Jump to content

தீட்சைக்கு நாட்குறிக்கும் நாள் நெருங்கி வருகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உட்புகுந்து உயிர் அரிக்கும்

வித்தை கற்க வேண்டும்

sadness.jpg

காக்க காக்க என்று

கல் மண் புழுதியிலும்,

பனி உறையும் பாதையிலும்

வீசு புயல் மழையினிலும்,

வேதனையைச் சொன்னபடி,

குப்பைக் காடுகள்போல்

அந்நியக் கண்கள் சீண்டும்

அவமானம் தின்றபடி,

வேர் கிழித்த வலி

விளம்பி, விம்மி, வெந்துருகி

அறியாத தெருவெல்லாம்

அலைமோதிக் கிடந்தோமே

எவர் வந்து கேட்டார்கள்?

எவர் வந்து பார்த்தார்கள்?

எவர்தான் எதிரியென்று

எமக்குப் புரியவில்லை

யார்தான் துரோகியென்று

யதார்த்தம் விளங்கவில்லை

சிதறுண்டு போனோம்

சிதையுண்டும் போனோம்

விதை அழுகிப் போனதெனும்

இழிநிலை ஆனதைய்யோ...

இனம் முடை நாத்தத்தில்

உட்கார்ந்து கொண்டதையோ...

தாங்க முடியலையே.......

பொல்லாத குறியை

மறுக்கும் பெண்ணுடம்பில்

திணித்ததுபோல்....

எல்லாரும் சேர்ந்து

என் தேசமெனும் பெருந்தாயில்

பொல்லா அவலமெல்லாம்

புகுத்திவிட்டு போயினரே.

இப்போது வேசங்கள் கட்டுகிறார்

வேதனைதான் பொறுக்கலையே...

ஐயோ....

பேனா முனை தொட்டால்

பொல்லாத சிறுக்கியாகி

பித்தை நிலை கொண்டு

பிடாரியாய் போவேனோ?

தேனாக நின்ற

என் தேசத்தின் புதல்வர்களைக்

காணாமல் செய்தவர் யார்?

காரணங்கள் உரைப்பீரோ?

பனி உறைத்த தெருவினிலே

பறை அறைந்து நின்றவரே!

பெயல் மணக்கும் பொழுதுகளில்

பதறி நிறைந்தோரே!

வீசு புயல் மழையினிலே

தாகங்கொண்டு நிலைத்தவரே!

அந்நியச் சீண்டல்களின்

அவமானம் தாங்கி...

அன்புச் சோதரர்காய் அலங்கோலமானவரே!

எங்கு போய் விட்டீர்கள்?

முள்ளிவாய்க்காலில்

வெட்டுண்டு வீழ்ந்தது

எங்கள் அவயங்கள்

எப்படி மறந்தீர்கள்?

அவ்வளவு சீக்கிரம் மறப்பதற்கு

அறணையா நாங்கள்?

அட மூளையுங்கூடவா

முண்டமாய் போனது?

கண்ட கண்ட கோதாரி

பின் கதவால் வந்து

உள்வீட்டில் உட்கார்ந்து

உப்பரிகைக் கிடப்பில்

உல்லாசம் காணுது.

அண்ணரே, தம்பியரே

இன்னுமா அடிபட்டுக் கொள்கிறீர்?

உச்சுக் கொட்டிக் கொண்டு

உட்கார்ந்து பார்க்க

என்னால் முடியாது

அண்ணன்களே!, தம்பிகளே!

கும்பி கொதிக்கிறது.

சூலை மேடேறி

மாகாளி அழைத்து

தீட்சைக்கு நாட்குறிக்கும்

நாள் நெருங்கி வருகிறது

எச்சரித்துக் கொள்கிறேன்

குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

உட்புகுந்து உயிர் அரிக்கும்

வித்தை கற்கவேண்டும்

எத்தனை முறை நோக்கினும்

எதுவும் விளங்கக்கூடாது.

சத்தியத்தின் மூச்சழித்தோர்,

தத்துவ எதிர்வினையை

நித்தியத்தில் அநுபவிக்கும்

நிலை தந்தே தீரவேண்டும்

Link to comment
Share on other sites

சத்தியத்தின் மூச்சழித்தோர்,

தத்துவ எதிர்வினையை

நித்தியத்தில் அநுபவிக்கும்

நிலை தந்தே தீரவேண்டும்

கவிதைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூளை மேடேறி

மாகாளி அழைத்து

தீட்சைக்கு நாட்குறிக்கும்

நாள் நெருங்கி வருகிறது

எச்சரித்துக் கொள்கிறேன்

குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

நல்ல கவிதை சகோதரி.

