Jump to content

நாங்கள் போருக்கு தயார்: பெண் விடுதலை புலிகள் பகிரங்கஅறிவிபபு


Recommended Posts

நாங்கள் சாக துணிந்து விட்டோம்; போருக்கு தயார் : பெண் விடுதலை புலிகள் பகிரங்க அறிவிப்பு

கிளிநொச்சி: இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் அரசுக்கு இடையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறினாலும், மீண்டும் போர் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிக அளவில் உள்ளன. பெண் விடுதலைப் புலிகள் பலர் போருக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ராணுவத்துடனான போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் பொருட்டு ஆண்டு தோறும் நவம்பர் மாதம் "மாவீரர் தின'த்தை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த நவம்பரில் நடந்த நினைவு தின கூட்டத்தில் உரையாற்றிய புலிகள் தலைவர் பிரபாகரன், "தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்த பிரச்னையில் தீர்வு காணப்படா விட்டால் புத்தாண்டு (2006) முதல் போர் தொடங்கும்' என்று எச்சரித்தார். புத்தாண்டு தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் முறையான போர் அறிவிப்பு வெளியிடப்படா விட்டாலும் இரு தரப்பும் ஆங்காங்கே தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த டிசம்பரில் மட்டும் 39 ராணுவ வீரர்கள் கண்ணி வெடியில் சிக்கி பலியாயினர். இந்த தாக்குதல்களுக்கு புலிகளே காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில், கடந்த திங்களன்று திரிகோண மலையில் உள்ள பல்கலை கழகத்தில் ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் இலங்கை ராணுவம் ஈடுபட்டதாக புலிகள் அமைப்பு கூறியது.

இரு தரப்பும் அறிவிக்கப்படாத போரை நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில், "பகிரங்க தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக' புலிகள் அமைப்பில் உள்ள பெண்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். மாலதி என்ற 28 வயது பெண் விடுதலைப்புலி கூறும்போது, ""எனது சக தோழர்களின் மரணமே எனக்கு மிகுந்த மன உறுதியை தந்தது. கடந்த 10 வருடங்களாக இயக்கத்தில் உள்ள நான் மீண்டும் போர் புரிய தயாராக உள்ளேன். தமிழ் மக்களின் விடுதலை அமைதி வழியில் கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி தர வில்லை. எங்களது தலைவர் தனது மனதை மாற்றிக்கொண்டு புதிய உத்தரவை பிறப்பித்தால் உடனே நாங்கள் தயாராகி விடுவோம். சாகத் துணிந்து விட்டோம். போருக்கு தயாராக உள்ளோம்'' என மிகவும் ஆவேசமாக கூறினார்.

இதே போன்று மற்றொரு பெண் புலியான 32 வயது ஜெயந்தி, ""என்னுடைய பயிற்சி காலம் கடுமையாக இருந்தது. ஆனால், முதல் தாக்குதல் மிகவும் எளிதானது. வட கிழக்கு கடல் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 1996ம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தினேன். நாங்கள் நன்கு பயிற்சி பெற்று மிகவும் தயாராக உள்ளோம். வெற்றி ஒன்றே எங்களது இலக்கு. நாங்கள் அவர்கள் (இலங்கை ராணுவம்) மீது இரக்கமோ மரியாதையோ காட்ட மாட்டோம்'' என்றார்.

தங்களுக்கு எத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பது குறித்து தெரிவித்த பெண் புலிகள்,"அவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள பணிகள்' குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் 35 சதவீதம் பெண்கள் உள்ளனர். அவர்களது எண்ணிக்கை 18 முதல் 20 ஆயிரம் வரை இருக்கக் கூடும். அமைப்பில் புதிதாக சேரும் பெண்களுக்கு ஒரு வருட காலம் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். பல்வேறு வகையான ஏ.கே.47, மற்றும் துப்பாக்கிகள் உட்பட பல கருவிகளை இயக்கும் பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது. அதன் பிறகே அவர்கள் படை வீரர்களாக சேர்க்கப்பட்டு தாக்குதல் களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்

நன்றி : தின மலர்.http://www.dinamalar.com/2006jan06/imp6.asp

Link to comment
Share on other sites

35 சதவீத பெண்கள் தொகையே 18 யை தாண்டுது எண்டால் ஆண்களையும் தொகை????? ஆனா யாழ்ப்பாண ராணுவ தளபதி சொல்லுறார் புலிகளின் மொத்ததொகையே 7ஆயிரத்துக்கு உள்ளை எண்டு ........... அவரைப் பாத்து பரிதாபம்தான் பட முடியும்..............

