Jump to content

புலத்து பெண்ணால் கிழிக்கப்படும்


Recommended Posts

புலத்து பெண்ணால் கிழிக்கப்படும் புலத்துபெண்ணியவாதிகளின் முகத்திரை.இவர்களைபற்றி நானும் அவலத்தில் கட்டுரை போட்டு பிரச்சனைகள் நடந்தது உறவுகளிற்கு ஞாபகம் இருக்கலாம் இதோ இந்த பெண்ணிய வாதிகளைபற்றி ஒரு பேப்பரில் சாந்தி ரமேஸ் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று படித்து பாருங்கள்

ஐரோப்பியப் பரப்பில் தமிழ்ப் பெண்ணிலை வாதம்.

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

பெண்ணின் விடுதலைக்கான குரல்களாக , பெண்ணியவாதிகளாக அடையாளமிட்டு தங்களை

ஐரோப்பிய தேசங்களில் அதிவேகமாக பரபரப்பாக்கிவரும் புலத்துப் பெண்ணியங்கள்

சிலரது பலத்த குரல்கள் ,ன்றைய காலத்தின் தேவைமறந்த வெறும்

வார்த்தைகளாகியிருப்பது பெண்ணியம் , பெண்விடுதலை என்ற வார்த்தைகளின்

அர்த்தத்தையே மாற்றி வைத்திருக்கிறது.

பெண்பற்றிய சிந்தித்தல் , பெண் அடக்கு முறையின் வடிவங்கள் பெண்கள் உளஉடல்

ரீதியான தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலுக்கான செயற்திட்டங்கள்

வழிவகைகள் மேற்கொள்ளலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரினதும்

கடமையாகும். ,த்தகைய முன்னெடுப்புகளுக்கு முன்னின்று உழைத்தலும் உண்மையான பெண்ணின்

விடியலில் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் உரிமையுமாகும்.

ஆனால் பெண்ணியம் என்ற சொல்லுக்குள் பெண்ணின் பிரச்சனைகள் சரியாக

அணுகப்படுகிறதா ? அல்லது வெளிப்படுத்தப்படுகிறதா ? பெண்களுக்கான எத்தகைய

விழிப்புணர்வை ,வர்கள் ஏற்படுத்துகிறார்கள் என நோக்கினால் கிடைப்பது

வெறுமையும் ,வெற்றுக் கோசங்களும் தான் மீதமாகிறது. ஆனால் பெண்ணியம் என்ற

வார்த்தைக்குப் புதுப்புது வடிவங்கள் கொடுத்து அறிக்கைகள் , கண்டனங்கள்

தீர்மானங்கள் அவ்வப்போது நிறைவேறுவதும் குறிப்பிட்ட ஒரு கூட்டத்திற்குள் அவை

போர்க்குரலாகவும் , போராயுதமாகவும் பெருமைப்படுத்தப்படுதலுடன் தீர்மானங்கள் ,

கண்டனங்களுடன் கடமைகளும் முடிந்து விடுகிறது.

,த்தகைய பெண்விடுதலைப் பேச்சுக்குள்ளும் , பேசுவோருக்குள்ளும் ஒரு பக்க அரசியல்

மோதலுக்கான உள்ளுடனே புதைந்து கிடக்கிறது. ,ந்தக் குழுமத்தின் குட்டையைக்

கிழறிப் பார்த்து முகர்ந்து ,வர்களே தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்வதும்

தங்களுக்குள் கூப்பாடு போட்டுக் குழம்பி அடங்கிப்போய் விடுவதும் சற்றுக்காலம்

கழித்து மீள எழுந்து அறிக்கைகள் , தீர்மானங்கள் , நிறைவேற்றல்கள்

எழுதப்படுதலும் ,வர்களுக்கு வளமையானதாகவே ,ருந்து வருகின்றது.

