Jump to content

- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் VIII - எங்களால் முடிந்தது


Recommended Posts

தூயா

நல்லாத்தான் புலம்பியிருக்கின்றீர்கள். தொடர்ந்து புலம்புங்கள். :wink: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 244
  • Created
  • Last Reply

உங்கள் ஆதரவுடன் இதோ "புலத்தில் இருந்து ஓர் புலம்பல்" தொடர்கிறது...

pongal.jpg

தை பிறந்தால் வழி (லி) பிறக்கும்

14-01-06 அதிகாலை காலை 6 மணி. பகுதி நேர வேலையால் 3மணிக்கு வந்து தூங்கிய ராஜன் கண்களை திறந்து "குட் மோர்னிங் ராதி".

"குட் மோர்னிங் ராதி"

மனைவியை தேடிய ராஜனின் காதுகளில் "சுப்ரபாதம்" கேட்கிறது.

"வேறு என்ன ஏதாவது நாடகத்தில போகுது போல...ம்ம்ம்ம் என்ட வீட்டில எங்க இதெல்லாம்..ஆகா என்னடா இது அதிசயமா கிடக்குது என்ட வீட்டில தான் போல" என நினைத்தவன் வெளியே மண்டபத்திற்கு விரைகிறான்.

"குட் மோர்னிங்" என காலை வணக்கம் கூறியவாறு மனைவி ராதிகா கையில் சாம்பிராணி தட்டுடன் கடக்கவும் ராஜனுக்கு தலைசுற்றி விழாத குறை தான்.

"அம்மா அம்மா..." என தாயை அழைத்தவாறு தாயின் அறைக்கதவை தட்டினான்.

பதில் இல்லாது போகவே மறுபடியும் தாயை சற்று உரக்க அழைத்தான்.

"என்னங்க எதுக்கு இப்ப நல்ல நாள் அதுவுமா கத்துறிங்கள். அத்தை சமையல்கட்டில தான் இருக்கா.அங்க போய் கதைக்கிறத கதையுங்கோ" என கணவனை முறைத்தவாறு தன் சாம்பிராணி நடயை தொடர்ந்தால்.

"என்னடி இது, சாமி கும்பிடுறது என்றால் ஒரு பக்தி வேணும், சிரத்தை வேணும். இந்த படங்கள்ள வாற போல கதைச்சு கதைச்சு..ஒரு நாளைக்கு பார் கடவுளுக்கே பொறுக்காமல் எழும்பி ஓட போறார்"

"என்ன உங்கட ஆற்றாமையின் வெளிப்பாடு போல, அப்பவே என்ட அப்பர் சொன்னவர். வெளிநாட்டுகாரனை நம்பாத என்று. அத்தையின்ட மகனை கல்யாணம் பண்ணடி என்று கத்து கத்தென்று கத்தினார். நான் தான் கேட்கல..ம்ம்ம்ம்" என் ராதிகாவிடம் இருந்து ஓர் நீண்ட பெரு மூச்சு.

"அது சரி, உன்ட அத்தை மகன் குடுத்து வச்சவன் தப்பிட்டான்."

சாம்பிராணி தட்டில் கவனமாக இருந்தவள் சரேலென திரும்பி "என்ன சொல்லுறிங்கள்????"

"இல்லை என்னக்கு இருந்த அதிஸ்டம் அவனுக்கு இருக்கவில்லை என்று சொன்னென்" என வெளியே கூறியவன்,மனசுக்குள் "காலம் பொங்கல் அன்றும் பொய் சொல்ல வேண்டிய நிலமை"

இதுக்கு மேல் நின்றால் பொங்கல் "பொங்கலோ பொங்கல்" ஆகிவிடும் என தெரியவெ, தாயை நாடி சமையல் அறைக்குள் சென்றான்.

"தம்பி எழும்பிட்டியே, போய் குளிச்சிட்டு வா அப்பன். பொங்கள் பானையை அடுப்பில வைக்கவேணுமெல்லோ??"