காலத்தின் தேவையறிந்து எழுதப்பட்ட ஒன்று!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியத்தின் மூச்சழித்தோர்,

தத்துவ எதிர்வினையை

நித்தியத்தில் அநுபவிக்கும்

நிலை தந்தே தீரவேண்டும்

கவிதைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே கனன்று கொண்டிருக்கும் தீ எழுத்தாய் வந்துள்ளது, சகாரா அக்கா!

உட்புகுந்து உயிர் அரிக்கும்

வித்தை கற்கவேண்டும்

இது இயல்பிலேயே வரவேண்டும், கற்பது கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா, புங்கையூரான், புத்தன் மற்றும் கிருபன் உங்கள் பதிவுக்கு நன்றிகள்

கிருபன் நீங்கள் கூறுவதுபோல் இயல்பில் வந்தால்தான் இறுதிவரை நிலைக்கும். அப்படிப் பார்த்தால் தமிழனத்தின் இயல்பு எப்போதுமே சலுகைக்காக அடிமையாவதாகத்தான் விகிதாசாரத்தில் அதிகமாக இருக்கிறது. :(

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையாய் கனல்கின்றன உங்கள் வரிகள் சகாரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொலைத்துவிட்ட அகராதியில் தேடுகிறேன் இதற்கான வார்த்தைகளை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வேர் கிழித்த வலி[/size]

[size=4]விளம்பி, விம்மி, வெந்துருகி[/size]

[size=4]அறியாத தெருவெல்லாம் [/size]

[size=4]அலைமோதிக் கிடந்தோமே[/size]

வேர் கிழித்த வலிகள்

வெந்த எம் மனங்களிலும்....

கவிதை அழகு.

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி அக்கா, தொடர்ந்தும் பல கவிதைகள் எழுதுங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்க முடியலையே என்று தேம்பியழும் உன் குரலை

வேசங்கள் கண்டு வேதனையில் துவழும் உன் மனதை

அனல் வீசும் வார்த்தை கொண்டு எம்

அவலத்தை எடுத்து வந்த இக்

கவிதைக்கு கருத்தெழுத என்

தமிழுக்கு வலுவுமில்லை

என் செய்வோம் இதுதான் எம்

தலைவிதியோ.........

காலத்துக்கேற்ற கவிதை தந்த சகாராவிற்கு

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாள் நெருங்கி வந்துவிட்டதா அல்லது தொடுவானம் அருகில் இருக்கின்றது போன்று இப்போதும் தெரிகின்றதா?

உட்புகுந்து உயிர் அரிக்கும்

வித்தை கற்கவேண்டும்

இதெல்லாம் சுட்டுப்போட்டாலும் நேர்மையாக இருந்து பழகியவர்களுக்கு வராது.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நாள் நெருங்கி வந்துவிட்டதா அல்லது தொடுவானம் அருகில் இருக்கின்றது போன்று இப்போதும் தெரிகின்றதா?

 

எதுவுமே தெரியவில்லை கிருபன் இந்தக் கவிதை எழுதிய காலத்தில் இருந்த சாத்தியங்கள்கூட அற்றுப் போய்விட்டதென்றே தோன்றுகிறது.

இதெல்லாம் சுட்டுப்போட்டாலும் நேர்மையாக இருந்து பழகியவர்களுக்கு வராது.

 

நாங்கள் நிமிர்ந்தே நின்று பேசிப்பேசி முகத்தில் அறைவாங்குபவர்கள். தந்திரம் என்பது எங்களுக்கு இழுக்கு. தேவைப்படும் இடங்களில் நிமிர்ந்து பேசாமல் ஒளிந்து கொள்வோம். தேவையற்ற வேளைகளில் வாய்ச்சவடால்களால் வீர வசனங்களில் விளம்பரம் செய்வோம். சாம, பேத, தான, தண்ட வழிகளை தெளிவாக உபயோகிக்கத் தெரியாது என்பதைவிட உபயோகிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நிமிர்ந்தே நின்று பேசிப்பேசி முகத்தில் அறைவாங்குபவர்கள். தந்திரம் என்பது எங்களுக்கு இழுக்கு. தேவைப்படும் இடங்களில் நிமிர்ந்து பேசாமல் ஒளிந்து கொள்வோம். தேவையற்ற வேளைகளில் வாய்ச்சவடால்களால் வீர வசனங்களில் விளம்பரம் செய்வோம். சாம, பேத, தான, தண்ட வழிகளை தெளிவாக உபயோகிக்கத் தெரியாது என்பதைவிட உபயோகிக்க முடியாது.

