Jump to content

மெளனப் புரட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமாத கால புதிருக்கு விடை கிடைத்துவிட்டது. அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறது. இது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட, தி.மு.க.வுக்கு கிடைத்த தோல்வி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கருணாநிதி நாட்டுப் பிரச்னைகளைப் பற்றி யோசித்ததைவிட வீட்டுப் பிரச்னைகளைப் பற்றி யோசித்த நேரம்தான் அதிகம்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கியதுமே, தி.மு.க. மீதான இமேஜ் சரியத் தொடங்கியது. இலவசங்களாலும், பணத்தாலும் மக்களின் மனதை மாற்றி விடலாம் என தி.மு.க. நினைத்தது. அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறார்கள் மக்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஈழத் தமிழர் பிரச்னை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய காலம் அது. ஈழ ஆதரவாளர்களும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வேலை செய்தனர். அதையும் தாண்டி தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றியை கரு ணாநிதி தனக்கு சாதகமாக நினைத்திருக்கக் கூடும். ஆனால், மத்தியில் ஆட்சி என்பது வேறு, மாநில ஆட்சி என்பது வேறு என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்து வை த்துள்ளார்கள் என்பதைத்தான் சட்டமன்றத் தேர்தல் வெற்றி உணர்த்துகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்று முடிவானதுமே, தி.மு.க.வின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. அ.தி.மு.க.

வலுவான கூட்டணியை அமைத்திருந்தது அதற்கு ஒரு காரணம்.

ஜெயலலிதாவா, கருணாநிதியா என ஜம்ப் ஆகிக் கொண்டிருந்த ராமதாஸ் கருணாநிதியுடன் இணைய, தி.மு.க.வுக்கு வட மாவட்டங்களில் பலம் கிடைத்தது போல் ஒரு தோற்றம் உருவானது. ஆனால் அது தோற்றம் மட்டுமே என்பதை தேர்தல் பிரசாரத்தின் போது காண முடிந்தது.

‘‘முதல்முறையாக நாங்கள் இணைகிறோம், எங்கள் கனவு நனவாகி விட்டது’’ என்றெல்லாம் ராமதாஸும், திருமாவளவனும் கட்டியணைத்து போஸ் தந்தார்கள். ஆனால், தலைவர்களிடம் இருந்த நெருக்கம் தொண்டர்களிடம் இல் லாமல் போனது.

வட மாவட்டங்களில் வன்னியர்களால் தலித்துகள் தாக்கப்படும் சம்பவங்களும், தலித்துகள் வன்கொடுமைச் சட்டத்தில் பொய்ப்புகார் கொடுக்கிறார்கள் என வன்னியர்களும் புகார் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இரு கட்சித் தொண்டர்களும் இணைந்து தேர்தல் பணியாற்றவே இல்லை.

இளைஞர் காங்கிரஸ் நடைபயணம், காங்கிரஸ் தலைவர்களின் தி.மு.க.விற்கு எதிரான பேச்சு என காங்கிரஸ் தொண்டர்களிடையே தி.மு.க.விற்கு எதிரான மனநிலையே தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்புவரை இருந்தது. திடீரென காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி என அறிவிக்க, தொண்டர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வினரும், தி.மு.க. போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ்காரர்களும் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை பார்த்தார்கள்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் வேறு நிறுத்தப்பட்டனர். நானா, நீயா என போட்டி போட்டு மாறி, மாறி தோற்கடிக்கும் வேலையை காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியினர் சரியாகவே செய்தார்கள். பா.ம.க. - காங்கிரஸ் மோதல், விடுதலைச் சிறுத்தைகள் - காங்கிரஸ் மோதல் என கூட்டணிக்குள் குழப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

ஆனால் இது எதுவும் வெளியில் தெரியாதவாறு, அதன் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் சித்திரிக்கப்பட்டது. அனைவரும் மேடையில் ஒன்றாகப் பேசி, தங்கள் கைவசம் இருக்கும் மீடியாக்கள் மூலம் ஒற்றுமையை பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

அ.தி.மு.க.வில் நிலைமை நேர் எதிராக இருந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட மேடையில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை, ஜெயலலிதா பெயரை விஜயகாந்த் சொல்லவில்லை. ஆனால் அ.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் நோக்கம், தலைவர்களைப் போலவே, தி.மு.க.வை வீழ்த்துவதாக இருந்தது. இந்த நோக்கத்தில் அவர்கள் ஒன்றுபட்டு தேர்தல் வேலை செய்தார்கள்.

இந்த எல்லா அரசியலையும் தாண்டி ஓட்டுப்போட்ட மக்களுக்கு மின்வெட்டுதான் தி.மு.க. அரசின் மீது தீராத கோபத்தை வரவழைத்தது. காலை ஆறுமணிக்கே தொலைந் துபோகும் மின்சாரத்தின் முன் கிரைண்டர், கலர் டி.வி. எல்லாம் எடுபடவில்லை. கடந்த ஆண்டுகளில் இந்த மின்தடையால் ஏராளமான சிறுதொழில்களும், விவசாயமும் கிட்டத்தட்ட அழிந்து போனது என்பதுதான் உண்மை.

