Jump to content

தமிழ் சினிமா 2005


Recommended Posts

தமிழ் சினிமா 2005: ஒரு பார்வை சந்திரமுகி 300வது நாளை நோக்கி ஓடி கொண்டிருக்கிறது மன்மதன் 225 நாள்.....

தமிழ் சினிமாவுக்கு 2005ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஆண்டு என்றே சொல்லலாம். புதுப்புது நடிகர்கள்இ நடிகைகள்இ இயக்குனர்கள் என இளமைப் பட்டாளம் புகுந்து புதிய கதைகள் மூலம் சினிமாவை புதிய பாதைக்குக் கொண்டு போயின.

ரஜினியின் சந்திரமுகி பல ரெக்கார்டுகளை பிரேக் செய்து வசூலைக் கொட்டித் தீர்த்துவிட்டது. யாரும் எதிர்பாராத வகையில் காதல் பெரும் வெற்றி பெற்றது. மன்மதன் பெரும் சாதனை படைத்தது. அந்நியன் சினிமாவைப் புரட்டிப் போட்டது.

2005ம் ஆண்டில் தமிழ் திரையுலகின் முக்கிய புள்ளி விவரங்கள்:

தமிழில் இந்த ஆண்டில் மொத்தம் 126 படங்கள் வெளியாயின. இதில் நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 100இ டப்பிங் படங்கள் 26. இதில் பெரும்பாலானவை ஆங்கிலம்இ தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டவை.

அதிக படங்களில் நடித்தவர்கள்:

இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த ஹீரோ சத்யராஜ் தான். கதாநாயகனாக 6 படங்களில் நடித்துள்ளார். அடுத்த 2 வருடத்துக்கு இவரது கால்ஷீட் புல் ஆக இருக்கிறதாம். ஒன்றரை மாதத்துக்கு ஒரு படம் என்ற ரேஞ்சில் வரும் ஆண்டில் நடிக்கப் போகிறாராம்.

ஆசின், நமீதா:

அதே போல அதிகமான பட ஹீரோயின்கள் இரண்டு பேர். ஒருவர் ஆசின். இந்த ஆண்டில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். அடுத்து அதிகப் படங்களில் நடித்தவர் நமிதா தான். இருவருமே தலா 4 படங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டில் மிக அதிகமான படங்களில் நகைச்சுவை வேடம் செய்தவர் வடிவேலு. அவர் நடித்து வெளியான மொத்தப் படங்கள் 28. ஒரு படத்துக்கு ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கும் வடிவேலுக்கு கால்ஷீட் தர நேரம் இல்லை. இதனால் ஒரு நாளைக்கு இவ்வளவுஇ ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என்ற ரேஞ்சுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டில் அதிகப் படங்களைத் தயாரித்தவர் கலைப்புலி எஸ். தாணு. மொத்தம் 3 படங்களை வெளியிட்டார்.

அதிக படங்களை இயக்கியவர் 'கற்பு' குஷ்புவின் கணவரான சுந்தர். இயக்கியது 3 படங்கள்.

அதிகமான படங்களுக்கு இசை அமைத்தவர் தேவாவே தான். மொத்தம் 8 படங்கள். அதிக பாடல்களை எழுதியவர் கவிஞர் பா. விஜய். மொத்தம் 42 பாடல்கள்.

அதிக பாடல்களைப் பாடியவர்கள் பாடகர் கார்த்திக்கும்இ பாடகி அனுராதா ஸ்ரீராமும். கார்த்திக் 30 பாடல்களைப் பாடியுள்ளார். அனுராதா 23 பின்னணிப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

அதிகமா படங்களுக்கு நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர். மொத்தம் 22 படங்கள்.

அதே போல அதிகமான படங்களுக்கு (மொத்தம் 14) சண்டைக் காட்சிகளை அமைத்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன்.

ஜூப்ளி படங்கள்:

சந்திரமுகி 300வது நாளை நோக்கி ஓடி கொண்டிருக்கிறது

மன்மதன் 225 நாள்

திருப்பாச்சிஇ சச்சின் 200 நாள்

மதுர150 நாள்

அறிந்தும் அறியாமலும்141 நாள்

அந்நியன்125 நாள்

காதல் 122 நாள்

100 நாள் ஓடிய படங்கள்:

எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி

7ஜி ரெயின்போ காலனி

இங்கிலீஷ்காரன்

கனா கண்டேன்

உள்ளம் கேட்குமே

ஏய்

ராம்

ஐயா

இந்த ஆண்டில் தான் இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, நடிகர் கமலஹாசன், இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, குமாரி கலா ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்றனர்.

vaddakkachchi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கதாநாயகனாக நடித்து பிரபல்யமாக ஓடிய படத்தை காணோம்! வடிவாகச் சரி பாருங்கோ நர்மதா! :wink: :)

Link to comment
Share on other sites

தியேட்டரை விட்டு ஓடிய படங்கள் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. :wink: :lol:

Link to comment
Share on other sites

நான் கதாநாயகனாக நடித்து பிரபல்யமாக ஓடிய படத்தை காணோம்! வடிவாகச் சரி பாருங்கோ நர்மதா! :wink: :lol:

:roll: :roll:

எப்ப தொடக்கம் நடிக்கிறியள்? யாரோடு சேர்ந்து? :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியேட்டரை விட்டு ஓடிய படங்கள் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. :wink: :lol:

மீண்டும் வசம்பு பொய் சொல்லுகின்றார். :twisted:

என் படம் இப்படித் தியட்டருக்குப் போனால் ஓடிவிடும் என்று தெரிந்து தான் நான் படத்தையே தியட்டருக்கு அனுப்பவே இல்லையே! :wink: :lol:

Link to comment
Share on other sites

:roll: :roll:

எப்ப தொடக்கம் நடிக்கிறியள்? யாரோடு சேர்ந்து? :roll: :roll:

முழிசுறதைப் பாத்தா ஏதோ உங்களை விட்டுட்டு தனிய நடிச்சிட்டார் எண்டு கேக்கிற மாதிரிக் கிடக்கு rotfl.gifrotfl.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழிசுறதைப் பாத்தா ஏதோ உங்களை விட்டுட்டு தனிய நடிச்சிட்டார் எண்டு கேக்கிற மாதிரிக் கிடக்கு

தங்கை பாத்திரம் ஒன்று கிடைக்கவில்லை முகத்தார். அடுத்த படத்தில் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.