"ஓமனை அதைவிடு, உங்களுக்கும் உங்கட மருமகளுக்கும் என்னனை நடந்தது. மெட்டி ஒலியில இப்படி எல்லம் பொங்கள் நாளில நடந்ததோனை??"

"போடா போய் குளிட, என்ட மருமகளோடயும் என்னொடையும் உனக்கு எப்பவும் ஒரு தணகல் என்ன?"

ஆம மொத்தம் இதில என்னமோ மர்மம் இருக்குட என நினைத்து கொண்டு குளிக்க சென்றான்.

சாம்பிராணி நடை முடித்துவிட்டு சமையல் கட்டுக்குள் வந்த ராதிகா, "அத்தை ஒரு தேத்தணி போடுறன் குடியுங்கோ.உங்களுக்கு இப்படி சாப்பிடாம விரதம் இருக்கிறது உடம்புக்கு நல்லதில்லை"

"பிள்ளை நானும் கேட்க வேணும் என்று இருந்தனான், ஒருக்க சிரமம் பாராமை ஒரு தேத்தணிய போடு பிள்ளை. அதுக்குள்ள நான் இந்த கொழுக்கட்டையை பிடிச்சு வைக்கிறன்"

"சரி மாமி, ஏன் மாமி இந்த மெட்டி ஒலி பார்த்தம் தானே, அதில இந்த லீலாவின்ட புருசனுக்கு வாறானே ஒரு கிராகதன், அவனை எல்லம் எப்படி மாமி அந்த பெட்டை சகிச்சுக்குது??"

"இதை கேட்டாயென்றா உண்மை பிள்ளை, இப்படி தான் என்ட மனுசனின்ட சகோதரியின்ட புருஸன். மகா பாவியாம். உன்ட மாமனார் அரிவாளோட எல்லோ போய் மிரட்டி போட்டு வாறவறாம்."

"இங்க அத்தை, மாமக்கு அப்படியும் தைரியம் இருந்ததோ??? ஊரில மாமாவை பற்றி வேற மாதி எல்லோ கதை. மனிக்கு பயந்த மனுசன் என்று"

"என்ன எவன் சொன்னது? ஆம்பிளை என்றால் மனிசிக்கு பயந்து, ஊருக்கு வீரனா தான் இருக்க வேணும். இப்ப என்ட பிள்ளை இல்லையா?"

வாசலிக்கு பிளாஸ்டிக் தோரணம் கட்ட நூல் எடுக்க வந்த ராஜன், "கதையை என்டா கைலாசம் தானெ உங்க ரெண்டு பேருக்கும்..இஞ்ச ராதி என்ன செய்யிறீர் அடுப்பில?"

"பின்ன என்ன நீங்கள் பெரிய வளவோட வீடா வாங்கி தந்திருக்கியள்?? கோலத்தை எங்க போடுறது நான்? அது தான் காஸ் அடுப்பை சுத்தி போடுறன்"

"சரி சரி பொங்கல் நாள் அதுவுமா ஆரம்பிச்சாச்சா?"

வாசலில் மாவிலை தோரணம் கட்டிகொண்டு இருக்கும் போது மேல்வீட்டு நடேசன் வருகிறார்.

"பொங்கல் வாழ்த்துக்கள் ராஜன்"

"நன்றி அங்கிள், வாழ்த்துக்கள். என்ன பொங்கல் எப்படி?"

"போகுதடா தம்பி, என்ட மனிசி இன்னும் நித்டிரை விட்டு எழும்பினா தானே. அது தான் உன்னோட சும்ம கதைச்சு கொண்டு இருப்பம் என்டு"

மனசுக்குள் "வீட்டில இருக்கிற தொல்லை போதாது என்று, மேல் வீட்டு, கீழ் வீட்டு தொல்லை வேறு"

"ஓம் அதுக்கென்ன அங்கிள், வாங்கோ வாங்கோ"

ராஜனின் பின்னால் வீட்டுக்குள் நுழந்த நடேசன், "பிள்ளை ராதிகா..இருக்கியோடி அம்மா?"