 

மீளப்பார்க்கும் தேவையை காலம் அளித்திருக்கிறது கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.4.2011 at 3:25 AM, வல்வை சகாறா said:

 

 

உட்புகுந்து உயிர் அரிக்கும்

வித்தை கற்க வேண்டும்

 

 

 

sadness.jpg

 

காக்க காக்க என்று

கல் மண் புழுதியிலும்,

 

பனி உறையும் பாதையிலும்

வீசு புயல் மழையினிலும்,

வேதனையைச் சொன்னபடி,

 

குப்பைக் காடுகள்போல்

அந்நியக் கண்கள் சீண்டும்

அவமானம் தின்றபடி,

 

வேர் கிழித்த வலி

விளம்பி, விம்மி, வெந்துருகி

அறியாத தெருவெல்லாம்

அலைமோதிக் கிடந்தோமே

 

எவர் வந்து கேட்டார்கள்?

எவர் வந்து பார்த்தார்கள்?

 

எவர்தான் எதிரியென்று

எமக்குப் புரியவில்லை

 

யார்தான் துரோகியென்று

யதார்த்தம் விளங்கவில்லை

 

சிதறுண்டு போனோம்

சிதையுண்டும் போனோம்

 

விதை அழுகிப் போனதெனும்

இழிநிலை ஆனதைய்யோ...

 

இனம் முடை நாத்தத்தில்

உட்கார்ந்து கொண்டதையோ...

 

தாங்க முடியலையே.......

 

பொல்லாத குறியை

மறுக்கும் பெண்ணுடம்பில்

திணித்ததுபோல்....

எல்லாரும் சேர்ந்து

என் தேசமெனும் பெருந்தாயில்

பொல்லா அவலமெல்லாம்

புகுத்திவிட்டு போயினரே.

 

இப்போது வேசங்கள் கட்டுகிறார்

வேதனைதான் பொறுக்கலையே...

 

ஐயோ....

பேனா முனை தொட்டால்

பொல்லாத சிறுக்கியாகி

பித்தை நிலை கொண்டு

பிடாரியாய் போவேனோ?

 

தேனாக நின்ற

என் தேசத்தின் புதல்வர்களைக்

காணாமல் செய்தவர் யார்?

காரணங்கள் உரைப்பீரோ?

 

பனி உறைத்த தெருவினிலே

பறை அறைந்து நின்றவரே!

 

பெயல் மணக்கும் பொழுதுகளில்

பதறி நிறைந்தோரே!

 

வீசு புயல் மழையினிலே

தாகங்கொண்டு நிலைத்தவரே!

 

அந்நியச் சீண்டல்களின்

அவமானம் தாங்கி...

அன்புச் சோதரர்காய் அலங்கோலமானவரே!

 

எங்கு போய் விட்டீர்கள்?

 

முள்ளிவாய்க்காலில்

வெட்டுண்டு வீழ்ந்தது

எங்கள் அவயங்கள்

எப்படி மறந்தீர்கள்?

 

அவ்வளவு சீக்கிரம் மறப்பதற்கு

அறணையா நாங்கள்?

 

அட மூளையுங்கூடவா

முண்டமாய் போனது?

 

கண்ட கண்ட கோதாரி

பின் கதவால் வந்து

உள்வீட்டில் உட்கார்ந்து

உப்பரிகைக் கிடப்பில்

உல்லாசம் காணுது.

 

அண்ணரே, தம்பியரே

இன்னுமா அடிபட்டுக் கொள்கிறீர்?

 

உச்சுக் கொட்டிக் கொண்டு

உட்கார்ந்து பார்க்க

என்னால் முடியாது

 

அண்ணன்களே!, தம்பிகளே!

கும்பி கொதிக்கிறது.

 

சூலை மேடேறி

மாகாளி அழைத்து

தீட்சைக்கு நாட்குறிக்கும்

நாள் நெருங்கி வருகிறது

எச்சரித்துக் கொள்கிறேன்

குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

 

உட்புகுந்து உயிர் அரிக்கும்

வித்தை கற்கவேண்டும்

 

எத்தனை முறை நோக்கினும்

எதுவும் விளங்கக்கூடாது.

 

சத்தியத்தின் மூச்சழித்தோர்,

தத்துவ எதிர்வினையை

நித்தியத்தில் அநுபவிக்கும்

நிலை தந்தே தீரவேண்டும்

 

2011´ம் ஆண்டு,   வல்வை சகாறாவினால் இயற்றப் பட்ட  கவிதை,
எனது கண்ணில் படாமல் போனது, ஏனென்று தெரியவில்லை.