Link to comment
Share on other sites

சில நண்பர்கள் தின மலர் நாளிழிதை தின மலம் என்று சொன்னார்கள். இப்போது தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிழ்தல்களில் தின மலர் மட்டும் தான் ஈழ செய்திகளுக்கு முக்கயதுவம் தருகிறது என்று சொல்ல ஆசை படுகிரேன். இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

சில நண்பர்கள் தின மலர் நாளிழிதை தின மலம் என்று சொன்னார்கள். இப்போது தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிழ்தல்களில் தின மலர் மட்டும் தான் ஈழ செய்திகளுக்கு முக்கயதுவம் தருகிறது என்று சொல்ல ஆசை படுகிரேன். இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

சில நண்பர்கள் சொன்ன அதே வார்த்தையை நானும் பாவிக்க மாட்டேன் ராஜா..

ஆனால் அவர்கள் கொண்ட கோவம் நியாயமானது.

ஓரிரு நாளுக்கு முதல் கூட "புலிகளின் கொட்டத்தை அடக்க வீதியில் இறங்குகிறது இலங்கை இராணுவம்" என்று பொருள் பட ஒரு செய்தி பார்த்தேன்!

தினமலர் .. என்ன தினமும் ஒவ்வொரு முகம் கொண்டு மலரும் மலரா?? 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

35 சதவீத பெண்கள் தொகையே 18 யை தாண்டுது எண்டால் ஆண்களையும் தொகை????? ஆனா யாழ்ப்பாண ராணுவ தளபதி சொல்லுறார் புலிகளின் மொத்ததொகையே 7ஆயிரத்துக்கு உள்ளை எண்டு ........... அவரைப் பாத்து பரிதாபம்தான் பட முடியும்..............

ஏனப்பா!! இப்ப யாழ்பாணத்தில் 5லட்சம் மக்களையும் புலிகள் எண்டு தானே பார்க்கினம். இராணுவத்தளபதி வேற கதை விடுகின்றாரோ!!

தெரியும் தானே. பயமாக இருந்தால் முந்தி பாட்டுப்பாடிக் கொண்டு போவினம். தளபதியாரும் அதைத் தான் செய்தவர்.

Link to comment
Share on other sites

அதை விட முக்கியம் இதே ராஜாதிராஜா ..லக்கிலுக் கருத்துக்களுக்கு மிக நீண்ட ஆர்ப்பரிப்பு செய்த நாங்கள் ..இப்போ எதுக்கு அவர்கள் கருத்தை கொண்டு சவுண்ட் விடுறோம்?

நாங்களும் தினமலர் போல சந்தர்ப்பவாதமா? வேணாமே!

Link to comment
Share on other sites

சில நண்பர்கள் சொன்ன அதே வார்த்தையை நானும் பாவிக்க மாட்டேன் ராஜா..

ஆனால் அவர்கள் கொண்ட கோவம் நியாயமானது.

ஓரிரு நாளுக்கு முதல் கூட "புலிகளின் கொட்டத்தை அடக்க வீதியில் இறங்குகிறது இலங்கை இராணுவம்" என்று பொருள் பட ஒரு செய்தி பார்த்தேன்!

தினமலர் .. என்ன தினமும் ஒவ்வொரு முகம் கொண்டு மலரும் மலரா??

என்ன செய்வது !! தின மலருக்கு தனியான நிருபர் ஈழதிதில் இல்லை என்று நினைகிரேன். அவர்கள் அங்கு உள்ள வேறு பத்திரிக்கையின் உள்ளூர் நிருபரின் செய்தியயை தான் போட முடியும். தின மலர் மட்டுமல்ல அனித்து தமிழ் நாட்டின் தமிழ் நாளிழ்தின் ததை இதுதான். இப்போது தினமலர் தன்னுடய நிருபரை இலங்கை அனுப்பி இருப்பாதக கேள்விபட்டேன். இது உன்மையா என்று ல்க்கி லுக்கு தெரியும்.அவர் சொல்வார்.

Link to comment
Share on other sites

அதை விட முக்கியம் இதே ராஜாதிராஜா ..லக்கிலுக் கருத்துக்களுக்கு மிக நீண்ட ஆர்ப்பரிப்பு செய்த நாங்கள் ..இப்போ எதுக்கு அவர்கள் கருத்தை கொண்டு சவுண்ட் விடுறோம்?

நாங்களும் தினமலர் போல சந்தர்ப்பவாதமா? வேணாமே!

