Jump to content

மதுவால் அழிந்த தமிழ் வரலாறு.


Recommended Posts

தமிழ் மக்களின் வாழ்வை சீரழித்து வரும் விடயங்கள் என்று பட்டியலிட்டால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல்இ சாதிஇ மதம் என்று பலரும் பட்டியலிட்டுக் காட்டுவது வழமையாக இருந்தது. இந்த மூன்று விடயங்களும் இப்பொழுதும் சமுதாயத்தை சீரழித்து வருவதை நிறுத்தியதாகக் கூற முடியாது. ஆனால் இவைகளை வேகமாக முந்திக் கொண்டு மதுபானமும் தொடர் நாடகங்களும் சமுதாயத்தை சீரழிப்பதில் இப்போது முதன்மை இடத்தைப் பிடித்துவிட்டன. இக்கட்டுரை மதுபானம் பற்றிப் பேசுகிறது அடுத்த கட்டுரை தொடர் நாடகத்தைப் பற்றிப் பேசும்.

யாரும் எதிர் பார்க்காமல்இ எந்த அறிஞரும் முன்னெதிர்வு கூறாமல் இவை இரண்டும் சமுதாயத்தின் தலைமைச் சீரழிவுக் கருவிகளாகிவிட்டதால் இவை பற்றிய தனியான கவனமெடுத்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. கடந்த காலங்களில் அரசியல்இ மதம்இ சாதி ஆகியன நேரடி உயிர் கொல்லிகளாக மாற பெருந்தொகையான மக்கள் இலங்கையை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள்.

இவர்களுடைய புலப்பெயர்வுக்கான காரணங்களை எல்லாம் பேசி காலத்தை அழித்துக் கொண்டிருக்க கண்ணுக்குத் தெரியாத அருவமாக மதுபானமும்இ தொடர் நாடகங்களும் மக்கள் வாழ்வை கன வேகத்தில் சூறையாடிவிட்டன. உலக வரலாற்றில் போரால் சீரழிந்த இனம்இ இயற்கை அனர்த்தத்தால் சீரழிந்த இனம் என்றுஇ சீரழிந்த ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்திருப்பார்கள். உலகில் மதுவால் அழிந்த சமுதாயம் எதுவெனத் தேடுவீர்களானால் அது தமிழினம்தான் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும். அந்த நிகழ்வுகளை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

காதல்இ வீரம் என்று நாம் புகழ்ந்து போற்றும் சங்ககால சமுதாயம் ஒட்டு மொத்தமாக அழிந்து ஆரியர்களின் கையில் வீழ்ந்தமைக்கு தலைமைக் காரணம் மதுபானம்தான் என்கிறது தொல்காப்பியம். பொய்யும் வழுவும் தோன்றி பின் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப என்ற பாடல் மூலம் தொல்காப்பியரே இதை உறுதி செய்துள்ளார்.

மதுவினால் ஒழுக்கம் சீரழிந்து சமுதாயமே பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது ஐயர்கள் என்னும் ஆரியர்கள் மிக இலகுவாக அவர்களை அடிமைப்படுத்தினர். திருக்குறள்இ திரிகடுகம்இ ஆசாரக்கோவைஇ இன்னாநாற்பதுஇ இனியவை நாற்பது போன்ற நீதி நூல்களால் சமுதாயத்தை திருத்துவதற்கான அத்தனை பணிகளையும் பலர் செய்தனர்இ அவைகளால். சமுதாயம் ஓரளவு காப்பாற்றப்பட்டாலும் தமிழர்கள் என்ற சுயம் அழிந்து போனதை எந்த நீதி நூல்களாலுமே மீட்க முடியாது போய்விட்டது.

