Jump to content

தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களுக்கும் போர்க்காலத்திற்


Recommended Posts

தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களுக்கும் போர்க்காலத்திற்குரிய தற்பாதுகாப்பு பயிற்சிகள் இப்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்களும் பெண்களும் கணிசமான அளவில் இதில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நிராயுத பாணிகளாகஇ வெறும் அடையாள அட்டைகளுடன் நிற்கும் அப்பாவி மக்களை சுட்டும்இ வெட்டியும்இ குண்டு வீசியும் கொன்றொழிக்கும் கொடிய கலாச்சாரத்திற்கு மாற்று மருந்து கொடுக்க இந்தப் பயி;ற்சிகள் நடைபெறுகின்றன.

இலங்கையில் நடைபெற்ற இனப்போர் காரணமாக இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிராயுதபாணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பாலியல் பலாத்காரம் உட்பட வர்ணிக்க முடியாத கொடுமைகள் எல்லாம் அங்கு நடந்தேறிவிட்டன.

உலக சமுதாயமும்இ ஊடகங்களும் ஐ.நா மன்றும்இ ஐரோப்பிய ஒன்றியமும் இதுவரை எமது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பின்னர்தான் கூலிக்கு மாரடிப்பதற்காக பாசாங்கு செய்துள்ளன. வருமுன் காப்பதற்கு உலக சமுதாயம் என்றுமேஇ எங்குமே முன் வந்ததாக இல்லை. சர்வதேச சட்டங்களின்படி ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. இப்போது பொது மக்களுக்கு நடைபெறும் தற்பாதுகாப்புப் போர்ப்பயிற்சி சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதுதான்.

1958 இனக்கலவரம்இ பின் 1978இ 1983 என்று வரிசையாக நடைபெற்ற கலவரங்கள்இ வடமராட்சி தாக்குதல்இ கொக்கட்டிச் சோலைப் படுகொலைகள்இ சூரியக்கதிர் என்று அத்தனை படுகொலைகளையும் பட்டியலிட்டால் அங்கெல்லாம் மடிந்தது அப்பாவி பொதுமக்கள்தான். இவர்கள் வரலாற்றால் எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொல்லப்பட்டார்கள் என்பதை நினைத்தால் உள்ளம் கொதிக்கும். பொது மக்களாக வாழ்ந்துஇ வெறுங்கைகளை காற்றில் வீசியபடி உயிர் காக்க அவர்களோடு ஓடியிருந்தால் அந்த வேதனையின் முழுப் பரிமாணத்தை நீங்களும் உணர்வீர்கள்.

பல மானிடப் படுகொலைகள் தமிழீழத்தில் நடைபெற்ற போது அந்த இரத்தமும் சதையும் சிதறிய இடத்தில் நின்று பொது மக்களின் குரல்கள் எவ்வாறு இருக்குமென்பதைக் கேட்டவர்களர் எவரும் இந்தப் பயிற்சியை இரு கரம் கூப்பி வரவேற்பார்கள்.

வல்வையில் அப்பாவிகளை பிடித்துச் சென்ற இராணுவம் 23 பேரை ஒரு சிறிய நூல் நிலையித்தில் அடைத்து வைத்துவிட்டு அதன் கீழ் பாரிய வெடிகுண்டை வைத்துத் தகர்த்தது. அந்த நேரம் மடிந்த அப்பாவிகளின் ஒருவருடைய உடலைக்கூட முழுமையாக எடுக்க முடியவில்லை. அதில் மடிந்த அத்தனைபேரும் போர்இ ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாத அன்றாடங்காய்ச்சிகள்.

அதற்குப் பத்தாவது நிமிடம் அருகில் இருந்த தீர்த்தக் கடற்கரையில் பன்னிரெண்டு பேரை வரிசையாக விட்டு சுட்டுத்தள்ளினார்கள். அந்தப் படத்தில் ஒரு சிறுவன் பின்புறத்தை உணர்த்தியபடி குப்புறக் கிடக்கிறான். இவன் சந்தையில் வாழைக்குலை தூக்கிக் கொடுத்து சீவியம் நடாத்திய ஊமைச் சிறுவன். தமிழர் சிங்களவர் என்ற இனப் போர் இருப்பதே இவனுக்கு தெரிந்திருக்க நியாமில்லை. அந்தச் சிறுவனின் அவல ஒலியைக் கேட்ட இன்னொரு நண்பர் மெல்ல எட்டிப்பார்த்தார்இ அவரையும் சுட்டார்கள்இ சூடு வாங்கியபடியே ஓடிச்சென்று கடலில் விழுந்து இறந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு சில மாதங்கள்தான் ஆகியிருந்தது.