இல்லை !! நான் சொல்ல வந்தது என்ன வென்றால் ஈழ நண்பர்கள் அந்த பத்த்ரிக்கை பற்றி தெரியாமல் சொல்லாம். அதில் தவறில்லை.ஆனால் ஒரு இந்திய நண்பரே தவறான செய்தியை சொன்னார். அதை பற்றி தான் சொன்னேன். தவறாக எண்ண வேண்டாம்.

Link to comment
Share on other sites

சில நண்பர்கள் சொன்ன அதே வார்த்தையை நானும் பாவிக்க மாட்டேன் ராஜா..

ஆனால் அவர்கள் கொண்ட கோவம் நியாயமானது.

ஓரிரு நாளுக்கு முதல் கூட "புலிகளின் கொட்டத்தை அடக்க வீதியில் இறங்குகிறது இலங்கை இராணுவம்" என்று பொருள் பட ஒரு செய்தி பார்த்தேன்!

தினமலர் .. என்ன தினமும் ஒவ்வொரு முகம் கொண்டு மலரும் மலரா??

என்ன செய்வது !! தின மலருக்கு தனியான நிருபர் ஈழதிதில் இல்லை என்று நினைகிரேன். அவர்கள் அங்கு உள்ள வேறு பத்திரிக்கையின் உள்ளூர் நிருபரின் செய்தியயை தான் போட முடியும். தின மலர் மட்டுமல்ல அனித்து தமிழ் நாட்டின் தமிழ் நாளிழ்தின் ததை இதுதான். இப்போது தினமலர் தன்னுடய நிருபரை இலங்கை அனுப்பி இருப்பாதக கேள்விபட்டேன். இது உன்மையா என்று ல்க்கி லுக்கு தெரியும்.அவர் சொல்வார்.

நண்பா இந்த கதை வேணாமே..

அத்தனை தமிழ் நாட்டு ஊடகங்களும் மௌனம் சாதிக்க...

பல வருடங்களுக்கு முன் ...........

இதே தினமலர்தான் எங்கள் தேசியதலைவர் கொல்லப்பட்டார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை திரும்ப திரும்ப சொன்னது என்றும் அறிந்து இருக்கிறோம்!

உங்கள் கருத்துக்கு மரியாதை தர தயாராய் உள்ளேன்! தினமலருக்கு அல்ல! புரிந்து கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை விட முக்கியம் இதே ராஜாதிராஜா ..லக்கிலுக் கருத்துக்களுக்கு மிக நீண்ட ஆர்ப்பரிப்பு செய்த நாங்கள் ..இப்போ எதுக்கு அவர்கள் கருத்தை கொண்டு சவுண்ட் விடுறோம்?

நாங்களும் தினமலர் போல சந்தர்ப்பவாதமா? வேணாமே!

நாங்கள் தெளிவாகத் தான் இருக்கின்றோம். எம் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி எவர் குறைவாகக் கதைத்தாலோ, அல்லது நடந்தாலோ, அவர்களுக்கு பதில் உண்டு.

லக்கிலுக்கோ, ராஜாதிராஜாவும் காயங்களைப் பற்றி கதைப்பதில்லை என்கின்றனர். அவ்வாறே நாங்களும் காயங்களைப் புரட்டப் போவதில்லை. அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

நண்பா இந்த கதை வேணாமே..

அத்தனை தமிழ் நாட்டு ஊடகங்களும் மௌனம் சாதிக்க...

பல வருடங்களுக்கு முன் ...........

இதே தினமலர்தான் எங்கள் தேசியதலைவர் கொல்லப்பட்டார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை திரும்ப திரும்ப சொன்னது என்றும் அறிந்து இருக்கிறோம்!

ஆம் அது உன்மைதான். நான் சொல்வது இன்றைய நிலமை. நீங்கள் சொல்வது அன்றய நிலைமை. அதுதான் வித்யாசம். மாற்றம் இல்லாத்தது எது? தவறு என்றால் கண்டிபோம். நன்று என்றால் பார்ட்டுவோம்.

Link to comment
Share on other sites

நண்பா இந்த கதை வேணாமே..

அத்தனை தமிழ் நாட்டு ஊடகங்களும் மௌனம் சாதிக்க...

பல வருடங்களுக்கு முன் ...........

இதே தினமலர்தான் எங்கள் தேசியதலைவர் கொல்லப்பட்டார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை திரும்ப திரும்ப சொன்னது என்றும் அறிந்து இருக்கிறோம்!