பெண்ணியப் போர்வைக்குள் புலியெதிர்ப்புச் செய்து கொண்டிருக்கும் ,வர்களது

புலம்பல்களைத்தான் ,வர்களது எழுத்துக்களும் சந்திப்புக்களும் ,துவரை செய்து

முடித்தன. ,வர்களது ,த்தகைய புலியெதிர்ப்புப் பணியை யாரும் ஊடறுத்துப் பேசினால்

அவர்களெல்லாம் பெண்ணின விடுதலையின் எதிரிகள் , அல்லது விடுதலைப் புலிகளின்

அரசியலில் அழிந்து போனோர் என்றெல்லாம் ,வர்களது போலிச்சாயப் பெண்ணியத்தை

வெளிச்சொல்லும் பெண்களுக்கு ,வர்கள் கொடுத்து விடும் பட்டங்கள் பெரியவை.

,ந்தப் போலிகளுடன் தங்களது எழுத்துக்களையும் தங்கள் பெயர்களையும் தக்க வைத்துக்

கொள்ள சில பெண்ணியவாதிகளும் ,வர்களின் பின்னின்று மீனுக்குத் தலையும்

பாம்புக்கு வாலும் காட்டியபடி பெண் அடக்குமுறை பற்றியும் ஆணாதிக்கம் பற்றியும்

பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி தங்கள் தளம் மறந்து தடுமாறித் தொலைகிறாhர்கள்.

உலகத்துப் பெண்களுக்கு ,வர்கள் குரல் ஓங்கும் ஆனால் எங்கள் பெண்களின்

நொருங்கும் குரல்களுக்குத் தெம்பு கொடுக்கவோ து}க்கி நிமிர்த்தவோ ,ந்தப்

பெண்ணியங்கள் எந்தவித பங்களிப்புச் செய்ய முன்வருவதுமில்லை. அதுபற்றி மூச்சும்

விடுவதில்லை. எங்கே ,வர்களுக்கான ஒரு துருப்புக் கிடைக்கிறதோ அந்த ,ளையில்

ஏறிநின்று வீரம் பேசி விடுதலைக்குரல் ஒலிப்பதில் மட்டும் தவறிவிடமாட்டார்கள்.

யாருக்காகவோ எல்லாம் கண்டனங்கள் விடும் ,வர்களுக்கு ஈழத்துப் பெண்ணை

ஆக்கிரமிப்பாளன் வன்முறைக்கு உள்ளாக்குவதானது சும்மா கையில் தொடுவது

போலிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த பெண்கள் சந்திப்பின் தலைவி ,த்தகைய

அர்த்தப்படலுடன் வரைந்திருந்த கட்டுரையும் அவர்சார்ந்த சிலரும் எழுதியிருந்த

எழுத்துக்கள் ஊடாக ,வர்களது பெண்விடுதலையானது புரிந்து கொள்ள முடிந்தது.

குறிப்பிட்ட ,வர்களின் அரசியல் வக்கிரங்களை அவர்கள் சார்ந்த தனிப்பட்ட

காரணங்களுக்கான பழிவாங்கலை மேற்கொள்ளும் வெளிப்பாடுகளும் அதற்கு

வழியேற்படுத்திக் கொடுத்திருக்கும் ஊடகங்களும் ,வர்களை வைத்துத் தமக்கான

ஆதாயத்தையும் பிரச்சாரத்தையும் முடித்துக் கொள்கிறார்கள். ,வர்களோ வெறும்

பயன்படு கருவிகளாகவே பயன்படுத்தப்படுகிறார்கள்.

,வர்களது எதிர்ப்பு மொழிகூட ,வர்களை ,யக்கும் ,யக்கிகளின் மொழியாகவும்

,வர்கள் சார்ந்த ஆண்களின் அவர்களது அரசியல் பழியுணர்வாகவுமே வெளியாகின்றன.

,வர்களது தனித்துவம் சுயம் என்பதெல்லாம் பாதிப்புக்கு உள்ளாவோரின் துயர்களை

வைத்து சுயபிரபலமும் சுயபுராணமுமே தான்.