இதுபோல சோழர்காலத்திற்குப் பிறகு வந்த அன்னிய ஆட்சியான நாயக்கர் காலத்திலும் தமிழ் மக்கள் மிகப்பெரிய குடிகார இனமாக இருந்திருக்கிறார்கள். மதுவின் உளவியலால் அழிந்துஇ எதிர் மறையாக சிந்தித்து ஐரோப்பியர்களின் கைகளில் அடிமையாக விழுந்தனர். அதனால் நானூறு வருடங்களாக அடிமை வாழ்வு வாழ்ந்தார்கள்.

இந்தக் காலத்தில் தமிழ் தேசியத்தைஇ தமிழருக்கான தன்மானத்தை மீட்டெடுக்கப் போராடிய சில மன்னர்கள் இருந்ததை மறுக்க இயலாது. எல்லோரையும்இ எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நாம் குறை கூற முடியாது. தீமைகளிடையே நன்மைகளும் இருப்பது போலவே இத்தகைய தன்மான முள்ள அரசர்களும் நம்மிடையே இருந்துள்ளனர். ஆனால் இலங்கையாகட்டும்இ தமிழகமாகட்டும் இரு இடங்களிலுமே இப்படியான மன்னர்களை இவர்களோடு இருந்தவர்களே காட்டிக் கொடுத்து தூக்குக் கயிற்றில் தொங்க வைத்தார்கள். காட்டிக் கொடுத்த அத்தனைபேரையும் மதுவுக்கு அடிமையாக்கியே எதிரிகள் காரியம் சாதித்தார்கள்.

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான சிறீவிக்கிரமராஜசிங்கன் சிங்களவனல்ல தமிழன்தான். சிறந்த கூரிய புத்தியுடையவனான இவன் தனது ஆட்சியின் பிற்காலத்தில் மிகப்பெரிய குடிகாரனாக இருந்தான். 15 ம் நூற்றாண்டில் இலங்கை வந்த ஐரோப்பியர் 18 ம் நூற்றாண்டுவரை கைப்பற்ற இயலாதிருந்த கண்டி இராட்சியத்தை கைப்பற்ற மதுபோதையால் மழுங்கிப் போன இவனுடைய மூளையும் ஒரு காரணம். மது போதை தலைக்கேறி தனது பிரதானி ஒருவனுடைய பிள்ளையை கண்ட துண்டமாக வெட்டி உரலில் போட்டு இடிக்கச் செய்யுமளவிற்கு இவனுடைய அறிவு மழுங்க மதுவே பிரதான காரணம்.

யாழ். குடாநாட்டை சூரியக்கதிர் மூலம் சிங்கள இராணுவம் கைப்பற்றியதாகக் கூறப்படுவது பெரிய விடயமல்ல. குடாநாடு சென்று சகல நிலமைகளையும் ஒரு தடவை சுற்றிப்பாருங்கள். மதுபானம் அங்கு அரசனாக கொலுவீற்றிருப்பதைக் காண்பீர்கள். இராணுவத்துடன் இணைந்து மதுபானத்தை எடுத்துச் செல்லும் ஈழத் தமிழரையும் அங்கு காண்பீர்கள். போதைமிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் சிங்கள இராணுவம் கணிசமான வெற்றி பெற்றிப்பதை நீங்கள் காண்பீர்கள். இப்படி போதையூட்டியவர்களை வைத்தே சகல தகவல்களையும் அவர்கள் பெற்றுவிடுகிறார்கள் என்பதையும் அங்கு நடைபெறும் சம்பவங்களால் உணர்வீர்கள்.

எப்போதுமே அன்னியர்களின் ஆட்சிஇ நம்பிக்கை வரட்சி போன்றன மக்களை மதுபானத்திற்கு அடிமையாக்குகிறது. இன்றுள்ள தமிழ் மக்களிடையே எதிர் காலம் என்ன என்ற கேள்வி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது யாருக்குமே கடினமானதுதான். பிள்ளைகள் வெளிநாட்டு வாழ்க்கைக்கு தயாராகஇ தாய் நாட்டில் அமைதி கால் நூற்றாண்டுகளாக முடிவில்லாமல் இழுபட்டுப்போக அந்த விடையில்லாத வெற்றிடத்தில் மதுபானமே அமர்ந்து விடுகிறது. வெளி நாடுகளில் இருபது வருடங்களாக மாடாக உழைத்து கண்ட மிச்சம் என்ன என்ற கேள்விக்கு மன அமைதி தரும் பதில் கூற முடியாத நிலையில் இருக்கும் மக்களை மதுபானம் இலகுவாக அடிமை கொண்டுவிடுகிறது.