அதிரடியாய் உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசியை சமாளிக்க முடியாமல் நடுத்தர, ஏழை மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல், ‘‘மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது, எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் பொருட்களை வாங்குவார்கள் என்பதற்கு தி.நகரே சாட்சி’’ என்றெல்லாம் கருணாநிதி பேசி மக்களை வெறுப்பேற்றினார்.

கடந்த தேர்தல்களில் தங்களுக்கு வெற்றியைத் தந்ததாக தி.மு.க. நம்பிக் கொண்டிருக்கும் திருமங்கலம் ஃபார்முலாவும் இந்தமுறை கவிழ்த்து விட்டது.

தேர்தல் கமிஷனின் எல்லாக் கெடுபிடிகளையும் மீறி, கடைசி நாட்களில் தி.மு.க. பணப்பட்டுவாடா செய்தது.

‘‘ஸ்பெக்ட்ரம் பணத்தில் கொள்ளையடித்ததை உங்களுக்குத் தருவார்கள் வாங்கிக் கொள்ளுங்கள்’’ என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து கொண்டிருக்க, இந்தப் பணம் பெ ரும்பாலும் பொதுமக்களுக்கு போய்ச் சேரவேயில்லை என்பதுதான் உண்மை. கட்சி கொடுத்த பணத்தை கட்சிக்காரர்களே அமுக்கிக் கொண்டனர்.

கடந்த தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்குக் காரணமாக சொல்லப்பட்ட தேர்தல் அறிக்கை நலத்திட்டங்கள் முழுக்க மக்களை போய்ச் சேரவேயில்லை.

கலர் டி.வி., இலவச சிலிண்டர் எல்லாவற்றையும் கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கே தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பூஜ்யங்களை எண்ண முடியாத அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது மக்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஊழல் பணத் தில்தான் கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டது, கனிமொழி, தயாளு மீது வழக்கு, ராஜாத்தி அம்மாள் நீரா ராடியாவுடன் நடத்திய பேச்சு, பேரனுக்கு பதவி கொடுக்க தயாளு அம்மாள் 600 கோடி வாங்கினார் என கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் மக்களை எரிச்சலடையச் செய்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி மகன்களும், பேரன்களும் சினிமா, டி.வி., பத்திரிகை என எல்லாத் தொழில்களிலும் கால் பதிக்க, அவர்கள் அனுமதி இல்லாமல் ஒரு சினிமா கூட வெளிவர முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆட்சி மாறினால் உடனே அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் சினிமா துறையினர் கூட கருணாநிதி கு டும்பத்தின் ஆதிக்கம் குறித்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர்.

இந்தக் குடும்ப ஆதிக்கம் தி.மு.க.வின் அமைச்சர்கள் மட்டத்திலும் பரவ ஆரம்பித்தது. மாவட்ட வாரியாக அமைச்சர்கள் தங்கள் வாரிசுகளைக் களமிறக்க கட்சிக்காக வேலை செய்த தொண்டர்கள் குமுற ஆரம்பித்தார்கள். அமைச்சர்கள் மீது தொடர்ந்து கூறப்பட்ட நில ஆக்கிரமிப்பு, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து கொலைக் குற்றப் புகார்களால் தி.மு.க.வின் இமேஜ் கடுமையாகச் சரிந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து மதிப்பு கற்பனை பண்ண முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது.

கருணாநிதியின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் ஆளாளுக்கு விளையாட ஆரம்பித்தார்கள். கருணாநிதியின் உதவியாளர் தனி ராஜ்ஜியமே நடத்த ஆரம்பித்தார். குடும்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அதிகார மையமாகச் செயல்பட்டது கட்சியினரிடையே கோபத்தையே ஏற்படுத்தியது.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் இரண்டு புதிய விஷயங்களை கவனிக்க வேண்டும். தி.மு.க. அரசுக்கே வாக்களித்த வரலாறுடைய அரசு ஊழியர்கள் இந் தமுறை பெருமளவில் அ.தி.மு.க.விற்கு வாக்களித்திருக்கிறார்கள். தி.மு.க.வின் உண்மையான கட்சித் தொண்டர்கள், ‘‘கட்சி வளர வேண்டுமானால் குடும்ப ஆதிக்கம் ஒழிய வேண்டும். அதற்கு இந்த முறை தி.மு.க. தோற்க வேண்டும். அதிலிருந்தாவது கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார்கள்.

கட்சியில் பல ஆண்டுகளாக வேலை செய்பவர்களை விட, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட, சீனியர் தி.மு.க.வினர் எரிச்சலடைந்தனர்.

