Jump to content

யாழ். கள்ளுக்குடியர்களின் வினோதமான கோரிக்கை! காணொளி இணைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தவறணைகளையோ.. பார்களையோ காலையில் திறப்பதை நிறுத்த வேண்டும். மாலையில் 5 தொடக்கம் 10 மணி வரை திறக்க மட்டும் அனுமதி அளிப்பதோடு.. தவறணைகள்.. பார்களை சரியான சுகாதார முறைப்படி அமைப்பதோடு வாடிக்கையாளர்களுக்கு கே எவ் சி.. மக்டொனால்ட் போன்ற தரத்துக்கு சுகாதாரமாகவும்.. வசதியாகவும் வந்து மது அருந்திச் செல்ல வசதிகளை செய்து தந்து.. அனுமதிப்பதோடு.. ஒருவர் அவரது உடல்நலத்துக்கு ஏற்ற வகைக்கு மட்டுமே மது அருந்த அனுமதிக்கப்பட வேண்டும். அளவுக்கு மிஞ்சி மது அருந்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேற்கு நாடுகளில் இருந்து காசு.. ஆடம்பரம்.. எல்லாம் கொண்டு போற எம்மவர்கள்.. அங்குள்ள உடல்நலம் சுகாதாரம்.. சுத்தம் சார்ந்த பழக்க வழக்கங்களை மட்டும் அறிமுகம் செய்ய பிந்தங்கி நிற்கின்றனர்.

எம்மிடம் வளமான இயற்கை உண்டு. அதனைப் பயன்படுத்தி உல்லாசப் பயணிகளையும் கவரும் வகையில்.. மதுபான சாலைகளை மீள ஒழுங்கமைத்து.. சரியான சுகாதாரத்தோடு சுத்தப் பராமரிப்போடு வைத்திருக்க சட்டங்கள் இயற்ற வேண்டும். தவறுவோர் மீது மது விற்பனை அனுமதியை பறிமுதல் செய்ய வேண்டும். பெரும் தண்டமும் அறவிடப்பட வேண்டும்.

இதன் மூலமே குடியை.. கெளரவமாகவும்.. உடல்நலத்திற்கு.. குடும்ப நலத்திற்கு.. சமூக நலத்திற்கு பாதிப்பற்ற வகையில் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்திற்குப் பிறகு, பழைய யாழ்ப்பாண நினைவுகளைக் கண் முன் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் புலவர்!

இருந்தாலும், அந்தப் பனங்குத்தியும், சிரட்டையும் பிளாவும் இல்லாதது ஒரு மாதிரியாத் தான் கிடக்குது!

எல்லாத்துக்கும் ஆசைப் படக் கூடாது தானே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ எங்கள் யாழ் கள குடிமக்கள் என்று நினைத்தன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளு என்பது உழைப்பாளிகளின் சோர்வைப் போக்கும் அற்புத மருந்து.11மணியில் இருந்து திறப்பதே நல்லது.சாராய பார்களை மாலை 5 மணிக்குப்பின் திறக்கச்சொல்லலாம்.பிளாவும் சிரட்டையும் இல்லாதது நெரடாக இருக்கிறது.நெடுக்கரின் சுத்தம் பேணும் கருத்தை ஆதரிக்கிறேன். சாகிவனின் னருத்துமாதிரி கருத்துக்கள் வரும் என்றும் எதிர்பார்த்தேன்.

சின்னக்குட்டியர் குமாரசாமி ஆகியோரின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

கள்ளு என்பது உழைப்பாளிகளின் சோர்வைப் போக்கும் அற்புத மருந்து.11மணியில் இருந்து திறப்பதே நல்லது.சாராய பார்களை மாலை 5 மணிக்குப்பின் திறக்கச்சொல்லலாம்.பிளாவும் சிரட்டையும் இல்லாதது நெரடாக இருக்கிறது.நெடுக்கரின் சுத்தம் பேணும் கருத்தை ஆதரிக்கிறேன். சாகிவனின் னருத்துமாதிரி கருத்துக்கள் வரும் என்றும் எதிர்பார்த்தேன்.

சின்னக்குட்டியர் குமாரசாமி ஆகியோரின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்!!!!!!!!!!!!

யாழ் குடி மன்னர்களின் கருத்துக்கு என்னை கருத்து கூற அழைத்தமைக்கு புலவர் பெருமானுக்கு எனது நன்றிகள் ....21 வயதில் புலம் பெயர்வரையும் நான் மதுவை தொடவில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ...குடியோடு கும்மாளம் போட வைக்கும் பல்கலைகழக சூழலில கூட குடிக்கவில்லை என்றது எனக்கே ஆச்சரியம் ..புலம் பெயர்ந்த பிறகு புலம் பெயர் சூழல் தந்த மன அழுத்தங்கள் தனிமை வேறு பல காரணிகளால் அளவுக்கு மீறி மதுவை நுகர்ந்தேன் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே வேளை ,குடி மன்னனாகிய பின் கள்ளின் மகிமையை பலர் சொல்லக்கேட்டு ,,கள்ளடிக்க வேண்டும் என்ற கனவுகளோடு பல காலம் இருந்தேன். அதை நான் இலங்கை சென்ற பொழுது அனுபவித்து பார்க்க முயற்சி செய்தேன் ...நன்றாக இருந்தது ,,,ஆனால் வெளிநாட்டு பன்றி வாழ்க்கைக்கு பழக்க பட்டு உள்ளூரில் வாழ விருப்பம் இருக்க முடியாது இருப்பது போல் ..கள்ளும் அவ்வளவு ஒத்து கொள்ளவில்லை எனக்கு ......பெரிசுகள் சொல்லக்கேள்வி கள்ளு குடித்தால் மருத்துவன் தேவை இல்லை என்று ..எதுவும் அளவோடு இருந்தால் ..நல்லது..அதில் ஒரு பெரியவர் கூறுகிறார் உடன் கள்ளு நல்லது ..செல்ல குடித்தால் அதன் பலாபலனை அனுபவிக்க முடியாது என்று இந்த விசயத்தையும் அந்த காலங்கள் பெரிசுகள் சொல்ல கேட்டு இருக்கிறேன் ...அதனால் காலையில் திறப்பது அவசியம் என்ற கோரிக்கை நியாயமாக படுகிறது .....யாழ்குடி மன்னர்களின் செவ்வி நன்றாக இருந்தது ..யாழ் கள குடி மன்னர்கள் சார்பில் எனது பாரட்டை தெரிவித்து கொள்ளுகிறேன்... :lol: :

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் யாழ் கள்ளுக் கொட்டிலில் பெண்களும் இருந்தும் குடிக்க கூடியவாறு வச‌திகள் செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

காலையில் 6 மணிக்கும் மதுபானக் கடைகளை திறக்கலாம். தலைவனும் தலைவியும் நன்றாகத் தண்ணியடித்து வாழ்க்கையை அனுபவிக்கலாம். பிள்ளைகளும் இவர்களுடன் சேர்ந்து அனுபவிக்கலாம்.

எனக்கென்னவோ இங்குள்ள இணைப்பின்படி, இந்தக் குடி நல்லதாய் படவில்லை. உழைத்து குடும்பத்தை கவனித்த பின் தனது அலுப்புத் தீர சில மணித்துளிகளில் அனுபவித்து குடிப்பது மாதிரி தெரியவில்லை. அழியப் போவது எதிர்காலக் குருத்துக்கள்.

பிழையிருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.