மதுபானத்தை நிறுத்துங்கள் என்று கூறுவதைவிட அதை நிறுத்துவதற்குரிய பின்னணிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுவதே இனிப் பொருத்தமான வாதமாகும். மக்கள் தமது வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்குரிய சூழலை உண்டு பண்ண வேண்டும். கடைசிவரை வாழ்வதில் ஓர் அர்த்தம் இருக்கிறது என்ற தகவலை மக்களுக்குக் கொடுக்க வேண்டும். கலைகளினூடாகவும் ஊடகங்களினூடாகவும் இந்தக் காரியத்தை திட்டமிட்டு செய்ய வேண்டும். சமுதாயவியல் அறிஞர்கள் என்று எவரும் இல்லாத பேதைச் சமுதாயமாக நாம் தொடர்ந்தும் இருந்தால் இந்தச் சிக்கலில் இருந்து விடுபட முடியாது. இருந்தால் மதுபானத்தில் இருந்து அடுத்த கட்டமான போதை வஸ்த்துக்குள் இளைய தலைமுறை வீழவதைத் தடுக்க முடியாமல் போகும். சமூகத்தைக் காக்க வேண்டிய பணிகளில் யாரும் பொறுமை காத்தல் கூடாது. காரியங்களை செய்யாமல் காத்திருப்பது நன்மைக்குரிய செயல் அல்ல அதுதான் சுடுகாட்டுக்குப் போகும் வழி என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மது அருந்துவோர் கூடாதவர்கள் மது அருந்தாதவர் நல்லவர் என்ற கோணத்தில் இதை அணுகுதல் கூடாது. கடந்த காலங்களில் நீதி நூல்கள் விட்ட தவறே இங்குதான் இருக்கிறது. நல்லவர் கூடாதவர் என்றது ஒரு விடயம்இ மதுபானம் அருந்துவது அருந்தாமல் விடுவது என்பது இன்னொரு விடயம். இரண்டையும் இந்த விவகாரத்தில் ஒன்றாக்கி குழப்பம் விளைவித்ததுதான் சமயவாதிகள் விட்ட தவறு. மேலைநாட்டு அரசுகள் அப்படி ஒரு கோணத்தில் மதுபானம் தொடர்பான விடயங்களை கையாளவில்லை. அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலை நாடுகளில் பெரும்பாலானவர்கள் மது அருந்துகிறார்கள். மது அருந்துபவர்கள் எல்லாம் தீயவர்கள் என்றால் இந்த நாட்டில் எல்லோருமே தீயவர்கள்தான். ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் எல்லோருமே மதுக்கிண்ணத்துடன் நிற்கும் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அதை வைத்து அந்தத் தலைவர்கள் எல்லோருமே தீயவர்கள் என்று சொல்ல முடியாது.