இந்த நிகழ்வுகளும்இ வெறியாட்டுக்களும் நிகழ்ந்து கொண்டிருந்தபோது அந்தப் பொறிக்குள் மாட்டுப்பட்ட மக்கள் அந்த நேரம் என்ன பேசினார்கள் என்பது அவர்களோடு மாட்டுப்பட்டவர்களுக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஐ.நா மன்றின் குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் கூடுகளுக்குள் இருப்போருக்கு இதன் அரிச்சுவடியும் தெரியாது.

நம்மிடம் மட்டும் ஒரு துப்பாக்கி இருந்திருந்தால் நாமும் இவர்களை சுட்டு உயிர் தப்பியிருக்கலாமேஇ இந்த ஆபத்திலிருந்து தப்புவதற்கு ஒரு தற்பாதுகாப்பு பயிற்சியைக் கூட கற்றுக் கொள்ளாமல்; போனோமே? என்று புலம்பியவர் பலர். இந்த அவலத்திற்கு முதலில் விடைகாணாமல் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வட்டுக்கோட்டையில் போய் தமிழீழம் பிரகடனம் பண்ணி என்ன பயன் என்று பலர் அங்கலாய்த்தார்கள். அடுத்த கணம் துப்பாக்கி வெடியில் சிக்குண்டு இவ்வுலக வாழ்வை நீத்தவர் பலர். துள்ளித் திரியும் வயதில் என் துடிப்படக்கி பள்ளிக்கு அனுப்ப மறந்தாயே பாதகத்தி என்று தனது தாயரை பட்டினத்தார் திட்டியது போலத்தான் மக்கள் வேதனைப்பட்டு மடிந்தார்கள். ஒன்றல்ல இரண்டல்ல புகைகுழியில் கிடக்கும் ஒரு இலட்சம் அப்பாவிகளின் ஆதங்க ஒலி இது.

இப்படிக் கூறுவதால் மக்கள் போரிட்டு அழிய வேண்டுமென நினைப்பதாக தப்பான கோணத்தில் பிழை பிடிக்க முயலக் கூடாது. உலகத்தில் எல்லா நாடுகளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் முறை கட்டாயப் பயிற்சியாக இருந்து வருகிறது. ஆனால் இலங்கை வாழ் தமிழ் மக்கள் தமிழர் என்ற ஒரே காரணத்தால் தகுதி இருந்தும் இராணுவம்இ போலீஸ் உட்பட முப்படைகளிலும் சேர்க்கப்படாது விரட்டியடிக்கப் பட்டார்கள்.

எல்லாவற்றையும் விடுங்கள் முப்படைகளிலும் தமிழர்களை எத்தனை விழுக்காடு சேர்த்தீர்கள் என்பதை சிறீலங்கா அரசிடம் விசாரித்துப் பாருங்கள். ஒரு வீதம்கூட தமிழர்கள் சேர்க்கப்படவில்லை. பின்னாளில் வரக்கூடிய இனப்போரினைக் கணக்கிட்டுத்தான் அவ்வாறு செய்தார்கள் என்பதை இப்போது தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.

இந்த நிலையில் இனியும் மக்களை வெறுங்கையோடு கும்பிட்டு மன்றாடும் பேதைகளாக வைத்திருக்க முடியாது. இன ஆக்கிரமிப்பிற்கு எதிராக மட்டுமல்ல சமுதாயத்தில் ஒழுங்குஇ ஒழுக்கத்தை ஏற்படுத்தவும் இது தேவைப்படுகிறது. போதைவஸ்துஇ படுகொலைஇ கொள்ளைஇ சாதி மோதல்இ கோஸ்டி மோதல் போன்றன மக்களிடையே திட்டமிட்ட முறையில் பரவ விடப்பட்டுள்ளன. மக்களை மதுபானத்திற்கு அடிமையாக்கும் பணி நன்கு திட்டமிட்டு அரங்கேறியுள்ளது. ஒன்றுந் தெரியாத சாதாரண குடிமகன் அச்சமின்றி வாழ அங்கு யாதொரு வழியும் இல்லை.