அந்த... நேரம்,  30 வருடமாக  நடந்த  போரில்.... புலிகள்,  ஆயுதத்தை மௌனமாக்கிய  தருணம்.
பலரும்.. விரக்தியின் விழிம்பில் நின்று, எம் இனத்தை... காட்டிக் கொடுத்த,
ஓட்டுக் குழுக்களின்....  "கிழக்கில் வெள்ளி... வடக்கில் வசந்தம்" 
என்ற கோசம்... யாழ். களத்திலும்  ஒலித்த குரல்களுக்கு, கெட்ட  வார்த்தையில் பதில் சொல்லி,
எச்சரிக்கை  புள்ளிகள் வாங்கியிருந்த காலமாக இருக்கலாம்.

 "கிழக்கில் வெள்ளி... வடக்கில் வசந்தம்"  என்று...... கோசம் போட்ட,
கருணாவையும்,  ஆனந்த  சங்கரியையும், டக்ளஸ்  தேவானந்தாவையும்....  இன்று அரசியல் களத்தில்  காணவில்லை.
அவர்களுக்கு.... வக்காலத்து வாங்கிய ஆட்களையும் காணவில்லை.

இதனை... நினைக்க, "வைக்கல்  பட்டடை, ### இன்" நினைவு வருகின்றது.   
காலம்... எவ்வளவு வேகமாக, உருண்டோருக்கின்றதும், 
தமிழனுக்கு மறதிக் குணம் அதிகம் உள்ளதையும்  மீண்டும் நினைவூட்டுகின்றது. 

அடுத்து.... சம்பந்தன், மாவை, சுமந்திரன்... வாயை, பொச்சடித்துக் கொண்டு, 
பச்சைப்   பொய்  பேசிக் கொண்டு,  மேடையில்... வேட்டி  சால்வையுடன் வருவார்கள்.
முதலில்... இப்படி வரும், பச்சோந்தி  அரசியல் வாதியின்.... வேட்டியை, உருவா விட்டாலும்,
சால்வையை... உருவினாலேயே... மற்ற,  கள்ள அரசியல் வாதிகள் உருவாக  மாட்டார்கள்.  

விழிப்புணர்வு.... எம்மில், ஒரு சாதாரண விடயத்தில் இருந்து தான்... தொடங்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்போதுதான் பார்க்கிறேன், அருமையான கவிதை. அன்றும் சரி இன்றும் சரி. சூப்பர் சகோதரி.....நன்றி தமிழ்சிறி .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலையான் கில்லர் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பக்கத்தில்  ஆரவாரமாக கருத்தாடி அநேகமாக நான் வேலையால் வந்து பார்க்கும் தருணங்களில் பல வெட்டுப்பட்ட கருத்துகளையும் நின்று மல்லுக்கட்டுவதையும் தூக்கமின்றி யாழுக்குள் உலவுவதையும் பார்த்திருக்கிறேன். அதனால் இந்தக் கவிதை உங்கள் பார்வைக்குத் தட்டுப்படாமல் போயிருக்கும். நன்றி இலையான் கில்லர் உங்கள் நினைவு மீட்டலுக்கு.

5 hours ago, suvy said:

நானும் இப்போதுதான் பார்க்கிறேன், அருமையான கவிதை. அன்றும் சரி இன்றும் சரி. சூப்பர் சகோதரி.....நன்றி தமிழ்சிறி .....!  tw_blush:

நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இப்போ கவிதையின் சுருதி கொஞ்சம் மாறுது ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

ஆனால் இப்போ கவிதையின் சுருதி கொஞ்சம் மாறுது ...........

பூட்டா இல்லையே  சுருதி  தானே?

அதை  மீண்டும்   மாத்திக்கலாம்:grin:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

ஆனால் இப்போ கவிதையின் சுருதி கொஞ்சம் மாறுது ...........

கவிதையில் சுருதி மாற்றமா? உங்கள் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வல்வை சகாறா said:

கவிதையில் சுருதி மாற்றமா? உங்கள் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்

நான் 2005இல் எப்படி யாழுக்கு வந்தேனோ 
அதே கண்ணுடன்தான் இருக்கிறேன் ..............

காட்ஸிகள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது ..
ஒரே மாதிரி இருந்தால் சலிப்பும் வரலாம் அல்லவா ?

சலிப்பில்லாமல் இருப்பதால்தான் தொடர்ந்தும் வருகிறேன் என்று நினைக்கிறேன் 
அடிக்கடி காட்சிகளை மாற்றி சலிப்பில்லாமல் பார்த்து கொள்கிறார்கள். 

பழைய பாடல்கள் இனிமையானவை என்றாலும் 
புதிய பாடல்களுடன் மாறி மாறி கேட்க்கும்போதுதான் 
அவை இனிமையாக கூட தெரியலாம் இல்லையா ?  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.