??? (நச்சரிப்புத் தாங்க முடியல... :lol::D)

Link to comment
Share on other sites

ஒரு சின்ன சந்தேகம்... கட்டாயம் இது கணவன் மனைவிக்குள்ள தான் வேலை செய்யுமா? :unsure: வேலை இடத்தில முதலாளிக்கு வேலை செய்யாதா??? (நச்சரிப்புத் தாங்க முடியல... :lol::D)

ஐயா குட்டி என்ன கேள்வி இது?

இந்த மருந்தை எப்படி அவர்களுக்கு கொடுப்பது? :unsure:

தினசரி இரு தடவை நாக்குக் கீழே இதனைத் தெளிக்க வேண்டும். எட்டு வாரங்களில் இதன் பெறுபேறுகளைக் காண முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/all-news/business/7171-----q-q----.html

எனது முதலாளியும் ஒரு பெண்தான். எப்படிக் கொடுப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் கூஜாவாக இருக்கனும் என்று சொல்றிங்க.

மனைவிக்கு ஏற்ற கணவராய் இருக்க வேண்டும் என்டால் உட‌னே கூஜாவா :D:lol: ..இந்த ஜென்மத்தில் கல்யாண‌ம் நட‌க்காது <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக சதா காலமும் மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு ஆண்களுக்கான நல்ல செய்தியாக இது உள்ளது.

நச்சரிப்புக்கு எதிரான மருந்தொன்று உலகில் முதல் முறையாக அறிமுகமாகின்றது. மூலிகை மருந்தே இந்த நிவாரணியாகும். நச்சரிப்பு தொடங்கியவுடன் அவர்களை இந்த மூலிகை நிவாரணியால் கட்டுப்படுத்த முடியும் என்று அதனைத் தயாரித்தோர் கூறுகின்றனர். ஆண்கள்,பெண்கள் இருபாலாரிடத்தும் இந்த மருந்து வேலை செய்யுமென அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் இது சிறப்பான முறையில் பயனளிக்குமென அவர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றனர்.

மனைவிமாரால் இரக்கமற்ற முறையில் அடக்குமுறைக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான கணவன்மாருக்கு இது ஆறுதலையளிக்கும் என்று கூறப்படுகிறது. பெண்ணின் ஹோர்மோன் சமநிலையை இந்த மூலிகை மருந்து ஏற்படுத்திக் கொடுக்குமென்று அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் ஜோடிகளின் தாம்பத்திய வாழ்வையும் இது மேம்படுத்தும் எனவும் ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

அடாவடித்தனமாகவும் ஆத்திரத்துடனும் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களையும் இந்த மூலிகை நிவாரணி மகிழ்ச்சியானவர்களாக மாற்றுமெனவும் தனிப்பட்டவர்களுக்கு ஆறுதலான மன நிலையை ஏற்படுத்துமெனவும் தயாரிப்பாளரின் பேச்சாளரான மைக்கேல் ரிலே என்பவரை மேற்கோள்காட்டி பிரிட்டனின் டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அலோவேரா சீன மற்றும் மருத்துவ மூலிகைகளைக் கலந்து தயாரிக்கப்படும் இந்த நிவாரணியானது மனதை அமைதிப்படுத்துமெனவும் முரண்பாடான உணர்வைக் குறைக்குமெனவும் சமநிலையற்ற தன்மையை மாற்றுமெனவும் அவர் கூறியுள்ளார். தினசரி இரு தடவை நாக்குக் கீழே இதனைத் தெளிக்க வேண்டும். எட்டு வாரங்களில் இதன் பெறுபேறுகளைக் காண முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மூலிகை நிவாரணி மலிவானதல்ல. போத்தல் ஒன்று 49 பவுண்ஸாகும்.

http://www.thinakkural.com/news/all-news/business/7171-----q-q----.html

என்ன உது?மாட்டு வைத்தியர் குடுத்த ஐடியா போலைகிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியரின் அல்லது துணைவியாரின் நச்சரிப்பைக் கட்டுப் படுத்தினால் இது அவர்களுக்குப் பல பிரச்சனைகளைக் கொண்டு வரும்!

இரத்த அழுத்தம், அவர்களுக்கு அதிகரிக்கும் சந்தர்ப்பம் அதிகம்! அவர்களது முக்கியத்துவம் குறைந்து போவதால், வேண்டப் படாதவர்களாக உணர்வார்கள்!

எனக்கென்னவோ, நச்சரிப்புக்குப் பழகிப் போய்விடுவது நல்லது போல் உள்ளது!

இலகுவான வழியொன்று, புதிதாகத் திருமணம் செய்பவர்களுக்கு!

ஒரு காதால் வாங்கி, மறு காதால் விட்டு விடுவது!!! போகப் போகப் பழக்கத்தில் வந்து விடும்!!!

