Jump to content

மறுமணம் என்பது பெண்களிற்கு ஏன் கானல் நீர்.....?


Recommended Posts

யாயினிக்கும் ரதிக்கும் தலா ஒரு பச்சைப்புள்ளி வைத்துட்டன்... :D

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெ.கா அண்ணா...

நட்பு என்ற ஒன்றைத் தாண்டி விவாதம் என்று ஒன்று வந்து விட்டால் தவிர்க்க முடியாத காரணங்களால் நானும் பெண் என்ற வகையில் என் கருத்தையும் முன் வைக்கலாம் என்று வந்து இருக்கிறேன்...அங்கேயும் உங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது மன்னிச்சு கொள்ளுங்கோ. .பின்பு இதற்கும் வந்து எழுதி விடாதீர்கள் யாயினி தனக்கு ஏற்பட்ட சில்லறை உணர்ச்சியினால் ஏதோ வந்து புலம்பிட்டு போறாள் என்று...அப்படி இல்லை எல்லாரும் மனிதப் பிறப்புக்கள் எல்லாருக்குள்ளும் எல்லா விதமான உணர்வுகளும் இருக்கத் தான் செய்கிறது,செய்யும்.

யாயினி!

நீங்கள் எப்பிடித்தான் கத்தினாலும் சிங்கம் சிங்கிளாய்த்தான் நிக்கும். :lol: :lol: :lol:

அது வரையறுக்கப்பட்டது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா நீங்கள் சமீபத்தில் சந்தித்த துன்பியல் நிகழ்விற்குப் பின்னர் உங்களை மீண்டும் களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதில என்ன அக்கா இருக்கு சிரிக்க. யதார்த்தத்தை சொல்லும் போது யாரும் இலகுவில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் நடைமுறை உலகில் இன்றைய உலக ஒழுங்கில் பெண்கள் மறுமணம் செய்வதில் தயக்கம் கொண்டிருக்கிறார்கள்.. அல்லது சமூகத்தால் தடுக்கப்படுகிறார்கள் குறிப்பாக ஆண்களால்.. என்பது எனியும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அதுபோன்று பிற ஆண்களிடம் இருந்து மறுமணம் ஆகாத பெண்களுக்கு ஆபத்து என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. பெண்களாகச் சென்று ஆபத்தை விலைக்கு வாங்கினாலே ஒழிய.. இன்றைய சமூக சட்ட ஒழுங்கில் அந்த ஆபத்துக்கள் அருகிவிட்டுள்ளன. ஒரு பெண் விரும்பினால்.. தான் விரும்பியவரோடு வாழ்வதும் வாழ்ந்து கெடுவதும் அவளுடைய தெரிவு. இதில் ஆண்களால் அவள் கெட்டாள்.. கெடுக்கப்பட்டாள் என்ற கதைக்கே இடமில்லை. நாங்க அனுமதிக்காம பிறர் எங்களை தீண்டவே முடியாது. அப்படித் தீண்டினால் அது வன்முறை. அதற்கு எதிராக சட்டம் தனது கடமையை செய்ய உலகெங்கும் நிஜமம் உண்டு..! பெண்களுக்கு என்று இவை தனியானவை அல்ல. ஆண்களுக்கும் இப்படியான பொதுப் பிரச்சனைகள் உள்ளன தான்.

இன்றைய உலகில்.. பெண்கள் சுயாதீன முடிவெடுத்து வாழக் கூடிய நிலை உள்ளது. வெறும் போலித்தனமான எல்லைகளை அவர்களே தங்களைச் சுற்றிப் போட்டுக்கொண்டு அதற்குள் நின்று கொண்டு ஆண்களின் பார்வை சரியல்ல.. ஆண்கள் அதிகாரம் செய்கின்றனர்.. ஆண்கள் கையைப் பிடிச்சு இழுக்கின்றனர்.. என்பதெல்லாம் வெறும் சில்லறைத்தனமான குற்றச்சாட்டுக்கள் மட்டுமன்றி பெண்கள் இவ்வாறு முன் வைக்கும் குற்றச்சாட்டுக்களூடு அவர்கள் மீதான பார்வை கூட அவர்களை கீழ் நிலைக்கு கொண்டு செல்கிறது. இது வேதனைக்குரியது.

யாயினி தங்கச்சி...

உங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.

அடிப்படையில் உங்கள் கருத்துக்களில் ஒரு சில விடயங்களை ஏற்றுக் கொண்டாலும் பல விடயங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அமைய நடப்பது மறுமணம். அதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். சமூகத்தை ஆண்களை குற்றம்சாட்டி தங்களின் உணர்ச்சிக்கு வடிகால் தேடுவதையே நான் கண்டிக்கிறேன். உணர்ச்சிக்கு மதிப்பளிக்கிறவை தங்களின் உணர்ச்சி தேவைக்கு ஏற்ப முடிவெடுத்துக் கொண்டு ஒரு தெரிவை செய்து வாழ வேண்டியது தானே. பிறகேன் சமூகத்தை.. ஆண்களை போட்டு நச்சரிக்கினம்.. என்றதுதான் எனக்குப் புரியல்ல. ஒரு ஆண் தேவைக்காக பல ஆண்களை கொடூரர்களாக சித்தரிக்கும் கீழ்த்தரமான இந்த தந்திரோபாயத்தை பெண்கள் கைவிட வேண்டும். மறுமணம் என்பது அவரவர் விருப்பு சம்பந்தப்பட்ட விடயம். அதில் மற்றவர்கள் தலையீடு செய்கிறார்கள் என்பது ஒரு சாட்டு. சமூகம் தலையீடு செய்யுது என்பது சாட்டு. அவ்வளவே.

பெண் போராளிகள்.. அன்னை தெராசா.. போன்றவர்கள் மீது உங்கள் சந்தேகம்.. நியாயமற்றது. ஒரு உயரிய கொள்கைக்காக சில்லறை உணர்ச்சிகளுக்கு அடிமையாகாது வாழ்ந்த வீரப் பெண்களை தந்துள்ளது எமது தமிழ் மரபு.. அன்னை தெராசா போன்றவர்கள் ஒரு தலைமுறைக்கே வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். அவரின் பாதையில் திருமணம் ஆகாமலே.. சமூகத்துக்காக உழைக்கும் பணி செய்யும் பெண்கள் இன்றும் உள்ளனர். அந்தப் பெண்களை சில்லறைத்தனமான உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டுப் போய் திரியும் பெண்களுக்கு வக்காளத்து வாங்க பரிகசிப்பது சகிக்கக் கூடிய ஒன்றல்ல.

சில்லறை தனங்களை சில்லறைத்தனம் என்று உச்சரிப்பதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை. மண்புழுவும் மனிதனும் உயிரினங்கள் தான். ஆனால் மண் புழு திருமணம்.. மறுமணம்.. ஆண் பெண் அடக்குமுறை விடுதலை என்று பேசியது கிடையாது. அங்கு எதையெல்லாம் ஆண் செய்கிறதோ அதையெல்லாம் பெண்ணும் செய்கிறது. மனிதப் பெண்களைப் போல மண் புழுப் பெண்கள் ஆண்களை திட்டிக் கொண்டு ஆண்களை தேடிப் போவதில்லை. மனிதப் பெண்கள் தான் அப்படி செய்கின்றனர். அதுதான் ஏன்.. ஏன் இந்தப் போலி வேடம் என்பதுதான் என் கேள்வியே..???!

சுருக்கமாகச் சொன்னால்.. இன்றைய உலகில்.. பெண்களை யாரும் மறுமணம் செய்ய வேண்டாம் என்று தடுக்கும் நிலை இல்லை. அதுமட்டுமன்றி.. மறுமணம் என்பது அவரவர் சொந்த முடிவு சம்பந்தப்பட்ட விடயம். ஆண்கள் மறுமணம் செய்யினம்.. பிற ஆண்களால்.. தொல்லை.. தொந்தரவு.. பயம் என்று சொல்லி மறுமணத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இன்றைய உலகில் பெண்களுக்கு அவசியமில்லை. அந்த வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அவசியமற்றவை. மறுமணம் செய்ய விரும்பிற பெண்கள் தற்துணிவோடு.. துணிச்சலோடு முடிவெடுத்து அவர்கள் விரும்பும் அல்லது அவர்களை விரும்பும் ஆணோடு வாழட்டும். அதை தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது. ஆனால் சமூகத்தை.. ஆண்களை குற்றம் சுமத்தி.. அல்லது ஆண்கள் அப்படி செய்யினம்.. இப்படி செய்யினம் என்று சொல்லி.. மறுமணம் அவசியம் என்று காட்ட நினைக்கும் சில்லறைத்தனத்தை பெண்கள் கைவிட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ பெண்ணோ, தாங்கள் விரும்பும் பட்சத்தில் மறுமணம் செய்வது இன்று எங்கள் சமூகத்தில் சாதாரணமாக உள்ளது. ஒரு தரம் மணம் முடித்து துணையை இழந்தால் அல்லது மணமுறிவு ஏற்பட்டால் மறுமணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பெட்டி கலாச்சார மன நிலை சென்ற நூற்றாண்டிலேயே தொலைந்து போயிற்று.

இன்று மறுமணம் செய்வதென்பது அவரவர் மனநிலையும் தேவைகளையும் பொறுத்தது. மறுமணத்தை தடுக்கும் மனநிலையிலோ அல்லது தவறான கண்ணோட்டத்துடன் நோக்கும் நிலையிலோ ஈழத்தமிழர் சமூகம் இன்று இல்லை என்பதே உண்மை.

இன்னும் நிறைய மாற்றம் எங்கள் சமூகத்துக்கு தேவை.அதுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவையோ :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நெடுக்சின் இந்த கருத்துக்களை பார்க்கும் போது சிரிப்புத் தான் வருகிறது...இப்ப தான் எனக்குப் புரிந்தது ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும் அவரது படிப்பிற்கும்,சமூக அறிவுக்கும் எவ்வளது தூரம் என்று அதற்கு அவர் சமூகத்தோடு ஒட்டி வாழ்ந்தாலன்றி எப்படி சமூகத்தைப் பற்றி அவருக்கு தெரிய வரும்.

ஒரு பெண் திருமணம் செய்யாமல் படிப்பையோ,பதவியையோ காரணம் காட்டி தனித்து இருக்கலாம் இந்த சமூகம் ஒன்றும் சொல்லாது ஆனால் ஒரு பெண் கணவனை இழந்தோ அல்லது விவாகரத்து ஆகியோ தனித்து வாழ முடியாது...அவர்கள் தனித்து மறுமணம் செய்ய நினைத்தாலும் இந்த சமூகம் அவர்களை வாழ விடாது...இந்தப் பெண் எங்கே பிழை விடுவாள்,அவளை யாரோடு சேர்த்து கதை கட்டலாம் என நினைப்பார்கள்[கட்டி விடுவார்கள்]...ஒரு பெண் படுப்பதற்காகத் தான்[உடம்பு சுகத்திற்காகத்] தான் மறுமணம் செய்கிறார்கள் என்பது உங்கள் அறியாமை நெடுக்ஸ்....உடம்பு சுகம் தேவையானால் மறுமணம் செய்ய வேண்டிய தேவை இல்லை நாங்கள் புலம் பெயர் நாட்டில் இருக்கிறோம் ஆண்கள் மாதிரி பெண்களும் வேலைக்குப் போகிறார்கள் அங்கே யாருடனாவது படுக்கப் போகலாம் அல்லது காசு கொடுத்தாவது படுக்கலாம்.

இங்கு முக்கியமாக பெண்கள் மறுமணம் செய்ய நினைப்பது பாதுகாப்பு காரணமாகத் தான்...ஒரு பெண் கணவனை இழந்து தனித்து இருந்தால் எம்மவர்களே அப் பெண்ணை படுக்க கூப்பிடுவார்கள் அப் பெண் எதாவது எதிர் நடவடிக்கை எடுத்தால்[சட்ட ரீதியான]உடனே அந்த பெண் தன்னை படுக்க கூப்பிட்டாள் என கதையை மாற்றி சொல்லுவார்கள் உடனே இந்த சமூகமும் ஆண் சொல்வதைத் தான் நம்பும்[இவள் தனிய இருக்கிறாள் படுக்க கூப்பிட்டு இருப்பாள் என்பார்கள்]...அதை விட 24 மணி நேரமும் காவல்துறையை நம்பி இருக்க இயலாது.

அதைத் தவிர எங்கட சமூகத்தில் கணவனோட இருந்தால் தான் மதிப்பு எதாவது விழாக்கள் என்டால் கணவனோட இருப்பவர்களைத் தான் மேடைக்கு கூப்பிடுவார்கள்...கணவன் இல்லாத பெண்ணை எப்பவும் விலக்கியே வைத்திருப்பார்கள்...பெண்களுக்கு இது போன்ற பல காரணங்கள் உண்டு ஆனால் ஆண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை ஆனாலும் பெண்களை காட்டிலும் ஆண்களே மறுமணம் செய்வதில் முன் நிற்கின்றனர்

அட இது தான் என்ர மனிசி இப்பவும் என்னை துரத்தாமல் இருக்கிறா :D:D:lol:

Link to comment
Share on other sites

அன்னை தெரேசா ஒரு துறவி, அவர் சமூகத்திற்காக தனது வாழ்கையை அர்ப்பணித்ததிற்கு அந்தத் துறவறமும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

இங்கே தலைப்பு மறுமணம் பற்றியது, ஒருதரம் திருமணமாகி அதன் மூலம் குழந்தையுடன் உள்ள பெண் தனித்து வாழும் நிர்பந்தத்திற்குத் தள்ளப் பட்டால் தன் குழந்தையை பராமரித்து வளர்ப்பதற்கு பாடுபடுவாளா? அல்லது கையில் குழந்தையுடன் இருப்பவள் (கைவிடப் பட்டவள்) சமூக சேவை செய்யலாம் என்று முடிவெடுப்பாளா?