பெண்களுக்கான குரல்கள் என ,வர்கள் விடுகின்ற கண்டனங்கள் கட்டுரைகளுக்குள்ளேயே

,வர்களது வக்கிரங்களே வெளிப்படுவதைக் காண முடிகிறது. வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட

ஒரு பெண்ணை ,ந்த அறிவுசீவிகள் 40 தரம் வல்லுறவுக்கு உள்ளானார் 50 தரம்

வல்லுறவுக்கு உள்ளானார் என எண்ணளவு கூறி பாதிப்புக்கு உள்ளான பெண்ணை பல்லாயிரம்

தரம் வார்த்தைகளால் ,வர்கள் வல்லுறவு புரிகிறார்கள்.

குறித்த சம்பவத்துக்குக் குஞ்சம் கட்டித் தேரிலேற்றி தெருவில் ,றக்கி

பாதிக்கப்படும் பெண்ணின் மனதையும் அவளது துயரையும் ,வர்களது வக்கிரங்களுக்குப்

பயனாக்கிக் கொள்வதுதான் ,வர்களது அதி உயர் பெண்ணியமும் பெண்ணின விடுதலையும்.

குறித்த சம்பவங்களுக்கான தீர்வு அல்லது அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்கான

,வர்களது பங்களிப்பு என்பதும் ,வர்களது கண்டனங்கள் என்ற பெயரில் விடப்படும்

அறிக்கைகளும் தீர்வுகள் அல்லாது திரிமூட்டி எரியுூட்டும் வக்கிரங்களாகி

வெளிப்படுகிறது.

தங்களுக்குள்ளே வட்டமிட்டு தங்களைத் தாங்களே புத்திஜீவிகள் என்றும் , தாங்களே

தமிழ்ப் பெண்ணின விடுதலைக் குரல்கள் என்றும் , தமிழினப் பெண்ணின் விடுதலையின்

ஆணிவேர்கள் , அரசியல் மேதாவிகள் என தங்கள் சார்ந்தவர்களின்

பின்னியக்கிகளை குசிப்படுத்தக் கூடிப்பேசி பெண்களுக்கான சந்திப்பில் கூட

அரசியல் பழிவாங்கலுக்கான அவசியமே அறிவுறுத்தப்படுதலும் பழிவாங்குவது

எப்படியென்பதுமே ,வர்களால் படிப்பிக்கப்படுகிறது.

ஆயுதம் தருவார்கள் பின்னர்அதை வாங்கிவிட்டு அடுப்படி போவென்பார்கள்

,தையெல்லாம் நாங்கள் நம்பவா ? ,ப்படியும் ,வர்களுக்குள்ளிருந்து குரல்கள்.

,வர்களைப் பிடித்து யார் ஆயுதம் கொடுத்தார்கள் ? ஆடுகளம் என்றார்கள் ?

தங்களைத் தாங்களே ஆயுதம் எடுத்தவர்களாகவும் போராடிக் களைத்தவர்களாகவும்

சொல்லிக் கொள்ளவும் பெருமைப்படவும் , பெண்ணின் விடுதலையென்ற பெயருக்குள்

பாலியல் சுதந்திரம் என பல உறவின் துணைதேடும் ,வர்களது போலி விடுதலைக் குரல்

எங்களுக்கு வேண்டாம்.

ஆண்பெண் உறவிற்கும் , பெண்விடுதலைக்கும் உள்ள வித்தியாசங்களை விளங்கிக்

கொள்ள முடியாத ,வர்களுக்கு ,றுதியாக......

நீங்களெல்லாம் ,ங்கிருந்து பொழுது போக்கவும் உங்களைப் பிரபலமாக்கவும்

மாக்சிசப் பெண்ணியம் , மண்ணாங்கட்டிப் பெண்ணியம் எனக்கனவு காண எங்கள்

மண்ணிலோ உலகையே ஆச்சரியப்பட வைக்கும் அளவு பெண்ணின எழுச்சியும் மலர்ச்சியும்

வெற்றி கண்டிருக்கிறது. அந்த வெற்றிக்குரியவர் வழிகாட்டலில் புலத்திலும்

பெண்களின் விழிப்பு பெரும்பான்மையான அளவு பெருமாற்றம் கண்டுள்ளது. உங்கள் கனவுலக

அரசியல் வக்கிரப் பெண்ணியம் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். ஈழத்துப் பெண்களின்

உரிமை விட்டுவிடுங்கள் அவர்கள் அவர்களை வெல்வார்கள்.

