Jump to content

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்


Recommended Posts

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

-சினேகிதி-

அளவில்லா ஆனந்தத்தோடு அண்ணன்

படை சேர்ந்தாய் அண்ணாவே

பூநகரி மணலாறு கிளிநொச்சி

எனக்களம்பல கண்டாய்

இன்று நீயும் மாவீரன்

வீட்டருகில் நீ வெடித்துச் சிதறினாய்

உள்ளம் வலிக்கத்தான் செய்தது

உன் சோதரர்கள் உனக்குச் சொல்லவில்லையா

அது இராணுவம் ரோந்து வரும் நேரமென்று

யார்யாரோவெல்லாம் ஆறுதல் சொன்னார்கள்

அம்மாவும் விசும்பல்களை நிறுத்திவிட்டாள்

அழுது ஆற்றாமை தீர்த்தால்

இராணுவ இராஜமரியாதையையும்

ஏற்கவேண்டி இருக்குமே

ஐயர் வந்து சாந்தி செய்தார் - நீ

சிதறிப்போன சந்தில்

எங்களுக்குத் தெரியும் தமிழீழம் ஒன்றுதான்

உங்களுக்கு ஆத்ம சாந்தியென்று

இரு தசாப்தங்கள் ஆகிவிட்டன ஆனாலும்

உங்கள் கனவுகள் நனவாகவில்லை

ஓ மாவீரவே உங்களுக்கு

விடியலின்பூபாளம் கேட்கிறதா?

தானைத்தலைவரின் தங்குதடையற்ற

தலைமையில் உம் சகாக்களின்

போராற்றல் பேராற்றலாய்

பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறதே

அது உங்களுக்குத் தெரிகின்றதா?

உங்கள் நாமகரணங்களை தகர்க்க

சில புல்லுருவிகள் - பணத்துக்காகப்

பதவிக்காகப் பல்லிளித்துப் பறந்தாலும்

பற்றுறுதி கொண்ட வேங்கைகளுக்குப்

பக்கபலமாகத் திரளும் பல வேர்களாய்

மாணவர் சக்தி உலகெங்கும் திரள்கிறதே

அதை நீங்கள் அறிவீர்களா?

அதனால்தான் சொல்கிறேன்

"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்"

(நான் எழுதிய முதல் கவிதை.2004 மாவீரர் நாளில் எழுதியது.)

Link to comment
Share on other sites

ஓ மாவீரவே உங்களுக்கு

விடியலின்பூபாளம் கேட்கிறதா?

தானைத்தலைவரின் தங்குதடையற்ற

தலைமையில் உம் சகாக்களின்

போராற்றல் பேராற்றலாய்

பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறதே

அது உங்களுக்குத் தெரிகின்றதா?

சிநேகிதி... முதல் கவிதை என்றாலும் அழகாய் எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

எப்போ எழுதினாலும் என்ன.. தேசத்தின் வீரர்களுக்கு நீங்கள் செலுத்திய கெளரவம் மிகவும் பெரியது -நன்றி!

Link to comment
Share on other sites

நன்றி றமாக்கா...வர்ணன் நீங்கள் கவிதை எழுதுவீர்களா?

Link to comment
Share on other sites

அற்புதமான நடை முதல் கவிதை போல் தோணவில்லை. அந்த இறந்து போன வீறரை பற்றி ஆரம்பித்து அழகாகன உரையில் முடித்து இருப்பது நன்று. அந்த வீர மரணம் எய்த்திய வீரனை பற்றி இன்னும் நிறைய எழுதி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

படைப்பு நன்றாக இருக்கின்றது சிநேகிதி.

யாரோ ஒரு மரணித்த போராளியை குறிப்பிட்டு எழுதினீர்களா? முடிந்தால் அந்த போராளி குறித்த மேலதிக விபரங்களையும் தாருங்கள்

Link to comment
Share on other sites

சிறப்பான உரை நடை பாணியில் கவிதை அமைந்திருந்தது.... மிகவும் நன்றாக இருக்கிறது... இந்த கவிதையின் நாயகன் யார் என்று சொல்வீர்களா?

Link to comment
Share on other sites

அது தான் சினேகிதி எண்டு போட்டிருக்கிறாரே...

சிறப்பாக இருக்கிறது சினேகிதி...

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருக்கிறது சிநேகிதி.

இவ்வரிகள் ஓர்பாடலை ஞாபகப்படுத்தியது. "வாய்விட்டுப் பெயர்சொல்லி அழமுடியாது..." அப்பாடலின் சில வரிகளைக்கேட்பதற்கு மேற்கோளிடப்பட்ட பகுதியின் மீது சொடுக்கவும்.

இப்படி ஒரு தாயாரிற்கு ஏற்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்திருக்கிறன். தாயார் கொழும்பில் இருந்தபோது மகன் யாழ்ப்பாணத்தில் ஒரு சண்டையில் வீரமரணம் அடைந்துவிட்டார். அப்பொழுது அத்தாயார் மகன் இறந்த செய்தியைச்சொல்லும் போது யாரும் வீட்டுக்கு வராதீர்கள் எனக்கேட்டுக்கொண்டார். :lol:

Link to comment
Share on other sites

அய்யா... கவிதை எழுதியவர் சினேகிதி என்று தெரிகிறது... கவிதையின் 'பாட்டுடை நாயகன்' யார் என்று தான் கேட்டேன்....