ஒரு சமூகத்தில் ஒரு பெண் தனித்து வாழுவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை, இதற்கு காரணம் சில ஆண்கள் அந்தப் பெண்கள் மேல் வைத்துள்ள இழக்காரமான சிந்தனை மட்டும் இல்லை, பல பெண்களே அப்பெண்களுக்கு எதிரியாக, சுட்டெரிக்கும் வார்த்தைகளால் வசைபாடுவதும் நாம் அறியாதது இல்லை. உதாரணம்: 'கட்டினவளுக்கு ஒரு புருஷன் கைவிடப் பட்டவளுக்கு ஊரெல்லாம் புருசனாம்...' என்பது போன்று சொல்வார்கள். இவ்வளவும் ஏன் அப்பெண்களை ஒரு பார்வை பார்ப்பார்கள் அதில் ஆயிரம் அர்த்தம் சொல்லலாம்...

ஒரு குடும்பத்தில் கைவிடப்பட்ட பெண் இருந்தால் அந்தப் பெண்ணின் உறவினர், தெரிந்தவர், ஏன் தெரியாதவர்கள் என்று பெரும்பாலானவர்கள் முகத்திற்கு முன்னாலும், முதுகுக்குப் பின்னாலும் பேசுவார்கள். இந்த ஒரு விசயத்தில் மட்டும் எல்லா சொந்தமும் ஒன்றாக நிக்கும்... இதனால் தான் என்னவோ பெண்கள் எல்லோரும் தனித்து வாழ முடிவெடுப்பது இல்லை என்று நினைக்கிறன், கஷ்டமோ துன்பமோ நாலு சுவருக்குள் இருந்துவிட்டுப் போகட்டும் என சிலர்... இதை எல்லாம் தாங்கும் சக்தி இல்லை, ஒரு ஆண் இருந்தால் அவன் தனது துணைக்குப் பாதுகாப்புக் கொடுப்பான், இப்படியான தூற்றல்களை, இழிவு நோக்கத்தோடு இருப்பவர்களிடமிருந்து அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொள்வான் என்று ஒரு சில பெற்றோர்களே தமது பிள்ளைகளுக்கு மறுமணம் செய்து வைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆண்களின் துணை இல்லாததால் பெண்களே வீட்டில் எல்லா நிர்வாகத்தையும் கவனிக்கவேண்டிய கட்டாயம், அதனால் அவர்கள் பலதரப் பட்ட மனிதரை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படும் போது, அவர்கள் ஒவ்வொருத்தரிடமும் அவர்கள் தம்மை 'விதவை என்றோ/ கைவிடப் பட்டவர்' என்றோ சொல்லும் போது சிலர் அவர்களை சாதாரண திருமணமான பெண்ணுக்குரிய கண்ணோட்டத்தோடு பார்க்கத் தவறுகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு ஒரு கைவிடப்பட்ட/விதவைப் பெண் இன்றைய சமுதாயத்தில் தனியாக வாழ முடியும், வாழ்ந்து காட்ட முடியும் என்ற முடிவை எடுக்கிறாள் என்றால் அது அவளது திடகாத்திரமான மனம், தன்னம்பிக்கை கொண்ட மனம் மட்டுமே காரணமாக இருக்கும். இப்படியானவர்களை சமுதாயத்தில் உள்ள நாம் ஊக்குவிப்பது குறைவு, காரணம் அவர்கள் ஆண்களின் ஆதரவை தவிர்த்து வாழவிரும்புபவர்கள், திர்மிர் பிடித்தவர்கள், யாருக்கும் அடங்காதவர்கள், ஒத்தறோட்டுப் பேர்வழி, என்று முத்திரை குத்தி விடுகிறோம்.

இந்தப் பெண்களின் உண்மையான மனநிலை, அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை அவர்களது குடும்பத்தினர் கூட சில சமயங்களில் அறிந்து ஆதரவாக இருப்பது கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுமணம் என்பது அவரவரின் விருப்பு. அங்கு ஆண் பெண் என்ற பிரிவினையும் வியாக்கியாணமும் அவசியமில்லை. மறுமணம் செய்யாமல்.. மனைவியை இழந்த ஆண்கள் பலர் வாழவில்லையா..???! ஏன் காதலில் தோற்றதற்காக திருமணமே செய்யாமல் ஆண்கள் வாழவில்லையா..???! ஏன் திருமணமே செய்யாமல் தனிமனித ஒழுக்கத்தை கட்டிக்காத்து ஆண்கள் பெண்கள் என்று இன்றும் பலர் வாழ்கின்றனர். அன்னை தெராசா போன்ற பெண்மணிகள்.. உணர்ச்சிக்கு வடிகால் தேடாமல்... சமூகத்தின் தேவை கருதி வாழவில்லையா. அவங்க பெண்ணில்லையா..????! எங்கள் சகோதரிகள்.. பலர் உந்த சில்லறை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி போர்க்களத்தில் போராடி கரும்புலிகளாக பெண் புலிகளாக மடியவில்லையா..???!

உங்க சில பெண்களுக்கு உணர்ச்சிப் பெருக்கெடுத்தால்.. அதற்கு போய் வடிகால் தேடிக் கொள்வது. அதைவிட்டிட்டு எதற்கு ஆண்கள் மீது பழிபோடுகிறீர்கள். தனிய இருந்தா கையைப் பிடிச்சு இழுப்பான் என்று நீங்களே ஒரு ஐடியாவை உருவாக்கி விடுறது. பிறகு அதனை காரணம் காட்டி இன்னொரு கலியாணம்.. சாந்தி முகூர்த்தம்.. பிள்ளை குட்டி பெத்துக்கிறது. இதைத்தானே செய்யப் போறியள். இதுக்கேன் இவ்வளவு.. உணர்ச்சி.. கிணர்ச்சி.. பாதுகாப்பின்மை.. என்று பெரிய.. கூப்பாடுகள்.

எனக்கு ஆணின் உறவு இல்லாமல் வாழ முடியல்ல.. என்று நினைக்கிற பெண்கள்.. எனக்கு பெண்ணின் உறவு இல்லாமல் வாழ முடியல்ல என்று நினைக்கிற ஆண்களை கட்டிக் கொண்டு கிடக்க வேண்டியது தானே. அதைவிட்டிட்டு.. சமுதாயத்தில் பாதுகாப்பில்ல.. பெண் என்றால் அவள் வலிமை இல்லாதவள்.. ஆண்களின் வலிமை அவளை தனிய இருக்க விடுகுதில்ல.. அதனால ஆபத்து...ஆண்கள் பார்வை சரியில்லை... (ஏதோ இவை ஆண்களின் பார்வையை ஆராய்ச்சி செய்து கண்டாக்கள் போல.. ஒரு கதை அளப்பு.) அதில இருந்து தப்ப இன்னொரு கலியாணம் வேண்டும்..... இப்படி எத்தனை கதை அளக்கிறீங்க...! காலம் காலமா இதையே சொல்லிச் சொல்லி.. ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிவதிலும்...

என்னால் ஆண் துணை இன்றி வாழ முடியல்ல. பால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியல்ல.. எனக்கு ஒரு ஆண் வேணும் என்று கேட்டு அதற்கு ஒத்துவாறவனை கட்டிக் கிட்டு போய்க்கிட்டு இருக்கிறதை விட்டிட்டு.. உங்களின் உணர்ச்சி வடிகாலுக்கு ஒட்டு மொத்த ஆண்களையும் சமுதாயத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் செயலை செய்யாதேங்கோ.

20 வயதில் திருமணம் ஆகாத பெண் சுயமா தொழில் செய்து திருமணம் ஆகும் வரை பாதுகாப்பாக வாழ முடிகிறது.. ஆனால் 20 வயதில் கலியாணம் கட்டி கணவனை இழந்த பெண் வாழ முடியுதில்லையாமில்ல..??! யாருக்கு அளக்கிறீங்க கதை. 20 வயதில கலியாணம் முடிச்சு.. கணவனை இழந்த பெண்ணால ஆணின் அருகிருப்பின்றி.. தனிய இருக்க முடியல்ல என்று சொல்லுங்க.. அவளின் இயலாமை அப்படி என்று ஒத்துக் கொண்டு அவளுக்கு ஒரு ஆண் பிடிச்சுக் கொடுங்கோ என்று வெட்கத்தை விட்டு கேட்டு வாழுறது. அதைவிட்டிட்டு...

அதுவும் இன்று பெண்களுக்கு நல்ல சட்டரீதியான பாதுகாப்பும்.. சமூகப் பாதுகாப்பும் அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறீலங்காவில் இல்லாமல் இருக்கலாம். அங்கும் கூட பெண்கள் தான் அதிகார மேசைகளை அழங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவா முடியாது. அங்கும் ஆண்கள் வந்து குறுக்கவா நிக்கினம்..!

சும்மா ஆண்களை குற்றம்சாட்டிச் சாட்டி உங்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யும் இழிநிலையை களைந்து உங்களுக்கு என்ன தேவையோ அதை சொந்த முயற்சியால சமூகப் பாதிப்புக்கு இடம் வைக்காம.. செய்து தொலையுங்கோ. யார் வேணாம் எண்டா..??! உங்களை வந்து மறுமணம் செய்யாத என்று எவர் தடுக்கினம்..???! தடுக்கிறதாப் போல நீங்க ஒரு போலித் தோற்றத்தை வரைஞ்சு உங்க (பெண்களின்) உணர்ச்சி வடிகாலின் தேவைகளை சொல்லிக்கிறீங்க. அவ்வளவும் தான். அதற்கு ஆண்களை பகடைக்காய்களா தந்திரமா பாவிச்சுக்கிறீங்க. :D:)

தம்பிக்கு ரொம்பத்தான் உறைக்கிறதோ? இவ்வளவுக்கு எகிறிக் குதிக்கறீர்கள்!

நீங்கள் எகிறிக்குதிக்கிறபோது மறுமணம் பற்றிய கருத்தாடலில் இருந்து பாலியல் தேவையை அடிப்படையாக கொண்ட ஏதோ ஒரு உணர்வை வேண்டா விருந்தாளியாக இருத்துவருகிறீர்கள். சமூகத்தோடு ஒன்றி நடக்காத உங்கள் பார்வையை எந்த வகைக்குள் சேர்ப்பது என்று தெரியவில்லை. அன்னை தெரஸா போன்று வாழ முடியாதா என்ற உங்கள் கேள்வி பெரும்பான்மை பெண்களைத் தொட முடியாது. ஏனென்றால் அன்னை ஒரு அதிசயப்பிறவி. அவரைப்போல எல்லாப் பெண்களும் வாழமுடியாதா...அதாவது கணவனை இழந்த பெண்ள் மற்றும் மணமுறிவு பெற்ற பெண்கள் அப்படிச் செய்ய முடியாதா என்ற உங்கள் கேள்வி பச்சைக்குழந்தைத்தனமாக இருக்கிறது. இந்த உலகத்தில்... வேண்டாம் எங்கள் சமூகத்தின் எத்தனைவீதமான பெண்கள் வாழ்க்கைத்துணைவர்களை இழந்தவர்களாக இருக்கிறார்கள்? அவர்கள் எல்லோரும் அன்னை தெரஸாவைப் போலானலென்ன? உங்கள் கேள்வி எவ்வளவு முட்டாள்த்தனமானது என்று புரிகிறதா உங்களுக்கு?

அன்னையின் வாழ்வு துறவறம் போன்றது. சாமியார்களாக நினைக்கும் பெண்களுக்கு அது கொஞ்சம் சாத்தியமாகக்கூடியது. பெரும்பானமையானவர்களுக்கு அல்ல.

ஆண்களை முழுமையாகக் கெட்டவர்கள் என்று சொல்லாவிட்டாலும் பெரும்பான்மையானவர்கள் சந்தர்ப்பவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்.

நெடுக்கு நீங்கள் திருமணமாகாத பெண்களுக்கு பெற்றோர், சகோதரர்கள் உறவினர்கள் என்ற வகையில் பாதுகாப்பு அதிகம் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறைவு. ஆனால் விதவைப்பெண்கள், மணமுறிவு கண்டவர்கள் பெரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். நீங்கள் என்னதான் பெண்கள் கூப்பாடு போடுகிறோம் என்று வாதாடினாலும் உண்மைகளை முடக்க முடியாது. சட்டங்கள் இப்போது பெண்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்பதை மறுக்கவில்லை ஆனால் அந்தச் சட்டத்தின் துணை ஒரு பெண்ணுக்கு முழுமையாக எல்லா நேரமும் அவளைப் பாதுகாக்காது. ஒரு சில தீர்வுகள் சட்டத்தால் கிடைக்கலாம் அதுவே நிரந்தரமான தீர்வாகாது.

நெடுக்கு நீங்கள் பெண்களை மிகவும் கொச்சைப்படுத்துவதை என்னால் ஏற்க முடியாது. பொதுவாகப் பாலியல் ரீதியான விடயங்களை எங்கள் சமுதாயம் மறை பொருளாகவே பார்க்கிறது. பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்கள் எதையும் எப்படியும் பேசிக் கொள்வார்கள் ஆனால் பெண்கள் தமக்குப் பாலியல் ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும் வெளியே பேசி தீர்வு காணமாட்டார்கள் இன்று வரைக்கும் பல பெண்களுக்கு தங்கள் பிரச்சனைகளை தெளிவாக யாரிடமும் பேசும் தைரியமும் இல்லை பெண்ணுக்குப் பெண்ணே பாலியல் பற்றிய விடயங்களைக் கதைக்க தயங்கும் ஒரு சமூகத்தைச் சார்ந்த பெண்களை எப்படி நீங்கள் பாலியல் ரீதியாக ஏளனப்படுத்தமுடியும். இதைத்தான் ஆண் என்ற அகப்பாவமாகக் கருதத் தோன்றுகிறது.

உங்களின் ஏளனம் சராசரி ஒரு பெண்ணின் தேவையில் முகாமிட்டிருப்பது மிகவும் வேதனையானது.

நீங்கள் வைத்தியத்துறையில் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எம்மவர்களில் பலருக்கு மன அழுத்த நோய் இருக்கிறது நீங்கள் அறியாததல்ல. காரணம் என்ன சரியான துணையில்லாமை. இது பாலியல் ரீதியானது அல்ல மனம் விட்டுப் பேசக்கூடிய நல்ல துணை இல்லாமையே மன அழுத்த நோய்க்கான பெரும் காரணி.

