Jump to content

எனக்குப் பிடித்த பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இந்தப் பகுதியில் நான் பார்த்து,கேட்டு,ரசித்த பாடல்களை இணைக்கப் போகிறேன்.உங்களுக்கு நான் இணைக்கும் பாட்டு பிடித்திருந்தால் பாட்டினை ரசியுங்கள் அத்தோடு உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

ஆனால் தயவு செய்து உங்களுக்கு பிடித்த பாட்டினை கொண்டு வந்து இதில் இணைக்க வேண்டாம்.ஏன் என்டால் எனக்குப் பிடித்த பாட்டுகள் எது என்று உங்களுக்குத் தெரியாது :)

இந்தப் பாடல் வருடம் 16 படத்தில் இடம் பெற்றது.கேஜே ஜேசுதாஸ் அவர்கள் பாடியது[எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் இவர் தான் முதன்மையானவர்.]அவருக்கு தேசிய விருது இந்தப் பாட்டுக்கு கிடைத்தது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பிக்கேட்கும் பாடலில் ஒன்று. இளையராஜாவின் இசையில் ஜேசுதாஸின் குரலில் வரும் பாட்டுக்கள் நன்றாகத்தான் இருக்கும், எனினும் பாடலைப் பார்க்குமளவிற்கு பாடல் காட்சி நன்றாக வரவில்லை. மற்றது கிழட்டு சார்லியை இளைஞனாகக் காட்டுவது ஒட்டவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பிடித்த பாடல் எங்களுக்கும் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கும்,கறுப்பிக்கும் நன்றிகள்.

இந்தப் பாட்டு வித்தியாசகரின் இசையில் மனோ,சொர்ணலதா ஆகியோர் பாடி உள்ளார்கள்.கர்ணா படத்தில் இந்தப் பாட்டு இடம் பெற்றது...இந்தப் பாட்டை யார் எழுதியது எனத் தெரியாது ஆனால் பாட்டு வரிகள் நன்றாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டின் இசையும்,பாட்டும்,பரத்,கோபிகாவின் நடனமும் எனக்கு மிகவும் பிடிக்கும் அது மட்டும் இல்லாமல் நானும் இந்த பாட்டில் பங்கு பற்றி உள்ளேன் :lol:

http://www.youtube.com/watch?v=zfmfpEfGupE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டும் இல்லாமல் நானும் இந்த பாட்டில் பங்கு பற்றி உள்ளேன் :lol:

ஒஹோ. படகில துடுப்புப் போடுவதுதான் நீங்களோ! :lol:

Link to comment
Share on other sites

முதல் பாடலும் இந்தப் பாடலும் நன்றாக உள்ளது தொடருங்கள்...

ஒஹோ. படகில துடுப்புப் போடுவதுதான் நீங்களோ! :lol:

:lol::D

பாடல் வரிகளை சொல்லி இருப்பார் போல... :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் வரிகளை சொல்லி இருப்பார் போல... :rolleyes::unsure:

:D லஜ்ஜாவதி என்றால் என்ன அர்த்தம்?

Link to comment
Share on other sites

:D லஜ்ஜாவதி என்றால் என்ன அர்த்தம்?

அது யாருக்கண்ண தெரியும்? :lol:

லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே என்று வரிகளில் வருகிறதே... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே என்று வரிகளில் வருகிறதே... :D

பாடலில் வரும் கோபிகா ரதிமாதிரி அசத்துறாதான். ஆனால் யாழ் ரதியைப் பார்த்தவன் அசந்து மூர்ச்சையாயிடுவான். :lol:

Link to comment
Share on other sites

லஜ்ஜாவதியே

அண்மைய தமிழ் துள்ளல் பாடல்களில் பிடித்தமானதொன்று. Jassie Gift இன் இசையும், குரலில் உள்ள கனமும் ஆளுமையும் வியக்க வைக்கின்றன. audio வில் கேட்க நன்றாக இருக்கும்.