நன்றி ஒரு பேப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணின் விடுதலையென்ற பெயருக்குள்

பாலியல் சுதந்திரம் என பல உறவின் துணைதேடும் ,வர்களது போலி விடுதலைக் குரல்

எங்களுக்கு வேண்டாம்.

அப்படிப்போடுங்கோ அரிவாளை.. :P

Link to comment
Share on other sites

மேற்கோள்:

தங்களுக்குள்ளே வட்டமிட்டு தங்களைத் தாங்களே புத்திஜீவிகள் என்றும் , தாங்களே

தமிழ்ப் பெண்ணின விடுதலைக் குரல்கள் என்றும் , தமிழினப் பெண்ணின் விடுதலையின்

ஆணிவேர்கள் , அரசியல் மேதாவிகள் என தங்கள் சார்ந்தவர்களின்

பின்னியக்கிகளை குசிப்படுத்தக் கூடிப்பேசி பெண்களுக்கான சந்திப்பில் கூட

அரசியல் பழிவாங்கலுக்கான அவசியமே அறிவுறுத்தப்படுதலும் பழிவாங்குவது

எப்படியென்பதுமே ,வர்களால் படிப்பிக்கப்படுகிறது.

இதுதான் விடயம். இதை செய்வதற்காகத்தான் அதெல்லாம் பேசுகிறார்கள்!

இத்தனைக்கும் அவர்கள் பேசும் வேதாந்தங்களூம் சித்தாந்தங்களும் அவர்களால் சிந்தித்து செய்யபடுபவை அல்ல. யாரோ ஏவி விட்டு இருக்கிறார்கள்.

இவர்கள் குரைக்கிறார்கள். அவ்வளவே!

Link to comment
Share on other sites

அப்படிப்போடுங்கோ அரிவாளை

என்ன தமிழினி கொஞ்சம் எண்டதும் அரிவாள் கோடரி எல்லாம் எடுக்கிறீங்கள். நான் பயந்தனான் அதோடை வாயும் பேசமாட்டன் ஏதும் இசக்கு பிசகா நடந்தால் பாவம் உங்களை சும்மாவிடாது. :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உம். இப்ப வன்முறைரீதியான எண்ணத்தில் தான் தமிழினியக்கா இருக்கின்றார். அண்டைக்கு முகத்தாருக்கு உருட்டுக்கட்டையால கொடுத்ததாலே அந்த மனுசன் இப்ப களம் பக்கம் வருவதே குறைவு :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தமிழினி கொஞ்சம் எண்டதும் அரிவாள் கோடரி எல்லாம் எடுக்கிறீங்கள். நான் பயந்தனான் அதோடை வாயும் பேசமாட்டன் ஏதும் இசக்கு பிசகா நடந்தால் பாவம் உங்களை சும்மாவிடாது.

ஊமை என்ன இப்படிச்சொல்லீட்டியள் .. அப்படிப்போடுங்க அரிவாளை என்டு தான் சொல்லியிருக்கிறன்.. அரிவாளாலை போடுங்கோ என்று சொல்லல.. :wink: :P

உம். இப்ப வன்முறைரீதியான எண்ணத்தில் தான் தமிழினியக்கா இருக்கின்றார். அண்டைக்கு முகத்தாருக்கு உருட்டுக்கட்டையால கொடுத்ததாலே அந்த மனுசன் இப்ப களம் பக்கம் வருவதே குறைவு

ஒராள் களத்தில கோள் மூட்டிவிடுறதுக்கெண்டே இருக்கிறார். முகம்ஸ் இதெல்லாம் சதி கண்டுக்காதீங்க.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒராள் களத்தில கோள் மூட்டிவிடுறதுக்கெண்டே இருக்கிறார். முகம்ஸ் இதெல்லாம் சதி கண்டுக்காதீங்க.. :P

அவர் எங்க கண்டு கொள்கின்றது? உறுட்டுக்கட்டையால உச்சந் தலையில் அடித்து அந்த ஆளுக்கு எல்லாம் குழம்பிப் போச்சே :wink: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.