அது என்ன சட்டரீதியான பாதுகாப்பும் சமூக ரீதியான பாதுகாப்பும் ?????? மேற்கத்தைய நாடுகளில் ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டாலும் ஆசியாவை தயவு செய்து சேர்த்துவிடாதீர்கள். மேற்கத்தைய நாடுகளைக் கூட நான் முழுமையான பாதுகாப்பாகக் கருதவில்லை. ஏனென்றால் பத்து ஆண்களில் ஒரு காமுகன் இருந்தால் காணும் நூறு பெண்களைச் சீரழித்துவிடுவான். நெடுக்கு நீங்கள் ஒழுக்கமாக இருக்கலாம் அதனால் உங்கள் வாதாட்டம் உங்களுக்கு நீதியானதாகத் தோன்றலாம் என்னைப் பொறுத்தவரை உங்களின் ஒவ்வொரு சொல்லும் பெண்களுக்கு அநீதியானவை. அவர்களை குதறக்கூடிய ஆணவவாதம். அடுத்த பிறவியிலயாவது நீங்கள் பெண்ணாய்ப் பிறந்து பெண்கள் சந்திக்கிற அத்தனை பிரச்சனைகளையும் சந்திக்கவேண்டும்.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை தெரேசா ஒரு துறவி, அவர் சமூகத்திற்காக தனது வாழ்கையை அர்ப்பணித்ததிற்கு அந்தத் துறவறமும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

இங்கே தலைப்பு மறுமணம் பற்றியது, ஒருதரம் திருமணமாகி அதன் மூலம் குழந்தையுடன் உள்ள பெண் தனித்து வாழும் நிர்பந்தத்திற்குத் தள்ளப் பட்டால் தன் குழந்தையை பராமரித்து வளர்ப்பதற்கு பாடுபடுவாளா? அல்லது கையில் குழந்தையுடன் இருப்பவள் (கைவிடப் பட்டவள்) சமூக சேவை செய்யலாம் என்று முடிவெடுப்பாளா?

ஒரு சமூகத்தில் ஒரு பெண் தனித்து வாழுவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை, இதற்கு காரணம் சில ஆண்கள் அந்தப் பெண்கள் மேல் வைத்துள்ள இழக்காரமான சிந்தனை மட்டும் இல்லை, பல பெண்களே அப்பெண்களுக்கு எதிரியாக, சுட்டெரிக்கும் வார்த்தைகளால் வசைபாடுவதும் நாம் அறியாதது இல்லை. உதாரணம்: 'கட்டினவளுக்கு ஒரு புருஷன் கைவிடப் பட்டவளுக்கு ஊரெல்லாம் புருசனாம்...' என்பது போன்று சொல்வார்கள். இவ்வளவும் ஏன் அப்பெண்களை ஒரு பார்வை பார்ப்பார்கள் அதில் ஆயிரம் அர்த்தம் சொல்லலாம்...

ஒரு குடும்பத்தில் கைவிடப்பட்ட பெண் இருந்தால் அந்தப் பெண்ணின் உறவினர், தெரிந்தவர், ஏன் தெரியாதவர்கள் என்று பெரும்பாலானவர்கள் முகத்திற்கு முன்னாலும், முதுகுக்குப் பின்னாலும் பேசுவார்கள். இந்த ஒரு விசயத்தில் மட்டும் எல்லா சொந்தமும் ஒன்றாக நிக்கும்... இதனால் தான் என்னவோ பெண்கள் எல்லோரும் தனித்து வாழ முடிவெடுப்பது இல்லை என்று நினைக்கிறன், கஷ்டமோ துன்பமோ நாலு சுவருக்குள் இருந்துவிட்டுப் போகட்டும் என சிலர்... இதை எல்லாம் தாங்கும் சக்தி இல்லை, ஒரு ஆண் இருந்தால் அவன் தனது துணைக்குப் பாதுகாப்புக் கொடுப்பான், இப்படியான தூற்றல்களை, இழிவு நோக்கத்தோடு இருப்பவர்களிடமிருந்து அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொள்வான் என்று ஒரு சில பெற்றோர்களே தமது பிள்ளைகளுக்கு மறுமணம் செய்து வைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆண்களின் துணை இல்லாததால் பெண்களே வீட்டில் எல்லா நிர்வாகத்தையும் கவனிக்கவேண்டிய கட்டாயம், அதனால் அவர்கள் பலதரப் பட்ட மனிதரை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படும் போது, அவர்கள் ஒவ்வொருத்தரிடமும் அவர்கள் தம்மை 'விதவை என்றோ/ கைவிடப் பட்டவர்' என்றோ சொல்லும் போது சிலர் அவர்களை சாதாரண திருமணமான பெண்ணுக்குரிய கண்ணோட்டத்தோடு பார்க்கத் தவறுகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு ஒரு கைவிடப்பட்ட/விதவைப் பெண் இன்றைய சமுதாயத்தில் தனியாக வாழ முடியும், வாழ்ந்து காட்ட முடியும் என்ற முடிவை எடுக்கிறாள் என்றால் அது அவளது திடகாத்திரமான மனம், தன்னம்பிக்கை கொண்ட மனம் மட்டுமே காரணமாக இருக்கும். இப்படியானவர்களை சமுதாயத்தில் உள்ள நாம் ஊக்குவிப்பது குறைவு, காரணம் அவர்கள் ஆண்களின் ஆதரவை தவிர்த்து வாழவிரும்புபவர்கள், திர்மிர் பிடித்தவர்கள், யாருக்கும் அடங்காதவர்கள், ஒத்தறோட்டுப் பேர்வழி, என்று முத்திரை குத்தி விடுகிறோம்.

இந்தப் பெண்களின் உண்மையான மனநிலை, அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை அவர்களது குடும்பத்தினர் கூட சில சமயங்களில் அறிந்து ஆதரவாக இருப்பது கிடையாது.

குட்டி மிகத் தெளிவான கருத்து இன்னும் இருக்கிறது இந்தத் திரி பூட்டுப் போடமுன் எல்லாம் வரும்தானே. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7 ஊரு சொத்தை ஆட்டைய போட்டவ கதையயெல்லாம் இங்கிட்டு இருக்கு.. தனிப்பட்ட முறையில் பெண்களை சகோதரியாகவும் தாயாகவும் பார்ப்பவன்.. சில மொள்ளமாறிக்கு இங்கிட்டு இந்த நாட்டில் சட்டமும் சாதகாமாய் போய்விவடுதான் வேதனை..

1 ஒரு புருசனை சாகடித்து போட்டு அவனின்ட சொத்து..

2 புருசனை சாகடித்து போட்டு அவனின்ட சொத்து..

இது ஒரு தொழிலாகவே போய்விட்டது.. எனக்கு சேரவேண்டிய புளியதோப்பு போய்ட்டுது.. இன்னும் கேஸ் நடந்திட்டு இருக்கு.. மேலாதிகமாக நேருக்கு நேர் மோத விரும்புவர்கள் மோதணும்..

டிஸ்கி :

மறுமணம் என்பது எற்புடையதுதான் என்றாலும் அந்த பாவப்பட்ட புண்ணிய அதாவது முதலாது கணவருடைய சொத்துக்கள் .. (அவர்களுக்கு பிறந்த (அல்லது) பிறக்காமலே போய்விட்டஅந்த குழந்தைக்கு எழுதிவைக்காத பட்சத்தில்) அவருடைய குடும்பத்தாரிடமே ஒப்படைக்க படவேணும்.. சும்மா இது ஒரு பிஸினஸாகா ஆக்க பட மாட்டாது. ஊருல பரம்பரை பரம்பரையா கஸ்டப்பட்டு நிலம் வீடு வாய்க்கால்...என.. வேர்வை சிந்தி உழைத்த பரம்பரை எதுவோ .. அவர்களைவிட்டு நோகாமல் நொங்கு திங்கிட்டு அடுத்தவனிடம் கொண்டு போவது முறையோ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிக்கு ரொம்பத்தான் உறைக்கிறதோ? இவ்வளவுக்கு எகிறிக் குதிக்கறீர்கள்!

நீங்கள் எகிறிக்குதிக்கிறபோது மறுமணம் பற்றிய கருத்தாடலில் இருந்து பாலியல் தேவையை அடிப்படையாக கொண்ட ஏதோ ஒரு உணர்வை வேண்டா விருந்தாளியாக இருத்துவருகிறீர்கள். சமூகத்தோடு ஒன்றி நடக்காத உங்கள் பார்வையை எந்த வகைக்குள் சேர்ப்பது என்று தெரியவில்லை. அன்னை தெரஸா போன்று வாழ முடியாதா என்ற உங்கள் கேள்வி பெரும்பான்மை பெண்களைத் தொட முடியாது. ஏனென்றால் அன்னை ஒரு அதிசயப்பிறவி. அவரைப்போல எல்லாப் பெண்களும் வாழமுடியாதா...அதாவது கணவனை இழந்த பெண்ள் மற்றும் மணமுறிவு பெற்ற பெண்கள் அப்படிச் செய்ய முடியாதா என்ற உங்கள் கேள்வி பச்சைக்குழந்தைத்தனமாக இருக்கிறது. இந்த உலகத்தில்... வேண்டாம் எங்கள் சமூகத்தின் எத்தனைவீதமான பெண்கள் வாழ்க்கைத்துணைவர்களை இழந்தவர்களாக இருக்கிறார்கள்? அவர்கள் எல்லோரும் அன்னை தெரஸாவைப் போலானலென்ன? உங்கள் கேள்வி எவ்வளவு முட்டாள்த்தனமானது என்று புரிகிறதா உங்களுக்கு?

அன்னையின் வாழ்வு துறவறம் போன்றது. சாமியார்களாக நினைக்கும் பெண்களுக்கு அது கொஞ்சம் சாத்தியமாகக்கூடியது. பெரும்பானமையானவர்களுக்கு அல்ல.

ஆண்களை முழுமையாகக் கெட்டவர்கள் என்று சொல்லாவிட்டாலும் பெரும்பான்மையானவர்கள் சந்தர்ப்பவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்.

நெடுக்கு நீங்கள் திருமணமாகாத பெண்களுக்கு பெற்றோர், சகோதரர்கள் உறவினர்கள் என்ற வகையில் பாதுகாப்பு அதிகம் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறைவு. ஆனால் விதவைப்பெண்கள், மணமுறிவு கண்டவர்கள் பெரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். நீங்கள் என்னதான் பெண்கள் கூப்பாடு போடுகிறோம் என்று வாதாடினாலும் உண்மைகளை முடக்க முடியாது. சட்டங்கள் இப்போது பெண்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்பதை மறுக்கவில்லை ஆனால் அந்தச் சட்டத்தின் துணை ஒரு பெண்ணுக்கு முழுமையாக எல்லா நேரமும் அவளைப் பாதுகாக்காது. ஒரு சில தீர்வுகள் சட்டத்தால் கிடைக்கலாம் அதுவே நிரந்தரமான தீர்வாகாது.

நெடுக்கு நீங்கள் பெண்களை மிகவும் கொச்சைப்படுத்துவதை என்னால் ஏற்க முடியாது. பொதுவாகப் பாலியல் ரீதியான விடயங்களை எங்கள் சமுதாயம் மறை பொருளாகவே பார்க்கிறது. பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்கள் எதையும் எப்படியும் பேசிக் கொள்வார்கள் ஆனால் பெண்கள் தமக்குப் பாலியல் ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும் வெளியே பேசி தீர்வு காணமாட்டார்கள் இன்று வரைக்கும் பல பெண்களுக்கு தங்கள் பிரச்சனைகளை தெளிவாக யாரிடமும் பேசும் தைரியமும் இல்லை பெண்ணுக்குப் பெண்ணே பாலியல் பற்றிய விடயங்களைக் கதைக்க தயங்கும் ஒரு சமூகத்தைச் சார்ந்த பெண்களை எப்படி நீங்கள் பாலியல் ரீதியாக ஏளனப்படுத்தமுடியும். இதைத்தான் ஆண் என்ற அகப்பாவமாகக் கருதத் தோன்றுகிறது.

உங்களின் ஏளனம் சராசரி ஒரு பெண்ணின் தேவையில் முகாமிட்டிருப்பது மிகவும் வேதனையானது.

நீங்கள் வைத்தியத்துறையில் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எம்மவர்களில் பலருக்கு மன அழுத்த நோய் இருக்கிறது நீங்கள் அறியாததல்ல. காரணம் என்ன சரியான துணையில்லாமை. இது பாலியல் ரீதியானது அல்ல மனம் விட்டுப் பேசக்கூடிய நல்ல துணை இல்லாமையே மன அழுத்த நோய்க்கான பெரும் காரணி.

அது என்ன சட்டரீதியான பாதுகாப்பும் சமூக ரீதியான பாதுகாப்பும் ?????? மேற்கத்தைய நாடுகளில் ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டாலும் ஆசியாவை தயவு செய்து சேர்த்துவிடாதீர்கள். மேற்கத்தைய நாடுகளைக் கூட நான் முழுமையான பாதுகாப்பாகக் கருதவில்லை. ஏனென்றால் பத்து ஆண்களில் ஒரு காமுகன் இருந்தால் காணும் நூறு பெண்களைச் சீரழித்துவிடுவான். நெடுக்கு நீங்கள் ஒழுக்கமாக இருக்கலாம் அதனால் உங்கள் வாதாட்டம் உங்களுக்கு நீதியானதாகத் தோன்றலாம் என்னைப் பொறுத்தவரை உங்களின் ஒவ்வொரு சொல்லும் பெண்களுக்கு அநீதியானவை. அவர்களை குதறக்கூடிய ஆணவவாதம். அடுத்த பிறவியிலயாவது நீங்கள் பெண்ணாய்ப் பிறந்து பெண்கள் சந்திக்கிற அத்தனை பிரச்சனைகளையும் சந்திக்கவேண்டும்.