Link to comment
Share on other sites

ஆண்களே புரிந்துணர்வுகளுடனும், அன்புடனும் நடக்கவும், மூலிகை நிவாரணிகள் எதுவுமே தேவையில்லை :) மனைவிக்குப் பயப்படும்

ஆண்களே விழித்தெழுங்கள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அளவில் மருந்து கண்டுபிடிக்காத ஒரே நோய் இதுதான்

இதற்கு மருந்து கண்டுக்காமல் இருப்பது...?

தானாக அடங்கும்

அல்லது

முத்தி அழிந்துதுபோகும் :lol::D:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன சந்தேகம்... கட்டாயம் இது கணவன் மனைவிக்குள்ள தான் வேலை செய்யுமா? :unsure: வேலை இடத்தில முதலாளிக்கு வேலை செய்யாதா??? (நச்சரிப்புத் தாங்க முடியல... :lol::D)

எனது முதலாளியும் ஒரு பெண்தான். எப்படிக் கொடுப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் :(

ஆகா... குடுத்து வைச்சனீங்கப்பா.....

அந்த பெண் முதலாளி எதுக்கு நச்சரீக்கிறாங்கள்? :wub::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... குடுத்து வைச்சனீங்கப்பா.....

அந்த பெண் முதலாளி எதுக்கு நச்சரீக்கிறாங்கள்? :wub::D:lol:

உடனே பதில் தாருங்கள்

சிறிக்கு மட்டுமல்ல இங்கு பலருக்கு தலை வெடிக்கும்முன்............ :wub::D:D:D

Link to comment
Share on other sites

தினசரி இரு தடவை நாக்குக் கீழே இதனைத் தெளிக்க வேண்டும்

முத்தத்தை தவிர ஏதும் மருந்துண்டோ பராபரமே. :D:D

Link to comment
Share on other sites

ஆகா... குடுத்து வைச்சனீங்கப்பா.....

அந்த பெண் முதலாளி எதுக்கு நச்சரீக்கிறாங்கள்? :wub::D:lol:

எனது Boss நான் வேலையை கெதியில முடிக்கிறேன் இல்லை என்று அடிக்கடி நச்சரிப்பார். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது Boss நான் வேலையை கெதியில முடிக்கிறேன் இல்லை என்று அடிக்கடி நச்சரிப்பார். :(

வேலையை கெதியாய் முடிச்சுக்குடுத்தால் அவ ஏன் நச்சரிக்கப்போறா? தம்பி சரியான ரியூப்லைபோலை கிடக்கு :(

Link to comment
Share on other sites

ஆகா... குடுத்து வைச்சனீங்கப்பா.....

அந்த பெண் முதலாளி எதுக்கு நச்சரீக்கிறாங்கள்? :wub::D:lol:

சிறி அண்ணா நீங்கள் வேற... :rolleyes:

அது ஒரு குப்பைப்பசாசு! முதலாளி என்று பெயர் தான், ஒரு இழவும் தெரியாது.. மரியாதையா கதைக்கக் கூட தெரியாது... (வாய்க்குள்ள எப்பவும் lollypop வைச்சு கொண்டு தான் எல்லா staff ஓடையும் கதைக்கிறது. ஒரு தடவை கூட வேலை செய்யும் 57வயது பெரியவர் 35 வருடமா அங்கேயே வேலை செய்யும் ஒருவர் ரயில் தாமதமாகியதால் 20 நிமிடங்கள் பிந்திவந்ததிற்கு எல்லார் முன்னிலையிலும் அந்தாளின்ர முகத்துக்குள்ள கையை நீட்டி கதைச்சது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... <_< அந்தப் பெரியவரை பார்க்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாக போய் 'நீ ஒரு ஆளோட கதைக்கிறது என்றால், உன்ர office க்குக் கூப்பிட்டு கதை, இஞ்ச வேலை செய்கிற எல்லாரையும் நீ குழப்பாதை' என்று சொல்லவேண்டியதாப் போய்விட்டது. புதுசா வந்த இத்தாலியன் ஒருத்தன் சொன்னான், தன்னோட இப்படி இவள் கதைச்சால் 'இவளை முதல சுட்டுப் போட்டுத்தான் இவளுக்குப் பதில் சொல்லுவேன்' என்று.. :D:lol:

அதில இருந்து பசாசின்ர நச்சரிப்புத் தாங்க முடிய இல்லை... :mellow::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா நீங்கள் வேற... :rolleyes:

அது ஒரு குப்பைப்பசாசு! முதலாளி என்று பெயர் தான், ஒரு இழவும் தெரியாது.. மரியாதையா கதைக்கக் கூட தெரியாது... (வாய்க்குள்ள எப்பவும் lollypop வைச்சு கொண்டு தான் எல்லா staff ஓடையும் கதைக்கிறது. ஒரு தடவை கூட வேலை செய்யும் 57வயது பெரியவர் 35 வருடமா அங்கேயே வேலை செய்யும் ஒருவர் ரயில் தாமதமாகியதால் 20 நிமிடங்கள் பிந்திவந்ததிற்கு எல்லார் முன்னிலையிலும் அந்தாளின்ர முகத்துக்குள்ள கையை நீட்டி கதைச்சது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... <_< அந்தப் பெரியவரை பார்க்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாக போய் 'நீ ஒரு ஆளோட கதைக்கிறது என்றால், உன்ர office க்குக் கூப்பிட்டு கதை, இஞ்ச வேலை செய்கிற எல்லாரையும் நீ குழப்பாதை' என்று சொல்லவேண்டியதாப் போய்விட்டது. புதுசா வந்த இத்தாலியன் ஒருத்தன் சொன்னான், தன்னோட இப்படி இவள் கதைச்சால் 'இவளை முதல சுட்டுப் போட்டுத்தான் இவளுக்குப் பதில் சொல்லுவேன்' என்று.. :D:lol:

அதில இருந்து பசாசின்ர நச்சரிப்புத் தாங்க முடிய இல்லை... :mellow::rolleyes:

எனது Boss நான் வேலையை கெதியில முடிக்கிறேன் இல்லை என்று அடிக்கடி நச்சரிப்பார். :(

எனக்கு நீங்களும், தப்பிலியும் சொன்னது..... முதலே விளங்கீட்டுது.

சும்மா.... சூடு ஏத்துவம், எண்டு தான் நான் அப்பிடி சொன்னனான். :)

மனிசி மாரின் நச்சரிப்பே தாங்க முடியாமல் பலர் இருக்கும் போது........ :o

பொம்பிளை முதலாளியாய் இருந்தால்..... வெடக் நாய் (சொல்லி வேலையில்லை) (யாழ் களத்தில் அண்மையில் கற்ற சிங்களம்)

நான் பகிடியாய்... சொன்னதை, தப்பிலி சீரியசாய்... எடுத்து மூஞ்சையை, சுழிச்சுப் போட்டார் எண்டு கவலையாய் இருக்குது குட்டி.

Link to comment
Share on other sites

எனக்கு நீங்களும், தப்பிலியும் சொன்னது..... முதலே விளங்கீட்டுது.

சும்மா.... சூடு ஏத்துவம், எண்டு தான் நான் அப்பிடி சொன்னனான். :)

மனிசி மாரின் நச்சரிப்பே தாங்க முடியாமல் பலர் இருக்கும் போது........ :o

பொம்பிளை முதலாளியாய் இருந்தால்..... வெடக் நாய் (சொல்லி வேலையில்லை) (யாழ் களத்தில் அண்மையில் கற்ற சிங்களம்)

நான் பகிடியாய்... சொன்னதை, தப்பிலி சீரியசாய்... எடுத்து மூஞ்சையை, சுழிச்சுப் போட்டார் எண்டு கவலையாய் இருக்குது குட்டி.

இதுகெல்லாம கவலைப்படுறது சிறி அண்ணா? ரதியிடம் 2 பைன்ட் budweiser வாங்கி அடியுங்கோ... :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனே பதில் தாருங்கள்

சிறிக்கு மட்டுமல்ல இங்கு பலருக்கு தலை வெடிக்கும்முன்............ :wub::D:D:D

வேலையை கெதியாய் முடிச்சுக்குடுத்தால் அவ ஏன் நச்சரிக்கப்போறா? தம்பி சரியான ரியூப்லைபோலை கிடக்கு :(

தப்பிலி & குட்டி,

உங்கள் முதலாளியை வழிக்கு கொண்டு வாறதுக்கு...... :wub:

விசுகரிடமும், கு.சா. அண்ணாவிடமும் ஐடியா கேட்டால்..... தாராளமாக, தருவார்களே. ஒருக்கா... றை பண்ணிப் பாருங்கோவன். :lol:

Link to comment
Share on other sites

தப்பிலி & குட்டி,

உங்கள் முதலாளியை வழிக்கு கொண்டு வாறதுக்கு...... :wub:

விசுகரிடமும், கு.சா. அண்ணாவிடமும் ஐடியா கேட்டால்..... தாராளமாக, தருவார்களே. ஒருக்கா... றை பண்ணிப் பாருங்கோவன். :lol:

இத்தாலியனை எங்கட டீமில சேர்த்திட்டமே சிறி அண்ணா, இனி எல்லாம் அவன் செயல்... :lol: :lol: :D

கு.சா. அண்ணா விசுகு அண்ணா எதுக்கும் நீங்களும் உங்கட ஐடியாவை சொல்லுங்கோ, ஒரு வேலை இத்தாலியன் காலை வாரிடான் என்றால்... :o:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.