நீதி நூல்களிலும்இ சமயங்களிலும் வகுக்கப்பட்ட பஞ்சமா பாதகங்களில் ஒன்று என்ற கோணத்தில் இதைப் பார்க்க முடியாது. கி.பி 300 ம் ஆண்டில் வாழ்ந்த மனிதனை மிரட்ட பாவித்த நரகலோகத்தையும்இ கன்மக் கோட்பாடுகளையும் இன்றைய மனிதனிடம் பேச முடியாது. அவைகளின் காலம் முடிவடைந்துவிட்டது. புதிய உலகில் மதுபானம் மனிதனுடன் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. அதை நம்மால் முற்றாகத் தடுக்க இயலாது. ஆனால் அதைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை ஆன்மீக hPதியாக இன்றைய மனிதனுக்கு சொல்ல இயலாது. ஆகவேதான் சட்டத்தினால் அது தடுக்கப்படுகிறது. போதை வஸ்த்து கடத்தினால் மரணதண்டனை என்ற சட்டத்தை சிங்கப்பூர் போன்ற நாடுகள் விமானத்தில் இருக்கும்போதே அறிவித்துவிடுகின்றன. அவர்களுடைய ஆன்மீகத்தால் முடியாது என்றபடியால்தான் அவர்கள் மரணதண்டனைக்கு வந்திருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் குறிக்கப்பட்ட வயதுக்குட்பட்டவர்களுக்கு கடைகளில் மதுபானம்இ சிகரட் போன்றவைகளை விற்க முடியாதென சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடைகளில் வார இறுதியில் மதுபானம் விற்க தடை இருக்கிறது. மதுபானம் விற்பதற்கான விசேட அனுமதிகள் எல்லாம் சட்டங்களினால் வரையறை செய்யப்பட்டுள்ளன. உளவியல்இ பொருளாதாரம்இ எதிர்கால சமுதாய உருவாக்கம் போன்றவற்றுக்கு அமைவாக இந்த சட்டங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.

புலம் பெயர் தமிழ் மக்களும் இந்த சட்டவிதிகளுக்குள் வந்தாலும்இ அவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழ் சமுதாயத்திற்குரிய அளவில் மேலும் சில விதிமுறைகள் அவசியமாக இருக்கின்றன. இன்று தமிழர் நடாத்தும் சகல கொண்டாட்டங்களிலுமே மதுபானம் இருக்கிறது. திருமணம்இ பிறந்தநாள் போன்ற விழாக்களில் அது ஒரு கலாச்சார அடையாளமாகவே மாறிவிட்டது. கூர்ந்து கவனித்துப்பார்த்தால் தமிழ் மக்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலுமே மதுபானம் மிகக் கச்சிதமாக நுழைந்து விடுகிறது. மத ஆசாரங்களுடன் கூடிய திருமண வீட்டில் சம்பெயின் உடைப்பது கூட இன்று தமிழ் கலாச்சாரமாகிவிட்டது. இது தமிழனின் வெற்றியல்ல தமிழனை மதுபானம் வென்றதற்கான அடையாளம்.

மற்றைய சமுதாயங்களை எடுத்துக் கொண்டால் மதுபானத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் பெருகியபடியே இருக்கின்றன. டேனிஸ் வெளிநாட்டு அமைச்சு உலகமெல்லாம் உள்ள தனது காரியாலயங்களில் புகைத்தலை முற்றாகத் தடை செய்துவிட்டது. புகையிரதங்களில் கூட புகைத்தல் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. புகைத்தல் புற்று நோயை உண்டு பண்ணும் என்ற உண்மையை இப்போது வெளிப்படையாக தெரிவித்து விட்டார்கள். போதையூட்டும் சகல விடயங்களுமே வெளி நாடுகளில் சட்டங்களால் இறுக்கப்பட்டு வருகின்றன.

இதைக் கூர்ந்து பார்த்து நாமும் புதிய சமுதாய சட்டங்களை உருவாக்குதல் வேண்டும். பிள்ளைகள்இ குடும்பங்கள் ஒன்று கூடும் கொண்டாட்டங்களில் இருந்து மது பானத்தை முற்றாக அகற்ற வேண்டும். அழைப்பிதழ் தரும்போதே மதுபானம் நீக்கப்பட்ட விழாஎன்பதை கீழே அச்சடிக்க வேண்டும். யார் மீதும் கோபமோ வெறுப்போ இதற்குக் காரணமல்ல சமுதாயத்தின் நெறி குறித்து நாம் சிந்திப்பதால் இப்படி செய்கிறோம் என்று உண்மையைப் புரிய வைத்தல் வேண்டும்.