:lol:

மேலே கருத்தெழுதியுள்ள பெண்களில் நிலாமதி அக்கா தவிர மற்றையவர்கள்.. மறுமணம் சார்ந்து கருத்தாடுவதை விட்டு.. நெடுக்ஸை மையப்படுத்தி கருத்தாடுறீங்க. இத்தனைக்கும் நம்மளப் பற்றி உருப்படியா எதுவும் தெரியாது இவர்களுக்கு. இப்படித்தான் உங்களின் பெண்கள் சார்ந்த வாதமும் இருக்கிறது. சில இடங்களில் இன்னும் பிற்போக்கான மக்கள் இருக்கினம். அவர்கள் மத்தியில் இருக்கும் நடைமுறை என்பதே உலகெங்கும் உள்ளதென்பதாகாது.

அன்னை தெராசா துறவி அல்ல. அவர் ஒரு சமூக சேவகி. அவர் வழியில் இன்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கினம். அவர்களில் பலர் திருமணமாகாதவர்கள். திருமணம்.. தங்கள் சமூகப் பணிக்கு தடையாக அமையலாம் என்பதால் அவர்கள் அதைச் செய்துகொள்ளவில்லையே தவிர.. அவர்களை துறவிகளாக்கி சில்லறை உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டு அலையும் பெண்களை உயர்த்திக் காட்ட முனைவது மிகவும் கீழ்த்தரமான கருத்தாடலாக இருக்கிறது.

சில்லறை தன உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எல்லாப் பெண்களும் சமூகப் பணி செய்ய வாங்கோ அல்லது போங்கோ என்றல்ல நாம் சொல்கிறோம். சில்லறை உணர்ச்சிகளுக்கு நாங்கள் கட்டுப்பட்டுப் போய் இருக்கிறோம்.. அதை தீர்க்காவிட்டால் நமக்கு பைத்தியம் பிடிச்சிடும்.. ஆகவே எங்களை எவனாவது ஒரு பய புள்ள வந்து கட்டிக் கிட்டுப் போடா.. என்று கேட்டுக் கொள்வது தான் நியாயம். அதைவிட்டு.. நான் கலியாணம் கட்டிட்டு.. இப்ப கணவன் இல்லாமல் தனிய இருந்து வாடுறன்.. வதங்குறன்.. எனக்கு சமூகத்தில ஆண் ஜந்துகளிடம் இருந்து பாதுகாப்பில்ல.. என் கற்பை எல்லாரும் பறிக்கிற மாதிரி பாக்கிறாங்கள்.. என்று இல்லாத பொல்லாத கதைகளை கற்பனையில் சித்தரித்து.. அதை கருப்பொருளாக்கி.. ஒரு மறுமணம் என்பது மிகவும் கீழ்த்தரமானவர்களாக பெண்களை இனங்காட்டச் செய்கிறது. அதையா சகாரா அக்கா நீங்களும் சொல்லவாறீங்க.

ஒரு ஆண்.. ஒரு பெண்ணை அணுகி.. எனக்கு சில்லறை உணர்ச்சி அதிகமாகிவிட்டது.. எனக்கு உன்னை தருவாயா.. என்று கேட்டால்.. எத்தனை பெண்கள் அந்த ஆணோடு வாழப் போவினம். அதுபோலத்தான்.. பெண்களும். சில்லறை உணர்ச்சிகளை வெளில நேரிடையா சொன்னா வேலைக்காகாது.. அல்லது அதனால பின் விளைவுகள் மோசமாகிடும் என்றிட்டு.. எனக்கு சமூகத்தில பாதுகாப்பில்ல.. ஆண்கள் ஒரு மாதிரி பாக்கினம்.. காமுர்கள் கண்ணால் மேயினம்.. (இதை எல்லாம் பெண்கள் எப்படித்தான் அப்பழுக்கற்று அடையாளம் கண்டுகொள்ளினமோ.. அந்த இறைவனுக்கே வெளிச்சம்).. கலியாணம் கட்டின பிறகு அப்பா அம்மா சகோதரங்கள் கைவிட்டிட்டுவினம்.. என்றெல்லாம் தற்துணிந்து கொண்டு பெண்கள் முடிவெடுக்கினம்.

மனைவியை இழந்த எத்தனையோ ஆண்கள்.. பெண்கள் என்னை காமப் பார்வை பாக்கினம்.. அழைக்கினம்.. கையை பிடிச்சு இழுக்கினம்.. அவையால எனக்கு பாதுகாப்பில்ல.. அப்பா அம்மா சகோதரங்கள் ஆதரவில்லை என்று சொல்லி மறுமணம் செய்ததாக நான் எங்கும் காணேல்ல. பலர் வெளிப்படையாகவே தனக்கொரு பெண் துணை தேவை என்று சொல்லி திருமணம் செய்திருக்கிறார்கள். அவர்களின் நேர்மைத் தன்மை பாராட்டத்தக்கது. தன்னுடைய சுய தேவைக்காக ஒரு சமூகத்தை பெண்களை அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதில்லை. ஆனால் பெண்கள் தங்களின் சுயதேவையை கெளரவிக்க.. சமூகத்தை.. ஆண்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதையே கண்டிக்கிறேன். அதுவே இங்கு எனது வாதமும் கூட.

பல பெண்கள் மறுமணம் என்ற போர்வையில்.. திட்டமிட்டு.. கணவனை கொலை செய்துவிட்டு அல்லது விவாகரத்து வாங்கிவிட்டு.. உடலை வைத்து பிற வசதியான ஆண்களை வசீகரித்து சுகபோகம் அனுபவிப்பதையும் இந்த உலகில் காண முடிகிறது. இந்த நிலை பல நாடுகளில் வசதி படைத்த மட்டங்களில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அரசர் காலத்தில் அந்தப்புறங்களை அழங்கரித்து வாழ்ந்த பெண்கள் இன்றும் வாழ்கின்றனர். இப்படியாக பெண்கள் பல விதம்.

அடிக்கடி தங்கள் ஆசைகளை மாற்றுவது போல ஆண்களையும் மாற்றலாமோ என்று அவர்கள் நினைக்கினம் போல. அவர்கள் தெரிவுக்கு ஏற்ப ஆண்கள் கிடைத்தால் அவர்கள் மறுமணம்.. அல்லது வேறு என்ன பெயரை பாவிச்சாவது அதை செய்திட்டு போகட்டும். அது அவர்களின் வாழ்வுரிமை சம்பந்தப்பட்டது. ஆனால் அதற்காக சமூகத்தை ஆண்களை காமுர்களாக.. காடையர்களாக.. சித்தரித்துக் கொண்டு திரிய வேண்டிய அவசியமில்லை. பெண்களின் சில்லறை உணர்ச்சிக்கு தீனி போட ஆண்கள் காமுர்களா இந்த சமூகத்தில் இனங்காட்டப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்களிலும் காமுகர்கள் இருக்கினம். அதேபோல் ஆண்களிலும் ஒரு சிலர் அப்படி இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த ஆண்கள் இனத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தங்கள் சில்லறை உணர்ச்சி வடிகால் தேடுவதை பெண்கள் நிறுத்திக் கொள்வது அவர்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை தரும்.

எனியும் இவ்வாறான பொய் மொழிகளால்.. உலகை சமூகத்தை ஏய்து வாழலாம் என்ற நினைப்பதை விடுத்து சுய முயற்சில்... சுய உழைப்பில்.. உலகெங்கும் தரப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்பை ஏற்றுக் கொண்டு.. தன்னம்ம்பிக்கையோடு வாழவும் பெண்கள் பழகிக் கொள்ள வேண்டும். காக்கா கூட்டத்தில் பெண் காக்கா.. அதன் அப்பா அம்மா கணவனை எதிர்பார்த்தா வாழுது.. இல்லை. அதே ஏன் மனிதப் பெண்களுக்கு மட்டும்.. ஆண்கள் எப்போதும் உழைச்சுப் போடும் இயந்திரமாக.. அவர்களின் சில்லறை உணர்ச்சிக்கு தீனிபோடும்.. ஜந்துவாக வாழ வேண்டும்..???! ஆண்களுக்கும் பல சமூகக் கடமைகள் உள்ளன. அவர்கள் அதனை செய்ய பெண்களின் இந்த நிலை தடையாக இருக்கிறது. :(:o:)

Link to comment
Share on other sites

மேலே கருத்தெழுதியுள்ள பெண்களில் நிலாமதி அக்கா தவிர மற்றையவர்கள்.. மறுமணம் சார்ந்து கருத்தாடுவதை விட்டு.. நெடுக்ஸை மையப்படுத்தி கருத்தாடுறீங்க. இத்தனைக்கும் நம்மளப் பற்றி உருப்படியா எதுவும் தெரியாது இவர்களுக்கு. இப்படித்தான் உங்களின் பெண்கள் சார்ந்த வாதமும் இருக்கிறது. சில இடங்களில் இன்னும் பிற்போக்கான மக்கள் இருக்கினம். அவர்கள் மத்தியில் இருக்கும் நடைமுறை என்பதே உலகெங்கும் உள்ளதென்பதாகாது.

அன்னை தெராசா துறவி அல்ல. அவர் ஒரு சமூக சேவகி. அவர் வழியில் இன்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கினம். அவர்களில் பலர் திருமணமாகாதவர்கள். திருமணம்.. தங்கள் சமூகப் பணிக்கு தடையாக அமையலாம் என்பதால் அவர்கள் அதைச் செய்துகொள்ளவில்லையே தவிர.. அவர்களை துறவிகளாக்கி சில்லறை உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டு அலையும் பெண்களை உயர்த்திக் காட்ட முனைவது மிகவும் கீழ்த்தரமான கருத்தாடலாக இருக்கிறது.

சில்லறை தன உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எல்லாப் பெண்களும் சமூகப் பணி செய்ய வாங்கோ அல்லது போங்கோ என்றல்ல நாம் சொல்கிறோம். சில்லறை உணர்ச்சிகளுக்கு நாங்கள் கட்டுப்பட்டுப் போய் இருக்கிறோம்.. அதை தீர்க்காவிட்டால் நமக்கு பைத்தியம் பிடிச்சிடும்.. ஆகவே எங்களை எவனாவது ஒரு பய புள்ள வந்து கட்டிக் கிட்டுப் போடா.. என்று கேட்டுக் கொள்வது தான் நியாயம். அதைவிட்டு.. நான் கலியாணம் கட்டிட்டு.. இப்ப கணவன் இல்லாமல் தனிய இருந்து வாடுறன்.. வதங்குறன்.. எனக்கு சமூகத்தில ஆண் ஜந்துகளிடம் இருந்து பாதுகாப்பில்ல.. என் கற்பை எல்லாரும் பறிக்கிற மாதிரி பாக்கிறாங்கள்.. என்று இல்லாத பொல்லாத கதைகளை கற்பனையில் சித்தரித்து.. அதை கருப்பொருளாக்கி.. ஒரு மறுமணம் என்பது மிகவும் கீழ்த்தரமானவர்களாக பெண்களை இனங்காட்டச் செய்கிறது. அதையா சகாரா அக்கா நீங்களும் சொல்லவாறீங்க.

ஒரு ஆண்.. ஒரு பெண்ணை அணுகி.. எனக்கு சில்லறை உணர்ச்சி அதிகமாகிவிட்டது.. எனக்கு உன்னை தருவாயா.. என்று கேட்டால்.. எத்தனை பெண்கள் அந்த ஆணோடு வாழப் போவினம். அதுபோலத்தான்.. பெண்களும். சில்லறை உணர்ச்சிகளை வெளில நேரிடையா சொன்னா வேலைக்காகாது.. அல்லது அதனால பின் விளைவுகள் மோசமாகிடும் என்றிட்டு.. எனக்கு சமூகத்தில பாதுகாப்பில்ல.. ஆண்கள் ஒரு மாதிரி பாக்கினம்.. காமுர்கள் கண்ணால் மேயினம்.. (இதை எல்லாம் பெண்கள் எப்படித்தான் அப்பழுக்கற்று அடையாளம் கண்டுகொள்ளினமோ.. அந்த இறைவனுக்கே வெளிச்சம்).. கலியாணம் கட்டின பிறகு அப்பா அம்மா சகோதரங்கள் கைவிட்டிட்டுவினம்.. என்றெல்லாம் தற்துணிந்து கொண்டு பெண்கள் முடிவெடுக்கினம்.

மனைவியை இழந்த எத்தனையோ ஆண்கள்.. பெண்கள் என்னை காமப் பார்வை பாக்கினம்.. அழைக்கினம்.. கையை பிடிச்சு இழுக்கினம்.. அவையால எனக்கு பாதுகாப்பில்ல.. அப்பா அம்மா சகோதரங்கள் ஆதரவில்லை என்று சொல்லி மறுமணம் செய்ததாக நான் எங்கும் காணேல்ல. பலர் வெளிப்படையாகவே தனக்கொரு பெண் துணை தேவை என்று சொல்லி திருமணம் செய்திருக்கிறார்கள். அவர்களின் நேர்மைத் தன்மை பாராட்டத்தக்கது. தன்னுடைய சுய தேவைக்காக ஒரு சமூகத்தை பெண்களை அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதில்லை. ஆனால் பெண்கள் தங்களின் சுயதேவையை கெளரவிக்க.. சமூகத்தை.. ஆண்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதையே கண்டிக்கிறேன். அதுவே இங்கு எனது வாதமும் கூட.

பல பெண்கள் மறுமணம் என்ற போர்வையில்.. திட்டமிட்டு.. கணவனை கொலை செய்துவிட்டு அல்லது விவாகரத்து வாங்கிவிட்டு.. உடலை வைத்து பிற வசதியான ஆண்களை வசீகரித்து சுகபோகம் அனுபவிப்பதையும் இந்த உலகில் காண முடிகிறது. இந்த நிலை பல நாடுகளில் வசதி படைத்த மட்டங்களில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அரசர் காலத்தில் அந்தப்புறங்களை அழங்கரித்து வாழ்ந்த பெண்கள் இன்றும் வாழ்கின்றனர். இப்படியாக பெண்கள் பல விதம்.