நடேசனின் குரலை கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த ராதி "யாரு நடேஸ் அங்கிளா? வாங்கோ வாங்கோ"

"நீ தான்டி பிள்ளை என்ட பேரை சரியா கூப்பிடுறாய். இந்த நாட்டில வந்துஇ போட்டு பட்டிக்காட்டு தனமா முழு பெயரையும் சொல்லியா கூப்பிட முடியும்?"

ராஜன் (மனசுக்குள்) : ஆமா இந்த கிழட்டுக்கு இப்ப இது தான் குறை. நடேஸாம் நடேஸ். ஏன் "நட்" என்று பெயரை மாத்த வேண்டியது தானே?

"என்ன ராஜன் பலமான யோசனை போல??"

"இல்லை அங்கிள் அப்படி ஒன்றும் இல்லை. கப்பல் ஒன்று கவிழ போது போல..நீங்கள் கதைச்சு கொண்டு இருங்கோ, நான் ஒரு டெலிபோன் செய்து போட்டு வாறன்"

ராஜன் அறைக்குள் சென்று மறைய,

"பிள்ளை நான் கோவிக்கிறன் என்று குறை நினைக்க கூடாது. தம்பி ராஜன் ஒரு நல்ல வேலைக்கு போகலாம் தானே? ஒரு வீட்டை கீட்டை வாங்கி, பிள்ளையளை பெத்து இருக்க வேண்டிய நேரத்தில என்ன பிள்ளை இது. உன்னை பார்க்கவெ எனக்கு கவலையா கிடக்குது.."

"இங்க என்ன மதுரை ஆட்சியா நடக்குது. எனக்கு மட்டும் என்ட புருஸன் நல்ல வேலை செய்ய வேணும் என்று ஆசை இல்லையா?பாருங்கோ அங்கிள் ஒரு கோலத்தை போட்டு பொங்க கூட மனிசருக்கு வழி இல்லை.."

"கவலை படாத பிள்ளை, நான் தம்பிக்கு ஒரு நல்ல வேலை வாங்கி தாறன். என்ட மூத்தவனை தெரியும் தானே வங்கியில நல்ல உத்தியோகம். அவனை கேட்டு பார்க்கிறன். நான் சொன்னா கேட்பான்."

"சரி அங்கிள்"

"பிள்ளை நான் வெளிக்கிட போறன், குறை நினைக்காம இந்த இலங்கைக்கு கதைக்கிற டெலிபோன் காட் இருந்தா தாடியம்மா. வயசான காலத்தில அடிக்கடி வெளிய போக முடியாம கிடக்குது"

"இருங்கோ அங்கிள் தாறன்.."

நடேசன் வந்த வேலை முடிந்து திரும்ப, அறைக்குள் இருந்து வெளியே வந்த ராஜன்,

"இந்த மனிசனுக்கு நடேசன் என்று பெயர் வைக்காமல் நாரதர் என்று வைத்திருக்கலாம்"

"அப்ப சும்மா நடேஸ் அங்கிளை குறை சொல்லாதிங்கோ"

"ஓம் ஓம் அவருக்கு பெரிய ரசிகர் மன்றமே ஆரம்பித்துவிடுவாய் போல. மகனிட்ட சொல்ல போறாறோமோ?? கதைய பாரன். மகன் அடிச்சு வெளிய துறத்தினது மறந்து போச்சாமோ??..."

"உங்களுக்கு எப்பவும் யாரிலயாவது குறை கண்டி பிடிக்கிறதே தொழிலா போச்சு.." என கூறி மண்டபத்தைவிட்டு நகர..

"தை பிறந்த வழி பிறக்குமா?? இல்லை "வலி" பிறக்குமா?? என்ட நல்லூர் கந்தா????"

காதை அலறுவது போல சத்தம் போட, "கற்பூரத்தை அதிகம் காட்டதிங்கோ என்று எத்தனை தடவை சொல்லுறது??? வீடு கரி பிடிச்சா அதுக்கு வேற காசு அறுக்கணும். ஒரு சொல் சொல்லகோடாதா?? இது வேற.."