மேலும் இது குறித்து பலமான கருத்தாடல்களை ஊடகங்களின் மூலம் வளர்க்க வேண்டும். இலங்கையை வாலகம்பா என்ற சிங்கள அரசனிடமிருந்து கைப்பற்றிய ஐந்து தமிழர்கள் மதுவில் மூழ்கி ஆட்சிக் கதிரைக்காக ஒருவரை ஒருவர் குத்திக் கொன்றுஇ கடைசியில் எஞ்சிய ஒரு தமிழன் சிங்கள அரசனின் வயதான மனைவி சோமாவதியை தூக்கிக் கொண்டு தமிழ் நாட்டுக்கு ஓடிஇ சிங்களவரிடம் மறுபடியும் ஆட்சியை ஒப்படைத்தான். இந்தக் கதையை நாம் மறந்துவிடக் கூடாது. நம்மை என்றும் ஆளும் இனம் என்ற ஸ்தானத்தில் இருந்து வீழ்த்தி ஆளப்படும் இனமாக வைத்திருக்கக் காரணமாயிருப்பது மதுதான் என்பதை மறந்துவிடலாகாது.

மதுவை அருந்தும் எவரையும் இக்கட்டுரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை. மது அருந்த வேண்டாமெனவும் புத்திசொல்ல வரவில்லை. மதுவால் அழிந்த தமிழ் வரலாற்றை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள் என்று மட்டும் தயவுடன் கேட்கிறது.

அலைகள்

Link to comment
Share on other sites

நர்மதா அருமையான கட்டுரையை இங்கு இனைத்து உள்ளீர்கள்... நன்றிகள்

மதுவால் ஒரு குடும்பம் அழிந்து இப்போ நமது கலாச்சாரத்தையும் அழித்தும் வருகின்றது என்பது கவலைக்குரிய விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடி குடியை கெடுக்கும் என்பார்கள்..அது குடியை மட்டுமல்ல சுற்றியுள்ள சமூகத்தையும் கெடுக்கும் என்பதை தெளிவாக காட்டி நிற்க்கிறது. கட்டுரைக்கு நன்றிகள் (உங்களுக்கும் அலைகளுக்கும் )

Link to comment
Share on other sites

குடி குடியை கெடுக்கும் என்பார்கள்..அது குடியை மட்டுமல்ல சுற்றியுள்ள சமூகத்தையும் கெடுக்கும் என்பதை தெளிவாக காட்டி நிற்க்கிறது. கட்டுரைக்கு நன்றிகள் (உங்களுக்கும் அலைகளுக்கும் )

ஒரு பிளானேடைதான் இந்த கட்டுரையை வைச்சிருக்கிறீயள் எல்லாம் நம்மடை கூட்டத்தை தாக்கிற மாதிரிக் கிடக்கு .........icon_cry.gificon_cry.gif

Link to comment
Share on other sites

ஒரு பிளானேடைதான் இந்த கட்டுரையை வைச்சிருக்கிறீயள் எல்லாம் நம்மடை கூட்டத்தை தாக்கிற மாதிரிக் கிடக்கு .........icon_cry.gificon_cry.gif

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

புலத்தை பொறுத்தவரையில் அதற்கு அடிமைபடாமல் அளவோடு இருக்கும்வரை அது ஒரு பெரிய பிரச்சனையல்ல என்பதே எனது கருத்து.

சின்னப்பு உங்களுக்கு சப்போட்டா சொல்லியிருக்கு. காசை மறக்காம அனுப்பி விடுங்க.

Link to comment
Share on other sites

சிலபேர் குடிப்பதற்க் ஏத்தனையோ காரணம் சொல்லுவார்கள் பார்த்திருக்கிறேன்..பட் தாங்கள் தான் காரணம் என்று எவரும் சொன்னதில்லை...