அடிக்கடி தங்கள் ஆசைகளை மாற்றுவது போல ஆண்களையும் மாற்றலாமோ என்று அவர்கள் நினைக்கினம் போல. அவர்கள் தெரிவுக்கு ஏற்ப ஆண்கள் கிடைத்தால் அவர்கள் மறுமணம்.. அல்லது வேறு என்ன பெயரை பாவிச்சாவது அதை செய்திட்டு போகட்டும். அது அவர்களின் வாழ்வுரிமை சம்பந்தப்பட்டது. ஆனால் அதற்காக சமூகத்தை ஆண்களை காமுர்களாக.. காடையர்களாக.. சித்தரித்துக் கொண்டு திரிய வேண்டிய அவசியமில்லை. பெண்களின் சில்லறை உணர்ச்சிக்கு தீனி போட ஆண்கள் காமுர்களா இந்த சமூகத்தில் இனங்காட்டப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்களிலும் காமுகர்கள் இருக்கினம். அதேபோல் ஆண்களிலும் ஒரு சிலர் அப்படி இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த ஆண்கள் இனத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தங்கள் சில்லறை உணர்ச்சி வடிகால் தேடுவதை பெண்கள் நிறுத்திக் கொள்வது அவர்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை தரும்.

எனியும் இவ்வாறான பொய் மொழிகளால்.. உலகை சமூகத்தை ஏய்து வாழலாம் என்ற நினைப்பதை விடுத்து சுய முயற்சில்... சுய உழைப்பில்.. உலகெங்கும் தரப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்பை ஏற்றுக் கொண்டு.. தன்னம்ம்பிக்கையோடு வாழவும் பெண்கள் பழகிக் கொள்ள வேண்டும். காக்கா கூட்டத்தில் பெண் காக்கா.. அதன் அப்பா அம்மா கணவனை எதிர்பார்த்தா வாழுது.. இல்லை. அதே ஏன் மனிதப் பெண்களுக்கு மட்டும்.. ஆண்கள் எப்போதும் உழைச்சுப் போடும் இயந்திரமாக.. அவர்களின் சில்லறை உணர்ச்சிக்கு தீனிபோடும்.. ஜந்துவாக வாழ வேண்டும்..???! ஆண்களுக்கும் பல சமூகக் கடமைகள் உள்ளன. அவர்கள் அதனை செய்ய பெண்களின் இந்த நிலை தடையாக இருக்கிறது. :(:o:)

Mother Teresa (26 August 1910 – 5 September 1997), born Agnes Gonxha Bojaxhiu[1] (pronounced [aɡˈnɛs ˈɡɔndʒa bɔjaˈdʒiu]), was a Catholic nun of Albanian[2][3] ethnicity and Indian citizenship,[4] who founded the Missionaries of Charity in Calcutta, India in 1950.

http://en.wikipedia.org/wiki/Mother_Teresa

இது தவறான தகவலாக இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் நெடுக்ஸ்!

சில காலத்திற்கு முன்பு இங்கு ஒரு கருத்தைப் படித்திருந்தேன், தனது சகோதரி கணவனை இழந்த ஒரே ஒரு காரணத்தால் எந்த ஒரு நல்ல காரியத்திற்குப் போனாலும் அந்தப் பெண்ணை முன்னே செல்ல பலர் அனுமதிப்பதில்லை எனவும் அவரின் மனம் வேதனைப்படும் படியான வார்த்தைப் பிரயோகங்களை மற்றவர்கள் பாவிப்பார்கள் என்றும்... இது தான் எம்மிடம் உள்ள குணம்! கருத்தாடும் போது நாம் சமூகவாதியாக எம்மை மற்றவர்களுக்குக் காட்டும் எம்மில் பலர் அன்றாட வாழ்கையில் அதனை செயல் படுத்தத் தவறி விடுகிறோம்.

நீங்கள் சொல்வது போன்று சில்லறைத் தனமான உணர்ச்சிகளை தீர்ப்பதற்கு மட்டும் ஒரு ஆணின் துணை தேவை என்று சொன்னால் அது பெண்ணினத்தையே கேவலப் படுத்தக் கூடியதாகத் தான் அமையும். ஆனால் பெண்கள் சொல்லும் காரணம் அதற்கு அப்பால் உள்ளது என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

எல்லோரும் ஒரே மாதிரி இல்லை, சமூகத்தில் நல்ல சிந்தனை உள்ளவர்கள், இந்தப் பெண்களுக்கு உதவுபவர்கள்

பலர் இருக்கிறார்கள். அதே நேரம் தமது தேவையை தீர்பதற்கு பெண்களை குறிவைத்து அணுகுபவர்களும் உள்ளார்கள் (இவர்களில் சிலர் திருமணமாகி குடும்பத்துடன் இருப்பவர்களும் அடங்குவார்கள்) அப்படியானவர்களின் பார்வை தான் அதிகம் பாதிக்கப் பட்ட பெண்களின் மேல் குறியாக இருக்கிறது என்பதை இங்கு யாராவது மறுக்க முடியுமா? பெண்கள் தாரமிழந்த ஆண்களின் கையைப் பிடித்து இழுக்கிறார்கள் என்று ஆண்கள் சொல்வது குறைவு தான், எல்லாப் பெண்களுக்கும் அந்த தைரியம் இல்லை.

ஒவ்வொரு வீடுக்கு ஒரு விதவையோ/ கைவிடப் பட்டவரோ கண்முன்னால் இருந்தால் தான் நாம் அவர்களின் மனநிலையை உணர வேண்டும் என்று இல்லை. ஆனால் அப்படியான உறவுகள் குடும்பத்தில் இருந்தால் பலர் அன்றாட வாழ்வில் அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை அறியும் போது/ அதனை கண்ணெதிரே பார்க்கும் போது அவற்றை புரிந்து கொள்ளும் தன்மை கொஞ்சம் அதிகம் என்பது யதார்த்தம்! :)

நீங்கள் மற்றும் புரச்சி குறிப்பிட்டது போல் பணத்திற்காக/ சொத்து சேர்ப்பதற்காக/ வெறும் உடல் சுகத்திற்காக மட்டுமே பெண்கள் மறுமணம் செய்கிறார்கள் என்றால் அது பெண்ணினத்தைக் கேவலப் படுத்தும் செயல் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு மறுமணம் பற்றிய கருத்தாடலில் உங்கள் கருத்து மறுமணத்தை ஏற்கிறதா இல்லையா என்று பார்த்தால் மறுமணம் செய்பவர்கள் எதையோ குறிவைப்பதாகவும் அல்லது எதற்கோ nலைவதாகவும்தான் உங்கள் கருத்து அமைகிறது. மறுமணம் என்பது என்பது ஒரு சமூக ஒழுக்கத்தைத் தரக்கூடியது. அதைவிட்டுவிட்டு பெண்கள் தனித்து வாழமுடியும் என்று சவால் விட்டும் எழுதலாம் அது ஒரு உயர் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு மட்டுமே சாத்தியம் இருப்பினும் அந்தகைய பெண் ஆண் சமூகத்துடன் கதைத்துப்பேசி சிரித்துவிட்டால் அதற்குக் கண், மூக்கு வைத்து கதைகள் கட்டுவதற்கு சமூகம் பின்நிற்பதில்லை. அடுத்து அப்பட்டமாக எழுதினால் ஆண்களின் அழுக்கு முகம்தான் தெரியும். என்னுடைய தந்தையும் ஆண், என்னுடைய அண்ணன்களும் ஆண்கள், என்னுடைய கணவனும் ஆண், ஆண் பிள்ளைகளும் இருக்கின்றார்கள் சமூகத்தின் ஒரு கூராக ஆண்கள் இருக்கும்போது அவர்களை உதாசீனப்படுத்தி பெண்களை உச்சத்தில் நிறுத்தி நான் பேச வரவில்லை. ஆனால் பெண்களின் மறுவாழ்வைப்பற்றிய உங்கள் சிந்தனைதான் மிகக் கீழ்த்தரமாக இருக்கிறது. உண்மையில் பெண்ணிய எழுத்தாளர்கள் இவ்விடத்தில் எழுதுவார்களாக இருந்தால் மறுமணங்கூட ஒருவகையில் பெண்ணைப் பலவீன்படுத்தும் ஒரு முயற்சி என்றே சொல்வார்கள். இது ஆணாதிக்கத்தால் திணிக்கப்பட்டது என்றுதான் எழுதுவார்கள். எனக்கு அப்படி எழுதத் தோன்றவில்லை. இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருக்கிறது. இருக்கிற வாழ்வை நிம்மதியாக்கி வாழ முயற்சிப்பதே புத்திசாலித்தனம். வாழ்விழந்தவர்களை, கணவனை இழந்தவர்களை கண் எதிரே நாளாந்தம் தரிசித்தபடியே வாழ்கிறேன். அவர்களைச் சூழ உள்ள வெறுமையை உணர்கிறேன். துணிந்து வாழவும் தைரியமின்றி பொய்யான முகமூடிகளைப் போட்டுக் கொண்டு உள்ளங்கள் அழ அழ உதடுகளில் சிரித்து வாழ்கிறார்கள். அடுத்து இந்தக்கட்டுரை உலக மயமான கட்டுரை அல்ல என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதே நேரம் எங்கள் சமூகம் சார்ந்ததாக இதை பார்க்கலாம். இங்கு கருத்தெழுதும் நானும் உலகமயமான கருத்தைத் தரவில்லை எங்கள் சமூகம் சார்ந்ததாகவே எனது கருத்தைத் தருகின்றேன். இங்கு உங்களுக்கு எதிராக எழுதுகிறோம் என்று நீங்கள் ஒரு குறிப்புப் போட்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு எதிராக எழுதுவது என் நோக்கமல்ல உங்கள் ஏளனத்திற்கே பதிலளிக்க முனைந்தேன். காரணம் நானும் மறுமணம் செய்து வாழும் பெண் என்பதால். தனித்த வாழ்வும் எனக்குத் தெரியும் உறவுகளின் வெறுப்பும், வெறுமை நிலையும் விரக்தி, தற்கொலை முயற்சி என்று பலவும் தாண்டித்தான் எனக்கான இந்த வாழ்வைத் தெரிவு செய்தேன். உங்கள் பார்வையில் மறுமணம் இது உடலின் தேவை என்று கொச்சைப்படுத்தப்படுகிறது. அதை நான் வன்மையாக எதிர்க்கிறேன். உடலின் தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தால் நாளுக்கு ஒரு ஆணோடு சல்லாபித்திருக்கலாமே... ஏன் ஒருவனைக் கட்டி மாரடிக்கவேண்டும். கண்ணியமாக வாழ வேண்டும்? நெடுக்கு உங்களுக்கு இந்தவிடயம் மான் கண்ட கானல்நீர்தான். தயவு செய்து பெண்களை ஏளனப்படுத்தும் செயலை இத்தோடு விட்டுவிடுங்கள். வேர்களில் கறையான் அரிப்பது தெரியாமல் இலை பழுக்கிறது என்று சொல்வதை விட்டுவிட்டு குறிப்பாக பெண்களை நீங்கள் ஏளனிக்கும் விடயங்களுக்கு அடிப்படைப் பிரச்சனை என்ன னெ;று அறிந்தால் பலருக்கு உங்கள் எழுத்து வாயிலாகப் பிரயோசனமாக இருக்கும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிக்கு எழுத தங்களுக்குத்தான் அதிக கடைப்பாடும் வலிமையும் உண்டு. நானும் எனது வாழ்க்கைப்பாடங்களை இங்கு பதிவது வழக்கம். அது சிலதுகளால் எனக்கு எதிராக ஏவப்பட்டதும் உண்டு. அதேநிலை தங்களுக்கும் வரக்கூடாது என்று நெஞ்சாற வேண்டுகின்றேன். அதேநேரம் எம் அத்தானை ஒரு படி உயர்த்தியுள்ளது என் மனதில் தங்கள் எழுத்து. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mother Teresa (26 August 1910 – 5 September 1997), born Agnes Gonxha Bojaxhiu[1] (pronounced [aɡˈnɛs ˈɡɔndʒa bɔjaˈdʒiu]), was a Catholic nun of Albanian[2][3] ethnicity and Indian citizenship,[4] who founded the Missionaries of Charity in Calcutta, India in 1950.

http://en.wikipedia.org/wiki/Mother_Teresa

இது தவறான தகவலாக இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் நெடுக்ஸ்!