இப்படியான அவலங்களைத் தடுக்க பெரும் பெரும் மக்கள் விழிப்புக் குழுக்கள் இப்போது அவசியம். ஒவ்வொரு ஊரையும் அவ்வவ் ஊர் மக்கள் இரவு பகலாக தவணை அடிப்படையில் காவல் புரிய வேண்டிய நிலை உள்ளது. அப்படி செய்யாவிட்டால் லெபனான் வீதிகளாக யாழ். குடாநாடு மாறும். பிற்பொக்கற் அடிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து திருடர்கள் கொண்டுவந்து யாழ் நகரத்தில் இறக்கிவிடப்பட்ட செய்திகள் கூட அங்கு வெளிவந்துள்ளன. நல்லு}ர்இ செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்களில் இவ்வருடம் நடைபெற்ற திருட்டுக்கள் சொல்லும் செய்திகள் பல. இவை மேலும் பல மடங்கு பெருகிச் செல்வதைத் தடுக்க மக்கள் படை அவசியம்.

நாட்டில் யாதொரு அழிவுப் போருக்கும் அவசியமில்லாமல் முழு மக்களும் பொறிஸ் ஜெற்சின் தலைமையில் களமிறங்கிய போது ரஸ்யாவில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு தடுக்கப்பட்டது. அனைத்து இராணுவ முகாம்களையும் மக்கள் சூழ்ந்து மூடும் நிலமை இப்படி சில நாடுகளில் ஏற்பட்டபோது சர்வதேச சமுதாயம் தலைசாய்க்க வேண்டிய நிலை உருவானது. ரஸ்யாவில் நடந்தது போல கடைசித் துணிச்சல் வராவிட்டால் இன்றுள்ள தடைகளை ஈழத் தமிழினத்தால் தாண்ட முடியாது. இதை வவுனியாவில் இருந்து ஆரம்பித்த மக்கள் எழுச்சி நிகழ்வுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மக்கள் களமிறங்காமல் சர்வதேச சமுதாயத்தை வெற்றி கொள்ள முடியாது என்பதை இப்போது தமிழ் மக்கள் உணருகிறார்கள் என்பதையே இந்தத் தற்காப்புப் போர்ப் பயிற்சிகள் எடுத்துரைக்கின்றன.

மக்கள் வெற்றிக்கு போர்ப்பயிற்சி முதல் கட்டமாக அவசியமாகிறது. அதைத் தொடர்ந்து அவர்களை நவீன சிந்தனை மயப்படுத்த வேண்டிய பணி இருக்கிறது. பொருளாதாரம்இ உள்ளுர் உற்பத்திஇ மருத்துவம்இ பாடசாலைகள் உட்பட சகல பொது இடங்களிலும் ஊழியர்கள் உருப்படியாக கடமை செய்யும்படி மக்கள் அவர்களை கண்காணித்தல்இ ஊழல்இ இலஞ்சம் போன்ற சமுதாயக் குறைபாடுகளை தகர்த்தல் போன்ற அடிப்படையில் அது தெளிவான நோக்கத்துடன் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இது குறித்த விரிவான வேலைத்திட்ட வழிகாட்டி சகல தமிழீழ மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

இப்போது ஐ.நா மன்று தன்னுடைய 60 வது அகவையைக் கொண்டாடுகிறது. ஐ.நாவில் பல அடிப்படை மாற்றங்கள் வேண்டுமென்று பலர் கூறியிருந்தனர். அதுபற்றி ஆரம்பத்தில் உரத்துப் பேசிய ஐ.நா மன்று இப்போது அதை அப்படியே அடக்கி வாசித்துவிட்டது. ஒரு நாட்டில் இரு இனங்கள் இருந்தால்இ அங்கு உள்நாட்டு இனப் போர் ஏற்பட்டால் ஐ.நா அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் மொழிய முதலில் ஒப்புக் கொண்ட ஐ.நா இப்போது கமுக்கமாக கைவிட்டுவிட்டது.