குடிக்கிறதில் கூட அளவாக குடித்து வாழுவோம் என்பவர்கள்..சில காலகட்டத்தின் பின் மாறி விடுவர்.. :?

Link to comment
Share on other sites

எவ்வளவு குடிச்சாலும் நான் ஸ்டெடியாக இருப்பேன் என்று கூறுவது தமிழனின் ஆணவத்தைக் காட்டுகிறது...

ஆணவத்தை விட்டு விட்டு, இனி மேலாவது ஆகவேண்டியதை பார்ப்போம்.....

Link to comment
Share on other sites

எவ்வளவு குடிச்சாலும் நான் ஸ்டெடியாக இருப்பேன் என்று கூறுவது தமிழனின் ஆணவத்தைக் காட்டுகிறது...

ஆணவத்தை விட்டு விட்டு, இனி மேலாவது ஆகவேண்டியதை பார்ப்போம்.....

ராஐா லுக்கு அதுக்கு பேர் ஆணவம் இல்லம்மா தில்லு இப்ப பாரும் நம்மட கூட்டுவள் அது தானப்பா முகம் சாட்றீ டங் சின்னக்குட்டியார் பெரியப்பர்

தனிய ஆளுக்கு 1 போத்தல் 69 ஐ தாட்டுப்போட்டு ஐம் எண்டு நிப்பினம் அதுவும் டங் அப்பா கலந்தடிக்கிறதில மன்னன்

நம்பமுடியாதா ம் நம்மட பார்ட்டியில ஒருக்கா கலந்து கொள்ளுமன்

:P :P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

அய்யா, நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிறது... பாழாய்போன இந்த சிகரெட் சனியன் தான் விட்டு தொலைய மாட்டேன் என்கிறது....

Link to comment
Share on other sites

அய்யா, நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிறது... பாழாய்போன இந்த சிகரெட் சனியன் தான் விட்டு தொலைய மாட்டேன் என்கிறது....

ஐயோ ஐயோ ஐயோ ஆளுக்காள் இப்பிடியே குடியை விட்டா நம்மட நிலமை :cry: :cry: :cry: :cry:

ஓய் டங் முகம் சின்னக்குட்டீ பெரிசு எங்கையப்பா போய்டீங்கள்

கடவுளே இந்த நேரம் பாத்து ஓருவரையும் கானேல்லையே

:cry: :cry: :cry: :cry: :cry: :cry:

யோவ் லுக்கு விட்டது தான் விட்டீர் சிகரெட்டை விட்டிருக்கலாமேம

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நர்மதா தகவலுக்கு நன்றி

;மதுவால் எத்தனை குடும்பங்கள் பிரிந்து இருக்கின்றார்கள் காரணம் (குடி)

ஏன் சிங்களராணுவம் என்ன செய்கின்றவர்கள் தெரியுமா :twisted: :twisted: :twisted: ?

நல்லா குடி சிகரெட் கஞ்சா கட்டு எல்லாம் அடிச்சுப் போட்டுத்தான் எங்கட அப்பாவி மக்களை வெட்டு பாலியல்வன்முறை சூடு இந்த போதையில் நின்று தான் Üடுதலாக செய்வார்கள் :evil: :evil:

மதுவை யாராலையும் அழிக்க முடியாது ? மக்களைத்தான் அழிக்க முடியும் ? குடித்தக் குடித்து எவ்வளவு மக்கள் பாதிக்க பட்டு இருக்கின்றார்கள் :cry: :cry:

Link to comment
Share on other sites

நர்மதா தகவலுக்கு நன்றி

;மதுவால் எத்தனை குடும்பங்கள் பிரிந்து இருக்கின்றார்கள் காரணம் (குடி)

ஏன் சிங்களராணுவம் என்ன செய்கின்றவர்கள் தெரியுமா :twisted: :twisted: :twisted: ?