அன்னை தெராசா ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக இருந்த போதும் அவர் கிறிஸ்தவ மதத் துறவியாக அன்றி சமூக சேவகியாகத்தான் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய சேவை மதத்துக்கு அப்பால் சமூகம் சார்ந்தது என்பதுதான் யதார்த்தம். அதற்காகத்தான் அவருக்கு நோபல் பரிசும் அளிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். :)

தங்கள் குறிப்புக்கு நன்றி குட்டி. :)

Link to comment
Share on other sites

மறுமணம் என்பது பெண்களுக்கு கானல் நீர் அல்ல. கானல் நீர் என்றால் இதுவரையில் ஒரு பெண்ணுமே ஈ லோகத்தில் மறுமணம் செய்யவில்லை என்று அர்த்தம். :wub: கானல் நீர் என்றால் இல்லாத ஒன்றுதானே..! :rolleyes: ஆகவே தலைப்பே சரியில்லை யுவர் ஆனர்..! :lol:

உண்மையில் மறுமணம் என்பது பெண்களுக்கு காணும் நீர். அந்த நீரை அடைய விடாமல் தடுப்பது பெருமளவில் பெண்கள்தான். ஆண்கள் அல்லர். விவாகரத்து ஆகிய பெண்களைப் பற்றி ஏறுக்குமாறாகப் பேசுபவர்கள் பெண்களாத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களோ அப்பெண்களின் அழகைச் சிலாகிப்பதுடன் நின்றுவிடுகிறார்கள்..! :D

மறுமணம் செய்ய சமுகத்தில் ஆண்களும் தயாராகவே இருக்கிறார்கள். எனக்குத் தெரிய முதல் திருமணத்தின் மூலம் பிரச்சினைக்குட்பட்ட ஒரு சகோதரியை மணமுடித்தவர் ஒரு கன்னிப் பையன். :rolleyes: இப்போது இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். உடனே சொல்லக்கூடாது அங்கையொண்டும் இங்கையொண்டுமா நடக்கிறதை எழுதக்கூடாது எண்டு.. :blink:

சில பெண்கள் பிரச்சினைக்கு உள்ளாகிறதுக்கு வேறை ஒரு காரணமும் இருக்கு.. அதாவது கட்டின கணவனைப் பார்த்து "காணும் நீர்..!" எண்டு சும்மா சும்மா சொல்ல வெளிக்கிட்டு பின்னால நீரைக் காண ஓடவேண்டியதா இருக்கு..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு மறுமணம் பற்றிய கருத்தாடலில் உங்கள் கருத்து மறுமணத்தை ஏற்கிறதா இல்லையா என்று பார்த்தால் மறுமணம் செய்பவர்கள் எதையோ குறிவைப்பதாகவும் அல்லது எதற்கோ nலைவதாகவும்தான் உங்கள் கருத்து அமைகிறது. மறுமணம் என்பது என்பது ஒரு சமூக ஒழுக்கத்தைத் தரக்கூடியது. அதைவிட்டுவிட்டு பெண்கள் தனித்து வாழமுடியும் என்று சவால் விட்டும் எழுதலாம் அது ஒரு உயர் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு மட்டுமே சாத்தியம் இருப்பினும் அந்தகைய பெண் ஆண் சமூகத்துடன் கதைத்துப்பேசி சிரித்துவிட்டால் அதற்குக் கண், மூக்கு வைத்து கதைகள் கட்டுவதற்கு சமூகம் பின்நிற்பதில்லை. அடுத்து அப்பட்டமாக எழுதினால் ஆண்களின் அழுக்கு முகம்தான் தெரியும். என்னுடைய தந்தையும் ஆண், என்னுடைய அண்ணன்களும் ஆண்கள், என்னுடைய கணவனும் ஆண், ஆண் பிள்ளைகளும் இருக்கின்றார்கள் சமூகத்தின் ஒரு கூராக ஆண்கள் இருக்கும்போது அவர்களை உதாசீனப்படுத்தி பெண்களை உச்சத்தில் நிறுத்தி நான் பேச வரவில்லை. ஆனால் பெண்களின் மறுவாழ்வைப்பற்றிய உங்கள் சிந்தனைதான் மிகக் கீழ்த்தரமாக இருக்கிறது. உண்மையில் பெண்ணிய எழுத்தாளர்கள் இவ்விடத்தில் எழுதுவார்களாக இருந்தால் மறுமணங்கூட ஒருவகையில் பெண்ணைப் பலவீன்படுத்தும் ஒரு முயற்சி என்றே சொல்வார்கள். இது ஆணாதிக்கத்தால் திணிக்கப்பட்டது என்றுதான் எழுதுவார்கள். எனக்கு அப்படி எழுதத் தோன்றவில்லை. இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருக்கிறது. இருக்கிற வாழ்வை நிம்மதியாக்கி வாழ முயற்சிப்பதே புத்திசாலித்தனம். வாழ்விழந்தவர்களை, கணவனை இழந்தவர்களை கண் எதிரே நாளாந்தம் தரிசித்தபடியே வாழ்கிறேன். அவர்களைச் சூழ உள்ள வெறுமையை உணர்கிறேன். துணிந்து வாழவும் தைரியமின்றி பொய்யான முகமூடிகளைப் போட்டுக் கொண்டு உள்ளங்கள் அழ அழ உதடுகளில் சிரித்து வாழ்கிறார்கள். அடுத்து இந்தக்கட்டுரை உலக மயமான கட்டுரை அல்ல என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதே நேரம் எங்கள் சமூகம் சார்ந்ததாக இதை பார்க்கலாம். இங்கு கருத்தெழுதும் நானும் உலகமயமான கருத்தைத் தரவில்லை எங்கள் சமூகம் சார்ந்ததாகவே எனது கருத்தைத் தருகின்றேன். இங்கு உங்களுக்கு எதிராக எழுதுகிறோம் என்று நீங்கள் ஒரு குறிப்புப் போட்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு எதிராக எழுதுவது என் நோக்கமல்ல உங்கள் ஏளனத்திற்கே பதிலளிக்க முனைந்தேன். காரணம் நானும் மறுமணம் செய்து வாழும் பெண் என்பதால். தனித்த வாழ்வும் எனக்குத் தெரியும் உறவுகளின் வெறுப்பும், வெறுமை நிலையும் விரக்தி, தற்கொலை முயற்சி என்று பலவும் தாண்டித்தான் எனக்கான இந்த வாழ்வைத் தெரிவு செய்தேன். உங்கள் பார்வையில் மறுமணம் இது உடலின் தேவை என்று கொச்சைப்படுத்தப்படுகிறது. அதை நான் வன்மையாக எதிர்க்கிறேன். உடலின் தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தால் நாளுக்கு ஒரு ஆணோடு சல்லாபித்திருக்கலாமே... ஏன் ஒருவனைக் கட்டி மாரடிக்கவேண்டும். கண்ணியமாக வாழ வேண்டும்? நெடுக்கு உங்களுக்கு இந்தவிடயம் மான் கண்ட கானல்நீர்தான். தயவு செய்து பெண்களை ஏளனப்படுத்தும் செயலை இத்தோடு விட்டுவிடுங்கள். வேர்களில் கறையான் அரிப்பது தெரியாமல் இலை பழுக்கிறது என்று சொல்வதை விட்டுவிட்டு குறிப்பாக பெண்களை நீங்கள் ஏளனிக்கும் விடயங்களுக்கு அடிப்படைப் பிரச்சனை என்ன னெ;று அறிந்தால் பலருக்கு உங்கள் எழுத்து வாயிலாகப் பிரயோசனமாக இருக்கும் :rolleyes:

நீங்கள் தற்காலத்தில் வாழும் பெண். ஆனால் எங்க பாட்டி கூட தனது கணவனை இழந்து அதுவும் இளம் வயதில் கணவனை இழந்து.. அதன் பின்னர் தனது பிள்ளைகளின் வாழ்வையே மையப்படுத்தி தனித்து வாழ்ந்தா. வெள்ளை சேலை அணியும் கலாசார திணிப்பை விட்டு.. அன்புக் கணவனை இழந்த போதும்.. ஒரு பெண்மணியாக தனக்கு விரும்பியதை தான் செய்தா.. கலர் சேலை தான் உடுப்பா. பொட்டை மட்டும் தவிர்த்தார். தனி மனித ஒழுக்கத்தை சமூக ஒழுக்கத்தை கடைப்பிடிச்சு ஊரில பெயர் சொல்ல வாழ்ந்திருந்தா. நிறைய சொத்துக்கள் அவை எதனையும் கணவன் இல்லையே என்று விற்காமல்.. அவற்றை விளை நிலங்களாக்கி தான் கஸ்டப்பட்டு பிள்ளைகளை படிப்பிச்சு வளர்ந்திருந்தா. எனக்கு என் பாட்டி மேல ரெம்ப ஈடுபாடு. அவரின் துணிச்சலை மன உறுதியை கண்டு வியந்திருக்கிறேன். அதுவும் இதே யாழ்ப்பாணத்தில் இருந்துதான் அவாவும் உருவானா வாழ்ந்தா. அதுமட்டுமன்றி.. அவாவின் சகோதரங்கள் அவாவை கைவிடல்ல. கணவனை இழந்த பெண் என்பதற்காக அவர்கள் மறுமணத்துக்கு நிற்பந்திக்கல்ல.. தொந்தரவு கொடுக்கல்ல. எனக்கு என் பாட்டி சொல்லித்தரல்ல.. ஆம்பிளையள் கொடியவங்க.. காமுங்க என்று... ஆனா கெட்டவங்க எல்லா இடமும் இருக்காக்க.. ஆம்பிளை பொம்பிளை என்று.. கவனமா பார்த்து நடந்து கோ.. என்று தான் அறிவுரை சொல்லுவா. கெட்டவனையும் எங்க அன்பால நல்லவனாக்க முடியும் சண்டை சச்சரவுக்கு போகாத என்று தான் சொல்லுவா. நீங்க நம்புறீங்களோ இல்லையோ.. இது நிஜம்.

எனது கருத்து மறுமணம் என்பது அவரவரின் தேவைகளோடு சம்பந்தப்பட்ட சொந்தத் தெரிவு. ஆண்களை சமூகத்தை குற்றம்சாட்டி அதனை பெண்கள் தெரிவு செய்வது என்பது பெண்கள் தங்களையே தாங்கள் கீழ்நிலைப்படுத்துவதாகும் என்பதுதான் என் கருத்து. அதுமட்டுமன்றி இன்றைய உலகின் போக்கில் மறுமணம் என்பது சர்வசாதாரணமாக பெண்களால் தெரிவாக்கப்படும் விடயமும் கூட. மற்றும்படி.. உங்களைப் பற்றி எனக்கு தனிப்பட எதுவும் தெரியாது. தப்பித்தவறி... உங்களை எனது கருத்துகள் காயப்படுத்தி இருந்தால்.. மன்னிக்க கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெ.கா அண்ணா....

இந்தப் தலைப்புக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லாது விட்டாலும் நானும் பெண் என்ற வகையில் தான் இங்கே கருத்தை முன் வைக்க வந்தேன்...யாரும் தவறாக நினைக் மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் என் கருத்தை தொடர்கிறேன்....என் கருத்துக்களில் சிறிது அளவாவது உண்மை இருக்கிறதே என்பதை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றிகள்..பல விடயங்களை ஏற்குக் கொள்ள மாட்டீர்கள் அது எனக்கு தெரிந்த விடயம் அதை விடுங்கோ..உங்களுக்குள் இருக்கும் ஈகோ முழுமையாக ஏற்றுக் கொள்ள விடாது....உங்களுக்கு நன்றாக தெரியுமா ஒட்டு மொத்தப் பெண்களுமே ஆண்களை இல்லை சமுகத்தை எப்போதும் நச்சரித்துக் கொண்டு தான் வாழுகீனம் என்று..

.ஏன் எதற்கு எடுத்தாலும் உங்கள் புரிதல் தவறான ஒரு கண்ணோட்டத்திலயே போய் கொண்டு இருக்கிறது...??ஒரு மனிதனுக்கு ஊண்,உடை,உறையுள் இந்த மூன்றும் எப்படி முக்கியமோ அதே போல் வாழ்வும் முக்கியம் சற்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.ஏன் மேலைத் தேய நாடுகளில் வந்து இரண்டு வேலை,மூன்று வேலை என்று ஓடுகிறீங்கள்...வாழ்வு என்ற ஒன்று தேவைப்படாத இடத்து காலுக்கு மேல் கால் போட்டு கொண்டு பேசாமல் இருக்கலாமே....?

அடுத்து:இங்கு அன்னை தெரேசா மற்றும் பெண் போராளிகளை இழுத்து எழுதியது நீங்கள் நான் அல்ல..நான் அவர்களின் வாழ்வு மீது எப்போதும் சந்தேகப் பட மாட்டேன்.எனக்கு அது தேவை அற்ற வேலை..நீங்கள் முன் வைத்த கருத்துக்கு தான் பதில் கருத்து வைத்தேன்...அதுவும் போராளிகளை பற்றி பேசுவதற்கு எனக்கு எந்த அருகதையும் இல்லை.நான் எப்போதும் அவர்களைப் பற்றி எழுத துணிவதும் இல்லை.உலகத்தில் உள்ள பெண்கள் எல்லாம் அன்னை தெரேசா மாதிரி ஊர் தொண்டு உலகத் தொண்டு என்று வெளிக்கிட்டால் ...ஆண்,பெண் திருமணம் ஒன்றே நடக்க வாய்ப்பே இல்லை ..அப்படி எல்லாரும் வாழ வேண்டும் என்று உங்களுக்கு விருப்பமாக இருக்கிறதா....???

அப்போ ஏன் இந்த கவிஞர்கள் எல்லாம் விழுந்து,விழுந்து எழுதுகிறார்கள் பாடல்களாக,கவிகளாக..

உதாரணத்திற்கு: ஒரு முறை தான்,ஒரு முறை தான் வாழ்க்கையில் திருமணம் ஒரு முறை தான்...

நதியே,நதியே காதல் நதியே நீயும் பெண் தானே.... என்ன அண்ணா இது எல்லாம்...?

உலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் தங்கள் வாழ்வில் நொந்து நூலாகி பல தரப்பட கேள்விகளை கேட்கலாம்,செயல்களை செய்யலாம்..ஆனால் அனைவராலும் முடியாது..நீங்கள் ஆண்கள் எந்த ஒரு கவலையான கட்டம் வந்தாலும் ஒரு பான்டை போட்டுக் கொண்டு போனால் யாரும் எதுவும் கண்டு பிடிக்க மாட்டார்கள் இவருக்குள் என்ன கவலை இருக்கு என்பதை..அதை மிஞ்சினால் என்ன செய்வீர்கள் தாடி வளர்பீர்கள் ,தண்ணி அடித்து விட்டு புலம்புவீர்கள்..பெண் என்பவள் அப்படி செய்ய முடியுமா....?சமுதாயம் விடுமா...?உறவுகள் விடுவார்களா....?பெண் ஆகப் பட்டவள் தன் கவலைகளை,தனக்கு அன்றாடம் வாழ்வில் ஏற்படக் கூடிய சிக்கல்களை எங்கே போய் சொல்ல முடியும்....?அதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும முகமாகவே தனக்கு என்று ஒரு துணையை தேடிக் கொள்ள முயல்வது தப்பா....?

நேற்றைய தினம் காலமாகிய எலிசபெத் டெய்லரின் மறைவுக்கு சோ சாட் என்று பதிவு இட்டு இருக்கிறீங்கள்.அவர் ஒரு முறை ,இரு முறை திருமணம் செய்ய இல்லை...பல தடவைகள் திருமணம் செய்து இருக்கிறார்..அப்படியான ஒரு பெண் இறந்ததற்கு சோ சாட்..அவா என்ன உங்கள் உறவுக்காறியா...உங்கள் இனத்து பெண்கள் மீது இவ்வளவு சீற்றத்தை காட்டுறீங்களே ஏன் ????