கையில் கிடைத்த பத்திரிகையை எடுத்து கொண்டு கதிரை மேல் ஏறி Fire Alarmக்கு விசிறியபடி "கடைசியில என்ன இப்படி நிப்பாட்டி போட்டாயே கடவுளே.. :oops: :? "

புலம்பல் தொடரும்....

Link to comment
Share on other sites

ஆஹா உங்கள் பொங்கல் புலம்பல் நல்லா இருக்கு தொடர்ந்து புலம்புங்கோ. :P

Link to comment
Share on other sites

தூயா உங்கள் புலத்திலிருந்து புலம்பல் நல்லாய் இருக்கு. உண்மை நிகழ்வுகளுக்கு கற்பனை பாத்திரம் கொடுத்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

ஆஹா உங்கள் பொங்கல் புலம்பல் நல்லா இருக்கு தொடர்ந்து புலம்புங்கோ. :P

மிக நன்றி சகோதரி.

உங்கள் ஊக்கத்தால் தான் நான் எழுதுதவே ஆசைபட்டேன்...:lol:

Link to comment
Share on other sites

தூயா உங்கள் புலத்திலிருந்து புலம்பல் நல்லாய் இருக்கு. உண்மை நிகழ்வுகளுக்கு கற்பனை பாத்திரம் கொடுத்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி சகோதரி.

தவறுகளையும் சுட்டி காட்டினால், அடுத்த புலம்பல் மேலும் நன்றாக எழுத உதவியாக இருக்கும்..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கையில் கிடைத்த பத்திரிகையை எடுத்து கொண்டு கதிரை மேல் ஏறி Fire Alarmக்கு விசிறியபடி "கடைசியில என்ன இப்படி நிப்பாட்டி போட்டாயே கடவுளே.. :oops: :?

இந்த Fire Alarm சென்சர் அவசியமான ஒன்று என்றாலும் சிலநேரங்களில் உபத்திரவத்தையும் தரும். கொஞ்சம் சமையல் புகைக்கும் அலற ஆரம்பித்துவிடும். சமர் நேரங்களில் BBQ போடும்போது திறந்திருக்கும் ஜன்னல் வழியே புகை வந்து அலார்ம் அடித்திருக்கின்றது. முன்பு விடுதியில் தங்கியிருக்கும் போது சமையல் நேரத்தில் இதை துணி வைத்து மூடி விடுவோம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூய்ஸ் புலம்பல் நன்றாக இருந்தது. எங்க பெண்கள இப்படி சீரியலில அலையவிட்டிட்டியள். ம் ம். நடேஸ் மாதிரி ஒரு பிட்டைப்போட்டிட்டு நமக்கு தேவையானதை மற்றவையிட்ட இலகுவா வாங்கலாம் என்றியளா.. பாப்பம்.. :wink: :P

Link to comment
Share on other sites

தூயா பபா புலம்பல் நல்லாயிருக்கு தொடருங்க

ஆனா எனது அனுபவத்தில எல்லா புலத்திலுள்ள பெண்களும் இப்படி தொடர் நாடகம் பார்ப்பதில்லையே பெரும்பாலும் 45க்க மேற்பட்ட வயதினரும் வேலைக்க போகாமல் வீட்டில இருப்பவர்களும் தானே நாடகம் பார்ப்பினம் (ஒரு வேளை எனக்கு நாடகம் பார்ப்பவர்களோடு சரியான பரிட்சயம் இல்லை போல)

புல புலம்பலின் தொடர்ச்சி விரைவில வருமா புபா

Link to comment
Share on other sites

புலத்தில் இருந்து புலம்பலில் வரும் பெண்கள் வீட்டில் இருப்பவர்கள் தானே நித்தி :)

பாராட்டுகளுக்கும், பதில்களுக்கும் மிக்க நன்றி சகோதரங்களே..:(

அக்கி - இப்ப ஆரம்பம் தானே ;) போக போக பாருங்கள்

Link to comment
Share on other sites

மீண்டும் புலத்தில் இருந்து ஓர் புலம்பல்...

Spice கடை

i-hate-grocery-shopping.gif

புலத்தில் இருக்கும் எங்கள் வாழ்க்கயில் தமிழ் கடைகள் பெரும் உதவி புரின்றன. ஊரில் உள்ள பொருட்களை எல்லாம் பெற்றுகொள்ள முடிகிறது.