நல்லா குடி சிகரெட் கஞ்சா கட்டு எல்லாம் அடிச்சுப் போட்டுத்தான் எங்கட அப்பாவி மக்களை வெட்டு ********சூடு இந்த போதையில் நின்று தான் Üடுதலாக செய்வார்கள் :evil: :evil:

மதுவை யாராலையும் அழிக்க முடியாது ? மக்களைத்தான் அழிக்க முடியும் ? குடித்தக் குடித்து எவ்வளவு மக்கள் பாதிக்க பட்டு இருக்கின்றார்கள் :cry: :cry:

ஐயோ ஐயோ ஊரே எதிராக்கதைக்கிறாங்களே

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா, நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிறது... பாழாய்போன இந்த சிகரெட் சனியன் தான் விட்டு தொலைய மாட்டேன் என்கிறது....

சிகரெட் தானே இன்னும் Üடாது நீங்கள் மனசு வைச்சால் சிகரெட்டையும் விடுவிங்கள் விட்டால் நாங்கள் நன்று Üடுவோம் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ ஊரே எதிராக்கதைக்கிறாங்களே

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

ஓய் கீதா உமக்கு எத்தனை தடவை சொல்லுறது க......பு என்ற வார்த்தையை பாவிக்க வேண்டாம் எண்டு

ஓய் பாலியல்வன்முறை எண்டு எழுதுமோய்

ம...பாாாாா

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சின்னப்பு

நாம் நிற்கின்றோம். என்ன செய்வது என்று சொல்லுங்கள். முடித்து வைக்கின்றோம். நாம் றோயல் பமிலியில் ஒரு அவமானம் என்றால் பார்த்துக் கொண்டு இருப்பமா?? :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப சின்னப்புக்கு றொம்பத்தான் கோவம் வருகின்றது ஏன் :P

Link to comment
Share on other sites

கட்டுரையில் சொன்ன ஒரு விசயம் குறிப்பிடத்தக்க ஒன்று..! நல்லவன் கெட்டவன் என்பதை வெறும் குடியை மட்டும் வைத்துத் தீர்மானிக்கக் கூடாது என்பதுதான். குடி எவ்வகையில் இருப்பினும் அது மனிதனுக்கு ஆகாதது. ஆனால் அதை மட்டும் வைத்து மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று தீர்மானிக்க முடியாது. குடித்தாலும் மனதால் பண்பட்டவர்களும் இருக்கிறார்கள்..இருந்தும் அவர்கள் குடியால் தங்களைத் தாங்களே வீணே அழித்தும் கொள்கிறார்கள்..! குடிக்காமலே மனதால் மற்றவர்களை வருத்தி அழிப்பார்களும் இருக்கிறார்கள்..! இதில் எவர் நல்லவர் எவர் கெட்டவர்..! மூடிய மனதுக்குள் இருப்பதைக் காணும் சக்தி வரும் வரை இவை கொஞ்சம் சிரமமான விடயம் தான்..! தமிழர்கள் அழிவதற்கு காரணம் குடியை விட தனக்குள் தானே பொறாமையை வளர்த்துக் கொள்வதும் முழுக்க முழுக்க சுயநலத்தொடு செயற்படுவதுமே..!

இந்த நல்லவன் கெட்டவன் தீர்மானம் கூட சிலர் தங்களை உயர்வாகக் காட்ட பயன்படுத்தும் சுயநலத்தின் வெளிப்பாடே அன்றி சமூக அக்கறை என்று நேரடியாகச் சொல்லிவிட முடியாது..! தமிழர்களினது எழுத்தும் சொல்லும் சுயநலம் மிக்கதாகவே அதிகம் இருக்கிறது.