எனது கருத்து சற்று நீண்டு விட்டது மன்னித்து கொள்ளவும்..அத்தோடு எனது கருத்து நிர்வாகத்தினருக்கு பிடிக்காத இடத்து நீக்கி விடுவதற்கு அனுமதி அளிக்கிறேன்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெ.கா அண்ணா....

இந்தப் தலைப்புக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லாது விட்டாலும் நானும் பெண் என்ற வகையில் தான் இங்கே கருத்தை முன் வைக்க வந்தேன்...யாரும் தவறாக நினைக் மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் என் கருத்தை தொடர்கிறேன்....என் கருத்துக்களில் சிறிது அளவாவது உண்மை இருக்கிறதே என்பதை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றிகள்..பல விடயங்களை ஏற்குக் கொள்ள மாட்டீர்கள் அது எனக்கு தெரிந்த விடயம் அதை விடுங்கோ..உங்களுக்குள் இருக்கும் ஈகோ முழுமையாக ஏற்றுக் கொள்ள விடாது....உங்களுக்கு நன்றாக தெரியுமா ஒட்டு மொத்தப் பெண்களுமே ஆண்களை இல்லை சமுகத்தை எப்போதும் நச்சரித்துக் கொண்டு தான் வாழுகீனம் என்று..

.ஏன் எதற்கு எடுத்தாலும் உங்கள் புரிதல் தவறான ஒரு கண்ணோட்டத்திலயே போய் கொண்டு இருக்கிறது...??ஒரு மனிதனுக்கு ஊண்,உடை,உறையுள் இந்த மூன்றும் எப்படி முக்கியமோ அதே போல் வாழ்வும் முக்கியம் சற்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.ஏன் மேலைத் தேய நாடுகளில் வந்து இரண்டு வேலை,மூன்று வேலை என்று ஓடுகிறீங்கள்...வாழ்வு என்ற ஒன்று தேவைப்படாத இடத்து காலுக்கு மேல் கால் போட்டு கொண்டு பேசாமல் இருக்கலாமே....?

அடுத்து:இங்கு அன்னை தெரேசா மற்றும் பெண் போராளிகளை இழுத்து எழுதியது நீங்கள் நான் அல்ல..நான் அவர்களின் வாழ்வு மீது எப்போதும் சந்தேகப் பட மாட்டேன்.எனக்கு அது தேவை அற்ற வேலை..நீங்கள் முன் வைத்த கருத்துக்கு தான் பதில் கருத்து வைத்தேன்...அதுவும் போராளிகளை பற்றி பேசுவதற்கு எனக்கு எந்த அருகதையும் இல்லை.நான் எப்போதும் அவர்களைப் பற்றி எழுத துணிவதும் இல்லை.உலகத்தில் உள்ள பெண்கள் எல்லாம் அன்னை தெரேசா மாதிரி ஊர் தொண்டு உலகத் தொண்டு என்று வெளிக்கிட்டால் ...ஆண்,பெண் திருமணம் ஒன்றே நடக்க வாய்ப்பே இல்லை ..இன பெருக்கம் என்ற ஒண்டுக்கே சந்தர்ப்பம் இல்லை....அப்படி எல்லாரும் வாழ வேண்டும் என்று உங்களுக்கு விருப்பமாக இருக்கிறதா....???

அப்போ ஏன் இந்த கவிஞர்கள் எல்லாம் விழுந்து,விழுந்து எழுதுகிறார்கள் பாடல்களாக,கவிகளாக..

உதாரணத்திற்கு: ஒரு முறை தான்,ஒரு முறை தான் வாழ்க்கையில் திருமணம் ஒரு முறை தான்...

நதியே,நதியே காதல் நதியே நீயும் பெண் தானே.... என்ன அண்ணா இது எல்லாம்...?

உலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் தங்கள் வாழ்வில் நொந்து நூலாகி பல தரப்பட கேள்விகளை கேட்கலாம்,செயல்களை செய்யலாம்..ஆனால் அனைவராலும் முடியாது..நீங்கள் ஆண்கள் எந்த ஒரு கவலையான கட்டம் வந்தாலும் ஒரு பான்டை போட்டுக் கொண்டு போனால் யாரும் எதுவும் கண்டு பிடிக்க மாட்டார்கள் இவருக்குள் என்ன கவலை இருக்கு என்பதை..அதை மிஞ்சினால் என்ன செய்வீர்கள் தாடி வளர்பீர்கள் ,தண்ணி அடித்து விட்டு புலம்புவீர்கள்..பெண் என்பவள் அப்படி செய்ய முடியுமா....?சமுதாயம் விடுமா...?உறவுகள் விடுவார்களா....?பெண் ஆகப் பட்டவள் தன் கவலைகளை,தனக்கு அன்றாடம் வாழ்வில் ஏற்படக் கூடிய சிக்கல்களை எங்கே போய் சொல்ல முடியும்....?அதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும முகமாகவே தனக்கு என்று ஒரு துணையை தேடிக் கொள்ள முயல்வது தப்பா....?

நேற்றைய தினம் காலமாகிய எலிசபெத் டெய்லரின் மறைவுக்கு சோ சாட் என்று பதிவு இட்டு இருக்கிறீங்கள்.அவர் ஒரு முறை ,இரு முறை திருமணம் செய்ய இல்லை...பல தடவைகள் திருமணம் செய்து இருக்கிறார்..அப்படியான ஒரு பெண் இறந்ததற்கு சோ சாட்..அவா என்ன உங்கள் உறவுக்காறியா...உங்கள் இனத்து பெண்கள் மீது இவ்வளவு சீற்றத்தை காட்டுறீங்களே ஏன் ????

எனது கருத்து சற்று நீண்டு விட்டது மன்னித்து கொள்ளவும்..அத்தோடு எனது கருத்து நிர்வாகத்தினருக்கு பிடிக்காத இடத்து நீக்கி விடுவதற்கு அனுமதி அளிக்கிறேன்.நன்றி.

ஈகோ வா அப்படின்னா என்ன..??!

அதுதான் கேட்கிறேன்... பெண்கள் தாங்க விரும்பினா மறுமணமோ என்னமோ செய்திட்டு போகட்டும்.. அதற்காக ஏன் சமூகத்தை ஆண்களை குறைசொல்லிக் கொண்டு செய்யனும் என்று. பெண்கள் தாங்கள் விரும்பினா விரும்பின படி செய்து கொள்ள வேண்டியது தானே. அதுக்கேன் ஊரை ஆண்களை திட்டிக் கொண்டு செய்கிறார்கள். ஆண்களைத் திட்டிக்கொண்டும் ஒரு ஆணைத் தான் தேடியும் போறார்கள். என்ன வேடிக்கையான பிறவிகள் இந்தப் பெண்கள்.

நாங்க யாரையும் இனப்பெருக்கம் செய்ய வேண்டாம் என்று சொல்லோல்ல. அவை இனத்தை பெருக்கினமோ.. என்னத்தை பெருக்கினமோ.. ஆண்களை சமூகத்தை திட்டிக் கொண்டு அதை செய்யாமல் இருந்தாலே போதும். இனப்பெருக்க ஆண் வேண்டும்.. மற்றும்படி..அவனை திட்டவும் அவன் வேணும். இதைப் போல கொடுமை வேறு உண்டா உலகில்..??! பாவப்பட்ட ஆண்கள்.

கவிஞர்கள் காசுக்கு பொழுதுபோக்கிற்கு எழுதுவதெல்லாம் நிஜம் என்றால் பெண்களின் முகம் எல்லாம் நிலவு போல பெரிசா.. மேடும் பள்ளமுமாய் எல்லோ இருக்கனும். அப்படியாவா இருக்கு..??! தெரியாமல் போச்சே. :D

எலிசபத் ரெய்லருக்கு நான் (நெடுக்ஸ்) எங்க எழுதினன் பதிவு. அப்படி யாரேனும் எழுதி இருந்தாலும் கூட அவர் ஒரு பழம் பெரும் நடிகை. அந்த வகையில் அவரின் நடிப்புக்கு அளிக்கும் கெளரவமாக அது அமைந்திருக்குமே ஒழிய.. வெளிப்படையற்ற அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை சார்ந்து அது இருக்க வாய்ப்பில்லை.

நான் ஒன்னும் தவறா யாரையும் புரிஞ்சுக்கல்ல. உலகத்தை சரியா புரிஞ்சுக்க முயற்சிக்கிறன். போலியா இனங்காட்டி அதை புரிஞ்சிக்கிறதை காட்டிலும் என் இந்த நிலை எவ்வளவோ திறம் இல்லையா?! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்து மறுமணம் பற்றியதல்ல, மறுமணம் செய்யச் சொல்லப்படும் காரணங்கள் பற்றியது:

எனக்கு ஒரு தூரத்து முறை சித்தி இருந்தா, சின்ன வயதிலேயே இரு பிள்ளைகளோடு கணவனை இழந்தவர். காசுக்குக் கஷ்டப் படவில்லையெண்டாலும் சில தேவைகளுக்காக ஊர் சங்கக் கடை மனேஜரிடம் சில உதவிகள் பெற வேண்டி இருந்தது. உதவிகள் செய்தவர் கொஞ்சம் கொஞ்சமாக வீடு தேடி வர வெளிக்கிட்டு, ஒரு நாள் கை வைச்சு விட்டார். இந்தப் பெண் எதுவும் பேசாமல் "கொஞ்சம் இரு வருகிறேன்" என அடுப்படிக்குப் போய் தேனீர் போடக் கொதிச்சுக் கொண்டிருந்த சுடுநீரை எடுத்து வந்து மனேஜருக்கு அபிஷேகம் செய்து விட்டா. இது மூடிய வீட்டுக்குள் நடந்தது, ஆனால் பிறகு சித்தி இரண்டு பிள்ளைகளையும் தனியே வளர்த்து ஆளாக்கும் மட்டும் யாரும் அவரை தொந்தரவு செய்யவில்லை.

1. மறுமணம் செய்ய வேண்டுமா? செய்து கொள்ளுங்கள், அது குற்றமோ தவறோ அல்ல. பூரணமான குடும்பம் மிகவும் நல்ல விடயம்!

2. ஆனால் செய்யும் காரணத்தில் தெளிவாக இருங்கள்: "ஊருக்குப் பயப்படுகிறேன், பாதுகாப்புத் தேடுகிறேன்" என்பது தான் காரணம் என்றால் பிழை உங்களிடம் தான்.சுடு நீர் ஊற்றப் பழகுங்கள்.

இங்கே "சுடு நீர்" என்று நான் சொல்வது ஒரு குறியீடு மட்டுமே. சின்ன வயதில் இருந்தே பெண்பிள்ளைகளை "உன் பாதுகாப்பு உன்னிடம் தான்" என்று பழக்கி வளர்த்தெடுங்கள். படிப்போ, தொழிலோ, அல்லது இது எதுவும் இல்லாது என் சித்திக்கு இருந்தது போல வெறும் "தன் மதிப்பு" மட்டுமே கூட அவர்களது "சுடு நீராக" துணை வரட்டும். இந்த நேரம் காதல் வந்தால் ஒரு ஆண்துணையும் வரட்டும். ஊருக்குப் பயந்து துணை தேடப் போய் பல பேர் "கொதிக்கிற எண்ணைச் சட்டியில் இருந்து எரியும் நெருப்பில்" பாய்ந்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

இந்தக் கருத்து மறுமணம் பற்றியதல்ல, மறுமணம் செய்யச் சொல்லப்படும் காரணங்கள் பற்றியது:

எனக்கு ஒரு தூரத்து முறை சித்தி இருந்தா, சின்ன வயதிலேயே இரு பிள்ளைகளோடு கணவனை இழந்தவர். காசுக்குக் கஷ்டப் படவில்லையெண்டாலும் சில தேவைகளுக்காக ஊர் சங்கக் கடை மனேஜரிடம் சில உதவிகள் பெற வேண்டி இருந்தது. உதவிகள் செய்தவர் கொஞ்சம் கொஞ்சமாக வீடு தேடி வர வெளிக்கிட்டு, ஒரு நாள் கை வைச்சு விட்டார். இந்தப் பெண் எதுவும் பேசாமல் "கொஞ்சம் இரு வருகிறேன்" என அடுப்படிக்குப் போய் தேனீர் போடக் கொதிச்சுக் கொண்டிருந்த சுடுநீரை எடுத்து வந்து மனேஜருக்கு அபிஷேகம் செய்து விட்டா. இது மூடிய வீட்டுக்குள் நடந்தது, ஆனால் பிறகு சித்தி இரண்டு பிள்ளைகளையும் தனியே வளர்த்து ஆளாக்கும் மட்டும் யாரும் அவரை தொந்தரவு செய்யவில்லை.

1. மறுமணம் செய்ய வேண்டுமா? செய்து கொள்ளுங்கள், அது குற்றமோ தவறோ அல்ல. பூரணமான குடும்பம் மிகவும் நல்ல விடயம்!

2. ஆனால் செய்யும் காரணத்தில் தெளிவாக இருங்கள்: "ஊருக்குப் பயப்படுகிறேன், பாதுகாப்புத் தேடுகிறேன்" என்பது தான் காரணம் என்றால் பிழை உங்களிடம் தான்.சுடு நீர் ஊற்றப் பழகுங்கள்.

இங்கே "சுடு நீர்" என்று நான் சொல்வது ஒரு குறியீடு மட்டுமே. சின்ன வயதில் இருந்தே பெண்பிள்ளைகளை "உன் பாதுகாப்பு உன்னிடம் தான்" என்று பழக்கி வளர்த்தெடுங்கள். படிப்போ, தொழிலோ, அல்லது இது எதுவும் இல்லாது என் சித்திக்கு இருந்தது போல வெறும் "தன் மதிப்பு" மட்டுமே கூட அவர்களது "சுடு நீராக" துணை வரட்டும். இந்த நேரம் காதல் வந்தால் ஒரு ஆண்துணையும் வரட்டும். ஊருக்குப் பயந்து துணை தேடப் போய் பல பேர் "கொதிக்கிற எண்ணைச் சட்டியில் இருந்து எரியும் நெருப்பில்" பாய்ந்திருக்கிறார்கள்.