ஆம் அது உன்மைதான். நான் சொல்வது இன்றைய நிலமை. நீங்கள் சொல்வது அன்றய நிலைமை. அதுதான் வித்யாசம். மாற்றம் இல்லாத்தது எது? தவறு என்றால் கண்டிபோம். நன்று என்றால் பார்ட்டுவோம்.

நானும் இன்றைய நிலையை பற்றி சொல்ல வந்துதான் அன்றைய நிலையை உதாரணம் காட்டினேன்.

ஓரிரு நாளுக்கு முதல் கூட "புலிகளின் கொட்டத்தை அடக்க வீதியில் இறங்குகிறது இலங்கை இராணுவம்" என்று பொருள் பட ஒரு செய்தி பார்த்தேன்!

அதுதான் இது!

இதில என்ன பெரிய மாற்றம் இருக்கு ராஜா?

நீங்களே சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச செய்தித் ஸ்தாபனமான "ரொய்ட்டர்" பார்வையில் தமிழீழ விடுதலைப் புலி பெண் போராளிகள்..

[வெள்ளிக்கிழமை, 6 சனவரி 2006, 05:07 ஈழம்] [ம.சேரமான்]

சர்வதேச செய்தித் தாபனமான "ரொய்ட்டர்", தமிழீழ விடுதலைப் புலி பெண் போராளிகள் பற்றிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

5 அடி உயரம் உள்ள மாலதி என்ற பெண் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக இணைந்தவர். தனது சக போராளிகளின் மரணம்தான் என்னை வலுப்படுத்தியிருக்கிறது என்கிறார் அவர். மீண்டும் போரிட தாம் தயார் என்றும் அவர் கூறுகிறார்.

விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடையையும் பட்டியையும் அணிந்துள்ள அவரது இயக்கம் விடுதலைக்காக 20 ஆண்டுகளாக 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் வரை போராடி வந்துள்ளது.

28 வயதாகும் அந்தப் பெண்ணும் அவரது சக போராளிகளும் "நோர்வே அனுசரணையுடனான பேச்சுக்களில் அமைதி உருவாகும் என்று நம்பினோம். ஆனால் அது நடக்காது" என்கின்றனர்.

"அமைதி முயற்சிகளுடாக தமிழ் மக்களுக்கு நன்மையும் விடுதலையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்" என்று போராளிகளின் தலைமையகமான கிளிநொச்சியில் அவரைச் சந்தித்த போது மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் எமக்குத் தெரிவித்தார்.

அந்த நகரம் விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசைக் கொண்டது. நீதிமன்றங்களும், காவல்துறை தலைமையகமும், தங்களது சொந்த வங்கியும் அங்கே இயங்குகின்றன.

"எதுவுமே இந்த அமைதி முயற்சிகாலத்தில் நடக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளோம்" என்கிறார் மாலதி. "எமது தலைவர் தமது முடிவை மாற்றி எமக்கு புதிய உத்தரவிட்டால் நாம் தயாராக இருக்கிறோம்" என்றார்.

கடந்த நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், 2006 ஆம் ஆண்டில் தமது விடுதலைப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் போராளிகளின் பகுதிகளைச் சுற்றிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு இராணுவம் மீது போராளிகள் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. இராணுவம் வன்முறைகளில் ஈடுபடுவதால் அதற்கெதிராக மக்கள் போராடி புதிய யுத்தம் உருவாகிறது என்கிறார்கள். ஏற்கனவே 64 ஆயிரம் பேர் யுத்தத்தால் உயிரிழந்துள்ளனர்.

ரொய்ட்டருக்கு கடந்த புதன்கிழமை பேட்டியளித்த மாலதி மற்றும் 32 வயது ஜெயந்தி ஆகிய பெண் போராளிகள் இருவரும் முன்னணி போராளிகள். நாம் சந்தித்த 24 வயது நேசன் இதுவரை யுத்தத்துக்குச் சென்றதில்லை என்றார்.

ஆனால் முழு அளவிலான பயிற்சிகளை தாங்கள் பெற்றுள்ளோம் என்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளைக் கையாளுதல், ஆர்.பி.ஜி. ரொக்கட் தாக்குதல்கள், மோட்டார்த் தாக்குதல்களை மேற்கொள்ளவும் பயிற்சி பெற்றிருப்பதாக மூவரும் கூறினர்.