உண்மையில் நல்லவன், கெட்டவன், நல்லது தீயது இவற்றைத் தீர்மானிக்க வேண்டியது தனி மனிதனிலும் அவன் சார்ந்த சமூகமே..! ஒருவனால் அவன் செயலால் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை எனும் போதும் பிறருக்கும் அவனுக்கும் நன்மை எனும் போதும் அவன் செயல் சொல் நல்லவை என்று வரையறுக்கப்படும்..! தமிழர்கள் தங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்..எத்தனை பேர் சுயநலமில்லாமல் சமூக நன்மை கருதி தங்கள் சொல் செய்லை வரையறுத்துக் கொள்கிறார்கள் என்று..???! :P :idea:

Link to comment
Share on other sites

சின்னப்பு

நாம் நிற்கின்றோம். என்ன செய்வது என்று சொல்லுங்கள். முடித்து வைக்கின்றோம். நாம் றோயல் பமிலியில் ஒரு அவமானம் என்றால் பார்த்துக் கொண்டு இருப்பமா?? :twisted: :twisted:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

ஊனம் ஊனம் ஊனம் யாருங்கோ??

உடம்பில் உள்ள குறைகளெல்லாம் ஊனம் இல்லைங்கோ.

உள்ளம் நல்ல இருந்தா ஊனம் ஒண்டும் குறையில்லே

உள்ளம் ஊனப் பட்டா உடம்பிருந்தும் பயனில்லை.

இரண்டுகால்கள் உள்ளவனும் கெடுக்கிறான்

சிலர் ஒற்றைக்காலில் நல்ல படியும் நடக்கிறான்.

வைர முத்துக்கள்

Link to comment
Share on other sites

ஊனம் ஊனம் ஊனம் யாருங்கோ??

உடம்பில் உள்ள குறைகளெல்லாம் ஊனம் இல்லைங்கோ.

உள்ளம் நல்ல இருந்தா ஊனம் ஒண்டும் குறையில்லே

உள்ளம் ஊனப் பட்டா உடம்பிருந்தும் பயனில்லை.

இரண்டுகால்கள் உள்ளவனும் கெடுக்கிறான்

சிலர் ஒற்றைக்காலில் நல்ல படியும் நடக்கிறான்.

வைர முத்துக்கள்

பாத்தீங்களே :P :P :P :P :P :P :P :P :P

மழை... இரு...எண் மந்தி கொப்பிளக்கப் பாயாாாாாாாதுதுது

:P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

ஏனப்பு அழுகின்றீர்கள்? ஆனந்தக் கண்ணீரோ?

Link to comment
Share on other sites

சிகரெட் தானே இன்னும் Üடாது நீங்கள் மனசு வைச்சால் சிகரெட்டையும் விடுவிங்கள் விட்டால் நாங்கள் நன்று Üடுவோம் :P

ம்ம் நாங்கள் எதுக்கு ஒன்று கூடணும்..கூடி பிரியோசனமே இல்லை..அவரவர் நினைத்தால் தான்..ஐ மீன் தானாக பழக்கத்தை விட நினைத்தாலே ஒழிய...வேற யாரும் தலை கீழா நின்றாலும் விட முடியாது கீதா தங்கா...அனுபவத்தில சொல்றேன்.. :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் நாங்கள் எதுக்கு ஒன்று கூடணும்..கூடி பிரியோசனமே இல்லை..அவரவர் நினைத்தால் தான்..ஐ மீன் தானாக பழக்கத்தை விட நினைத்தாலே ஒழிய...வேற யாரும் தலை கீழா நின்றாலும் விட முடியாது கீதா தங்கா...அனுபவத்தில சொல்றேன்.. :evil: :evil: :evil: :evil: :evil:

அப்போ உங்கள் ஆத்தக்காரன் றொம்பக் குடியா அதான் அனுபவம் போல தெரிகின்றது ? :cry: :P

Link to comment
Share on other sites

கீதா எழுதியது:

சிகரெட் தானே இன்னும் Üடாது நீங்கள் மனசு வைச்சால் சிகரெட்டையும் விடுவிங்கள் விட்டால் நாங்கள் நன்று Üடுவோம் :P

கீதாக்கோ

நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள்??????? :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.