தெளிவான கருத்து ஜஸ்ரின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவான கருத்து ஜஸ்ரின்

இதைத்தானே நெடுக்சும் சொல்கிறார் திரியின் ஆரம்பத்திலிருந்து.... :(

Link to comment
Share on other sites

இதைத்தானே நெடுக்சும் சொல்கிறார் திரியின் ஆரம்பத்திலிருந்து.... :(

சொல்லும் விதத்தில் வேறுபாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் பெண்கள் மறுமணம் செய்வதாக தீர்மானித்தானித்தால் மிகவும் அவதானமாக வரப் போகும் கணவரை தீர்மானிக்க வேண்டும்...அவசரப்பட்டு தங்கள் வாழ்க்கையை தொலைக்க கூடாது என்பது தான் என் கருத்தும் ஆனாலும் உங்கட சித்திக்கு நடந்தது ஊரில் அதுவும் எப்படியும் குறைந்தது 10 வருடங்களுக்கு முன் நடந்து இருக்கும் என நினைக்கிறேன்[தப்பாயின் மன்னிக்கவும்] ஊரில உங்கட சித்தியை சுற்றி சித்தியின்ட சொந்தக்காரர்கள் இருந்திருப்பார்கள் அதை விட சித்திக்கு 2 பிள்ளைகள் இருந்தும் ஒருத்தன் அவ மேல கை வைத்தான் என்டால் அதற்கு என்ன காரணம்?[ஆண்துணை இல்லாமல் இருக்கிறாள் கூப்பிட்டால் படுக்கைக்கு வந்து விடுவாள் என்பது தான் காரணம்.]...சித்தி ஏதோ சில காரணங்களால் மறுமணம் செய்யாமல் தனிய இருக்கிறார் ஆனால் எப்பவாவது சித்திக்கும் ஒரு மனசிருக்குது அதில் என்ன இருக்குது என்பது பற்றி யோசித்து இருக்கிறீர்களா? அது பற்றி அவவுடம் கேட்டு இருக்கிறீர்களா?[இப்படி நான் எழுதுவதன் மூலம் நீங்கள் நினைக்க கூடாது நான் பெண்கள் ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது என்ட கருத்தை கொண்டு இருக்கிறேன் என்டு]...கவலையோ,சந்தோசமோ பகிர்ந்து கொள்ள ஒரு துணை இருக்க வேண்டும் என நினைப்பதில் தப்பு இல்லைத் தானே![குழந்தையாய் இருக்கும் போது பெற்றோரிடம்,கொஞ்சம் வளர சகோதர,சகோதரிகளிடம்,நண்பர்களிடம்,வயது போன காலத்தில் தான் தங்கட பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்வார்கள்]

எனக்கு ஞாபகம் இருக்கிறது கிட்டதட்ட 20 வருடங்களுக்கு முன் எங்கள் மாமாவுக்கு திருமணம் நடந்த போது மூத்த மாமாவும்,மாமியும் தான் முன்னின்று தத்தம் பண்ணிக் கொடுத்தார்கள் இத்தனைக்கும் அம்மம்மா உயிரோடு இருந்தார் ஏன் அவவை முன்னின்று செய்ய விடவில்லை காரணம் அவ விதவை[விதவையாய் இருந்தாலும் கஸ்டப்பட்டு தன் 10 பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வந்தார் ஆனால் என்ன பிரயோசனம்?...இதே நிலை தான் போன வருடம் என் பெரியம்மாவுக்கு நடந்தது...என்னும் எத்தனை வருடம் போனாலும் எம் சமூகத்தில் இது தான் நடக்கும்...என் சித்தி கூட அண்மையில் சொன்னார் சித்தப்பாவுக்கு ஒன்றும் நடக்க கூடாது அப்படி எதுவும் நடந்தால் என்னை முன்னுக்கு நின்று ஒன்றும் செய்ய விட மாட்டார்கள் என்று அவ சொன்னது உண்மை தானே உங்களால் அதை மாற்ற முடியுமா?... இது தனிய திருமணத்தில் மட்டும் நடக்கவில்லை எங்கள் கோயில்கள்,விழாக்கள்,சடங்கள்,சம்பிரதாயங்கள்[விதவை முகத்தில் முழிக்காதே போன்றன]...ஒன்று மட்டும் தைரியமாய் செய்யலாம் கணவன் இல்லாத பெண்கள் இச் சமூகத்தோடு ஒட்டாமல் தத்தம் புலம் பெயர்ந்த நாடுகளில் அந்த நாட்டுக் கலாச்சாரத்திற்கேற்ப வாழ்தல். என்ன கொஞ்ச நாள் எப்படியெல்லாம் தேவையில்லாமல் கதைக்க இயலுமோ அப்படிக் கதைப்பார்கள் பின் அடங்கி விடுவார்கள்...சமூகத்திற்காக வாழ வேண்டும் என சொல்லும் நீங்கள் முதலில் சமூகத்தில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது பற்றி யோசியுங்கள்.

ஒரு ஆண் துணை இல்லாமல் இந்த புலம் பெயர் நாட்டில் குழந்தைகள் வளர்ப்பது இலகு எனக் கருதுகிறீர்களா?...ஒழுங்காய் தம்பதியினராய் இருக்கும் குடும்பத்திலேயே குழந்தைகளை ஒழுங்காய் வளர்க்க முடியவில்லை அப்படி இருக்கும் போது தனித்து ஒரு பெண்ணால் எப்படி தன் குழந்தைகளை ஒழுங்காய் வளர்க்க முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண் துணை இல்லாமல் இந்த புலம் பெயர் நாட்டில் குழந்தைகள் வளர்ப்பது இலகு எனக் கருதுகிறீர்களா?...ஒழுங்காய் தம்பதியினராய் இருக்கும் குடும்பத்திலேயே குழந்தைகளை ஒழுங்காய் வளர்க்க முடியவில்லை அப்படி இருக்கும் போது தனித்து ஒரு பெண்ணால் எப்படி தன் குழந்தைகளை ஒழுங்காய் வளர்க்க முடியும்?

என் கண் அசைவுக்கு பயப்படும் எனது மக்கள் தாயின் அடிக்குக்கூட பயப்படுவதில்லை.

ஆனால் நான் இல்லையென்றால்

அந்த வெற்றிடம் நிச்சயம் எனது பிள்ளைகளையும்

அவர்களது தாயையும் வெற்றிடமில்லாது இணைத்துவிடும் என்று நான் நினக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் பெண்கள் மறுமணம் செய்வதாக தீர்மானித்தானித்தால் மிகவும் அவதானமாக வரப் போகும் கணவரை தீர்மானிக்க வேண்டும்...அவசரப்பட்டு தங்கள் வாழ்க்கையை தொலைக்க கூடாது என்பது தான் என் கருத்தும் ஆனாலும் உங்கட சித்திக்கு நடந்தது ஊரில் அதுவும் எப்படியும் குறைந்தது 10 வருடங்களுக்கு முன் நடந்து இருக்கும் என நினைக்கிறேன்[தப்பாயின் மன்னிக்கவும்] ஊரில உங்கட சித்தியை சுற்றி சித்தியின்ட சொந்தக்காரர்கள் இருந்திருப்பார்கள் அதை விட சித்திக்கு 2 பிள்ளைகள் இருந்தும் ஒருத்தன் அவ மேல கை வைத்தான் என்டால் அதற்கு என்ன காரணம்?[ஆண்துணை இல்லாமல் இருக்கிறாள் கூப்பிட்டால் படுக்கைக்கு வந்து விடுவாள் என்பது தான் காரணம்.]...சித்தி ஏதோ சில காரணங்களால் மறுமணம் செய்யாமல் தனிய இருக்கிறார் ஆனால் எப்பவாவது சித்திக்கும் ஒரு மனசிருக்குது அதில் என்ன இருக்குது என்பது பற்றி யோசித்து இருக்கிறீர்களா? அது பற்றி அவவுடம் கேட்டு இருக்கிறீர்களா?[இப்படி நான் எழுதுவதன் மூலம் நீங்கள் நினைக்க கூடாது நான் பெண்கள் ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது என்ட கருத்தை கொண்டு இருக்கிறேன் என்டு]...கவலையோ,சந்தோசமோ பகிர்ந்து கொள்ள ஒரு துணை இருக்க வேண்டும் என நினைப்பதில் தப்பு இல்லைத் தானே![குழந்தையாய் இருக்கும் போது பெற்றோரிடம்,கொஞ்சம் வளர சகோதர,சகோதரிகளிடம்,நண்பர்களிடம்,வயது போன காலத்தில் தான் தங்கட பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்வார்கள்]

எனக்கு ஞாபகம் இருக்கிறது கிட்டதட்ட 20 வருடங்களுக்கு முன் எங்கள் மாமாவுக்கு திருமணம் நடந்த போது மூத்த மாமாவும்,மாமியும் தான் முன்னின்று தத்தம் பண்ணிக் கொடுத்தார்கள் இத்தனைக்கும் அம்மம்மா உயிரோடு இருந்தார் ஏன் அவவை முன்னின்று செய்ய விடவில்லை காரணம் அவ விதவை[விதவையாய் இருந்தாலும் கஸ்டப்பட்டு தன் 10 பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வந்தார் ஆனால் என்ன பிரயோசனம்?...இதே நிலை தான் போன வருடம் என் பெரியம்மாவுக்கு நடந்தது...என்னும் எத்தனை வருடம் போனாலும் எம் சமூகத்தில் இது தான் நடக்கும்...என் சித்தி கூட அண்மையில் சொன்னார் சித்தப்பாவுக்கு ஒன்றும் நடக்க கூடாது அப்படி எதுவும் நடந்தால் என்னை முன்னுக்கு நின்று ஒன்றும் செய்ய விட மாட்டார்கள் என்று அவ சொன்னது உண்மை தானே உங்களால் அதை மாற்ற முடியுமா?... இது தனிய திருமணத்தில் மட்டும் நடக்கவில்லை எங்கள் கோயில்கள்,விழாக்கள்,சடங்கள்,சம்பிரதாயங்கள்[விதவை முகத்தில் முழிக்காதே போன்றன]...ஒன்று மட்டும் தைரியமாய் செய்யலாம் கணவன் இல்லாத பெண்கள் இச் சமூகத்தோடு ஒட்டாமல் தத்தம் புலம் பெயர்ந்த நாடுகளில் அந்த நாட்டுக் கலாச்சாரத்திற்கேற்ப வாழ்தல். என்ன கொஞ்ச நாள் எப்படியெல்லாம் தேவையில்லாமல் கதைக்க இயலுமோ அப்படிக் கதைப்பார்கள் பின் அடங்கி விடுவார்கள்...சமூகத்திற்காக வாழ வேண்டும் என சொல்லும் நீங்கள் முதலில் சமூகத்தில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது பற்றி யோசியுங்கள்.

ஒரு ஆண் துணை இல்லாமல் இந்த புலம் பெயர் நாட்டில் குழந்தைகள் வளர்ப்பது இலகு எனக் கருதுகிறீர்களா?...ஒழுங்காய் தம்பதியினராய் இருக்கும் குடும்பத்திலேயே குழந்தைகளை ஒழுங்காய் வளர்க்க முடியவில்லை அப்படி இருக்கும் போது தனித்து ஒரு பெண்ணால் எப்படி தன் குழந்தைகளை ஒழுங்காய் வளர்க்க முடியும்?

1. சித்தியிடம் மறுமணம் செய்யப் போறீங்களா என்று நான் கேட்கவில்லை. அவவைப் பார்த்துக் கொண்ட என் அம்மாவும் அப்பாவும், அவரது கணவன் வழி உறவுகளும் கேட்டார்கள், வற்புறுத்தினார்கள் என்றே கேள்விப் பட்டேன். ஏனென்றால் மிக இளம் வயது என்பதால். தன் பிள்ளைகளுக்கு என்ன ஆகுமோ என்ற பயத்தினால் மறுத்து விட்டார்.

2. சமூகத்திற்காக வாழும் படி எப்போது நான் சொன்னேன்? சமூகத்தைக் கண்டு கொள்ளாதீர்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை காட்டுங்கள் என்று தான் சொன்னேன். தனி நபர்கள், குடும்பங்கள் மாறும் போது சமூகத்திற்கு என்ன ஆகும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? சொல்லுங்கள்.

3. இதைச் சொல்வதற்காக மன்னிக்க வேண்டும் ரதி: சித்தப்பாவிற்கு ஒன்றும் ஆகி விடக் கூடாது என்று மட்டும் தான் உங்கள் சித்தி கவலைப் பட வேணும். சித்தப்பாவிற்கு ஏதாவது ஆகி விட்டால் தனக்கு சபையில் இடம் கிடைக்காது என்று சித்தி நினைத்தால்...இதற்கு மேல் நான் என்ன சொல்வது? ஆனால், சுய மரியாதையோடும் (சுடு நீரோடும்) வளர்க்கப் படும் பெண் குழந்தைகள் ஒரு நாளும் சபையில் என்னை முன்னிறுத்தவில்லயே எனக் கவலைப்படப் போவதுமில்லை, அதற்காகப் போராடப் போவதுமில்லை! அவர்களின் கவனம் தன் குடும்பத்திற்கும் நாட்டுக்கும் உலகத்திற்கும் என்ன பயனுள்ள வகையில் செய்யலாம் என்பதில் இருக்குமேயல்லாமல், "தாலி பூட்டுதல்", "பாலப்பம் உடைத்தல்" போன்ற உப்புச் சப்பற்ற சடங்குகளில் பெருமை கொள்வதில் இருக்காது. இதை நீங்கள் நம்பலாம்!

4. பிள்ளைகளை வளர்க்க இருவர் தேவையென்றாலும் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் தனியாக ஒருவர் புலத்தில் பிள்ளை வளர்க்க இயலாது என்பது உங்கள் அபிப்பிராயம். முடிந்த முடிவு அல்ல!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.