இப்ப இங்க அவுஸ்திரேலியாவில இருக்கிற தமிழ் கடைகளை எங்கட சனம் "ஸ்பைர்ஸ் (spice) கடை" என்று தான் சொல்லுவினம் என்ன..என்னமோ ஸ்பைர்ஸ் கேள்ஸ் மாதிரி..சரி கதைக்கி வருவமன்..

ராஜன் வீட்டுக்கு செல்வோமா?

மாலை 6 மணி, தொலைக்காட்சியில் அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் கிரிக்கட் விளையாடி கொண்டு இருக்கிறார்கள். ராஜன் தொலைக்காச்சியின் முன்னால்..

வெளியால போக தயாராகி வந்த ராதிகா, "என்னங்க?என்ன்ன்னங்க..."

"ராதி தள்ளி நில்லும் பார்ப்பம். மட்ச் பார்க்கிறன் தெரியவில்லையா??"

"அதை சொல்லுங்கோ, சரியா மட்ச் பார்த்திருந்தா உங்களிட்ட மாட்டி இருப்பனா?"

"பழைய கதை எல்லாம் இப்ப எதுக்கு, நிம்மதியா மனிசனை ஒரு மட்ச் பார்க்கவிடமாட்டியளா?"

"மாமி..மாமி இங்க ஒருக்கா வாங்கோ?"

"இப்ப எதுக்கு உன்ட கொத்தையை கூப்புடுறீர்?"

அதற்குல் ராதிகாவின் குரல் கேட்டு வீட்டின் மண்டபத்திற்குள் ரஜனின் தாயார் வர,

"மாமி இவர என்ன என்று கேளுங்கோ, எங்கள வெளிக்கிட சொல்லி போட்டு டீவீக்கு முன்னால குந்தி கொண்டு இருக்கிறார்"

"தம்பி அப்பு, ராசா இந்த ஸ்பைர்ஸ் கடைக்கு போக வேணும் அப்பன், விடிய காலையில இருந்து கேட்கிறமல்லோ.." என கூறி பக்கத்தில் வந்து அமர,

"சரி சரி விட மாட்டியளே ஒரு ரெணுடு நிமிசத்தில வாறன், காரில போய் இருங்கோ" என கூறி கை கால் கழுவ செல்ல, ராதிகாவும் புவனேஸ்வரியும் கீழ் தளத்தில் இருக்கும் காரை நாடி செல்கின்றனர்.

"என்ன மாமியும் மருமகளும் சீட் பெள்ற்றை போடுறமாதிரி ஏதாவது யோசனை இருக்கா இல்லையா?" என கேட்டவாறு காருக்குள் ராஜன் ஏற.

"என்டா தம்பி நாங்கள் அந்த காலத்தில பார்க்காத காரா? அங்க எல்லாம் சீற்று பெல்ற்றே போடனாங்கள்??"

"எனை என்ட லைஸன்ஸ நீங்களே பிடுங்கி பொலிஸிற்ற குடுப்பியள் போல, ரெண்டு பேரும் பெல்ற்றை போடுங்கோ"என கூறி காரை ஓட தொடங்கினான்.

"ராதி என்ன என்ன வேண்டுறது என்று பட்டியல் போட்டாச்சு தானே, பிறகு கடையில நின்று கொண்டு மாமியாரும் மருமகளும் லிஸ்ட்போடாதிங்கோ , இப்பவே சொல்லிபோட்டன்"

"அதெல்லாம் போட்டாச்சு...என்னங என்னங்க பார்த்து வெள்ளை கோட்டை தாண்டி கார் போகுது"

"தொடங்கியாச்சா? இது தான் அம்மாவோட உம்மளை பின்னால காரில இருக்க சொல்லுறனான். பக்கத்தில இருந்து கொண்டு புதுசா வீதி முறை எல்லாம் கண்டு பிடிக்கிறீர்"

கணவவின் பேச்சுக்கு முகத்தை சுளித்திவிட்டு, காரின் பின் இருக்கையில் இருந்த மாமியாருடம் என்ன பொருட்கள் வாங்குவது என பேச்சில் இறங்கினாள்.