தி.மு.க.வின் பலவீனங்கள் அ.தி.மு.க.வுக்கு பலமாகி விட்டது. அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் உழைப்பு இந்தத் தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணம். வெற்றி பெறும் தொகுதிகளாக தேர்வு செய்தது, மக்களுக்கு நெருக்கமாக காட்டிக் கொண்டது, தி.மு.க.வின் பலவீனங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டது என பல காரணங்களை அடுக்கலாம். பெரிய ஊடக பலம் இல்லாததால் இந்த வேலைகள் வெளித்தெரியாமல் போயின.

இதைத்தவிர, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இலவச ஆடு, பசுமை வீடு போன்ற திட்டங்கள் கிராம மக்களை அதிகம் ஈர்த்துள்ளன என்பதும் உ ண்மை. விஜயகாந்துக்கு எதிராக தி.மு.க.வால் களமிறக்கப்பட்ட வடிவேலு, அ.தி.மு.க.வை தாக்கி ஒரு வார்த்தையும் பேசவில்லை.

எம்.ஜி.ஆர். பாடல்கள் வேறு பாடி ஓட் டுக்கேட்க, அதுவும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்ததுதான் பெரும் நகைச்சுவை.

சீமான் போன்ற தமிழ்த்தேசியவாதிகள் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பெரிய அளவில் வேலை செய்ய, அதுவும் அ.தி.மு.க.வுக்கு சாதகமானது.

நாட்டை விட, வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் பலனை கருணாநிதி இப்போது உணர்ந்திருப்பார்.

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் ஜெயலலிதா நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, ‘‘இது அ.தி.மு.க.வின் வெற்றி அல்ல. தி.மு.க.விற்கு எதிரான கோபம் மட்டுமே’’ என்பதைத்தான். மக்களின் மௌனப் புரட்சியே இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்குவதற்கு முன்பாக அறிவாலயத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். முடிவுகள் வரத்தொடங்கிய சிறிது நேரத்திற்கெ ல்லாம், ஒரு போலீஸார் கூட அங்கு இல்லை. கட்சி அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் மட்டும் இ ருந்தனர். பின்னர் ஆயிரம்விளக்கு உசேன் மட்டும் வந்து சேர்ந்தார். சளித் தொல்லை காரணமாக முதல்வர் யாரையும் பார்க்காமல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்தார். அங்கு பாதுகாப்புக்குப் போடப்பட்டிருந்த போலீஸாரும் சிறிது நேரத்தில் காணாமல் போயினர்.

வடிவேலு வீட்டுக்கு காவல்!

1967-ம் ஆண்டு அண்ணாதான் பிரசார பலமாக இருந்தார். அண்ணாவை முன்னிலைப்படுத்தியே தி.மு.க. பிரசாரம் செய்தது. மக்கள் அலைகடலென திரண்டு வந்து அவரது பேச்சை கேட்டார்கள்.

இந்தத் தேர்தலுக்கு அதே தி.மு.க., நடிகர் வடிவேலுவை நம்பியே களத்தில் இறங்கியது. விஜயகாந்தை திட்டுவது, எம்.ஜி.ஆர். பாட்டைப் பாடி தி.மு.க.வுக்கு ஓட்டுக் கேட்பது, தேர்தலுக்குப் பிறகு கருணாநிதியைச் சந்தித்து, தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அறிவிப்பது...என பிஸியாகவே இருந்தார் வடிவேலு.

தேர்தல் முடிவு வேறுவிதமாக அமைந்ததால், வடிவேலுவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டது. வடிவேலு வீட்டருகே அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிருபர்களைச் சந்தித்தார். நடிகர் வடிவேலுவைப் பற்றி கருத்துக் கூறுவதை அவர் தவிர்த்துவிட்டார்.

சட்டசபையில் எதிர்க்க ட்சியாகும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்போம் என்று முடித்துக்கொண்டார்.

- குமுதம் ரிப்போட்டர்

Link to comment
Share on other sites

இந்த மௌன புரட்சியில் சீமானின் பங்கு

Significantly, film director and activist, Mr Seeman who runs a NAAM TAMILAR outfit met the AIADMK chief Miss J Jayalalitha before the polls and offered his support to defeat the DMK-Congress alliance. The DMK government had come down heavily on Mr Seeman and arrested him under NSA, in an apparent bid not to rub up the Congress the wrong way, even as Mr Karunanidhi himself never approved of the LTTE.

A powerful orator, Mr Seeman was drawing huge crowds from the day he addressed his first meeting on the Lankan Tamil plight just as the war began to escalate in Sri Lanka towards the end of 2008. In order not to have him challenge his hold on power, the DMK government had him arrested a few times and then under the NSA. As the election campaign drew to a close, the DMK chief gained an image as a friend of the Sri Lankan president, Mr Mahinda Rajapaksa.

After offering support to the AIADMK, Mr Seeman’s outfit got down to the job of exclusively targeting the Congress constituencies and campaigned widely in those constituencies. Elsewhere, the Lankan Tamil issue and Karunanidhi’s duplicity along with the “heartless” stand of the Congress was taken up by every Opposition party from the AIADMK to the BJP and even the BSP and independents

http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=369625&catid=36

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.