Link to comment
Share on other sites

கவிதை அழகாக இருக்கிறது சிநேகிதி. லக்கி லுக் கேட்டது போல...கவிதையில் வரும் போராளியை பற்றி விரும்பினால் சொல்லுங்களன்...

Link to comment
Share on other sites

அழகிய தமிழ்மொழியின் துணையோடு ஆழமாய் கருத்தாங்கி. அன்னைத்தேசமாம் ஈழம் பற்றி இரும்பைஒத்த வரிகள் கொண்டு வரைந்த கவிமாலை மிகநன்று. வரிப்புலிகள் மாவீரம் பற்றி சோகம் சொட்டுகயிலும், நெஞ்சுயர்த்தி நேர்வளிநின்று பாடிய உந்ததுக்கு நன்றிகள் பல. முடிந்தால் மேலும் பல கவி தாரீரோ??

Link to comment
Share on other sites

ராஜாதிராஜா அந்த வீரர்கள் "பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்" கதையில் வந்தார்கள்.

மதன்,பிரியசகி சில காரணங்களுக்காக எல்லா உண்மை விபரங்கiளுயும் தர முடியவில்லை.ஒருவர் ஒரு வீட்டிலுள்ள அலுமாரியில் மறைந்திருந்ததை அந்த வீட்டுக்காகாத யாரோ ரோந்து வந்த இராணுவத்தினரிடம் சொல்லியதால் சொற்ப நேரத்துக்குள்ளே எதுவும் செய்யமுடியாமல் அண்ணா வயித்தில கிறனைற்றை அமத்தி தசைப்பிண்டங்கள் எல்லாம் சுவரில் தெறிக்கும் வண்ணம் உயிர் நீர்த்தார்.

Link to comment
Share on other sites

நன்றி தல லக்கிலுக் அருவி நீங்க சொன்ன நிலைதான் இராணுவ முகாம்களுக்கு அருகில் இருந்தோரின் நிலையும்.

Link to comment
Share on other sites

இருவிழி நீங்கள் சொன்னதே கவிதையா இருக்கு :lol: தொடர்ந்து கவிதை எழுத முயற்சி செய்கிறேன.

Link to comment
Share on other sites

ராஜாதிராஜா அந்த வீரர்கள் "பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்" கதையில் வந்தார்கள்.

மதன்,பிரியசகி சில காரணங்களுக்காக எல்லா உண்மை விபரங்கiளுயும் தர முடியவில்லை.ஒருவர் ஒரு வீட்டிலுள்ள அலுமாரியில் மறைந்திருந்ததை அந்த வீட்டுக்காகாத யாரோ ரோந்து வந்த இராணுவத்தினரிடம் சொல்லியதால் சொற்ப நேரத்துக்குள்ளே எதுவும் செய்யமுடியாமல் அண்ணா வயித்தில கிறனைற்றை அமத்தி தசைப்பிண்டங்கள் எல்லாம் சுவரில் தெறிக்கும் வண்ணம் உயிர் நீர்த்தார்.

ம்ம்ம் நன்றி...சிநேகிதி..இப்படியான எத்தனையோ விடயங்கள் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. மனதில் நான் நினைத்துப்பார்க்கக்கூட பயப்பிடும் விடயங்களை சொற்ப நேரத்துக்குள்ளே செய்து விடுகிறார்கள். அதற்கு காரணமாக நம் ஆக்களுக்குள்ளேயே சிலர் உடந்தையாக..அவர்களை நினைக்கையில் தான்..அவர்கள் என்ன நம் ஈழத்தில் பிறக்காதவர்களோ என்று எண்ணத்தோணும்..சரி அது கூட இல்லையெனில் ஒரு மனித நேயம் கூட இல்லாத துரோக குணம் படைத்தகவர்கள்...சின்ன வேலிப்பிரச்சனைக்காகவே இப்படி காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கிறார்கள். :evil:

Link to comment
Share on other sites

சிநேகிதி கவிதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ மாவீரவே உங்களுக்கு

விடியலின்பூபாளம் கேட்கிறதா?

தானைத்தலைவரின் தங்குதடையற்ற

தலைமையில் உம் சகாக்களின்

போராற்றல் பேராற்றலாய்

பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறதே

அது உங்களுக்குத் தெரிகின்றதா?

நல்லாயிருக்கு கவிதை நன்றி தொடர்ந்தும் எழுதுங்கள் :wink:

Link to comment
Share on other sites

சினேகிதியின் கவிதை, ஒரு அம்மாவின் தோழில் தலைவைத்து சாய்ந்து இறந்து போன அந்த மகனைப் பற்றி கேள்விப்பட்டது ஞாபகத்தில் வருகிறது..

Link to comment
Share on other sites

மனதை உருக்குகிறது உங்கள் கவிதை

இப்படி எத்தனை தெய்வங்களை எமை காக்கா, தங்களையே மரண படுக்கையில் விழுத்தி கொண்டவர்கள். பாரட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதை உருக்குகிறது உங்கள் கவிதை

இப்படி எத்தனை தெய்வங்களை எமை காக்கா, தங்களையே மரண படுக்கையில் விழுத்தி கொண்டவர்கள். பாரட்டுக்கள்.

வாழ்த்துக்கள்.. உங்கள் கவிதை நன்றாக இருக்கு.. மேலும் உங்கள் திறமையை எதிர்பார்க்கிறோம்..

Link to comment
Share on other sites

  • 2 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.