10 நிமிடங்களின் பின்னர் எவரெஸ்ட் ஸ்பைர்ஸ் கடையில் ராஜன் குடும்பம்...

"வணக்கம் சேகர் அண்ணை, எப்பிடி சுகம்?"

"வணக்கம் ராஜன், வாங்கோ வாங்கோ,என்ன கன நாளா ஆட்களை காணம்?"

இடையில் குறுக்கிட்ட ராதிகா "அது சேகர் அண்ணை இவருக்கு வேலை போய்வரவே நேரம் சரியா இருக்கு என்ன, ஏதோ இப்பதான் கன நாளுக்கு பின்னால நேரம் கிடைச்சு இருக்கு"

சேகர் மனதிற்குள் "இது தான் எங்கட பொம்பிளையளின்ட மனசு, புருசன பூரிக்கட்டையால வீட்டில அடிசாலும் , வெளியில ஒரு சொட்டு தன்னும் விட்டுகுடுக்க மாட்டாங்கள்"

"சேகர் அண்ணை ,ஒரு பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு போக வேணும், என்னத்தை குடுக்கிறது என்று தெரியலை, கடையில ஏதாவது பரிசுபொருட்கள் இருக்கே?"

"இடது பக்கத்தில இருக்கும் பாருங்கோவன் ராதிகா, ராஜன் யாருடைய அரங்கேற்றம்?"

"இவை பாலா அண்ணையிட மகளின்ட தான்?"

"என்ன? அந்த பிள்ளை நான் இங்கு வந்த பிறகு தானே பிறந்தது..ஒரு 10 வயசு இருக்குமா?

"10 இல்லாட்டி 11 தான் இருக்கும்..சின்ன பிள்ளை தான்"

"எங்கட சனத்தில சிலதுக்கு இது ஒரு வேலை என்ன? பிள்ளையளையும் கஸ்டபடுத்தி, காசையும் சிலவு செய்து....அதுக்குள்ள என்னத்தை அரங்கேற்றம்"

"இந்த சன்.டீவியில பாட்டு போட்டியல சொல்லுவினமே "நான் 2 வயசில இருந்து பாட்டு கத்துகிறேன்" "

"அது என்டா சரிதான், எங்கட சனத்தில சிலதுக்கு இது ஒரு மான பிரச்சனை என்ன. தாங்கள் நல்ல வசதி என்று காட்ட இதுவும் ஒரு வழி.."

"சரி தம்பி சேகர் செல்வி புதுசா வந்ததே" ராஜனின் தாய் தன்னுடைய வேலையில கவனமாக..

"வந்தது வெளியில போட்டுது என்ன, அடுத்த முறை எடுங்கோவன்"

"என்ன தம்பி சரியா மேசைக்கு கீழ பாருமன், வேண்டியவைக்கு குடுக்க எடுத்து வச்சிருப்பியள்" :)

கடைக்காரன் முகத்தில் அசடு வழிய "ஈஈஈஈஈஈஈ" ;)

"இங்ச சேகர் சொல்ல வேணும் என்று நினைச்சனான் இந்த கஸற்றுகளை ஏன்டா பழைய கஸட்டில அடிக்கிறியள்? கிளியர் இல்லை?"

"அம்மா உங்களை ராதி கூப்பிடுற போல இருக்கு" என ராஜன் தாயை எங்கிருந்து அகற்றமுயல..

"சரி காரில இருக்கிறம், காசை குடுத்து போட்டு வா அப்பு, அப்ப தமி சேகர் பிறகு பார்ப்பம் என்ன"

"ஓம் அம்மா பிறகு பார்ப்பம்.."

பணத்தை குடுத்து பொருற்களுடன் காரில் ஏறிய ராஜன் தாயை பார்த்து "எனை அம்மா எதுக்கு கடையில சேகர் அண்ணாவோட அப்பிடி கதைக்கிறியள்?"