ஏனோ காட்சிப்படுத்திய விதம் பிடிக்கவில்லை. துள்ளல் rage பாடல் ஒன்றுக்கு கும்மி அடிப்பது போன்றதொரு உணர்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது யாருக்கண்ண தெரியும்? :lol:

லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே என்று வரிகளில் வருகிறதே... :D

குட்டி சரியாக சொன்னார்

பாடலில் வரும் கோபிகா ரதிமாதிரி அசத்துறாதான். ஆனால் யாழ் ரதியைப் பார்த்தவன் அசந்து மூர்ச்சையாயிடுவான். :lol:

ரதியை நேரில் பார்க்க கொடுத்து வைக்க வேண்டும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி படத்தில் இடம் பெற்ற நட்புக்கு இலக்கணமாய் விளங்கும் இந்தப் பாட்டும் எனக்கு பிடிக்கும் :D

http://www.youtube.com/watch?v=Wz_rkfs-2SY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைனா படத்தில் டி.இமான் இசையில் நரேஸ் ஜயர்,சாதனா சர்க்கம் பாடிய இந்தப் பாட்டும் கேட்கவும்,பார்க்கவும் இனிமையானது...அமலா போல் பார்க்க சோக்காய் இருக்கிறார் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிசர்மா இசையில் யூத் பட‌த்தில் ஹ‌ரிஸ் ராகவேந்திரா பாடிய "சக்கரை நிலவே" என்ற பாட‌லும் எனக்கு மிகவும் பிடிக்கும்...வைர‌முத்து எழுதிய வரிகள் இனிமையானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிதம் படத்தில் உன்னிமேனன் பாடிய இந்தப் பாட்டும் கேட்க இனிமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி...தலைப்பு தொடங்கேக்கை நான் நினைச்சன் ஏதோ சமூகசேவைமனப்பான்மையோடை அஞ்சாறு சீர்திருத்தபாட்டுக்கள் வருமாக்குமெண்டு...இப்பதெரியுது தங்கச்சிக்கு என்னபிரச்சனையெண்டு? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி மொட்டையாக பாட்டுக்களை இணைக்காமல் யார் பாடியது எந்த படம் பாடல் வரி போன்றவற்றையும் இணைக்கவும்.

Link to comment
Share on other sites

நேற்று திண்ணையில் யூலிகணபதி படம் பற்றி பார்த்தேன்.த ரப் (பொறி) என்ற ஆங்கில படத்தின் அப்பட்ட கொப்பி அது .ரப் மிகமிக நல்ல ஒருபடம் அது பார்க்கும் போது இதை தமிழில் எடுத்தால் எப்படி இருக்கும் என நான் நினைத்ததுண்டு ஆனால் பாலு மகேந்திரா சொதப்பிவிட்டார்.ஜேம்ஸ் கானும்,கத்தி பேட்ஸ்சும் நடித்த அருமையான ஒரு படம் அதுவும் அந்த கால் வெட்டும் காட்சி இன்னமும் மனதில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியை நேரில் பார்க்க கொடுத்து வைக்க வேண்டும் :lol:

உயிரையா?????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி...தலைப்பு தொடங்கேக்கை நான் நினைச்சன் ஏதோ சமூகசேவைமனப்பான்மையோடை அஞ்சாறு சீர்திருத்தபாட்டுக்கள் வருமாக்குமெண்டு...இப்பதெரியுது தங்கச்சிக்கு என்னபிரச்சனையெண்டு? :lol:

அண்ணா சமூகத்தை சீர் திருத்தும் அளவிற்கு நான என்னும் வளரவில்லை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிதம் படத்தில் உன்னிமேனன் பாடிய இந்தப் பாட்டும் கேட்க இனிமை

இசையும் கதையில் வாறமாதிரி ஏன் பிடித்தது என்று ஒரு சிறு விளக்கம்தந்தால் நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி மொட்டையாக பாட்டுக்களை இணைக்காமல் யார் பாடியது எந்த படம் பாடல் வரி போன்றவற்றையும் இணைக்கவும்.

ஈழப்பிரியன் நான் படத்தின் பெயரையும்,பாடியவர்களது பெயரையும் எழுதித் தான் இணைக்கிறேன் ஆனால் பாட்டின் ஆரம்ப வரிதான் எழுதவில்லை இனி மேல் எழுதுகிறேன்.

உயிரையா?????????????

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியை நேரில் பார்க்க கொடுத்து வைக்க வேண்டும் :lol:

இதயம் படம் மாதிரி எனக்கு இளகின இதயம். :wub: "நேரில் பார்க்கக் கொடுத்து வைக்கவேண்டும்" என்று "பார்க்க வா" எனக் குறிப்பால் உணர்த்தியும் பார்த்தால் உயிர்போய்விடும் என்பதால் பார்க்காமல் இருக்கின்றேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ வருவாய் என்னும் படத்தில் இருந்து எஸ் ஏ ராஜ்குமாரின் இசையில் ஹரிகரன் பாடிய இந்தப் பாட்டு கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்..

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே

வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத் தேரிலே

.காதலிக்கும்,திருமணத்திற்கு காத்திருக்கும் எனது சகோதரங்கங்களுக்கு இந்தப் பாடலை அர்பணிக்கிறேன் biggrin.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.