தமது முதலாவது களம் மிக எளிதானதாக இருந்தது என்கிறார் ஜெயந்தி. 1996 ஆம் ஆண்டு வடகிழக்கு கடலோரத்தை மீட்டெடுக்கும் சமரில் பங்கேற்றவர். நாங்கள் முழுத் தயாரிப்புக்களுடன் இருந்தோம். முழு பயிற்சிகளோடு இருந்தோம். அதனால் வெற்றி பெற்றோம். அதன் பின்னரான களங்கள் எளிதாக இருந்தன. திருப்தியும் மகிழ்ச்சியுமே அளித்தது எமக்கு" என்றார் ஜெயந்தி.

கடந்த காலங்களில் மரபு வழி மற்றும் தற்கொடைத் தாக்குதல்களுக்கு பெண் போராளிகளை பயன்படுத்தியுள்ளனர். புதிய யுத்தம் தொடங்கினால் அனைத்து வளங்களையும் பயன்படுத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எம்மிடம் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான போராளிகளை உள்ளடக்கிய தனித் தனி அணிகள் உள்ளன என்றும் இவர்களில் 35 விழுக்காட்டினர் இராணுவ அதிகாரிகள் என்றும் கூறினர்.

நேசன் கூறுகையில், நாம் அச்சப்படவில்லை. தேவைப்பாட்டால் மரணிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.

"நான் சந்திக்கப் போகும் முதலாவது களம் கடினமாக இருக்கும் என்று கருதவில்லை. நான் முழுமையான தயாரிப்புகளோடு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறேன். என்னையும் எமது போராட்டத்தையும் பாதுகாக்கவும்தான். எமது தமிழ் மக்களின் விடுதலையும் உரிமையும் வென்றெடுக்கப்பட வேண்டும் என்கிற ஆத்ம பலத்தையும் நாம் பெற்றிருக்கிறோம் என்றார் நேசன்.

"நாம் சிறிலங்கா இராணுவத்தினர் மீது அனுதாபம் காட்டவில்லை. அவர்களை மதிக்கவும் இல்லை. அவர்கள் வன்மம் கொண்ட கொலைகாரர்கள். அவர்கள் கண்ணில் பார்ப்பவர்களையெல்லாம் கொலை செய்ய வேண்டும் என்று மதுபோதையில் இருக்கிற வெறியர்கள்" என்கின்றனர்.

எதிரியிடம் சிக்கி சித்திரவதைப்படாமல் இருக்கவும் சக போராளிகளுக்கு துன்பம் நேராமல் இருக்கவும் தங்கள் கழுத்துகளில் சயனைட் குப்பிகளை அவர்கள் தொங்கவிட்டுள்ளார்கள். எமக்குப் பேட்டியளித்த எவரும் திருமணமாகவில்லை. "யுத்தத்தில் வெல்லும் வரை எங்களுக்கு அதைப் பற்றி சிந்திக்க நேரமில்லை" என்கின்றனர்.

மதுவும் புகைப்பிடிக்கும் பழக்கமும் போராளிகளிடம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கிழக்குக் கடலோரத்தில் வசித்து வந்த தமது குடும்பத்தின் மீது கட்டுக்கடங்காத வன்முறைகளை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டதால் தான் போராளியாக இணைந்தேன் என்கிறார் ஜெயந்தி. தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ வன்முறைகளுக்காகத்தான் தானும் களத்திற்குப் போனதாக கூறுகிறார் மாலதி. இந்த வன்முறைகள் யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்திலும் கூட நீடிக்கிறது என்றார் மாலதி.

நாம் களத்துக்கு வந்ததிலிருந்து பல சக போராளிகளை நாம் இழந்துள்ளோம். அந்தப் போராளிகளின் இழப்புதான் எமக்கு உறுதியை ஏற்படுத்தி உள்ளது. எமது தமிழ் மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரை அளித்தவர்கள் அவர்கள். அதுதான் எங்களை மேலும் மேலும் போராடுவதற்கான சக்தியாக இருக்கிறது" என்கின்றனர் அவர்கள்.

http://www.puthinam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினமல ராய்டரில் வந்த செய்தியை தான் போட்டிருக்கிறது...

Link to comment
Share on other sites

அட பாவி மக்கா ..

இதை பார்த்தா தினமலர் ரீல் விட்டுது? :shock:

ஆத்தா.......... இந்த அநியாயத்தை கேக்க யாரும் இல்லையா? :lol::lol:

Link to comment
Share on other sites

2 நாட்களுக்கு முன் யாழ் மக்கள் புலிகள் பகுதிக்கு பயணம் என்று ஒரு செய்தி படித்தேன். இதெ தினமலரில். அது உன்மையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.