"பின்ன என்னடா பூனைக்கு யாராவது மணி கட்ட வேணும் தானே?"

காரை கிளப்பியவாறு "என்ன வீட்டில இருக்கிற ரெண்டு பூனைக்கு யார் மணிகட்டுறது.?" என சத்தம் போடாமல் கூற..

ராதிகாவும், புவனேஸ்வரியும் ஒன்றாக "என்ன?"

"இல்லை இந்த காரை முன்னுக்குவிட்டவன் சரியா விடலை என்ன, காரை எடுக்க சிரமமாஇருக்கு.."என்றவாறு ராஜன் தன் காரை வீதியில் நகரவைத்தான்...

புலம்பலுக்கு ஒரு சின்ன இடைவேளை....

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரி....தொலைக்கு போனனியளே..... கன காலம் காணலை ... அதிருக்கிட்டம்...என்ன சாத்திரி சீரியல் பார்த்த மாதிரி அழுகிறியள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூய்ஸ் நல்லா எழுதிறியள் தொடருங்கோ.. செல்வி என்ற எந்தச்செல்வி என்டு யோசிச்சன்.. ராதிகாவைச்சொன்னியள் என்று பிறகு தான் புரிஞ்சிது. :P

Link to comment
Share on other sites

தூயா பாப்ஸ் வீட்டில நடக்கிறதை அப்படியே நல்லா எழுதுறீங்கள்..! :wink: :)

Link to comment
Share on other sites

:cry: :cry: :cry: :cry: :cry:

சாஸ்த் எதுக்கு அழுகிறியள்? என்னுடைய எழுத்து பிழைகளை பார்த்தா? :oops: அல்லது வீட்டில பிரச்சனையா? :roll:

Link to comment
Share on other sites

என்ன அக்கி "செல்வி" தெரியாமல் இருக்கிறீர்கள்? ;)

குருவி பபா வீட்டில நடக்கிறதோ, பக்கத்துவீட்டில நடக்கிறதோ ;) என்னவோ நான் எழுதுவடிக்ல் உண்மை இருக்கு தானே ;) பதிவுக்கு மிக்க நன்றி.

நன்றி ரசிகை.

எழுத்து பிழைகளை திருத்தாமல் நேற்று போய்விட்டேன். அதை பெருசுபடுத்தாமல் புலம்பலை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

தூயா பபா நல்லாயிருக்கு

என்ன ஒன்று பாவம் சாத்திரி அங்கிள் கன நாளைக்க பிறகு களத்துக்கு வந்திருக்கார் அவரை அழவைச்சிட்டீங்களே

Link to comment
Share on other sites

அது தான் எனக்கும் கவலையா இருக்கு :lol: சாஸ்த் அழுகிறாரே :(

Link to comment
Share on other sites

ஆகா புலம்பல் நல்லா இருக்கு தூயா அந்த மாதிரி எழுதுறீங்க வாழ்த்துக்கள்....!

புருசன பூரிக்கட்டையால வீட்டில அடிசாலும் ,வெளியில ஒரு சொட்டு தன்னும் விட்டுகுடுக்க மாட்டாங்கள்"

அடடா... பூரிக் கட்டையால வேற அடிக்குறாங்களா ? ... :wink: :lol:

சரி இது பழமொழியா இல்லாட்டி உண்மையா இப்படி எல்லாம் நடக்குதா....? :roll:

Link to comment
Share on other sites

ஆஆ.. றோலுக்கு மா தட்டுவமே அந்தக் கட்டையா..அதால அடிச்சா ஆள் மிஞ்சும் என்றீங்க..! :wink: :lol:

Link to comment
Share on other sites

அதே தான் அண்ணா அடிச்சா ஆள் மிஞ்சும் ஆனா அடிவாங்கிறவருக்கு நல்ல கொழுக்கட்டை கிடைக்கும்தெரியாதா :roll: :wink: (எல்லாம் வீட்டில 3 பேருக்கு சாத்தின அனுபவம் தான் நீங்க எதுக்கும் அண்ணி கிச்சனில இருக்கம் போது வம்பு பண்ணாம இருங்க ) :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.