மக்கள் தொகை அடிப்படையில் நாடில்லாத பெரிய இனமாக இன்று தமிழினமே இருக்கிறது. ஐ.நாவின் 60 வது அகவையிலாவது நாடில்லாத இனங்களின் கருத்துக்களுக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டுமென்று ஐ.நா கருதவில்லை. நாடுள்ள இனங்களுக்கு மட்டும் ஐ.நா பாதுகாவலராக இருக்கிறது என்ற பிரேரணையை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து முன் வைக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் ஐ.நாவிலும்இ உலக வங்கியிலும் நடைபெறும் சங்கதிகளை அறியாது தமக்குள்ளேயே மோதுவது ஐ.நாவிற்கு தொடர்ந்து மிகப்பெரிய வாய்ப்பாகி வருகிறது. இது குறித்தும் மக்களிடையே பேசப்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெற்றுவிட்ட மிகப்பெரிய மானிடப் படுகொலைகளுக்கெல்லாம் ஏது தண்டனை? கண்ணீரில் கிடக்கும் மக்களின் கேள்விக்கு சர்வதேச சமுதாயம் தரும் பதில் எதுவுமே இல்லை என்றால் மக்கள் என்ன செய்வது. ஐ.நாவும்இ சர்வதேச சமுதாயமும் திருதராட்டிரன் போல இருப்பதால் தமிழீழ மக்கள் தம்மைப் பாதுகாக்க தர்ம வியூகம் அமைப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. ஒன்று சர்வதேச சமுதாயம் முழுமையாக மனம் வைத்து இப்பிரச்சனையை தீர்க்க வேணடும்இ இல்லை அவர்களாக தீர்க்க இடம் விட வேண்டும். இந்த இரண்டுமே இல்லாத மூன்றாவது இடத்தில் ஐ.நா மதில் மேல் பூனைபோல இருந்தால் அதை மதிக்க வேண்டிய கடமை ஈழத்தமிழினத்துக்கு இல்லை என்றே கூற வேண்டும்.

மக்களின் சக்தி எவ்வளவு என்பது இதுவரை எந்த ஆய்வுகளாலுமே கண்டறியப்படவில்லை. ஆனால் அதை எவ்வளவு பெரியதாகவும் மாற்ற முடியும். முயன்றால் விரும்பியளவு தூரம் அது இழுபட்டுச் செல்லும். அப்படியே வளர்ந்து உலகத்தையே வெல்லும் அஸ்திரமாகவும் அது மாறும். விளக்குக் கம்பத்திற்கு குறி வைக்கும் அம்பு விளக்குக் கம்பத்தைத்தான் தொடப் போராடும். ஆனால் நட்சத்திரங்களுக்குக் குறி வைத்தால் அந்த அம்பு விளக்குக் கம்பத்தை பல மடங்கு தாண்டிச் செல்லும். குறிகளே தூரத்தையும் மக்கள் சக்தியின் அளவையும் தீர்மானிக்கும்.

இதுவரை அப்பாவிகளாக மடிந்த மக்களின் மரணமெல்லாம் நமக்கு கண்ணீரல்லஇ பாடங்கள். விளக்குக் கம்பம் போன்ற சிங்கள தேசமும்இ தென்னாசியாவும் நமது இலக்கல்ல. முழு உலகத்தின் கவனத்தையும் நோக்கி நமது இலக்குகள் இருந்தால் இந்த உழுத்துப் போன மின்விளக்குக் கம்பங்களை நாம் தாண்டி விடலாம்.

உன்னை ஒரு தடவை ஏமாற்றினால் அது ஏமாற்றியவனுக்கு அவமானம் இரு தடவைகள் ஏமாற்றினால் அது உனக்கு அவமானம் என்பது பழமொழி. ஈழத் தமிழினம் இரண்டாவது தடவையும் அப்பாவித்தனமாக ஏமாற முடியாது. கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.

அலைகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.